ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

பர்னபா சுவிசேஷம் – 9: குர்-ஆனோடு நேரடியாக மோதும் ஒரு மோசடி ஆவணம்


பர்னபா சுவிசேஷத்துக்கு கொடுத்த முந்தைய பதில்களை படிக்க இங்குசொடுக்கவும்.

பர்னபா சுவிசேஷம் முஸ்லிம்களுக்கு கிடைத்த அமுதசுரபி அல்லது அட்சயபாத்திரம். பர்னபா சுவிசேஷம் முஸ்லிம்களுக்கு கிடைத்த சுடரொளிப்பட்டயம். பர்னபா சுவிசேஷம் கிறிஸ்தவ கோட்பாடுகளிலிருந்து இஸ்லாமை காக்கும் அணுகுண்டு, இப்படியெல்லாம் முஸ்லிம் அறிஞர்கள் நினைத்துக்கொண்டு, அதனை தலையில் வைத்து கொண்டாடுகிறார்கள். பர்னபா சுவிசேஷத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடுவதற்கு முன்பு முஸ்லிம்கள் ஒரு முறை அதனை படித்திருக்கவேண்டாமா? கிரிக்கெட் பந்தோடு விளையாட விரும்பலாம், அணுகுண்டோடு விளையாட விரும்பலாமா? ஆம், முஸ்லிம்கள் அப்படித்தான் விரும்பியுள்ளார்கள்.

தமிழ் நாட்டில் புகழ்பெற்ற ஒரு இஸ்லாமிய குழு கீழ்கண்ட விதமாக பர்னபா சுவிசேஷம் பற்றி எழுதியுள்ளது, அதுவும் குர்‍ஆன் தமிழாக்கத்தில் எழுதியுள்ளது.

இயேசுவின் வரலாற்றை எழுதிய மத்தேயு, மார்க், லூக்கா, யோவான் ஆகிய நால்வரும் இயேசுவின் நேரடிச் சீடர்கள் அல்லர். அவர்கள் கேள்விப்பட்டதைத்தான் எழுதினார்கள்.

இயேசுவின் நேரடிச் சீடராக பர்னபா என்பவர் திகழ்ந்தார். அவர் இயேசு பிடிபடும்போது உடன் இருந்தவர். அவர் எழுதிய சுவிசேஷம் இஸ்லாம் கூறுவது போலவே இந்த நிகழ்வைச் சொல்கிறது. இதன் காரணமாக கிறித்தவ மதகுருமார்கள் பர்னபா சுவிசேஷத்தை நீக்கி விட்டனர். (பி ஜைனுல் ஆபிதீன், குர்-ஆன் தமிழாக்கம் விளக்க எண்: 456)

பர்னபா என்ற கிறிஸ்தவ பெயரில் ஒரு முஸ்லிம் எழுதிய அந்த மோசடி புத்தகம் எப்படி குர்‍ஆனை கடித்துக்குதறுகிறது என்பதை முஸ்லிம்கள் அறியவில்லை. பர்னபா சுவிசேஷம் பற்றி மேற்கண்டவிதமாக வக்காளத்து வாங்க்குவதற்கு முன்பு, ஒரே ஒரு முறை அதனை அவர்கள் படித்திருந்தால், இந்த பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு இருந்திருக்கமாட்டார்கள்.

முந்தைய கட்டுரைகளில், பர்னபா சுவிசேஷம் என்ற மோசடி புத்தகத்தில் உள்ள பொதுவான பிழைகளைப் பற்றி பார்த்தோம். இந்த கட்டுரையில், நேரடியாக பர்னபா சுவிசேஷம் எப்படி இஸ்லாமை தகர்க்கிறது என்பதை சுருக்கமாக காண்போம். 

1) உலக படைப்பிற்கு முன்பு படைக்கப்பட்ட முஹம்மது

அல்லாஹ்விற்கும் ஆதாமுக்கும் இடையே ஒரு உரையாடல் நடந்ததாக பர்னபா சுவிசேஷத்தின் 39வது அத்தியாயம் குறிப்பிடுகின்றது. ஆங்கிலம் தெரிந்தவர்கள், கீழ்கண்ட மேற்கோளை படித்துக்கொள்ளவும், அதன் பிறகு நான் தமிழில் ஒரு சுருக்கத்தைத் தருகிறேன்.

The horses aroused themselves and impetuously set themselves to run over that piece of earth which lay among lilies and roses;. Whereupon God gave spirit to that unclean portion of earth upon which lay the spittle of Satan, which Gabriel had taken up from the mass; and raised up the dog, who, barking, filled the horses with fear, and they fled. Then God gave his soul to man, while all the holy angels sang: "Blessed be your holy name, O God our Lord." "Adam, having sprung upon his feet, saw in the air a writing that shone like the sun;, which said: "There is only one God, and Muhammad is the Messenger of God."

Whereupon Adam opened his mouth and said: "I thank you, O Lord my God, that you have deigned to create me; but tell me. I pray you, what means the message of these words: "Muhammad is Messenger of God. Have there been other men before me?" 'Then said God: "Be you welcome, O my servant Adam. I tell you that you are the first man whom I have created. And he whom you have seen [mentioned] is your son, who shall come into the world many years hence, and shall be my Messenger, for whom I have created all things; who shall give light to the world when he shall come; whose soul was set in a celestial splendour ;sixty thousand years before I made any thing."

Adam besought God, saying: "Lord, grant me this writing upon the nails of the fingers of my hands." Then God gave to the first man upon his thumbs that writing; upon the thumb-nail of the right hand it said: "There is only one God;," and upon the thumb-nail of the left it said: "Muhammad is Messenger ;of God." Then with fatherly affection the first man kissed those words, and rubbed his eyes, and said: "Blessed be that day when you shall come to the world." (Gospel of Barnabas, Chapter 39)

சுருக்கம்:

1) அல்லாஹ் உலகை படைத்தாராம், அதன் பிறகு ஆதாமை படித்தாராம்.

2) ஆதாம் படைக்கப்பட்டவுடன், மேகத்தில் "அல்லாஹ்வைத் தவிர வேறு தெய்வமில்லை, முஹம்மது அல்லாஹ்வின் இறைத்தூதர் ஆவார்" என்று எழுதியிருப்பதை படித்துப் பார்த்தாராம் (படைக்கப்பட்டபோதே படிக்கும் திறமை உள்ளவராக ஆதாமை அல்லாஹ் படைத்திருக்கிறார் போல, இதுமட்டுமல்ல, ஒரு மொழி கூட அப்போது இருந்திருக்கிறது).

3) உடனே ஆதாம் அல்லாஹ்விடம் 'என்னை படைத்ததற்காக நன்றி, ஆனால், எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்று எழுதியிருக்கிறதே, எனக்கு முன்பாக நீ யாரையாவது படைத்தாயா?' என்று கேள்வி கேட்டாராம்.

4) அதற்கு அல்லாஹ், ஆதாமே, முஹம்மது என்பவர் உனக்கு பின்பாக உன் சந்ததியாக பிறக்கப்போகிறவர். அவருக்காகத் தான் நான் உலகில் அனைத்தையும் படைத்தேன். அவர் உலகத்துக்கு ஒளியைக் கொடுப்பார். நான் உலகை படைப்பதற்கு அறுபது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புலிருந்து அவரது ஆத்மா ஒளியாக மின்னிக்கொண்டு இருக்கிறது என்று பதில் சொன்னாராம்.

5) இதனை கேட்ட ஆதாம் ஆச்சரியப்பட்டு அல்லாஹ்விடம், 'என்னுடைய விரல்களில் நான் வாசித்த வாசகத்தை எழுதித்தாருங்கள்' என்று கேட்டாராம்.

6) அல்லாஹ் ஆதாமின் வலது கட்டைவிரல் நகத்தில் 'அல்லாஹ் ஒருவனே இறைவன்' என்றும், ஆதாமின் இடது கை கட்டைவிரல் நகத்தில், 'முஹம்மது அல்லாஹ்வின் இறைத்தூதர்' என்றும் எழுதினானாம்.

7) ஆதாம், அன்பும் மரியாதையும் பொங்க, எழுதப்பட்ட தன் கரங்களுக்கு முத்தம் கொடுத்து, அவ்வெழுத்துக்களை கண்களுக்கு தடவிக்கொண்டாராம். முஹம்மது பிறக்கப்போகும் நாள் பாக்கியமுள்ளதாக இருக்கட்டும் என்றுச் சொன்னாராம்.

முஸ்லிம்களிடம் கேட்கவேண்டிய கேள்விகள்:

1. உலக படைப்பிற்கு முன்பே, 60000 ஆண்டுகளாக முஹம்மது ஒளியாக இருந்தார் என்ற மேற்கண்ட விவரத்தை நீங்கள் ஏற்கிறீர்களா?

2. கு‍ர்‍ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் இதனை ஏற்குமா?

3. உங்களுடைய அறிஞர்கள், பர்னபா சுவிசேஷத்தை படிக்காமல் அரைகுறை ஞானத்தோடு அதனை கண்மூடித்தனமாக ஆதரிப்பதும், எழுதி வருவதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய செயலா?

4. ஆதாமின் விரல் நகங்களில் அல்லாஹ் எழுதியதாகச் சொல்வது  உண்மையா?

5. எந்த மொழியில் எழுதியிருந்ததை ஆதாம் படித்தார்? அவர் படைக்கப்பட்டவுடன் சுயமாக படிப்பவராக இருந்தாரா?

2) சொர்க்கத்தின் வாசலில் எழுதப்பட்டு இருந்த ஷஹதா 

அதே புத்தகத்திலிருந்து அடுத்த உதாரணத்தைப் பார்ப்போம், அத்தியாயம் 41ல், கீழ்கண்டவாறு எழுதப்பட்டுள்ளது:

God hid himself [from Adam and Eve], and the angel Michael drove them forth from paradise. Then, Adam, turning around, saw written above the gate, There is only one God, and Muhammad is Messenger of God. Weeping, he said: 'May it be pleasing to God, O my son, that you come quickly and draw us out of misery.' And thus," said Jesus, "Satan and Adam sinned through pride, the one by despising man, the other by wishing to make himself equal with God." (Gospel of Barnabas, Chapter 41)

சுருக்கம்:

1) ஆதாம் மற்றும் ஏவாளிடமிருந்து அல்லாஹ் தன்னை மறைத்துக்கொண்டானாம், மிகாவேல் தூதன் அவர்களை சொர்க்கத்திலிருந்து வெளியே இழுத்துக்கொண்டு வந்தாராம். ஆதாம் திரும்பி பார்த்த போது, பரலோகின் வாசலில் "அல்லாஹ்வைத் தவிர வேறு தெய்வமில்லை, முஹம்மது அல்லாஹ்வின் இறைத்தூதர் ஆவார்" என்று எழுதப்பட்டு இருந்ததாம்.

2) ஆதாம் அழுதுக்கொண்டே 'அல்லாஹ்விற்கு சித்தமானால், மகனே! (முஹம்மது) நீ சீக்கிரமாக வந்து, எங்களுக்கு நேரிட்ட இந்த துன்பத்திலிருந்து விடுதலை அளிப்பாயாக' என்றுச் சொன்னாராம்.

முஸ்லிம்களிடம் கேட்கவேண்டிய கேள்விகள்:

1. மேற்கண்ட கதைகளை முஸ்லிம்கள் நம்புவார்களா?

2. குர்‍ஆனின் படி அல்லாஹ் ஆதாமை மன்னித்தால், பிறகு ஏன்  தன் முகத்தை அல்லாஹ் திருப்பிக்கொண்டான்? குர்-ஆன் 2:37 சொல்வது பொய்யா?

குர்-ஆன் 2:37. பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்;) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான்.

3. ஏதோ பெரிய பாவம் செய்துவிட்டது போலவும், அல்லாஹ்விடம் மன்னிப்பை பெறாதவர் போலவும் ஏன் ஆதாம் நடந்துக் கொள்ளவேண்டும்?

4. பர்னபாவின் இவ்விவரங்கள் குர்‍ஆனோடு நேரடியாக மோதுவதாக தெரிகின்றதே! இதற்கு முஸ்லிம்களின் பதில் என்ன?

3) முஹம்மதுவின் முகம் 100 சூரியனின் ஒளியை கொண்டு இருக்கும்

அதே முஸ்லிம்களின் பர்னபா சுவிசேஷத்திலிருந்து இன்னொரு விவரத்தையும் பார்ப்போம்.

அத்தியாயம் 54 கிழ்கண்டவாறு கூறுகிறது.

When these signs be passed, there shall be darkness over the world forty years, God alone being alive, to whom be honour and glory forever. When the forty years have passed, God shall give life to his Messenger, who shall rise again like the sun, but resplendent as a thousand suns. He shall sit, and shall not speak, for he shall be as it were beside himself. God shall raise again the four angels favoured of God, who shall seek the Messenger of God, and, having found him, shall station themselves on the four sides of the place to keep watch upon him. Next shall God give life to all the angels, who shall come like bees circling round the Messenger of God. Next shall God give life to all his prophets, who, following Adam, shall go every one to kiss the hand of the Messenger of God, committing themselves to his protection. Next shall God give life to all the elect, who shall cry out: "O Muhammad be mindful of us!" At whose cries pity shall awake in the Messenger of God, and he shall consider what he ought to do, fearing for their salvation. (Gospel of Barnabas, Chapter 54).

சுருக்கம்:

1) கியாமத் நாளில், 40 ஆண்டுகள் அல்லாஹ் எல்லோரையும் மரிக்கச்செய்வான்.

2) அடுத்தபடியாக, முதலாவது முஹம்மதுவை உயிர்ப்பிப்பான். 100 சூரியனைப்போல நபி ஒளியாக இருப்பார். 

3)அடுத்ததாக, அல்லாஹ் நான்கு தேவதூதர்களை உயிர்ப்பிப்பான். அவர்கள் உடனே நபியை தேடி கண்டுபிடித்து, அவருக்கு நான்கு பக்கங்களிலும் பாதுகாப்பாக இருப்பார்கள் (கியாமத் நாளில் நபிக்கு எதுக்கப்பா பாதுகாப்பு?).

4) பிறகு அல்லாஹ் எல்லா தேவதூதர்களை எழுப்புவார். அவர்கள் தேனீக்களைப்போல நபியை சுற்றி சுற்றி வந்துக்கொண்டு இருப்பார்கள். 

5) பிறகு அல்லாஹ் ஆதாம் தொடங்கி எல்லா நபிகளை உயிர்ப்பிப்பார். அவர்கள் அனைவரும் முஹம்மதுவிடம் வந்து அவரது கையை முத்தமிட்டு, அவர்களை காக்கும் படி (பாதுகாப்பிற்காக) முஹம்மதுவிடம் வேண்டிக்கொள்வார்கள்.

6) கடைசியாக, அல்லாஹ் தெரிந்து கொள்ளப்பட்டர்களை எழுப்புவான். அவர்கள் எழுந்து "ஓ முஹம்மதுவே, எங்களுக்கு என்ன செய்யவேண்டுமோ, அதனைச் செய்யும் என்று கூக்குரல் இடுவார்கள்". 

7) முஹம்மது அப்போது எழுந்திருந்து, அவர்களின் இரட்சிப்பிற்காக என்ன செய்யவேண்டுமோ அதனைச் செய்வார்.

மேற்கண்ட விவரங்களை குர்‍ஆன் அங்கீகரிக்குமா? முஸ்லிம்கள் இதனை நம்புவார்களா? மத்ஹபுக்கள் குர்‍ஆனோடு மோதுகின்றது என்றுச் சொல்லி அவைகளை புறக்கணிக்கும் முஸ்லிம்கள், முஸ்லிம்(கள்) எழுதிய போலி பர்னபா சுவிசேஷத்தையும் புறக்கணிப்பார்களா?

இன்னும் அனேக இப்படிப்பட்ட விவரங்களை மேற்கோள் காட்டிக்கொண்டுச் செல்லலாம். 

குர்‍ஆனோடு மோதும் இன்னும் சில விவரங்களை ஓரிரு வரிகளில் இங்கு தருகிறேன். இதன் மூலம், பர்னபா சுவிசேஷம் மோசடி நூல் எந்தெந்த வகையில் குர்‍ஆனோடு மோதுகின்றது என்பதை முஸ்லிம்கள் புரிந்துக்கொள்ளமுடியும்.

1) மரியாளின் கணவர் யோசேப்பு (அத்தியாயம் 2): 

மரியாள் யோசெப்பை கணவராக தெரிந்தெடுத்தார் என்று பர்னபா சொல்கிறது, ஆனால் குர்-ஆன் சொல்வதில்லை. மேலும் குர்-ஆனின் படி, குழந்தையை பெற்றெடுக்கும் போதும், யோசேப்பு அவரோடு இல்லை. குர்‍ஆனின் படி மரியாள் கணவரில்லாமல் பிள்ளையை பெற்றெடுத்ததால் தான் யூதர்கள் அவரை தூஷிக்கிறார்கள்.

2) மரியாளுக்கு வலியில்லாமல் பிரசவம் (அத்தியாயம் 3):

பர்னபாவின் படி, மரியாளுக்கு வலியில்லாமல் பிரசவம் ஆனது,  குழந்தை இயேசுவை முன்னனையில் கிடத்தினார் மரியாள்.  பிறந்த குழந்தையை அல்லவா அப்படியே மரியாள் யூதர்களிடம் கொண்டு வந்தார்கள் என்று குர்-ஆன் சொல்கிறது?  மேலும் அதிகமான வலியுடன் தான் பிள்ளையை பெற்றெடுத்தார் என்று குர்‍ஆன் சொல்கிறது. சத்திரத்தின் மாட்டுத்தொழுவத்தில் தான் இயேசு பிறந்தார் என்று பர்னபாஸ் சொல்கிறார், ஆனால் அல்லாஹ்வோ, பேரிச்ச மரத்தின் கீழ் பெற்றெடுத்ததாகச் சொல்கிறார். யார் சொல்வது உண்மை? பர்னபா சுவிசேஷமா? அல்லது குர்-ஆனா?

3) இயேசுவின் பிறப்பும் தேவதூதர்களின் துதி பாடலும் (அத்தியாயம் 3):

இயேசு பிறந்த போது தேவதூதர்கள் தோன்றி இறைவனை துதித்தார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. குர்-ஆனில் இப்படி தேவ தூதர்கள் மேய்ப்பர்களுக்கு காணப்பட்டு பேசினார்கள் என்றோ, இறைவனை துதித்தார்கள் என்றோ சொல்லப்பட்டுள்ளதா? இதனை முஸ்லிம்கள் ஏற்பார்களா? 

4) இயேசுவின் திராட்சை ரச அற்புதம் (அத்தியாயம் 15):

இயேசு தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினார் என்று பர்னபா சுவிசேஷம் சொல்கிறது. முஸ்லிம்கள் இதனை அங்கீகரிப்பார்களா?

5) அல்லாஹ் நபிமார்களுக்கு பிதா ஆவார் (அத்தியாயம் 17):

முந்தைய நபிகள், அல்லாஹ்வை பிதா என்று அழைத்துள்ளார்களே என்று சீடர்கள் இயேசுவிடம் கேட்கும் போது, ஆம், நபிமார்கள் அப்படி உவமைகளாகச் சொல்லியுள்ளார்கள். ஆனால், நாம் அதன் உண்மை பொருளைப் பார்க்கவேண்டும் மேலும் எனக்கு பிறகு வரும் நபி, நமக்கு அனைத்தையும் விளக்குவார் என்று இயேசு சொன்னதாக சொல்லப்பட்டுள்ளது. நபிமார்கள் அல்லாஹ்வை பிதா என்று அழைத்ததை இயேசு அங்கீகரித்துள்ளார், இதனை முஸ்லிம்கள் ஏற்பார்களா? ஏனென்றால், பர்னபா சுவிசேஷத்தை ஏற்கும் முஸ்லிம்கள் இதனையும் ஏற்கவேண்டுமே?

6) ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டு (அத்தியாயம் 18):

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டச்சொல்கிறார் பர்னபாசின் இயேசு. முஸ்லிம்கள் இதனை கடைபிடிப்பார்களா? இதன்படி, முஹம்மது மக்காவினருக்கு செய்த அனைத்தும் தவறானவை என்று சொல்வார்களா? பர்னபா சுவிசேஷத்தின் இயேசுவை ஏற்றுக்கொண்டு, அல்லாஹ்வின் முஹம்மதுவை புறக்கணிப்பார்களா? இதன் படி மக்காவினருக்காக முஹம்மது ஜெபித்து இருந்திருக்கவேண்டும், அவர்களோடு சண்டை போட்டு இருந்திருக்கக்கூடாது. இயேசுவின் உண்மையான  சீடன் பர்னபாவின் படி, முஹம்மது இயேசுவின் கட்டளைகளை பின் பற்றவில்லை என்ற குற்றச்சாட்டை முஹம்மது மீது சுமத்த முஸ்லிம்கள் தயாரா? முக்கியமாக குர்-ஆன் விளக்க குறிப்பு 456ஐ எழுதிய பீஜே அவர்களும், TNTJ பிரிவினர் அனைவரும் முஹம்மதுவை புறக்கணிப்பார்களா?

7) கியாமத் நாளில் இயேசுவின் பக்கத்தில் அவரது சீடர்கள் உட்கார்ந்து இருப்பார்கள் (அத்தியாயம் 19):

கியாமத் நாளில் இயேசு எங்கே உட்கார்ந்து இருப்பார்? அவர் நபி மட்டுமே என்றால், மற்றவர்களைப்போல அல்லாஹ்விற்கு முன்பாக பயந்து நிற்கவேண்டுமல்லவா? மேலும் இயேசுவின் சீடர்கள் எப்படி இயேசுவின் பக்கத்தில் உட்கார்ந்து இருப்பார்கள்? மற்ற நபிகளைப்போல சீடர்களும் சாதாரண மக்களானால், அல்லாஹ்விற்கு முன்பாக நிற்கவேண்டுமே ஒழிய அல்லாஹ்விற்கு முன்பாக, இயேசுவின் அருகில்  உட்காரமாட்டார்கள் அல்லவா? பர்னபாவின் சுவிசேஷம் உண்மை என நம்பும் முஸ்லிம்கள், இயேசு தான் கியாமத் நாளின் நீதிபதி(மாலிகி யவ்மித்தீன்) என்று ஏற்றுக்கொள்வார்களா? 

8) விருத்தசேதனம்(சுன்னத்) என்பதை ஆதாம் தான் முதலில் உருவாக்கினார் (அத்தியாயம் 23):

அல்லாஹ் தடுத்த பழத்தை தின்ற பிறகு, ஆதாமின் உடல் அவர் சொன்ன பேச்சு கேட்கவில்லையாம், எனவே, உன்னை தகர்த்து எறிவேன் என்று அல்லாஹ்வின் பெயரில் சத்தியம் செய்து, ஒரு கூர்மையான கல்லைக்கொண்டு, தன் உடல் சதையை வெட்டினாராம். ஆதாம் சத்தியம் செய்து இப்படி செய்ததால், அவருடைய சந்ததியினர் கூட இப்படி செய்தனராம். இப்ராஹீமின் காலத்தில் அல்லாஹ் அதனை மறுபடியும் செய்யும் படி (சுன்னத்) கட்டளையிட்டாராம். இந்த கதையை குர்‍ஆனோ, ஆதாரபூர்வமான ஹதீஸ்களோ சொல்கின்றனவா? பர்னபா சுவிசேஷத்தை ஏற்கும் முஸ்லிம்கள் இக்கதையை ஏற்பார்களா?

9) அல்லாஹ் உலக படைப்பிற்கு கொடுத்த கொடைகளைவிட, முஹம்மதுவிற்கு 3 மடங்கு அதிகமாக கொடுத்துள்ளானாம்(அத்தியாயம் 44):

உலகத்தின் எல்லா படைப்பிற்கும் கொடுத்திருக்கும் கொடைகளைவிட, முஹம்மதுவிற்கு 3 மடங்கு அதிகமாக இறைவன் கொடைகளை கொடுத்துள்ளானாம். முஹம்மதுவின் கால் செருப்பின் வாரை அவிழ்கிறதற்கு இயேசுவிற்கு தகுதி இல்லை என்று இயேசு சொன்னாராம். இதனை முஸ்லிம்கள் அங்கீகரிப்பார்களா? நபிகளிடையே வேறு பாடு காட்டக்கூடாது என்றுச் சொல்லும் குர்-ஆன், செருப்பின் வாரை அவிழ்ப்பது பற்றி சொல்லப்பட்டுள்ளதை முஸ்லிம்கள்  ஏற்பார்களா? முஹம்மது அல்லாஹ்வின் அடிமை என்று குர்ஆன் சொல்லும் போது, அவருக்கு 3 மடங்குஅதிக கொடைகளை கொடுக்கும் அளவிற்கு முஹம்மது அப்படி என்ன செய்துவிட்டார்?

10) ஆதாமின் பாவத்தினால், அவரது சந்ததிகள் அனைவரும் பாவிகளானார்கள் (அத்தியாயம் 50):

ஆதிப்பிதா ஆதாம் செய்த பாவத்தால், அவரது அனைத்து வம்சங்களும் தண்டிக்கப்பட்டார்கள். என்று இயேசு சொல்கிறார். முஸ்லிம்கள் என்ன சொல்லப்போகிறார்கள்? பர்னபா சுவிசேஷம் பொய் என்பார்களா? அல்லது குர்-ஆனை மறுப்பார்களா?

11) கியாமத் நாளில் முஸ்லிம்களின் நெத்தியில் முஹம்மதுவின் அடையாளம் இருக்கும் (அத்தியாயம் 56)

12) பழிக்கு பழி வாங்குபவர்களுக்கு ஐயோ… அவர்கள் பழி வாங்கப்படுவார்கள்…என்று இயேசு கூறினார் (அத்தியாயம் 63): 

பழிக்கு பழி வாங்குபவர்களுக்கு ஐயோ… அவர்கள் பழி வாங்கப்படுவார்கள்…என்று இயேசு கூறினார். ஆனால், குர்-ஆனின் படி, மக்காவினர் பழிவாங்கப்பட்டனர். பர்னபா சுவிசேஷத்தில் பழிவாங்க நினைப்பவரக்ள் முட்டாள்கள் என்றார் இயேசு. முஸ்லிம்கள் என்ன செய்யப்போகிறார்கள்? பர்னபா சுவிசேஷத்தின் படி, குர்-ஆனை புறக்கணிப்பார்களா? முஹம்மது போட்ட பழிவாங்கும் சண்டைகள் அனைத்தும் அல்லாஹ்விற்கு எதிரானது என்று சொல்லமுடியுமா?  ஆபிரகாம் முதற்கொண்டு எந்த ஒரு நபியும் பழிவாங்கவில்லை என்று இயேசு கூறுகின்றார். இதன் படி பார்த்தால், பழிக்கு பழி வாங்குவது அல்லாஹ்வின் படி பாவமாகும். முஹம்மதுவிற்கு முன்பு வாழ்ந்த அனைத்து நபிகளும் பழி வாங்காத போது முஹம்ம்து மட்டும் ஏன் மக்காவினரையும், இதர மக்களையும் பழி வாங்கினார்? இதிலிருந்து அறிவது என்ன? முஹம்மதுவை அனுப்பிய இறைவன் வேறு, இதர நபிகள் அனைவரையும் அனுப்பிய இறைவன் வேறு. முஸ்லிம்கள் பர்னபா சுவிசேஷத்தின் அடிப்படையில் குர்-ஆனையும், முஹம்மதுவையும், இஸ்லாமையும் புறக்கணிக்கவேண்டும்? செய்வார்களா?

13) ஒரு நாள் குழந்தை கூட பாவி தான் (அத்தியாயம் 66):

ஒரு நாள் குழந்தை கூட பாவி தான். பிறந்த குழந்தை பாவமில்லாமல் இல்லை என்று இயேசு கூறியதாக பர்னபா சொல்லியுள்ளார். இது இஸ்லாமுக்கு எதிராக இல்லையா? பிறக்கும் அனைவரும் நல்லவர்களாக பிறக்கிறார்கள், ஆனால், அவர்கள் வளரும் போது தீயவர்களாக மாறுகிறார்கள் என்றுச் சொல்லும் இஸ்லாமுக்கு எதிராக அல்லவா இயேசு கூறியுள்ளார்? பர்னபா சுவிசேஷமா? குர்-ஆனா? எதனை ஏற்கப்போகிறார்கள் முஸ்லிம்கள்?

14) சாலொமோன் பாவம் செய்தார் (அத்தியாயம் 74):

சாலொமோன் பாவம் செய்தார் என்று அத்தியாயம் 74 சொல்கிறது. நபிகள் பாவம் செய்யமாட்டார்கள் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். ஆனால், அவர்கள் நம்பும் பர்னபா சுவிசேஷம் சொல்கிறது - சாலொமோன் பாவம் செய்தார் என்று. பர்னபா சுவிசேஷமா அல்லது குர்-ஆனா? எதனை முஸ்லிம்கள் நம்புவார்கள்?

15) ஷைத்தானை யாரும் வெறுக்கக்கூடாது, ஏனென்றால், அவன் அல்லாஹ்வின் படைப்பாவான் (அத்தியாயம் 85):

ஷைத்தானை யாரும் வெறுக்கக்கூடாது, ஏனென்றால், அவன் அல்லாஹ்வின் படைப்பாவான். அவன் அல்லாஹ்வின் எதிரி என்றுச் சொல்லவேண்டுமே ஒழிய அவனை வெறுக்கக்கூடாது. ஒருவன் படைப்பை வெறுத்தால் அவன் படைத்தவனையும் வெறுக்கிறான் என்று அர்த்தம். இது தான் பர்னபா சுவிசேஷம் சொல்லும் விவரம், முஸ்லிம்கள் இதனை ஏற்பார்களா?

16) சொர்க்கம் முஹம்மதுவிற்காக படைக்கப்பட்டுள்ளது (அத்தியாயம் 97):

சொர்க்கம் முஹம்மதுவிற்காக படைக்கப்பட்டுள்ளது. சொர்க்கம் படைக்கப்பட்டதற்கு முன்பே முஹம்மது படைக்கப்பட்டார். முஸ்லிம்கள் இதனை ஏற்பார்களா?

17) அல்லாஹ் இஸ்ரேலை ஒரு காதலனைப்போல நேசித்தார் (அத்தியாயம் 99):

அல்லாஹ் இஸ்ரேலை ஒரு காதலனைப்போல நேசித்தார். ஒரு வாலிபன் ஒரு பெண்ணை காதலித்தால், அவளுக்காக எவ்வளவு வைராக்கியமாக இருப்பானோ அது போல அல்லாஹ் இஸ்ரேலை நேசித்தார். வேறு ஒரு நபரை அப்பெண் நேசித்தால், இவனால் சகித்துக்கொள்ளமுடியுமா? அவன் எதிரியை கொள்வான் அல்லவா? அதுபோல அல்லாஹ் இஸ்ரேலை நேசிக்கிறான். இஸ்லாமின் படி எஜமான் அடிமை என்பது தானே அல்லாஹ்விற்கும் மற்றவர்களுக்கும் இடையே இருக்கும் உறவு முறை? இது என்ன புதுவிதமாக அல்லாஹ்வின் இலக்கணத்திற்கு எதிராக பர்னபா சுவிசேஷத்தில் இயேசு சொல்லியுள்ளார்?

குர்ஆனோடும் இஸ்லாமோடும் மோதும் இன்னும் அனேக விவரங்கள் பர்னபா சுவிசேஷத்தில் உள்ளது. முஸ்லிம்கள் மேற்கொண்டு ஆய்வு செய்வதற்கு  இதுவரை கொடுத்த உதாரணங்களே போதுமானது.

முடிவுரை:

பர்னபா சுவிசேஷம் ஒரு மோசடி ஆவணம் என்பதை முந்தைய கட்டுரைகளில் விளக்கினேன். இக்கட்டுரையில், முஸ்லிம்களின் வேதமாகிய குர்-ஆனையும் பர்னபா சுவிசேஷம் ஒரு கை பார்த்துள்ளது என்பதை விளக்கினேன். அரைகுறை ஆய்வு செய்யும் முஸ்லிம் அறிஞர்களால் பர்னபா சுவிசேஷம் சிகரத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் கவனிக்க தவறிய விவரம் என்னவென்றால், அதனை சிகரத்தில் வைக்கும் வேளையில் குர்-ஆன் அவர்களால் கீழே தள்ளப்பட்டுள்ளது என்பதாகும். குர்-ஆனின் அடிப்படை கோட்பாடுகளோடு பர்னபா சுவிசேஷம் நேரடியாக மோதுகிறது. 

இதனை மறுக்க விரும்பும் முஸ்லிம்களுக்கு ஒரு அறிய வாய்ப்பை அடுத்த கட்டுரையில் அறிவிக்கவுள்ளேன். 

பர்னபா சுவிசேஷம் பற்றி நம் சகோதரர் கீழ்கண்ட வீடியோவில் விளக்கியுள்ளார்.

https://www.youtube.com/watch?v=ff5TtwlXHzU - குர்ஆன் வசனங்களை பொய்யாக்கிய பர்னபா சுவிசேஷம்


பர்னபா சுவிசேஷம் - பொருளடக்கம்

உமரின் இதர கட்டுரைகள்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/rebuttal_gob/rebuttal_gob_part9.html

கருத்துகள் இல்லை: