ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 9 ஜூன், 2012

மோசே அல்லது யாக்கோபு! அல்லாஹ்வின் குழப்பம்

குர்‍ஆன் முரண்பாடு

 

குர்‍ஆன் மோசேயின் கதையை மட்டுமல்ல, மோசே மற்றும் பார்வோனின் கதையை அனேக இடங்களில் சொல்கிறது. குர்‍ஆன் சொல்லும் இந்த நிகழ்ச்சிகளில் இருக்கும் பல முரண்பாடுகள் மற்றும் தவறுகளை இந்த பக்கங்களில் குறிப்பிட்டுள்ளோம். இந்த சிறிய கட்டுரையிலும், குர்‍ஆன் எப்படி பைபிளுக்கு முரண்படுகிறது என்பதை விவரமாக காண்போம். ஏன் இப்படி குர்‍ஆன் முரண்படுகிறது என்று பார்த்தால், குர்‍ஆனின் ஆசிரியர் பைபிளில் காணப்படும் இரண்டு நிகழ்ச்சிகளைக் குறித்து குழம்பியுள்ளார், ஆதலால், ஒரு கதையில் வரும் விவரங்களை இன்னொரு கதையில் நுழைத்துவிட்டுள்ளார்.

மோசே மற்றும் யாக்கோபு என்பவர்களாகிய இவ்விருவர் தங்கள் ஊரை விட்டு ஓடிப்போனார்கள் (யாக்கோபு தன் சகோதரன் ஏசாவை ஏமாற்றி ஓடிப்போனார், மோசே ஒரு எகிப்தியனை கொன்று விட்டதினால் தன் உயிர் தப்ப ஓடிப்போனார்). மட்டுமல்ல, இவ்விருவரின் திருமணம் சம்மந்தப்பட்ட நிகழ்வுகள் அல்லது தங்கள் மனைவிகளை கண்ட விதமும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கும். இவ்விருவர் வேறு நாட்டிலிருந்து வந்தார்கள், வாலிப்பபெண்கள் தங்கள் ஆடுகளுக்கு தண்ணீர் குடிக்க வைக்க வரும்போது, மற்றும் அவர்களுக்கு உதவி தேவைப்பட்டபோது, இவ்விருவரும் உதவி செய்து கிணற்றிலிருந்து தண்ணீர் வார்த்து கொடுத்தார்கள். மோசே மற்றும் யாக்கோபின் கதையில் வரும் இந்த ஒற்றுமைகள் குர்‍ஆன் ஆக்கியோனின் மனதில் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.

மோசே தன் எதிர்கால மனைவியை எப்படி சந்தித்தார் என்பதை முதலில் பைபிளிலிருந்து படிப்போம், அதன் பிறகு குர்‍ஆனின் வசனங்களைக் காண்போம்.

பார்வோன் அந்தக் காரியத்தைக் கேள்விப்பட்டபோது, மோசேயைக் கொலைசெய்ய வகைதேடினான். மோசே பார்வோனிடத்தினின்று தப்பியோடி, மீதியான் தேசத்தில் போய்த் தங்கி, ஒரு துரவண்டையிலே உட்கார்ந்திருந்தான். மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு ஏழு குமாரத்திகள் இருந்தார்கள்; அவர்கள் தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டும்படிக்கு அங்கே வந்து, தண்ணீர் மொண்டு, தொட்டிகளை நிரப்பினார்கள். அப்பொழுது மேய்ப்பர்கள் வந்து, அவர்களைத் துரத்தினார்கள்; மோசே எழுந்திருந்து, அவர்களுக்குத் துணை நின்று, அவர்களுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான். அவர்கள் தங்கள் தகப்பனாகிய ரெகுவேலிடத்தில் வந்தபோது, அவன்: நீங்கள் இன்று இத்தனை சீக்கிரமாய் வந்தது என்ன என்று கேட்டான். அதற்கு அவர்கள்: எகிப்தியன் ஒருவன் மேய்ப்பரின் கைகளுக்கு எங்களைத் தப்புவித்து, எங்களுக்குத் தண்ணீர் மொண்டு கொடுத்து, ஆடுகளுக்கும் தண்ணீர் காட்டினான் என்றார்கள். அப்பொழுது அவன் தன் குமாரத்திகளைப் பார்த்து: அவன் எங்கே? அந்த மனிதனை நீங்கள் விட்டுவந்தது என்ன? போஜனம்பண்ணும்படிக்கு அவனை அழைத்துக்கொண்டுவாருங்கள் என்றான். மோசே அந்த மனிதனிடத்தில் தங்கியிருக்கச் சம்மதித்தான். அவன் சிப்போராள் என்னும் தன் குமாரத்தியை மோசேக்குக் கொடுத்தான். அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். நான் அந்நிய தேசத்தில் பரதேசியாய் இருக்கிறேன் என்று சொல்லி, அவனுக்கு கெர்சோம் என்று பேரிட்டான். (யாத்திராகமம் 2:15-22)

குர்‍ஆனின் படி மோசே தன் எதிர்கால மனைவியை எப்படி சந்தித்தார் என்பதை இப்போது காண்போம்:

இன்னும், அவர் மத்யன் நாட்டுத் தண்ணீர்(த் துறையின்) அருகே வந்தபோது, அவ்விடத்தில் ஒரு கூட்டத்தினர் (தம் கால் நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்ததைக் கண்டார்; அவர்களைத் தவிர, பெண்கள் இருவர் (தங்கள் ஆடுகளுக்குத் தண்ணீர் புகட்டாது) ஒதுங்கி நின்றதைக் கண்டார்; "உங்களிருவரின் விஷயம் என்ன?" என்று (அப்பெண்களிடம்) அவர் கேட்டார்; அதற்கு "இம்மேய்ப்பவர்கள் (தண்ணீர் புகட்டிக் விட்டு) விலகும் வரை நாங்கள் எங்கள் (ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது - மேலும் எங்கள் தந்தை மிகவும் வயது முதிர்ந்தவர்" என்று அவ்விருவரும் கூறினார்கள். ஆகையால், அவ்விருவருக்குமாக அவர் (ஆட்டு மந்தைக்குத்) தண்ணீர் புகட்டினார்; பிறகு அவர் (ஒரு மர) நிழலில் ஒதுங்கி; "என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்" என்று கூறினார். (சிறிது நேரத்திற்குப்) பிறகு அவ்விரு பெண்களில் ஒருவர் நாணத்துடன் நடந்து மூஸாவின் முன் வந்து "எங்களுக்காக நீங்கள் தண்ணீர் புகட்டியதற்கான கூலியை உங்களுக்கு வழங்குவதற்காக எங்கள் தந்தை உங்களை அழைக்கிறார்" என்று கூறினார்; இவ்வாறாக மூஸா அவரிடம் வந்தபோது தம் வரலாற்றை எடுத்துச் சொன்னார்; அதற்கவர்; "பயப்படாதீர்! அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீர் தப்பித்துவிட்டீர்" என்று கூறினார். அவ்விரு பெண்களில் ஒருவர் கூறினார்; "என் அருமைத் தந்தையே! நீங்கள் இவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளுங்கள்; நீங்கள் கூலிக்கு அமர்த்துபவர்களில் நிச்சயமாக இவர் மிகவும் மேலானவர் பலமுள்ளவர்; நம்பிக்கையானவர்." அப்போது அவர் மூஸாவிடம்) கூறினார்; "நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் வேலை செய்யவேண்டும் என்ற நிபந்தனையின் மீது, என்னுடைய இவ்விரு பெண்களில் ஒருவரை உமக்கு மணமுடித்துக் கொடுக்க நிச்சயமாக நான் நாடுகிறேன் - ஆயினும், நீர் பத்து (ஆண்டுகள்) பூர்த்தி செய்தால், அது உம் விருப்பம்; நான் உமக்கு சிரமத்தை கொடுக்க விரும்பவில்லை. இன்ஷா அல்லாஹ், என்னை நல்லவர்களில் உள்ளவராக காண்பீர்." (அதற்கு மூஸா) கூறினார் "இதுவே எனக்கும் உங்களுக்கிமிடையே (ஒப்பந்தமாகும்), இவ்விரு தவணைகளில் நான் எதை நிறைவேற்றினாலும் என் மீது குற்றமில்லை - நாம் பேசிக் கொள்வதற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான். ( குர்‍ஆன் 28:23-28)

மேற்கண்ட குர்‍ஆன் வசனங்கள், பைபிளில் சொல்லப்பட்ட அதே நிகழ்ச்சியைத் தான் குறிப்பிட்டு பேசுகிறது. ஆனால், அனேக முரண்பாடுகள் மற்றும் வித்தியாசங்கள் குர்‍ஆன் குறிப்பிடும் வசனங்களில் காணப்படும். இதில் இரண்டு முக்கியமான விஷயங்கள் உள்ளன: முதலாவதாக, யாத்திராகம‌த்தில் நாம் பார்க்கும் போது, மோசே ஏழு வாலிப பெண்களை காண்கிறார், மற்றும் அந்த ஏழுபேரும் ஒரே மனிதனின் பெண் பிள்ளைகளாக இருந்தார்கள். ஆனால், குர்‍ஆனில் பார்க்கும் போது, அது வெளிப்படையாக "மோசே அங்கு சந்தித்தது இரண்டு பெண்களை" என்று கூறுகிறது, மற்றும் அவ்விருவரும் ஒரே மனிதனின் புதல்விகள் என்றும் கூறுகிறது. பைபிள் மற்றும் குர்‍ஆன் கூறும் நிகழ்ச்சிகளில், அந்த மனிதன், மோசேக்கு தன் மகள்களில் ஒரு மகளை திருமணத்திற்காக கொடுக்கிறார். ஆனால், குர்‍ஆனில் ஒரு வித்தியாசம் உள்ளது, அது என்னவென்றால், அந்த பெண்ணின் தந்தை, மோசேயிடம் "என் மகளை திருமணம் புரிய" எனக்கு பணம் தரவேண்டும் என்று கேட்கிறார். இந்த பணத்தை எப்படி கொடுப்பது என்று பார்த்தால், அந்த பெண்ணுக்காக மோசே 8 அல்லது 10 ஆண்டுகள் தன்னிடத்தில் உழைக்கவேண்டும் என்று ஒரு நிபந்தனையை போடுகிறார்.

இங்கு குறிப்பிடவேண்டிய விவரம் என்னவென்றால், இரண்டு ஆண்டுகள் பற்றி குர்‍ஆன் கூறுகிறது, அவைகள் அடுத்தடுத்த வரும் எண்களாக இருந்தாலும், 8 அல்லது 10 ஆண்டுகள் என்று குறிப்பிடுகிறது. குர்‍ஆனின் நிகழ்ச்சிப்படி இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு வருட எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

குர்‍ஆனில் காணப்படும் இந்த விவரங்கள் எப்படி மற்றும் எங்கிருந்து வந்தது? அவைகள் பைபிளில் யாக்கோபின் கதையில் வருகிறது, அதாவது யாக்கோபு எப்படி இரண்டு மனைவிகளை திருமணம் செய்துக்கொண்டார் என்ற விவரங்களிருந்து எடுத்து குர்‍ஆனின் ஆக்கியோன், மோசேயின் கதையில் குழப்பத்தில் நுழைத்துள்ளார். இப்போது யாக்கோபு எப்படி இரண்டு மனைவிகளை திருமணம் செய்தார் என்பதை பைபிளிலிருந்து காண்போம்.

யாக்கோபு பிரயாணம்பண்ணி, கீழ்த்திசையாரின் தேசத்தில் போய்ச் சேர்ந்தான். அங்கே வயல்வெளியிலே ஒரு கிணற்றையும், அதின் அருகே மடக்கியிருக்கிற மூன்று ஆட்டுமந்தைகளையும் கண்டான்; அந்தக் கிணற்றிலே மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டுவார்கள்; அந்தக் கிணற்றின் வாய் ஒரு பெரிய கல்லினால் அடைக்கப்பட்டிருந்தது. அவ்விடத்தில் மந்தைகள் எல்லாம் சேர்ந்தபின் கிணற்றின் வாயிலிருக்கும் கல்லை மேய்ப்பர் புரட்டி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மறுபடியும் கல்லை முன்னிருந்தபடி கிணற்றின் வாயில் வைப்பார்கள். யாக்கோபு அவர்களைப் பார்த்து: சகோதரரே, நீங்கள் எவ்விடத்தார் என்றான்; அவர்கள், நாங்கள் ஆரான் ஊரார் என்றார்கள். அப்பொழுது அவன்: நாகோரின் குமாரனாகிய லாபானை அறிவீர்களா என்று கேட்டான்; அறிவோம் என்றார்கள். அவன் சுகமாயிருக்கிறானா என்று விசாரித்தான்; அதற்கு அவர்கள்: சுகமாயிருக்கிறான்; அவன் குமாரத்தியாகிய ராகேல், அதோ, ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள் என்று சொன்னார்கள். அப்பொழுது அவன்: இன்னும் வெகு பொழுதிருக்கிறதே; இது மந்தைகளைச் சேர்க்கிற வேளை அல்லவே, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, இன்னும் மேயவிடலாம் என்றான். அதற்கு அவர்கள்: எல்லா மந்தைகளும் சேருமுன்னே அப்படிச் செய்யக்கூடாது; சேர்ந்தபின் கிணற்றின் வாயிலுள்ள கல்லைப் புரட்டுவார்கள்; அப்பொழுது ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம் என்றார்கள். அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே, தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ராகேல் அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தாள். யாக்கோபு தன் தாயின் சகோதரனான லாபானுடைய குமாரத்தியாகிய ராகேலையும், தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளையும் கண்டபோது, யாக்கோபு போய், கிணற்றின் வாயிலிருந்த கல்லைப் புரட்டி, தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான்.

பின்பு யாக்கோபு ராகேலை முத்தஞ்செய்து, சத்தமிட்டு அழுது, தான் அவள் தகப்பனுடைய மருமகனென்றும், ரெபெக்காளின் குமாரனென்றும் ராகேலுக்கு அறிவித்தான். அவள் ஓடிப்போய்த் தன் தகப்பனுக்கு அறிவித்தாள். லாபான் தன் சகோதரியின் குமாரனாகிய யாக்கோபுடைய செய்தியைக் கேட்டபோது, அவனுக்கு எதிர்கொண்டோடி, அவனைக் கட்டிக்கொண்டு முத்தஞ்செய்து, தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோனான்; அவன் தன் காரியங்களையெல்லாம் விவரமாய் லாபானுக்குச் சொன்னான். அப்பொழுது லாபான்: நீ என் எலும்பும் என் மாம்சமுமானவன் என்றான். ஒரு மாதம்வரைக்கும் யாக்கோபு அவனிடத்தில் தங்கினான். பின்பு லாபான் யாக்கோபை நோக்கி: நீ என் மருமகனாயிருப்பதினால், சும்மா எனக்கு வேலைசெய்யலாமா? சம்பளம் எவ்வளவு கேட்கிறாய், சொல் என்றான். லாபானுக்கு இரண்டு குமாரத்திகள் இருந்தார்கள்; மூத்தவள் பேர் லேயாள், இளையவள் பேர் ராகேல். லேயாளுடைய கண்கள் கூச்சப்பார்வையாயிருந்தது; ராகேலோ ரூபவதியும் பார்வைக்கு அழகானவளுமாயிருந்தாள். யாக்கோபு ராகேல்பேரில் பிரியப்பட்டு: உம்முடைய இளைய குமாரத்தியாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருஷம் வேலை செய்கிறேன் என்றான். அதற்கு லாபான்: நான் அவளை அந்நிய புருஷனுக்குக் கொடுக்கிறதைப்பார்க்கிலும், அவளை உனக்குக் கொடுக்கிறது உத்தமம், என்னிடத்தில் தரித்திரு என்றான். அந்தப்படியே யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருஷம் வேலை செய்தான்; அவள் பேரில் இருந்த பிரியத்தினாலே அந்த வருஷங்கள் அவனுக்குக் கொஞ்சநாளாகத் தோன்றினது. பின்பு யாக்கோபு லாபானை நோக்கி: என் நாட்கள் நிறைவேறினபடியால், என் மனைவியிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும் என்றான்.

அப்பொழுது லாபான் அவ்விடத்து மனிதர் எல்லாரையும் கூடிவரச்செய்து விருந்துபண்ணினான். அன்று இரவிலே அவன் தன் குமாரத்தியாகிய லேயாளை அழைத்துக்கொண்டுபோய், அவனிடத்தில் விட்டான்; அவளை அவன் சேர்ந்தான். லாபான் தன் வேலைக்காரியாகிய சில்பாளைத் தன் குமாரத்தியாகிய லேயாளுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான். காலையிலே, இதோ, அவள் லேயாள் என்று யாக்கோபு கண்டு, லாபானை நோக்கி: ஏன் எனக்கு இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலைசெய்தேன்; பின்னை ஏன் எனக்கு வஞ்சகம்பண்ணினீர் என்றான். அதற்கு லாபான்: மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது இவ்விடத்து வழக்கம் அல்ல. இவளுடைய ஏழு நாளை நிறைவேற்று; அவளையும் உனக்குத் தருவேன்; அவளுக்காகவும் நீ இன்னும் ஏழு வருஷம் என்னிடத்தில் வேலைசெய் என்றான். அந்தப்படியே யாக்கோபு, இவளுடைய ஏழு நாளை நிறைவேற்றினான். அப்பொழுது தன் குமாரத்தியாகிய ராகேலையும் அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். மேலும் லாபான் தன் வேலைக்காரியாகிய பில்காளைத் தன் குமாரத்தியாகிய ராகேலுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான். யாக்கோபு ராகேலையும் சேர்ந்தான்; லேயாளைப்பார்க்கிலும் ராகேலை அவன் அதிகமாய் நேசித்து, பின்னும் ஏழு வருஷம் அவனிடத்தில் சேவித்தான். (ஆதியாகமம் 29:1-30)

இது தான் அந்த இரண்டு பெண் பிள்ளைகளுடைய நிகழ்ச்சியாகும், மற்றும் யாக்கோபு தான் நேசித்த பெண்ணுக்காக இரண்டு தவனை முறையில் தன் மாமனாரிடம் வேலை செய்தார். "இல்லை.. நாங்கள் இதனை அங்கீகரிக்கமாட்டோம்", குர்‍ஆன் இப்படி யாக்கோபின் கதையில் வரும் சிலவற்றை காப்பி அடித்து மோசேயின் நிகழ்ச்சியோடு சேர்த்துச் சொல்லவில்லை என்று நீங்கள் சொல்வீர்களானால், அடுத்த வசனத்தில் குர்‍ஆன் சொல்லும் விவரத்தை சிறிது படித்துப் பாருங்கள்.

ஆகவே மூஸா (தம்) தவணையை முடித்துக்கொண்டு, தம் குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டிருந்த போது 'தூர்' (மலையின்) பக்கத்தில் ஒரு நெருப்பைக் கண்டார்; அவர் தம் குடும்பத்தாரிடம் "நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக, நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன். நான் உங்களுக்கு அதிலிருந்து ஒரு செய்தியையோ, அல்லது நீங்கள் குளிர் காயும் பொருட்டு, ஒரு நெருப்புக் கங்கையோ கொண்டு வருகிறேன்" என்று கூறினார். (குர்‍ஆன் 28:29)

மோசே தன் மனைவியை திருமணம் செய்துக்கொள்வதற்கு ஒப்புக்கொண்டு இருந்த அந்த காலக்கெடு முடிந்தபிறகு அவர் தன் குடும்பத்துடன் தன் மாமனாரை விட்டு பிராயணம் மேற்கொண்டார். ஏன் ? மோசே எந்த ஊருக்குப் போகிறார்? பைபிளின்படி நாம் பார்த்தால், மோசேயை தேவன் எரியும் முட்புதரிலிருந்து சந்தித்து பேசிய நிகழ்ச்சியானது, மோசே தன் குடும்பத்தாருடன் பிரயாணம் செய்யும் போது அல்ல, அதற்கு பதிலாக, அவர் தனது அனுதின வேலையாகிய ஆடுகளை மேய்த்துக்கொண்டு இருக்கும் போது நடந்த நிகழ்ச்சியாகும்.

மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துவந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின்புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப் மட்டும் வந்தான். அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது. அப்பொழுது மோசே: இந்த முட்செடி வெந்துபோகாதிருக்கிறது என்ன, நான் கிட்டப்போய் இந்த அற்புதகாட்சியைப் பார்ப்பேன் என்றான். அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான். (யாத்திராகமம் 3:1-4)

"மோசே தன் குடும்பத்தாருடன் பிரயாணம் செய்தார், அந்த வழியில் இறைவனை சந்தித்தார்" என்ற இந்த குறிப்பிட்ட விவரமானது, மூன்றாவதாக முஹம்மது செய்த தவறாகும். அதாவது பைபிளின் படி கூறப்பட்ட யாக்கோபின் நிகழ்ச்சியிலிருந்து சில விவரங்களை எடுத்து முஹம்மது மோசேயின் நிகழ்ச்சியோடு சேர்த்துள்ளார். யாக்கோபு தான் தன் குடும்பத்தாருடன் சேர்ந்து தன் மாமனாராகிய லாபானை விட்டு, தன் காலக்கெடு முடிந்தவுடன் சென்றார். இன்னும் சில ஆண்டுகள் அதிகபடியாகவும் அவர் தன் மாமனாருடன் இருந்துள்ளார் (ஆதியாகமம் 30:25 லிருந்து 31:55 வரை பார்க்கவும்). இதைத் தான் ஒரு மாதிரியான நிபந்தனையாக "எட்டு ஆண்டுகள்... பத்து ஆண்டுகள்" என்று குர்‍ஆன் ஸூரா 28:27ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாக்கோபு தன் மாமனாராகிய லாபானை விட்டு, தன் தாய் நாட்டிற்கு (ஊருக்கு) செல்வதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன:

(1) லாபான் யாக்கோபை அனேகமுறை ஏமாற்றினார் (ஆதியாகமம் 31:41) மற்றும்

(2) தன் சகோதரனாகிய ஏசாவுடன் ம‌றுபடியும் ஒற்றுமையடைய செல்கிறார் (ஆதியாகமம் 32,33).


இந்த பயணத்தின் போது யாக்கோபு தேவனை சந்தித்தார் (ஆதியாகமம் 32:22 லிருந்து 30 வரை).

இதுவரை நாம் கண்ட விவரங்களிலிருந்து புரியும் விவரம் என்னவென்றால், குர்‍ஆனின் ஆசிரியர் யாக்கோபின் மற்றும் மோசேயின் வாழ்க்கை வரலாறை சரியாக புரிந்துக்கொள்ளாமல் குழப்பமடைந்துள்ளார். குர்‍ஆன் ஆக்கியோன், யாக்கோபின் வாழ்வில் நடந்த அனேக விவரங்களை எடுத்து, தாமே சொந்தமாக மோசேயின் வாழ்க்கையோடு முடிச்சு போட்டுள்ளார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் அல்லது நம்ப முடியாத உண்மை என்னவென்றால், இந்த குழப்படைந்த நபரே இறைவனாக இருப்பது தான் அல்லது இந்த குழப்பம் அல்லாஹ்வின் வெளிப்பாடு என்று முஸ்லிம்கள் நம்புவது தான். இதன் முடிவு? ஏற்கனவே குர்‍ஆனில் காணப்படும் அனேக பிழைகள் மற்றும் முரண்பாடுகளோடு சேர்ந்து, இந்த முரண்பாடும் ஒண்டிவிடுகிறது, இதன் மூலம் அறிவது என்ன? குர்‍ஆன் என்பது அறியாமையில் இருக்கும் மற்றும் தவறுகள் செய்யும் ஒரு சாதாரண மனிதனின் கைவேலை என்பது நிருபனமாவதாகும்.

தோரா அல்லது ஐந்தாகமங்களின் விவரங்களின் படி பார்க்கும் போது, குர்‍ஆன் சொல்லும் விவரங்கள் எப்படி முஹம்மதுவின் அறியாமையினாலும், குழப்பத்தினாலும் நிரம்பியுள்ளது என்பதை எளிதாக கண்டுக்கொள்ளலாம். இந்த குழப்பத்திற்கு காரணம் என்னவென்றால், முஹம்மது சுயமாக எபிரேய வேதத்தை பார்த்து படித்து தெரிந்துக்கொள்ள அவரால் முடியவில்லை ஆகையால், தன்னுடைய குறையுள்ள ஞானத்தோடு அங்கும் இங்கும் கேட்ட நிகழ்ச்சிகளை தன் சொந்த கதைகளோடு சேர்த்து குர்‍ஆனில் கூறியுள்ளார். குர்‍ஆன் இறைவனிடமிருந்து வந்தது என்ற கற்பனை கட்டுக்கதையை இதுவரை கேட்காமல் இருக்கும் ஒரு சராசரி மனிதன், மேற்கண்ட விவரங்களைக் கண்டால், அவன் இப்படித்தான் நினைத்துக்கொள்வான், அதாவது இந்த விவரங்களை குர்‍ஆனில் சேர்த்தவர் கண்டிப்பாக இரண்டு நிகழ்ச்சிகள் பற்றி குழம்பிப்போய் இப்படி முரண்பட்டுள்ளார் என்று எண்ணுவான். குர்‍ஆனின் குழப்ப கதைகளுக்கு இந்த நிகழ்ச்சி மட்டும் ஒரு எடுத்துக்காட்டு என்று நினைத்துக்கொள்ளக்கூடாது. இது போல அனேக நிகழ்ச்சிகளை பைபிளிலிருந்து எடுத்து அதை புரிந்துக்கொள்ளாமல் குழம்பமடைந்து இப்படி முரண்பட்ட நிகழ்ச்சிகள் குர்‍ஆனில் ஏராளம் உண்டு. இவைகள் பற்றி அறிய "குர்‍ஆனின் சரித்திர பிழைகள்" என்ற தலைப்பில் உள்ள முரண்பாடுகளை படித்து தெரிந்துக்கொள்ளவும்.

மேலும், ஒருவேளை குர்‍ஆனில் சொல்லிய படியே தோராவில் இருந்தது என்று இஸ்லாமியர்கள் சொல்வார்களானால், இது எப்படி சாத்தியமாகும் என்பதை இஸ்லாமியர்கள் விளக்கவேண்டும்? இஸ்லாமியர்கள் "தோரா திருத்தப்பட்டது" என்று சொல்வது அவர்களுக்கு சுலபமான பதிலாக இருக்கும். ஆனால், எந்த ஒரு குற்றமும், அல்லது பரிசுத்த வார்த்தைகளை மாற்றி எழுதும் குற்றமும் வெறுமனே நடந்துவிடாது, அவைகளுக்கு பின்னே ஒரு மிகப்பெரிய காரணம் அல்லது நோக்கம் இருக்கும். இப்போது இஸ்லாமியர்கள் பதில் சொல்லுங்கள், ஒரு மனிதனுக்கு "இரண்டு பெண்கள் இருக்கிறார்கள்" என்ற வார்த்தைக‌ள் இருக்கும் இடத்தில் "ஏழு பெண்கள் இருக்கிறார்கள்" என்று மாற்றி எழுதவேண்டுமானால், இப்படி ஒருவன் மாற்றவேண்டியதின் அவசியம் என்ன? மட்டுமல்ல, இப்படி மாற்றுவது சுலபமானதும் அல்ல, உலகில் அந்த காலத்தில் தோராவின் எத்தனை பிரதிகள் இருந்தனவோ, அவைகள் அனைத்திலும் சென்று இந்த மாற்றம் செய்வது கூடாத காரியமாகும். இந்த "இரண்டு பெண்கள்" என்ற இடத்தில் "ஏழு பெண்கள்" என்று மாற்றுவதினால், மத ரீதியாக தத்துவ ரீதியாக எந்த முக்கியத்துவம் அடையப்போவதில்லை, இதனால் எந்த உபயோகமும் இல்லை. இப்படி எந்த ஒரு யூதனும், அல்லது கிறிஸ்தவனும் மாற்றப்போவதில்லை, அவனுக்கு இதில் விருப்பமும் இருக்க நிச்சயமாக வாய்ப்பு இல்லை. பைபிள் மற்றும் குர்‍ஆனுக்கு இடையே காணப்பட்ட இந்த ஒரு வித்தியாசத்தை மட்டும் இஸ்லாமியர்கள் விளக்கினால் போதாது, இது போல இருக்கும் இன்னும் அனேக குழம்ப்பம் தரும் குர்‍ஆனின் தவறுகள், மற்றும் முரண்பாடுகளை அவர்கள் விளக்கவேண்டும், அதாவது அனேக கதைகளில் குர்‍ஆன் செய்த குழப்பம் பற்றி விளக்கமளிக்க வேண்டும்.

இந்த மாற்றங்கள் எந்த ஒரு மத கோட்பாட்டையும் மாற்றிவிடப்போவதில்லை, அதாவது "இரண்டு பெண்கள்" என்ற வார்த்தையை "ஏழு பெண்கள்" என்று ஒரு யூதன் மாற்றுவதினால், மார்க்க ரீதியாக என்ன பயன் உண்டாகப்போகிறது? எந்த ஒரு பயனும் இல்லை, ஆகவே, இது மாற்றமடைந்த ஒன்று அல்ல, இது குர்‍ஆனின் குழப்பமாகும்.

நேரடியாக ஒரே வரியில் சொல்லவேண்டுமென்றால், குர்‍ஆனின் இந்த குழப்பத்திற்கு காரணம் முந்தைய வேதங்கள் பற்றிய அறிவு முஹம்மதுவிற்கு சரியான முறையில் இல்லாமல் இருந்தது தான். இந்த ஆய்வின் மூலமாக நாம் அறிவது இது தான், இயற்கையாகவே முஹம்மது அதிகமாக குழம்பியுள்ளார். எந்த ஒரு இஸ்லாமியரும், இது வரை தங்கள் குர்‍ஆன் இறைவனின் வேதம் என்று நிருபிக்க, இப்படிப்பட்ட முரண்பாட்டுக்கு சரியான முறையில் பதில் சொல்லி, குர்‍ஆனை காப்பாற்றிக்கொள்ளவில்லை.

ஆங்கில மூலம்: Qur'an Contradiction - Moses or Jacob?

இதர குர்‍ஆன் முரண்பாடுகளை இங்கு படிக்கவும்.

ஆசிரியர் ஜோசன் கட்ஜ் அவர்களின் இதர கட்டுரைகளை இங்கு படிக்கவும்

4 கருத்துகள்:

பசுந்தமிழன் சொன்னது…

உங்கள் கட்டுரைக்கு போட்டியாக

ஆபிரஹாம் அல்லது ஈசாக்கு- கர்த்தரின் குழப்பம்-

என இங்கே கட்டுரை?

பதில் தருவீர்களா?

பசுந்தமிழன் சொன்னது…

உங்கள் கட்டுரைக்கு போட்டியாக

ஆபிரஹாம் அல்லது ஈசாக்கு- கர்த்தரின் குழப்பம்-http://pagadhu.blogspot.in/

என இங்கே கட்டுரை?

பதில் தருவீர்களா?

Isa Koran சொன்னது…

நான் அந்த கட்டுரையை படித்து, என் பதிலை தருவேன்.

Isa Koran சொன்னது…

http://isakoran.blogspot.in/2012/07/blog-post.html

தேவப்பிரியாவிற்கு பதில்: ஆதியாகமத்தில் கர்த்தர் குழம்பவில்லை, ஆதியிலிருந்தே தேவப்பிரியா குழம்பியுள்ளார்

என் பதிலையும், என் கேள்வியையும் நான் மேலேயுள்ள கட்டுரையில் கொடுத்துள்ளேன்.