ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 1 அக்டோபர், 2011

Answering PJ: பீஜே அவர்களின் “இது தான் பைபிள்” புத்தகத்திற்கு மறுப்பு - 1

            

Answering PJ: பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு - 1

திரு பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் "இது தான் பைபிள்" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்கள். இந்த புத்தகத்தில் அவர் பைபிளை தாக்கி அனேக குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்கள். அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில்களை நாம் தொடர் கட்டுரைகளாக காணப்போகிறோம். இவர், "இயேசு இறைமகனா?" என்ற இன்னொரு புத்தகத்தையும் எழுதியுள்ளார். அதற்கு சில பதில்களை நாம் அளித்துள்ளோம், ஆனால், அவைகளுக்கு அவர் மறுப்போ அல்லது பதிலோ அளிக்கவில்லை.

குறைந்த பட்சம் இந்த "இது தான் பைபிள்" என்ற புத்தகத்திற்கு தமிழ் கிறிஸ்தவர்கள் அளிக்கும் பதில்களுக்காகவது அவர் மறுப்பு எழுதுவார் என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன். இந்த தொடர் பதில்கள் கிறிஸ்தவர்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் மற்றும் இஸ்லாமியர்களுக்கும் உண்மை என்ன என்பது விளங்க ஆரம்பிக்கும். என்னிடமுள்ள பதிப்பு, "இது தான் பைபிள்" ஒன்பதாம் பதிப்பாகும், இது ஜனவரி 2010ல் வெளியானது.

நூலின் பெயர்: இது தான் பைபிள்

ஆசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன்

பதிப்பு: ஒன்பதாம் பதிப்பு, ஜனவரி 2010

வெளியீடு: நபிலா பதிப்பகம்.


பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு - பாகம் 1

இந்த கட்டுரையில் பீஜே அவர்கள் தங்கள் புத்தகத்தின் "முன்னுரை"யில் எழுதிய விவரங்களை பார்ப்போம்.

பீஜே அவர்கள் எழுதியது:

முன்னுரை


அளவற்ற அருளாளனும் நிகரற்ற கருணையாளனுமாகிய எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால்...

அன்புக் கிறித்தவ நண்பர்களே! புத்தகத்தின் தலைப்பு உங்களில் சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடும். உங்களை ஆச்சரியப்படுத்துவதோ புன்படுத்துவதோ என் நோகக்ம் அன்று. (பக்கம் 2-3)

கிறிஸ்தவன் (உம‌ர்) எழுதியது:

முந்தினவரும் பிந்தினவருமாகிய கர்த்தரின் ஈடு இணையற்ற பெயரில் உங்களுக்கும் தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கும் என் வாழ்த்துதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

பீஜே அவர்களே, உங்களின் இந்த புத்தகத்தைக் கண்டு நாங்கள் ஆச்சரியப்படவில்லை. தமிழ் கிறிஸ்தவர்களின் சமீப கால முன்னேற்றம் மற்றும் தமிழ் எழுத்து உலகில் கிறிஸ்தவர்கள் காட்டும் ஆர்வம், தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கியிருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் புத்தகத்திற்கு நாங்கள் எழுதும் மறுப்புக்கள் உங்களை ஆச்சரியப்பட வைப்பதற்கோ அல்லது புண்படுத்துவதற்கோ அல்ல, மாறாக, உங்கள் கண்கள் தெளிவாக்கப்படவேண்டும் என்றும், அதே நேரத்தில் உங்களைப் போன்றவர்கள் தெரிந்தோ தெரியாமலோ, பைபிள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளை கேட்டு எந்த வகையில் உங்களுக்கு பதில்களைத் தரலாம் என்று சிந்தித்துக்கொண்டு இருக்கும் கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்துவதற்குமே இந்த மறுப்புக்கள் எழுதப்படுகின்றன. ஆக, தமிழ் பேசும் முஸ்லிம்களை புண்படுத்துவது எங்கள் நோக்கமன்று, இதனை நீங்கள் விளங்கிக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

பீஜே அவர்கள் எழுதியது:

பல விஷயங்களில் உங்களுக்கும் முஸ்லிம்களாகிய எங்களுக்குமிடையே நல்லிணக்கமும் ஒத்த கருத்தும் இருக்கின்ற உரிமையில் உண்மையை உங்களுக்கு உரைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு நோக்கம் ஏதும் எனக்கில்லை.

கிறிஸ்தவன் எழுதியது:

பீஜே அவர்களே, சரியாகச் சொன்னீர்கள்.

முஸ்லிம்கள் மற்றும் உங்களைப் போல உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் உண்மையை அறிந்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக நாங்கள் இந்த மறுப்புக்களை எழுதுகின்றோம். இந்த மறுப்புக்கள் எழுதும் வேளையில், தேவையான இடத்தில் குர்‍ஆன் பற்றிய கேள்விகளும், சந்தேகங்களும் மற்றும் விவரங்களையும் நாங்கள் குறிப்பிடுவோம். நீங்களும் உண்மையை அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இப்படி எழுதுகிறோம். இதைத் தவிர வேறு எந்த நோக்கமும் எங்களுக்கு இல்லை.

பீஜே அவர்கள் எழுதியது:

பரலோக ராஜ்ஜியத்தில் கர்த்தரின் முன்னிலையில் நீங்களும் முஸ்லிம்களாகிய நாங்களும் விசாரிக்கப்பட இருக்கின்றோம். இந்த உலகில் நமது நம்பிக்கையும் நடத்தையும் சரியானதாக அமைந்தால் தான் அந்த விசாரணையில் தப்பிக்க முடியும். இதை நன்றாக நீங்கள் அறிவீர்கள்.

கிறிஸ்தவன் எழுதியது:

ஆம் பீஜே அவர்களே. கர்த்தரின் முன்னிலையில் (அல்லாஹ்வின் முன்னிலையில் அல்ல) நாம் அனைவரும் அந்நாளில் நிற்போம். நம்முடைய இவ்வுலக நம்பிக்கை (விசுவாசம்) மற்றும் நடத்தைகள் மீது ஆதாரப்பட்டு அந்நாளின் நியாயந்தீர்ப்பு இருக்கும்.

அந்த நாளின் நியாயத்தீர்ப்பில் நாம் வெற்றிப் பெறுவோம் என்ற நம்பிக்கை கிறிஸ்தவர்களுக்கு உண்டு (இதனை கிறிஸ்தவர்கள் வழக்கப்படி „இரட்சிப்பின் நிச்சயம்" என்றுச் சொல்வார்கள்). அந்த நம்பிக்கை எங்களுக்கு திடமாக உள்ளது. நாம் மரித்த பிறகு நமக்கு மோட்சத்தை கொடுப்பது அல்லது மறுப்பது அந்த இறைவனின் அப்போதைய விருப்பம் போன்ற கோட்பாடு எங்களுக்கு இல்லை. இந்த உலகிலேயே எங்களுக்கு 100% இரட்சிப்பின் நிச்சயம் உண்டு. இதனால் தான் நாங்கள் உங்களுக்கு மறுப்பை எழுதிக்கொண்டு இருக்கிறோம், வாழ் நாள் எல்லாம் பயத்தோடும், அல்லாஹ் எனக்கு சொர்க்கம் அளிப்பானா இல்லையா? என்ற சந்தேகத்தோடும் வாழாமல் இருக்கும்படியான ஒரு வழியை இயேசு திறந்து வைத்துச் சென்றுள்ளார். அந்த இடுக்கமான வாசல் வழியாக செல்ல உங்களுக்கு விருப்பமா?

பீஜே அவர்கள் எழுதியது:

உங்களது வேதம், உங்களின் நம்பிக்கை, பரலோக ராஜ்ஜியத்தில் நித்திய ஜீவனை அடைய உதவுவதாக இல்லை. உங்கள் மதகுருமார்கள் உங்களைத் தறவறான வழியில் இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றார்கள். இந்த உண்மையை பைபிளின் துணையுடன் இந்நூலில் நிறுவியுளளோம்.

கிறிஸ்தவன் எழுதியது:

உங்களைப் போன்ற அனுபவம் வாய்ந்த இஸ்லாமிய அறிஞருக்கும் இஸ்லாமியர்களுக்கும் நாங்கள் இஸ்லாம் பற்றி தெரிவிக்க வேண்டிய விஷயங்கள் அனேகம் உண்டு, அதே நேரத்தில் பைபிள் பற்றியும் உங்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டிய விஷயங்களும் உண்டு. நித்திய ஜீவனை அடைய உலக மக்களுக்கு பைபிள் போதும், குர்‍ஆன் அதற்கு உதவாது என்பதை இந்த உங்களின் புத்தகத்திற்கு நாங்கள் மறுப்பை கொடுத்துக் கொண்டு இருக்கும்போதே அனேக இஸ்லாமியர்கள் அறிந்துக்கொள்வார்கள். எங்கள் நம்பிக்கை மற்றும் எங்கள் பரிசுத்த வேதம் எங்களை பரலோக இராஜ்ஜியத்தில் வெற்றியடையச் செய்யும், இதில் அணு அளவேனும் சந்தேகமில்லை.

பீஜே அவர்களே உங்கள் மீதும், இஸ்லாமியர்கள் மீதும் கொண்டுள்ள அன்பினிமித்தம் நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால், "உங்கள் குர்‍ஆனும், உங்கள் முஹம்மது மீது நீங்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையும் கர்த்தரின் நியாயத்தீர்ப்பு நாளில் உங்களை வெற்றியடையச் செய்யாது, உங்களுக்கு சொர்க்கத்தை அளிக்காது என்பதை மிகவும் தாழ்மையோடு தெரிவித்துக்கொள்கிறேன்".

எங்கள் மத குருமார்கள் எங்களை தவறான வழியில் இழுத்துச் செல்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை கூறியுள்ளீர்கள். இது முழுக்க் முழுக்க மிகப் பெரிய பொய்யாகும். பைபிள் என்பது உலகத்தை படைத்த இறைவனால் எங்களுடைய வழிகாட்டுதலுக்காக கொடுக்கப்பட்ட ஒரு பொக்கிஷமாகும். இது மட்டுமல்ல, எங்களை வழி கெடுக்க எந்த ஒரு மத குருவாலும் முடியாது ஏனென்றால், நாங்கள் எங்கள் வேதத்தை எங்கள் தாய் மொழியில் படிக்கிறோம். உங்களைப் போன்று குர்‍ஆனை அரபியில் படித்தால் தான் நன்மை என்ற "தவறான" கோட்பாடு கிறிஸ்தவத்தில் இல்லை. எந்த ஒரு கிறிஸ்தவ சபையிலாவது "நீங்கள் எபிரேய மற்றும் கிரேக்க மொழியில் பைபிளை படித்தால் தான், நன்மை" என்று எந்த ஒரு போதகரும் சொல்வதில்லை, இப்படிச் சொன்னால் அது முட்டாள் தனம். இப்படிபட்ட ஒரு கோட்பாட்டை நீங்கள் பின்பற்றுகிறீர்கள்.

குர்‍ஆன் இறைவனால் கொடுக்கப்பட்ட வேதமல்ல, முஹம்மது ஒரு தீர்க்கதரிசி அல்ல என்ற உண்மையை நாங்கள் சில ஆண்டுகளாக ஆதாரங்களோடு எழுதி வருகிறோம். அதே வரிசையில் உங்கள் இந்த புத்தகத்திற்கு நாங்கள் தரவிருக்கும் மறுப்புகள் "உண்மை எது பொய் எது" என்பதை மக்கள் அறிந்துக்கொள்ள வழி வகுக்கும். எனவே, நீங்கள் சொன்ன அதே பைபிளைக் கொண்டு "நீங்கள் சொல்வது பொய், உங்கள் குற்றச்சாட்டுக்கள் பொய்" என்பதை நாங்கள் நிருபிக்கப்போகிறோம், மட்டுமல்ல, குர்‍ஆன் ஒரு வேதமல்ல என்பதும் இதன் மூலம் தெளிவாக விளங்கும்.

பீஜே அவர்கள் எழுதியது:

எழுதியவன் யார்? என்பதைப் புறக்கணித்துவிட்டுக் காலம் காலமாக உங்கள் மதகுருமார்கள் கர்த்தரின் போதனைக்கு முரணாக உங்களுக்குப் போதித்தவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு, மதகுருமார்கள் மீதுள்ள அளவு கடந்த மரியாதையை ஒதுக்கிவிட்டு நான் இந்நூலில் எடுத்து வைத்திருக்கின்ற வாதங்களையும் அதில் உள்ள நியாயங்களையும் நடுநிலையோடு, திறந்த மனதுடன் நீங்கள் சிந்தித்தால் நாங்கள் வந்த முடிவை நோக்கி நீங்களும் நிச்சயம் வருவீர்கள்.

கிறிஸ்தவன் எழுதியது:

உண்மையை அறிந்துக்கொள்ள விரும்புகிறவர்கள், "யார் எழுதினான்? அவன் முகவரி என்ன? அவன் பெயர் என்ன?" போன்ற விவரங்களை கேட்காமல், "அவன் சொன்னதில் உண்மை உண்டா? அவன் ஆதாரங்களை முன்வைக்கின்றானா?" போன்ற கேள்விகளை கேட்டு ஆராய்ந்தால் சத்தியம் எது அசத்தியம் எது என்பது விளங்கும். ஆனால், இன்றைய தமிழ் இஸ்லாமியர்களின் நிலை எப்படி உள்ளது என்றால் (பீஜே அவர்களே உங்கள் நிலையும் கூட), 'பெயரைச் சொன்னால் மட்டுமே, முகவரியை கொடுத்தால் மட்டுமே நாங்கள் நம்புவோம். அவன் எழுதியதில் உண்மை இருந்தாலும், ஆதாரங்கள் இருந்தாலும் அதனை நாங்கள் பார்க்கமாட்டோம் படிக்கமாட்டோம்' என்ற நிலைக்கு இஸ்லாமியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பீஜே அவர்களுக்கு நான் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால், "கர்த்தரின் போதனைக்கு முரணாக எங்கள் மதகுருக்கள் போதிக்கவில்லை, ஆனால், அதே கர்த்தரின் போதனைக்கு விரோதமாகவும், முரணாகவும், போதித்தவர் உங்கள் முஹம்மதுவும், அவரது அடிச்சுவடியில் நடந்துக்கொண்டு இருக்கும் உங்களைப்போல இருக்கும் இஸ்லாமிய அறிஞர்களுமேயாவார்கள்".

இன்று கிறிஸ்தவர்கள் செய்யவேண்டிய ஒரு முக்கியமான காரியம் என்னவென்றால், "உங்களைப் போல இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வதை கிறிஸ்தவர்கள் தூக்கி எறிய வேண்டும், மத நல்லிணக்கனம் என்ற போர்வையில், இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்ற போர்வையில் விஷத்தை கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகள் குடிக்கும் பாலில் (மக்களின் மனதில்) கலக்கும் இஸ்லாமிய போதனையை கிறிஸ்தவர்கள் தூக்கி எறிய வேண்டும்".

எங்களுக்கு எங்கள் கிறிஸ்தவ ஊழியர்கள் மீது இருக்கும் அந்த அளவு கடந்த மரியாதை என்பது, அவர் எந்த அளவு பைபிளுக்கு சார்ந்து போதிக்கிறார் என்பதை பொறுத்து இருக்கும். எந்த ஒரு கிறிஸ்தவ போதகராவது, பைபிளுக்கு எதிராக எதையாவது போதித்தால் நாங்கள் அவரை ஒதுக்கிவிடுவோம், எங்களை யாரும் கட்டுப்படுத்தமுடியாது, நாங்கள் சுதந்திர பறவைகள். நீங்கள் உங்கள் முஹம்மது மீது வைத்திருக்கும் அளவு கடந்த மரியாதை எங்களுக்கு இல்லை. தவறு செய்தால் நீ நபியாக இருந்தாலும் சரி தவறு தவறு தான் , அதே நேரத்தில் நன்மை செய்து, கர்த்தருக்கு ஊழியம் செய்தால், "கர்த்தரின் ஊழியர்" என்ற மரியாதை நிச்சயம் உண்டு. (இந்த மரியாதை பட்டியலில், மக்களை ஏமாற்றும் ஊழியர், கொள்ளையடிக்கும் ஊழியர் வரமாட்டார்).

ஆக, பீஜே அவர்களே, எங்கள் கிறிஸ்தவ ஊழியர்கள் மீது நீங்கள் சுமத்தும் இந்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் சவாலை நான் ஏற்கிறேன், உங்கள் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு நான் பதிலை அல்லது மறுப்பை தருகிறேன். பீஜே அவர்களே, உங்கள் இஸ்லாம் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், நீங்கள் எடுத்த முடிவு மீது உங்களுக்கு முழு நிச்சயம் இருந்தால், நான் எழுதப்போகும் பதில்களை படியுங்கள், ஆதாரங்களை சரிபாருங்கள், என் வரிகள் பற்றிய உங்கள் மறுப்பை எழுதுங்கள், எங்கள் ஆதாரங்களையும், உங்கள் ஆதாரங்களையும் மக்கள் படிக்கும்படி மக்களின் முன்னிலையில்கொண்டு வாருங்கள். இப்படி நீங்கள் செய்தால், நிச்சயமாக எங்கள் முடிவிற்கு நீங்கள் வருவீர்கள் என்பதில் சந்தேகமில்லை.

பீஜே அவர்கள் எழுதியது:

பைபிள் கர்த்தரின் வார்த்தைகளாக இருக்கவே முடியாது; மனிதனது வார்த்தைகள் கலந்துள்ளன; கர்த்தரின் வார்த்தைகள் பல நீக்கப்பட்டுள்ளன; மாற்றப்பட்டுள்ளன என்பதை மிகத் தெளிவாகவே இந்த நூலிலிருந்து நீங்கள் அறிந்து கொள்வீர்கள் என்று உறுதியாக நான் நம்புகின்றேன்.

கிறிஸ்தவன் எழுதியது:

பீஜே அவர்களே, நீங்கள் வருந்த மாட்டீர்கள் என்ற எண்ணத்தில் ஒரு உண்மையைச் சொல்கிறேன் "குர்‍ஆன் இறைவனின் வார்த்தையாகவே இருக்கவே முடியாது, இதற்கு ஒரு கடுகளவும் வாய்ப்பில்லை". ஆனால், பைபிள் இறைவனின் வேதமாகும், இதனை கொஞ்ச கொஞ்சமாக நான் என் மறுப்புக்களில் விளக்குவேன், இதனை என் கட்டுரைகளை படிக்கும் எந்த ஒரு நபராக இருந்தாலும் சரி, அவர் இஸ்லாமியரோ அல்லது கிறிஸ்தவரோ அதனை அவர் அறிந்துக்கொள்வார்". உங்கள் வரிகள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், உங்கள் தளத்தில் என் மறுப்புக்களின் தொடுப்பை கொடுப்பீர்களா? " நீங்கள் முன்வைத்த வாதங்கள் சரியானவை தான்" என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால், என் தொடுப்புக்களை உங்கள் தளத்தில் குறிப்பிட்டு மறுப்போ அல்லது பதிலோ எழுதுவீர்களா? இணைய வாசகர்கள் நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளையும், அவைகளுக்கு நாங்கள் கொடுக்கும் பதில்களையும் படிக்க உதவுவீர்களா? அப்படி உதவுவீர்கள் என்று நம்புகிறேன்.

பீஜே அவர்கள் எழுதியது:

இந்நூலில் நான் எடுத்து வைத்துள்ள வாதங்களுக்கும் கருத்துக்களுக்கும் தக்க ஆதாரத்துடன் மறுப்பைத் தெரிவித்தால், அதைப் பரசீலித்து, ஏற்று, திருத்திக் கொள்ளவும் தயாராகவுள்ளேன். நாங்களும் நீங்களும் கர்த்தரின் பரலோக ராஜ்ஜியத்தில் நித்திய ஜீவனை அடைய உரிய வழி எது என்பதை அறிய வேண்டும் என்பதே என் ஆவல். அதற்காகவே இந்நூலைத் தந்துள்ளேன்.

அன்புடன்

P. ஜைனுல் ஆபிதீன்

கிறிஸ்தவன் எழுதியது:

பீஜே அவர்களே, இந்த விஷயத்தில் நீங்கள் பலவீனமானவர்கள், தோற்றுப்போனவர்கள், சத்தியத்தில் நிலை நிற்காதவர்கள். ஏனென்றால், "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்தை எழுதினீர்கள், அதற்கு நான் சில பதில்களைக் கொடுத்துள்ளேன். இதுவரை என் பதில் கட்டுரையை குறிப்பிட்டு, அவைகளுக்கு தகுந்த பதிலை கொடுத்துள்ளீர்களா? (எனக்கு தெரிந்தவை நீங்கள் என் மறுப்புக்களுக்கு பதிலை தரவில்லை, என் கண்களில் படாமல் இருந்தால், உடனே அவைகளை எனக்கு தெரிவிக்கவும்).

குறைந்த பட்சம் இந்த உங்களின் புத்தகத்திற்கு நான் அளிக்கும் மறுப்புக்களை உங்கள் தளத்தில் பதித்து மறுப்பு எழுதுவீர்களா?

உங்களிடம் தமிழ் கிறிஸ்தவர்கள் எதிர்ப்பார்ப்பது:

1) எங்கள் மறுப்பு கட்டுரையின் தொடுப்பை உங்கள் தளத்தில் தாருங்கள் (ஏனென்றால், நீங்கள் எழுதிய புத்தகத்திற்கு தான் நாங்கள் பதில் எழுதிக்கொண்டு இருக்கிறோம், மற்றவர்கள் எழுதிய புத்தகத்திற்கு அல்ல, எனவே பொறுப்பு உங்களுக்கு உண்டு).

2) தொடுப்பை கொடுத்து, உங்கள் மறுப்பையும் எழுதுங்கள் அல்லது வீடியோவில் பேசியாவது பதியுங்கள்.


இப்படி செய்வதை விட்டுவிட்டு, நேரடியாக உமர் வந்தால் தான் நான் பதில் தருவேன் என்ற வாதத்தை மட்டும் முன் வைக்கவேண்டாம். இப்படி நீங்கள் செய்தால், மக்கள் உங்களிடம் இப்படியாக கேட்பார்கள் "பின் எந்த தைரியத்தில் நீங்கள் மட்டும் கிறிஸ்தவத்திற்கு எதிராக புத்தகத்தை வெளியிடுகிறீர்கள்? எழுத்து வடியில் உங்கள் கருத்துக்களை சொல்கிறீர்கள்?".

நீங்கள் உங்கள் புத்தகத்தின் முன்னுரையில் வாக்கு கொடுத்துள்ளீர்கள், அதனை நிறைவேற்ற தவறவேண்டாம்.

கடைசியாக பீஜே அவர்களே, நீங்களும், இதர இஸ்லாமியர்களும் பரலோக இராஜ்ஜியத்தில் பிரவேசிக்கவேண்டும் என்பதே எங்கள் ஆவலும் கூட, முக்கியமாக என்னுடைய ஆவல், ஏனென்றால், நானும் ஒரு இஸ்லாமிய பின்னணியிலிருந்து வந்தவன் என்பதால், என் ஜனங்கள் (இஸ்லாமியர்கள்) மீது எனக்குள்ள அக்கரையே இந்த எழுத்து ஊழியத்தை நான் கையில் எடுக்க காரணமாக உள்ளது.

உங்களை என் அடுத்த மறுப்பில் சந்திக்கும் வரை...

அன்புடன்

தமிழ் கிறிஸ்தவன்

பீஜே அவர்களுக்கு கொடுக்கப்பட்ட இதர மறுப்புக்களில் சில‌:

1. இஸ்லாமை மண்ணை கவ்வ வைத்த அப். நடபடிகள் - பாகம் 1

2. பதில் - 2: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை - நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை - 1

3. உமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு !?!

4. ஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்

5. பீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை

6. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி? பாகம் – 2

7. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 1

8. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்

9. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)

9 கருத்துகள்:

Chennai Man சொன்னது…

நண்பரே,

உங்களுடைய இந்த பதில் தரும் முயற்சியில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

ஆனால் புத்தகமாக வெளியிட்ட பதிவிற்கு பதிலாக நீங்கள் இணையத்தில் பதில் அளித்து கொண்டிருப்பது எந்த அளவிற்கு இணையாகும், சமமாகும் என்று தெரியவில்லை. பொதுவாக நான் அறிந்த வரை பீஜே வும் அவரது இயக்கத்தினரும் கிறிஸ்தவர்களுடன் விவாதத்தில் ஈடுபட ஆர்வம் காட்டுபவர்களாகவே உள்ளனர். இதைதான் அவர்களுடைய கடந்த காலம் நமக்கு காட்டுகிறது. எனவே என்னுடைய தாழ்மையான யோசனை ஒன்று தாங்களும்,தங்களுடைய இயக்கத்தினரும் மறுப்பு புத்தகம் வெளியிட வேண்டும் அல்லது நேரடி விவாதத்தில் கலந்து கொண்டு உங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைக்கலாம். இதெல்லாம் வேண்டாம் என்று கூறுவீர்களானால் குறைந்த பட்சம் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் போன்று நிகழ்ச்சிகளை நடத்தி கிறிஸ்தவத்தின் மீதான குறைகளை களைய முனையலாம் அல்லவா?

Isa Koran சொன்னது…

அன்பான சகோதரரே,

முதலில் இணையத்தில் பதில் எழுதுவோம். பிறகு கர்த்தருக்கு சித்தமானால் புத்தகமாக வெளியிடப்படும். அதுவரையில் இணைய வாசகர்களாவது படித்து தெரிந்துக்கொள்வார்கள்.

அன்பு சொன்னது…

அன்பு சகோதரா, எப்படித்தான் இவ்வளோ எழுதுறீங்களோ... இவங்களோட பொய் பிரசாரத்திற்கு எவ்வளவு பதில் கொடுத்தாலும், ஒரு படத்தில் வடிவேலு திரும்ப திரும்ப சொல்லுவாரே (நாட்டாமை=கை பிடிச்சு இழுத்தியா... வடிவேலு= என்ன கை பிடிச்சு இழுத்தியா ஜோக்) அது போல, திரும்ப திரும்ப அறிவிலித்தனமாக பதில் போடும் போது, சம்பந்தமே இல்லாம புது கேள்வி கேட்கும் போதும்... நம்முடைய கேள்விகள் அத்தனையும் இவங்க கண்ணிலேயே படாத மாதிரி புதுசா ஏதாவது கதை விடும் போதும்... இப்படிப்பட்ட அடிமடையர்களுக்கு பதில் சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்லைன்னு சலிப்பு வந்திடுது. ஆனா நீங்க கொஞ்சமும் சலிப்பு இல்லாம எழுதுறது சந்தோஷமா இருக்கு. தந்தை மகன் துாய ஆவியின் அருட்கொடை உங்களுக்கு மேலும் கிடைக்க வேண்டிக்கொள்கிறேன். தொடரட்டும் உங்கள் பணி. பிரவீன்

Isa Koran சொன்னது…

Dear brother Anbu,

பிரசங்கி 11:1 உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்.
பிரசங்கி 11:6 காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாய்ப் பயன்படுமோ என்றும் நீ அறியாயே.

உடனுக்குடன் பலனை எதிர்பார்க்க முடியாது, இதற்காக நாம் சோர்ந்து போகவும் கூடாது. தமிழ் நாட்டில் ஒரு நாள் வரும், அன்று எந்த ஒரு தமிழ் கிறிஸ்தவனையும் எந்த ஒரு இஸ்லாமிய அறிஞரும் தன் சொற்பொழிவால் ஏமாற்ற முடியாது. அந்த நாளில், இதோ நான் இஸ்லாமை உனக்கு கற்றுத் தருகிறேன் என்று எந்த ஒரு முஸ்லிமும் தமிழ் கிறிஸ்தவனிடம் கூற முடியாது, ஏனென்றால், அந்த தமிழ் கிறிஸ்தவனுக்கு இஸ்லாம் பற்றி அனைத்தும் தெரிந்து இருக்கும், அதே நேரத்தில் பைபிள் பற்றி கேள்வி கேட்பவர்களுக்கு பதில்களைச் சொல்லவும் தெரிந்திருக்கும்.

அந்த நாளுக்காக ஆயத்தங்கள் இந்த நாளில் செய்யப்படுகின்றன, அறுவடை மிகுதி ஆட்களோ கொஞ்சம், எனவே, பிதாவை வேண்டிக்கொள்ளுங்கள், அறுவடைக்கு ஆட்களை அனுப்பும் படி.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

அவருக்குள்
உம‌ர்

rameez சொன்னது…

திரு பிரவீன் அவர்களே,

யாரை பார்த்து இப்படி கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை? ஏன் என்றால் இவை அனைத்தும் உங்க உமர் அண்ணாவுக்கு தான் மிகவும் பொருந்தும். எது பொய்யின்னு தெரியுமா? தேவனுக்கு தனிப்பட்ட பெயர் "இருக்கிறேன்" (I am) என்று புது விளக்கம் கொடுத்தாரே உங்க உமர் அண்ணா? அத தானே சொல்றீங்க பொய் பிரச்சாரம்னு. இல்ல அது சரி தான்னு சொல்வீங்களா? இதை பத்தி தானே நீங்க "அறிவிலித்தனமாக பதில் போடும் போது" என்று சொன்னீங்க?

பிரவீன் சொன்னது,
"சம்பந்தமே இல்லாம புது கேள்வி கேட்கும் போதும்... நம்முடைய கேள்விகள் அத்தனையும் இவங்க கண்ணிலேயே படாத மாதிரி புதுசா ஏதாவது கதை விடும் போதும்... "

இந்த கட்டுரை தொடரை படிச்சீங்கன்னா உங்களுக்கே புரியும், நீங்கள் சொல்வதெல்லாம் உங்க உமர் அண்ணாவுக்கு ரொம்ப பொருந்தும் என்று!!

அல்லேலூயாவும் ஈசா உமரும் – பாகம் 7, திரு உமர் அவர்களின் “ஆங்கிலத்தில் "I AM" (OR) "I" என்றால் தமிழில் எப்படி "இருக்கிறேன்" என்று பொருள் வரும்?”

அமாம் பிரவீன் அவர்களே, இந்த மாதரி கேள்வி கேட்கும் போது "கண்ணிலேயே படாத மாதிரி புதுசா ஏதாவது கதை" எழுத ஆரம்பித்து விடுறாரு உங்க உமர் அண்ணா என்ன பண்றது ?

பிரவீன் சொன்னது,
இப்படிப்பட்ட அடிமடையர்களுக்கு பதில் சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்லைன்னு சலிப்பு வந்திடுது. ஆனா நீங்க கொஞ்சமும் சலிப்பு இல்லாம எழுதுறது சந்தோஷமா இருக்கு.


என்னங்க உமர் அண்ணன இப்படி புகழ்றீங்க, இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்க.... இதுக்காக உமர் அண்ணன மடையன் கிடையன்... என்றெல்லாம் சொல்ல கூடாதுங்க... பப்ளிக்.... பப்ளிக்......

கரெக்டுங்க... உங்க நன்றியை isaakoran.blogspot.com இங்க போயி சொல்லுங்க.

இதுக்கு பதில் சொல்லாம "நம்முடைய கேள்விகள் அத்தனையும் இவங்க கண்ணிலேயே படாத மாதிரி புதுசா ஏதாவது கதை ... " விட்டீங்கன்னா நீங்களே உங்கள திட்டிக்கிற மாறி. பதில் சொல்வீங்கள்ல ?

rameez சொன்னது…

உமர் அண்ணா,

உங்கள் ஆசை ஞாயமானதுதான். ஆனால்,

நீங்க சொன்னது "அதே நேரத்தில் பைபிள் பற்றி கேள்வி கேட்பவர்களுக்கு பதில்களைச் சொல்லவும் தெரிந்திருக்கும். "

இதற்கான எந்த முயற்சியும் நீங்க எடுத்ததாக தெரியவில்லையே. http://isaakoran.blogspot.com தளத்தில் பைபிளை பற்றி நிறைய கேள்விகள் கேட்டுள்ளனர். ஆனால் நீங்கள் அவற்றில் ஒன்றிற்கு கூட பதிலளித்ததாக தெரியவில்லையே. உதாரணமாக...

பைபிளில் சரித்திர பிழை – பாகம் 1 – இறைத்தூதர் ஆரோன் (அலை) மரணித்தது எங்கே?

விபச்சாரத்தை தடுக்க மறுத்த பைபிளின் ஏசு

பைபிள் அறிவிக்கும் முரணான செய்தி - ஜுதாஸ் மரணித்தது எவ்வாறு?

முழுமை அடையா பைபிள் கோர்ப்பு – பைபிள் அறிவிக்கும் பைபிள்ளில் இடம் பெறா சில புத்தகங்களின் அட்டவணை:

ஏசு அஹிம்சையை கையாள மறுத்ததாக கூறும் பைபிள் – பாகம் 3, தன் சீடர்களை போர்வாள் கொள்முதல் செய்ய பணித்த பைபிளின் ஏசு...

ஏசு அஹிம்சையை கையாள மறுத்ததாக கூறும் பைபிள் – பாகம் 2, அத்தி பழ மரத்தின் மீது கோபம் கொண்ட ஏசு

ஏசு அஹிம்சையை கையாள மறுத்ததாக கூறும் பைபிள் – பாகம் 1,

பதிலை எதிர்பார்கிறேன்...

Colvin சொன்னது…

rameez
உங்களுக்கு பைபிள் வசனங்களே ஒழுங்காக தெரிவதில்லை அதற்கு நீங்கள் இங்கு பதித்துள்ள பின்னூட்டங்களே சாட்சி.

Chennai Man சொன்னது…

நன்றி நண்பரே,

இணையத்தில் தொடரும் தங்களுடைய முயற்சிகள் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

ஆனால் இதில் ஒரு சுவாரஸ்யம் இல்லை என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட கருத்து. உதாரணத்திற்கு என்னை போன்ற
விடுமுறை நாட்களில் மட்டும், அதுவும் ஓரிரு மணி நேரங்கள் இணையத்தை பயன்படுதுபவர்களால் இது போன்ற எழுது விவாதங்களை
ஒரு பார்வையாளர்களாக இருந்து பார்ப்பதில் சுவாரஸ்யம் இல்லை.

rameez சொன்னது…

கொல்வின் நண்பா,

என் மீது ஏதும் தவறு இருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் நான் எந்த பைபிள் வசனத்தையும் பதித்ததாக தெரியவில்லை. நீங்கள் எதை பற்றி குறிப்பிடுகிறீர்கள் என்று தெரிந்தால் திருத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்