ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

செவ்வாய், 2 ஜூலை, 2019

ம(னி)த நல்லிணக்கம்: கிறிஸ்தவ தேவாலயத்தில் மாற்று மத மக்கள் தங்கள் இறைவனை தொழுதுக்கொள்ள அனுமதிக்கலாமா?

மதநல்லிணக்கத்தை உண்டாக்குவதற்கு, மேலை நாடுகளில் சில கிறிஸ்தவ போதகர்கள் தங்கள் திருச்சபையை மாற்று மத அன்பர்கள் தங்கள் இறைவனை தொழுது கொள்ள அனுமதிக்கிறார்கள். முக்கியமாக, முஸ்லிம்கள் அல்லாஹ்வைத் தொழுது கொள்வதற்கு தங்கள் திருச்சபையை சில மணி நேரங்கள் விட்டுக் கொடுக்கிறார்கள். இது சரியான செயலா? அல்லது பரிசுத்த வேதாகமத்தின் படி இது அனுமதிக்கப்படாத செயலா?

இதைப்பற்றி இந்த கட்டுரையில் சுருக்கமாக "கேள்வி பதில்" வடிவில் காண்போம்.

கேள்வி 1: 

உன் அயலானை நேசி என்று இயேசு கட்டளையிட்டுள்ளார். மத நல்லிணக்கத்திற்காக, என் சபையை முஸ்லிம்கள் தங்கள் இறைவனை தொழுது கொள்ள நான் ஏன் அனுமதிக்கக் கூடாது?

பதில் 1: 

இது மத நல்லிணக்கமில்லை, இது அறியாமை ஆகும்.  இயேசு மத நல்லிணக்கத்தை பேணும் படி சொல்லவில்லை, அவர் மனித நல்லிணக்கத்தை பேணும்படி கட்டளையிட்டார். நம் அயலானை நாம் நேசிப்பதற்கும், அந்த அயலான் வணங்கும் தெய்வத்தை அவன் தொழுதுக்கொள்ள நம் திருச்சபையில் இடமளிப்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

கிறிஸ்த சபையில் மாற்றுமத அன்பர்கள் தங்கள் வணக்க வழிபாடு செய்ய அனுமதிப்பது மிகவும் ஆபத்தான செயலாகும். இயேசு தன் சுய இரத்தம் சிந்தி சம்பாதித்த திருச்சபையில், அந்நிய தெய்வங்களை வணங்க இடம் தருவது, இயேசுவை அவமானப்படுத்துவதற்கு சமம், மற்றும் இயேசுவிற்கு நாம் செய்யும் நம்பிக்கை துரோகமாகும்.

கேள்வி 2:

உன்னைப்போல உன் அயலானை நேசி என்று இயேசு கூறினாரே, இதன் அர்த்தமென்ன? நாம் மாற்றுமத நண்பர்களை அதாவது முஸ்லிம்களை, இந்துக்களை நேசிக்கக்கூடாதா?

பதில் 2: 

உன் அயலானை நேசி என்று இயேசு சொன்னது, உன் அயலகத்தாராகிய முஸ்லிம்கள், இந்துக்கள் பசியாக இருந்தால் அவர்களுக்கு உணவு கொடுங்கள். அவர்கள் வியாதியாக இருந்தால், அவர்களை சந்தித்து ஆறுதல் சொல்லி, உதவி புரியுங்கள். அவர்களுக்கு உடை தேவையென்றால் அதனை கொடுத்து உதவுங்கள் என்று பொருள். இப்படி நம் அயலானை நேசிப்பதைத்தான் இயேசு கூறினாரே தவிர,  அவனுடைய மதத்தை நேசிப்பதைப் பற்றி இயேசு கூறவில்லை. 

எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டை கிறிஸ்தவம் ஏற்பதில்லை. அதற்கு பதிலாக, எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரி அவருக்கு உதவி புரிவதை ஊக்குவிக்கிறது.

கேள்வி 3:

இயற்கை சீற்றங்களின் காலங்களில் மாற்றுமத அன்பர்களுக்கு என் திருச்சபையை திறந்து அவர்கள் தங்க இடம் தரலாமா?

பதில் 3:

இயற்கை சீற்றங்களாகிய மழை, வெள்ளம், புயல் போன்ற காலங்களில் நம் திருச்சபைகளை மற்ற மக்களுக்காக கட்டாயமாக திறந்து கொடுக்கவேண்டும்.

மனிதன் எந்த மதத்தை சார்ந்தவனாக இருந்தாலும் சரி, அவனுக்கு ஆபத்து என்றால், உதவி என்று ஒன்று தேவைப்பட்டால், அதற்காக உங்கள் திருச்சபையை திறந்து கொடுங்கள், அங்கே அவர்கள் தங்கட்டும். மருத்துவ உதவியும் தேவைப்பட்டால் செய்யுங்கள். 

அவனுக்கு பசியென்றால் உணவு வழங்குங்கள். நீங்கள் இரண்டு வேளை பட்டினியாக இருக்கநேரிட்டாலும், அவன் பசியை போக்குங்கள், இது தான் இயேசு காட்டிய வழி.

அவனுக்கு உடுக்க உடை இல்லையென்றால், உங்களிடம் இருப்பதை கொடுங்கள். இயேசுவின் கட்டளையின் படி, நம்மிடம் இரண்டே உடைகள் இருந்தாலும், அதில் ஒன்றை இல்லாதவருக்கு கொடுக்கவேண்டும், அதாவது நம்மிடம் உள்ள உடைகளில் 50% ஐ கொடுக்கும் படி இயேசு கட்டளையிட்டார்.

சுருக்கமாக சொல்வதென்றால், நம் அயலான் தேவையில் இருந்தால், அவனுக்கு இருக்க இடமும், உண்ண உணவும், உடுத்த உடையும் கொடுப்பது ஒவ்வொரு கிறிஸ்தவனின் கடமை, முக்கியமாக திருச்சபையை நடத்தும் போதகருக்கு அதிகபடியான கடமையுள்ளது.

கேள்வி 4:

தேவையில் உள்ளவன் தங்குவதற்கு திருச்சபையை திறந்துக்கொடுத்து உதவிய நாம், ஏன் வெள்ளிக்கிழமை அன்று தன் இறைவனை அவன் தொழுதுக்கொள்ள அனுமதி அளிக்கக்கூடாது?

பதில் 4:

இந்த இடத்தில் தான் கிறிஸ்தவர்களாகிய நாம் அனேக முறை தவறு செய்கிறோம். மனிதனை நேசிப்பது பற்றி தான் நான் மேலே குறிப்பிட்டேன், மதத்தை நேசிப்பது பற்றியல்ல.

உன்னைப்போல் உன் அயலானை நேசி என்று இயேசு சொன்ன இரண்டாவது கட்டளையை நாம் பின்பற்றுவதற்கு முன்பாக, இயேசுவின் முதலாம் கட்டளையை பின்பற்றவேண்டும்.

மத்தேயு 22; 37-40

37. இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; 

38. இது முதலாம் பிரதான கற்பனை.

39. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.

40. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.

தேவையில் உள்ள மனிதனுக்காக உங்கள் சபையை திறந்து கொடுங்கள், தவறில்லை. தேவைப்பட்டால் அந்த  மனிதனின் உயிரைக் காக்க, தேவாலயத்தின் காணிக்கை பெட்டியில் விழும் அனைத்து காணிக்கையையும் செலவழியுங்கள் (பல ஆயிரங்கள், இலட்சங்கள் கூட இருக்கலாம்), இதுவும் தவறில்லை. ஆனால், பரிசுத்த தேவனை தொழுதுக்கொள்ளும் ஆலயத்தில், பொய்யான தெய்வங்களை தொழுதுக்கொள்ள அனுமதி அளிக்கவேண்டாம், இது வேதத்தின்படி தவறு, கர்த்தரை மறுதலிக்கும் செயல் ஆகும்.

உங்களுக்கு இன்னும் புரியவில்லையென்றால், இதை கவனியுங்கள்.  ஒரு உதவியற்ற‌ முஸ்லிமின் உயிரைக் காக்க திருச்சபையை அடமானம் வைத்து, அல்லது விற்றுவிட்டு கூட நீங்கள் உதவுங்கள். ஆனால், அந்த சபையில் அவன் தன் இறைவனை தொழுதுக்கொள்ள அனுமதிக்கும் முட்டாள்தனத்தைச் செய்யாதிருங்கள்.  

தேவன் கொடுத்த 10 கட்டளைகளில் முதலாவது கட்டளை: 

யாத்திராகமம் 20: 3-4

3. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

4. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;

எனவே, அந்நிய தெய்வங்களை தொழுதுக்கொள்ள நம் திருச்சபையை கொடுக்கக்கூடாது. இது கொஞ்சம் கடினமான உபதேசம் தான், ஆனால் வேறு வழியில்லை, சத்தியத்தை சொல்லாமல் இருக்கக்கூடாதே.

இதுவரையில் சொல்லப்பட்டவைகளை கவனித்தால், மனித நல்லிணக்கத்தை பேணும்படி பைபிள் சொல்வதை கவனிக்கமுடியும், மதநல்லிணக்கத்தை அல்ல.

கேள்வி 5:

ஒருவேளை நம் சபையை முஸ்லிம்களுக்கு தொழுகைக்காக திறந்துவிட்டால் என்ன தீமை உண்டாகிவிடும்?

பதில் 5:

நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? (II கொரிந்தியர் 6:14). 

ஒரு கிறிஸ்தவ சபை போதகர் தன் சபையை மாற்று மத ஆராதனைகளுக்கு திறந்து கொடுக்கும் போது, அவர்:

1) அந்த அந்நிய மதம் கூட, கிறிஸ்தவம் போன்ற ஒரு மார்க்கம் தான் என்று ஒப்புக்கொள்கிறார் என்று அர்த்தம்.

2) தன் சபை விசுவாசிகள் தவறுவதற்கும், குழம்புவதற்கும் அவர் காரணமாக ஆகிவிடுகிறார்.

3) தேவன் தம் விரல்களால் எழுதிக்கொடுத்த 10 கட்டளைகளில் முதலாவது கட்டளையை மீறுகிறார் என்று பொருள்.

4) இயேசு கட்டளையிட்ட இரண்டு கட்டளைகளில் முதலாவது கட்டளையை மீறுகிறார் என்று அர்த்தம்.

5) நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்று இயேசு சொல்லியிருக்கும் போது, வேறு ஒரு வழியும் உண்டு என்றுச் சொல்லி, இயேசுவிற்கு எதிராக செயல்பட்டதற்கு சமமான செயலாகும்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

மனிதனின் மதத்தைப் பார்க்காமல், மனித நல்லிணக்கத்தை பேணவே பைபிள் நமக்கு கட்டளையிடுகிறதே தவிர, 'மத நல்லிணக்கத்தைப் போண' அல்ல.

கேள்வி 6: 

முன்னால்  ரோமன் கத்தோலிக்க போப் (John Pope II) அவர்கள், குர்‍ஆனுக்கு முத்தமிட்டுள்ளாரே, அவர் செய்தது தவறா?

பதில் 6:

இதற்கான முதலாவது பதில், "அவர் செய்தது நிச்சயமாக 100% தவறு, இதில் மாற்று கருத்தில்லை" என்பதாகும்.

இரண்டாவதாக, அவர் இஸ்லாமிய நாடாகிய ஈராக்கிற்கு சென்றிருந்தபோது, அவருக்கு மதிப்பினிமித்தம் கொடுக்கப்பட்ட குர்‍ஆனை அவர் பெற்றுக்கொண்டார். குர்‍ஆனுக்கு முன்பாக குனிந்தும், அதை வாங்கிய பிறகு முத்தமும் கொடுத்தார். 

  • குர்‍ஆன் இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுக்கிறது என்று அவருக்குத்தெரியுமா?
  • குர்‍ஆன் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் என்ற திரித்துவ கோட்பாட்டை மறுக்கிறது என்பதை அவர் அறிவாரா?
  • இயேசு சிலுவையில் மரிக்கவில்லை என்று குர்‍ஆன் சொல்கிறது, இதனை போப் ஏற்பாரா?
  • இயேசு உயிர்த்தெழவில்லை என்றும் குர்‍ஆன் சொல்கிறது, அப்படியானால், போப் இதனை அங்கீகரிப்பாரா?
  • "என்னைத்தவிர பிதாவினிடத்தில் யாரும் போகமுடியாது" என்று இயேசு சொல்லியுள்ளாரே, இதனை அறிந்தும் போப் அவர்கள், "பிதாவினிடத்தில் சேருவதற்கு முஹம்மதுவும் ஒரு வழி" என்று உலகிற்கு சொல்லவருகின்றாரா?

போப் அவர்கள் ஓரு மரியாதைக்காகத்தான் அப்படி குர்‍ஆனுக்கு முத்தமிட்டார் என்றுச் சொன்னால், மரியாதைக்காக கைகளில் அதனை பெற்றுக்கொண்டால் போதாதா? ஒரு மார்க்கத்தின் தலைவர் இப்படிப்பட்ட விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

ஒருவேளை குர்‍ஆனில் மேற்கண்ட போதனைகள் உள்ளன என்பதை போப் அறியாமல் இருந்திருக்கலாம் அல்லவா? என்று கேட்டால், "ஆம், இருக்கலாம், அவருக்கு குர்‍ஆன் பற்றிய அடிப்படைகள் தெரியாமல் இருந்திருக்கலாம்".

ஒருவேளை, "ஈராக்கில் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்காக அவர்களின் பாதுகாப்பிற்காக அவர் அப்படி செயல்பட்டு இருந்திருக்கலாம் அல்லவா" என்று கேட்டால், "ஆம் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்".  உண்மையில் அன்றிலிருந்து இன்று வரை ஈராக்கின் கிறிஸ்தவர்கள், போப்பின் குர்‍ஆன் முத்தத்திற்காக பாதுக்காக்கப்பட்டு இருக்கிறார்களா? என்பது மிகவும் முக்கியமான கேள்வி.

கேள்வி 7:

சில திருச்சபைகளில் மதநல்லிணக்கத்திற்காக பகவத் கீதை மற்றும் குர்‍ஆன் போன்ற புத்தகங்களில் சில வசனங்கள் படிக்கப்பட்டதாக கேள்விப்படுகிறோமே! இவைகள் சரியான செயல்களா?

பதில் 7:

இவைகள் எப்படி சரியான செயல்களாக இருக்கமுடியும்?

கிறிஸ்தவ திருச்சபைகளில் மதநல்லிணக்கத்திற்காக  குர்‍ஆனை படிக்கவைப்பது, பகவத்கீதையை படிக்கவைப்பதெல்லாம், தவறான செயல்கள், அறியாமையின் உச்சக்கட்டங்கள். இப்படிப்பட்ட திருச்சபை போதகர்களுக்கு  பைபிளும் தெரியாது, குர்‍ஆனும் தெரியாது, பகவத் கீதையும் தெரியாது.

மனிதனை நேசி என்றுச் சொன்னால், அவன் மார்க்கத்தை ஏன் நேசிக்கிறீர்கள்?

முடிவுரை:

கிறிஸ்தவ ஊழியர் ரவி ஜகரியா அவர்கள் மிகவும் தெளிவாக இப்படி கூறுவார்: "மேலோட்டமாக பார்க்கும் போது, அனைத்து மதங்களும் ஒன்று போலவே தென்படும், ஆனால் அடிப்படை கோட்பாடுகளில் அவைகள் வித்தியாசமானவைகள், அவைகள் சமம் அல்ல".

பகவத் கீதையில் கிருஷ்ணன், நான் தான் இறைவன், என்னால் அனைத்தும் படைக்கப்பட்டது என்று சொல்லும் போதே, அவர் மற்ற தெய்வங்கள் இல்லை என்று சொல்கிறார் என்று அர்த்தம்.

லாயிலாஹ இல்லல்லாஹ் என்று குர்‍ஆன் சொல்லும் போதே, அதாவது "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை" என்று குர்‍ஆன் சொல்லும் போதே, மற்ற மார்க்கங்களை அது புறக்கணிக்கிறது என்று அர்த்தமாகின்றதல்லவா? இதுகூடவா நமக்கு புரியாது?

நானே வழியும், சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன், என்னையல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்று இயேசு சொன்னபோதே, அவர் மற்ற மார்க்கங்களை புறக்கணிக்கிறார் என்று புரிகின்றதல்லவா?

உண்மை இப்படி இருக்க, ஒரு மார்க்கத்தை புறக்கணித்த‌ வேதத்தை கொண்டு வந்து இன்னொரு மார்க்க ஆலயத்தில் வாசித்தால், என்ன அர்த்தம்? யாருடைய காதில் பூவைக்க பார்க்கிறார்கள் இவர்கள்?

மத நல்லிணக்கம் நமக்கு தேவையில்லை, மனித நல்லிணக்கம் தான் தேவை.

நான் முஸ்லிம்களை நேசிக்கிறேன் என்றுச் சொல்லி, அவன் அல்லாஹ்வை தொழுதுக்கொள்ள உன் திருச்சபையை திறந்து நீ கொடுத்தால், நீ கிறிஸ்தவனில்லை, நீ இயேசுவின் சீடனில்லை. 

தேவைப்பட்டால், அந்த முஸ்லிமின் உயிரைக் காக்க அவனது அறுவை சிகிச்சைக்காக‌, உன் திருச்சபையை விற்று அவனுக்கு உதவி புரி. இயேசு உன் செயலைக் கண்டு மகிழ்வார். அவரது இரண்டாம் வருகையில் உங்களைப் பார்த்து, நான் வியாதியாய் இருந்தேன் என்னை பார்க்கவந்தீர்கள், உதவி செய்தீர்கள் என்று கூறி உங்களை மெச்சிக்கொள்வார். நான் எப்போது உங்களுக்கு உதவி செய்தேன் என்று  நீங்கள் கேட்கும் போது, நீ அந்த முஸ்லிம் சகோதரனுக்குச் செய்தது எனக்கு செய்தது தான் என்று சொல்லுவார்.

கிறிஸ்தவ ஊழியர்களே! போதகர்களே! நன்றாக கவனியுங்கள், மனிதனுக்குச் செய்யும் உதவிக்கும், மத நல்லிணக்கம் என்றுச் சொல்லி செய்யும் உதவிக்கும் இடையே இமாலய அளவு வித்தியாசம் உள்ளது. இதனை புரிந்துக்கொண்டால் தான் நீங்கள் இயேசுவிற்காக உண்மையான ஊழியராக சேவை செய்யமுடியும்.

Date: 1st July 2019


இதர தலைப்புக்கள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/general-topics/pagan_worship.html


கருத்துகள் இல்லை: