ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 3 டிசம்பர், 2016

இந்தியாவிற்கு தேவை மோடியின் ஜனநாயகமல்ல, இஸ்லாமின் நபிகள் நாயகம்

தம்பி: ஹலோ அண்ணா! எப்படி இருக்கீங்க?

உமர்: ஹாய் தம்பி, நான் பரவாயில்லை! நீ எப்படி இருக்கிறாய்?

தம்பி: எனக்கு என்ன! இராஜா போல சௌதியில் இருக்கிறேன். என் பணத்தை எடுப்பதற்கு உங்களைப்போல நான் மணிக்கணக்கில் ஏடிஎம் கியூவில் நிற்கவேண்டிய அவசியமில்லை.

உமர்: ஏதோ பொடி வைத்து பேசுவதுபோல தெரியுது?

தம்பி: பொடி வைத்து பேசவேண்டிய அவசியமில்லை, நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன். உங்க இந்திய பிரதமர், கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்றுச் சொல்லி, உங்களையெல்லாம் நடுத்தெருவுக்கு கொண்டுவந்துவிட்டார் இல்லையா!?!

உமர்: அது என்ன? "உங்க பிரதமர்" என்றுச் சொல்கிறாய், "நம்ம பிரதமர்" என்றுச் சொல். சௌதியில் வேலை செய்த மாத்திரத்தில், நீ இந்தியாவிற்கு அந்நியன் ஆகிவிடமாட்டாய். இங்கிருந்துச் சென்று சௌதியில் வேலை செய்யும் ஒவ்வொரு முஸ்லிமும் இந்தியன் தான், முதலில் இதை மனதில் வை.

கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு பிரதமர் ஒரு திட்டத்தை போட்டது உண்மை தான், நடுத்தர மக்களாகிய நாங்கள் ஏடிஎம் கியூவில் நிற்பதும் உண்மை தான், இதற்கும் இஸ்லாமுக்கும் என்ன சம்மந்தம் சொல்லு? நீ என்ன சொல்லவருகிறாய்? 

தம்பி: அடடே! நான் என்ன சொல்லப்போகிறேன் என்பதை சீக்கிரமாகவே கண்டுபிடிச்சிட்டீங்களே! இஸ்லாம் பற்றி பிறகு பார்க்கலாம், முதலாவது இந்தியாவில் நடக்கும் நாடகம் பற்றி பார்ப்போம். மோடியின் இந்த அதிரடி நடவடிக்கையை நீங்க ஆதரிக்கிறீங்களா? அல்லது எதிர்க்கிறீங்களா?

உமர்: கருப்புப் பணப்பிரச்சனை நாட்டிலிருந்து ஒழிய வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. நவம்பர் மாத ஆரம்பத்தில், இந்த திட்டத்தை பிரதமர் மோடி திடீரென்று அறிவித்த போது, மனதுக்குள் சந்தோஷமாக இருந்தது. மக்களுக்கு சில நாட்கள் தொந்தரவுகள் இருக்கும் ஆனால், அதன் பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்று நான் நம்பினேன். ஆனால், இன்னும் மக்கள் அவதிப்படுவதைப் பார்க்கும்போது, சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாமல், நம் பிரதமர் பெரிய திட்டத்தில் கையை வைத்துவிட்டாரா? என்ற சந்தேகம் வருகிறது. மக்கள் இன்னும் அவதிக்குள்ளாக்கப்படாமல் சீக்கிரமாக இந்த பிரச்சனையிலிருந்து விடுபட்டால் நன்றாக இருக்கும்.

தம்பி: மக்களுக்கு பிரச்சனை இருக்கின்றது என்பதை ஒப்புக்கொண்டீர்கள். மோடிக்கு, அதாவது பிஜேபிக்கு உங்கள் ஆதரவு உண்டா? இல்லையா? அதைச் சொல்லுங்கள்?

உமர்: நான் 'பிஜேபி கட்சியின் மோடியை' ஒரு கோணத்திலும், இந்த திட்டத்தை வெளியிட்ட 'இந்திய பிரதமர் மோடியை' வேறு ஒரு கோணத்திலும் பார்க்கவிரும்புகிறேன். சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், பிரதமரின் இந்த 'கருப்புப்பண ஒழிப்பு திட்டத்துக்கு என்னுடைய 100% ஆதரவு உண்டு'. அதே நேரத்தில் பிஜேபி கட்சியின் அங்கத்தினர் மோடிக்கு என்னுடைய ஆதரவு இல்லை, இதற்கு பல காரணங்கள் உண்டு, அதைப் பற்றி இப்போது பார்க்கவேண்டாம்.

எழுபது ஆண்டுகளாக தீர்க்கப்படாத வியாதியாக இருந்த இந்த கருப்புப்பணப் பிரச்சனையை தீர்ப்பதற்கு பிரதமர் திட்டம் தீட்டியது ஒரு சந்தோஷமான விஷயமாகும். ஒரு பக்கம் நாட்டுக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை, இன்னொரு பக்கம் சரியாக திட்டமிடாமல் பிரதமர் களத்தில் இறங்கிவிட்டாரா என்ற கோபம். 

முடிவாக,  அரசியலை இந்த 'கருப்புப்பண ஒழிப்பு திட்டத்தில்' நுழைக்க நான் விரும்பவில்லை. 

தம்பி: ஒரு சின்ன பிரச்சனைக்காக இவ்வளவு அடாவடி நடவடிக்கை தேவையா? இந்த கருப்புப்பண பிரச்சனைக்கும், இன்னுமுள்ள இதர பிரச்சனைகளுக்கும் என்னிடம் ஒரு சரியான தீர்வு இருக்கிறது, சொல்லட்டுமா?

உமர்: அடப்பாவி, ஒரு பெரிய பிரச்சனையை தீர்க்கும் வழி என்னிடமுள்ளது என்று இவ்வளவு நிதானமாகச் சொல்கிறாயே!  இந்திய தலைவர்கள், அரசியல்வாதிகள்  மற்றும் மேதாவிகள் இப்படிப்பட்ட பிரச்சனைகளிலிருந்து நாடு எப்போது விடுதலையாகும்? என்று காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.  உன்னிடம் உள்ள ஐடியாவை சீக்கிரம் சொல்லு.

தம்பி: இந்தியாவில் நாம் காணும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு, மோடியின் ஜனநாயகத்தில் கிடைக்காது, அது இஸ்லாமின் நபிகள் நாயகத்திடம் கிடைக்கும். இஸ்லாமிய ஆட்சி கருப்புப்பணமில்லாத ஆட்சி, இஸ்லாமிய ஆட்சி அனைத்து வித பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் ஆட்சி, இஸ்லாமிய ஆட்சி எல்லா மக்களுக்கும் நன்மை தரும் ஆட்சி. 

இஸ்லாமுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள், ஐந்தே ஆண்டுகளில் இந்தியாவை மாற்றிவிடுவோம். 

உமர்: ஐந்தே ஆண்டுகளில் இந்தியாவை சுடுகாடாக மாற்றிவிடுவீர்களா?

தம்பி: விளையாடாதீங்க! நான் ரொம்ப சீரியஸாக பேசிக்கொண்டு இருக்கிறேன்.

உமர்: நானும் சீரியஸாகத் தான் சொன்னேன் தம்பி. 

தம்பி: இஸ்லாமிய ஆட்சி நடந்தால், அந்த நாட்டில் கருப்புப்பண பிரச்சனை இருக்காது, நாடு முன்னேறும், அரசியல் தலைவர்கள் தப்பு செய்யமாட்டார்கள், நம் தலைவர்கள் செய்வது போல நாட்டு மக்களின் பணத்தை கொள்ளையடிக்கமாட்டார்கள் கடைசியாக  மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும்.  இவைகள் தேவையென்றால், அங்கு இஸ்லாமிய ஆட்சி வரவேண்டும். 

உமர்: உன் கருத்துப்படி, இன்று இந்தியா சந்தித்துக்கொண்டு இருக்கும் பிரச்சனைகளுக்கு காரணம் பிஜேபி அரசா? அல்லது யார் ஆட்சி செய்தாலும் இது தான் நிலையா?

தம்பி: பிஜேபி தான் இவைகளுக்கு காரணம் என்று நான் சொல்லவில்லை, யார் ஆட்சி செய்தாலும் இந்த பிரச்சனைகள் இருக்கும், அதாவது ஜனநாயக ஆட்சி புரியும் நாடுகளில் இந்த பிரச்சனைகள் கண்டிப்பாக இருக்கும்.

உமர்: அப்படியானால், இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி நடந்தால், அப்போது இவ்விதமான பிரச்சனைகள் இருக்காது என்பது உன் கருத்து, சரி தானே!

தம்பி: எஸ், சரியாகச் சொன்னீர்கள். 

உமர்: இஸ்லாம் உருவாகி 1400 ஆண்டுகளுக்கு மேலாக ஆகிவிட்டது. உலகில் பல நாடுகள் இஸ்லாமிய நாடுகளாக இருக்கின்றன. உன்னுடைய கூற்று உண்மையானால், உலகில் இப்போது இருக்கும் இஸ்லாமிய நாடுகளில், எந்த நாட்டில் நம் இந்தியாவில் தற்போது நாம் காணும் பிரச்சனைகள் இல்லாமல் முன்னேறி இருக்கிறது என்றுச் சொல் பார்ப்போம்.

உனக்கு உதவியாக இருக்கும்படி சில நாடுகளின் பெயர்களைச் சொல்கிறேன்: பாகிஸ்தான், சௌதி அரேபியா, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், பாங்களாதேஷ், துபாய், மலேசியா என்று சொல்லிக்கொண்டு போகலாம்.

தம்பி: இப்போது உலகில் 'முஸ்லிம் நாடுகள்' என்று அறியப்பட்டு இருக்கும் நாடுகளில் ஒரு நாட்டையும் நாம் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் படி 100% நடக்கும் நாடு என்றுச் சொல்லமுடியாது.  எனவே, இந்த நாடுகளில் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். 

உமர்: ஆச்சரியமாக இருக்கிறதே! 1400 ஆண்டுகள் ஆகியும், இஸ்லாமினால் ஒரு நாட்டையும் முழுவதுவாக ஆளமுடியவில்லையா?

இஸ்லாமிய ஷரியா சட்டம் இருக்கும் நாடுகள், பெரும்பான்மை முஸ்லிம்கள் வாழும் நாடுகள் இருக்கும் போதும் ஒரு நாட்டில் கூடவா 100% இஸ்லாமிய ஆட்சி நடக்கவில்லை?

தம்பி: நீங்கள் சொன்ன மேற்கண்ட நாடுகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் இஸ்லாமிய சட்டத்தை மீறிய நாடுகள் தான், எனவே, அவைகளில் கண்டிப்பாக பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். 

உமர்: நீ எவ்வளவு பெரிய நயவஞ்சகன் என்பது இப்போது தான் புரிகின்றது?

தம்பி: ஏன் இப்படி என்னை நயவஞ்சகன் என்றுச் சொல்கிறீர்கள்?

உமர்: அதாவது இஸ்லாம் உருவாகி 1400 ஆண்டுகள் ஆகியும், உங்களால் ஒரு முழுமையான இஸ்லாமிய நாட்டை உருவாக்க முடியவில்லை. பெரும்பான்மை முஸ்லிம்கள் இருந்தாலும், அந்த நாடுகளில் 100% ஷரியாவை பின்பற்றமுடியவில்லை, இதனை நீயே ஒப்புக்கொண்டாய். இந்த இலட்சனத்தில், பெரும்பான்மை இந்துக்கள் இருக்கும் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி நடந்தால், எல்லா பிரச்சனைகளும் தீரும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறாய், உனக்கு வெட்கமாகத் தோன்றவில்லையா?

முதலில் நீ சொல்வது போல, முழுவதுமாக இஸ்லாமை பின்பற்றிக்கொண்டு இருக்கின்ற மேலும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்கும் ஒரு இஸ்லாமிய நாட்டை நீ உதாரணமாக காட்டவேண்டும்.  அதன் பிறகு, அந்த நாட்டை உதாரணம் காட்டி மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லலாம். அதை விட்டுவிட்டு, வாயில் கூழ் காய்ச்சுவது என்றுச் சொல்வார்களே அது போல நீ பேசிக்கொண்டு இருக்கிறாய். இதனால் தான் உன்னை நயவஞ்சகன் என்றுச் சொன்னேன்.

  • மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கும் உலக நாடுகளின் பட்டியலில், இஸ்லாமிய நாடுகள் எங்கு இருக்கின்றன என்பதை கவனி. பட்டியலின் ஆரம்பத்தில் உள்ளனவா, அல்லது கடைசியில் உள்ளனவா என்பதை கவனி  - Quality of Life Index for Country 2016 Mid Year
  • உலகத்தில் சுற்றுலா செல்பவர்களுக்கு அறிவுரை கூறும்வகையில், உலகின் மிகவும் 10 ஆபத்தான நாடுகளில், 8 நாடுகள் இஸ்லாமிய நாடுகள் என்று Frontpage Magazineல் உள்ள இந்த கட்டுரை சொல்கிறது - 8 OUT OF 10 MOST DANGEROUS COUNTRIES IN THE WORLD ARE MUSLIM
  • உலகத்தில் அதிகமாக வன்முறைகள் நடக்கும் 27 பட்டணங்கள் அனைத்தும் இஸ்லாமியர்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் பட்டணங்களாகும் - The world's 27 most violent and worst cities are dominated by Islam
  • பிரான்ஸ் நாட்டில் 30-40 சதவிகிதம் முஸ்லிம்கள் வாழும் பட்டணம் மிகவும் ஆபத்தான பட்டணமாகும் - The French city of Marseille has an estimated 30 to 40 percent Muslim population and has been ranked as the most dangerous city in Europe.
  • உலகத்தின் 10 பாதுகாப்பான மற்றும் ஆபத்தான நாடுகள் - The ten safest and ten most dangerous countries in the world

ஆபத்தான நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் இஸ்லாமிய நாடுகளை வைத்துக்கொண்டு நீ, இந்திய ஜனநாயகத்தைப் பற்றி பேசுகிறாய்? ஜனநாயகம் பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது?

தம்பி: தற்கால நாடுகள் பற்றி பேசவேண்டாம், அவைகளில் நடக்கும் ஆட்சி குர்-ஆனின் படி, ஹதீஸ்களின் படி நடக்கும் ஆட்சி அல்ல. உண்மையான இஸ்லாமிய ஆட்சி இறைத்தூதர் முஹம்மது அவர்கள் நடத்திய ஆட்சியாகும், அவரது நான்கு கலிஃபாக்கள் நடத்திய ஆட்சி ஆகும். 

நபித்தோழர்கள், அபூ பக்கர், உமர், உஸ்மான் மற்றும் அலி அவர்களின் ஆட்சி தான் சிறந்த இஸ்லாமிய ஆட்சிகள் ஆகும். இவர்கள் ஆண்ட காலத்தை இஸ்லாமின் பொற்காலம் என்றுச் சொல்வார்கள்.  இவர்களின் ஆட்சி காலத்தில் கருப்புப்பணமில்லை, அரசியல் பிரச்சனைகள் இல்லை, மக்கள் பணத்தை ஆட்சியாளர்கள் கொள்ளையடிக்கவில்லை. இவர்கள் ஒரு சிறந்த நேர்மையான ஆட்சி செய்தார்கள்.  இவர்களின் ஆட்சியை மனதில் வைத்து தான் நான் உங்களோடு பேசிக்கொண்டு இருக்கிறேன்.

உமர்: இவர்களின் ஆட்சி நேர்மையான ஆட்சி என்று நீ சொல்கிறாயா? 

தம்பி: ஆமாம், இதில் என்ன சந்தேகம். அரசியல் தலைவர்களென்றால் இவர்களைப்போல இருக்கவேண்டும்!

உமர்: உணமையாகவா!?! அப்படியானால், 

  1. உங்கள் மூன்றாம் கலிஃபா உஸ்மான் அவர்கள் எப்படி கொல்லப்பட்டார்? 
  2. அவரைக் கொன்றவர்கள் யார்? 
  3. அவர் முஸ்லிம்களால் கொல்லப்பட்டாரா? அல்லது 
  4. முஸ்லிமல்லாதவர்களால் கொல்லப்பட்டாரா? 
  5. அவரின் கொலைக்கு முக்கியமான காரணம் என்ன? 

என்று சிறிது விளக்கமுடியுமா?

தம்பி: கலிஃபா உஸ்மான் அவர்கள் முஹம்மதுவின் மருமகன் ஆவார். அவர் ஒரு நல்ல ஆட்சியை, நேர்மையான ஆட்சியைச் செய்தார். அவர் மூலமாகத் தான் குர்-ஆன் அதிகாரபூர்வமான பிரதிகள் தொகுக்கப்பட்டது. அவர் மீது நீங்கள் குற்றம் சுமத்துவதை நான் கண்டிக்கின்றேன்.

உமர்: வாயை மூடு. முதலில் இஸ்லாமிய சரித்திரத்தை படி, உஸ்மான் எப்படி  ஆட்சி செய்தார? யாரால் ஏன் கொல்லப்பட்டார்? என்பதை படித்து புரிந்துக்கொள். 

முஹம்மதுவின் மருமகன் ஆகிவிட்ட காரணத்தினால் அவர் நேர்மையாக வாழ்ந்து இருந்திருப்பார், நல்ல ஆட்சி செய்து இருந்திருப்பார் என்று நீ கற்பனை செய்யாதே. முதலில் இஸ்லாமிய சரித்திரத்தை படி, அதன் பிறகு பேசு.

கலிஃபா உஸ்மான் எப்படி ஆட்சி செய்தார் என்பதை சுருக்கமாக இங்கு தருகிறேன்:

  • இன்றைய அரசியல் தலைவர்கள் போல தன் சொந்த பந்தங்களுக்கு உயர்ந்த பதவிகளைக் கொடுத்து, இதர மக்களுக்கு பெரிய பதவிகளை கொடுக்காமல் ஏமாற்றியவர் தான் உங்கள் மூன்றாம் கலிஃபா உஸ்மான்.
  • தன் அதிகாரத்தை தன் ஜாதிமக்களுக்காக பயன்படுத்தி, அதிகார துஷ்பிரயோகம் செய்த ஒரு ஆட்சியாளர் தான் உங்கள் மூன்றாம் கலிஃபா உஸ்மான். 
  • இதனால் கொதித்து எழுந்த மக்கள் நியாயம் கேட்கும் போது, தன் தவறை உணராமல், ஆட்சியை அலிக்கு விட்டுக்கொடுக்காமல் இருந்த பதவி ஆசை பிடித்தவர் தான் உஸ்மான்.
  • முஹம்மதுவின் இன்னொரு மருமகனார் அலி அவர்கள், நியாயம் கேட்டு வந்த மக்களிடம் சமாதானம் செய்து, 'இனி இப்படிப்பட்ட தவறுகள் நடக்காது, நல்ல ஆட்சியை உஸ்மான் கொடுப்பார்' என்றுச் சொல்லி, திருப்பி அனுப்பினார். 
  • ஆனால், திரும்பி போய்க்கொண்டு இருக்கும் மக்களை கொல்லும்படி, எகிப்து ஆளுநருக்கு ஒரு கடிதத்தை எழுதி தன் அடிமையை அனுப்பி மாட்டிக்கொண்டவர் உஸ்மான். 
  • உஸ்மானின் அடிமை, உஸ்மானின் குதிரயில் உஸ்மானின் அரசாங்க முத்திரையோடு கடிதத்தை எடுத்துச்செல்வதை கண்ட அந்த மக்கள் மறுபடியும் மதினாவிற்கு வந்து, நியாயம் கேட்கும் போது, நான் அந்த கடிதத்தை எழுதவில்லை என்றுச் சொன்னவர் உஸ்மான். ஒருவேளை, உஸ்மான் அந்தக் கடிதத்தை எழுதியிருக்கவில்லையென்றாலும், ஒரு தலைவராக தன் ஆட்சியில் என்ன நடக்கிறது, தன் அதிகாரபூர்வமான முத்திரையை யார் பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்டறியமுடியாத ஒரு நிர்வாக திறமையில்லாதவர் தான் உங்கள் மூன்றாம் கலிஃபா. 
  • உஸ்மான் கொல்லப்படப்போகிறார் என்பதை அறிந்த இதர தொழர்களாகிய அலியும் மற்றவர்களும், மதினாவிலிருந்து வெளியே சென்றுவிட்டார்கள். 40 நாட்கள் வீட்டுக்காவலில் வைத்து, கடைசியாக உஸ்மானை முஸ்லிம்களே கொன்றுவிட்டார்கள். இது தான் இஸ்லாமிய ஆட்சியின் நிலை. 
  • இஸ்லாம் உருவாக்கிய முதலாம் தலைமுறையின் தலைவர் இப்படிப்பட்டவர் என்றால், இஸ்லாம் இந்த 21ம் நூற்றாண்டில் ஒரு தலைவரை உருவாக்கினால் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப்பார் தம்பி.
  • முஹம்மதுவின் மகளை திருமணம் செய்துக்கொண்ட தலைவரால் இப்படிப்பட்ட ஒரு கேடுகெட்ட ஆட்சியை கொடுக்கமுடியுமென்றால், இந்த 21ம் நூற்றாண்டில் சொல்லவேண்டுமா

உன் கருத்துப்படி உஸ்மான் செய்தது தான் உண்மையான இஸ்லாமிய ஆட்சியென்றால், 'உலகத்துக்கு அப்படிப்பட்ட கேவலமான ஆட்சி தேவையில்லை" தம்பி, முக்கியமாக இந்தியாவிற்கு இஸ்லாமிய ஆட்சி தேவையில்லை. கீழ்கண்ட கட்டுரையை படித்துப்பார், இஸ்லாமிய சரித்திரத்தின் படி, உஸ்மான் ஏன் கொல்லப்பட்டார்? அவர் எப்படிப்பட்டவர்? போன்றவைகள் புரியும்.

இஸ்லாமிய அரச குடும்பம் - பாகம் 3: குர்ஆனில் தெரித்த இரத்தம் (உஸ்மானும் இஸ்லாமிய அரச குடும்பமும்)

தம்பி: இதனை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன்.

உமர்:  நீ ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும் சரித்திரத்தை யாரும் மாற்றமுடியாது. முதலில் இஸ்லாமிய சரித்திரத்தைப் படி.  ஜனநாயக ஆட்சி பற்றி பேச உனக்கு தகுதியில்லை. முக்கியமாக இந்திய ஜனநாயகத்தைப் பற்றி பேச உனக்கு அருகதை கிடையாது.  ஒரு கேவலமான ஆட்சியை செய்து, தன் சொந்த முஸ்லிம்களால் படுகேவலமாக கொல்லப்பட்ட உஸ்மானின் ஆட்சியை இந்திய ஜனநாயக ஆட்சியோடு ஒப்பிட உனக்கு எப்படி தைரியம் வந்தது?

தம்பி: இதனை நான் நம்பமாட்டேன்.

உமர்: ஆரம்பகால முஸ்லிம்கள் ஆட்சிக்காகவும் பணத்திற்காகவும் ஒருவரை ஒருவர்  வெட்டிக்கொண்டு செத்தார்கள். முக்கியமாக முதல் நான்கு கலிஃபாக்களின் ஆட்சியை படித்து தெரிந்துக்கொள். முஹம்மது மரித்த அதே நாள் நாற்காலிக்காக சண்டையிட்டவர்கள் தானே உங்கள் சஹாபாக்கள். தந்தை மரித்த அடுத்த நாளே சொத்துக்களுக்காக சண்டைபோட்டவர் தான் முஹம்மதுவின் மகள் பாத்திமாவும், அவரது கணவர் அலியும் (நான்காவது கலிஃபா). இப்படிப்பட்ட அடிச்சுவடுகளை வைத்துக்கொண்டு, நீ ஜனநாயகம் பற்றி பேச வந்துவிட்டாய்.

இஸ்லாமினால் 14 நூற்றாண்டுகளால் ஒரு நல்ல அரசையும் கொடுக்கமுடியவில்லை.  இந்த இலடசத்தில் நீ இந்திய ஜனநாயகத்திற்கு எதிராக கேள்வி எழுப்புகிறாய்! இந்தியாவில் காணப்படும் பிரச்சனைகளுக்கு வழி காட்டுகிறேன் என்றுச் சொல்லி,  இந்தியாவை சுடுகாடாக்க பார்க்கிறாய். முதலாவது ஒரு நல்ல இஸ்லாமிய ஆட்சியை இஸ்லாமிய நாடுகள் நடத்திக்காட்டட்டும், மக்களின் பொருளாதார நிலை உயரட்டும், பெரும்பான்மை முஸ்லிம்கள் நல்ல நிலையில் வாழட்டும். இதனை பார்க்கும் மற்ற ஜனநாயக நாடுகள் தானாகவே, இஸ்லாமிய சட்டத்தை தங்கள் நாடுகளிலும் பின்பற்ற ஆரம்பிப்பார்கள். 

ஆனால், இந்த 21ம் நூற்றாண்டில் இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றும் அளவிற்கு உலக நாடுகள் தரம் தாழ்ந்துவிடவில்லை.  இஸ்லாமிய நாடுகளில் ஷியா முஸ்லிம்களின் மசூதியில் சுன்னி முஸ்லிம்கள் வெடிகுண்டு வீசுகிறார்கள், பெண்களின் நிலை சொல்லத்தேவையில்லை. தீவிரவாதிகளை உருவாக்கி உலகமனைத்துக்கும் அனுப்பும் நாடுகளாக இஸ்லாமிய நாடுகள் காணப்படுகின்றன. 

உலக செய்திகளை ஒவ்வொரு நாளும் படி, ஏதோ ஒரு விதத்தில் இஸ்லாமியர்களால் வன்முறை தீவிரவாதம் நடந்திருக்கும். இஸ்லாமிய நாடுகளில் முஸ்லிமல்லாதவர்களின் நிலை பரிதாபத்துக்கு உரியது. 

தம்பி, கடைசியாகச் சொல்கிறேன், உங்கள் முஹம்மது செய்த ஆட்சியும், கலிஃபாக்கள் செய்த ஆட்சியும் நேர்மையான ஆட்சிகள் அல்ல. இதனை இஸ்லாமிய சரித்திரம் நமக்கு எடுத்துக்காட்டும், நீ முஸ்லிமாக மாறு அப்போது நான் பாதுகாப்பு அளிப்பேன், இல்லையேல் என் வாளுக்கு பதில் சொல்லு என்பது தான் முஹம்மதுவின் அரசாங்க ஸ்லோகமாகும். இதையே, அபூ பக்கரும், உமரும், பின்பற்றினார்கள். 

இந்திய பிரச்சனைகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், இஸ்லாமை உள்ளே நுழைக்கவேண்டாம். பிஜேபி கட்சியோ, காங்கிரஸ் கட்சியோ, வேறு  இதர கட்சிகளோ, இவைகளை நாங்கள் சமாளித்துக்கொள்வோம், இந்தியர்களுக்கு ஜனநாயகம் போதும். ஒரு கட்சியின் ஆட்சி சரியில்லையென்றால், அவரை தள்ளிவிட்டு, இன்னொருவரை நாங்கள் அமர்த்திக்கொள்வோம், அவரும் சரியில்லையென்றால், இன்னொருவரை நியமிப்போம்.  இஸ்லாமிய ஆட்சி  என்பது குரங்கு கையில் பூமாலை கொடுத்த கதை தான், ஒவ்வொரு நாளும் முஸ்லிம் நாடுகளில் மக்கள் படும் அல்லல்களை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். எங்களுக்கு இஸ்லாம் வேண்டாம் தம்பி, ஜனநாயகமே போதும்.

தம்பி: நல்லதைச் சொன்னால் யார் கேட்கிறார்கள்?

உமர்: நல்லவைகளை முஸ்லிம்களிடமிருந்து கேட்டு நடக்கவேண்டிய நிலையில், உலகில் யாரும் இல்லை, முக்கியமாக அந்த துர்பாக்கியமான நிலையில் இந்தியா நிச்சயமாக இல்லை என்பதை உனக்கு ஆணித்தரமாகச் சொல்லிக்கொள்கிறேன்.

ஆடு மழையில் நனைகிறது என்று ஓநாய் கவலைப்பட்டதாம். அது போல இருக்கிறது, உன் 'இஸ்லாமிய ஆட்சி' பற்றிய அறிவுரை.

தேதி: 3, டிசம்பர் 2016


உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்

உமரின் இதர தலைப்புகள்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/general-topics/modi_muhammad.html


கருத்துகள் இல்லை: