ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 16 ஜனவரி, 2021

அல்லாஹ் மீதுள்ள அவதூறுகளை களைவோம்! பாகம் 1: முஹம்மது மரிப்பதற்கு முன்பு குர்‍ஆனை பாதுகாக்க அல்லாஹ் முயலவில்லை!

இஸ்லாமியர்களின் வேத நூலான குர்‍ஆனையும், முஹம்மதுவின் போதனைகளும், செயல்களும் அடங்கிய ஹதீஸ்களையும் படிக்கும் போது, அல்லாஹ் மீது பல  பொய்யான  குற்றச்சாட்டுக்கள், அவதூறுகள் இருப்பதாக‌ தெரிகின்றது.  அல்லாஹ்விற்கு கெட்டப்பெயர் கொண்டுவருகின்ற விதமாக குர்‍ஆனிலும், ஹதீஸ்களிலும் அனேக விஷயங்கள் உள்ளன.  "அல்லாஹ் என்பவன் இறைவன்" என்று நம்பினால், அவன் பெயரில் இட்டுக்கட்டப்பட்ட பொய்களை களையவேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும்.

இறைவன் பரிசுத்தமானவன், சர்வ வியாபி, சர்வ ஞானி இப்படிப்பட்ட ஒரு நபரைப் பற்றி இஸ்லாம்  சொல்லும் விவரங்களை பார்க்கும் போது அவைகள் இறைவனின் இலக்கணத்திற்கும் தகுதிக்கும் முரணாக தெரிகின்றது. 

இந்த தொடர் கட்டுரைகளில், அல்லாஹ்வின் பெயரில் இட்டுக்கட்டப்பட்ட பொய்கள் ஒவ்வொன்றையும் வெளியே கொண்டுவரப்போகிறேன்.  இதற்காக முஸ்லிம்கள் தங்கள் ஆதரவை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்த தொடர்  கட்டுரைகளில் குர்‍ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் சான்றுகளாக காட்டப்போகின்றேன். 

பாகம் 1: முஹம்மது மரிப்பதற்கு முன்பு குர்‍ஆனை பாதுகாக்க அல்லாஹ் முயலவில்லை

சர்வ ஞானியான அல்லாஹ், எதிர்காலத்தில் நடப்பவற்றை அறிந்து இருக்கும் போது, முஹம்மது மரிப்பதற்கு முன்பு குர்‍ஆனை ஒரு முழு புத்தகமாக தொகுக்கச் செய்து, முஹம்மது மூலமாகவே அதை சரி பார்த்து இருந்திருப்பான் அல்லாஹ். ஆனால், இதை அல்லாஹ் (இறைவன்) செய்யவில்லையென்று இஸ்லாம் குற்றம் சாட்டுகின்றது.

கி.பி. 610ல் மக்காவில் வாழ்ந்த ஒரு வியாபாரிக்கு இறைவன் தன் தூதன் மூலமாக தரிசனம் தந்து, அந்த வியாபாரியை 'அல்லாஹ்வின்' நபியாக (அ) தீர்க்கதரிசியாக நியமித்ததாக இஸ்லாம் கூறுகின்றது. அதன் பிறகு 23 ஆண்டுகள், அல்லாஹ் தொடர்ந்து தன் தூதன் ஜிப்ரீல் மூலமாக அந்த வியாபாரிக்கு, அதாவது முஹம்மதுவிற்கு இறைவசனங்களை கொடுத்ததாக இஸ்லாம் கூறுகின்றது.

ஆனால், 23 ஆண்டுகள் சிறிது சிறிதாக இறக்கப்பட்ட  இறை வசனங்களை ஒரு புத்தகமாக தொகுத்து, அதனை சரி பார்க்க அல்லாஹ் தவறிவிட்டான் என்று இஸ்லாம் சொல்கிறது. முஹம்மதுவிற்கு குர்‍ஆன் வசனங்கள் இறங்கும் போதெல்லாம், அவர் இலைகளிலும், எலும்புகளிலும், முஸ்லிம்களைக் கொண்டு எழுதி வைத்தார் என்றும் இஸ்லாம் சொல்கிறது. ஆனால், மக்களின் மனதில் மட்டுமே அல்லாஹ் தன் வார்த்தைகளை சேமித்து வைத்தான், பாதுகாத்தான், எழுத்துவடிவில் பாதுகாக்கவில்லை என்று இஸ்லாம் சொல்வது, அல்லாஹ்விற்கு பெரிய அவமானமாகும். 

அழியாமல் நித்தியமாக இருக்கும் தன் வார்த்தைகளை அநித்தியமான மனிதர்களின் மனதில் பாதுகாத்தான் அல்லாஹ் என்று இஸ்லாம் சொல்வது வேடிக்கையாகவும், அல்லாஹ்விற்கு அவதூறாகவும் இருக்கிறது. 

மனிதன் மறதியுள்ளவன் (மனிதன் பிறக்கும் போதே கூடவே பிறந்த மறதி):

மனிதன் மறதியுள்ளவன், அவன் மூளையில் (மனதில்) ஒரு புத்தகத்தை பாதுகாத்து வைப்பது என்பது அறிவுடையோர் செய்யும் செயல் அல்ல. ஏனென்றால், பல காரணங்களினால் மனிதன் தான் மனப்பாடம் செய்ததை மறந்துவிடுவான்.

முதலாவதாக, ஒரு மனிதன் குர்‍ஆன் முழுவதையும் மனப்பாடம் செய்திருந்தாலும், நாட்கள் செல்லச் செல்ல, அம்மனிதன் அவ்வப்போது மனப்பாடம் செய்த முழுவதையும் மறுபடியும் ஞாபகத்திற்கு கொண்டுவந்து 'சரி பார்க்கவேண்டும்', அப்படி செய்யாத பட்சத்தில், மனப்பாடம் செய்யப்பட்டவைகள் மறந்துப்போகும்.   கவனிக்கவும், ஒரு சில அத்தியாயங்களை மட்டுமல்ல, மனப்பாடம் செய்த முழுவதையும், அவன் மறுபடியும் அடிக்கடி சொல்லிப்பார்க்கவேண்டும். இதனை அவன் வாழ்நாள் முழுவதும் செய்யவேண்டும், இது சாத்தியமா? இல்லையல்லவா? நாம் படிக்கும் போது மனப்பாடம் செய்த சில திருக்குறள்கள், இதர செய்யுள்கள் நமக்கு இன்றும் ஞாபகத்தில் இருக்கும், ஆனால், படித்த அனைத்து செய்யுள்களும் மனப்பாடம் செய்த எல்லா திருக்குறள்களும் நமக்கு ஞாபகம் இருக்கின்றதா? இல்லையல்லவா?  இரண்டாவதாக, முதுமையின் காரணமாக, ஞாபகசக்தி குறையும், மூன்றாவதாக, அக்காலத்தில் நோய்களினாலும், யுத்தங்களினாலும் மக்கள் மரித்துக்கொண்டு இருந்தார்கள். இந்த மூன்று காரணங்களினால் நாம் அறிவது என்னவென்றால், மனிதர்களுக்குள் ஒரு புத்தகத்தை பாதுகாப்பது என்பது முட்டாள்தனமாக செயலாகும்.  அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு வம்சத்திலிருந்து இன்னொரு வம்சத்திற்கு இந்த மனப்பாடம் மாறி மாறி பல நூற்றாண்டுகள் வரவேண்டும், இது சாத்தியமா? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

மனிதர்களுக்கு தெரிந்திருக்கும் இந்த ஒரு அற்பமான விவரம் அல்லாஹ்விற்குத் தெரியவில்லை என்று இஸ்லாம் சொல்வது ஏற்றுக்கொள்ளமுடியாது.

ஹதீஸ்களின் படி, குர்‍ஆன் ஒரு அதிகாரபூர்வமான புத்தகமாக தோல் சுருள்களிலோ, அல்லது இதர வகையிலோ கொண்டுவருவதற்கு முன்பாக முஹம்மது கி.பி. 632ல் மரித்துவிடுகின்றார்.

அதன் பிறகு நடந்த போர்களில், குர்‍ஆனை மனப்பாடம் செய்திருந்த முஸ்லிம்கள் கொத்து கொத்தாக மரித்துவிடுகிறார்கள்.  அதன் பிறகு முதல் மூன்று கலிஃபாக்களாகிய அபூ பக்கர், உமர் மற்றும் உஸ்மான் அவர்கள் குர்‍ஆனை இனி பாதுகாக்க ஒரே வழி தான் இருக்கிறது. அந்த வழி மனிதர்களின் மனதில் ஒலி வடிவில் இருக்கும் குர்‍ஆனை, எழுத்து வடிவில் கொண்டு வந்து தோல் சுருள்களில் (அக்கால பேப்பர்) பாதுகாத்தால் தான் முடியும், இல்லையென்றால் குர்‍ஆன் உலகிலிருந்து அழிந்தே போய்விடும் என்று முடிவு செய்தார்கள், (இந்த அறிவு அல்லாஹ்விற்கு இல்லை என்று இஸ்லாம் சொல்கிறது),  குர்‍ஆனை எழுத்துவடிவில் இவர்கள் தான் கொண்டு வந்தார்கள் என்று இஸ்லாம் கூறுகின்றது.

இந்த காரியத்தை, அதாவது குர்‍ஆனை எழுத்துவடிவில் ஒரு புத்தகமாக தொகுத்த இந்த செயலை அல்லாஹ்வும் முஹம்மதுவின் செய்யாதது, அல்லாஹ்வின் சார்பிலிருந்து பார்த்தால், இது அவனுக்கு அவமானமேயாகும்.

இந்த அவதூறை எப்படி நீக்குவது?

குர்‍ஆனை அல்லாஹ் எழுத்து வடிவில் பாதுகாக்கவில்லை, முஹம்மதுவும் இதைப் பற்றி அக்கரைக் கொள்ளவில்லை என்று முஸ்லிம் அறிஞர்களும், ஹதீஸ்களும் சொல்வது அல்லாஹ்வின் இலக்கணத்திற்கு ஏற்றது அல்ல என்பதைப் பார்த்தோம்.

இதற்கு தீர்வு என்ன? 

முதலாவதாக, குர்‍ஆனை கலிஃபாக்கள் தான் எழுத்து வடிவில் கொண்டு வந்தார்கள் என்பதை முஸ்லிம்கள் சொல்வதை கைவிடவேண்டும். இஸ்லாமிய சரித்திரத்திலிருந்து, முஹம்மது உயிரோடு இருக்கும் போதே, ஒரு புத்தகமாக எழுத்துவடிவில் அல்லாஹ் குர்‍ஆனை கொண்டு வந்துவிட்டான் என்பதை முஸ்லிம்கள் வரலாற்று சான்றுகளோடு நிருபிக்கவேண்டும். அபூ பக்கர் அவர்கள் மற்றும் உஸ்மான் அவர்கள் குர்‍ஆனை தொகுத்ததாகச் சொல்லக்கூடிய அனைத்து ஹதீஸ்களையும் பொய்யானவை என்று முஸ்லிம்கள் புறக்கணிக்கவேண்டும்.

இரண்டாவதாக, மேற்கண்ட சான்றுகளை முஸ்லிம்களால் கொண்டு வரமுடியவில்லையென்றால், அல்லாஹ்வின் மீது இஸ்லாம் சுமத்திய அவதூறை சுமந்துக்கொண்டு தான் வாழவேண்டும். இது "அல்லாஹ் ஒரு சர்வ ஞானியல்ல" என்பதைத் தான் காட்டுகின்றது என்பதையும் அவர்கள் ஒப்புக் கொள்ளவேண்டும்.

முஸ்லிம்களுக்கு வேண்டுகோள்:

மேலே சொன்ன முதலாவது தீர்வுக்காக முஸ்லிம்கள் ஆய்வுகள் செய்வார்களா? அல்லாஹ், தன் வார்த்தைகளை தானே எழுத்து வடிவில் பாதுகாத்தான், மனிதர்களாகிய கலிஃபாக்கள் அல்ல என்பதை நிருபிக்க முயலுவார்களா?

அல்லாஹ்வினால் முடியாததை, நாங்கள் செய்துக்காட்டினோம், அல்லாஹ்விற்கும் முஹம்மதுவிற்கும் வராத சமயோசிதமான புத்தி எங்களுக்கு வந்தது என்ற தோரணையில் இஸ்லாம் சொல்லும் குர்‍ஆன் தொகுப்பு  சரித்திரம் பொய்யானது என்பதை முஸ்லிம்கள் நிருபிப்பார்களா?

வாருங்கள், அல்லாஹ்வின் மீது சுமத்தப்பட்ட அவதூறை துடைத்தெறிவோம்...

கிறிஸ்தவர்களின் சந்தேகமும் பதிலும்

இந்த சிறிய கட்டுரையை படித்த கிறிஸ்தவர்களுக்கு ஒரு கேள்வி எழலாம். அல்லாஹ்வினால் தன் வேதத்தை பாதுகாக்க தெரியவில்லை, என்று இஸ்லாம் சொல்லும் அவதூறை துடைக்க முஸ்லிம்கள் ஆய்வுகள் செய்யட்டும், நாங்கள் என்ன செய்வது? கிறிஸ்தவர்களுக்கும் அல்லாஹ்விற்கும் என்ன சம்மந்தம் என்ற கேள்வி கிறிஸ்தவர்களுக்கு எழலாம்.

கிறிஸ்தவர்களில் சிலர் 'குர்‍ஆனின் அல்லாஹ்வும், பைபிளின் யெகோவா தேவனும் ஒருவரே' என்று அறியாமையில் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.  உண்மையாகவே, யெகோவா தேவன் தான் 'அல்லாஹ்' என்று நம்புகிறவர்கள், நம் தேவன் குர்‍ஆனை இறக்கியிருந்தால், அதனை எழுத்துவடிவில் பாதுகாத்து இருந்திருப்பாரே என்ற சந்தேகம் வரவேண்டும். யெகோவா தேவன் தம் வார்த்தைகளை தம் தீர்க்கதரிசிகள் மூலமாக சரியாக பாதுகாத்தார், தோல்களில் தம் வார்த்தைகளை எழுதவைத்தார். மக்களின் மனதில் பாதுகாக்கவில்லை.  இயேசுவின் காலத்திற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பழைய ஏற்பாட்டு நூல்களை சவக்கடல் குகைகளில் (Dead Sea Scrolls) 2000 ஆண்டுகளாக பாதுகாத்து 1940ம் ஆண்டுக்கு பிறகு உலக வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். மேலும், கி.மு. இரண்டாம் நூற்றாண்டு காலத்திலேயே, எபிரேய மொழியிலிருந்து கிரேக்க மொழியாக்கம் செய்யும் படிச் செய்தும், இன்னும் இதர மொழிகளில் தம் வார்த்தைகளை மொழியாக்கம் செய்யச் செய்தும் பாதுகாத்தார்.

எனவே, அல்லாஹ் தான் யெகோவா என்று அறியாமையில் நம்புகிறவர்களும், மேற்கண்ட அவதூறை ஏற்கமாட்டார்கள், ஏற்கக்கூடாது. அல்லாஹ்வும் யெகோவாவும் ஒருவரே என்று நம்பும் கிறிஸ்தவர்கள், இந்த ஒரு அவதூறு அல்லாஹ் மீது அல்ல, யெகோவா தேவன் மீது சுமத்தப்பட்டதாகவே கருதவேண்டும்.

"அல்லாஹ் வேறு, யெகோவா தேவன் வேறு" என்று நம்புகிறவர்களுக்கு இந்த பிரச்சனை ஒன்றும் செய்யாது, ஏனென்றால், இது அல்லாஹ் மீது இஸ்லாம் சுமத்திய குற்றச்சாட்டே தவிர யெகோவா தேவன் மீது  அல்ல என்பதால், இப்படிப்பட்டவர்கள் கவலைப்படத் தேவையில்லை.

விஷயம் புரிகின்றதா?

அடுத்த தொடர் கட்டுரையில் இஸ்லாம் "அல்லாஹ் மீது" சுமத்திய இன்னொரு அவதூறைப் பற்றிப் பார்ப்போம்.


புகாரி ஹதீஸ் சான்று:  மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட. . .

சஹீ புகாரி ஹதீஸ்: பாகம் 5, அத்தியாயம் 66, எண் 4986

(வேத அறிவிப்பை எழுதுவோரில் ஒருவராக இருந்த) ஸைத் இப்னு ஸாபித் அல் அன்சாரி(ரலி) கூறினார். 

யமாமா போர் நடைபெற்ற பின் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி), எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்து வரச் சொன்)னார்கள். (நான் சென்றேன்.) அங்கே அவர்களுடன் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) கூறினார்:

உமர்(ரலி) என்னிடம் வந்து, 'இந்த யமாமா போரில் ஏராளமான குர்ஆன் அறிஞர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். (இறை மறுப்பாளர்களுடன் போர் நடக்கும்) பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு, அதனால் குர்ஆனின் பெரும்பகுதி (நம்மைவிட்டுப்) போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். (எனவே,) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க உத்தரவிட வேண்டுமென நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நாம் எப்படிச் செய்வது?' என உமர் அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான பணி)தான்' என்று கூறினார்கள். இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும் வரை இது விஷயத்தில் (தொடர்ந்து) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். (முடிவில்) உமர் அவர்கள் கருதியதை(யே) நானும் (பொறுத்தமானதாகக்) கண்டேன். (இதை அபூ பக்ர் அவர்கள் என்னிடம் தெரிவித்தபோது உமர்(ரலி) ஏதும் பேசாமல் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்கள்.)

(பிறகு) அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) '(ஸைதே!) நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும்) சந்தேகப்படமாட்டோம். நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக 'வஹீ' (வேத வசனங்களை) எழுதக்கூடிய வராயிருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்' என்று கூறினார்கள் .

அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை ஒன்றுதிரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது . நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி) தான்' என்று பதிலளித்தார்கள். இதையே அன்னார் என்னிடம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். முடிவில் எதற்காக அபூ பக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். …….

குர்ஆனின் முடிவான ஒரு முழு தொகுப்பை முஹம்மது தம் வாழ்நாட்களில் தயாரிக்கவில்லை/தொகுக்கவில்லை என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவாக காட்டுகிறது. முழு குர்‍ஆனையும் ஒன்று சேர்த்து ஒரு தொகுப்பாக (புத்தகமாக) மாற்றவேண்டும் என்று அபூ பக்கர் கூறும் போது: அல்லாஹ்வின் தூதர் செய்யாத ஒரு வேலையை நீங்கள் எப்படி செய்யலாம் என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. முஹம்மது குர்‍ஆனை ஒரு தொகுப்பாக முழுவதுமாக ஒன்று சேர்த்து தொகுக்கவில்லை. ஏனென்றால், அவருக்கு நம்பகமான, குர்‍ஆனை கற்றுக்கொடுக்கும் தோழர்கள் தங்கள் சொந்த குர்‍ஆன் தொகுப்புக்களை கொண்டு இருந்தார்கள்.

தேதி: 16 Jan 2021


அல்லாஹ் மீது இஸ்லாமின் குற்றச்சாட்டுகளும் தீர்வுகளும் - கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்  பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/accusation-on-allah/allah_not_protected_quran.html


கருத்துகள் இல்லை: