ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வெள்ளி, 21 மார்ச், 2008

இஸ்லாம் இணையத்திற்கு பதில்: இஸ்லாம் சரியான மார்க்கம் என்று தெரிந்தும் கிறிஸ்தவர்கள் நிராகரிக்கின்றார்களா?

 
இஸ்லாம் இணையத்திற்கு பதில்:

இஸ்லாம் சரியான மார்க்கம் என்று தெரிந்தும் கிறிஸ்தவர்கள் நிராகரிக்கின்றார்களா?


முன்னுரை:

சமீப காலமாக இஸ்லாமிய கிறிஸ்தவ கட்டுரைகள் தமிழ் இணைய உலகில் உலா வந்துக்கொண்டு இருக்கின்றன.இதில் இஸ்லாமியர்கள் "நாங்கள் கேள்விகள் மட்டுமே கேட்போம், பதில் சொல்லமாட்டோம், மற்ற மார்க்கங்களின் வேதங்களில் கை வைத்து, எங்களுக்கு ஏற்ற விதத்தில் பொருள் கூறுவோம், அவர்கள் பதில் சொன்னால் அதை காதில் வாங்க மாட்டோம், எங்கள் குர்‍ஆனை அவர்கள் படித்து கேள்விகள் கேட்டால், இஸ்லாமுக்கும், முகமதுவிற்கும் அவதூறு செய்கிறார்கள் என்று ஓயாமல் சொல்லிக்கொண்டே இருப்போம், ஆனால், தப்பித்தவறியும் பதில் சொல்லமாட்டோம்" என்ற தோரணையில் இணைய தளங்களை நடத்திக்கொண்டு வருகின்றனர்.

இந்த கட்டுரையில், நாம், "இஸ்லாம் இணைய பேரவை" தளம் எழுதிய ஒரு கட்டுரைக்கான பதிலை காணப்போகிறோம். இந்த கட்டுரையில் இவர்களாகவே சில விஷயங்களை சுயமாக முடிவு செய்துவிட்டு அதை வெளியிட்டுள்ளனர்.

இவர்கள் சுயமாக எடுத்த முடிவு என்ன?

1. கிறிஸ்தவர்களுக்கு உண்மை மார்க்கம் இஸ்லாம் என்று தெரியுமாம்

2. அப்படி தெரிந்து இருந்தும், கிறிஸ்தவர்கள் வறட்டு கௌரவத்தால் இஸ்லாமை நிராகரிக்கிறார்களாம்
.

[என்னே கண்டுபிடிப்பு! நான் மட்டும் நோபல் யாருக்கு கொடுக்கலாம் என்று நிர்ணயிக்கும் குழுவில் இருந்தால், 2008ம் ஆண்டிற்கான நோபல் பரிசை இந்த கண்டுபிடிப்பிற்காக இதை எழுதவருக்கு கொடுக்க சிபாரிசு செய்வேன்.]

நான் இந்த கட்டுரையில் மேலே குறிப்பிட்ட இரண்டு குறிப்புகளுக்கு மட்டும் பதில் தரலாம் என்று விரும்புகிறேன். அதே நேரத்தில் இவர்களின் வாடிக்கையான கிளிப்பிள்ளை வார்த்தைகளுக்கும் பதில் ஆங்காங்கே சொல்லிவிடுகிறேன்.

இன்னும் அவர்கள் என்ன என்ன சொல்லியுள்ளார்கள் என்று நீங்களே படியுங்கள்:

இஸ்லாம் இணையம் எழுதியது:

வேதக்காரர்களான யூதர்களும் கிரிஸ்தவர்களும் உண்மை மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்று தெரிந்த பின்னரும் வறட்டு கௌரவத்தால் சத்தியத்தை நிராகரித்து இறைவேதத்தை இருட்டடிப்பு செய்தும், நவிமொழிகளை நாசவேளை செய்தும் உண்மைக்கு மாற்றமான செய்திகளை பரப்பிவருகிறார்கள். அல்குர்ஆனில் சில வசனங்களை மாற்றியமைத்து தனக்கு சாதகமான சூழ் நிலையை உருவாக்குகிறார்கள். இதுபோதுமல்லாது பல இணையதளங்களை நிறுவி அதன்மூலம் காபாவில் சிலைவணங்குதல், நபிகளார்(ஸல்) அவர்களின் குடும்பத்தை பழித்து வர்ணித்தல், காட்டுமிரான்டி மார்க்கம் என்பனபோன்ற எண்ணற்றக் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்ற வகையில் உண்மை எதுவென்று தெரிந்த பின்னரும் அவதூராக பரப்பிவருகிறார்கள். இதை இறைவன் அவர்களின் முகத்திறையை இவ்வாறு கிழிக்கிறான்,

வேதத்தையுடையோரே! சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்? (அல்குர்ஆன் 3:71)

இப்படி பல ஆக்கங்களை நிறுவி முஸ்லிம்களின் உள்ளங்களில் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தி தவறான வழிக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதே அந்த கோர முகங்களின் நஞ்சு எண்ணமாகும். இவ்வாறு இணையதளத்தில் நிறுவப்பட்ட ஆக்கங்கள் புதிதாக இஸ்லாத்தை அறியவேண்டும் என்பதற்காக ஒருவர் விரும்பி தேடும்போது இதை பார்ப்பாரேயானால் விரண்டோடக்கூடிய ஒரு துர்பாக்கிய சூழ்நிலைதான் அங்கு உருவாகும். ஆகவே இப்படிப்பட்ட பல சூழ்ச்சிகளின் மூலம் இஸ்லாத்தின் எழுச்சியை அமுக்க நாடுகிறார்கள், ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை தங்களது விழிகளை உளியை கொண்டு குத்திக்கொண்டு இருக்கிறோம் என்று. இறைவன் அந்த வேதக்காரர்களின் கூறுகெட்டச் செயலை இவ்வாறு விவரிக்கிறான்.

வேதத்தையுடையோரில் ஒரு சாரார் உங்களை வழி கெடுக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி கெடுக்க முடியாது. எனினும் (இதை) அவர்கள் உணர்கிறார்களில்லை. (அல்குர்ஆன் 3:69)

Source:


1. இஸ்லாமியர்கள் அளவிற்கு அதிகமாகவே பயந்துள்ளார்கள்:

நாம் சிறுவயதிலே சில இடங்களை கடந்துச்செல்லும் போது, உதாரணத்திற்கு ஒரு பாழடைந்த வீட்டை கடந்துச்செல்லும் போது, அல்லது அதிகமாக மரங்கள் உள்ள இடத்தை கடந்துச்செல்லும் பொது, அல்லது ஆள் நடமாட்டம் இல்லாத கல்லரைகளை கடந்துச்செல்லும் போது, மனதிலே பயம் ஒரு புறம் இருந்தாலும், நமக்கு நாமே தைரியம் கொண்டு, ஏதோ ஒரு பாட்டை சத்தமாக பாடிக்கொண்டே, நடுங்கிக்கொண்டே அந்த இடத்தை கடந்துவிடுவோம். சிலர், "நான் பயப்படமாட்டேன், நான் தைரியமானவன், நான் ஒரு வீரன்" என்று சொல்லிகொண்டு ஓடோடி அந்த இடத்தை சீக்கிரமாக கடந்துவிடுவோம். முக்கியமாக கிராமங்களில் இருப்பவர்களுக்கு இந்த அனுபவம் இருக்கும். அந்த இடத்தை கடந்தபிறகு நிம்மதியாக நடந்துச்செல்வோம். உள்ளத்தின் ஆழத்தில் பயம் இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல், ஏதேதோ சொல்லிக்கொண்டு அந்த இடத்தை எப்படியாவது கடந்துப்போவோம்.

இதே போலத்தான் இஸ்லாமியர்களும், இவர்கள் கட்டுரைகளை கவனித்தீர்களானால்:

1. நாங்கள் வெற்றி பெற்றே தீருவோம்,

2. நீங்கள் எவ்வளவுதான் இடையூறுகளை ஏற்படுத்தினாலும் இஸ்லாம் என்கின்ற சத்திய ஒளிக்கு என்றைக்குமே திறையிட முடியாது

3. சத்தியம் ஜெயித்தே தீரும்,

4. யாரும் குர்‍ஆனுக்கு எதிராக ஒன்றும் செய்யமுடியாது,

5. சூரியனை கைகளால் மறைக்கமுடியாது,

6. சத்தியமார்க்கம் வெற்றிப்பெறும்

7. நாங்கள் பயப்படமாட்டோம்

இவர்களுக்கு பயம் வரும்போதெல்லாம், ஒரு கட்டுரையாவது இப்படி வெளியிட்டுக்கொண்டே இருப்பார்கள். இதை படிக்கும் இதர முஸ்லீம்கள் அப்படியே பொங்கிப்போவார்கள். குர்‍ஆன் வசனங்களுக்கு இவர்கள் அர்த்தத்தை மாற்றிச் சொல்கிறார்கள், இவர்கள் வெற்றிப்பெறமுடியாது, நாங்கள் தான் வெற்றிப்பெறுவோம் என்று ஓயாமல் கிளிப்பிள்ளைப்போல சொல்லிக்கொண்டே இருப்பார்களே தவிர, இவர்களாகவே குர்‍ஆன் வசனங்களுக்கு சரியான பொருள் கூறமாட்டார்கள், ஹதீஸ்களுக்கு பொருள் கூறமாட்டார்கள், அப்படி கூறுகிறவர்களின் அர்த்தம் தவறு என்றுச் சொல்வார்கள். இந்த வகையில் அவர்கள் எழுதிய கட்டுரைக்குத் தான் இப்போது நாம் பதிலை பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

சரி, இவர்களின் "கிறிஸ்தவர்கள் உண்மை மார்க்கம் இஸ்லாம் என்று தெரிந்தே நிராகரிக்கின்றனர" என்ற குற்றச்சாட்டிற்கு பதிலை காண்போம்.

2. கிறிஸ்தவர்கள் உண்மை மார்க்கம் இஸ்லாம் என்று தெரிந்தே நிராகரிக்கின்றனரா?

உண்மையில் "கிறிஸ்தவர்கள் இஸ்லாம் தான் உண்மை மார்க்கம் என்று தெரிந்துவைத்து இருக்கிறார்கள்" என்றுச் சொல்ல உங்களால் எப்படி முடிகிறது. முஸ்லீம்களே! உங்களுக்கு இப்படி எழுதுவது அடிப்படை இல்லாமல் எழுதுவது போல தோன்றவில்லை? எங்களுக்கு எல்லாம் தெரிந்து தான் நாங்கள் எழுதுகிறோம் என்றுச் சொல்வீர்களானால், கீழ் கண்ட வரிகளை முதலில் படியுங்கள்:

"முஸ்லீம்கள் கிறிஸ்தவம் தான் உண்மை மார்க்கம் என்றும், முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்றும், குர்‍ஆன் என்பது இறைவன் அருளிய வேதம் இல்லை என்பதையும் நன்றாக தெரிந்து வைத்துக்கொண்டே, முஸ்லீம்கள் வறட்டு கௌரவத்தால், கிறிஸ்தவத்தை எதிர்க்கிறார்கள்"

என்று நான் சொன்னால் எப்படி இருக்கும்? எந்த காரணத்தால் இப்படி இவர் சொல்கிறார்? என்று கேட்கத்தோன்றுகிறது அல்லவா உங்களுக்கு? அதே போலத்தான், நானும் உங்களை கேட்கிறேன், எதை அடிப்படையாக வைத்துக்கொண்டு, "இஸ்லாம் உண்மை மார்க்கம்" என்று கிறிஸ்தவர்களுக்கு தெரியும் என்று நீங்கள் சொல்கிறீர்கள்? மனிதனின் உள்ளத்தில் இருப்பது தெரிந்துக்கொள்ள வேண்டுமானால், முதலாவது அம்மனிதன் அதை சொல்லவேண்டும், அல்லது நீங்கள் இறைவனாக இருக்கவேண்டும்?

இவை இரண்டும் இல்லாமல் எப்படி உங்களால் இப்படி பிரயோஜமில்லாத "அறிக்கைகளை" வெளியிடமுடிகிறது?

சரி, எங்கள் உள்ளங்களில் உள்ளதை நீங்கள் சொன்னதால், "கிறிஸ்தவர்கள் இஸ்லாம் பற்றி என்ன கருதியிருக்கிறார்கள் என்று சொல்லிவிடுகிறேன்."

3. "மார்க்கம் வேண்டாம்" என்றுச் சொல்பவனை இஸ்லாம் போல கிறிஸ்தவம் கொல்வதில்லை, அல்லது மனிதனை கொல்லச்சொல்லும் ஷரியா சட்டம் எங்களுக்கு இல்லை:

ஒரு முஸ்லீம் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ளும் பொது, எங்கே இவர்கள் தன்னை கொன்றுவிடுவார்கள் என்று பயந்துக்கொண்டு வாழுகிறான். பல இஸ்லாமிய நாடுகளிலும் இந்த சட்டம் உண்டு, அதாவது ஒருவன் இஸ்லாமை விட்டு கிறிஸ்தவனானால், அவனுக்கு மரண தண்டனை உண்டு. செய்திகளிலும் நாம் இதனை பார்க்கமுடியும். கிறிஸ்தவத்தில் இப்படி "கொடூரமான‌ சட்டமில்லை", விருப்பமிருப்பவன் இருக்கட்டும் இல்லையானால் போகட்டும், அவ்வளவு தான். வேண்டுமானால், அவன் குடும்ப நபர்கள் அவனுக்கு அறிவுரை கூறுவார்கள், புத்தி சொல்வார்கள், கேட்கமாட்டேன் என்றால் விட்டுவிடுவார்கள். ஆனால், பைபிள் அவனை கொல்லுங்கள் என்று குர்‍ஆன் போல சொல்வதில்லை.

உண்மை இப்படி இருக்க, ஒரு கிறிஸ்தவன் முஸ்லீமாக மாறினால் அவனுக்கு தன் "புதிய இஸ்லாமிய நம்பிக்கையை" வெளிக்காட்ட தடைகள் இல்லை. தன்னை கிறிஸ்தவர்கள் கொன்றுவிடுவார்கள் என்று அவன் பயந்து வாழவேண்டிய அவசியமில்லை. ஆனால், ஒரு முஸ்லீம் கிறிஸ்தவனானால், பல ஆண்டுகள் கடந்தும் தன் நம்பிக்கையை அப்படியே மூடி வைப்பான், காரணம் உயிர்... உயிர்... உயிர்.... மட்டுமல்ல, பல இஸ்லாமிய நாடுகளில் அவன் வாழும் இடத்தில் பிரச்சனை வரும், வேலையில் பிரச்சனை வரும். இப்படி பல கொடுமைகள் இஸ்லாமின் பெயரில் நடந்துக்கொண்டு இருக்கிறது.

நான் இங்கு சொல்லவிரும்புவது இது தான், பல முஸ்லீம்கள் "கிறிஸ்தவம் தான் உண்மை மார்க்கம் என்று நம்பியிருப்பார்கள்", ஆனால், வெளியே சொல்லமுடியாமல் தவிப்பார்கள். ஆனால், ஒரு கிறிஸ்தவன் முஸ்லீமாக மாறி தன்னை மறைத்துக்கொண்டு வாழமாட்டான், அப்படி அவனை மறைந்து வாழச்சொல்வீர்களா நீங்கள்! அடேங்கப்பா மலைகளை கவுத்துவிடமாட்டீர்கள் நீங்கள்?! உண்மை மார்கத்தை ஒருவன் ஏற்றுக்கொண்டாலும் அதற்கு இவர்கள் தடையாக இருக்கிறார்கள் என்றுச் சொல்லி, உலகை ஒரு வழி ஆக்கிவிடமாட்டீர்கள் நீங்கள்!

எனவே, நீங்கள் சொல்வது தவறு, ஒருவன் முஸ்லீமானால், அவன் உடனே அதை வெளிப்படுத்துவான், ஆனால், ஒரு முஸ்லீம் கிறிஸ்தவனானால், அவன் இழக்கவேண்டியது மிகவும் அதிகமாக இருக்கும். இதற்கு காரணம், இஸ்லாம் கொடூரம், கிறிஸ்தம் அமைதி என்பதால் தான்.

4.இஸ்லாம், "பொய் மார்க்கம்" என்று எல்லா கிறிஸ்தவர்களுக்கும் தெரியும்:

a) இன்னொரு வேதம், இன்னொரு நபி கிறிஸ்தவர்களுக்குத் தேவையில்லை:

பைபிளில் எங்களுக்கு தேவையான எல்லா கட்டளைகளும், நல்ல வழியும், இரட்சிப்பும் உண்டு. எனவே, இன்னொரு வேதம் எங்களுக்குத் தேவையில்லை. நான் ஒரு நபியை எழுப்புவேன், அவரை நம்புங்கள், அவரை அப்படியே அச்சடித்தது போல பின்பற்றுங்கள், அவரின் உடை, நடை பாவனையை அப்படியே காபி அடியுங்கள், என்று இயேசு எங்களுக்குச் சொல்லிவிட்டுப்போகவில்லை. பரிசுத்த ஆவியானவர் உங்கள் உள்ளங்களில் வருவார், அவர் உங்களை நீதியில், சத்தியத்தில் நடக்க உதவிச்செய்வார், நீங்கள் தவறு செய்ய முற்படும் பொது உங்களை கடிந்துக்கொள்வார்,எல்லாரிடத்திலும் அன்பு கூறுங்கள், அதன் மூலம் நீங்கள் என் சீடர்கள் என்று உலகம் அறிந்துக்கொள்ளட்டும் என்று பல அறிவுரைகளை கட்டளைகளை இயேசு கொடுத்துள்ளார். அப்படியே பெந்தகோஸ்தே நாளன்று, பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். குர்‍ஆனை கிறிஸ்தவர்கள் வேதம் என்று நம்புவதுமில்லை, முகமது ஒரு தீர்க்கதரிசி என்று நம்புவதுமில்லை, எங்களுக்கு இப்படிப்பட்ட வேதமும், நபியும் தேவையும் இல்லை. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எனவே, உங்கள் கிளிப்பிள்ளை அறிக்கைகளை நாங்கள் நம்பத்தயாராக இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

b) ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்ட ஓநாய்கள் வருவார்கள் என்றும் இயேசு எச்சரித்துள்ளார்:

இயேசுவின் நற்செய்தியையே நாங்கள் நம்புகிறோம். வேறு ஒரு நற்செய்தி(சுவிசேஷம்) எங்களுக்குத் தேவையில்லை. உலகத்தில் பல பேர் எழும்பி, பல பேரை குழப்புவார்கள் என்றும், ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்ட ஓநாய்கள் வருவார்கள் என்றும் இயேசு எச்சரித்துள்ளார்.

கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள் (மத்தேயு 7:15)


இப்படி பலபேர் "தங்களை இயேசுவிற்கு அடுத்த தீர்க்கதரிசிகள்" என்று சொல்லிக்கொண்டு வந்தார்கள், மரித்தார்கள். எனவே, நபி என்று சொல்லிக்கொண்டு வருபவர்களையும் போகிறவர்களையும் நாங்கள் நம்பவேண்டிய அவசியம் இல்லை.

c) வேறு ஒரு சுவிசேஷம் கொண்டுவருபவன் "சபிக்கப்பட்டவன்":

நாங்கள் நம்பியிருக்கின்ற சுவிசேஷம் தவிர வேறு ஒரு சுவிசேஷம் கொண்டுவருபவன், அவன் தேவதூதனே ஆனாலும், அவன் சபிக்கப்பட்டவன் என்று பைபிள் சொல்கிறது.

நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.(கலாத்தியர் 1:8,9)


இஸ்லாம் படி பார்த்தால், இந்த வசனத்தின் படி காபிரியேல் தூதன் சபிக்கப்பட்டவன். எனவே, கிறிஸ்தவர்கள் "இஸ்லாம் உண்மை மார்க்கம் அல்ல என்று தான்" நம்பியிருக்கிறார்கள். கிறிஸ்தவர்களில் "இஸ்லாம் தான் மெய் மார்க்கம்" என்று நம்புகிறவன், எப்போதோ இஸ்லாமுக்கு சென்று இருப்பான் அல்லவா? அவனவனுக்கு தன் தன் மார்க்கம் மெய்மார்க்கம். இதை நான் ஏன் எழுதவேண்டி வந்தது என்றால், "கிறிஸ்தவர்களின் நம்பிக்கையைப் பற்றிய அறிக்கையை" இஸ்லாமியர்களே முடிவு செய்து சொன்னதால், உண்மையை அழுத்தமாக சொல்லவேண்டி வருகிறது.

d) பெயரளவிற்காகக் கூட கிறிஸ்தவர்கள், முகமதுவை நபி என்று நம்பமாட்டார்கள்:

இயேசுவின் வாழ்க்கையை நாங்கள் படிக்கிறோம், அதன்படி வாழ முயற்சி எடுக்கிறோம். ஒருவேளை கிறிஸ்தவர்களாகிய எங்களில் சிலர், "இயேசு சொன்னது போல, உன்னைப்போல் பிறனையும்(அவன் இந்துவாக இருந்தாலும் சரி, முஸ்லீமாக இருந்தாலும் சரி, நாத்தீகனாக இருந்தாலும் சரி) நேசிப்பாயாக" என்ற கட்டளையை சரியாக பின்பற்ற தவறினாலும், அந்த கட்டளை மிகவும் உன்னதமானது, இறைவன் கொடுத்தது என்று ஏற்றுக்கொள்கிறோம். எங்கள் வழி அன்பின் வழி. இயேசு சொன்னது போல, நீங்கள் அன்புள்ளவர்களாக இருந்தால், நீங்கள் என் சீடர்கள் என்று உலகம் அறிந்துக்கொள்ளும், என்ற வார்த்தைக்கு இணங்க, நாங்கள் நடக்க விரும்புகிறோம். அதற்காகத்தான் நீங்கள் எவ்வளவு கேவலமான வார்த்தைகளை சொன்னாலும், எங்கள் இயேசுவைப்போல பொருத்துக்கொண்டு போய்க்கொண்டு இருக்கிறோம்.

ஒருவர் "தன்னை தீர்க்கதரிசி அதுவும் இயேசுவிற்கு அடுத்தபடியாக வந்தவர், உலகத்திற்கு வெளிச்சம் கொடுக்க வந்தவர், சத்திய மார்க்கம் பற்றி சொல்லவந்தவர் என்றுச் சொல்லும் போது, அவருக்கு என்னென்ன‌ குண‌ங்க‌ள் குறைந்த‌ ப‌ட்ச‌ம் இருக்க‌வேண்டும்" என்று எங்க‌ளுக்கு தெளிவாக‌த்தெரியும்.

இந்த வகையில் கிறிஸ்தவர்கள் முகமதுவின் வாழ்க்கையை முழுவதும் தெரிந்துக்கொண்ட பிறகு அவரை ஒரு "பெயரளவிற்காகவாவது, ஒரு நபியாக" நினைக்கவும் எங்களுக்கு மனம் இடம் கொடுப்பதில்லை.

உதாரணத்திற்கு: கிறிஸ்தவத்தில் ஒருவரை "பிஷப்பாக, போதகராக, மூப்பராக etc." நியமிக்க அவருக்கு இருக்கவேண்டிய குணங்கள் என்ன என்று பைபிள் சொல்கிறது. குறைந்த பட்சம் ஒரு போதகருக்கு இருக்கவேண்டிய இந்த குணங்களில், உலகத்தில் சத்திய மார்க்கத்தை பரப்ப வந்தவர் என்று இஸ்லாமியர்களால் சொல்லப்படும் முகமதுவிடம் இந்த குணங்களில் எத்தனை இருக்கிறது என்று நீங்களே சோதித்துப்பாருங்கள். சாதாரண மக்கள் நியமிக்கும் ஊழியர்களுக்கே இந்த தகுதிகள் இருக்கவேண்டும் என்று பைபிள் சொல்வதை படிக்கும் கிறிஸ்தவர்களுக்கு, அல்லா நியமித்த முகமதுவிற்கு எவ்வளவு தகுதிகள் இருக்கவேண்டும் தெரியாதா?

மூப்பருக்கு இருக்கவேண்டிய குணங்கள்:

குற்றஞ்சாட்டப்படாதவனும்,

ஒரே மனைவியையுடைய புருஷனும்,

துன்மார்க்கரென்றும் அடங்காதவர்களென்றும் பேரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவனிருந்தால் அவனையே ஏற்படுத்தலாம்.

ஏனெனில், கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய்,

குற்றஞ்சாட்டப்படாதவனும்,

தன் இஷ்டப்படி செய்யாதவனும்,

முற்கோபமில்லாதவனும்,

மதுபானபிரியமில்லாதவனும்,

அடியாதவனும்,

இழிவான ஆதாயத்தை இச்சியாதவனும்,

அந்நியரை உபசரிக்கிறவனும்,

நல்லோர்மேல் பிரியமுள்ளவனும்,

தெளிந்தபுத்தியுள்ளவனும்,

நீதிமானும்,

பரிசுத்தவானும்,

இச்சையடக்கமுள்ளவனும்,

ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும்,

எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம் பண்ணவும் வல்லவனுமாயிருக்கும்படி,

தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும்.(தீத்து 1:6-9)

சபையில் உதவிக்காரர்களின்(Deacon) தகுதிகள்

மேலும் உதவிக்காரரானவர்கள்

ஒரே மனைவியையுடைய புருஷருமாய்,

தங்கள் பிள்ளைகளையும்சொந்தக் குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாயிருக்கவேண்டும்.( 1 தீமோ 3:12)

சபையில் கண்காணிப்பவரின்(பிஷப்) தகுதிகள்:

ஆகையால் கண்காணியானவன்

குற்றஞ்சாட்டப்படாதவனும்,

ஒரே மனைவியை உடைய புருஷனும்,

ஜாக்கிரதையுள்ளவனும்,

தெளிந்த புத்தியுள்ளவனும்,

யோக்கியதையுள்ளவனும்,

அந்நியரை உபசரிக்கிறவனும்,

போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.

அவன் மதுபானப்பிரியனும்,

அடிக்கிறவனும்,

இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல்,

பொறுமையுள்ளவனும்,

சண்டைபண்ணாதவனும்,

பணஆசையில்லாதவனுமாயிருந்து,

தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும்,

தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும்.

ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்? அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது. அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாயுமிருக்கவேண்டும்.(1 தீமோ 3:2-7)

கர்த்தருடைய ஊழியக்காரனுக்கு இருக்கவேண்டிய தகுதிகள்:

கர்த்தருடைய ஊழியக்காரன்

சண்டைபண்ணுகிறவனாயிராமல்,

எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும்,

போதகசமர்த்தனும்,

தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.

எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும், பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.(2 தீமோ 2:24-26)

நான் உங்களை குற்றப்படுத்த இதனை எழுதவில்லை, நாங்கள் இந்த தகுதிகள் உள்ளவர்களைத் தான் குறைந்த பட்சம் தேவனுடைய ஊழியக்காரர்களாக நியமித்துக்கொள்கிறோம். அப்படி இருக்கும் போது, இந்த தகுதிகளில் பலவற்றை இழந்துள்ள முகமதுவை எப்படி கிறிஸ்தவர்கள் "தீர்க்கதரிசி" என்று நம்புவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். அவர் சொன்னது தேவன் சொன்ன வேதம் என்று கிறிஸ்தவர்கள் நம்புவார்கள் என்று எப்படி முடிவு செய்தீர்கள்?

[இன்று நாம் காணும் உலகத்தில் இந்த குணங்கள் உள்ளவரையா நீங்கள் தேவனின் ஊழியக்காரர்களாக் நியமிக்கிறீர்கள், அப்படி சில ஊழியர்கள் இருப்பதாக தெரியவில்லையே என்று என்னைக் கேட்டால், இந்த தகுதிகள் இல்லாதவரை யாராவது போதகராக நியமித்தால், ரொம்ப நாட்கள் நிலைக்காது, அவரை நியமித்தவர் அதன் பலனை நிச்சயமாக அடைவார். செய்திகளில் சில ஊழியர்கள் சபை பணத்தை கலவாடினார்கள், பெண்களை ஏமாற்றிவிட்டார்கள் என்று நாம் படிக்கிறோமே, இவர்கள் எல்லாம் இந்த தகுதியில்லாத கேடகரி தான். இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி, நீங்களும் உங்கள் இஸ்லாமிய மசூதிகளில் நியமிக்கும் ஊழியருக்கு என்ன என்ன தகுதிகள் இருப்பவரை நியமிக்கிறீர்கள், மற்றுமுள்ள இமாம்கள், இன்னுமுள்ள ஊழியர்களை எப்படி நியமிக்கிறீர்கள் என்று எங்களிடம் பகிர்ந்துக்கொண்டால், தமிழ் மக்கள் அனைவரும் இஸ்லாம் பற்றியும் சிறிது அறிந்துக்கொள்வார்கள்]]

முடிவுரை: "கிறிஸ்தவர்கள் இஸ்லாமை உண்மை மார்க்கம்" என்று நம்பமாட்டார்கள் என்பதை பைபிளை அடிப்படையாகக் கொண்டு இன்னும் பல தகவல்களை கொடுக்கமுடியும், இந்த கட்டுரைக்கு இந்த தகவல்கள் போதும் என்று எண்ணுகின்றேன். மேலும் நீங்கள் ஏதாவது விவரம் கேட்டால் தருவேன்.

தமிழ் இஸ்லாமிய அறிஞர்களுக்கு: இயேசுவின் போதனைகளை கடைபிடிக்கும் எந்த நபரும் முகமதுவின் போதனையை நமபவேண்டுமானால், அது அற்புதம் என்று தான் சொல்லவேண்டும். நீ உன்னில் அன்பு கூருவதுபோல பிறனிடத்தில் அன்பு கூறவேண்டும் என்ற இயேசுவின் கட்டளையை நம்பும் கிறிஸ்தவன், அல்லாவின் பாதையில் போரிடு என்ற குர்‍ஆனின் கட்டளையை நம்புவது என்பது உலக அதியங்களில் ஒன்று.

நாங்கள் பைபிளை நம்புகிறோம், இயேசுவை நம்புகிறோம், அவ்வளவுத்தான், இஸ்லாம் உண்மை மார்க்கம் என்பதை நாங்கள் கனவிலும் நம்புவதில்லை.

Source: http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=12579#12579
 
 

கருத்துகள் இல்லை: