ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 25 ஜூலை, 2009

Answer Mist: தூதன் போல வேஷம் போடும் சாத்தான் Vs சாத்தானாக மாறும் தூதன்

Answer Mist: தூதன் போல வேஷம் போடும் சாத்தான் Vs சாத்தானாக மாறும் தூதன்



முன் கதை:



ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது கட்டுரைக்கு மூன்று பின்னூட்டங்கள் வந்தன:


1. ஆதரவிற்கு ஏமாற்றுதல் ஒரு ஆயுதம்: டாக்டர் ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது


2. யார் ஏமாற்றுக்காரர்? Dr. நாயக் அவர்களா? (அ) பின்னூட்டமிட்டவர்களா?



Mist Said:


உமரண்ணா how are you? மேடை போட்டு உங்க ஆளுங்க பட்டப்பகலில் காதுல பூ சுத்துரதை எல்லாம் கேட்டு பழகிப் போன உங்களுக்கு ஜாகிர் நாயக் சொல்ற புள்ளி விவரம் தவறாக தெரியுதாக்கும். ஒ.கே விஷயத்திற்கு வருவோம்.



Umar:


ஹலோ மிஸ்ட் அவர்களே, நான் நன்றாகவே இருக்கிறேன், நீங்க எப்படி இருக்கீங்க?


ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்றுச் சொல்லுவார்கள், அது போல, நான் விவரமாக இந்த கட்டுரையில் சொன்னேன், அதாவது "முதலில் ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த புள்ளிவிவரங்கள் சரியா இல்லையா என்று தெரிவியுங்கள், அப்போது தான் உங்களையும், உங்கள் இஸ்லாமையும், இஸ்லாமியரல்லாதவர்கள் நம்புவார்கள்" என்றுச் சொன்னேன்.


மேலே பின்னூட்டமிட்டவர்கள் என்ன செய்தார்களோ, அதையே நீங்களும் செய்துள்ளீர்கள். எந்த காலத்திலும் நீங்கள் திருந்தப்போவதில்லை என்பது மட்டும் மிகவும் தெளிவாகத் தெரிகிறது.


அது எப்படி மிஸ்ட் அவர்களே , பின்னூட்டம் இடும் எல்லா இஸ்லாமியர்களும் ஒரே மாதிரி சிந்திக்கிறீர்கள்?


// Mist Said: உங்களுக்கு ஜாகிர் நாயக் சொல்ற புள்ளி விவரம் தவறாக தெரியுதாக்கும்.//


அவர் கொடுத்த புள்ளிவிவரம் உங்களுக்கு எப்படித் தெரிகிறது? உண்மையாகத் தெரிகிறதா?


சகோதரர் மிஸ்ட் அவர்களே, உங்களுக்கு ஜாகிர் நாயக் சொன்ன புள்ளிவிவரங்கள் சரியாக இருக்கின்றதா? அப்படி சரியாக இருந்தால், ஆதாரத்தைக் கொடுக்கவேண்டியது தானே!


மறுபடியும் சொல்கிறேன், மிஸ்ட் அவர்களே,


ஜாகிர் நாயக் அவர்கள் சொன்ன விவரம் சரியானது என்ற ஆதாரம் இருந்தால்?


டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த புள்ளிவிவரங்களை ஆராய்ந்து அதற்கு ஆதாரங்களைத் தாருங்கள்.


அப்படி இல்லாத பட்சத்தில்,


நீங்கள் ஒரு பொய்யார்? ஜாகிர் நாயக் அவர்கள் ஒரு 420?


ஆதாரங்களை கொடுங்கள் கட்டுரையை நீக்குகிறேன்:


ஆதாரங்களை கொடுத்தால், நான் இந்த ஜாகிர் நாயக் பற்றிய கட்டுரையை நீக்கிவிடுகிறேன் என்றுச் சொன்னேன்.


ஜாகிர் நாயக் பற்றிய‌ இந்த கட்டுரை இருக்கக்கூடாது, இணையத்தில் உலாவக்கூடாது, இது ஒரு பொய்யான கட்டுரை, ஜாகிர் நாயக் அவர்களுக்கு அவதூறு கொண்டு வரும் கட்டுரை, இஸ்லாமுக்கு அவதூறை கொண்டு வரும் கட்டுரை என்ற அக்கரை ஒவ்வொரு முஸ்லீமுக்கும் இருந்தால், முக்கியமாக மிஸ்ட் அவர்களுக்கு இருந்திருந்தால், ஆதாரத்தை காட்டியிருப்பார், அதனை பரிசோதித்து, நானும் 2007லிருந்து என் தளத்தில் இருக்கும் "ஜாகிர் நாயக் அவர்களின் சாயம் வெளுத்தது" என்ற கட்டுரையும், பின்பு மூன்று பின்னூட்டங்களுக்கு நான் அளித்த பதில் கட்டுரையையும் நீக்கியிருப்பேன்.


ஆனால், எந்த ஒரு இஸ்லாமியருக்கும்


நேர்மை இல்லை, உண்மையில்லை,


டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் புள்ளி விவரங்கள் மீது நம்பிக்கையில்லை,


மொத்தமாக மறைமுகமாக "ஜாகிர் நாயக் அவர்கள் ஒரு பொய்யர் என்பதை" பின்னூட்டமிடாத இஸ்லாமியர்கள் நிருபித்துக்கொண்டு இருக்கிறார்கள், அதே போல பின்னூட்டமிடுகின்ற மிஸ்ட் போன்றவர்கள், ஜாகிர் நாயக்கின் பொய்யை இன்னும் அனேகர் அறிந்துகொள்ளும்படி செய்கிறார்கள்.


// Mist Said: உங்களுக்கு ஜாகிர் நாயக் சொல்ற புள்ளி விவரம் தவறாக தெரியுதாக்கும்.//


நான் பல முறை சொல்லிவிட்டேன், இஸ்லாமுக்கு நல்லபெயரை கொண்டுவரவேண்டியது, இணையத்தில் எழுதும் இஸ்லாமியர்களின் கடமை அதனை நேர்மையான முறையில் செய்தால் நன்றாக இருக்கும் என்று பல முறை சொல்லிவிட்டேன், ஆனால், இஸ்லாமியர்களுக்கு நேர்மையைப் பற்றிச் சொல்வதும் செவிடன் காதியில் ஊழிய சங்கும் ஒன்று தான்.


ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த விவரம் தவறு என்று தெரிந்தால், "ஆமாம், அவர் தவறான விவரத்தை கொடுத்துவிட்டார்" என்று சொல்லிவிட்டால், ஒருவரியில் முடிந்துவிடும் விவாதங்கள். அவரின் நேர்மை கேள்விக்குரியதாக மாறுமே ஒழிய, இஸ்லாமுக்கு கெட்டபெயர் இல்லையே! ஆனால், மிஸ்ட் போன்றவர்கள் என்ன செய்கிறார்கள்? இன்னும் பொய்யுக்கு, ஜாகிர் நாயக் அவர்களுக்கு வக்காளத்து வாங்குகிறார்கள், இதனால் விளையும் தீமை என்ன?


மிஸ்ட் எப்படியோ அப்படி ஜாகிர் நாயக் இருப்பார்! ஜாகிர் நாயக் அவர்கள் எப்படியோ, அப்படி முஹம்மது இருப்பார், இஸ்லாமும் இருக்கும் என்று இஸ்லாமியாரல்லாதவர்கள் தெரிந்துகொள்வார்கள். (செய்கின்ற எல்லா வேலையையும் இஸ்லாமியர்கள் செய்துவிட்டு, "இஸ்லாமுக்கு கெட்டப்பெயர் கொண்டுவந்துவிட்டார்கள் இவர்கள்" என்று மற்றவர்கள் மீது குற்றச்சாட்டுகளை அள்ளிவீசுவார்கள்)


மிஸ்ட் உங்களிடம் நான் கேட்கிறேன்,


நீங்கள் குர்‍ஆனை படிக்கிறீர்கள் தானே!


தினமும் அல்லாஹ்வை தொழுதுக்கொள்கிறீர்கள் தானே!


நேர்மையாக வாழவேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது என்பதை நம்புகிறீர்கள் தானே!


பொய் சொல்லக்கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது என்பதை நம்புகிறீர்கள் தானே!


இப்படி இருக்கும் போது, ஒரு இஸ்லாமிய அறிஞர் தவறு செய்யும் போது, "அவர் செய்தது தவறு தான் என்றுச் சொல்ல உங்களுக்கு தடையாக இருப்பது எது?".


உங்களுக்கு இஸ்லாம் முக்கியமா? அல்லது ஜாகிர் நாயக் அவர்கள் முக்கியமா?


இஸ்லாம் பற்றி நீங்கள் பதில் சொல்வதற்கு அனேக காரியங்கள் உலகத்தில் உள்ளன! இஸ்லாமுக்கு நல்ல பெயர் கொண்டு வருவதற்கு முஸ்லிம்களாகிய நீங்கள் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் நேர்மையானவர்களாக வாழ்ந்து காட்டவேண்டும், அப்போது தான் நீங்கள் கேட்காமலேயே இஸ்லாமியரல்லாதவர்கள் உங்கள் குர்‍ஆனை படிக்க ஆர்வம் கொள்வார்கள்? இஸ்லாமை பற்றி அறிந்துக்கொள்ள உங்களிடம் வருவார்கள்.


இஸ்லாமையும், முஹம்மதுவின் பெயரும் எக்கேடு கெட்டுப்போனாலும் பரவாயில்லை மிஸ்ட் ஆகிய நான் மட்டும் "இன்னும் ஜாகிர் நாயக் அவர்களின் பொய்யுக்கு குடை பிடிப்பேன்" என்றுச் சொல்வது உங்களுக்கு நெருடலாக தெரியவில்லை?


என்னுடைய இந்த கட்டுரையை (பதிலை) படிக்கும் இஸ்லாமியரல்லாதவர்களின் மனதில் எது இடம் பிடிக்கும், சாதார முஸ்லீம் முதல் ஜாகிர் நாயக் போன்ற பெரிய அறிஞர்கள் வரை பொய்யர்கள் என்பது என்று நினைக்க மாட்டார்களா?


இது தான் உங்களுக்கு வேண்டுமா?


முதலில் "ஆமாம், ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த விவரங்கள் தவறானவை" என்று ஒப்புக் கொள்ளுங்கள், பிறகு இஸ்லாம் பற்றி பேசவேண்டிய, எழுத வேண்டிய இதர விவரங்களைப் பற்றி சிந்தியுங்கள், இது தான் நானும் விரும்புவது. இப்படி யாரும் உங்களுக்கு அறிவுரை சொல்லமாட்டார்கள், நான் ஏன் சொல்கிறேன் என்றால், இப்படி இஸ்லாமிய அறிஞர்களாக உள்ள நாயக் போன்றவர்களைப் பற்றியே நாம் பின்னூட்ட்ம் இட்டுக்கொண்டு பதில்கள் சொல்லிகொண்டு இருந்தால், இஸ்லாம் பற்றியுள்ள மீதமுள்ள முக்கியமான விவரங்களை எப்போது பேசப்போகிறீர்கள் நீங்கள்?


இதோ உங்களுக்காகவும், ஜாகிர் நாயக் போன்றவர்களுக்காகவும் சில வசனங்கள், அதுவும் குர்‍ஆனிலிருந்து:


நேர்மையான சொல்லை சொல்லவேண்டும்:



ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள். (33:70)



…… அன்றியும் பொய்யான சொல்லையும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (22:30)



ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள். (9:119)



உங்களுக்குத் தெரியாத விஷயத்தை அறிவில்லாமல் சொல்லக்கூடாதாம்



இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு, உங்களுக்குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள்; இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கும். (24:15)



பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும்:



(நபியே!) இதுபற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால்; "வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும்; எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும்; எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) 'பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்' என்று நாம் பிரார்த்திப்போம்!" என நீர் கூறும். (3:61)



பொய் சொல்கிறவர்கள் மீது ஷைத்தான்கள் இறங்குவார்களாம்



எவர்கள் மீது ஷைத்தான்கள் இறங்குகிறார்கள் என்பதை நான் உமக்கு அறிவிக்கட்டுமா? பெரும் பொய்யனான ஒவ்வொரு பாவியின் மீதும் அவர்கள் இறங்குகிறார்கள். தாங்கள் கேள்விப்பட்டதையெல்லாம் (ஷைத்தான்களை அவர்களின் காதுகளில்) போடுகிறார்கள்; இன்னும் அவர்களில் பெரும் பாலோர் பொய்யர்களே. (26: 221- 223)



இனியாவது மிஸ்ட் அவர்களே, பொய் சொல்கிறவர்களுக்கு வாக்காளத்து வாங்கிக்கொண்டு இருக்க விருப்பம் கொள்கிறீர்களா?



Mist said:


// Umar quoted:



1) இஸ்லாம் ஒரு பொய் மார்க்கம், முஹம்மது ஒரு பொய் தீர்க்கதரிசி, கிறிஸ்து உண்டாக்கிய இரட்சிப்பை மக்கள் அடையக்கூடாது என்பதற்காக சாத்தான் உருவாக்கிய ஒரு மார்க்கம் தான் இஸ்லாம் (இக்கட்டுரையில் கிறிஸ்தவம் உண்மையானதாக இருந்தால்..." என்ற கடைசி பாகத்தை படிக்கவும்).//



உண்மையிலேயே சாத்தான் உண்டாக்கிய மார்க்கமாக இருந்தால் என்னவெல்லாம் நடக்கும்? ஒரே கடவுளை வணங்கு,சிலைகளை வணங்காதே,கடவுளுக்கு இணை வைக்காதே, விபச்சாரம் செய்யாதே, மது அருந்தாதே, வட்டி வாங்காதே, சம்பாதிப்பதில் ஹராம் ஹலால் பாரு, உண்பதில் ஹராம் ஹலால் பாரு, பெண்களை போகப்பொருளாக ஆக்காதே இப்படியெல்லாம் சொல்வானாக்கும். என்ன கொடுமை சார் இது? உமரண்ணா கொஞ்சமாவது யோசிச்சு எழுதுங்க சார். மனசை தொட்டு ஆண்டவனுக்கு பயந்து சொல்லுங்க இந்த சாத்தானிய தனங்களையெல்லாம் இன்றைய உலகில் செய்வது யார்?



Umar said:

ஏமாற்றுபவன் (சாத்தான்) எப்படி ஏமாற்ற முயற்சி எடுப்பான்:

மிஸ்ட் அவர்களே, சாத்தான் பற்றியும் அவன் தந்திரங்கள் பற்றியும், சரியான கேள்வியைத் தான் கேட்டு இருக்கீங்க.


ஒரு நபர் இன்னொரு நபரை ஏமாற்றவேண்டுமானால் எப்படி ஏமாற்றுவான்?


நேரடியாக வந்து முகத்துக்கு நேராக நான் உன்னை ஏமாற்றப்போகிறேன் என்றுச் சொல்லி ஏமாற்றுவானா?


இப்படி செய்யமாட்டான், தான் நல்லவன் போல நடிப்பான், நல்ல பெயர் எடுக்க முயற்சி எடுப்பான், நல்ல கருத்துக்களையே சொல்லுவான், மக்கள் சிறிது அவன் மீது நம்பிக்கை வைத்த பிறகு சிறிது சிறிதாக தன் உண்மை முகத்தை காட்டி கடைசியாக ஏமாற்றிச் சென்றுவிடுவான். சாத்தானுக்கும் சிறிது அறிவு இருக்குதுங்கோ!


இப்படித் தான் முஹம்மது மூலம் செய்யவைத்தான் சாத்தான், மக்காவில் இருக்கும் வரையில் நல்ல பிள்ளையாக இருந்தார், ஒரே மனைவியோடு வாழ்ந்தார், உங்களுக்கு உங்கள் வழி, எனக்கு என் வழி, உங்களுக்கு உங்கள் மார்க்கம் எங்களுக்கு என் மார்க்கம் என்றுச் சொன்னார், அதே முஹம்மது மதினாவிற்கு வந்த பிறகு, கத்தி குத்து இரத்தம் வன்முறை ஆபாசம் என்று உண்மையான நிலையை காட்டிவிட்டார்.


அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக் கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத் தக்கதாயிருக்கும். (2 கொரி 11:14-15)


சாத்தான் என்ன செய்வான், "தானே ஒளியின் தூதன்" போல முதலில் காட்சியளிப்பான், நீதியின் ஊழியக்காரர் போல காட்சி அளிப்பான், இதில் எந்த ஆச்சரியமும் இல்லை.


மக்காவில் முஹம்மது இருந்த போது, எடுத்த எடுப்பிலேயே, நான் தான் நபி என்னோடு எல்லாரும் சேருங்கள், இல்லையானால் நான் கொன்றுவிடுவேன், இஸ்லாமை ஏற்காதவர்களை நான் ஊர் கடத்திவிடுவேன், இஸ்லாம் தவிர‌ வேறு மார்க்கம் அனுமதிக்கப்படுவதில்லை, போர் புரிந்து அதில் வரும் பெண்களை கற்பழிக்கலாம் என்றுச் சொல்லியிருந்தால், அவரோடு கூட்டம் சேர்ந்த சிலரும் சேர்ந்து இருக்கமாட்டார்கள்.


ஆனால், அப்படி செய்யவில்லை முஹம்மது, முதலில் அமைதி மதமாக தன் மார்க்கத்தை காட்டினார், கிறிஸ்தவர்கள் யூதர்களுக்கு ஏற்ற விதமாக, எருசலேமுக்கு நேராகவே பல ஆண்டுகள் தொழுதுக் கொள்ளவேண்டும் என்றுச் சொன்னார், மார்க்கத்தில் கட்டாயம் இல்லை என்றுச் சொன்னார், அனேக துன்பங்களை அவதூறுகளை சகித்தார், அதாவது "ஒளியின் வேஷத்தை" போட்டுக் கொண்டார், நீதியின் ஊழியக்காரர்களின் வேஷத்தை போட்டுக்கொண்டார்.



பிறகு மதினாவிற்கு வந்த பிறகு தான், உண்மை இஸ்லாம் வெளிப்பட்டது, இதன் விளைவு நாம் இன்றும் அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம்.


எனவே, எடுத்த எடுப்பிலேயே வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்றுச் சொன்னால், வேலை நடக்காது என்பது சாத்தானுக்கு நன்றாகத் தெரியும். எனவே தான் சாத்தான் முஹம்மதுவை முதலில் நல்ல மார்க்கமாக இஸ்லாமைக் காட்டினான், பிறகு தான் தன் உண்மையான முகத்தைக் காட்டினான்.


கிறிஸ்தவர்களுக்கு சாத்தானின் தந்திரங்கள் மிகவும் நன்றாகவே தெரியும்.



// Mist said



உண்மையிலேயே சாத்தான் உண்டாக்கிய மார்க்கமாக இருந்தால் என்னவெல்லாம் நடக்கும்? ஒரே கடவுளை வணங்கு, சிலைகளை வணங்காதே,கடவுளுக்கு இணை வைக்காதே, விபச்சாரம் செய்யாதே, மது அருந்தாதே, வட்டி வாங்காதே, சம்பாதிப்பதில் ஹராம் ஹலால் பாரு, உண்பதில் ஹராம் ஹலால் பாரு, பெண்களை போகப் பொருளாக ஆக்காதே இப்படியெல்லாம் சொல்வானாக்கும். என்ன கொடுமை சார் இது? உமரண்ணா கொஞ்சமாவது யோசிச்சு எழுதுங்க சார். மனசை தொட்டு ஆண்டவனுக்கு பயந்து சொல்லுங்க இந்த சாத்தானிய தனங்களையெல்லாம் இன்றைய உலகில் செய்வது யார்?//



நான் முதலிலேயே சொன்னது போல, நாம் இறைவனுக்கு எதிராக பெரிய பாவங்களை செய்ய சாத்தான் தூண்டுவான் என்று நாம் நினைக்கவேண்டியதில்லை, சாத்தான் இறைவனின் சின்ன கட்டளைகளையும் மீறச் செய்வான். சின்னதோ பெரியதோ இறைவனுக்கு கீழ்படியாமல் கட்டளைகளை மனிதன் மீறவேண்டும், இது தான் சாத்தானுக்குத் தேவை.


உதாரணத்திற்கு: ஏவாளிடம் சாத்தான் வந்து, நீ இறைவனுக்கு நேராகச் சென்று, கெட்ட வார்த்தையில் வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டு என்றுச் சொல்லவில்லை, அதற்கு பதிலாக இறைவனின் கட்டளையை மனிதன் மீறும்படிச் செய்தான், அதாவது அந்த மரத்தின் கனியை புசி என்றுச் சொன்னான், இது சிறிய தவறு தான், ஆனால், இறை கட்டளையை மீறுவது ஆகும். இறை கட்டளையை மீறுவது தான் பாவம், அது பெரியதா சின்னதா என்பதில்லை.


அது போல, இஸ்லாம் வட்டிக்கு வாங்கச் சொல்லவில்லை, இதனால் இது இறைவனின் மார்க்கமே என்றுச் சொல்வதற்கு வாய்ப்பு இல்லை. நாத்தீகர்கள் கூட வட்டிக்கு வாங்காதே என்றுச் சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், அப்படியானால், நாத்தீகமும் இறைவனால் உண்டானது என்று நம்பிவிடுவீர்களோ! இது முரண்பாடாக இல்லை!


உலகில் இருக்கும் எல்லா மார்க்கங்களிலும் நல்ல கட்டளைகள் அனேகம் உண்டு, அப்படியானால், இஸ்லாமைப் போல‌ நல்ல கட்டளைகள் இருக்கும் மீதி இருக்கின்ற மார்க்கங்கள் இறைவனால் உண்டாக்கப்பட்டது என்று நீங்கள் நம்புகிறீர்களா?


நம்ப மாட்டீர்கள் என்று எனக்குத்தெரியும் அப்படியானால், அம்மார்க்கங்களில் உள்ள நல்ல கட்டளைகள் என்ன ஆவது? எல்லா மதங்களிலும் நீதியான வாக்கியங்கள் உண்டே, நல்லது செய், தீமை செய்யாதே, பொய் பேசாதே, நேர்மையானவனாக இரு என்று எல்லா மார்க்கங்களும் சொல்கின்றனவே!


இயேசு கொடுத்த இரட்சிப்பை மனிதன் பெறுவதற்கு தடையாக சாத்தம் உண்டாக்கிய ஒரு வழி தான் "இஸ்லாம்", சிலுவை மரணமில்லை, உயிர்த்தெழுதலில்லை என்றுச் சொன்னான், இது போதும் மனிதன் இரட்சிப்பு அடையாமல் பார்த்துக் கொள்வதற்கு.


நீங்கள் எழுதிய வரிகளில் சிலவற்றை குறிப்பிட்டு எழுத ஆசைப்படுகிறேன்:


//Mist said: விபச்சாரம் செய்யாதே…. , பெண்களை போகப் பொருளாக ஆக்காதே //


இஸ்லாம் விபச்சாரம் செய்யாதே என்றுச் சொல்கின்றதா? அப்படியானால், இந்த வசனத்தின் பொருள் என்னவோ?



அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும். (4:3)



(குர்‍ஆன் 4:3ம் வசனத்தில் ஓர் அடிமைப்பெண் என்று எழுதி இஸ்லாமின் பெயரை நிலை நாட்ட முயற்சித்துள்ளார் மொழியாக்கம் செய்த இஸ்லாமியர்)



போரில் கிடைத்த அடிமைப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளாமல் அவளோடு உடலுறவுக் கொள்வது விபச்சாரம் இல்லையா?



இஸ்லாம் அதனை விபச்சாரம் என்று அழைக்கவில்லை என்பதால், விபச்சாரம் ஆகாதா?


போரில் பிடிப்பட்ட பெண்களை கற்பழிக்க உங்கள் முஹம்மது அனுமதி அளித்தாரே, இது பெண்களை மோகமாக பார்ப்பதில்லையா?


பெண்களை மோகமாக பார்க்காதவர்களா நான்கு பெண்களை திருமணம் செய்துக் கொள்ளமுடியும்?


திருமண பந்தமில்லாமல் ஒரு பெண்ணோடு உடலுறவுக் கொள்வதை இஸ்லாம் என்னவென்றுச் சொல்கிறது? தெய்வீக பந்தமா அல்லது விபச்சாரமா?


ஆறு வயசு சிறுமியைக் கூட விட்டுவைக்கவில்லையே உங்கள் நபி?


அவர் செய்த அந்த செயலினாலே, இஸ்லாமிய நாடுகளில் எத்தனை சின்னஞ்சிறு குழந்தைகள் வேதனை அடைகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா?


ஒருவேளை மிஸ்ட் அவர்களுக்கு ஆறுவயது மகள் இருந்து, அந்த மகளை ஒரு இஸ்லாமிய அறிஞர், 50 வயதிற்கு அதிகமாக இருக்கும் ஒருவர் திருமணம் செய்துகொள்ள அனுமதி கேட்டால் கொடுப்பீர்களா?


சொர்க்கத்தில் அனேக பெண்கள் காத்திருக்கிறார்கள் நீங்கள் வந்து அனுபவிக்கலாம் என்று சொல்லும் ஒரு மார்க்கம் "இறைவனால் உண்டானதா என்று சிந்தித்துப்பாருங்கள்"?


//Mist said: இந்த சாத்தானிய தனங்களையெல்லாம் இன்றைய உலகில் செய்வது யார்?//


முஸ்லீம்கள் தான்,


ஹோட்டலுக்கு செல்லமுடியலே,


இரயிலில் பிரயாணம் செய்யமுடியலே,


குறைந்த பட்சம் கிரிக்கேட் விளையாட்டையாவது நேரடியாக பார்ப்போம் என்றுச் சொன்னால், அதற்கும் வாய்ப்பில்லே,


வெடிகுண்டு மழை உலகம் முழுவதும் பெய்துக்கொண்டு இருக்கிறது... யார் செய்கிறாங்க இந்த சாத்தானிய காரியங்கள்?


அமெரிக்காகாரன் ஈராக்கில் குண்டை வீசுகின்றானாம், இஸ்லாமியர்களும் உலகம் முழுவதும் குண்டு வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்? இஸ்லாமியர்களும் அமெரிக்காகாரணும் குண்டுகளைப்போட்டு, உலகத்தை அழித்துவிடுங்கள். யூதர்கள் மும்பையில் எங்கோ வாழுகிறார்களாம், அதனால், ஹோட்டலில் கூட நிம்மதியாக உட்கார்ந்து சாப்பிடமுடியவில்லை. எவனோ, ஐரோப்பா கண்டத்தில் எங்கோ பத்திரிக்கையில் முஹம்மது பற்றி படங்களை வரைந்தானாம், ஒரு பையித்தியக்காரன் ஆப்ரிக்கா கண்டத்தில் கிறிஸ்தவர்களை தாக்குகிறான். போப் முஹம்மது பற்றிச் சொன்னாராம், ஏதோ ஒரு பயித்தியம் பிடித்தவன், யாரோ ஒரு பெண்ணை கொன்றானாம்.


நம் எதிர்ப்புக்களை நேர்மையான முறையில் அஹிம்சை முறையில் சொல்லத் தெரியாதவர்கள் இருக்கும் வரை உலகத்தில் நிம்மதிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.


ஒரு வயது குழந்தையை கூட திருமணம் செய்துக் கொள்ளலாம்,


http://www.youtube.com/watch?v=F13gtjjDEgE


ஒரு வயது குழந்தையை கூட திருமணம் செய்துக் கொள்ள ஒப்பந்தம் போடலாம் என்றுச் சொல்கிறார் இந்த பெரியவர். மிஸ்ட் அவர்களே இது தான் "இறைத் தன்மையோ" இது தான் இறை மார்க்கமோ. இவருக்கு சட்டம் போட வேறு தலைப்பே கிடைக்கவில்லையா?


முஸ்லீம்களுக்கு திருமண ஒப்பந்தங்கள் போட‌ பெண்கள் கிடைக்கவில்லையா? அவ்வளவு பஞ்சமாகிவிட்டதா சௌதியில் பிறக்கின்ற குழந்தைகளோடு ஒப்பந்தம் போடுவதற்கு? சொல்வதற்கே கேவலமாக‌ தெரியவில்லை? கீழ் தரமாக தெரியவில்லை?


இஸ்லாமிய இமாம்களை நம்பி, எப்படி சிறு பிள்ளைகளை அவர்களிடம் மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளுங்கள் என்று அனுப்பமுடியும்?


இவைகள் எல்லாம் யாருடைய செயல்கள், இறைவனின் செயலா? இறைவனின் கட்டளைகளா? சிந்திக்கும் மனிதன் சிந்திக்கட்டும்.


எனவே, மிஸ்ட் அவர்களே, சாத்தான் ஒளியின் வேஷம் போடுவான், தன்னை ஒரு ஆடு என்று காண்பித்துக்கொள்வான், ஆனால், அவன் ஒரு ஓணாய் என்பதை சீக்கிரத்திலேயே தெரிந்துவிடும், இஸ்லாம் அமைதி மார்க்கமல்ல என்பது மதினாவிற்கு முஹம்மது வந்ததும் தெரிந்துவிட்டது.



Mist said:


Umar said:


2) இஸ்லாமிய அறிஞர்கள் இஸ்லாமை பிழைக்கவைப்பதற்காக பல பொய்களை அள்ளிவீசுவதில் தயங்குவதில்லை, உண்மையை திசைத் திருப்பி, மக்களை முட்டாள்களாகவே வைத்திருக்க முயற்சிப்பார்கள். இதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு, ஜாகிர் நாயக் அவர்களின் பல தார மண கட்டுரையாகும்.


பொய்களை அள்ளி வீசுவது யாருன்னு கொஞ்ச நேரம், ஒரு ஒன் ஹவர் ஏஞ்சல் TVயை பாருங்க புரிந்து விடும்.(சரக்கு இருந்தால்)



Umar said:


நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் தருவதற்கு முன்பாக, நான் இரண்டாம் பாயிண்டாகச் சொன்ன விவரம் பற்றி ஏன் நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லை? ஒருவேளை ஒரு சில இஸ்லாமியர்களுக்கு ரோஷம் வந்து, அதாவது வேகம் வந்து, ஜாகிர் நாயக் அவர்கள் பொய் சொல்லமாட்டார், அவர் உண்மையைத் தான் சொல்வார் என்று வேகவேகமாக‌ உண்மையை கொண்டுவர முயற்சி எடுப்பார்கள் என்று நினைத்து, உலக புள்ளிவிவரங்கள் உள்ள ஒரு தொடுப்பையும் என் கட்டுரையின் கடைசியில் கீழ்கண்டவாறு கொடுத்தேன்:

// 1989 லிருந்து 2009 வரையுள்ள உலக ஜனத்தொகை கணக்கெடுப்புக்கள் இந்த தளத்தில் உண்டு - CIA World Factbook - http://www.theodora.com/wfb/. டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் கணக்கெடுப்பிற்கு உதவி செய்ய விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் உதவியாக இருக்கலாம். //


மிஸ்ட் அவர்களே, நீங்கள் அந்த தொடுப்பில் சென்று, உங்கள் நேர்மையாளர் ஜாகிர் நாயக் அவர்கள் சொல்லும் விவரங்களின்படி புள்ளிவிவரங்கள் உள்ளதா என்று பார்த்தீர்களா?


அதையெல்லாம் பார்க்காமல், இப்படி பதிலே சொல்லாமல் என்னிடம் கேள்வி கேட்டால் எப்படி?


இஸ்லாமின் உண்மை முகத்தை வெளிக்காட்டுகிறவன் கிறிஸ்தவன் என்பதால், கேட்ட கேள்விக்கு பதில்களைத் தராமல், ஏஞ்சல் டீவியை பாருங்கள், இந்த ஊழியரை பாருங்க அவரைப்பாருங்க என்றுச் சொல்வீர்கள், ஆனால், ஒரு நாத்தீகனாக இருந்தால், பதிலைச் சொல்லாமல் யாரைக் காட்டி நீங்கள் மழுப்பமுடியும்?


நான் தமிழாக்கம் செய்த கட்டுரை ஒரு நாத்தீகர் எழுதியது, அவருக்கு என்ன பதில் தரப்போகிறீர்கள்?


கிறிஸ்தவத்தை குற்றப்படுத்திவிட்டால், இஸ்லாம் உண்மையாகிவிடுமோ? ஜாகிர் நாயக் அவர்கள் சொன்னது சரியான புள்ளி விவரங்களாக மாறிவிடுமோ?


இனி கிறிஸ்தவ ஊழியர்கள் பற்றி என் கருத்தைச் சொல்கிறேன்:


டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த விவரங்கள் தவறானவை, அவைகளுக்கு பதிலைத் தாருங்கள் என்று கேட்டால், அதற்கு பதிலே சொல்லாமல், இப்படி இஸ்லாமுக்கு கெட்டப்பெயர் வரும் படி ஏன் ஜாகிர் நாயக் அவர்கள் தவறான விவரங்களைச் சொல்கிறார் என்று சிந்திப்பதை விட்டுவிட்டு, வேதனை அடைவதை விட்டுவிட்டு,


// Mist said : "மேடை போட்டு உங்க ஆளுங்க பட்டப்பகலில் காதுல பூ சுத்துரதை எல்லாம் கேட்டு பழகிப் போன உங்களுக்கு ஜாகிர் நாயக் சொல்ற புள்ளி விவரம் தவறாக தெரியுதாக்கும்//


"ஜாகிர் நாயக் சொல்ற புள்ளி விவரம் தவறாக தெரியுதாக்கும்"என்ற வரியை கொஞ்சமும் வெட்கமில்லாமல், வாய்க்கூசாமல் சொல்லியுள்ளார் மிஸ்ட் அவர்கள். நான் ஏன் இப்படி எழுதுகிறேன் என்றுச் சொன்னால், "நாயக் அவர்கள் கொடுத்த விவரம் தவறு என்று முகத்திலே அறைந்தாற்போல கேள்வி கேட்டு இருக்கும் போது" அதற்கு பதில் சொல்ல முயற்சி எடுப்பதை விட்டு விட்டு, ஆதாரங்களை தேடிகண்டுபிடிப்பதை விட்டுவிட்டு, "நாயக் அவர்கள் சொல்லும் புள்ளிவிவரம் பெரியதாகத் தெரியுதாக்கும்" என்று சொல்லும் இப்படிப்பட்டவர்கள் இருக்கும் வரை இஸ்லாம் உருப்படுமா? ஏனென்றால், "தலைவர்கள்" செய்யும் தவறுகளை மறுக்கும், மறைக்கும் தொண்டர்கள் இருக்கும் வரை, தலைவர்கள் தொண்டர்களை ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள். மிஸ்ட் அவர்களே, உண்மையைச் சொல்கிறேன் " இஸ்லாமியர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?" என்று சிந்திக்கும் போது, மிகவும் வேதனையாக உள்ளது. அதாவது, மனிதன் இப்படியும் இருப்பானா? என்று யோசிக்கத் தோன்றுகிறது.


சரி, இப்போது கிறிஸ்தவ கூட்டங்கள், ஏஞ்சல் டீவி என்று சொன்னீர்களே, அதைப் பற்றிய விஷயத்திற்கு வருகிறேன்.


சாத்தானாக மாறும் தேவதூதர்கள்


கிறிஸ்தவ ஊழியர்கள் கூட்டங்கள் போட்டு, மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று குற்றம் சுமத்துகிறீர்கள். அப்படியானால், அவர்கள் எந்த புள்ளிவிவரங்கள் சொல்லி ஏமாற்றுகிறார்கள், யாரை ஏமாற்றுகிறார்கள் என்று நீங்கள் கண்டுபிடித்து, அரசாங்கத்திற்கும் சட்டத்திற்கும் தெரிவிப்பீர்களானால் மிகவும் நன்றாக இருக்கும்.


ஏனென்றால், உங்களைப்போல கிறிஸ்தவர்கள் இருக்கமாட்டார்கள், ஒரு கிறிஸ்தவ ஊழியர் பண விஷயத்தில், பெண் விஷயத்தில் வேறு எந்த விஷயத்திலும் தவறுகள் இழைக்கும் போது, சட்டம் அவர்களை தண்டிக்கவேண்டும், சட்டம் தன் வேலையை செய்யவேண்டும்.


சில நேரங்களில் கிறிஸ்தவ ஊழியர்களிலும் சிலர் முஹம்மதுவைப் போல நடந்துவிடுவதுண்டு, பணத்தின் மீது ஆசைப்பட்டு, இயேசுவின் முதுகில் கத்தியால் குத்திவிடுகின்றனர், ஒரு சிலர் பெண்களிடம் முஹம்மது போல ஆசைப்பட்டு தகாதவாறு நடந்துக் கொள்வதுண்டு, இப்படிப்பட்டவர்கள் தண்டிக்கபப்டவேண்டும்.


நீங்கள் இப்போது ஜாகிர் நாயக் அவர்களின் மிகப்பெரிய பொய்யுக்கும் புரட்டலுக்கும் வக்காளத்து வாங்குவது போல, இப்படிப்பட்டவர்களுக்கு கிறிஸ்தவர்கள் வக்காளத்து வாங்க வரமாட்டார்கள். எனவே, உங்களால் முடிந்தால், கிறிஸ்தவ ஊழியர்களில் இருக்கும் ஒரு சில முஹம்மதுக்களை இனம் கண்டுக்கொண்டு சட்டத்திற்கு ஒப்புவியுங்கள், அதனால் கிறிஸ்தவத்திற்கு நன்மை உண்டாகும். அவ்வப்போது செய்திகளில் நாம் காண்கிறோம், ஒரு சில கிறிஸ்தவ ஊழியர்களின் குற்றங்கள் சட்டத்தின் முன் கொண்டுவரப்படுகிறது, அவர்கள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படுகிறார்கள், இவர்கள் உங்கள் முஹம்மதுவிற்கு நண்பர்கள், இவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.


எனவே, வினை விதைப்பவன் வினையையே அறுக்கட்டும். இதற்கு நாங்கள் எக்காலத்திலும் ஆதரவு அளிக்கமாட்டோம்.


இயேசு இன்றும் அற்புதங்கள் செய்கிறார்:


இரண்டாவதாக, கண்களில் மிளகாய் அறைத்துபோட்டால் எப்படி எரியுமோ அது போல, முஸ்லீம்களின் கண்கள் எரிவதற்கு காரணம், கிறிஸ்தவர்களுக்கு இயேசு இன்றும் அற்புதங்களைச் செய்கிறார் என்று கிறிஸ்தவர்கள் தொலைக்காட்சிகளிலும், கூட்டங்களிலும் சாட்சி சொல்வது தான். இதை ஜீரணித்துக்கொள்ள முடியாத சிலர், கூட்டம் போட்டு ஏமாற்றுகிறார்கள் என்று குற்றம் சுமத்துகிறார்கள்.


இஸ்லாமியர்களிடம் நான் கேட்கிறேன், "கடவுள் அற்புதங்களை செய்கிறார், சுகமாக்குகிறார், நமக்கு நன்மை செய்கிறார்" என்று நீங்கள் நம்புகிறீர்களா?


அதாவது, அல்லாஹ் இன்றும் முஸ்லீம்களுக்கு சுகத்தை தருகிறார் என்று நம்புகிறீர்களா? இல்லையா?


"அல்லாஹ் நன்மைகளை தருகிறார்" என்று தான் நீங்கள் பதில் சொல்வீர்கள்.


இதே போலத்தான், எங்களுக்கும் இயேசு அற்புதங்களை செய்கிறார், நாங்கள் அதற்கு சாட்சிகளாக இருக்கிறோம். கிறிஸ்தவர்கள் ஒன்றும் தீவிரவாதிகளுக்கு சாட்சிகளாக இல்லை, வெடிகுண்டு போட்டு, மக்களை அழிக்கும் நபருக்கு சாட்சிகளாக இல்லை. எங்களுக்கு இரட்சிப்பைக் கொடுத்து, எங்களுக்கு ஆரோக்கியத்தைக் கொடுத்து, எங்களுக்காக உயிரைக் கொடுத்தவருக்கு நாங்கள் சாட்சிகளாக இருக்கிறோம்.


மனித இனத்திற்கு எதிரான சட்டங்களைக் கொடுத்த அல்லாஹ்விற்கு நீங்கள் சாட்சிகளாக இருந்தால், கிறிஸ்தவர்கள் ஏன் இயேசுவிற்கு சாட்சிகளாக இருக்கக்கூடாது, ஏன் அவர் செய்த அற்புதங்களை உலகத்திற்குச் சொல்லக்கூடாது.


"இல்லை, நாங்கள் நம்பமாட்டோம், உங்கள் ஊழியர்கள் பொய் சொல்கிறார்கள்" என்று நீங்கள் சொன்னால் அதை நிருபியுங்கள், சமுதாயத்தின் மீதும் உண்மையின் மீதும் அவ்வளவு அக்கரையுள்ளவர்களாக நீங்கள் இருந்தால் நிருபியுங்கள். தவறு இழைத்தவன் தண்டனை அனுபவிக்கட்டும்.


ஒரு சில ஊழியர்கள் இப்படி பொய்யர்களாக இருப்பதும் உண்மையே! ஆனால், யாரோ ஒருவர் நூற்றுக்கு ஒருவர் முஹம்மதுவைப்போல பொய்யராக இருப்பார், விசுவாசிகளை சுரண்டுவார், இப்படிப்பட்டவர்கள் ரொம்ப நாள் தாக்குபிடிக்கமுடியாது, தேவனும் சரியான நேரம் பார்த்து தண்டிப்பார். சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டு தண்டனைப் பெறுவார். இதற்காக, எல்லாரும் அப்படி இல்லை.


எனவே, ஒரு சிலரின் தவறுக்காக எல்லாரையும் குற்றப்படுத்துவது மடத்தனம்.


"முஸ்லீம்களாகிய நங்கள் நம்பமாட்டோம், கிறிஸ்தவர்கள் அற்புதங்கள் சுகம் பெறுகிறோம் என்றுச் சொல்வதெல்லாம் பொய்" என்று சொல்வீர்களானால், இஸ்லாம் பற்றிய அற்புதங்கள் மட்டும் எப்படி உண்மையாகும்? நீங்கள் ஒரு நாத்தீகராக இருந்தால், ஒன்றும் கேட்கமுடியாது, அற்புதங்களுக்கு ஆதாரத்தை காட்டமுடியாது, ஆனால், ஒரு ஆத்திகராக இருந்து, நீங்கள் நம்ப மறுத்தால், உங்கள் இஸ்லாமின் நிலை என்ன?


முஹம்மது, எனக்கு காபிரியேல் தூதன் காணப்பட்டான் என்பதற்கு என்ன ஆதாரம்? இதை மட்டும் நம்புவீங்க!


எனக்கு குர்‍ஆனை காபிரியேல் தூதன் இறக்கினான் என்றுச் சொன்னால் நம்புவீங்க!


என் வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்துக்கொள்ளும்படி அல்லாஹ் சொல்கிறான் என்றுச் சொன்னால், நம்புவீங்க, ஆனால், மற்றவர்கள் சொல்லுவதை நம்பமறுப்பீங்க? முஹம்மது தனக்காக இப்படி பொய்யாக சொல்கிறார் என்று சந்தேகப்படமாட்டீங்க!


வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்துக்கொள்ள அனுமதி அளித்ததினால், அப்படி என்ன தான் ஒரு புதிய தத்துவத்தை அல்லாஹ் சொல்லிவிட்டார்? இதன் மூலம் உலகத்திற்கு என்ன நன்மை உண்டாகப்போகிறது? என்னவோ, உலகத்தில் கோடிக்கணக்கான பேர்களுக்கு வளர்ப்பு மகன்கள் இருப்பது போலவும், அவர்கள் அனைவரும் தங்கள் மனைவிகளை விவாகரத்து செய்துவிட்டது போலவும், அந்தப் பெண்களுக்கு வாழ்வு கொடுக்க உலகத்தில், அவளின் மாமனார் தவிர வேறு யாரும் இல்லாதது போலவும், அல்லாஹ் கட்டளைகளை இறக்குகிறார். இதில் வேறு "இனி யாருக்கும் இப்படி திருமணம் செய்வதினால் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக" நான் இப்படி என் நபி மூலமாக செய்யவைத்தேன் என்று, என்னவோ தன் நபிக்கு ஒரு மிகப்பெரிய துன்பத்தை கொடுத்துவிட்டது போல, வசனத்தை இறக்குகிறார். இதை சிந்திக்கமாட்டீங்க!


ஆனால், உங்களுக்கு மற்றவர்கள் சொல்லும் அற்புதங்கள் உங்களுக்கு பொய்யாகத் தெரியும்!


ஒரு நாள் இரவு என்னை அல்லாஹ் அப்படியே அலேக்காக எடுத்து வானத்தில் பறக்கவிட்டு, எருசலேமுக்கு அனுப்பினார், நான் அங்கு பைபிளின் நபிகளைக் கண்டேன் என்று ஒரு பொய்யான கதையை முஹம்மது சொன்னால் நம்புவீர்கள்! மற்றவர்கள் எங்கள் இறைவன் எங்களுக்கு சுகம் கொடுத்தார் என்றுச் சொன்னால் நம்பமாட்டீர்கள்?


தனக்காக, தன்னுடைய நன்மைக்காக, தன்னுடைய ஆசைகளுக்காக, தனக்கு சாதகமாக அனேக வசனங்களை அல்லாஹ்வின் பெயரில் இறங்கியது என்று முஹம்மது சொன்னால், கேள்வியே கேட்காமல் நம்புவீர்கள், ஆனால், மற்றவர்கள் சொல்வதை நம்பமறுப்பீர்கள்?


முஹம்ம்து உருவாக்கிக்கொடுத்த அல்லாஹ் இன்று அற்புதங்கள் செய்கிறாரோ இல்லையோ எனக்குத் தெரியாது, ஆனால், இயேசு இன்றும் கிறிஸ்தவர்களுக்கு நன்மைகள் செய்துக்கொண்டு இருக்கிறார்.


கிறிஸ்துவிற்காக உண்மையாக உழைக்கும் கிறிஸ்தவ ஊழியர்களுக்காக நான் இயேசுவை துதிக்கிறேன், உண்மையான ஊழியர்களுக்காக இயேசுவை துதிக்கிறேன், நேர்மையான ஊழியர்களுக்காக இயேசுவை துதிக்கிறேன்.


அதே நேரத்தில் இயேசுவிற்கு கெட்டப்பெயர் ஒரு சில கிறிஸ்தவ ஊழியர்கள் கொண்டு வருகிறார்கள், இப்படிப்பட்டவர்களுக்கு சட்டம் தன் கடமையைச் செய்யவேண்டும் என்று வேண்டுகிறேன்.


முடிவாக, மிஸ்ட் அவர்களே, முதலில் உங்கள் இஸ்லாமிய அறிஞர்கள் செய்யும் தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள், அவர்களைத் திருந்தச் சொல்லுங்கள், முடிந்தால் நீங்கள் அவர்களை திருத்த முயற்சி எடுங்கள், நேர்மையாக இருக்கச் சொல்லுங்கள், பிறகு மற்றவர்களிடம் இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள். நீங்களும் அவர்களுக்கு ஜால்ரா தட்டாதீர்கள் (இந்த வார்த்தையை விட சரியான வார்த்தை வேறு இல்லை, ஏனென்றால், ஜாகிர் நாயக் அவர்களின் கட்டுரைக்கு மொத்தமாக நான்கு பேர்கள் பின்னூட்டமிட்டார்கள், முதல் மூன்று பேர் செய்த அதே வேலையை நீங்களும் செய்துள்ளீர்கள்).


அதே நேரத்தில் நாங்களும் உங்களுக்குச் சொல்லிக்கொள்கிறோம், ஒரு சில கிறிஸ்த ஊழியர்கள் தவறுகள் செய்யும் போது, அதற்கு "சபாஷ்" என்று நாங்கள் சொல்லமாட்டோம்.

அடுத்த பின்னூட்ட பதிலில் சந்திக்கும் வரை......

9 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

உமரண்ணா என்னுடைய பின்னூட்டத்திற்கு பதில் சொல்றேன் பேர் வழின்னு வழ்க்கமாக செய்வது போல பக்கம்,பக்கமா எழுதியிருக்கீங்கே அதாவது நீர் பல முறை அரைத்த மாவையே அரைத்துள்ளீர். நான் கேள்வி எழுப்பியிருந்த மற்ற விஷயங்களுக்கு விடை எங்கே? முழுவதற்கும் பதில் சொல்லுங்க சார்.

பெண்மையை கண்ணியப்படுத்தும் பைபிள் வசனங்களுக்கு என்ன பதில்? நல்லா கொடுக்கிறீங்கே டீடேய்லு.

மிஸ்ட்.

பெயரில்லா சொன்னது…

அருமையான மிஸ்ட் அவர்களே,

இந்த என்னுடைய பதில் எந்த கட்டுரைக்கு சம்மந்தப்பட்டது? ஜாகிர் நாயக் அவர்கள் ஒரு "பொய்யர் அவரது சாயம் வெளிக்கப்பட்டது" என்பது பற்றியது, ஆக, அவர் உண்மையிலேயே ஒரு 420 என்றும் மற்றும் "இஸ்லாம் சாத்தானால் உருவாக்கப்பட்டது" என்றும் உங்கள் மௌனத்தினால் நிருபனமாகிவிட்டது, இதனால் உங்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்போது இன்னொரு கட்டுரைக்கு நீங்கள் இட்ட பின்னூட்டம் பற்றி இங்கே கேள்வி எழுப்பியிருக்கிறீர்கள்? உங்களால் ஜாகிர் நாயக் அவர்களின் விவரங்களுக்கு ஆதாரங்களை தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லையா? அய்யோ பாவம் நீங்கள். நீங்கள் இப்படிச் சொல்லி தப்பித்துக்கொள்ளலாம் "எல்லாம் அல்லாஹ்விற்குத் தெரியும்" என்று.

நீங்கள் இட்ட பின்னூட்டத்திற்கு நான் கண்டிப்பாக பதில் அளிப்பேன். அதுவும் எந்த கட்டுரைக்கு எந்த கேள்வி எழுப்புவது என்பதை தெரியாமல் நீங்கள் எழுதியுள்ளீர்கள், கண்டிப்பாக எழுதுவேன். [பொதுவாக முஸ்லிம்கள் பெண்கள் உரிமைகள் பேச தகுதியில்லாதவர்கள், இதற்கு தற்கால இஸ்லாமிய நாடுகளில் முஸ்லிம் பெண்களுக்கு இழக்கப்படும் கொடுமைகளைக் கண்டாலே போதும், இருந்தும் நீங்கள் அந்த தலைப்புப் பற்றி எடுக்கிறீர்கள் என்றுச் சொன்னால், இஸ்லாமின் முகத்தில் கரியை பூசிக்கொள்ள நீங்களே அழைப்பிதழ் அனுப்புவதற்கு சமம், இதனை என் பதில்கள் கட்டுரைகளை படித்த பிறகு தெரிந்துகொள்வீர்கள்]

நீங்கள் வெறும் பின்னூட்டம் இட்டுவிட்டால், நான் உடனே அதற்கு பதில் அளிக்க என் நேரத்தை ஒதுக்கமுடியாது, ஒவ்வொரு கட்டுரையாக நான் பதில்கள் சொல்லிக்கொண்டே வருவேன். அனேக கட்டுரைகளை தமிழாக்கம் செய்து நண்பர்கள் அனுப்புகிறார்கள் அவைகளை சரிபார்த்து பதிக்கவேண்டும், ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கடந்த வாரம் நான்கு கட்டுரைகளை பதித்துள்ளேன். நானும் அவ்வப்போது உங்களைப் போன்றவர்களுக்கு இதோ இந்த தற்போதைய கட்டுரையைப் போல பதில் அளித்துக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் இடும் பின்னூட்டங்களுக்கு மட்டுமே நான் பதில் சொல்லிக்கொண்டு இருக்கவேண்டும் என்றுச் சொல்லி, என்னை இந்த ஒரு விஷயத்தில் நேரத்தை ஒதுக்கிவைக்க உங்களால் முடியாது. இஸ்லாமியர்களின் அனைத்து தந்திரங்கள் பற்றியும், யுக்திகள் பற்றியும் ஓரளவிற்கு அறிந்தவன் நான்.

என்னவோ, பெண்கள் பற்றி இஸ்லாம் உயர்த்திப் பேசுவது போல பேசுகிறீர்கள், உங்கள் இஸ்லாமின் உண்மை முகத்தை காட்டாமலா நான் இருந்துவிடுவேன்.

உங்களைப் போன்றவர்கள் பின்னூட்டம் இட்டால் தான், நானும் ஏதாவது எழுதுவதற்கு காரணமாக இருக்கும், சும்மா எழுதுவது என்றால், அவ்வளவு இனிமையாக இருக்காது. உங்களின் பின்னூட்டங்களினால், அனேக புதிய விஷயங்களை (இதுவரை நான் எழுதாத விவரங்களை) எழுத வாய்ப்பு கிடைக்கிறது, எனவே, ஈஸா குர்‍ஆனின் ஒவ்வொரு கட்டுரைக்கும் உங்களால் இயன்ற பின்னூட்டத்தை இடுங்கள், (கட்டுரையின் தலைப்பிற்கு தகுந்த பின்னூட்டமாக இருக்கட்டும், சம்மந்தமில்லாமல் பின்னூட்டம் இடவேண்டாம்). எனக்கு நேரம் இருக்கும் போது அவைகளுக்கு நிதானமாக பதில்களை அளிக்கிறேன், வாசகர்களும் இஸ்லாம் பற்றி, முஹம்மது பற்றி இன்னும் நன்றாக தெரிந்துக்கொள்வார்கள்.

பதில் அளிக்கிறேன்... காத்திருங்கள்.

நான் பல முறை அரைத்த மாவையே திரும்ப அரைக்கிறேன் என்று சொல்லும் நீங்கள் ஏன், நான் கேட்ட கேள்விக்கு பதில் தராமல் ஜகா வாங்குகிறீர்கள், உங்கள் இஸ்லாமிய அறிஞர் ஒரு பொய்யர் என்பதில் உங்களுக்கு உடன்பாடு அதிகம் என்று நினைக்கிறேன். எப்படியோ, இஸ்லாமின் கோர முகமும், இஸ்லாமிய அறிஞர்களின் தந்திர யுக்தியும் உலகத்திற்கு தெரிந்தால் போதும்.

பல நாள் திருடன் (இந்த கட்டுரையைப் பொருத்த வரையில் ஜாகிர் நாயக்) ஒரு நாள் அகப்படுவான் என்பார்கள், அது போல, அவரின் சாயம் வெளுத்துக்கொண்டு இருக்கிறது. இனி இந்த கட்டுரையில் பின்னூட்டமிட்டால், ஜாகிர் நாயக் அவர்களின் புள்ளிவிவரம் பற்றி எழுதுவதாக இருந்தால் பதிக்கவும், ஏனென்றால், ஒரே கட்டுரைக்கு இரண்டு பெரிய பின்னூட்ட கட்டுரையை எழுதிவிட்டேன். எனவே, இந்த‌ கட்டுரைக்கு ஏற்ற பதிலாக இருந்தால் பதிக்கவும்.

Umar

பெயரில்லா சொன்னது…

உமரண்ணா நான் ஏற்கனவே உங்களுக்கு சொல்லி விட்டேன் நீர் ஒரு செலக்டிவ் நபர் என்று உமக்கு எதற்கெல்லாம் குதர்க்கம் கண்டுபிடிக்க முடியுமோ அதற்கு மட்டும் பதில் சொல்லி விட்டு, மற்றவற்றை கண்டு கொல்லாமல் விட்டு விடுவது உமக்கு கை வந்த கலை. இந்த நிலையில் நேர்மையின் சிகரம் போன்று பஞ்ச் டயலாக் எல்லாம் வேறு உடுகீறீர்கள். முதலில் ஜாகிர் நாயக் சொன்ன முழு பதிலையும் வீடியோ தொடுப்பாக வெளியிடுங்கள் அவர் இந்த ஒரு காரணத்தை மட்டும்தான் சொன்னாரா இஸ்லாம் பலதார மணத்தை அனுமதிப்பதற்கு? ஏனய்யா ஒரு பகுதியை மட்டும் பிடித்து கொண்டு தொங்குகின்றீர். அறிவுப்பூர்வமான பதில் உமக்கு எப்படி புரிய போகிறது?

மேலும் நான் (யார் ஏமாற்றுக்காரர்? Dr. நாயக் அவர்களா) என்ற உமது உளறல்களுக்கு பதிந்த பின்னூட்டம் முழுவதற்கும் நீர் பதில் அளித்து விட்டீரா? மீண்டும் சொல்லி கொள்கிறேன் நேர்மையை மொத்த குத்தகைக்கு எடுத்து கொண்டுள்ளது போன்று நடந்து கொள்ள வேண்டாம்.

உமரண்ணா சொன்னது:
"என்னவோ, பெண்கள் பற்றி இஸ்லாம் உயர்த்திப் பேசுவது போல பேசுகிறீர்கள், உங்கள் இஸ்லாமின் உண்மை முகத்தை காட்டாமலா நான் இருந்துவிடுவேன்."

முதலில் உங்களுடைய பைபிளின் பெண்மையின் மகத்துவத்தை குறிப்பிடும் வசனங்களுக்கு சால்ஜாப்பு சொல்லி விட்டு,பிறகு வாருங்கள் அடுத்தவன் முதுகில் இருக்கும் அழுக்கை சுட்டி காட்டுவதற்கு.


ஏதோ நாங்கள் பின்னூட்டம் இடுவது உங்களுக்கு உற்சாக டானிக் போன்று இருப்பதாக கூறியுள்ளீர்கள். அப்படியே இருக்கட்டும், உம்முடைய உளறல்களை படிக்கும் மூளையுள்ளவர்கள் என்னுடைய பின்னூட்டத்தையும் படிப்பார்கள் அல்லவா? பவுலிஸ்தவத்தின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றுவதுதான் எனது நோக்கம்.

மீண்டும் சிந்திப்போம்.

நன்றி
மிஸ்ட்.

பெயரில்லா சொன்னது…

Mist said:

உமரண்ணா நான் ஏற்கனவே உங்களுக்கு சொல்லி விட்டேன் நீர் ஒரு செலக்டிவ் நபர் என்று உமக்கு எதற்கெல்லாம் குதர்க்கம் கண்டுபிடிக்க முடியுமோ அதற்கு மட்டும் பதில் சொல்லி விட்டு, மற்றவற்றை கண்டு கொல்லாமல் விட்டு விடுவது உமக்கு கை வந்த கலை.



Umar

அருமை சகோதரர் மிஸ்ட் அவர்களே,


நான் செலக்டிவ் நபர் என்றுச் சொல்லிக்கொள்ளுங்கள், இன்னும் ஏதாவது சொல்லிக்கொள்ளுங்கள். நீங்கள் சொல்லும் பொய்யை திரும்ப திரும்ப நான் கேள்வி எழுப்பாவிட்டால், நீங்கள் பதில் சொல்வீர்களா? சொல்லமாட்டீர்கள்.

ஒரு தலைப்பைச் சொல்வீர்கள், நாங்கள் பதில் கொடுத்துவிட்டால், உடனே கேள்வியும் கேட்டுவிட்டால் உடனே அதை விட்டுவிட்டு வேறு ஒரு தலைப்பிற்கு தாவிவிடுவீர்கள், உங்கள் பொய்யை காற்றிலே விட்டுவிடுவீர்கள்.

இப்படி அடிக்கடி கேட்டுக்கொண்டு இருப்பதால் தானே, இந்த முறை பல பின்னூட்டங்களை ரோஷம் வந்து பதித்தீர்கள், அதுவும் ஜனத்தொகை கணக்கெடுப்பு எல்லாம் போட்டு பின்னூட்டம் இட்டுள்ளீர்கள். உங்களின் இந்த 15 பின்னூட்டங்களை ஒவ்வொன்றாக பதித்து, அதற்கு பதிலை எழுதுகிறேன். இப்போதைக்கு உங்களின் இந்த பின்னூட்டத்திற்கு என் மறுபின்னூட்டத்தை இடுகின்றேன். உங்கள் பின்னூட்டங்கள் பெரிய‌ தலைப்பாக இருக்கும் பட்சத்தில் தனி கட்டுரை பதிப்பேன், இல்லையானால் பின்னூட்டமாக இடுவேன்.

எனவே, அடிமேலே அடி போட்டால், அம்மியும் நகரும் என்றுச் சொல்வார்கள், அது போல, அடிமேலே அடி போட்டால் தான் முஸ்லீம்கள் குறைந்தபட்சம் பதிலாவது சொல்ல முன்வருகிறார்கள். இது மிஸ்ட் அவர்களை பொருத்த வரையில் சரியாக இருக்கிறது.




Mist said :

இந்த நிலையில் நேர்மையின் சிகரம் போன்று பஞ்ச் டயலாக் எல்லாம் வேறு உடுகீறீர்கள். முதலில் ஜாகிர் நாயக் சொன்ன முழு பதிலையும் வீடியோ தொடுப்பாக வெளியிடுங்கள் அவர் இந்த ஒரு காரணத்தை மட்டும் தான் சொன்னாரா இஸ்லாம் பலதார மணத்தை அனுமதிப்பதற்கு? ஏனய்யா ஒரு பகுதியை மட்டும் பிடித்து கொண்டு தொங்குகின்றீர். அறிவுப்பூர்வமான பதில் உமக்கு எப்படி புரிய போகிறது?



Umar

நான் ஏன் வீடியோ தொகுப்பாக வெளியிடவேண்டும், அவரது தளத்திலும், இன்னும் பல இஸ்லாமிய தளத்திலும் அவரது கட்டுரைகள் உள்ளனவே!

வீடியோ தொகுப்பு கேட்டுவிட்டால், நான் அதை தேடிக்கொண்டு விட்டுவிடுவேன் என்று நினைத்தீர்களா?

[இஸ்லாமியர்களுக்கு என்று ஒரு தனி தந்திரம் உண்டு,

எந்த கட்டுரை என்று குறிப்பிடாமல் நாம் கேள்வி கேட்டால்,
- கட்டுரையை காட்டுங்கள் நம்புகிறோம் என்பார்கள்.

சரி கட்டுரையை காட்டினால், அவர் பேசிய வீடியோ எங்கே அதைக் காட்டுங்கள் என்பார்கள்.

அதையும் காட்டினால், இது பாதி வீடியோ தான், இதன் பிறகு அவர் பேசிய மற்ற பாகம் எங்கே என்று கேட்பார்கள்,

அதையும் காட்டிவிட்டால், காணாமல் போய்விடுவார்கள்]


அய்யா நண்பரே, அவரது கட்டுரைகள் அவரது தளத்திலும் இன்னும் தமிழ் தளங்களிலும் இருப்பதை நீங்கள் பார்க்கவே இல்லையா?

ஏன் இப்படி ஒரு பொய்யுக்கு வக்காளத்து வலிய வந்து வாங்குகிறீர்கள்?


அவர் சொன்ன காரணங்கள் அவரின் கட்டுரையில் உள்ளனவே, நீங்களே சென்று பார்த்துக்கொள்ளவும். மட்டுமல்ல, அவரது புள்ளிவிவரங்கள் எந்த ஆண்டின் கணக்கெடுப்பு என்று கேட்கிறோம், அவ்வளவே, பதில் இருந்தால் கொடுங்கள், இல்லையானால், அவர் ஒரு பொய்யர், ஏமாற்றுக்காரர் அவருக்கு வக்காளத்து வாங்கும் நீங்களும் ஒரு பொய்யர் என்பதை வாசகர்கள் அறிந்துகொள்வார்கள்.

நான் ஒன்றும் நேர்மையின் சிகரம் என்றுச் சொல்லிக் கொள்ளவில்லை, ஆனால், நேர்மையின் சிகரமாக நடிக்கும் உங்களைப் போன்றவர்களின் நேர்மையை கேள்வி கேட்கிறோம் அவ்வளவே.

இஸ்லாமியரல்லாதவர்களுக்கு பதில்கள் என்று தலைப்பு கொடுத்து, கேள்விகளுக்கு பதில் என்ற பெயரில் பொய்களை ஜாகிர் நாயக் அவர்கள் அள்ளிவீசிக்கொண்டு இருக்கும் போது அதனை ஏற்றுக்கொள்ள எங்களுக்கு என்ன தலையெழுத்து சொல்லுங்கள்?


Umar.....(cont...)

பெயரில்லா சொன்னது…

Mist Said:

மேலும் நான் (யார் ஏமாற்றுக்காரர்? Dr . நாயக் அவர்களா) என்ற உமது உளறல்களுக்கு பதிந்த பின்னூட்டம் முழுவதற்கும் நீர் பதில் அளித்து விட்டீரா? மீண்டும் சொல்லி கொள்கிறேன் நேர்மையை மொத்த குத்தகைக்கு எடுத்து கொண்டுள்ளது போன்று நடந்து கொள்ள வேண்டாம்.



Umar

எப்போதும் அறைகுறையாக படிப்பதும், கேள்வி எழுப்புவதும் தான் உங்கள் வழக்கமா மிஸ்ட் அவர்களே!

“(யார் ஏமாற்றுக்காரர்? Dr . நாயக் அவர்களா)” என்ற கட்டுரைக்கு இரண்டு பின்னூட்டமிட்டீர்கள். இந்த இரண்டு பின்னூட்டங்களில் முதல் பின்னூட்டத்தை எடுத்துக்கொண்டு விவரங்கள் அதிகமாக இருக்கின்றபடியினால், அதற்கான பதிலை ஒரு "கட்டுரையாக (இந்த கட்டுரை)" எழுதினேன். கட்டுரையின் கடைசியில் "அடுத்த பின்னூட்ட பதிலில் சந்திக்கும் வரை......" என்று எழுதியுள்ளேன்... இதனை படிக்கமாட்டீர்களா?


நான் எழுதியதை ஒருமுறை படித்துப்பாருங்கள், அதாவது "அடுத்த பின்னூட்ட பதிலில்" என்று சொல்லியுள்ளேன். ஆகையால் நான் ஒவ்வொரு பின்னூட்டமாக பதில் கட்டுரையையோ அல்லது பின்னூட்டத்தையோ கொடுப்பேன். அவசரப்பட்டால் எப்படி?

ஒரு கட்டுரையை எழுதவேண்டுமென்றால் பல மணித்துளிகள் தேவை, அவைகளை சரிபார்க்க நேரம் தேவை, ஆகையால், ஒவ்வொரு தலைப்பாக/பின்னூட்டமாக பதிலைத் தருகிறேன்.

உதாரணத்திற்கு, "ஜாகிர் நாயக் அவர்களின் சாயம் வெளுத்தது" என்ற கட்டுரைக்கு வந்த மூன்று பின்னூட்டங்களுக்கும் பதிலை நான் ஒரு "கட்டுரையாக" எழுதினேன், ஏதாவது பின்னூட்டத்தை விட்டுவிட்டேனா! இல்லையே.

இப்போது பாருங்கள், நீங்கள் அனேக பின்னூட்டங்களை ஒரே நாளில் கொடுத்துள்ளீர்கள். உங்களுக்கு நேரமிருந்ததால் அனேக பின்னூட்டங்களை கொடுத்தீர்கள் என்பதால் நானும் ஒரே நாளில் அவைகளுக்கு பதிலை எழுதமுடியுமா?

உங்கள் பின்னூட்டங்களை ஒவ்வொன்றாக அனுமதித்து பதித்து, ஒவ்வொன்றாக பதிலைத் தருகிறேன். அவசரப்படக்கூடாது மிஸ்ட் அவர்களே, குழந்தை உடனே பிறக்காது 9 அல்லது 10 மாதங்கள் அது வளர வேண்டும், பிறகு தான் குழந்தை பிறக்கும். நீங்கள் எழுதியதை நான் படித்து, அதற்கான பதிலை தயாரித்து கண்டிப்பாக பதிப்பேன், என்ன சிறிது கால தாமதம் ஆகலாம். ஆனால், பதில் வரும்.

என்னவோ, "நேர்மையை குத்தகைக்கு நான் எடுத்துக்கொண்டதாக" சொல்கிறீர்கள், அப்படி நான் சொல்லவில்லையே! ஆனால், உங்களின் பொய் முகத்தை வெளிச்சத்தில் காட்டும் போது, உங்களுக்கு வேதனையாக இருக்கலாம், அதற்காக இப்படி மனதிலே குத்தப்பட்டு கேட்கிறீர்கள்.

சரி, நீங்களோ அல்லது உங்கள் இஸ்லாமிய அறிஞர்களோ அல்லது உங்கள் நபியோ "நேர்மையை குத்தகைக்கு எடுத்துக்கொண்டு இருக்கிறார்களா? என்ன? அதையாவதுச் சொல்லுங்கள்”.

இஸ்லாமியர்களின் சாயம் வெளுக்கப்படும் போது இஸ்லாமியர்களுக்கு கோபம் வரத்தான் செய்யுங்கள், என்ன முடியும்? ஒன்று நேர்மையானவர்களாக இருக்கவேண்டும், இல்லை அப்படி மற்றவர்கள் சுட்டிக்காட்டும் போது "மனத்தாழ்மையுடன் அதனை ஒப்புக்கொள்ளவேண்டும், பிரச்சனை இருக்காது". இதுவும் செய்யாமல்,அதுவும் செய்யாமல் இருந்தால், இப்படித் தான் கோபம் வரும்.




Mist Said:

உமரண்ணா சொன்னது:

"என்னவோ, பெண்கள் பற்றி இஸ்லாம் உயர்த்திப் பேசுவது போல பேசுகிறீர்கள், உங்கள் இஸ்லாமின் உண்மை முகத்தை காட்டாமலா நான் இருந்துவிடுவேன்."
முதலில் உங்களுடைய பைபிளின் பெண்மையின் மகத்துவத்தை குறிப்பிடும் வசனங்களுக்கு சால்ஜாப்பு சொல்லி விட்டு, பிறகு வாருங்கள் அடுத்தவன் முதுகில் இருக்கும் அழுக்கை சுட்டி காட்டுவதற்கு.



Umar said:

கண்டிப்பாக நான் பதில் அளிப்பேன், இஸ்லாம் பெண்களுக்கு இழைக்கும் கொடுமைகளையும்,முஹம்மது இழைத்த கொடுமைகளையும் வெளிச்சத்தில் கொண்டுவருவேன். இது நடக்கவேண்டும் என்பதற்காகத் தானே நீங்கள் இப்போது என்னோடு விவாதம் புரிகிறீர்கள். கண்டிப்பாக எழுதுவேன்.


Umar.... cont...

பெயரில்லா சொன்னது…

Mist said


ஏதோ நாங்கள் பின்னூட்டம் இடுவது உங்களுக்கு உற்சாக டானிக் போன்று இருப்பதாக கூறியுள்ளீர்கள். அப்படியே இருக்கட்டும், உம்முடைய உளறல்களை படிக்கும் மூளையுள்ளவர்கள் என்னுடைய பின்னூட்டத்தையும் படிப்பார்கள் அல்லவா? பவுலிஸ்தவத்தின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றுவதுதான் எனது நோக்கம்.

மீண்டும் சிந்திப்போம்.

நன்றி
மிஸ்ட்.


Umar

ஆமாம் மூளையுள்ளவர்கள், என் வரிகளையும் படிப்பார்கள் உங்கள் வரிகளையும் படிப்பார்கள். ஆனால், என் வரிகளை படிப்பதற்கு உங்கள் இஸ்லாமிய தளங்களில் என் கட்டுரைகளின் தொடுப்புக்களை தருவதில்லை, அப்படியனால் உங்கள் இஸ்லாமிய தளங்களில் படிப்பவர்களுக்கு மூளை.....? [நீங்களே நிரப்பிக்கொள்ளுங்கள்].

ஆமாம், சாத்தானிஸ்லாம் வண்டவாளத்தை கடந்த 2007ம் ஆண்டிலிருந்து தண்டவாளத்தில் ஏற்றப்பட்டுக்கொண்டு இருக்கிறது,.... இன்னும் ஏற்றுவது பாக்கியுள்ளது....

இஸ்லாமியர்களே பேசுங்கள்.... இஸ்லாமியர்களே எழுதுங்கள்.....
இஸ்லாம் பற்றியும் எழுதுங்கள் பேசுங்கள்... கிறிஸ்தவம் பற்றியும் பேசுங்கள் எழுதுங்கள்....

அப்போது தான் எங்களுக்கும் கேள்விகேட்கவும், பதில்களைச் சொல்லவும் வாய்ப்பு கிடைக்கும்.....


நீங்கள் பதித்த அனேக பின்னூட்டங்களுக்கு பதில் ஒவ்வொன்றாக பதித்து கொடுக்கிறேன்... அதுவரை அடுத்து எங்கே தாவலாம் என்று சிந்தித்துக்கொண்டு இருங்கள்.....

Thanks
Umar

பெயரில்லா சொன்னது…

இநத மிஸ்ட் என்பவருக்கு அதிகம் பொய் பேச வரும். ஆங்கிலமே தனக்கு தெரியாது என்பார். ஆனால் ஆங்கிலத் தொடுப்பை எங்காவது தனக்கு சார்பாக இருந்தால் தருவார். அதுவும் அது சரியான தொடுப்புதானா என்று சரி பாரக்க மாட்டார்.

குரங்கு போல மரத்திற்கு மரம் தாவிக்கொண்டே இருப்பார். பொய்பேசுவது, குத்தலாக கிண்டல் அடிப்பது, ஆபாசமாக எழுதுவது எதற்கும் துணிந்தவர். சிண்டுமுடிப்பதில் சூரர். மொத்தத்தில் சாத்தானின் தூதர்.

அன்பன்

பெயரில்லா சொன்னது…

நண்பர் அன்பன் அவர்களே, தங்களுடைய விமர்சனத்திற்கு நன்றி, அப்படியே கொஞ்சம் நான் எங்கெல்லாம் பொய் சொன்னேன், யார் யாருக்கு சிண்டு முடித்தேன், ஆபாசமாக எங்கு எழுதினேன் என்று ஆதாரத்துடன் சொல்வீர்களானால் சிறப்பாக இருக்கும். அப்படி தங்களால் இயலாத பட்சத்தில், யார் சாத்தானின் தூதர் என்பது விளங்கி விடும்.

அப்படியே தங்களுடைய (புனை) பெயரையும் தெரியப்படுத்தினால் வசதியாக இருக்கும், மறைந்து கொண்டு அன்பன்,கொம்பன் என்றெல்லாம் அறிமுகப்படுத்திக் கொள்வது அழகல்ல.

MIST.

இஸ்லாத்திற்கு எதிராக மிசினரிகளால் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரப்பூர்வமான பதில்/மறுப்பு சொன்னது…

குர்ஆன் இறைவார்த்தையே.

الرَّحْمَٰنُ ﴿55:1﴾
55:1. அளவற்ற அருளாளன்,
عَلَّمَ الْقُرْآنَ ﴿55:2﴾
55:2. இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான்.

குர்ஆன் சாத்தானின் வார்த்தை அல்ல

وَمَا تَنَزَّلَتْ بِهِ الشَّيَاطِينُ ﴿26:210﴾
26:210. இன்னும், ஷைத்தான்கள் இ(வ் வேதத்)தைக் கொண்டு இறங்கவில்லை.

وَمَا يَنبَغِي لَهُمْ وَمَا يَسْتَطِيعُونَ ﴿26:211﴾
26:211. மேலும், அது அவர்களுக்கு தகுதியுமல்ல; (அதற்கு) அவர்கள் சக்தி பெறவும் மாட்டார்கள்.

إِنَّهُمْ عَنِ السَّمْعِ لَمَعْزُولُونَ ﴿26:212﴾
26:212. நிச்சயமாக ஷைத்தான்கள் (இதைக்) கேட்பதிலிருந்தும் ஒதுக்கப்பட்டுள்ளார்கள்.

https://answeringchristianitytamil.blogspot.in/2017/07/blog-post_29.html?m=1