ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

செவ்வாய், 20 ஜூலை, 2010

முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள்


முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)
 
கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
 
கேரளாவில் ஜோசப் என்ற பேராசிரியர், முஹம்மதுவை அவமதிக்கும் விதத்தில் கேள்வித் தாளை தயாரித்ததற்காக, இஸ்லாமியர்களில் சிலர் அவரது கையை துண்டித்தனர்.
 
இது சரியா தவறா?
 
ஒரு சாரார் "இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தியதால், இந்த தண்டனை அவருக்கு சரியானது" என்று கூறுவார்கள்.
 
இன்னொரு சாரார் "அவர் தான் மன்னிப்பு கேட்டுவிட்டாரே, கல்லூரியும் அவரை சஸ்பண்ஸ் செய்துவிட்டதே, பின் ஏன் அவருக்கு இந்த தண்டனையை தரவேண்டும்?" என்று கேட்பார்கள்.
 
இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
 
இதை படிக்கும் நீங்கள் இஸ்லாமியராக இருப்பீர்களானால், உங்கள் கருத்தென்ன?
 
ஒரு மார்க்கத்தினரின் மனதை புண்படுத்தினால், இதற்கு காரணமாக இருந்தவருக்கு இந்த தண்டனை சரியானது தான் (அவர் மன்னிப்பு கேட்டுவிட்டாலும் சரி) என்று கூறுகிறீர்களா?
 
அல்லது
 
கைகளை துண்டித்தவர்கள் கொடுமைவாதிகள் என்றுச் சொல்வீர்களா?
 
மேற்கொண்டு இந்த கட்டுரையை படிக்கலாமா வேண்டாமா?
 
ஒரு மார்க்கத்தை விமர்சித்து, அம்மார்க்கத்தவர்களின் மனதை புண்படுத்துபவருக்கு இந்த தண்டனை சரி தான், அவர் மன்னிப்பு கோரினாலும் விடக்கூடாது, இப்படித்தான் செய்யவேண்டும் என்றுச் சொல்பவர்கள் மட்டுமே மேற்கொண்டு இந்த கட்டுரையை படியுங்கள். அவர்களுக்காகத் தான் இக்கட்டுரை எழுதப்படுகின்றது.
 
இது கொடூரம், ஒரு சின்ன விஷயத்திற்காக, அதுவும் மன்னிப்பு கேட்டுவிட்ட பிறகும், சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு கொடூரமாக நடந்துக்கொள்வது காட்டுமிராண்டித் தனம் என்றுச் சொல்பவர்கள், மீதமுள்ள இந்த கட்டுரையை படிக்கவேண்டாம்.
 
.
.
.
.
.
.
இந்த வரியை படிக்கும் நீங்கள் ஒரு முஸ்லீமாக இருந்தால், நிதானத்தை இழக்காமல், நேர்மையான முறையில், ஒரு அமைதி மார்க்கத்தை பின்பற்றுகின்றவர்கள் என்றுச் சொல்லிக்கொள்ளுகின்றவர்கள் நீங்கள்   என்ற விவரத்தை மறந்துவிடாமல் மீதமுள்ள வரிகளை படிக்கவும்.
 
 
அதாவது, நாங்கள் அதிகமாக நேசிக்கும் நபியை அவர் எப்படி கேலி செய்யலாம்? எப்படி விமர்சிக்கலாம், எப்படி அவதூறாக எழுதலாம் என்பது தானே உங்கள் கோபம். 
 
உங்கள் கோபம் நியாயமானதா என்று சிந்தித்துப்பார்க்க உங்களுக்கு விருப்பமா?
 
உங்களின் கருத்துப்படி, ஒருவர் இன்னொருவரின் மார்க்கத்தை, அதன் ஆன்மீக தலைவரை விமர்சித்தால் (தெரிந்தும், தெரியாமலும் செய்தாலும் சரி) அவருக்கு தண்டனை தரவேண்டும்.
 
இந்த நிலையில் உள்ள நீங்கள் நேர்மையானவர்களாக இருப்பீர்களானால் மிகவும் நன்றாக இருக்கும், அது தான் நியாயமும் கூட. இதுவரை நிதானமாக படித்த நீங்கள், கீழ்கண்ட விவரங்களை படித்து கொதித்து எழவேண்டாம், அதற்கு பதிலாக, ஓர் இடத்தில் அமைதியாக உட்கார்ந்துக்கொண்டு, சிந்தித்துப் பாருங்கள். 
 
இதே மனநிலையில் இருந்த மக்கா மக்கள் (குறைஷிகள்): 
 
நீங்கள் மிகவும் நேசிக்கும் உங்கள் முஹம்மது வாழ்ந்த காலத்தில், அவர் இஸ்லாமை பரப்பும் போது, குறைஷிகளின் தெய்வங்கள் பற்றியும், நம்பிக்கைகள் பற்றியும் அவதூறாக பேசினார், அவர்களின் தெய்வங்கள்  வெறும் கற்கள் என்றுச் சொன்னார்.
 
இன்று இஸ்லாமியர்களுக்கு கோபம் வருவது போலவே அவர்களுக்கும் வந்தது, அவர்கள் முஹம்மதுவையும் , அவர்களின் அடியார்களையும், தோழர்களையும் கொல்லவும், கொடுமைப்படுத்தவும் ஆரம்பித்தனர். இதனால், உயிருக்கு பயந்து முஹம்மது மதினாவிற்கு இடம்பெயர்ந்துச் சென்றார்.
 
இப்போது நேர்மையானவர்களாகிய இஸ்லாமியர்களுக்கு சில கேள்விகள்:
 
1) மக்காவினரின் தெய்வங்கள் பற்றி அவதூறாக பேசியதற்காக, உங்கள் முஹம்மதுவை  அவர்கள் வெறுத்து,கொலை செய்ய முயற்சி செய்தது சரியா தவறா?  (கேரளாவின் ஜோசப்பிற்கு செய்தது சரி என்றுச் சொன்னால், முஹம்மதுவை மக்காவினர் விரட்டி அடித்ததும் சரியானது, நியாயமானது தானே) இதை அங்கீகரிக்கின்றீர்களா? இல்லையா?
 
2) ஒரு மார்க்கத்தாரின் மனதை புண்படுத்தியவர் யாராக இருந்தாலும், அவர் கைகள் துண்டிக்கப்படவேண்டும், இது தானே இஸ்லாமியராகிய உங்களின் மனநிலை. இதே மனநிலையில் அக்காலத்தில் மக்காவினரும் இருந்தனர்.  ஆக, இஸ்லாமியர்களும் முஹம்மதுவிற்கு தொல்லை கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்த மக்காவினரும் ஒரே  இரகத்தைச் சார்ந்தவர்கள். இதை அங்கீகரிக்கின்றீர்களா?  
 
இல்லை! நாங்கள் அங்கீகரிக்கமாட்டோம் என்றுச் சொல்வீர்களானால், எந்த வகையில் நீங்கள் அவர்களை விட வித்தியாசமானவர்கள் என்று இஸ்லாமியரல்லாதவர்களாகிய எங்களுக்கு தெரிவியுங்கள்.
 
இப்போது நீங்கள் என்ன முடிவை எடுக்கப்போகிறீர்கள்?
 
அன்றைய மக்காவினரும், இன்றைய இஸ்லாமியர்களும் ஒன்றா?  அவர்கள் நடந்துக்கொண்ட விதமாகவே அல்லவா நீங்களும் இன்று நடந்துக்கொள்கிறீர்கள்! அப்படியானால், உங்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசமென்ன?
 
இன்று கேரளாவில் நடந்தது சரியே என்றுச் சொல்வீர்களானால், அன்று மக்காவில் நடந்ததும் சரியே. 
 
ஜோசப்பை சட்டத்தையும் மீறி இன்று இஸ்லாமியர்களில் சிலர்  கொடூரமாக தாக்கியது சரியே என்றுச் சொன்னால், அன்று மக்காவினர் முஹம்மதுவை கொடுமைப்படுத்தியதும் சரியே?
 
இதற்கு உங்களுடைய பதில் என்ன?
 
 (எந்த தெய்வம் உண்மை, எது பொய் என்பது இப்போது கேள்வி இல்லை,  இங்கு பிரச்சனை -   ஒரு மார்க்கத்தை ஒன்னொரு மார்க்கத்தவர்கள் விமர்சிக்கலாமா என்பது தான். அப்படி விமர்சித்தால், அவர் யாராக இருந்தாலும் [முஹம்மதுவாக இருந்தாலும் சரியே] இப்படியே சட்டத்தை மீறி தாக்கலாமா என்பது தான்).
 
உங்களுக்கும், மக்காவின் மக்களுக்கும் இடையே ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. நீங்கள் இருவரும் ஒரே வழியில் செல்கின்றவர்களாகவே தெரிகின்றனர்.
 
முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள்:
 
கிறிஸ்தவர்கள் உயிரினும் மேலாக மதிக்கும் இயேசுவைப் பற்றி அவதூறாக முஹம்மது பேசினார், குர்‍ஆனில் இன்றும வசனங்கள் உண்டு. இயேசு இறைவன் அல்ல என்றுச் சொல்லும் போதெல்லாம் கிறிஸ்தவ மார்க்கத்தார்களின் மனது புண்பட்டு இருக்கும்? இன்றும் புண்பட்டுக்கொண்டே இருக்கிறது,  வேதனை அடைந்துக் கொண்டே இருக்கிறது. அப்படி இருக்கும் போது, கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவின் கைகளை அன்று வெட்டவில்லை. ஏனென்றால், கிறிஸ்தவர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் இயேசுக் கிறிஸ்து "என்னை அவமானப்படுத்தும் நபர்களை நீங்களே தண்டியுங்கள்" என்றுச் சொல்லவில்லை. ஆகையால், அவர்கள் முஹம்மதுவின் கைகளை வெட்டவில்லை, வெட்ட மாட்டார்களும் கூட.
 
அது அப்படி இல்லை, உண்மையாகவே இயேசு ஒரு நபி மட்டும் தான், அவர் இறைவன் இல்லையே!  அதைத் தான் முஹம்மது விமர்சித்தார் என்று இஸ்லாமியர்கள் இன்று சொல்லுவார்கள். ஆனால், கேள்வி என்னவென்றால்,  சொல்லப்பட்ட செய்தி உண்மையா இல்லையா என்பது இப்போது பிரச்சனை இல்லை, ஒருவர் இன்னொரு மார்க்கத்தவர்களின் மனதை புண்படுத்தினால், அவருக்கு இந்த தண்டனையை அனைத்து மார்க்கத்தவர்ளும் கொடுக்கலாமா? முஹம்மதுவை ஒரு நபி என்று நீங்கள் மட்டும் தான் நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள், இதை நம்பாதவர்கள் முஹம்மதுவை விமர்சிக்கலாமா?
 
உலகத்தில் இஸ்லாமியர்கள் தவிர வேறு எந்த மார்க்கத்தவர்களும் முஹம்மதுவை ஒரு நபி என்று ஏற்றுக்கொள்வதில்லை, அல்லாஹ்வை ஒரு இறைவன் என்று ஏற்றுக்கொள்வதில்லை, காரணம் அவர் ஒரு பொய் நபி என்று அவர்கள் நம்புகின்றனர். அவரவருக்கு அவரவர் நம்பிக்கை உண்மையானதாக தெரியும்.
 
இன்று இஸ்லாமியர்களின் கருத்தின்படி, அன்று கிறிஸ்தவர்கள் செய்தது தவறு, அதாவது தங்கள் மார்க்கத்தை முஹம்மது விமர்சித்தால், அவர்களின் மனதை புண்படுத்தினால், ஒரு எட்டுப்பேர் சென்று அவரது கைகளை பிடித்து வெட்டியிருக்கவேண்டும், அது தான் சரியானது என்று இஸ்லாமியர்களாகிய நீங்கள் சொல்லமுடியுமா? (நீங்கள் நேர்மையானவர்களாக இருந்தால்?).
 
இன்று கூட கிறிஸ்தவத்தை விமர்சிக்கும் இஸ்லாமிய அறிஞர்களின் கைகளை கிறிஸ்தவர்கள் வெட்டவேண்டும்? ஆனால், செய்வதில்லை?
 
பைபிளை விமர்சிக்கும் ஜாகிர் நாயக்கின் கைகளை வெட்டித் தள்ளவும்,  அதே போல, விமர்சிக்கும் பீஜே அவர்களின் கைகளையும் வெட்டிவிடவும் 
வேண்டுமென்று, எந்த ஒரு கிறிஸ்தவ குழுவாவது கோஷமிட்டுக்கொண்டு வருகின்றதை பார்க்கமுடியுமா?

நம்முடைய எதிர்ப்பை தெரிவிப்பதற்கு விமர்சிப்பவர்களுக்கு  பதில் சொல்லப்போகிறோம், அதுவே போதும் . அதை விட்டுவிட்டு, கத்தியோடும், குண்டுகளோடும் திரிய கிறிஸ்தவர்கள் என்ன காட்டுமிராண்டிகளா?  மத நம்பிக்கயுள்ளவர்கள் மிருகத்திலிருந்து மனிதன் தோன்றினான் என்ற கோட்பாட்டை நம்புவதில்லை,  ஆனால், இஸ்லாமியர்களில் சில நல்ல இஸ்லாமியர்கள் மிருகங்களைப்போலவே நடந்துக்கொள்கிறார்கள்.
 
முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய யூதர்கள் (ஆண்கள்):
 
முஹம்மது யூதர்களையும்,அவர்களின் நம்பிக்கையையும் விமர்சித்தார், இஸ்லாமியர்களைப்போல யூதர்களும் கற்றுக்கொண்டு இருந்திருந்தால், வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று ஒரு கை பார்த்து இருப்பார்கள், ஆனால், அவர்கள் செய்யவில்லை.
 
இன்றைய இஸ்லாமியர்களின் மனநிலையின்படி, அவர்கள் முஹம்மதுவை தாக்கி,கொன்று அல்லவா இருக்கவேண்டும்? ஆனால், அவர்கள் அப்படி செய்யவில்லை. (ஆனால், ஒரு யூதப்பெண் முஹம்மதுவிற்கு விஷம் வைத்து கொன்று விட்டாள்,  இந்தப் பெண்ணும் முஹம்மதுவை கொல்ல வேண்டும் என்பதற்காக விஷம் வைக்கவில்லை, தன்னை பைபிளின் தேவன் தான் அனுப்பினார் என்றுச் சொல்லிக்கொண்டு இருக்கிறாரே இவர், இது உண்மையா என்பதை சோதிக்க விஷம், வைத்தாள், ஜெயித்தாள். முஹம்மதுவும் அல்லாஹ்வும் தோற்றனர்).
 
 
துண்டிக்கப்பட்டது கையா அல்லது இஸ்லாம் மீது மற்றவர்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையா?
 
இஸ்லாமுக்கு நல்லபெயர் கொண்டு வர வேண்டும் என்பதற்காக, பல இலட்சங்கள் செலவு செய்து,அனேக நிகழ்ச்சிகளை இஸ்லாமிய அறிஞர்கள் ஏற்பாடு செய்து, படாத பாடு படுகின்றார்கள். ஆனால், ஒரு சிலர் உங்கள் முஹம்மதுவின் வழியில் நடந்து இப்படி வெட்டிச் சாய்க்கிறார்கள். இஸ்லாமியரல்லாதவர்கள் இந்த நிகழ்ச்சி பற்றி என்ன நினைப்பார்கள்?  இஸ்லாம் அமைதி மார்க்கமென்று நினைப்பார்களா அல்லது வன்முறை மார்க்கமென்பார்களா?
 
இஸ்லாமியர்கள் சிந்திக்கவேண்டும்,  எத்தனை அமைதி நிகழ்ச்சிகளை இஸ்லாமியர்கள் நடத்தினாலும், சில நாட்களில் இஸ்லாமியரல்லாதவர்கள் மறந்துவிடுவார்கள், ஆனால், கேரளாவில் நடந்த நிகழ்ச்சியை மக்கள் முக்கியமாக இஸ்லாமியரல்லாதவர்கள் என்றென்றும் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்.  நல்ல பெயர் எடுக்க ஆண்டுகள் பிடிக்கும், கெட்ட பெயர் எடுக்க ஒரு நாள் போதும்.
 
ஆக, இந்த நிகழ்ச்சி மூலமாக மக்கள் புரிந்துக்கொண்டது என்ன? இஸ்லாமியர்களில் சிலர் வன்முறைவாதிகளாக இருக்கிறார்கள், இதற்கு அவர்களின் இஸ்லாமிய அறிஞர்களில் சிலர் காரணமாக இருக்கிறார்கள். மொத்தமாக பார்த்தால்,  ஜனநாயக நாட்டிலும், உண்மை இஸ்லாமிய முகம் காட்டப்பட்டுவிட்டது.
 
 
முடிவுரை: இதை நிதானமாக படித்த இஸ்லாமியரே, உங்கள் மார்க்கத்தை விமர்சித்தால், அவருக்கு தண்டனைத்தரவேண்டும் என்று அவேசம் கொள்ளும் நீங்கள், மற்றவர்களின் மார்க்கத்தை விமர்சிப்பது ஏன்?
 
உங்கள் முஹம்மது குறைஷிகளின் தெய்வங்களை ஏன் விமர்சித்தார், கிறிஸ்தவத்தையும், யூதர்களையும் ஏன் விமர்சித்தார்? உங்களுக்கு ஒரு நியாயம்,மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?
 
மற்றவர்கள் கையில் வாளை எடுக்கவில்லை என்ற காரணத்தால் நீங்கள் தப்பித்துக்கொண்டு உலகில் வாழ்ந்துக்கொண்டு வருகிறீர்கள். உங்களைப்போன்றே மற்றவர்களும் செய்தால், நாட்டில் இரத்தவெள்ளம் அல்லவா ஓடும்?  
 
இனியும், கொடுமையையும், வன்முறையையும் பின்பற்றுவதை விட்டுவிட்டு, மனிதர்களாக வாழ முயற்சி எடுங்கள்.. முடிந்தால்..!!!


5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஹாய் உமரண்ணா this is mist எப்படி இருக்கீங்கே? பார்த்து ரொம்பபபபப நாள் ஆயிடுச்சு இல்லையா? கொஞ்சம் வேலை பளு காரணமாக Net use பண்ண முடியலே.
சரி மேட்டருக்கு வருவோம் .

1) மக்காவினரின் தெய்வங்கள் பற்றி அவதூறாக பேசியதற்காக, உங்கள் முஹம்மதுவை அவர்கள் வெறுத்து,கொலை செய்ய முயற்சி செய்தது சரியா தவறா? (கேரளாவின் ஜோசப்பிற்கு செய்தது சரி என்றுச் சொன்னால், முஹம்மதுவை மக்காவினர் விரட்டி அடித்ததும் சரியானது, நியாயமானது தானே) இதை அங்கீகரிக்கின்றீர்களா? இல்லையா?

முழங்காலுக்கும் மொட்டை தலைக்கும் முடிச்சு போடுறதே ஒங்க வேலையா போச்சு, மக்காவினரின் தெய்வங்களை பற்றி அவதூறா பேச வில்லை முஹம்மத், அம்மக்களை அந்த சிலைகளை வணகுவதால் எந்த பயனும் கிடையாது என்பதைத்தான் எடுத்து சொன்னாரே தவிர அவதூறு ன்னு ஏன் அதுக்கு கலர் பூசுரீங்கே? உதாரணத்துக்கு உங்க ஆளுங்க சர்ச்சுலே இயேசு சிலை, மேரி சிலையெல்லாம் வச்சு பூஜை பண்றாங்க இல்லையா அதையே உங்க ஆளுங்கல்ல சில பேர் தப்புன்னு சொல்றது இல்லையா?

2) ஒரு மார்க்கத்தாரின் மனதை புண்படுத்தியவர் யாராக இருந்தாலும், அவர் கைகள் துண்டிக்கப்படவேண்டும், இது தானே இஸ்லாமியராகிய உங்களின் மனநிலை. இதே மனநிலையில் அக்காலத்தில் மக்காவினரும் இருந்தனர். ஆக, இஸ்லாமியர்களும் முஹம்மதுவிற்கு தொல்லை கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்த மக்காவினரும் ஒரே இரகத்தைச் சார்ந்தவர்கள். இதை அங்கீகரிக்கின்றீர்களா?

உமரண்ணா இஸ்லாம், மற்ற மதத்தினரின் கடவுள்களை திட்ட வேண்டாம் என்று இஸ்லாமியர்களுக்கு அறிவுறுத்துவது உங்களுக்கு தெரியாதா? ஏனெனில் அறியாமையில் அவர்களும் பதிலுக்கு உங்களை போல அல்லாஹ்வை திட்டி பாவத்தை சேர்த்து கொள்ளக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தானே! உமரண்ணா முதலில் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்து பார்க்க கத்து கொள்ளுங்கள், எல்லாத்தையும் ஒண்ணா போட்டு குட்டையை குழப்பி, நீங்களும் குழம்பி, ஏன் உங்க பின்னாடி அலையுற கொஞ்ச ஆளுங்களையும் குழப்பி what is this உமரண்ணா?


umar qouted:
நம்முடைய எதிர்ப்பை தெரிவிப்பதற்கு விமர்சிப்பவர்களுக்கு பதில் சொல்லப்போகிறோம், அதுவே போதும் . அதை விட்டுவிட்டு, கத்தியோடும், குண்டுகளோடும் திரிய கிறிஸ்தவர்கள் என்ன காட்டுமிராண்டிகளா? மத நம்பிக்கயுள்ளவர்கள் மிருகத்திலிருந்து மனிதன் தோன்றினான் என்ற கோட்பாட்டை நம்புவதில்லை, ஆனால், இஸ்லாமியர்களில் சில நல்ல இஸ்லாமியர்கள் மிருகங்களைப்போலவே நடந்துக்கொள்கிறார்கள்.

உமரண்ணா கிறிஸ்தவர்கள் காட்டு மிராண்டியை விட மோசமாக வரலாற்றில் நடந்து கொண்டதை எல்லாம் மறந்து விட்டீர்கள் போல! மனித குலத்துக்கு அழிவு ஏற்படுத்தியது மற்ற எல்லா மதத்தையும் விட உங்க ஆளுங்கதான் என்ற உண்மை மறந்துட்டீங்கே போலிருக்கு? காட்டு மிராண்டியாவது உடலை மறைக்க இலை,தழைகலை எல்லாம் பயன்படுத்துவான் ஆனால் இப்போ உங்க ஆளுங்க ( western country) மிருகம் மாதிரி நிர்வாணமாக ஊருக்குள்ள திரிவதை உமரன்னனுக்கு தெரியாது போலிருக்கு? உமரண்ணா உங்க கிறித்துவம் நல்வழி படுத்தியவர்களை விட கெட்டு அலைய விட்டதுதான் அதிகம்.

umar quoted:
(ஆனால், ஒரு யூதப்பெண் முஹம்மதுவிற்கு விஷம் வைத்து கொன்று விட்டாள், இந்தப் பெண்ணும் முஹம்மதுவை கொல்ல வேண்டும் என்பதற்காக விஷம் வைக்கவில்லை, தன்னை பைபிளின் தேவன் தான் அனுப்பினார் என்றுச் சொல்லிக்கொண்டு இருக்கிறாரே இவர், இது உண்மையா என்பதை சோதிக்க விஷம், வைத்தாள், ஜெயித்தாள். முஹம்மதுவும் அல்லாஹ்வும் தோற்றனர்).

உமரண்ணா தனக்கு விஷம் வாய்த்த அந்த பெண்ணை மன்னித்து விட்டு விட்டார் என்பதையும் சேர்த்து சொல்லுங்க, விஷம் சாப்பிட்டு மூணு வருஷம் கழித்து இறந்தால் அதுக்கு உங்க ஊருலே விஷம் சாப்பிட்டுதான் இறந்தார் என்று சொல்வீங்களா? காழ்ப்புணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?

umar quoted:
இஸ்லாமுக்கு நல்லபெயர் கொண்டு வர வேண்டும் என்பதற்காக, பல இலட்சங்கள் செலவு செய்து,அனேக நிகழ்ச்சிகளை இஸ்லாமிய அறிஞர்கள் ஏற்பாடு செய்து, படாத பாடு படுகின்றார்கள்.

உமரண்ணா benni hinn ன்னு ஒருத்தர் உங்க ஆளுதான் Evangelist ஒரு நிகழ்ச்சிக்கு எவ்வளவு செலவு பண்ணுவார்னு தெரியுமா உங்களுக்கு (ஆனால் அதை விட பல மடங்கு இயேசு பேரை சொல்லி சித்து வேலையெல்லாம் காட்டி சுருட்டுவார்) தெரியுமா? அதையெல்லாம் விடுங்க நம்ம மெரீனா கடற்கரையில் இருந்த சீரணி அரங்கத்தை இடிப்பதற்கு முன்பு வரை உங்க அல்லேலுயா கூட்டம் அடித்த கூத்துகளுக்கு எவ்வளவு செலவு தெரியுமா?

see you then bye.
mist.

நமக்குள்ள ஒரு பழைய கணக்கு இருக்கு தெரியுமா உமரண்ணா அதுக்கு எப்போ பதில் தருவதாக உத்தேசம்.

பெயரில்லா சொன்னது…

ஹாய் உமரண்ணா this is mist எப்படி இருக்கீங்கே? பார்த்து ரொம்பபபபப நாள் ஆயிடுச்சு இல்லையா? கொஞ்சம் வேலை பளு காரணமாக Net use பண்ண முடியலே.
சரி மேட்டருக்கு வருவோம் .

1) மக்காவினரின் தெய்வங்கள் பற்றி அவதூறாக பேசியதற்காக, உங்கள் முஹம்மதுவை அவர்கள் வெறுத்து,கொலை செய்ய முயற்சி செய்தது சரியா தவறா? (கேரளாவின் ஜோசப்பிற்கு செய்தது சரி என்றுச் சொன்னால், முஹம்மதுவை மக்காவினர் விரட்டி அடித்ததும் சரியானது, நியாயமானது தானே) இதை அங்கீகரிக்கின்றீர்களா? இல்லையா?

முழங்காலுக்கும் மொட்டை தலைக்கும் முடிச்சு போடுறதே ஒங்க வேலையா போச்சு, மக்காவினரின் தெய்வங்களை பற்றி அவதூறா பேச வில்லை முஹம்மத், அம்மக்களை அந்த சிலைகளை வணகுவதால் எந்த பயனும் கிடையாது என்பதைத்தான் எடுத்து சொன்னாரே தவிர அவதூறு ன்னு ஏன் அதுக்கு கலர் பூசுரீங்கே? உதாரணத்துக்கு உங்க ஆளுங்க சர்ச்சுலே இயேசு சிலை, மேரி சிலையெல்லாம் வச்சு பூஜை பண்றாங்க இல்லையா அதையே உங்க ஆளுங்கல்ல சில பேர் தப்புன்னு சொல்றது இல்லையா?

2) ஒரு மார்க்கத்தாரின் மனதை புண்படுத்தியவர் யாராக இருந்தாலும், அவர் கைகள் துண்டிக்கப்படவேண்டும், இது தானே இஸ்லாமியராகிய உங்களின் மனநிலை. இதே மனநிலையில் அக்காலத்தில் மக்காவினரும் இருந்தனர். ஆக, இஸ்லாமியர்களும் முஹம்மதுவிற்கு தொல்லை கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்த மக்காவினரும் ஒரே இரகத்தைச் சார்ந்தவர்கள். இதை அங்கீகரிக்கின்றீர்களா?

உமரண்ணா இஸ்லாம், மற்ற மதத்தினரின் கடவுள்களை திட்ட வேண்டாம் என்று இஸ்லாமியர்களுக்கு அறிவுறுத்துவது உங்களுக்கு தெரியாதா? ஏனெனில் அறியாமையில் அவர்களும் பதிலுக்கு உங்களை போல அல்லாஹ்வை திட்டி பாவத்தை சேர்த்து கொள்ளக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தானே! உமரண்ணா முதலில் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்து பார்க்க கத்து கொள்ளுங்கள், எல்லாத்தையும் ஒண்ணா போட்டு குட்டையை குழப்பி, நீங்களும் குழம்பி, ஏன் உங்க பின்னாடி அலையுற கொஞ்ச ஆளுங்களையும் குழப்பி what is this உமரண்ணா?


umar qouted:
நம்முடைய எதிர்ப்பை தெரிவிப்பதற்கு விமர்சிப்பவர்களுக்கு பதில் சொல்லப்போகிறோம், அதுவே போதும் . அதை விட்டுவிட்டு, கத்தியோடும், குண்டுகளோடும் திரிய கிறிஸ்தவர்கள் என்ன காட்டுமிராண்டிகளா? மத நம்பிக்கயுள்ளவர்கள் மிருகத்திலிருந்து மனிதன் தோன்றினான் என்ற கோட்பாட்டை நம்புவதில்லை, ஆனால், இஸ்லாமியர்களில் சில நல்ல இஸ்லாமியர்கள் மிருகங்களைப்போலவே நடந்துக்கொள்கிறார்கள்.

உமரண்ணா கிறிஸ்தவர்கள் காட்டு மிராண்டியை விட மோசமாக வரலாற்றில் நடந்து கொண்டதை எல்லாம் மறந்து விட்டீர்கள் போல! மனித குலத்துக்கு அழிவு ஏற்படுத்தியது மற்ற எல்லா மதத்தையும் விட உங்க ஆளுங்கதான் என்ற உண்மை மறந்துட்டீங்கே போலிருக்கு? காட்டு மிராண்டியாவது உடலை மறைக்க இலை,தழைகலை எல்லாம் பயன்படுத்துவான் ஆனால் இப்போ உங்க ஆளுங்க ( western country) மிருகம் மாதிரி நிர்வாணமாக ஊருக்குள்ள திரிவதை உமரன்னனுக்கு தெரியாது போலிருக்கு? உமரண்ணா உங்க கிறித்துவம் நல்வழி படுத்தியவர்களை விட கெட்டு அலைய விட்டதுதான் அதிகம்.

umar quoted:
(ஆனால், ஒரு யூதப்பெண் முஹம்மதுவிற்கு விஷம் வைத்து கொன்று விட்டாள், இந்தப் பெண்ணும் முஹம்மதுவை கொல்ல வேண்டும் என்பதற்காக விஷம் வைக்கவில்லை, தன்னை பைபிளின் தேவன் தான் அனுப்பினார் என்றுச் சொல்லிக்கொண்டு இருக்கிறாரே இவர், இது உண்மையா என்பதை சோதிக்க விஷம், வைத்தாள், ஜெயித்தாள். முஹம்மதுவும் அல்லாஹ்வும் தோற்றனர்).

உமரண்ணா தனக்கு விஷம் வாய்த்த அந்த பெண்ணை மன்னித்து விட்டு விட்டார் என்பதையும் சேர்த்து சொல்லுங்க, விஷம் சாப்பிட்டு மூணு வருஷம் கழித்து இறந்தால் அதுக்கு உங்க ஊருலே விஷம் சாப்பிட்டுதான் இறந்தார் என்று சொல்வீங்களா? காழ்ப்புணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?

umar quoted:
இஸ்லாமுக்கு நல்லபெயர் கொண்டு வர வேண்டும் என்பதற்காக, பல இலட்சங்கள் செலவு செய்து,அனேக நிகழ்ச்சிகளை இஸ்லாமிய அறிஞர்கள் ஏற்பாடு செய்து, படாத பாடு படுகின்றார்கள்.

உமரண்ணா benni hinn ன்னு ஒருத்தர் உங்க ஆளுதான் Evangelist ஒரு நிகழ்ச்சிக்கு எவ்வளவு செலவு பண்ணுவார்னு தெரியுமா உங்களுக்கு (ஆனால் அதை விட பல மடங்கு இயேசு பேரை சொல்லி சித்து வேலையெல்லாம் காட்டி சுருட்டுவார்) தெரியுமா? அதையெல்லாம் விடுங்க நம்ம மெரீனா கடற்கரையில் இருந்த சீரணி அரங்கத்தை இடிப்பதற்கு முன்பு வரை உங்க அல்லேலுயா கூட்டம் அடித்த கூத்துகளுக்கு எவ்வளவு செலவு தெரியுமா?

see you then bye.
mist.

நமக்குள்ள ஒரு பழைய கணக்கு இருக்கு தெரியுமா உமரண்ணா அதுக்கு எப்போ பதில் தருவதாக உத்தேசம்.

Isa Koran சொன்னது…

உங்க பதிவிற்கு பதிலை இந்த கட்டுரையில் எழுதியுள்ளேன், மிஸ்ட் .
அவர்களே.

"வன்முறைக்கு வக்காளத்து வாங்கும் மிஸ்ட் அவர்கள்"
http://isakoran.blogspot.com/2010/07/blog-post_21.html

Umar

Colvin சொன்னது…

ஹலோ மிஸ்ட் எனது கேள்வி ஒன்றுக்கும் நீங்கள் பதில் அளிக்கவில்லையே!
அதான் பலதார திருமணம்.
உங்கள் கண்மணி நாயகம் நடந்த வழியையே நீங்கள் பன்பற்ற தயாரா?
இலங்கையில் இருக்கும் அபலைப் பெண்களுக்கு வாழ்வு கொடுக்க தயாரா?
எத்தனை பெண்கள் வேண்டுமானாலும்
(ஆனால் 40 வயதிற்கும் மேல். பாவம் இவர்கள்.) உங்களுக்கு ஒன்றும் பெரிய இது விடயமாக இருக்கப் போவதில்லை.
தங்கிடமிருந்து சாதகமான பதில் வரும் என எதிர்பார்க்கிறேன்.

இன்ஷா அல்லாஹ் கண்மணி நாயகத்தின் வழியில் நடப்பீர்கள் என நம்புகிறேன்.

Justin சொன்னது…

//உமரண்ணா தனக்கு விஷம் வாய்த்த அந்த பெண்ணை மன்னித்து விட்டு விட்டார் என்பதையும் சேர்த்து சொல்லுங்க, விஷம் சாப்பிட்டு மூணு வருஷம் கழித்து இறந்தால் அதுக்கு உங்க ஊருலே விஷம் சாப்பிட்டுதான் இறந்தார் என்று சொல்வீங்களா? காழ்ப்புணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?//

சகோதரர் மிஸ்ட் அவர்களே மெல்ல கோல்லும் விஷம் SLOW POISON என்று உண்டு என்பதை உங்கள் குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் இஸ்லாமி அறிஞர்களுக்கு சோல்லிகோள்ளுகிறேன். அவ்விஷம் அணது முன்று வருடமோ இல்லை அதற்கு மேலாகவோ இண்சி இண்சிசாகா கோல்லும் என்பதை நாண் தேறிவித்து கோள்ள விரும்புகிண்ரேன்.

உதரணமாக குராண் வசணம்:-

பாகம் 3, அத்தியாயம் 51, எண் 2617

அனஸ்(ரலி) அறிவித்தார்.

யூதப் பெண் ஒருத்தி நபி(ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி(ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். 'அவளைக் கொன்று விடுவோமா?' என்று நபி(ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், 'வேண்டாம்" என்று கூறிவிட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன். (அல்-புகாரி)

அல்லாவின் தூதர் வியாதிப்பட்டு அதனால் மரித்துப்போனார், அப்படி வியாதிப்பட்ட கால கட்டத்தில், பிஷருடைய தாயார் அவரை பார்க்க வந்தார்கள், அவர்களிடம் ரஸுல் இப்படியாகச் சொன்னார்: "பிஷரின் தாயே, உங்கள் மகன் பிஷரோடு கெய்பர் என்ற இடத்தில் நான் உண்ட அந்த உணவினால், இப்போது கூட என் தொண்டை அறுந்துவிடும் போல வலியை உணருகிறேன்".

ஹிஜ்ரி 10ம் ஆண்டு ஹஜ்ஜின் போது, ”நீங்கள் உங்களது ஹஜ் கடமைகளை (என்னிடமிருந்து) கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான், எனது இந்த ஹஜ்ஜிற்குப் பிறகு ஹஜ் (செய்வேனா) மாட்டேனா என்பதை அறிய மாட்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிக்கொண்டிருந்தார்கள். (முஸ்லிம்) இந்த வசணம் முலம் முகமது தண் இரப்பு நேறுங்கிவருவதை உனர்ந்துள்ளதாக தேரிகிறது அல்லவா?