ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

ஞாயிறு, 10 மார்ச், 2024

2024 ரமளான் தியான கட்டுரைகள் - ஜபூர் காட்டும் ஸிராத்தல் முஸ்தகீம் : நாள் 3: சங்கீதம் 1ல் முஹம்மது இல்லை என்பதற்கான நான்கு காரணங்கள்?

2024 ரமளான் தியான முந்தைய கட்டுரைகளை படிக்க கீழே சொடுக்கவும்.

இந்த தொடரில் சங்கீதம் 1ல் முஹம்மது பற்றிய செய்தி உள்ளது என்று கருதும் முஸ்லிம்களுக்கு ஒரு சிறிய பதிலை கொடுக்கப்போகிறோம்.

1) ஜபூரில் (சங்கீதம்) முஹம்மது பற்றிய முன்னறிவிப்பா?

கீழ்கண்ட தொடுப்பில், முஹம்மது பற்றிய முன்னறிவிப்பு ஒன்றாம் சங்கீதத்தில் உள்ளது என்று முஸ்லிம்களில் சிலர் சொல்லும் வாதத்திற்கு சில வரிகளில் பதில் சொல்லப்பட்டுள்ளது

அதாவது சங்கீதத்தின் முதல் மூன்று வசனங்களில் சொல்லப்பட்டிருக்கும் நபர் (அல்லது பாக்கியவான்), முஹம்மது என்று சில முஸ்லிம்கள் கூறுகின்றார்கள். அவ்வசனங்களை இப்போது படிப்போம், அதன் பிறகு நம்முடைய பதிலை காண்போம்.

ஜபூர் சங்கீதம் 1:1-3 வசனங்கள்:

1. துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,

2. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

3. அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.

சங்கீதம் 1ல் முஹம்மது பற்றிய கூறப்படவில்லை என்பதற்கு நான்கு காரணங்களை சுருக்கமாக காண்போம்

காரணம் 1: இவ்வசனங்கள் பொதுவான ஒரு நபரைப் பற்றிச் சொல்கின்றன, ஒரு குறிப்பிட்ட நபராகிய முஹம்மது பற்றியல்ல‌

மேற்கண்ட மூன்று வசனங்களை மறுபடியும் படித்துப் பாருங்கள். இவைகளில் வருவது, ஒரு பொதுவான நபர்கள் பற்றியது, அதாவது எவன் ஒருவன் இந்த நல்ல காரியங்களைச் செய்வானோ, அவன் பாக்கியவானாக இருப்பான் என்பதாகும்.

இவைகள் முஹம்மது என்ற தனிமனிதன் பற்றி சொன்னதல்ல. 

ஒரு எடுத்துக்காட்டுக்காக, குர்‍ஆன் 4:111ஐ படியுங்கள்:

  • குர்‍ஆன் 4:111. எவன் பாவத்தைச் சம்பாதிக்கிறானோ அவன் தனக்குக் கேடாகவே அதை நிச்சயமாக சம்பாதிக்கிறான். அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

குர்‍ஆனின் இவ்வசனம், ஒரு குறிப்பிட்ட நபரை குறிக்காது, அதற்கு பதிலாக தீய வழியில் யார் நடக்கிறார்களோ, அவர்களை இது குறிக்கும், இதே போன்று தான், சங்கிதம் 1ன் முதல் மூன்று வசனங்கள்.

ஆகையால், முஹம்மது பற்றி சங்கீதம் 1ல் எந்த குறிப்பும் இல்லை என்பதை இதன் மூலம் அறியலாம்.

காரணம் 2: முஹம்மது தவ்ராத்தை படிக்கவில்லை & தியானிக்கவில்லை

இரண்டாம் வசனத்தில் "கர்த்தருடைய வேதத்தில்" என்று வருகிறது. இங்கு "வேதத்தில்" என்ற தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட வார்த்தை மூல எபிரேயத்தில் "தவ்ராத்" என்று உள்ளது.

  • சங்கீதம் 1:2. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

குறிப்பாக, தவ்ராத் என்றுச் சொன்னால், அது மோசேவிற்கு இறக்கப்பட்ட வேதமாகும். இந்த தவ்ராத்தைப் பற்றி தான் குர்‍ஆனில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நாம் இரண்டாம் கட்டுரையில் பார்த்தோம்.

சரி நம் ஆய்விற்கு வருவோம், சங்கீதம் 1:2ன் படி "யார் பாக்கியவான்"? தவ்ராத்தை இரவும் பகலும் படித்து தியானம் செய்பவன் தான் பாக்கியவான் ஆவான்.

முஹம்மது ஒரு முறையாவது தவ்ராத்தை படித்துள்ளாரா? என்று ஆய்வு செய்து பார்த்தாலோ, அல்லது முஸ்லிம்களிடம் கேட்டாலோ என்ன பதில் வரும்?

"இல்லை, எங்கள் இறைத்தூதர் எழுத படிக்க தெரியாதவர், எனவே அவர் தவ்ராத்தை சுயமாக படிக்கவில்லை" என்றுச் சொல்வார்கள்.

ஆமாம், இதைத் தான் நாமும் சொல்கிறோம், சங்கீதம் 1:2 மிகவும் தெளிவாக "இரவு பகலும் தவ்ராத்தை" தியானம் செய்பவன் பாக்கியவான் என்றுச் சொல்கிறது. முஹம்மது நிச்சயமாக இதை செய்திருக்கமுடியாது, எனவே இங்கு வரும் நபர் முஹம்மது அல்ல, அது பொதுவாகச் சொல்லப்பட்ட ஒரு செய்தியாகும் என்பது நமக்கு இப்போது புலனாகும்.

முஹம்மது வாழ்ந்த காலத்தில் தவ்ராத்தை (பைபிளின் முதல் ஐந்து புத்தகங்கள் அடங்கிய தொகுப்பை) பார்த்துள்ளார், இதற்கு ஹதீஸ் ஆதாரங்கள் உள்ளன. சில வேளைகளில் யூதர்களை அழைத்து, தவ்ராத்திலிருந்து சில வசனங்களை படிக்கச் சொல்லி (எபிரேய மொழியில்) முஹம்மது கேட்டுள்ளார். ஆனால், முஹம்மது தனக்கென ஒரு தவ்ராத் பிரதியை வைத்துக்கொண்டு, அதனை தினமும் படித்தார் என்றோ, அல்லது தன் சஹாபாக்கள் ஒருவர் முலமாக படிக்கச் சொல்லி, தினமும் கேட்டு அறிந்தார் என்றோ சொல்லமுடியாது.

எனவே, முஹம்மது முதல் சங்கீதத்தில் குறிப்பிடப்படவில்லை என்பது சான்றுகள் உள்ள உண்மையான கூற்றாகும்.

காரணம் 3: முஹம்மது யெகோவா தேவனை தொழவில்லை, அல்லாஹ்வை தொழுதார்

கடைசியாக, முஹம்மது யெகோவா தேவனை தொழவில்லை, அவர் அல்லாஹ் என்ற தெய்வத்தைத் தான் தொழுதார் என்பதை நாம் அறிவோம்.

சங்கீதம் 1:2ல் வரும் "கர்த்தருடைய வேதத்தில்" என்ற வார்த்தை, எபிரேய மூல மொழியில், "யெகோவாவின் தவ்ராத்தில்" என்று இருக்கிறது. இதனை தமிழாக்கம் செய்யும்போது, "பழைய ஏற்பாட்டில் எங்கேயெல்லாம் 'யெகொவா' என்று வருகிறதோ, அங்கேயெல்லாம் "கர்த்தர்" என்று மொழியாக்கம் செய்துள்ளார்கள், மேலும் தவ்ராத் என்ற வார்த்தையை "வேதம், சட்டம், நியாயப்பிரமாணம்" என்று தமிழாக்கம் செய்துள்ளார்கள்.

  • சங்கீதம் 1:2. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

முஹம்மதுவிற்கு யெகோவா தேவன் யார் என்று தெரியாது.

குர்‍ஆனில் ஒருமுறை கூட 'யெகோவா' என்ற பெயர் வராது.

முஹம்மது பேசியபோதும், சட்டங்களை கொடுக்கும் போதும், பழைய ஏற்பாட்டு நிகழ்ச்சிகளை குறிப்பிடும் போதும், அவர் ஒரு போதும் "யெகோவா" என்ற பைபிளின் தேவனின் பெயரை குறிப்பிட்டதில்லை.

சில முஸ்லிம்கள் "அல்லாஹ்வும் யெகோவா தேவனும்" ஒருவரே என்றுச் சொல்வார்கள், ஆனால், இது பொய்யான கூற்றாகும். குர்‍ஆனின் இறைவனும், பைபிளின் இறைவனும் வெவ்வேறானவர்கள் என்பதை பல சான்றுகளுடன் கட்டுரைகளில் விளக்கியுள்ளோம்.

ஆகையால், யெகோவாவை அறியாதவர், அவருடைய தவ்ராத்தை எப்படி தியானித்து இருப்பார்? நிச்சயமாக இல்லை.  எனவே சங்கீதம் 1ல் முஹம்மது இல்லை, இதற்கு வாய்ப்பே இல்லை.

காரணம் 4: சங்கீதம் 1 எதிர்கால நிகழ்ச்சிகள் பற்றிய தீர்க்கதரிசனம் அல்ல

கடைசியாக, சங்கீதம் 1ல் வரும் வசனங்கள் தீர்க்கதரிசன வசனங்கள் அல்ல, அவைகள் பொதுவான கூற்றுக்கள் ஆகும். அவைகள் முஹம்மது பற்றிய தீர்க்கதரிசன வசனங்களே என்று சொல்லும் முஸ்லிம்களின் கூற்றில் எந்த ஒரு சான்றும் இல்லை.

தீர்க்கதரிசன (எதிர்கால முன்னறிவிப்பு) வசனங்கள் என்றால், அவைகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நடக்கும் படி இருக்கும், ஆனால், இந்த சங்கீதத்தில் அப்படிப்பட்ட எதிர்கால முன்னறிவிப்பு எதுவுமே இல்லை. 

ஆகையால், முஹம்மது முதல் சங்கீதத்தில்(ஜபூர்) இல்லை என்பது தான் உண்மையான கூற்று ஆகும்.

முடிவுரை:

மேற்கண்ட நான்கு காரணங்களை ஆய்வு செய்யும் போது, சங்கீதம் 1ல் முஹம்மது  பற்றிய முன்னறிப்பு இல்லை என்பதை அறிந்துக்கொள்ளலாம்.

சங்கீதம் 1, ஒரு பொதுவான விவரத்தைச் சொல்கிறது, அது எதிர்கால முன்னறிவிப்பு உள்ள வசனங்களைச் சொல்வதில்லை. மேலும், முஹம்மது தவ்ராத்தை படித்ததும் இல்லை, இரவும் பகலும் தியானித்ததும் இல்லை. இது மட்டுமல்ல, முஹம்மதுவிற்கு அல்லாஹ்வைத் தெரியுமே தவிர , யெகோவா தேவனைத் தெரியாது.

அடுத்த ஆய்வுக் கட்டுரையில், ஜபூர் காட்டும் சத்திய மார்க்கத்தை இன்னும் அறிந்துக்கொள்வோம்.

தேதி: 10th March 2024


ரமளான் 2024 கட்டுரைகள்

உமரின் பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2024ramalan/2024ramalan03.html


கருத்துகள் இல்லை: