ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

புதன், 18 அக்டோபர், 2017

ஒரு தாரமணம் (ஒற்றை மணவாழ்க்கை) என்பது ஆபத்தானதா?

ஈமெயில் உரையாடல்கள்

தலைப்பு: ஒரு தாரமணம் (ஒற்றை மணவாழ்க்கை)  என்பது ஆபத்தானதா?

தேதி: 23 ஏப்ரில் 2005

பொருள்: எயிட்ஸ்

ஹலோ,

நீங்கள் சுகமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். நான் ஒரு முஸ்லிம் ( சர்வ வல்லனாகிய  அல்லாஹ்விற்கு ஒப்புக்கொடுத்தவன்). . .

உங்கள் தளத்தில் நீங்கள் "மனித இனத்திற்கு இறைவனின் திட்டம் ஒரு தாரமணம் ஆகும் என்றும், இறைவனின் இந்த திட்டத்தை விட்டு நாம் விலகினால், நாம் துன்பத்துக்கு ஆளாகவேண்டிவரும் என்று எழுதியிருந்தீர்கள்".

நான் உங்களுக்கு இப்போது இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை விளக்குகிறேன். விபச்சாரம் மற்றும் சட்டவிரோதமான செக்ஸை இஸ்லாம் தடைசெய்கிறது. ஒரு ஆண் தனக்கு சட்டத்தின் படி திருமணமான பெண்களோடு மட்டுமே உடலுறவு வைத்துக்கொள்ளவேண்டும் என்று இஸ்லாம் வரையறுக்கிறது. திருமணத்திற்கு வெளியே உடலுறவு வைத்துக்கொள்வதை இஸ்லாம் தடைசெய்கிறது மற்றும் இது மிகப்பெரிய பாவமாக இஸ்லாம் கருதுகிறது. முஸ்லிம்களாகிய நாங்கள் இந்த தெய்வீக இஸ்லாமிய சட்டத்தை மிகவும் தீவிரமாக பின்பற்றுகிறோம். ஒரு உண்மையான முஸ்லிம் இஸ்லாம் தடை செய்தவற்றைச் செய்வதில்லை, அனுமதிக்கப்படாதவர்களோடு (சட்டவிரோதமான) உடலுறவு கொள்வதில்லை. இதன் விளைவாக, முஸ்லிம்களுக்கு எயிட்ஸ் போன்ற ஆபத்தான வியாதிகள் வருவதில்லை. ஒரு மனிதன் தவறான முறையில் உடலுறவு கொள்ளக்கூடாது என்பதற்காக, இஸ்லாம் அவனுக்கு திருமணத்தை சட்டமாக விதித்துள்ளது. இந்த தெய்வீக சட்டத்தை பின்பற்றும் முஸ்லிம்கள் எயிட்ஸ் போன்ற உயிர் வாங்கும் நோய்களிலிருந்து காக்கப்படுகிறார்கள்.

ஒரு தாரமணம் என்று சொல்லிக்கொண்டு, மக்கள் பல சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஒருதாரமணம் என்பது விபச்சாரத்தாலும், ஏமாற்றுத்தனத்தாலும், தரங்குறைவான வாழ்வாலும் நிரம்பியுள்ளது. உண்மை என்னவென்றால், ஒருதாரமணம் என்பது, மனிதனை பல பெண்களோடு உல்லாசமாக தவறான உடலுறவுகள் வைத்துக்கொள்ளவும், அவன் பொறுப்பற்றவனாகவும் இருக்க ஊக்குவிக்கிறது. ஒருதாரமணம் என்ற கோட்பாடானது, தீய ஆண்களை பாதுகாக்கும் ஒரு கவசமாக உள்ளது, ஆனால் கடைசியில் ஆண்களின் தீய ஆசைகளுக்கு உட்பட்டு பாதிக்கப்படுவது பெண்கள் தான்.

பலதாரமணம் என்பது ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த சமுதாயத்தில் அதிகமாக எதிர்க்கப்படுகின்ற ஒன்றாகும். ஏனென்றால், பல பெண்களை திருமணம் செய்துக்கொள்ளும் ஆண்களுக்கு பொறுப்புக்கள் அதிகரிக்கின்றன மற்றும் அவர்கள் தங்களின் பல மனைவிகளுக்கு நம்பிக்கையாளர்களாக இருக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அதாவது, பல மனைவிகளைக் கொண்ட ஆண்கள், அப்பெண்களுக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் பொறுப்பாளிகளாகவும், பாதுகாவலர்களாகவும் மாறுகிறார்கள், இதனால் அவர்களுக்கு பொறுப்புக்கள் அதிகரிக்கின்றன.

தற்போது நாம் காணும் மேற்கத்திய சமுதாயத்தைப் பாருங்கள். இந்த சமுதாயங்களில் மக்கள் அதிகமாக திருமணமில்லாத உடலுறவுகளில் ஈடுபடுகிறார்கள், இதனால், பல "தகப்பான் பெயர் தெரியாத பிள்ளைகள்" பிறக்கிறார்கள், இளம்வயதிலேயே தகாதவகையில் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளும் பெண்கள் உருவாகிறார்கள். கடைசியாக, இவைகள் அனைத்தும் நாட்டின் வளர்ச்சிக்கும் தடையாக மாறுகிறது.

உலக சரித்திரத்தில் இதுவரை இருந்த பலதாரமண சமுதாயங்களில், ஒரு சமுதாயமும் பலதாரமணம் என்றால் இத்தனை திருமணங்கள் தான் செய்யவேண்டும் என்று கட்டுப்பாடு விதித்ததில்லை. இவ்விதமான சமுதாயங்களில் ஒருவர் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்துக் கொள்ளலாம். ஆனால், இஸ்லாம் மட்டுமே ஒருவர் எத்தனை (4) பெண்களை திருமணம் செய்துக்கொள்ளலாம் என்ற  கட்டுப்பாட்டை விதித்து, மேலும் அப்பெண்களை பராமரிக்கும் பொறுப்பையும் ஆண்கள் மீது சுமத்தியுள்ளது.

குர்-ஆன் 4:3

4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.

குர்-ஆனின் இந்த வசனம், ஆண்கள் ஒன்றுக்கு மேலான பெண்களை திருமணம் செய்ய அனுமதி அளித்துள்ளது மற்றும் இவர்களிடையே நீங்கள் நியாயமாக நடந்துக்கொள்ள முடிந்தால் மட்டுமே பல திருமணங்களை செய்துக்கொள்ளுங்கள் என்று நிபந்தனையும் விதிக்கிறது.

நேரம் ஒதுக்கி, என்னுடைய மெயிலை படித்ததற்காக என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


எங்களுடைய பதில்:

ஹலோ சகோதரரே ______,

நீங்கள் ஒருதாரமணத்தை சரியாக புரிந்துக்கொண்டுள்ளீர்கள் என்று நான் நினைக்கவில்லை. ஒரு விஷயத்தை மட்டும் உங்களோடு சேர்ந்து நானும் ஒப்புக்கொள்கிறேன். அதாவது மேற்கத்திய கலாச்சாரம் இந்த ஒருதாரமணத்தை கறைபடுத்தியுள்ளது என்பது மட்டும் உண்மையே. "ஒருதாரமணம் என்பது விபச்சாரத்தால் நிரம்பியுள்ளது"  என்று நீங்கள் எழுதியுள்ளீர்கள், இங்கு சரியான புரிதல் என்னவென்றால்

" ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு வாழும் ஒருவன், திடீரென்று இன்னொரு பெண்ணோடு விபச்சாரம் செய்தால், அதை எப்படி ஒருதாரமணம் என்று அழைக்கமுடியும்? அதை பலதாரமணம் என்று தான் அழைக்கவேண்டும். மோனோகமி (monogamy) என்ற வார்த்தையில் "mono" என்றால் "ஒன்று என்று அர்த்தம், இதற்கு வேறு அர்த்தமில்லை".

ஆகையால், ஒருதாரமணம் கொண்டவன், பல பெண்களோடு உல்லாசமாக வாழுகின்றான் என்றுச் சொல்வது, முரண்பட்ட கூற்றாகும். ஒரு ஆண் இரண்டாவது பெண்ணை தொட்டபொழுது அவன் பலதாரமணம் புரிபவனாகின்றான், ஒரு தாரமணத்தை அவமதித்தவனாகின்றான். ஏதாவது ஒன்று தான் இருக்கமுடியும், ஒரு ஆண் ஒருதாரமணமுள்ளவனாக இருக்கவேண்டும், அல்லது பலதாரமணம் புரிந்தவனாக இருக்கவேண்டும், ஒரே நேரத்தில் ஒருதாரமணமுள்ளவனாகவும், பலதாரமுள்ளவனாகவும் இருக்கமுடியாது. ஒன்றைச் செய்யும் போது மற்றொன்றை அவன் இழக்கிறான்.

பலதாரமணம் பெண்களுக்கு எதிரானது:

உங்கள் நம்பிக்கைக்கு எதிராக உள்ள உண்மை என்னவென்றால், ஒருதாரமணம் தான் பெண்களை பாதுகாக்கிறது, பலதாரமணம் அல்ல. ஒருதாரமணம் புரிந்த குடும்பத்தில் வாழும் பெண், தன் கணவனின் அன்பிற்காக தன் சக்களத்தியோடு (இன்னொரு மனைவியோடு) போட்டியிட வேண்டிய அவசியம் இருக்காது. மேலும், தன்னுடைய பிள்ளைகளின் நலன், இன்னொரு மனைவிற்கு பிறந்த பிள்ளைகளினால் கெடும் என்ற பயம் அப்பெண்ணுக்கு இருக்காது. தன் புருஷன் தனக்கு மட்டும் தான் என்ற நம்பிக்கையும், அதே நேரத்தில் தன் பிள்ளைகளுக்கு தகப்பனின் அன்பு முழுவதுமாக கிடைக்கும் என்பதில் அவளுக்கு முழு திருப்தி இருக்கும். 

உதாரணத்திற்கு, ஆபிரகாம் மற்றும் யாக்கோபு என்பவர்களின் வாழ்க்கையை கவனித்துப் பாருங்கள். ஆபிரகாமின் வாழ்வில் இருந்த இரு பெண்களாகிய சாராள் மற்றும் ஆகாருக்கு இடையே இறுக்கம் வளர்ந்து, மனக்கசப்பாக வெடித்தது. அதே போல இஸ்மாயீல் மற்றும் ஈசாக்குக்கு இடையேயும் பிரச்சனையும் சண்டைகளும் போட்டிகளும் இருந்தன. (ஆதியாகமம் புத்தகத்தை படிக்கவும்). மேலும், யாக்கோபு என்பவருக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள், ஆனால் அவர் ஒருவரை விட இன்னொருவரை அதிகமாக நேசித்தார். இதனால் தான் மற்ற மனைவிகளுக்கு பிறந்த பிள்ளைகள் யோசேப்பு என்றவரை கொன்றுபோடுவதற்கு பல யுக்திகளை செய்தார்கள். ஒரு மனைவிக்கு பிறந்து, சகோதரன் நிலையில் இருக்கும் யோசேப்பை, மற்ற மனைவிகளுக்கு பிறந்தவர்கள் கொல்ல முயன்றனர். இந்த யோசேப்பு என்பவன் தன் தந்தைக்கு பிடித்தமான மகனாகவும் இருந்தான். இவர்கள் அனைவரும் சேர்ந்து யோசேப்பை ஒரு அடிமையாக விற்றுப்போட்டார்கள். ஆனால், தேவன் இடைப்பட்டு, இந்த கொடூரமான செயலை இஸ்ரவேல் மக்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக மாற்றிவிட்டார் என்பது வேறு விஷயம். ஆனால், இப்படி சகோதர்ரகள் ஒருவரை ஒருவர் கொன்றுவிடும் நிலைக்கு காரணம் யாக்கோபின் பலதாரமணம் என்றுச் சொன்னால் அது மிகையில்லை.

இப்போது மோசே மூலமாக இறைவன் என்ன சொல்லியுள்ளார் என்பதை கவனிப்போம். 

ஆதியாகமம் 2:24

24. இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இயேசுவும்  இதையே கூறினார் (பார்க்க மத்தேயு 19:5 மற்றும் மாற்கு 10:7,8). நீங்கள் இங்கு கூர்ந்து கவனிக்கவேண்டும், இறைவன் ஒரு ஆணையும் ஒரு பெண்ணை மட்டுமே படைத்தார். ஒருவனுக்கு ஒருத்தி என்பது தான் இறைவனின் திட்டமும் நோக்கமும் என்பது இதன் மூலம் விளங்கும். ஆனால், மனிதனுக்கு வேறு ஆசைகளும், திட்டங்களும் இருந்தன. எரேமியா தீர்க்கதரிசி மூலமாக இறைவன் இப்படி கூறினார்:

எரேமியா 17:9

9. எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?

இறைவனின் திட்டத்திற்கு எதிராக ஓடும்படி மனிதன் தன் இதயத்திற்கு இடம் கொடுத்துவிட்டு, வழிவிலகி சென்றுவிட்டான்.

உங்களுக்கு விருப்பமான அனைத்து சட்டங்களையும் நீங்கள் மனிதன் மீது சுமத்தினாலும், அம்மனிதனின் இதயத்தை இறைவனுக்கு ஏற்றபடி மாற்றம் அடையச் செய்ய உங்களால் முடியாது. தீர்க்கதரிசி எரேமியா மூலமாக இறைவன் என்ன சொல்லியுள்ளார் என்பதை கவனிக்கவும். 

எரேமியா 31:33

33. அந்நாட்களுக்குப் பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

மனிதனுக்கு வெளியில் இருந்துக்கொண்டு அவனது உள்ளத்தை உங்களால் மாற்றமுடியாது. இறைவனால் மட்டுமே மனிதனின் இதயத்தை மாற்றமுடியும், அதுவும் அவர் அவனது உள்ளத்தில் இருந்துக்கொண்டு அதைச் செய்வார். ஆபிரகாமை ஒருமுறை கவனித்துப் பார்க்கவும்: 

ஆதியாகமம் 15:6 - 

அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.

நாம் நீதிமான்கள் ஆக்கப்படவேண்டுமென்றால், இறைவனின் மீதும் அவரது நற்செய்தி மீதும்  நாம் நம்பிக்கை வைக்கவேண்டும். மனிதனின் சட்டங்களை நாம் பின்பற்ற முயன்றால் நாம் நல்லவர்கள் போல நடிக்க முடியும் அவ்வளவு தான், ஆனால் அது நம்மை தேவனுக்கு முனபாக நீதிமான்களாக ஆக்காது. "தேவனுக்கு முன்பாக மனுஷன் நீதிமானாயிருப்பதெப்படி?"  (யோபு 9:2).

உங்கள் கடிதத்திற்காக நன்றி

இப்படிக்கு, உங்கள் சகோதரன்

தரியோ

இதர தொடுப்புக்கள்: http://www.injil.org/TWOR & http://goodseed.com/theprophetsenglish.aspx

ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Emails/monogamy.htm 

கருத்துகள் இல்லை: