ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

2017 ஈஸ்டர் சிறப்புக் கட்டுரை - அஹ்மத் நபியின் பிரவேசமும் அல்லாஹ்வின் ஆள்மாற்றமும்

[புனித வெள்ளிக்கு அடுத்த நாள் ஒரு முஸ்லிமிடமிருந்து உமருக்கு ஒரு போன் வந்தது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவரை தனிமையில் சந்தித்தால், அவருக்கு ஒரு முக்கியமான இரகசியத்தைச் சொல்வதாக கூறினார். உமர் அதிர்ந்துப் போனான். உமருக்கு போன் செய்தவர் யார்? சொல்லப்போகும் இரகசியம் என்ன? அந்த போன் ஏன் புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிக்கைக்கு இடைப்பட்ட காலத்தில் வரவேண்டும்? அவரை தனிமையில் சந்திக்க உமர் சென்றானா இல்லையா? போன்ற கேள்விகளுக்கான பதிலை அறிய மேற்கொண்டு படிக்கவும்]

உமர்: ஹலோ! யார் பேசுறது?

முஸ்லிம்: ஹலோ, பேசுவது உமரா?

உமர்:  ஆமாம், உமர் தான் பேசுகிறேன உங்களுக்கு என்னவேண்டும்?

முஸ்லிம்: என் பெயர் அஹ்மத் நபி, உங்களிடம் தனியாக பேசவேண்டும்.

உமர்:  அஹ்மத் நபியா? இப்படி யாரும் எனக்கு நண்பர்கள் இல்லையே!

முஸ்லிம்: இது தான் முதல் முறை உங்களிடம் நான் பேசுவது.

உமர்:  சரி, என்னிடம் நீங்கள் ஏன் பேசவேண்டும்? எதைப் பற்றி பேசவேண்டும்.

அஹ்மத் நபி: இது இரகசியம், இதனை போனில் பேசமுடியாது.

உமர்: உங்க பேர் என்ன சொன்னீங்க? "அஹமத் நபியா"? நபி என்று யாராவது முஸ்லிம்களில் பெயரை வைத்துக்கொள்வார்களா?

அஹ்மத் நபி: நபி என்பது பெயரல்ல!  அஹ்மத் என்பது தான் என் ‍பெயர். நபி என்பது எனக்கு அல்லாஹ் கொடுத்திருக்கின்ற பட்டம், அதாவது நான் அல்லாஹ்வின் நபியாக வந்துள்ளேன், இறைத்தூதராக வந்துள்ளேன்.

உமர் மனதுக்குள்ளே "வசமாக ஒரு பைத்தியத்திடம் மாட்டிக்கொண்டேன் போல இருக்கே! இயேசுவே, இது என்ன சோதனை" என்று சொல்லிக்கொண்டான்.

உமர்:  ஹலோ சார், நீங்க என்ன சொல்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. நீங்க அல்லாஹ்வின் நபியா? அதுவும் இந்த‌ 21ம் நூற்றாண்டிலா? குழப்பமாக இருக்கிறது.

அஹ்மத் நபி:  போனில் இவைகளை விவரிக்கமுடியாது. நாளை நாம் பேசலாம். நான் சொல்லும் இடத்திற்கு வாங்களேன்.

உமர்:  அய்யா அஹ்மத் அவர்களே, நான் தனியாக முஸ்லிம்கள் அழைத்தால் வருவதில்லை!

அஹ்மத் நபி:  நீங்கள் பயப்படத்தேவையில்லை, நான் அல்லாஹ்வின் இறைத்தூதர், என்னை நீங்கள் நம்பலாம். கடந்த மாதம் நடந்த கொயம்பத்தூர் கொலைப்பற்றி கேள்விப்பட்டுத் தானே, தனியாக வரமாட்டேன் என்றுச் சொல்கிறீர்கள்

உமர்:  எனக்கு அல்லாஹ்வின் இறைத்தூதர் என்றாலோ, அல்லது அவரை பின்பற்றுபவர்கள் என்றாலோ கொஞ்சம் முன்னெச்சரிக்கை அதிகம். எனவே, நீங்கள் சொன்ன இடத்திற்கு வேண்டாம், மெரினா பீச்சுக்கு வருகிறேன், அங்கு பேசலாமா?

அஹ்மத் நபி: என்னை ஒரு முறை நீங்கள் சந்தித்துவிட்டால், அதன் பிறகு நீங்கள் பயப்படவேண்டிய அவசியம் இருக்காது.

உமர்:  பயப்படுவதற்கு நான் இருக்கமாட்டேன் என்று மறைமுகமாகச் சொல்கிறீர்களா? மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் மெரினா பீச் உங்களுக்கு ஓகே என்றால் எனக்கு ஓகே.

அஹ்மத் நபி:  ம்ம்... சரி நாம் மெரினா பீச்சில் சாயங்காலம் 4 மணிக்கு நாளைக்கு சந்திப்போம்.
[தேதி: 16 ஏப்ரில் 2017, மாலை 4 மணிக்கு உமரும் அஹ்மத் என்பவரும் மெரினா பீச்சில் சந்திக்கிறார்கள்.]

அஹ்மத் நபி:  ஹலோ உமர், எப்படி கரெக்டா என்னை கண்டுபிடிச்சுட்டீங்க?

உமர்:   முகத்தை பார்த்தாலே தெரிகிறதே! நெத்தியிலே வடு  கருப்பு, முகத்திலே கள்ளச்சிரிப்பு, கைப்பிடி அளவு தாடி. இவைகள் போதாதா ஒரு முஸ்லிமை அடையாளம் காண்பதற்கு

அஹ்மத் நபி:  சரி விளையாட்டு பேச்சுக்கள் போதும், சீரியஸாக ஒரு விஷயம் சொல்லனும்.

உமர்:  சொல்லுங்க, அஹ்மத்.

அஹ்மத் நபி:  அஹ்மத் நபி என்றுச் சொல்லுங்க, எதற்கு நபியை 'கட்' செய்துட்டீங்க.

உமர்: உங்கள் முஹம்மதுவை குறிப்பிடும் போது கூட 'நபி' என்று நான் சொல்வதில்லை. 'முஹம்மது நபி' என்று உச்சரித்தால், அவரை நான் நபி என்று ஏற்றுக்கொள்வதாக ஆகிவிடும். அது சரி, அஹமத் என்பது முஹம்மதுவிற்கு இருக்கும் இன்னொரு பெயர் இல்லையா? அதே பெயரை ஏன் நீங்கள் வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

அஹ்மத் நபி:  நான் என்ன செய்யமுடியும், என் பெற்றோர்கள் வைத்த பெயர்.

உமர்:  சரி போகட்டும், சீக்கிரமாகச் சொல்லுங்க, நான் வீட்டிற்கு போகவேண்டும், இன்று ஈஸ்டர் பண்டிகை.

அஹ்மத் நபி:  நான் சொல்வதை கவனமாக கேளுங்க, குறுக்கே பேசவேண்டாம். எங்கள் இறைத்தூதர் முஹம்மதுவை அல்லாஹ் எப்படி நபியாக தெரிந்தெடுத்தானோ, அதே போல என்னையும் தெரிந்தெடுத்தான். எனக்கும் ஒரு வேதத்தை கொடுப்பதாகச் சொல்லியுள்ளான். முஹம்மதுவையும், முந்தைய நபிகளையும்  நம்பியதுபோல முஸ்லிம்கள் என்னையும் நபியாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.

உமர்:  இன்னிக்கு ஏப்ரில் ஃபஸ்ட் கூட இல்லையே, இப்படி ஒரு பச்சைப் பொய் சொல்ல எப்படி தைரியம் வந்தது உங்களுக்கு?

அஹ்மத் நபி:  நான் சொல்வதை நம்புங்க, நான் உண்மையைச் சொல்கிறேன்.

உமர்:  உங்கள் மார்க்கத்தை நான் பூர்த்தி செய்துவிட்டேன் என்று குர்‍ஆன் சொல்கிறதே (குர்‍ஆன் 5:3) அதற்கு உங்கள் பதில் என்ன?

5:3.  . . . இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என்அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்)தேர்ந்தெடுத்துள்ளேன்; . . ..

அஹ்மத் நபி:  அது மதினாவில் இறக்கப்பட்ட வசனம், அது உண்மையில்லை.

உமர்: எனக்கு சிரிப்பு தான் வருகிறது. உங்களை நபியாக காட்டுவதற்கு இந்த‌ குர்‍ஆன் வசனத்தை புறக்கணிக்கிறீர்களா? இது தவறு இல்லையா?

அஹ்மத் நபி:  இந்த ஒரு குர்‍ஆன் வசனத்தை அல்ல, மதினாவில் இறக்கப்பட்ட அனைத்து வசனங்களும் அல்லாஹ் இறக்கிய வசனங்கள் அல்ல. மக்காவில் இறக்கப்பட்ட அத்தியாயங்கள் மற்றும் வசனங்கள் தான் உண்மையான குர்‍ஆன்.

உமர்:  வாய்க்கு வந்தபடி ஏதேதோ பேசுகிறீர்கள். மதினா அத்தியாயங்கள் அனைத்தும் குர்-ஆன் இல்லை என்பதற்கு என்ன ஆதாரம் வைத்துள்ளீர்கள்?

அஹ்மத் நபி:  நான் சொல்வதை கவனமாக கேளுங்கள். மக்காவிலிருந்து ஹிஜ்ரா செய்த போது இறைத்தூதர் முஹம்மது அவர்களும், அபூ பக்கர் அவர்களும் ஒரு குகையில் ஒளிந்துக்கொண்டு இருந்தார்கள்.

உமர்:  இது தான் எனக்கும் தெரியுமே! முஹம்மதுவை தேடி வந்தவர்கள் அந்த குகையில் நுழையவில்லை, காரணம் அந்த குகையின் நுழைவாயில் ஒரு சிலந்தி வலை பின்னியிருந்தது, இதனை கண்டு அவர்கள் உள்ளே நுழயவில்லை. இது தானே அந்த கதை.

அஹ்மத் நபி: இங்கு தான் ஒரு தவறு நடந்துள்ளது. ஒரு குழு உள்ளே நுழையாமல் சென்றுவிட்டது, ஆனால், அதன் பிறகு ஒரு குறைஷி மட்டும் உள்ளே சென்றான். அவன் முஹம்மதுவையும் அபூ பக்கரையும் கண்டு சண்டை போட்டான், இந்த சண்டையில் அபூ பக்கர் மயக்கமடைந்துவிட்டார். அதன் பிறகு அவர் முஹம்மதுவை மேற்கொண்டு விட்டான், அவன் அவரை கொலை செய்வதற்கு முன்பு, அல்லாஹ் முஹம்மதுவை தன்னளவில் எடுத்துக்கொண்டான். அங்கு வந்த அந்த குறைஷியின் முகத்தை இறைத்தூதர் முஹம்மதுவின் முகத்தைப்போல அல்லாஹ் மாற்றிவிட்டான், உடைகளையும் அப்படியே மாற்றிவிட்டான். முஹம்மது மாயமாக மறைந்துவிட்டதை கண்ட அந்த குறைஷி திடுக்கிட்டு, ஒன்றுமே புரியாமல்  அங்கேயே உட்கார்ந்துக்கொண்டு இருந்தான். அபூ பக்கர் மயக்கம் தெளிந்து எழுந்த பிறகு, தன் பக்கத்தில் முஹம்மதுவாக மாறிய குறைஷி உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தார். அந்த குறைஷி நபர் எங்கே என்று கேட்டார். தன் முகம் முஹம்மதுவைப்போல மாறிவிட்டதை அறிந்துக்கொண்ட அந்த குறைஷி, 'அல்லாஹ் அவனை மாயமாக்கி எடுத்துக்கொண்டான், நம்மை காப்பாற்றிவிட்டான்' என்றுச் சொன்னான். அன்றிலிருந்து தன்னை முஹம்மது என்று சொல்லிக்கொண்டு அவன் மதினாவில் இறைத்தூதரின் இடத்தில் வாழ்ந்தான். அவன் இஸ்லாமை கெடுத்துவிட்டான்.

உமர்:  கதை ரொம்பவும் நன்றாக இருக்கிறது, படம் எடுத்தால் நன்றாக ஓடும். 

அஹ்மத் நபி:  நான் சொல்வதை நம்பு உமர். இது தான் நடந்தது, அதன் பிறகு முஹம்மதுவாக மாறிய அந்த குறைஷியும், அபூ பக்கரும் மதினாவிற்குச் சென்றார்கள். இதன் பிறகு என்ன நடந்தது என்று நம் அனைவருக்கும் தெரியும் அல்லவா!

உமர்:  ஒரு பேச்சுக்காக நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டாலும், லாஜிக் இடிக்கிறதே! பல கேள்விகள் எனக்கு எழுகின்றன.

அஹ்மத் நபி:  உங்கள் கேள்விகள் என்ன?

உமர்:  என்ன தான் ஒரு குறைஷியின் முகத்தை அல்லாஹ் மாற்றினாலும், அவன் குணம் மாறுமா? இதனை மதினாவில் முஸ்லிம்கள், இதர தோழர்கள் கண்டுபிடித்து இருந்திருப்பார்கள் அல்லவா?

அஹ்மத் நபி:  சரியான கேள்வி தான். உமர் கூர்ந்து கவனியுங்கள். மக்காவில் முஹம்மதுவின் வாழ்க்கை ஒரு அமைதியான ஒன்றாக இருந்தது, குர்-ஆன் வசனங்களும் அமைதியை விரும்பும் வசனங்களாகவும், ஜிஹாத் பற்றி பேசாத வசனங்களாகவும் இருந்தன. சகிப்புத்தன்மையை ஊட்டக்கூடிய ஒரு மார்க்கமாக இருந்தது, இது சரி தானே!

உமர்:  ஆமாம், அது உண்மை தான். 

அஹ்மத் நபி:  ஆனால், மதினாவிற்கு வந்த பிறகு குர்-ஆனின் பாணி மாறிவிட்டது, ஜிஹாத் பற்றி அதிகமான வசனங்கள் இறங்கின, பல வழிப்பறிகள், போர்கள் சண்டைகள் என்று ஒரு அராஜக மார்க்கமாக மதினாவின் குர்-ஆன் வசனங்கள் காட்டுவதை பார்க்கமுடியும்.

உமர்:  ம்ம்ம்… நீங்கள் சொல்வதில் உண்மை உள்ளது, எனக்கு புரியுது. 

அஹ்மத் நபி:   இது மட்டுமல்ல, அந்த குறைஷி பல திருமணங்கள் செய்துக்கொண்டு, போட்ட ஆட்டம் இருக்கிறதே, அடேங்கப்பா! அதைச் சொல்லவே முடியாது.

உமர்:  அப்படியானால், மதினாவில் வாழ்ந்தவர் முஹம்மது அல்ல, மதினாவில் வசனங்களை இறக்கியது அல்லாஹ் அல்ல என்று சொல்ல வருகிறீர்கள்.

அஹ்மத் நபி:  கரெக்ட். மக்காவின் இறைத்தூதரும், மதினாவின் இறைத்தூதரும் நேர் எதிர் துருவங்கள் ஆவார்கள். மக்காவின் குர்-ஆனும், மதினாவின் குர்-ஆனும் முரண்பட்டவைகளாகும். அந்த முகம் மாற்றப்பட்ட குறைஷி இறைத்தூதரின் பெயரில் மதினாவில் செய்த காரியங்கள் கண்டிக்கத்தக்கவைகள் ஆகும்.

உமர்:  எனக்கு இன்னும் லாஜிக் இடிக்கிறது. முஹம்மது வந்துச் சென்றுவிட்டு, 14 நூற்றாண்டுகள் ஆகிவிட்டது, இத்தனை ஆண்டுகள் ஏன் அல்லாஹ் சும்மா இருந்துவிட்டான்? ஹிஜ்ராவின் போது நடைப்பெற்ற அந்த ஆள்மாறாட்டத்தை அபூ பக்கர், உமர், உஸ்மான் மற்றும் அலி போன்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி, இந்த குழப்பத்தை நீக்கியிருந்திருக்கலாம் அல்லவா? ஏன், இந்த நீண்ட மௌனம்.

அஹ்மத் நபி: நீங்கள் கேட்ட கேள்வியில் நியாயம் இருக்கிறது. ஆனால், இது முதல் முறை நடந்த நிகழ்ச்சி அல்ல, இதே போல நிகழ்ச்சி ஏற்கனவே நடந்துள்ளது. 

உமர்:  அது எப்போது?

அஹ்மத் நபி:  இன்னுமா உங்களுக்கு புரியவில்லை. நன்றாக சிந்தித்துப் பாருங்கள், நீங்களும் பல முறை இது பற்றி எழுதியுள்ளீர்கள். இயேசுவை சிலுவையில் அறைய கொண்டுச் செல்வதற்கு முன்பும், அல்லாஹ் இப்படியே தன் நபியை அதாவது இயேசுவை மாயமாக எடுத்துக்கொண்டான். இதனை யாரும் அறியாத வண்ணம் இன்னொருவருக்கு இயேசுவின் முகத்தை கொடுத்துவிட்டான். இதனை குர்-ஆன் 4:157ல் காணலாம். 

4:157. இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.

உமர்:  ஓ… இப்போது தான் எனக்கு புரிகிறது. அல்லாஹ் முதல் நூற்றாண்டில் ஒரு ஆள்மாறாட்டம் செய்தார், அதனை ஏழாம் நூற்றாண்டில் முஹம்மதுவிற்கு வெளிப்படுத்தினார். அதே போல, முஹம்மதுவை தன் அளவில் எடுத்துக்கொண்டு, அந்த உண்மையை இந்த 21ம் நூற்றாண்டில் உங்களுக்கு வெளிப்படுத்தினார். 

அஹ்மத் நபி: இப்போது தான் நீங்கள் சரியாக புரிந்துக் கொண்டுள்ளீர்கள்.

உமர்:  இன்னொரு கேள்வி. ஞானமுள்ள இறைவன் செய்த தவறினால், இன்று உலகம் படும் அல்லல்களை பார்த்தீரா? இஸ்லாமின் பெயரில் நடக்கும் தீவிரவாத செயல்களை பார்த்தீரா? ஆள்மாறாட்டம் செய்த அல்லாஹ் ஏன் மௌனமாக இத்தனை ஆண்டுகள் இருந்துவிட்டான்? ஏன் முஹம்மதுவின் தோழர்களிடம் உண்மையைச் சொல்லாமல் ஏமாற்றினார்? ஒரு மிகப்பெரிய தவறை அல்லாஹ் செய்துள்ளான். பல ஆண்டுகளாக மக்கள் வழிதவறி செல்வதற்கு அல்லாஹ் தான் காரணம். இதற்கு உங்கள் பதில் என்ன?

அஹ்மத் நபி:  இயேசுவை அல்லாஹ் எடுத்துக்கொண்டு, 600 ஆண்டுகள் மௌனமாக இருக்கவில்லையா? இயேசுவை தன்னளவில் எடுத்துக்கொண்ட விஷயத்தை இயேசுவின் சீடர்களுக்கும் சொல்லாமல், அவரது தாயாருக்கும் சொல்லாமல், கடைசியாக இறைத்தூதர் முஹம்மதுவிற்கு வஹி மூலமாக அறிவிக்கவில்லையா? அது போல தான் இதுவும். 1400 ஆண்டுகள் அமைதியாக இருந்த அல்லாஹ், இப்போது எனக்கு வஹி மூலமாக அறிவித்துள்ளார். இயேசுவின் விஷயத்தில் 600 ஆண்டுகள் அமைதி காத்தான் அல்லாஹ், முஹம்மது நபி விஷயத்தில் 1400 ஆண்டுகள் அமைதி காத்தான், அல்லாஹ் நோஸ் த பெஸ்ட். 

உமர்: பதில் சொல்லமுடியவில்லையென்றால் 'அல்லாஹ் நோஸ் த பெஸ்ட்' என்று மட்டும் சரியாக சொல்லத் தெரிந்துக் கொள்ளுங்கள். 

அஹ்மத் நபி:  நான் சொல்வதை சொல்லிவிட்டேன், அல்லாஹ் என்னை நபியாக தெரிந்தெடுத்தான், நான் அல்லாஹ்வின் அடிமை. அவன் எனக்கு வேதத்தை கொடுத்துள்ளான். முந்தைய வேதங்களில் உள்ள பிழைகளை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்ட மக்கா குர்-ஆன் எப்படி வந்ததோ, அதே போல, எனக்கு அவன் கொடுக்கும் வஹியின் மூலம் நம்மிடம் உள்ள குர்-ஆனில் இருக்கும், பிழைகளை உலகிற்கு வெளிப்படுத்தப் போகிறான்.

உமர்:  அல்லாஹ் அனுப்பின ஒரு நபியினாலேயே உலகம் ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறது, இந்த இலட்சனத்தில் இன்னொரு 'அல்லாஹ்வின் நபியா?' உலகத்தில் கொஞ்சமாவது அமைதி இருக்கட்டுமய்யா? கொஞ்சம் தயை செய்யுங்க, தாங்காது உலகம் தாங்காது.

அஹ்மத் நபி:  என் வார்த்தைகளை கேட்டு நடந்துக்கொண்டவர்கள் நேர் வழியில் செல்வார்கள். அல்லாஹ் சொல்வதைக் கேளுங்கள். 

உமர்:  இதெல்லாம் இருக்கட்டும், என்னிடம் ஏன் இதையெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். முஸ்லிம்களிடம் சொல்லவேண்டியது தானே!

அஹ்மத் நபி: இந்த விவரங்களை நான் ஏற்கனவே, சில முஸ்லிம்களிடம் சொல்லிவிட்டேன், ஆனால் அவர்கள் நம்பவில்லை.

உமர்:  என்னது, ஏற்கனவே முஸ்லிம்களிடம் சொல்லியாகிவிட்டதா? நீங்கள் அல்லாஹ்வின் நபியென்று சொல்லிட்டீங்களா? அடக்கடவுளே, இதை ஏன் என்னிடம் ஏற்கனவே சொல்லவே இல்லை. அவ்வளவு தான் நீங்க குளோஸ். அய்யய்யோ… உங்களோடு இவ்வளவு நேரம் பேசிக்கொண்டு இருந்ததே மிகப்பெரிய தவறு. நான் இப்போதே ஓடறேன்… ஆளவிடப்பா….

[உமர் இப்படி சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, "டப்" என்ற ஒரு சத்தம்.  ஒரு தோட்டா.. அஹ்மத் நபியின் நேற்றியில் சிகப்பு பொட்டு வைத்துவிட்டது. உமர் இதைப் பார்த்து ஓடுகின்றான்… அவனை நோக்கியும் துப்பாக்கிச் சூடு தொடங்கியது… ஓடுகின்றான்.. ஓடுகின்றான்… உமரின் முதுகில் ஒரு தோட்டா பதிந்துவிட்டது… இயேசுவே என்றுச் சொல்லி கத்திக்கொண்டு உமர்… தன் படுக்கையிலிருந்து கீழே விழுந்துவிட்டான்… அவன் பயந்தவிட்டிருந்தான்]

உமரின் மனைவி: என்ன ஆச்சுங்க? ஏன் கத்துனீங்க? 
என்ன சத்தம் இங்கு? என்று கேட்டவாறு உமரின் தந்தை பக்கத்து அறையிலிருந்து வந்துவிட்டார். 

உமருக்கு முகமெல்லாம் வேர்த்து கொட்டிவிட்டது. எழுந்து உட்கார்ந்து, தண்ணீர் குடித்துவிட்டு சுதாரித்துக்கொண்டான் உமர்.

உமர்: அப்பா ஒரு கெட்ட கனவு கண்டேன். என்னை தீவிரவாதிகள் முதுகில் சுட்டுவிட்டார்கள், அதனால் அதிர்ந்துப்போய் எழுந்துவிட்டேன்.

உமரின் மனைவி: இதுக்கு தான் சொல்றது, எப்போ பார்த்தாலும், சிரியாவில் என்ன ஆச்சு, எந்த நாட்டில் யார் பாம் போட்டான், போன்ற செய்திகளை மட்டுமே பார்த்துவிட்டு தூங்கினால், கனவில் தீவிரவாதி வரமல், இயேசுவா வருவார். 

உமரின் அப்பா: டேய், இனிமேல் அப்படிப்பட்ட செய்திகளை பார்ப்பதை விட்டுவிட்டு ஜெபம் செய்துவிட்டு, அமைதியாக தூங்கு. நான் போறேன்.

இரண்டு கழுத வயசு ஆகிறது, இப்பவும் கெட்ட கனவு வந்து பயமுறுத்துது என்றுச் சொல்றான் இவன் என்று முனுமுனுத்துக்கொண்டு அப்பா வெளியே சென்றுவிட்டார்.

சரி, நீயும் தூங்கு என்று மனைவியிடம் சொல்லி, துப்பட்டியை போர்த்திக்கொண்டு தூங்க ஆரம்பித்தான் உமர். 

உமரின் மனைவி 'அந்த அஹ்மத் நபி' என்ன ஆனார் என்று திரும்பி பார்த்தீங்களா? அனாதையாக அவரை விட்டுவிட்டு ஓடிப்போவது என்ன நியாயம் என்று கேள்வி கேட்டாள். உமர் அதிர்ந்துப்போனான், என் கனவில் வந்த நபரின் பெயரும், நிகழ்ச்சியும் இவளுக்கு எப்படி தெரிந்தது?. . .

உனக்கு எப்படி இது தெரியும்? என்று கேட்டான் உமர். நிம்மதியாக படுங்க, காலையில் சொல்றேன் என்றுச் சொல்லி அவளும் படுத்துவிட்டாள்…

மேலதிக விவரங்களுக்கு படிக்கவும்:

கருத்துகள் இல்லை: