வியாழன், 28 ஜூலை, 2011
விவாதம் புரிய மறுக்கும் ஜாகிர் நாயக்கின் பொய் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு
டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் ஷாக்சி டைம்ஸ்(http://www.sakshitimes.org/) தளத்தின் பிரதிநிதி சகோதரர் ஜெர்ரி தாமஸ் அவர்களிடம் நேரடி விவாதம் புரிய மறுத்துவிட்டார். இருந்தபோதிலும், சகோதரர் ஜெர்ரி தாமஸ் அவர்கள் சென்னையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தி அந்த நிகழ்ச்சியில் ஜாகிர் நாயக் அவர்களின் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு பதிலை அளித்துள்ளார். அதன் வீடியோவை கீழ்கண்ட நான்கு பாகங்களாக பார்க்கலாம். இதனுடைய எழுத்துவடிவ தமிழாக்கம் கர்த்தருக்கு சித்தமானால் (வெளியிடப்படும்) வெளியிட்டால் அநேகருக்கு பிரயொஜனமாக இருக்கும். நான் முயற்சிக்கிறேன்.
ஜாகிர் நாயக் போன்றவர்கள் யார் சாது என்று பார்ப்பார்கள், யாருக்கு ஒன்றுமே தெரியாது என்று ஆராய்ச்சி செய்து, அப்படிப்பட்டவர்களிடம் நேரடி விவாதம் புரிய நான் தயார் என்பார்கள். ஆனால், இதோ நான் இருக்கிறேன் என்னிடம் விவாதம் புரியுங்கள் என்று ஜெர்ரி தாமஸ் போன்ற ஒருவர் எழுந்து நின்றால் அவர்களிடம் விவாதம் புரிய மாட்டார்கள்.
பாகம் 1: http://www.youtube.com/watch?v=Zb24XUmvopI
பாகம் 2: http://www.youtube.com/watch?v=6-gvEREm904
பாகம் 3: http://www.youtube.com/watch?v=tOcOOFX_L78
பாகம் 4: http://www.youtube.com/watch?v=TeZnzQd7zPw
Source: http://www.sakshitimes.org/index.php?option=com_content&task=view&id=557&Itemid=43
பாகம் 1:
பாகம் 2:
பாகம் 3:
பாகம் 4:
புதன், 27 ஜூலை, 2011
இன்னும் ரோஷம் வராத இஸ்லாமியர் மிஸ்ட்
//Mist said:அப்ப்பாடா ஒரு வழியா உமரன்னனுக்கு ரோஷம் வந்து மறுப்பு கட்டுரை என்ற பெயரில் ஏதோ எழுதியிருக்கிறார். //
திங்கள், 25 ஜூலை, 2011
Answering Ziya & Absar: “இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?” – Round 2
Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
முன்னுரை: இஸ்லாமியர்களின் வழிகாட்டியாகிய முஹம்மதுவிற்கு அனேக மனைவிகள் உண்டு. அவரது மனைவிகளின் வயது பட்டியல் 9 வயது சிறுமியிலிருந்து ஆரம்பிக்கும். இவர் சிலரை விரும்பியும் அவர்கள் இவரை நிராகரித்துள்ளனர். அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியைத் தான் புகாரி ஹதீஸ் எண் 5255 கூறுகிறது. இதைப் பற்றி ஒரு கட்டுரையை நான் எழுதியிருந்தேன் அதன் தொடுப்பு இங்கே உள்ளது : http://muhammadsunna.blogspot.com/2010/11/blog-post.html or http://isakoran.blogspot.com/2010/11/blog-post.html. இதற்கு பதில் என்ற பெயரில் ஒரு கட்டுரை வெளியானது. அதனை ஜியா மற்றும் அப்சர் என்பவர்கள் எழுதியுள்ளார்கள்.
ஜியாவும், அப்சரும் கிறிஸ்தவர்களின் தொடுப்பை கொடுக்க பயப்படுவது ஏன்?
கடந்த நான்கு ஆண்டுகளாக நான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன், இஸ்லாமியரல்லாதவர்கள் எழுதும் கட்டுரைகளுக்கு மறுப்பு என்றுச் சொல்லி இஸ்லாமியர்கள் எழுதுகிறார்கள். ஆனால், இஸ்லாமியரல்லாதவர்களின் தொடுப்பை கொடுக்க இவர்கள் பயப்படுகிறார்கள். இவர்கள் தளத்தில் படிக்கும் வாசகர்கள் இருபக்கத்திலும் எடுத்துவைத்த விவரங்களை படித்து, அலசி ஒருமுடிவிற்கு வர இவர்கள் விரும்புவதில்லை (மடியிலே கனமில்லையானால் வழியிலே பயமிருக்காது). உண்மை சொல்லும் எவனும் தன் வாசகருக்கு அனைத்து விவரங்களையும் கொடுக்க விரும்புவான், ஏனென்றால், அவனிடம் உண்மை உள்ளது என்ற நம்பிக்கை அவனுக்கு உண்டு. ஆனால், இஸ்லாமியர்கள், "நாங்கள் உண்மை தான் சொல்கிறோம், வேண்டுமானால், எதிராளியின் கட்டுரைகளை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள் என்றுச் சொல்லக்கூடிய அளவிற்கு அவர்கள் மார்க்கம் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை, அவர்கள் இறைத்தூதரின் வாழ்க்கை மீதோ, நடத்தைகள் மீதோ இவர்களுக்கு நம்பிக்கை இல்லை". இவர்கள் சொல்வதை மட்டுமே வாசகர்கள் படிக்கவேண்டும், எதிராளியின் தொடுப்பை கொடுக்க மாட்டார்கள்.
கிட்டத்தட்ட 99 சதவிகித இஸ்லாமியர்கள் இப்படித் தான் நடந்துக்கொள்கிறார்கள். இப்போது இப்படிப்பட்ட கூட்டத்துடன், ஜியா என்பவரும், அப்சர் என்பவரும் சேர்ந்துள்ளார்கள். இவர்கள் திருந்துவார்களா? பொதுமக்களை ஏமாற்றுவதில் இஸ்லாமியர்களின் ஆர்வம் அலாதியானது.
என் கட்டுரைக்கு மறுப்பு எழுதும் இஸ்லாமிய அறிஞர்களே, கொஞ்சம் பொது அறிவுடன் (காமண்ஸ் சென்ஸுடன்) என் கட்டுரையின் தொடுப்பை உங்கள் மறுப்பில் எழுதுவீர்களா? இனியும் கொடுக்க மறுப்பீர்களானால், "செவிடன் காதில் ஊதிய சங்கு, மழையில் நனைந்த எருமை மாடு" போன்ற பழமொழிகள் உங்கள் கட்டுரையை படிக்கும் வாசகர்களுக்கு ஞாபத்திற்கு வரும் என்பதில் சந்தேகமில்லை. எவ்வளவு சொல்லியும் திருந்தமாட்டார்கள் இஸ்லாமியர்கள் என்ற முடிவிற்கு வாசகர்கள் வருவார்கள்.
ஆனால், ஒன்றை இங்கு சொல்லவேண்டும், இஸ்லாமியர்கள் இஸ்லாம் பற்றி அதிகம் எழுத எழுத அனேக உண்மைகள் வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை. ஆண்டாண்டு காலமாக இஸ்லாமியர்கள் மறைத்துவைத்திருந்த உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகிறது.
உங்கள் இஸ்லாம் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், உங்கள் குர்ஆன் மீது உங்களுக்கு கொஞ்சமாவது நம்பிக்கை இருந்தால் என் தொடுப்புகளை கொடுங்கள். அப்படி கொடுக்கமாட்டோம் என்றுச் சொல்வீர்களானால்... நான் என்னச் சொல்ல... வாசகர்கள் இஸ்லாமை பற்றி என்ன நினைப்பார்கள்? சிந்தித்துப் பாருங்கள்.
(புதிய புதியதாக வரும் இஸ்லாமியர்களுக்கு இப்படி வேண்டுகோள் விடுத்து பார்த்துள்ளேன், இதுவரை யாரும் திருந்தியதாக தெரியவில்லை, இவர்கள் மட்டும் திருந்தி, காமண்ஸ் சென்ஸுடன் நடந்துக்கொண்டு சரித்திரம் படைப்பார்கள் என்று நம்புகிறேன்.)
இப்போது இவர்களின் கட்டுரைக்கு நம்முடைய மறுப்பை காண்போம்.
ஜியா & அப்சர் அவர்கள் எழுதியது:
திரு உமர் அவர்கள், இதற்கு முன்னர் ஒரு கட்டுரையில், தான் எவ்வாறு கட்டுரை வரைவதாக விவரித்து இருந்தார். அந்த கட்டுரையில், திரு உமர் அவர்கள்: "ஒரு கருத்தை விவரிப்பதற்கு முன் அந்த கருத்தை ஒன்றிய அணைத்து விவரங்களையும் அறிந்த பிறகே அந்த விளக்கத்தை வெளியிடுவதாக மாறு தட்டி கொண்டார்".
Source: http://isaakoran.blogspot.com/2011/04/prophet-marriage.html
உமர்:
ஆம், பீஜே அவர்கள் அறைகுறை ஞானத்துடன், கிறிஸ்தவம் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு நான் அளித்த பதில் கட்டுரையில் இப்படி அனேக முறை எழுதியுள்ளேன். எங்கள் கட்டுரையில் ஆதாரங்கள் அதிகமாக இருப்பதினால் தானே, எழுத்து விவாதம் வேண்டாம், நேரடி விவாதம் வா என்றுச் சொல்லி அழைக்கிறீர்கள். பீஜே அவர்களே, உங்கள் தகுதிக்கும் அனுபவத்திற்கு ஏற்றாற்போல, விமர்சனம் செய்யுங்கள், அறைகுறையாக பைபிளை படித்து விமர்சிக்கவேண்டாம் என்று அவருக்கு அனேக முறை அறிவுரை கூறியுள்ளேன்.
ஜியா & அப்சர் அவர்கள் எழுதியது:
ஆனால் இதற்கு மாறாக "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?"என்ற இந்த கட்டுரையை வெளியிடுவதற்கு முன்னர், இந்த கருத்துக்கு ஒன்றிய வேறு எந்த ஆதாரத்தையும் திரு உமர் அவர்கள் ஆராய்ந்து இந்த கட்டுரையை வரைந்ததற்கான எந்த சுவடையும் திரு உமர் அவர்கள் விட்டு வைக்கவில்லை. . இன்னும் அதிகபடியாக, புஹாரி தொகிர்ப்பில் இந்த ஹதீஸை எடுத்த திரு உமர் அவர்கள், இதற்கு முந்திய மற்றும் பிந்தைய ஹதீஸ்களை எதற்காக படிக்க மறுத்தார் என்பது நமக்கு வியப்பாக உள்ளது.அப்படி அவர் அந்த ஹதீஸ்களை படித்து இருப்பாராயின் எதற்காக அதை வெளியிடாமல் மறைத்தார் என்பது திரு உமர் அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் . திரு உமர் அவர்கள் வெளியிட்ட ஹதீஸ் 5255 , திரு உமர் அவர்கள் வெளியிட மறுத்த ஹதீஸ்கள் 5254 ,5256 & 5257 :Formats are mine
உமர்:
நான் வெளியிட்ட புகாரி ஹதீஸ் எண் 5255 ஆகும். நான் வெளியிடாமல் மறைத்த ஹதீஸ் என்று நீங்கள் கூறும் ஹதீஸ்கள் 5254 ,5256 & 5257 என்பவைகளாகும். இப்போது என் கேள்விகள் என்னவென்றால், ஹதீஸ் எண் 5255ல் சொல்லப்படாத புதிய விவரம், அல்லது முக்கியமான விவரம் ஏதாவது ஹதீஸ்கள் 5254 ,5256 & 5257 என்பவைகளில் உண்டா? இந்த கேள்விக்கு பதிலை நாம் தெரிந்துக்கொண்டால், இவர்கள் மறுப்புக் கட்டுரை எழுதி தங்கள் நேரத்தை வீணடித்துக்கொண்டார்கள் என்பது புரிந்துவிடும். வாசகர்களை திசை திருப்புவதற்காகவே மறுப்பு எழுதுகிறார்கள் என்பது புரியும்.
மேலே கண்ட பத்திகளில், நான் சில விஷயத்தை வேண்டுமென்றே மறைப்பதற்காக சில ஹதீஸ்களை மேற்கோள் காட்டவில்லை என்பதை மிகவும் சத்தமாக சொல்லிவிட்டு, அதற்கு முரண்படும் வண்ணமாக, கீழ்கண்ட விமர்சனத்தை வைக்கிறார்கள். வாசகர்கள் கவனத்திற்கு, கீழ்கண்ட அவர்களின் விமர்சனத்தில் முதல் வரியில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை கவனிக்கவும். அதாவது "திரு உமர் அவர்கள் வெளியிட்ட ஹதீஸ் ஆதாரத்திலும்" வந்த செய்தி "தாங்கள் காட்டும் ஹதீஸ்களிலும் உண்டு " என்று ஒப்புக்கொள்கிறார்கள்.
இப்படி ஒப்புக்கொள்ளும் நீங்கள் எதற்காக மேற்கண்ட பத்தியில் என் மீது குற்றம் சுமத்துகிறீர்கள்?
மறைத்துவிட்டார் என்று குற்றம் சாட்டுகிறீர்கள்?
நீங்களே குற்றம் சுமத்துவது, மறுபடியும் நீங்களே அதற்கு முரண்படுவது.
இவர்களைத் தான் இஸ்லாமியர்கள் என்று நாம் கூறலாம். இப்போது அவர்கள் எழுதியதை படியுங்கள், முதல் வரியை கவனமாக படிக்கவும்.
ஜியா & அப்சர் அவர்கள் எழுதியது:
திரு உமர் அவர்கள் வெளியிட்ட ஹதீஸ் ஆதாரத்திலும், இன்னும் மேலே கோடிட்ட ஹதீஸ்களிலும், அல்ஜவ்ன் குலத்துப் பெண்ணான உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் என்பவருடன், முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு, இதற்கு முன்னரே முறையே திருமணம் ஒப்பந்தம் முடிந்து இருந்தது என்பதை தெளிவாக அறிவிக்கிறது. இதை கைப்பிடி சோற்றில் பூசணியை மறைக்கும் முயற்சியாக, திரு உமர் அவர்கள் தனக்கே உரிய வார்த்தை ஜாலத்தை முன் வைத்து மறைக்க முயன்றுள்ளார் .
உமர்:
1) மக்கள் அறிந்துக்கொள்ளக்கூடாது என்று உமர் மறைத்த (இஸ்லாமியர்களின் படி) அந்த விஷயம் என்ன?
திரு ஜியா மற்றும் அப்சர் அவர்களின் ஆராய்ச்சியின் படி, நான் மேற்கோள் காட்டாத ஹதீஸ்களில் சில உண்மைகள்/இரகசியங்கள் மறைந்துள்ளதாம். அதனை மக்கள் படிக்கக்கூடாது என்று நான் நினைத்து மறைத்தேனாம்.
ஆனால், நான் அவர்களிடம் கேட்கும் கேள்வி என்னவென்றால். நீங்கள் மேற்கோள் காட்டிய ஹதீஸ்களில் இருக்கும் திருமண ஒப்பந்த விவரம், நான் மேற்கோள் காட்டிய ஹதீஸில் இல்லையா?
நாம் மேற்கோள் காட்டிய ஹதீஸிலும் அந்த விவரம் உள்ளது. இதனை நீங்களே அங்கீகரித்துள்ளீர்கள். வாசகர்களின் கவத்திற்காக எல்லா ஹதீஸ்களிலும் திருமண இப்பந்த விவரம் உண்டு என்பதை மேற்கோள் காட்டவிரும்புகிறேன்.
2) அவர்கள் குறிப்பிட்ட ஹதீஸ்களோடு நான் காட்டிய ஹதீஸையும் ஒப்பிட்டு பார்ப்போம்
புகாரி ஹதீஸ் எண்: 5254: ….. "அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் (திருமணத்திற்குப் பின் தாம்பத்திய உறவிற்காக) உள்ளே அனுப்பியபோது…"
புகாரி ஹதீஸ் எண்: 5256. & 5257: …"நபி(ஸல்) அவர்கள் உமைமா பின்த் ஷராஹீல் என்ற பெண்மணியை மணமுடித்தார்கள்":…
இப்போது நான் மேற்கோள் காட்டிய ஹதீஸை படியுங்கள். இந்த ஹதீஸிலும் திருமண ஒப்பந்தம் பற்றி சொல்லியுள்ளது.
புகாரி ஹதீஸ் எண்: 5255
பாகம் 6, அத்தியாயம் 68, எண் 5255
அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) 'அஷ்ஷவ்த்' (அல்லது 'அஷ்ஷவ்ழ்') என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம்.
அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இங்கேயே அமர்ந்திருங்கள்' என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அப்பெண்(ணின் பெயர்) உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். (அப்பெண்ணுக்கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி(ஸல்) அவர்கள் நுழைந்து 'உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!' என்று கூறினார்கள். அந்தப்பெண் 'ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?' என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி 'கண்ணியமான (இறை) வனிடம் தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், 'அபூ உசைதே! இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய்விட்டு விடு' என்று கூறினார்கள்
இந்த ஹதீஸில் அந்த திருமண ஒப்பந்தம் சம்மந்தப்பட்ட வரிகள் உங்களுக்கு தெரிகின்றதா?
அருமை இஸ்லாமிய சகோதரரே, நான் கொடுத்த ஹதீஸில் ஏற்கனவே திருமண ஒப்பந்தம் சம்மந்தப்பட்ட விவரம் மட்டுமல்ல இன்னும் அதிகபடியான விவரங்கள் உள்ளன. ஆகையால் இந்த ஹதீஸை நான் தெரிந்தெடுத்து பதித்தேன். ஒரே விவரத்தைச் சொல்லும் எல்லா ஹதீஸ்களையும் நாம் பதிக்கவேண்டிய அவசியமில்லை.
ஒரு வேளை நான் காட்டிய ஹதீஸில் திருமணம் சம்மந்தப்பட்ட வரிகள் ஒன்றும் இல்லாமல் இருந்து, நீங்கள் காட்டிய ஹதீஸில் அந்த திருமண ஒப்பந்தம் பற்றி சொல்லியிருந்தால் என் மீது நீங்கள் குற்றம் சுமத்தலாம். ஏன் எல்லா ஹதீஸ்களையும் இவர் படிக்கவில்லை, அல்லது பதிக்கவில்லை. அறைகுறை விவரம் இருக்கும் ஹதீஸை மட்டும் பதித்தார் என்று கேட்கலாம் . ஆனால், நான் பதித்த ஹதீஸில் திருமண ஒப்பந்த வரிகளும் உண்டு, இன்னும் அதிகமான விவரங்களும் உண்டு. அதாவது தன் சகாக்களை ஒரு இடத்தில் உட்கார வைத்துவிட்டு, இவர் உடலுறவு கொள்வதற்காகச் சென்ற விவரமும் உண்டு. ஆகையால், உங்களிடம் நான் சவால் விட்டு கேட்கிறேன், "நான் மேற்கோள் காட்டிய ஹதீஸீல் இல்லாத முக்கியமான விஷயம் மற்ற ஹதீஸ்களில் உண்டா"?
இந்த திருமண விவரம் பற்றி நான் மேற்கோள் காட்டிய ஹதீஸில் மட்டுமல்ல, நான் முன்வைத்த கேள்விகளில் கூட இதனை நான் விவரித்துள்ளேன் . (இதையெல்லாம் வாசகர்கள் படித்து எங்கே உண்மை தெரிந்துக்கொள்வார்கள் என்பதால் தானே நீங்கள் என் கட்டுரையின் தொடுப்பை கொடுப்பதில்லை?)
நான் என் முதல் கட்டுரையில் இதைப் பற்றி முன்வைத்த சில கேள்விகள்: (எண் 11, 12, 13, 14, 16,15, 21, 22, 23)
இந்த கேள்விகள் அனைத்து திருமண ஒப்பந்தம்/திருமணம் பற்றியுள்ளதாகும். இந்த கட்டுரையை நான் எழுதிய முழு நோக்கத்தை 21ம் கேள்வியில் சுருக்கமாக சொல்லியுள்ளேன். அதாவது, பிள்ளைகளின் அனுமதியின்றி, அவர்கள் சிறுமிகளாக இருக்கும் பொது பெற்றோர்களுடன் 50 வயதை தாண்டியவர் திருமண ஒப்பந்தம் போடுவது, அச்சிறுமிகளுடன் உடலுறவு கொள்ள செல்வது போன்ற கீழ்தரமான செயல்கள் ஒரு நபிக்கு தகுதியானதா என்பது தான் சுருக்கம். இதே கேள்விகளை இந்த கட்டுரையிலும் முன்வைக்கிறேன். இப்படி செய்வது ஒரு நபிக்கு தகுதியானது தான் என்பதை நீங்கள் நிருபியுங்கள்.
11) முஹம்மது அந்தப் பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள ஒப்பந்தம் புரிந்திருந்தாரா ?
12) திருமண ஒப்பந்தம் புரியும் போதும் மணப்பெண்ணுடைய விருப்பம் தெரிவிக்க வேண்டியது அவசியமா இல்லையா?
13) திருமணத்திற்கு "ஆம்" சொல்லி அந்தப் பெண் சொல்லியிருந்தால் , இப்போது மட்டும் ஏன் "முஹம்மதுவை இடையன்" என்றுச் சொல்லி மறுக்கிறாள்?
14) திருமண ஒப்பந்தம் முறைப்படி நடந்திருந்தால் , இந்தப்பெண் அதற்கு ஒப்புதல் அளித்து இருந்திருந்தால், இப்போது மட்டும் ஏன் அப்பெண் முஹம்மது தன்னைத் தொடவும் அனுமதி அளிக்கவில்லை?
15) திருமண ஒப்பந்தம் செய்த முஹம்மது ஏன் இந்தப்பெண்ணை தன் சொந்த வீட்டில் தங்க வைக்காமல், ஏதோ ஊருக்கு வெளியே அல்லது ஒரு தோட்டத்திற்குள்ளே தனியாக தங்க வைத்தார்? (பெரிய பணக்காரர்கள் தங்கள் வைப்பாட்டிகளை லாட்ஜில் தங்க வைப்பதுப் போல).
16) நியாயமான திருமணம் என்று இதனை முடிவு செய்தால், குறைந்த பட்சம், பெண் வீட்டிலாவது தங்க வைத்து இருந்திருக்கவேண்டுமே?
21) தன் வலிமையை பயன்படுத்தி பெற்றோர்களை பயப்படவைப்பது, உன் பெண்ணை நான் திருமணம் செய்துக்கொள்கிறேன் என்றுச் சொல்லி ஒப்பந்தம் ஒன்று போடுவது, அந்த பெண்ணை தனியே எங்கேயோ ஒரு அறையில் தங்க வைக்கச் சொல்வது, பிறகு அந்த பெண்ணோடு உடலுறவு கொள்ள அங்குச் செல்வது, அப்பெண் மறுத்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரினால், உடனே விவாகரத்துச் செய்துவிட்டு சென்றுவிடுவது. இது தான் ஒரு நபிக்கு இருக்கவேண்டிய குணமா? இது தான் உலக மக்கள் பின்பற்றத் தகுந்த ஒரு நல்ல நடத்தையா?
22) திருமணம் என்றுச் சொன்னால், பெண்ணை கேட்காமல் திருமண ஒப்பந்தம் போடுவது, பிறகு உடலுறவிற்கு அப்பெண்ணிடம் செல்வது இதுதான் முஹம்மதுவைப் பொறுத்தமட்டில் திருமணமா?
23) முஹம்மதுவின் ஒவ்வொரு திருமணத்திற்கும் ஒரு நல்ல காரணம் இருக்கும், ஒரு நியாயமான காரணம் இருக்கும், மற்றவர்களின் நன்மை அடங்கியிருக்கும் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள் இந்த மேற்கண்ட ஹதீஸில் சொல்லப்பட்ட திருமண ஒப்பந்தம் மூலமாக, எந்த நன்மை யாருக்கு உண்டாகி இருந்தது என்று விளக்க கடமைப்பட்டுள்ளார்கள்?
ஆக, நான் காட்டிய ஹதீஸ் 5255ல் திருமண ஒப்பந்தம் பற்றி சொல்லப்பட்டுள்ளது என்பது இப்போது உங்களுக்கு விளங்கியிருக்கும். எனவே, நான் ஒன்றையும் மறைக்கவில்லை. மறைக்கவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. இந்த ஹீஸ்கள் பற்றி, இந்த கட்டுரையைப் பற்றி இன்னொரு ரவுண்ட்க்கு நான் ரெடி. தைரியமிருதால், உங்கள் இஸ்லாம் மீது நம்பிக்கை இருந்தால் என் கட்டுரைகளின் தொடுப்புக்களை கொடுத்து பதில் அளியுங்கள். (இல்லை இல்லை, நாங்கள் கோழைகள், எங்கள் நபி மீதோ, குர்ஆன் மீதோ எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்வீர்களானால், என் கட்டுரையின் தொடுப்பை கொடுக்காமல் எழுதுங்கள்).
நீங்கள் இஸ்லாம் பற்றி அதிகம் எழுத எழுத இன்னும் அதிகமாக முஹம்மதுவின் வாழ்வு நாறும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்றால், அவர் அப்படி வாழ்ந்துச் சென்றுள்ளார்.
இப்போது இந்த கீழ்கண்ட கேள்விகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். விவரங்களை சேகரித்துச் சொல்லுங்கள்.
1. அந்தப் பெண் "பெண்ணா? அல்லது சிறுமியா?"
2. அந்தப் பெண்ணுக்கு மேற்கண்ட நிகழ்ச்சி நடக்கும் போது எவ்வளவு வயது இருந்திருக்கும்?
3. அந்தப் பெண்ணோடு ஏன் செவிலித்தாய் வந்தார்கள்?
4. அன்றைய காலக் கட்டத்தில் ஒரு செவிலித்தாய் எத்தனை ஆண்டுகள் தாங்கள் பால் கொடுத்த குழந்தைகளோடு இருப்பார்கள்? வாழ்நாள் எல்லாம் இருப்பார்களா அல்லது இரண்டு ஆண்டுகள் இருப்பார்களா அல்லது ....?
5. முஹம்மதுவிற்கு அந்த சமயத்தில் எவ்வளவு வயது இருந்திருக்கும்?
எழுத்து விவாதம் பற்றி கேட்டு இருந்தீர்கள், எனக்கு எது பாதுகாப்போ அதையே நான் செய்வேன். உங்களால் பதில் சொல்லமுடிந்தால் எழுத்து வடிவில் சொல்லுங்கள். இல்லையேல், விட்டுவிடுங்கள், யாருக்கு அதிக பாதிப்பு என்பதை கவனத்தில் கொண்டு, எழுத ஆரம்பியுங்கள்.
(எழுத்துக்கள் மூலமாக இஸ்லாமுக்கு எவ்வளவு பாதிப்பு என்பதை அறிய, திரு பீஜே அவர்களை ஒரு முறை கேட்டுப்பாருங்கள், உங்களுக்கு புரியும். கிறிஸ்தவர்களின் கேள்விகளுக்கு பதிலே அளிக்காதீர்கள், உமரை நிர்பந்தப்படுத்துங்கள், நேரடி விவாதம் வரும் வரை பதில் அளிக்காதீர்கள் என்று சவால் விட்ட வீரர், நான் சொன்னபடியே ஒரே ஆண்டுக்குள் புதிய தளம் ஆரம்பித்துவிட்டார், எவ்வளவு பயந்துள்ளார் என்பதை அவர் நன்கு அறிவார்).
இந்த மறுப்பின் சுருக்கம்:
1) நான் மேற்கோள் காட்டிய ஹதீஸில் தேவையான விவரங்கள் உள்ளது.
2) மற்ற ஹதீஸ்களை காட்டவேண்டிய அவசியமில்லை, ஹதீஸ் எண் 5255 மட்டுமே போதும், திருமண ஒப்பந்தம் பற்றிய விவரம் அறிய.
3) நான் மேற்கோள் காட்டிய ஹதீஸ்லிருந்து, அந்த திருமண விவரம் பற்றிய வரிகளை நான் நீக்கிவிட்டு மேற்கோள் காட்டியிருந்தால், என் மீது குற்றம் சுமத்துவது நியாயமானது. ஆனால், நான் எதையும் நீக்கவில்லை.
4) என் கேள்விகளை பல கோணங்களில் நான் கேட்கிறேன், அவைகளில் ஒரு கோணத்தில், திருமண ஒப்பந்தத்தை அங்கீகரித்தும் கேள்விகளை கேட்டுள்ளேன், எனவே, நான் எதையும் மறைக்கவில்லை. நீங்கள் தான் இஸ்லாமின் மானம் போகுது என்பதால் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், என் கட்டுரையின் தொடுப்பை கொடுக்க தெம்பு இல்லாமல், மழுப்பி எழுதியிருக்கிறீர்கள்.
5) முக்கியமான நான் கேட்க விரும்புவது, 10க்கும் அதிகமாக மனைவிகள் இருக்கும் ஒரு மனிதர், சிறுமிகள் என்றும் பார்க்காமல், இருதயமே இல்லாமல் திருமணம் செய்துக்கொள்ளும் ஒரு நபர், போரில் பிடிபடும் பெண்களோடு திருமணம் செய்துக்கொள்ளாமல் உடலுறவு கொள்ளும் ஒரு நபர், 50க்கும் அதிமான வயதில் இன்னும் மனைவிகள் தனக்கு வேண்டும் என்பதற்காக, பல திருமணம் ஒப்பந்தங்களை பெற்றோர்களிடம் போட்டுவிட்டு, அப்பெண்களிடம் அல்லது சிறுமிகளிடம் உடலுறவு கொள்ளப்போகும் ஒரு நபர், நாம் பின் பற்றத் தகுந்த நல்ல மாதிரியானவர் என்பதை எப்படி அங்கீகரிப்பது?
முஹம்மதுவிற்கு இருந்த மனைவிகள் 11 அல்லது 12 பேர் மட்டும் தான் என்று எல்லாரும் நினைக்கிறார்கள், இவர்கள் அவரோடு வாழ்ந்தவர்கள். ஆனால், திருமணம், விவாகரத்து மற்றும் திருமண ஒப்பந்தம் புரிந்து பாதியிலேயே கழற்றிவிட்ட நிகழ்ச்சிகள் என்று மொத்தம் 30 பெண்களுக்கும் அதிகமான பெண்கள் இம்மனிதரின் வாழ்க்கையில் இருக்கிறார்கள்.
இதனை இஸ்லாமிய நூல்களே நமக்கு தெரிவிக்கின்றன.
இதனை அறிய படியுங்கள்: http://www.muslimhope.com/WhyDidMohammedGetSoManyWives.htm
இஸ்லாமிய நூல்களின் படி முஹம்மது யார் யாரை விவாகரத்து செய்துள்ளார், ஏன் செய்துள்ளார் போன்றவைகளை இந்த கட்டுரையில் படிக்கலாம். முஹம்மதுவை இஸ்லாமிய நூல்கள் ஒரு சிறந்த மனிதர் போல காட்டினால், அதனை இஸ்லாமியர்கள் ஆஹா ஓஹோ என்பார்கள், ஆனால், அதே இஸ்லாமிய நூல்களில் அவருடைய இருண்ட வாழ்க்கை சொல்லப்பட்டு இருந்தால், இந்த நூல் இஸ்லாமிய நூல் இல்லை, இதனை நாங்கள் நம்பமாட்டோம் என்று பல்டி அடிப்பார்கள். ஆனால், சரித்திரத்திற்கு வலிமை அதிகம் என்பதை இவர்கள் அறியவேண்டும், ஒரு முறை வாழ்ந்தது வாழ்ந்தது தான். அதனை திருப்பிப்போட யாராலும் முடியாது.
இப்படி முப்பதுக்கும் அதிகமான பெண்களோடு சம்மந்தமுள்ளவர் (திருமண வாழ்க்கையோ/வைப்பாட்டியோ/திருமணம் ஒப்பந்தம் பிறகு விவாகரத்தோ) நமக்கு வழிகாட்டியாக இருக்கமுடியுமா? மூளை இருப்பவர்கள் சிந்திக்கட்டும்.
உங்களின் அடுத்த கட்டுரையில் சந்திக்கும் வரைக்கும்…
உமர்
சனி, 23 ஜூலை, 2011
இஸ்லாமை முதல்முறையாக ருசி பார்த்த முன்னால் கிறிஸ்தவர்
வியாழன், 21 ஜூலை, 2011
நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
மனிதன் இயற்கையாகவே மதப்பற்று உடையவன் என்று நாம நம்புகிறோம், ஆனால், இந்திய மண்ணில் மதப்பற்றின் வாசனை கொஞ்சம் அதிகம் என்றே சொல்லலாம்.
நம் நாட்டில் சாப்பாட்டிற்கு பஞ்சமுண்டு ஆனால் சாமியர்களுக்கு பஞ்சமில்லை. சமீப காலத்தில் நித்யானந்தா என்ற சாமியாரின் செயல்கள் பற்றி நாம் செய்தித்தாளில் படித்துள்ளோம். அவர் திருமண பந்தத்திற்கு வெளியே, தன்னை ஒரு மகான் என்று நம்பும் மக்களின் நம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டுள்ளார்.
விஷயத்திற்கு வருகிறேன், இஸ்லாமிய அறிஞர் பீஜே அவர்கள், நித்யானந்தாவிற்கு தமிழ் நாட்டு காவல் துறை "மரியாதை செய்ததையும், அவருக்கு ஆதரவாக பேசியதையும்" கண்டித்து கண்டணம் வெளியிட்டுள்ளார். இந்த கண்டனத்தை படிக்கும் போது, நல்ல வேலையை பீஜே செய்துள்ளார் என்று சொல்லத் தோன்றுகிறது. அதாவது, மக்கள் நல்லவர் என்று நம்பும் ஒருவர், இப்படி கீழ்தரமான செயல்கள் புரிந்துள்ளதை கண்டிப்பதும், அதற்கு ஆதரவு அளிப்பவர்களை கண்டிப்பதும் சமுதாயத்திற்கு தேவையான ஒன்று தான். இதில் எந்த மாற்று கருத்தும் இருக்கமுடியாது.
ஆனால், நித்யானந்தாவை பீஜே அளந்த அதே அளவுகோலை பயன்படுத்தி, இன்னொரு நபரையும் பீஜே அளந்து தன் கண்டனத்தை தெரிவிப்பாரா?
சரி, அந்த இன்னொரு நபர் யார்? என்று கேட்கிறீரகளா? பொறுமையாக கீழே இருக்கும் விவரங்களை படிக்கவும், பிறகு உங்களுக்கே தெரியும் அந்த இன்னொரு நபர் யார் என்று?
1) இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர், ஒருபெண்ணை அப்பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக ஒரு அறைக்குள் அடைத்து வைத்து, என்னை திருமணம் செய்துக்கொள்கிறாயா என்று கேட்கிறார், அந்தப்பெண் நீ ஒரு இடையன் நான் ஒரு அரசி, உன்னை எப்படி திருமணம் செய்துக்கொள்வேன் என்று கேட்டு மறுக்கிறாள். இவருக்கு ஏற்கனவே அனேக மனைவிகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இறைத்தூதர் செய்தது சரியா தவறா என்று பீஜே அவர்கள் விளக்குவார்களா?
புகாரி பாகம் 6, அத்தியாயம் 68, எண் 52552) நாம் கூறிய இந்த இறைத்தூதருக்கு ஒரு பெண்ணின் அழகை வர்ணித்துள்ளார்கள். அவளை அழைத்துக்கொண்டு வரும்படி கட்டளையிட்டார். அவரது அடியார்கள் அப்படியே செய்து முடித்தார்கள், அப்பெண்ணை கடத்திக்கொண்டு வந்து ஒரு அறையில் தங்க வைத்தனர். பிறகு, இந்த இறைத்தூதர் அப்பெண்ணிடம் என்னை திருமணம் செய்துக்கொள் என கூறினார்கள். உடனே, அப்பெண் இந்த மனிதரிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள இறைவனிடம் பாதுகாப்பு கோரினாள், இவரும் அப்பெண்ணை விட்டுவிட்டார். ஒரு இறைத்தூதர் பெண்களை கடத்திக்கொண்டு வந்து அறையில் தங்க வைத்துவிட்டு, பெண் கேட்பது தான் அழகா?
அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) 'அஷ்ஷவ்த்' (அல்லது 'அஷ்ஷவ்ழ்') என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இங்கேயே அமர்ந்திருங்கள்' என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அப்பெண்(ணின் பெயர்) உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். (அப்பெண்ணுக்கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி(ஸல்) அவர்கள் நுழைந்து 'உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!' என்று கூறினார்கள். அந்தப்பெண் 'ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?' என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி 'கண்ணியமான (இறை) வனிடம் தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், 'அபூ உசைதே! இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய்விட்டு விடு' என்று கூறினார்கள்.
(மேற்கண்ட ஹதீஸ் பற்றிய அனைத்து கேள்விகளையும் படிக்க இந்த தொடுப்பை சொடுக்கவும்: இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா? http://muhammadsunna.blogspot.com/2010/11/blog-post.html)
இவரைப் பற்றியும், இந்த நிகழ்ச்சி பற்றியும், நம்முடைய பீஜே அவர்கள் என்ன விளக்கம் தமிழ் நாட்டு மக்களுக்கு தரப்போகிறார்கள்?
புகாரி பாகம் 6, அத்தியாயம் 74, எண் 56373) நம்முடைய கதா நாயகராகிய அந்த இறைத்தூதர் போர் புரிந்தார், ஒரு பெண்ணை தனக்கு எடுத்துக்கொண்டார், போரிலிருந்து நாடு திரும்பும் போது, அப்பெண்ணை கற்பழித்தார். இவர் இப்படி செய்துக்கொண்டு இருக்கும் போது, அவரது சிப்பாய் ஒருவர் கதவிடம் இரவெல்லாம் காவல் காத்துக்கொண்டு இருக்கிறார். காலை விடிந்தவுடன், முஹம்மது எழுந்து வெளியே வரும் போது, தன் சிப்பாயைக் கண்டு, கதவிடம் என்ன செய்கிறாய் என்றுகேட்டபோது, நீங்கள் உடலுறவு கொண்ட பெண்ணின் அப்பாவை நீங்கள் கொன்றீர்கள், கணவனை கொன்றீர்கள், அவளுக்கு திருமணம் சில நாட்களுக்கு முன்பாகத் தான் நடந்தது. ஆகையால், நீங்கள் அப்பெண்ணுடன் உடலுறவு (கற்பழிப்பு) கொள்ளும் போது, அவள் மூலமாக உங்களுக்கு ஏதாவது ஆபத்து வருமோ என்று பயந்து காவல் காத்தேன் என்றார். அந்த இறைத்தூதர் சபாஷ் என்றார்.
ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்களிடம் ஓர் அரபுப் பெண்ணைப் பற்றிக் கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணை (மணம் புரிந்து கொள்ள) அழைத்து வரும்படி அபூ உஸைத் அஸ்ஸாஇதீ(ரலி) அவர்களுக்கு உத்தரவிட, அவர் அப்பெண்ணை அழைத்து வர ஆளனுப்பினார். அவ்வாறே அந்தப் பெண் வந்து 'பன} சாஇதா' குலத்தாரின் கோட்டை ஒன்றில் தங்கினார். நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு அப்பெண்மணியிடம் வந்து, அவர் (தங்கியிருந்த) இடத்தில் நுழைய அங்கே அந்தப் பெண் தலையைக் கவிழ்த்தபடி (அமர்ந்து) இருந்தார். நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் (தம்மை மணந்துகொள்ள சம்மதம் கேட்டுப்) பேசியபோது அவள், 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று சொன்னாள். நபி(ஸல்) அவர்கள் 'என்னிடமிருந்து உனக்குப் பாதுகாப்பு அளித்துவிட்டேன்' என்று கூறினார்கள். அப்போது மக்கள் (அந்தப் பெண்ணிடம்), 'இவர்கள் யார் என்று உனக்குத் தெரியுமா?' என்று கேட்க, அவள் 'தெரியாது' என்று பதிலளித்தாள். மக்கள், 'இவர்கள் தாம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உன்னைப் பெண் பேசுவதற்காக வந்தார்கள்' என்று கூறினார்கள். அந்தப் பெண் 'அவர்களை மணந்து கொள்ளும் நற்பேற்றை நான் இழந்து துர்பாக்கியவாதியாகி விட்டேனே' என்று (வருத்தத்துடன்) கூறினாள். ….
(மேற்கண்ட ஹதீஸ் பற்றிய அனைத்து கேள்விகளையும் படிக்க இந்த தொடுப்பை சொடுக்கவும்: அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்... http://muhammadsunna.blogspot.com/2010/11/blog-post_18.html)
ஒரு பெண்ணின் அப்பாவை கொன்று, கணவனை கொலை செய்து, புதுமணப்பெண்ணை கற்பழிக்கும் ஒரு நபரை பீஜே கண்டிப்பாரா? அல்லது இந்த செயல் பற்றி பீஜே அவர்களின் கருத்து என்ன?
அல் தபரி முஹம்மதுவின் வாழ்க்கை சரிதையிலிருந்து படியுங்கள்.
இறைத்தூதர் ஷஃபிய்யாவோடு உடலுறவு கொண்டு இருந்த அந்த இரவு, அபூ அய்யுப் என்பவர் அந்த கதவு பக்கத்தில் இரவெல்லாம் நின்றுக்கொண்டு இருந்தார். காலையில் அபூ அய்யுப் இறைத்துதரை பார்த்தவுடன் "அல்லாஹு அக்பர்" என்று கூறினார், இவர் தன்னுடன் ஒரு வாளையும் வைத்திருந்தார். இவர் இறைத்தூதரைப் பார்த்து, "ஓ அல்லாஹ்வின் தூதரே, இந்த பெண்ணுக்கு திருமணம் இதற்கு முன்பு தான் நடந்தது, நீங்கள் இப்பெண்ணின் தந்தையை கொன்றுவிட்டீர்கள், அவளின் சகோதரனையும், மற்றும் கணவனையும் கொன்றுவிட்டீர்கள். ஆகையால், இந்த பெண்ணை நான் நம்பவில்லை (உங்களுக்கு இவள் மூலமாக ஆபத்துவந்துவிடுமோ என்று பயந்து இரவெல்லாம் காவல் காத்தேன்" என்றார்). இதைக் கேட்டு இறைத்தூதர் சிரித்தார் மற்றும் நீ செய்தது "நல்லது" என்றார்.இந்துக்களின் மனதை புண்படுத்திய நித்தியானந்தாவை கண்டித்த பீஜே அவர்கள், இந்த இறைத்தூதரின் செயலைக் கண்டு இஸ்லாமியர்களின் மனது புண்படவில்லை என்றுச் சொல்லத் தயாரா? அப்படி புண்படவில்லை என்று பீஜே கருதினால், அதனை விளக்குவாரா?
Ibn 'Umar [al-Waqidi] – Kathir b. Zayd – al-Walid b. Rabah – Abu Hurayrah: While the Prophet was lying with Safiyyah Abu Ayyub stayed the night at his door. When he saw the Prophet in the morning he said "God is the Greatest." He had a sword with him; he said to the Prophet, "O Messenger of God, this young woman had just been married, and you killed her father, her brother and her husband, so I did not trust her (not to harm) you." The Prophet laughed and said "Good". (The History of al-Tabari, Volume XXXIX (39), p. 185; bold and underline emphasis ours)
(மேற்கண்ட ஹதீஸ் பற்றிய அனைத்து கேள்விகளையும் படிக்க இந்த தொடுப்பை சொடுக்கவும்: முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்: http://muhammadsunna.blogspot.com/2010/10/blog-post_29.html)
இந்த இறைத்தூதரை விட, நித்தியானந்தா நல்லவர் போல காணப்படுகிறார். எப்படியென்றால், நித்தியானந்தா யாரையும் கடத்திக்கொண்டு வந்து அறையில் அடைத்து சம்மந்தம் பேசவில்லை. அவர் பணம் கொடுத்து விபச்சாரம் செய்துள்ளார்.
நித்தியானந்தா போர் செய்து, ஒரு பெண்ணின் அப்பாவையும், கணவனையும் கொன்றுவிட்டு, அப்பெண்ணை கற்பழிக்கவில்லை, ஆனால் இந்த இறைத்தூதர் இப்படி செய்தார் என்று அவரது நூல்களே சாட்சி சொல்கின்றன.
இப்படி எழுதுவதினால், நித்தியானந்தா செய்தது சரியானது என்று நாம் சொல்வதில்லை. அதற்கு பதிலாக மேற்கண்ட விதமாக நடந்துக்கொண்ட ஒரு நபரை இறைத்தூதர் என்று நம்பும் பீஜே அவர்கள் தங்கள் கண்களில் இருக்கும் துரும்பை பார்க்க தவறுவது ஏன் என்பது தான் கேள்வி.
நித்தியானந்தா போன்ற நபர்களை ஆதரிப்பவர்களுக்கு பீஜே சூட்டிய புகழாறம்:
"இத்தகைய கேவலமான போலிச்சாமியாருக்கு தமிழகக் காவல்துறை பட்டுக் கம்பளம் விரித்ததன் மூலம் தன்மீது தானே காரித்துப்பிக் கொண்டது "….
இது சித்தரிக்கப்பட்ட காட்சிகள் என்று நித்தியானந்தா கூறுவதை காவல் துறையினர் நம்பினால் அவர்கள் மாடுமேய்க்கத் தான் தகுதியானவர்களே தவிர காவல்பணிக்கு தகுதியானவர்கள் அல்ல. இது இந்து மதத்திற்கெதிரான தாக்குதல் என்று நித்தியானந்தா கூறுவதை காவல்துறை நம்பினால் அதைவிட முட்டாள்தனம் வேறு இருக்க முடியாது
Source: http://dubaitntj.blogspot.com/2011/07/tntj.html
நித்தியானந்தாவை விட அதிகபடியாக இன்னும் கேவலமான செயல்களை செய்த மேற்கண்ட மகானை பின்பற்றுபவர்களுக்கு யார் புகழாறம் சூட்டப்போகிறார்கள்? யார் கண்டிக்கப்போகிறார்கள்?
போனால் போகட்டும் போடா... இந்த பூமியில் நல்லவனாய் வாழ்ந்தவன் யாரடா?
கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
ஆன்சரிங் இஸ்லாம் ஈமெயில் உரையாடல்கள்
தலைப்பு: கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
தேதி: 31 மே 2005
தலைப்பு: இறைவனின் கடைசி இறைத்தூதரின் பெயரை குறிப்பிடும் போது "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று பயன்படுத்துங்கள்?
அன்புள்ள ஐயா,
உங்கள் வாதங்கள் கோர்வையாக உள்ளது ஆனால், அதில் பகுத்தறிவு இல்லை. இறைவனின் கடைசி தூதரின் பெயரை குறிப்பிடும் போது "அவர் மீது சாந்து உண்டாவதாக" என்று நீங்கள் பயன்படுத்தவேண்டும் என்று உங்களுக்கு இஸ்லாமியனாகிய நான் அறிவுரை கூறுகிறேன். இப்படி பயன்படுத்துவது உங்கள் நம்பிக்கைக்கு (வாதங்களுக்கு) இடையூராக இருக்காது என்று நம்புகிறேன்.
மரியாதையுடன் இப்படிக்கு
Xxxxxxxx
எங்கள் பதில்:
உங்களுக்கு எங்கள் வாழ்த்துதல்கள்.
உங்கள் ஈமெயிலுக்காக நன்றி.
எங்களுடைய ஆன்சரிங் இஸ்லாம் கட்டுரைகளில் ஏன் நாங்கள் "அவர் மீது சாந்து உண்டாகட்டும் (PBUH)" என்று பயன்படுத்துவதில்லை என்பதற்கு சில காரணங்கள் உள்ளன.
(குறிப்பு: ஆங்கிலத்தில் "PBUH" என்று கூறினால் "peace be upon him" என்று அர்த்தம். அரபியில் "Salla Allahu Alaihi Wa Sallam (SAW)" என்பார்கள், இதன் பொருள் : "அல்லாஹ்வின் ஜெபங்கள் மற்றும் சாந்தி அவர் மீது இருப்பதாக".)
இவ்விரண்டும் கீழ்கண்ட குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள். (குர்ஆன் 33:56)
"அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்று கூறினாலோ அல்லது "ஸல்" என்று கூறினாலோ, முஹம்மது மீது சாந்தியும் ஜெபங்களும் உண்டாவதாக என்று பொருள். இவ்விரண்டில் எதனை நாம் பயன்படுத்தினாலும், அது ஏற்கனவே மரித்து தன் முடிவு நிர்ணயிக்கப்பட்ட ஒரு மனிதன் மீது ஆசீர்வாதத்தை கொடுக்கும் படி வேண்டிக்கொள்வதாக இருக்கிறது. அதே நேரத்தில் எங்கள் வேதம் கீழ்கண்டவாறு கூறுகிறது:
அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே (எபிரேயர் 9:27)
ஆக, ஒரு மனிதன் மரித்துவிட்டால், அந்த நபர் அல்லது சகோதரி, ஒன்று இறைவனிடமிருந்து பிரிக்கப்பட்டு துன்பம் அனுபவித்துக்கொண்டு இருக்கவேண்டும் அல்லது இறைவனுடைய பிரசன்னத்தின் மகிழ்வினால் நிரம்பி சந்தோஷத்தோடு இருக்கவேண்டும். ஆக, மேற்கண்ட இரண்டு நிலைகளில் ஏதாவது ஒரு நிலையில் இருக்கும் ஒரு நபருக்கு, உலகத்தில் உயிரோடு வாழ்பவர்களின் வேண்டுதல்கள் பாதிக்காது (இதனால் எந்த ஒரு உபயோகமும் இல்லை). ஒரு மனிதர் மரித்துவிட்டபிறகு அவருக்காக வேண்டுதல் செய்வது வீணான செயல் இதனால் உபயோகம் ஒன்றுமில்லை.
இன்னொரு முக்கியமான விவரம் என்னவென்றால், முஹம்மதுவின் பெயரை நாம் கூறும்போது, அதோடு கூட ஆசீர்வாதத்தையும் வேண்டுதல்களையும் நாம் சேர்த்து சொன்னால், "முஹம்மது உண்மையாகவே இறைவனின் தூதர்" என்று நாங்கள் (கிறிஸ்தவர்கள்) அங்கீகரித்தது போல் ஆகிவிடும். ஆக, பைபிளின் தெளிவாக வெளிப்பாடுகளின் படி, நாங்கள் முஹம்மதுவை நம்புவதில்லை, அவர் ஒரு நபி என்று நம்புவதில்லை.
கிறிஸ்தவனாகிய நான் உங்களிடம் வந்து, இனி "ஈஸா (இயேசு)" என்று நீங்கள் பயன்படுத்தும் போதெல்லாம் (கூறும் போதெல்லாம்) "ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து" என்று கூறுங்கள் என்றுச் சொன்னால் அது சரியாக உங்களுக்கு தென்படுமா? "இயேசுவை ஆண்டவர்" என்று அழைப்பது, அவர் பழைய ஏற்பாட்டின் சர்வ வல்லவரான தேவனை குறிப்பிடுவதாக இருக்கும். (அடோனய் = பழைய ஏற்பாட்டில் ஆண்டவர்).
இப்படி நீங்கள் இயேசு ஆண்டவர் என்று அழைத்தால், அது உங்கள் இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிரானது என்பதை அறிந்தும், நீங்கள் இயேசுவை இப்படி அழைக்கத்தான் வேண்டும் என்று நான் உங்களுக்கு கட்டளையிட்டு நேரத்தை வீணடிக்கமுடியுமா? இருந்த போதிலும் வேதம் தெளிவாக கீழ்கண்டவிதமாக கூறுகிறது:
ரோமர் 10:9
என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
இந்த சந்தர்ப்பத்தில் ஒரு கேள்வியை உங்களிடம் கேட்கட்டும்: இன்று நீங்கள் இயேசுவை பின்பற்றுபவராக மாற விரும்புகிறீர்களா? இன்று நீங்கள் மரித்தால் எங்கு போவீர்கள்? நீங்கள் போகும் இடம் துன்பம் நிறைந்த இடமா? அல்லது இறைவனின் பிரசன்னம் இருக்கும் இடமா? இதில் எதை நீங்கள் தெரிந்தெடுக்கப் போகிறீர்கள்? எல்லா தீர்க்கதரிசிகள் சொன்ன சத்தியமாம் இயேசுக் கிறிஸ்து மீது நம்பிக்கை வைத்து, உங்கள் வாயினால் அவர் தான் இறைவன் என்று நம்புங்கள் என்று உங்களை நான் அழைக்கிறேன். நீங்கள் எடுக்கும் இந்த முடிவிற்காக ஒருபோதும் நீங்கள் மனம் வருந்தமாட்டீர்கள்.
இயேசு தாமாகவே சொன்ன இந்த வார்த்தைகளை கவனித்துப்பாருங்கள்:
யோவான் 5:24
என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
உங்களுக்கு சமாதானம்
லாசரஸ்
முஹம்மதுவின் மீது "சாந்தியை" கூறும் இந்த வார்த்தைகளைக் குறித்து மேலும் அறிய, இந்த தொடுப்பை (http://www.answering-islam.org/Index/P/pbuh.html) சொடுக்கவும்
ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Emails/pbuh.htm
சமீபத்திய வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
ஆன்சரிங் இஸ்லாம் ஈமெயில் உரையாடல்கள்
கட்டுரையின் தலைப்பு: சமீபத்திய வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
தேதி: 14 மே 2005
தலைப்பு: கொலம்பியாவிலிருந்து...
ஹலோ, நான் கொலம்பியாவில் இஸ்லாமியர்கள் மத்தியிலே கிறிஸ்தவ மிஷனரியாக வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். இஸ்லாமியர்கள் இன்ஜில் மீதும், இயேசுவின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதற்கு அவர்கள் சொல்லும் காரணம் என்னவென்றால், "நாங்கள் நம்பிக்கை கொள்ள தேவையில்லை, எங்களுக்கு அவசியமில்லை" என்பதாகும். இஸ்லாமியர்கள் தீர்க்கதரிசிகளை, வேத புத்தகங்களை, அதிகாரத்தில் அமரும் அரசாங்கத்தோடு ஒப்பிட்டு பேசுகிறார்கள். உதாரணத்திற்கு, ஒரு இஸ்லாமியர் இவ்விதமாக கூறுகிறார் "தோரா, ஜபூர், இன்ஜில் மற்றும் குர்ஆன் என்பது நான்கு பரிசுத்த வேதங்களாகும். இந்த நான்கில் முதல் மூன்று கடந்த காலத்திற்கு சம்மந்தப்பட்டது, ஆனால் குர்ஆனோ தற்காலத்திற்கு சம்மந்தப்பட்டது என்கிறார்கள். இது எப்படியென்றால், கடந்த 35 ஆண்டுகளில் கொலம்பியாவில் நான்கு விதமான அரசாங்கங்கள் ஆட்சி செய்துள்ளன. முதலாவதாக, சிஹானௌக் அரசர் ஆட்சி புரிந்தார், அதன் பிறகு அமெரிக்காவின் ஆதரவுடன் லான் நோல் அரசாங்கம் ஆட்சி புரிந்தது அதன் பிறகு,போல் பாட் என்பவர் ஆட்சி புரிந்தார் இப்படி தொடர்ந்து வருகிறது. இதே போலத்தான் தோராவும், ஜபூரும், இன்ஜிலும் இருக்கிறது, அதாவது ஒரு ஆட்சிக்கு பிறகு (வேதத்திற்கு பிறகு) இன்னொரு ஆட்சி வருகிறது. தற்காலத்தில் ஹுன் சென் நம்முடைய கொலம்பியாவின் ஆட்சியாளராக இருக்கிறார், அதனால் அவரது சட்டத்தின் படியே நாம் வாழவேண்டும், இதற்கு முன்பு ஆட்சி செய்தவர்களின் சட்டத்தின் படி நாம் வாழக்கூடாது". இதே போலத் தான் நாம் அனைவரும் முஹம்மதுவை பின்பற்றவேண்டும், இன்று நம்முடைய சமீபத்திய வேதமாகிய குர்ஆனை பின்பற்றவேண்டும் என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். இன்னும் இஸ்லாமியர்கள் ஒரு படி மேலே சென்று, இயேசு மோசேவையும், மோசேயின் சட்டத்தையும் இரத்து செய்துவிட்டார். (அதே போல இஸ்லாம் இயேசுவையும் அவரது போதனைகளையும் இரத்து செய்துவிட்டது என்று கூறுகிறார்கள்). நான் இந்த கேள்விக்கு தளங்களில் பதிலை தேடி கண்டுபிடிக்கவில்லை அதனால் மெயில் அனுப்புகிறேன். உங்களுக்கு என் நன்றி
இப்படிக்கு,
உங்கள் சகோதரன் (T)
எங்கள் பதில்:
அன்புள்ளபவருக்கு,
கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுவின் பெயரில் உங்களுக்கு எங்கள் வாழ்த்துதல்கள்.
இஸ்லாமியர்கள் உங்களிடம் கூறிய வாதத்தில் அடிப்படை தவறு உள்ளது.
உண்மையாகவே, தற்போது ஆட்சி புரியும் அரசாங்கமும் தடையில்லாமல் தொடர்ந்து பல ஆண்டுகள் ஆட்சி புரியப்போவதில்லை. இதன் பொருள் என்னவென்றால், அந்த இஸ்லாமியர்களின் கருத்துப்படி, அடுத்த அரசு எப்போது ஆட்சிக்கு வருமோ, அப்போது இந்த இஸ்லாமியர்கள் குர்ஆனை பின்பற்றுவதையும், இஸ்லாமை பின்பற்றுவதையும் நிறுத்திவிடவேண்டும் மற்றும் முஹம்மதுவிற்கு அடுத்ததாக எந்த மார்க்கம் அல்லது வெளிப்பாடு வந்ததோ அதனை பின்பற்றவேண்டும். (உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமென்றால், முஹம்மதுவிற்கு அடுத்ததாக வந்த மார்க்கங்கள் மர்மனோனிஸம் அல்லது பஹாயிஸத்தை இஸ்லாமியர்கள் பின் பற்றவேண்டும்).
உண்மையில், கடந்த 35 ஆண்டுகளிலிருந்து 50 ஆண்டுகள் வரை ஐந்து அரசாங்கங்களை நீங்கள் கண்டு இருக்கிறீர்கள் அப்படியானால், இன்னொரு புதிய அரசு வரும் என்று எதிர்பார்க்காமல் நீங்கள் எல்லாரும் மர்மோன்ஸ் என்றுச் சொல்லக்கூடிய மார்க்கத்தவர்களாக ஏற்கனவே மாறியிருக்கவேண்டும்.
இப்படி நாம் சொல்வதினால், இஸ்லாமிய நண்பர்கள் உடனே இஸ்லாமை விட்டுவிட்டு வேறு மார்க்கத்திற்கு மாறமாட்டார்கள் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும், இருந்தாலும் ஏன் சொல்கிறேன் என்றால், இஸ்லாமியர்களின் இந்த மாறிக்கொண்டு இருக்கும் அரசு எடுத்துக்காட்டுகள் உபயோகமற்றவை தவறானவை என்பதை அவர்களுக்கு எடுத்துக் காட்டவே இப்படிச் சொன்னேன். ஆகையால், கிறிஸ்தவராகிய நீங்கள் கூட (இந்த மெயிலை எழுதியர்) இஸ்லாமியர்களின் லாஜிக்கின் படி இஸ்லாமியராக மாறவேண்டிய அவசியமில்லை.
முக்கியமான அம்சம் இது தான்: இஸ்லாமுக்கு பிறகு மர்மோனிஸம் மற்றும் பஹாயிஸம் வந்து இருந்தாலும், இஸ்லாமியர்கள் அவைகளை புறந்தள்ளிவிடுவார்கள், ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஏனென்றால், இம்மார்க்கங்கள் இறைவனிடமிருந்து வரவில்லை என்று அவர்கள் நம்புகிறார்கள். இஸ்லாமியர்கள் ஜோசப் ஸ்மித் என்பவரையும், பஹாயுல்லாவும் பொய் நபிகள் (தீர்க்கதரிசிகள்) என்று நம்புகிறார்கள்.
இங்கு ஒரு மார்க்கம் "முன்னால் வந்ததா அல்லது அடுத்தபடியாக வந்ததா" என்பது கேள்வியில்லை. ஆனால், முக்கியமான கேள்வி என்னவென்றால்: அந்த நபர் உண்மையாகவே நபியாக இருந்தரா இல்லையா என்பது தான்?
இஸ்லாமியர்கள் ஏன் பஹாயுல்லாவை நபி என்று ஏற்றுக்கொள்வதில்லை? (பஹாயுல்லா என்பவர் சமீப காலத்தில் இஸ்லாமை போல வெளிப்பாட்டை கொடுத்தார். மட்டுமல்ல, அவர் இஸ்லாமியர்கள் போல குர்ஆனும் ,பைபிளும் இறைவனிடமிருந்து வந்தது என்று நம்புகிறார். இஸ்லாமியர்கள் எப்படி தோராவும், இன்ஜிலும் இறைவனால் அருளப்பட்டது என்று நம்புகிறார்களோ அது போல, இவர்களும் நம்புகிறார்கள்). பஹாயுல்லா இறைவனிடமிருந்து வந்தவர் என்று ஏன் இஸ்லாமியர்கள் நம்புவதில்லை? ஏனென்றால், இஸ்லாம் இறைவனால் அனுப்புப்பட்ட உண்மையான மார்க்கம் என்று பஹாய் நம்பினாலும், அவரது செய்தி இஸ்லாமுக்கு எதிராக முரண்பட்டு உள்ளது. இதனால் இஸ்லாமியர்கள் பஹாயுல்லாவை நபி என்று நம்புவதில்லை. மட்டுமல்ல, இஸ்லாமியர்கள் பஹாயுல்லாவை இஸ்லாமோடு ஒப்பிட்டு எடை போட்டு அவரை எதிர்க்கிறார்கள். இதே போலத் தான், கிறிஸ்தவர்களாகிய நாங்கள் முஹம்மதுவை அவருக்கு முன்பாக வந்த வேதத்தின் செய்தியோடு ஒப்புடுகிறோம். அவருக்கு ஒரு உண்மை நபிக்கான தகுதி உண்டா? அவர் முந்தைய வேதம் சொல்லும் நபிக்கான பரிட்சையில் வெற்றி பெறுகிறாரா என்று நாங்கள் சரி பார்க்கிறோம். முஹம்மது இந்த தீர்க்கதரிசி பரிட்சையில் தோற்று போகிறார், ஆகையால் நாங்கள் அவரை நபி என்று நம்புவதில்லை அவரை நிராகரிக்கிறோம். அவர் இறைவனிடமிருந்து வந்த நபியாக இருக்க வாய்ப்பே இல்லை. ஆக, அவர் இயேசுவை மாற்றி அந்த இடத்தில் "தான்" உட்காரமுடியாது அல்லது இயேசுவின் மார்க்கத்தை இரத்து செய்து தன் மார்க்கத்தை நிலை நிறுத்தமுடியாது .
கடைசியாக, இஸ்லாமியர்கள் அடிக்கடி இவ்விதமாக கூறுவார்கள்: "மோசேயின் செய்தியை யூதர்கள் திருத்திவிட்டதால், இயேசு வந்து அவைகளை சரிப்படுத்தினார் மற்றும் தேவனின் உண்மையான செய்தியை (இஸ்லாமை) கொண்டுவந்தார். அதே போல, கிறிஸ்தவர்கள் இயேசுவின் செய்தியை திருத்திவிட்டதால் அவருடைய போதனையிலிருந்து வழிவிலகி சென்றுவிட்டதால், இறைவன் அவர்களை சரிப்படுத்த முஹம்மதுவை அனுப்பினார்".
இது இஸ்லாமியர்களின் தவறான கருத்தாகும். பழைய ஏற்பாட்டை திருத்தவே நான் வந்தேன் என்று இயேசு ஒரு போதும் கூறவே இல்லை. அவர் பழைய ஏற்பாட்டை நிறைவேற்ற வந்தார். உண்மையில், பைபிளின் ஒரு பாகம் பழைய ஏற்பாடு ஆகும். ஆனால், முஹம்மதுவும், இஸ்லாமும் பைபிளை பக்கத்தில் வைத்துவிட்டார்கள். இனி பைபிள் உபயோகப்படாது என்று அவர்கள் கூறுகிறார்கள். குர்ஆன் பைபிளின் இடத்தை பிடித்துவிட்டது என்று கூறுகிறார்கள்.
பைபிளின் செய்தியும், குர்ஆனின் செய்தியும் ஒன்றல்ல. இஸ்லாம் சொல்லும் செய்தி பைபிள் சொல்லும் செய்தி அல்ல, அது பைபிளுக்கு எதிரானதாகும். பழைய ஏற்பாட்டின் தொடர்ச்சியாக புதிய ஏற்பாடு இருப்பதுபோல, பைபிளின் தொடர்ச்சி குர்ஆன் அல்ல. கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இஸ்லாம் அல்ல.
பழைய ஏற்பாட்டின் மற்றும் புதிய ஏற்பாட்டின் முக்கியமான அடிப்படை கோட்பாடுகளோடு குர்ஆன் முரண்படுகிறது.
உதாரணத்திற்கு, தோராவின் படி, பாவ நிவாரணத்திற்கு ஒரு மிருகத்தை பலியிடவேண்டும் என்ற கோட்பாட்டை எடுத்துக்கொள்வோம். பழைய ஏற்பாட்டின் படி பாவ நிவாரணத்திற்கு மிருகத்தை பலியிடுவது முக்கியமானதாகும். இயேசு சிலுவையில் மரித்ததினால் இந்த கோட்பாடு நிறைவேறியது. பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும் இந்த காரியத்தில் ஒன்றோடு ஒன்று கலந்துவிடுகிறது. ஆனால், தோராவில் இப்படிப்பட்ட பலியிடும் கோட்பாடு உள்ளது என்றுகூட குர்ஆனுக்கு தெரியாது. தோரா பற்றி கூறும் போதும்,குர்ஆன் இதைப் பற்றி சொல்வது இல்லை. குர்ஆன் இந்த பாவ நிவாரண பலியை நிராகரிக்கிறது. இஸ்லாமின் படி மனிதன் நல்லவனாக இருக்கிறான் மற்றும் அவனுக்கு இரட்சிப்பு அவசியமில்லை என்று கருதுகிறது.
கிறிஸ்தவத்தோடு ஒப்பிடும் போது, இஸ்லாமிய மதம் தன் செய்தியில் அடிப்படை கோட்பாடுகளிலேயே வித்தியாசப்படுகிறது. இஸ்லாமுக்கு பிறகு வரும் மதங்கள் பொய்யானவை என்று எப்படி இஸ்லாமியர்கள் கூறுகிறார்களோ, அதே போல இஸ்லாம் கூட ஒரு பொய்யான மதமாகும்.
உங்கள் நண்பர் இந்த சத்தியங்களை ஜீரணித்துக்கொள்ளமாட்டார், ஆனால், உங்களுக்கு இவைகள் உதவியாக இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.
முன்னால் வந்ததா பின்னால் வந்ததா என்பது கேள்வியில்லை, அந்த மார்க்கம் உண்மையாகவே உண்மையான மார்க்கமா என்பது தான்.
உங்கள் இஸ்லாமிய நண்பர்களுடன் நீங்கள் பேசும் போது உங்களுக்கு கர்த்தர் ஞானத்தை அருளுவாராக.
ஜோசன் கர்ட்ஜ்
ஆன்சரிங் இஸ்லாம்
மூலம்: http://www.answering-islam.org/Emails/latest_revelation.htm