ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 21 மார்ச், 2009

பன்றி மாமிசம் சாப்பிடுவதைப் பற்றிய விவாதம் - The Issue of Eating Pork

பன்றி மாமிசம் சாப்பிடுவதைப் பற்றிய விவாதம்

 

The Issue of Eating Pork

 

கிறிஸ்தவர்கள் பன்றி மாமிசம் சாப்பிடுவதைக் கண்டு அனேக இஸ்லாமியர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். மோசே சட்டத்தின் கீழ் வாழும் இஸ்ரவேல் மக்கள் எப்படி பன்றியைக் கண்டவுடன் தூரமாக ஒதுங்குகிறார்களோ, அது போல, இஸ்லாமியர்களும் பன்றியைக் கண்டதும் ஒதுங்குகிறார்கள். இன்று உலகில் வாழும் பல இலட்ச யூதர்கள் மோசேயின் கட்டளைகளை பின் பற்றுகிறார்கள். உண்மையாகவே, பழைய ஏற்பாட்டில் பன்றி தடை செய்யப்பட்டுள்ளது.

 
பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாக பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். இவைகளின் மாம்சத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது. (லேவியராகமம் 11:7-8)
 
இதே போல தடை குர்‍ஆனிலும் உண்டு:
 
தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கிருக்கிறான்;... (குர்‍ஆன் 2:173)
 
பன்றி மாமிசம் சாப்பிடக்கூடாது என்று இஸ்லாமில் உறுதியாக கட்டளையிடப்பட்டுள்ளதால், பன்றி மாமிசம் சாப்பிடுவது என்பது ஒரு "பரிசுத்தமில்லாத செயல்" அதாவது இறைவனுக்கு முன்பாக தகாத செயல் என்று இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். இந்த காரணத்திற்காகத் தான், பரிசுத்த நபியாகிய இயேசுவைப் பின்பற்றுகிறோம் என்றுச் சொல்லி கொள்பவர்கள், பன்றி மாமிசம் சாப்பிடுவதை மிகப்பெரிய குற்றமாக இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள்.

மோசேயின் சட்டங்களை புரிந்துக்கொள்வதும், அந்த சட்டங்கள் இஸ்ரவேல் மக்களுக்கு கொடுக்கப்பட்ட நோக்கத்தை புரிந்துக்கொள்வதும் மிகவும் முக்கியமானதாகும், பழைய ஏற்பாட்டின் சட்டங்கள் இரண்டு வகையாக உள்ளன, அவைகள்:

அறநெறி சட்டங்கள் (Moral Law)

மற்றும்

அரசாங்க, ஆரோக்கிய மத‌ சட்டங்களாகும் (Civil Law)

வாழ்க்கையின் முக்கியமான நன்னடத்தை சம்மந்தப்பட்ட விவரங்கள் அறநெறி சட்டத்தின் கீழ் வருகின்றன. இந்த அறநெறி சட்டத்தின் முக்கிய நோக்கம், தெரிந்தெடுக்கப்பட்ட இஸ்ரவேல் மக்கள் தங்கள் உள்ளான பரிசுத்தத்தினால் மற்ற மக்களைவிட வேறுபட்டவர்களாக காணப்படவும், மற்றும் மனிதர்களுக்கும் தேவனுக்கும் முன்பாக பரிசுத்தமாக வாழுவதற்கும் கொடுக்கப்பட்டது. இந்த உயர்ந்த அறநெறி சட்டங்கள் இஸ்ரவேல் மக்களின் தரத்தை உயர்த்தவும், அவர்கள் தங்கள் பரிசுத்தத்தில் மற்ற மக்களுக்கு, வம்சங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழவும் கொடுக்கப்பட்டது. உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானால், "பத்து கட்டளைகளைச்" சொல்லலாம். ஒரு மனிதன் தன் சக மனிதனுக்கும் அதே நேரத்தில் தேவனுக்கும் ஆற்றவேண்டிய கடமைகளை இந்த பத்து கட்டளைகள் சொல்கின்றன. இந்த சட்டங்கள் சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்பட்டாலும் மாற்றமடையாத நிலையான சட்டங்களாகும்.

சிவில் சட்டங்கள் என்றுச் சொல்லக்கூடிய "அரசாங்க, ஆரோக்கிய மத" சட்டங்கள் வித்தியாசமானவைகள். இந்த சட்டங்கள் ஒவ்வொரு நாளும் நாம் வாழும் சமுதாயத்தில் பின் பற்றவேண்டிய சட்டங்களாகும். இந்த சட்டங்கள் சூழ்நிலைகள் மாறும் போதும், நம் அருகிலுள்ள சமுதாயத்திற்கு ஏற்ற விதமாக பழக்கவழக்கங்களினால் மாறக்கூடியதாக உள்ளது. இந்த‌ ச‌ட்ட‌ங்க‌ள் வெளிப்புற சுத்தம் பற்றியும், ஆரோக்கிய‌ம் ப‌ற்றியும், உண‌வுக‌ளைப் ப‌ற்றியும், உடைக‌ளைப் ப‌ற்றியும் ம‌ற்றும் ம‌த‌ ச‌ட‌ங்குக‌ளைப் ப‌ற்றியும் சொல்கின்ற‌ன‌. இந்த‌ ச‌ட்ட‌ங்க‌ளின் முக்கிய‌ நோக்க‌ம், இஸ்ர‌வேல் ம‌க்க‌ள் வெளிப்புற‌ ப‌ரிசுத்த‌த்தின் அடிப்ப‌டையில் ம‌ற்ற‌ ச‌முதாய‌ங்க‌ளை விட‌ எப்ப‌டி வேறு பிரிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளாக‌ இருக்கிறார்க‌ள் என்ப‌தைக் காட்ட‌வேயாகும். இந்த‌ இஸ்ர‌வேல் ம‌க்க‌ள் தனித்தன்மை வாய்ந்தவர்களாக, ஒரே மெய்யான தேவனை அவர்கள் தொழுதுக்கொள்வதால் உலகத்திலுள்ள மற்றவர்க‌ளின் பார்வையில் வித்தியாசமானவர்களாக காணப்படும்படி வாழவேண்டும். அதே நேரத்தில் தங்களைச் சுற்றியுள்ள மற்ற சமுதாயத்தின் மூட பழக்கவழக்கங்களையும், விக்கிர ஆராதனையையும் பின் பற்றாதவர்களாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக இச்சட்டங்கள் கொடுக்கப்பட்டன.

இந்த‌ சிவில் சட்டங்களில் ஒன்று தான் "ப‌ன்றி மாமிசம் உண்ணக்கூடாது" என்ற‌ த‌டை க‌ட்டளையாகும். இஸ்ரவேலை சுற்றியிருந்த ப‌ழ‌ங்குடியினர் த‌ங்க‌ள் விக்கிரகங்களுக்கு ப‌ன்றியை ப‌லியிடுவ‌து அவர்களுக்கு ஆராதனை வழக்கமாக இருந்த‌து. இன்னும் அந்த‌ கால‌த்தில் அந்த‌ இட‌ங்க‌ளில் வாழும் ப‌ன்றிக‌ள், குப்பை கூள‌ங்க‌ளையும் இத‌ர‌ கழிவுக‌ளையும் திண்ப‌வைக‌ளாக‌ இருந்த‌ன‌. இத‌னால், ப‌ன்றியின் மாமிசத்தை உட்கொள்ளுதல், அனேக கொடுமையான வியாதிகளைக் கொண்டுவந்து மொத்த சமுதாயத்தையும் தாக்குவதாக இருந்தது.

இஸ்ரவேல் மக்கள் இப்படிப்பட்ட பழங்குடி மற்றும் அவர்களின் இந்த பழக்கவழக்கங்களிலிருந்து தங்களை காத்துக்கொண்டு தூரமாக இருக்கவேண்டும்.

இஸ்ரவேல் மக்கள் தனக்கு பரிசுத்த ஜனங்கள் என்று தேவன் அவர்களை பிரித்தெடுத்து, மெய்யான ஒரே தேவனாகிய தன்னை தொழுதுக்கொள்ளவேண்டுமென்று, ஆபிரகாமின், ஈசாக்கின் மற்றும் யாக்கோபின் தேவன் விரும்பினார். இஸ்ரவேல் மக்கள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பிரித்தெடுக்கப்பட்டார்கள், இதனை அவர்கள் தொடர்ந்து நியாபகத்தில் வைத்திருக்கவேண்டும். இதனை குர்‍ஆன் இவ்விதமாக கூறுகிறது:
 
(நபியே! ஆத்மீக) ஆற்றலும், அகப்பார்வையும் உடையவர்களாயிருந்த நம் அடியார்களான இப்றாஹீம், இஸ்ஹாஃக், யஃகூப் ஆகியோரையும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக, நாம் இவர்களை (மறுமை) வீட்டை நினைவூட்டுவதற்காகவே பூரண பரிசுத்தமானவர்களாக(த் தேர்ந்தெடுத்தோம்). (குர்‍ஆன் 38:45- 46)

இஸ்ராயீலின் மக்களே! (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும், உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள். (குர்‍ஆன் 2:47)
 
ஏன் இஸ்ரவேல் மக்கள் விசேஷித்தவர்கள்? எந்த நோக்கத்திற்காக தேவன் அவர்களை தெரிந்தெடுத்துக் கொண்டார்? இந்த தெரிந்தெடுத்த சமுதாயத்திலிருந்து தான் உலக இரட்சகர் மேசியாவாகிய‌ இயேசு வரவேண்டும், இவர் மனித இனத்தை காப்பாற்ற தன்னையே ஒப்புக்கொடுக்க தேவனிடமிருந்து வந்தவர். தேவனின் வார்த்தை மனிதனாக வந்தார், கன்னி மரியாளுக்கு மகனாக இயேசுவாக வந்தார். இந்த பரிசுத்தர் ஆபிரகாமின், ஈசாக்கின் மற்றும் யாக்கோபின் வம்சமாகிய இஸ்ரவேல் வம்சத்தில் பிறக்கவேண்டும். இஸ்ரவேல் மக்கள் மற்றவர்களைவிட தனித்தன்மை வாய்ந்தவர்க்ளாக தனக்கு பரிசுத்த ஜனம் என்று தேவன் அழைத்து அவர்களை தெரிந்தெடுத்தது ஒன்றும் ஆச்சரியமில்லையே.

இயேசு இந்த‌ உல‌கில் ஊழிய‌ம் செய்த‌ கால‌த்தில், துர‌திஷ்ட‌வ‌ச‌மாக‌, இஸ்ர‌வேல் ம‌க்க‌ளில் அனேக‌ர் கட்டளைகளின் நோக்க‌த்தை ம‌ற‌ந்த‌வ‌ர்களாக‌ வாழ்ந்துக்கொண்டு இருந்தார்க‌ள். இத‌ய‌த்தை சுத்த‌மாக‌ வைத்திருப்ப‌தைக் காட்டிலும், த‌ங்க‌ள் கைக‌ளை சுத்தமாக வைத்திருப்பதற்கே அதிக‌ முக்கிய‌த்தும் கொடுத்து வ‌ந்தார்க‌ள். அவர்கள் ந‌ன்னெறி ச‌ட்ட‌ங்க‌ளுக்கு அதிக முக்கிய‌த்துவ‌ம் கொடுப்ப‌தைக் காட்டிலும், சிவில் ச‌ட்ட‌ங்களுக்கு அதிக முக்கிய‌த்துவ‌ம் கொடுத்தார்க‌ள். முக்கிய‌மாக‌ ம‌த‌த் த‌லைவ‌ர்க‌ள் இத‌ய‌த்தை பரிசுத்த‌மாக‌ வைத்திருப்ப‌த‌ற்கு ப‌திலாக‌, அனேக‌ சுத்திக‌ரிப்பு க‌ட்ட‌ளைக‌ளை உருவாக்கி அவைக‌ளை க‌டைபிடித்த‌ன‌ர், ம‌ற்றும் இவைக‌ளே முக்கிய‌மான‌வைக‌ள் என்றும் சொல்லிவ‌ந்த‌ன‌ர். இத‌ய‌த்தை ப‌ரிசுத்த‌மாக‌ வைத்திருப்ப‌து கொஞ்ச‌ம் க‌டினமே. இதனால், உண்மையான மார்க்கத்தை பின் பற்றுகிறவர்களின் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக மத சடங்குகளாலும், மாய்மாலத்திலும் நிறைந்திருந்தது. மதத் தலைவர்களை வெளிப்புறமாக கண்டால், அவர்கள் தங்கள் ஜெபங்களை அடிக்கடி செய்கிறவர்களாகவும், தங்கள் கைகளை கழுவி சுத்தமாக வைத்திருப்பவர்களாகவும், மற்றும் அனுமதிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே உண்கிறவர்களாகவும் காணப்பட்டார்கள். ஆனால், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கண்டால், வெறுப்பிலும், பேராசையிலும், பொறாமையிலும் காமத்தால் நிறைந்ததாயும் இருந்தது. தன் பரிசுத்தம் பற்றி தானே புகழ்ந்துப் பேசி மனிதன் தேவனின் கட்டளைகளை அவமதித்தான்.

இந்த சிவில் சட்டத்தை மனிதன் தவறாக மாற்றியதால், தேவன் கொடுத்த தனக்கிருந்த அதிகாரத்தினால் இயேசு காரியத்தில் இறங்கினார். அந்த மக்களின் மாய்மால வாழ்க்கையை நீக்குவதற்காக எல்லா உணவுகளும் சுத்தமானவைகள் என்று அறிவித்தார், இதன் மூலம், உண்மையான பரிசுத்தம் என்பது உண்ணும் உணவினால் அல்ல, மனதில் ஏற்பட்டிருக்கும் பரிசுத்தமே உண்மையான பரிசுத்தம் என்பதை காட்டினார். இதன் காரணமாக, இயேசுவை பின்பற்றுகிறவர்களுக்கு எல்லா உணவுகளும் நல்ல உணவுகளே, அனுமதிக்கப்பட்டதே. இயேசு சொன்னதாக குர்‍ஆன் இவ்விதமாகச் சொல்கிறது:
 
"எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்; …." (குர்‍ஆன் 3:50)
 
பரிசுத்தம் பற்றி இயேசுவின் போதனையை புதிய ஏற்பாடு இவ்விதமாகச் சொல்கிறது:
 
அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு உணர்வில்லாதவர்களா? புறம்பேயிருந்து மனுஷனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாதென்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா? அது அவன் இருதயத்தில் போகாமல் வயிற்றிலே போகிறது; அதிலிருந்து எல்லாப் போஜனங்களின் அசுத்தங்களையும் கழிக்கிற ஆசனவழியாய் நீங்கிப் போகும். மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும், புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். (மாற்கு 7:18-23)
 
இந்த இடத்தில் ஒரு விவரத்தை குறிப்பிடவேண்டும், அதாவது இயேசு இந்த உலகத்தில் வந்துவிட்டதினால், இஸ்ரவேல் மக்கள் ஒரு பிரித்தெடுக்கப்பட்ட ஜனமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. உண்மையில், இயேசு உலகத்தில் உள்ள‌ எல்லா நாடுகளையும், மக்களையும் தேவனுக்குள் ஒன்றாக்கியுள்ளார். எல்லா நாட்டு மக்களும் இனி தேவனின் நன்னெறி சட்டங்களை (Moral Laws) பின்பற்றி வாழ்ந்து தேவனுக்கு முன்பாக பரிசுத்தவான்களாக வாழமுடியும். இயேசுவின் மக்களாகிய கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் பரவியிருப்பதாலும், அவர்கள் அதிகமதிகமாய் பெருகுவதாலும் இனி எல்லா நாட்டு மக்களுக்கும், கலாச்சாரத்திற்கு ஏற்ற ஒரு பொதுவான சிவில் சட்டம் இனி தேவையில்லை. ஏனென்றால், உலக மக்களின் சூழ்நிலைகள் வேறு, கலாச்சாரங்கள் வேறு, வாழும் இடமும், சீதோஷ்ண நிலையும் வேறு. எனினும், எல்லாருக்கும் பொருந்தக்கூடிய இயேசுவின் நன்னெறி போதனைகள் மாறாமல் அப்படியே உள்ளது. அது என்னவென்றால், நாம் உணவை தவிர்ப்பதினால் சர்வ வல்லவருக்கு மகிமை உண்டாக்கப்போவதில்லை, ஆனால், தேவனுக்காகவும், தன் சக மனிதனுக்காகவும் இருதயத்தில் உண்டாகும் உண்மையான அன்பே, அதிக முக்கியமானது. இந்த சட்டமானது, எந்த நாட்டில் வாழ்பவனாக இருந்தாலும், உலகில் யாராக இருந்தாலும் சரி, அது அவனுக்கு பொருந்தக்கூடியதாக இருக்கிறது.

இங்கு ஒன்றை நாம் குறிப்பிட‌வேண்டும், மோசேயின் சிவில் ச‌ட்ட‌ங்க‌ள் இஸ்ர‌வேல் வ‌ம்ச‌த்தாருக்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌து. இன்றுள்ள‌ கிறிஸ்த‌வர்க‌ளில் அனேக‌ர் இஸ்ர‌வேல் வ‌ம்ச‌த்தில் பிற‌ந்த‌வ‌ர்க‌ள் அல்ல‌. இத‌னால், இஸ்ரவேல் ச‌முதாய‌ "சிவில் ச‌ட்ட‌திட்ட‌ங்க‌ளுக்கு" கிறிஸ்தவர்கள் அப்பாற்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் ஆவார்கள்.

சில நேரங்களில் கிறிஸ்தவர்கள் பன்றி மாமிசம் சாப்பிடாமல் இருப்பது நல்லது. அதாவது, தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள பன்றிகள் கழிவுகளையும், இதர குப்பை கூளங்களையும் சாப்பிட்டு வளவதாக‌ கிறிஸ்தவர்கள் அறிய வந்தால், உடல் ஆரோக்கியத்தை மனதில் கொண்டவர்களாக‌, பன்றியின் மாமிசம் சாப்பிடாமல் இருக்கவேண்டும். நாம் நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதும் கூட‌ தேவனுக்கு பிரியமான செயலாக இருக்கிறது.

இஸ்ரவேல் அல்லாத அந்நிய ஜனங்களுக்கும் கட்டாயமாக‌ சுவிசேஷம் சொல்லவேண்டும் என்பதை அப்போஸ்தலர் பேதுரு உணரவேண்டும் என்பதற்காக "குறிப்பிட்ட மிருக மாமிசத்தை உண்ணுங்கள்" என்ற பழைய ஏற்பாட்டின் கட்டளையை குறிப்பிட்டு, இயேசு ஒரு தரிசனத்தை பேதுருவிற்கு கொடுத்து அவரை அந்நிய ஜனங்களுக்கும் சுவிசேஷம் சொல்லும் படி தயார்படுத்தினார். அப்போஸ்தலர் நடபடிகள் 10ம் அதிகாரத்தில் இந்த நிகழ்ச்சி விவரமாக சொல்லப்பட்டுள்ளது. அந்த தரிசனத்தின் மூலமாக பேதுரு தெரிந்துக்கொண்ட ஒரு தீர்மானத்தை 28ம் வசனத்தில் நாம் காணலாம்.
 
அப்போஸ்தலர் நடபடிகள் அதிகாரம் 10

11 வானம் திறந்திருக்கிறதாகவும், நாலுமுனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒருவிதமான கூடு தன்னிடத்தில் இறங்கித் தரையில் விடப்பட்டிருக்கிறதாகவும்,

12 அதிலே பூமியிலுள்ள சகலவிதமான நாலுகால் ஜீவன்களும், காட்டுமிருகங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருக்கிறதாகவும் கண்டான்.

13 அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் உண்டாயிற்று.

14 அதற்குப் பேதுரு: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை என்றான்.

15 அப்பொழுது: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே என்று இரண்டாந்தரமும் சத்தம் அவனுக்கு உண்டாயிற்று.

28 அவர்களை நோக்கி: அந்நிய ஜாதியானோடே கலந்து அவனிடத்தில் போக்குவரவாயிருப்பது யூதனானவனுக்கு விலக்கப்பட்டிருக்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; அப்படியிருந்தும், எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்.
 
அப்போஸ்தலர் நடபடிகள் 10ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சியின் முக்கியத்துவம் "அந்நிய ஜனங்கள் (யூதரல்லாதவர்கள்) அசுத்தமானவர்கள் என்று இனி கருதவேண்டாம்" என்பதைச் சொல்வதற்காகவே ஆகும். இதன் படி "சுத்திகரிப்பு சடங்குகள் சம்மந்தப்பட்ட சட்டங்கள்" இனி அமுலில் இல்லை என்பதை காட்டவேயாகும். ஏனென்றால், பழைய ஏற்பாட்டில் யார் யாரெல்லாம் "அசுத்தமான தடை செய்யப்பட்ட உணவை உட்கொள்கிறாரோ" அவர் யூதர்களுக்கு அசுத்தமாக இருப்பார் என்ற கட்டளை இனி செல்லாது என்பதை தெரிவிக்கவேயாகும். ஆக, யூதர்களையும், யூதரல்லாதவர்களாகிய அந்நிய ஜனங்களையும் பிரித்துக்காட்டும் உணவு சம்மந்தப்பட்ட சட்டங்கள் இனி அமுலில் இருக்காது அல்லது செல்லுபடியாகாது, என்று தெரிவிக்க போதுருவிற்கு இயேசு தரிசனத்தைக் கொடுத்தார்.

இதன்படி, அப்போஸ்தலர் நடபடிகள் 15ம் அதிகாரத்தில், பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின் படி, அப்போஸ்தலர்கள், அந்நிய ஜனங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டவர்களை "யூதர்களின் உணவு பற்றிய சட்டத்திட்டங்களிலிருந்து" விடுதலைக் கொடுத்தார்கள். இதே போல, 1 கொரிந்தியருக்கு எழுதிய கடிதத்தில், எல்லா உணவுகளையும் நாம் உண்ணலாம், ஆனால், பலவீனமான சகோதரரின் விசுவாசத்தையும், மனசாட்சியையும் கருத்தில்கொண்டு செய்யுங்கள் என்று அறிவுரை கூறப்பட்டுள்ளது.

ஆங்கில மூலம்: The Issue of Eating Pork



 

 

கருத்துகள் இல்லை: