ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

செவ்வாய், 2 ஜூலை, 2013

முதல் மனைவியின் அனுமதியுடன் தான் முஸ்லிம்கள் இரண்டாவது திருமணம் செய்துக் கொள்கிறார்களா?

  முதல் மனைவியின் அனுமதியுடன் தான் முஸ்லிம்கள் இரண்டாவது திருமணம் செய்துக் கொள்கிறார்களா?

முன்னுரை:

தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்தில் ஒரு சகோதரர் கீழ்கண்ட கேள்வியை முன்வைத்தார்.

சகோதரரே முதல் மனைவியின் அனுமதியுடன்தான் ஒரு இஸ்லாமியன் அடுத்த திருமணங்களை செய்ய முடியும் என்று சொல்கிறார்கள். முதல் மனைவியின் அனுமதியில்லாம் செய்தால்  அது இஸ்லாமிய சட்டப்படி குற்றமாம். இதன் உண்மைத்தன்மையை பற்றி விளக்க முடியுமா? (மூலம்: http://www.tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=38&topic=2643&Itemid=287)

இப்படிப்பட்ட கேள்விகளை பீஜே போன்ற இஸ்லாமிய அறிஞர்களிடம் கேட்கவேண்டும். இவர்கள் இதற்கு நேரடியாக "ஆம்" அல்லது "இல்லை" என்றுச் சொல்லாமல், மக்களை தெளிவாக குழப்புவார்கள்.  யாராவது பீஜே அவர்களிடம் இந்த கேள்வியை கேட்பார்களா?

இக்கட்டுரையின் தலைப்புகள்:

1) குர்-ஆனின் வரையறை: குர்-ஆன் 4:3
2) முஹம்மதுவின் மகள் "பாத்திமா" அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி:
3) முஹம்மது எப்படி நடந்துகொண்டார்?
4) தனக்கு சக்காளத்தி வருவதை எந்த பெண் தான் விரும்புவாள்:
5) மனைவியை விடுங்கள், செக்ஸ் அடிமைகள் பற்றி குர்-ஆன் என்ன சொல்கிறது?
6) எல்லாவற்றிலும் விதிவிலக்குகள் உண்டு:
முடிவுரை:

இப்போது இந்த கட்டுரையின் கேள்விக்கு வருவோம்.

1) குர்-ஆனின் வரையறை: குர்-ஆன் 4:3

அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்!  (மனைவியரிடையே) நீதியாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை  (போதுமாக்கிக் கொள்ளுங்கள்!). இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி. (பீஜே தமிழாக்கம்)

இந்த வசனத்தின் படி, ஒரு இஸ்லாமிய ஆண் நான்கு திருமணம் செய்துக்கொள்ள அனுமதி பெறுகிறான்.  இந்த வசனத்திலோ அல்லது குர்-ஆனின் இதர வசனங்களிலோ, எங்கும், முதல் மனைவியின் அனுமதி பெற்று தான் ஒரு முஸ்லிம் இரண்டாவது, மூன்றாவது அல்லது நான்காவது திருமணம் செய்யவேண்டும் என்று சொல்லப்படவில்லை.

குர்-ஆன் அனுமதிக்காத ஒன்றை, முஸ்லிம்கள் செய்யமாட்டார்கள். அதாவது நான்கு திருமணங்கள் பற்றி அல்லாஹ் கட்டளையிட்டு இருக்கும் போது, அதைச் செய்யலாமா செய்யக்கூடாதா என்று மனிதர்களிடம் முக்கியமாக தன் முதல் மனைவியிடம் கேட்டு செய்யமாட்டார்கள் இஸ்லாமியர்கள்.

ஆக, இதன் அடிப்படையில் பார்த்தால், ஒரு முஸ்லிமுக்கு அடுத்தடுத்து திருமணம் செய்ய, முதல் மனைவியின் அனுமதி  தேவையில்லை என்பது விளங்கும்.

இப்போது ஹதீஸ்களிலிருந்து ஒரு எடுத்துக்காட்டை காண்போம்.

2) முஹம்மதுவின் மகள் "பாத்திமா" அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி:

முஹம்மதுவின்  அன்பான மகள் பாத்திமா அவர்களின் கணவர் அலி என்பவர் இரண்டாவது மனைவியை திருமணம் செய்ய முடிவு செய்தார். இதனை அறிந்த பாத்திமா வேதனை அடைந்து, தன் கணவரின் இந்த முடிவு பற்றி தம் தந்தையிடம் முறையிடுகிறார்கள். உடனே, முஹம்மது இதற்கு மறுப்புச் சொல்கிறார்.  அலி அவர்களும் தன் மாமனாரின் (இஸ்லாமிய நபி) மீது வைத்த மரியாதையின் காரணமாக, தன் முடிவை மாற்றிக்கொள்கிறார்.
இந்த நிகழ்ச்சியை சித்தரிக்கும் புகாரி ஹதீஸை நாம் இப்போது படிப்போம்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3729

மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார் 

அலீ(ரலி) (ஃபாத்திமா இருக்கவே,) அபூ ஜஹ்லுடைய மகளை (இரண்டாம் தாரமாக மணம் புரிந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். அதைப் பற்றி ஃபாத்திமா(ரலி) கேள்விப்பட்டார்கள். உடனே அவர்கள் (தம் தந்தையான) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, '(தந்தையே!) உங்கள் சமுதாயம் உங்களுடைய மகள்களுக்காக (அவர்கள் மனத்துன்பத்திற்கு ஆளாக்கப்படும் போது) நீங்கள் கோபம் கொள்ளமாட்டீர்கள். என்று கருதுகிறது. (உங்கள் மருமகனும் என் கணவருமான) இந்த அலீ, அபூ ஜஹ்லுடைய மகளை மணக்கவிருக்கிறார்" என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள், (உரையாற்ற) எழுந்தார்கள். அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, 'நிற்க, அபுல் ஆஸ் இப்னு ரபீஉவை (என் மூத்த மகள் ஸைனபுக்கு) மணம் முடித்து வைத்தேன்.

அவர் என்னிடம் (தன் மனைவியைத் திருப்பி அனுப்பி விடுவதாக வாக்களித்துப்) பேசினார்; (பேசியபடி) வாய்மையுடன் நடந்து கொண்டார். ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். எவரும் அவருக்குத் துன்பம் தருவதை நான் வெறுக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதருடைய மகளும் அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் ஒரே மனிதரிடம் ஒன்று சேர முடியாது. என்று கூறினார்கள். 
எனவே, அலீ(ரலி) (அபூ ஜஹ்லுடைய மகளைப்) பெண் பேசுவதைவிட்டுவிட்டார்கள். . . . . . .

இதே விவரம் அடங்கிய இந்த ஹதீஸையும் காண்க:  பாகம் 3, அத்தியாயம் 57, எண் 3110

இந்த நிகழ்ச்சியின் படி நாம் அறிவது என்னவென்றால், முஹம்மதுவின் மருமகனாகிய அலி அவர்கள், தன் மாமனாரின் மனதுக்கு துக்கம் வரக்கூடாது என்பதற்காக, தனது இரண்டாவது மனைவி தேடுதலை விட்டுவிட்டார். இங்கு கவனிக்க வேண்டிய விஷயம், "தன் முதல் மனைவியின் அனுமதியின்றி, அலி அவர்கள் இரண்டாம் திருமணம் செய்ய முயற்சி எடுத்துள்ளார்கள். வேறு வகையில் சொல்லவேண்டுமென்றால், பாத்திமாவின் விருப்பத்திற்கு எதிராகவும், அவர்கள் துக்கம் அடையும் விதமாகவும் செயல்பட்டுள்ளார்.

[இதே அலி அவர்கள், பாத்திமா இறந்த பிறகு மேலும் ஆறுக்கும் அதிகமான பெண்களை திருமணம்  செய்துள்ளார், அடிமைப்பெண்களை வைப்பாட்டிகளாக வைத்திருந்தார்.] 

ஆக, முஹம்மதுவின் மகள் பாத்திமாவிற்கே இந்த நிலையென்றால், மற்றவர்களின் நிலை எப்படி இருக்கும்.

ஒரு முஸ்லிம் தன் முதல் மனைவியின் அனுமதி இல்லாமலேயே அடுத்தடுத்த திருமணம் செய்கிறார், இது தான் உண்மை.

3) முஹம்மது எப்படி நடந்துக்கொண்டார்?

குறைந்தபட்சம் முஹம்மதுவாவது அடுத்தடுத்து திருமணங்கள் செய்த போது, தன்னுடைய முந்தைய மனைவிமார்களின் அனுமதி பெற்று தான் திருமணங்கள் செய்தாரா?  இதற்கும் பதில் "இல்லை" என்பதாகும்.

முஹம்மது தம் முதல் மனைவி, கதிஜா அவர்கள் உயிரோடு இருக்கும் வரைக்கும், இரண்டாவது திருமணம் செய்துக்கொள்ளவில்லை. அவர்கள் மரணித்த பிறகு 10க்கும் அதிகமான பெண்களை திருமணம் செய்துக்கொண்டார். அனேக பெண்களை அடிமைகளாக வைப்பாட்டிகளாக வைத்திருந்தார்.

முஹம்மது சௌதா அவர்களை திருமணம் செய்த போது, கதிஜா அவர்கள் ஏற்கனவே மரித்துவிட்டார்கள். ஆனால், முஹம்மது ஆயிஷாவை திருமணம் செய்த போது, சௌதாவிடம் அனுமதி கேட்டு, அவர்கள் அனுமதி கொடுத்த பிறகு தான் திருமணம் செய்தார்களா? இதற்கு பதில் "இல்லை" என்பதாகும்.
அதே போல, அடுத்தடுத்த திருமணங்கள் செய்தபோது, அவர் முந்தைய மனைவிமார்களின் அனுமதி பெற்றுத் தான் செய்தாரா? இதற்கும் பதில் இல்லை என்பதாகும்.

ஆக, முஹம்மது தன் சொந்த வாழ்விலும் செய்யாத ஒன்றை, எப்படி இஸ்லாமியர்கள் பின்பற்றுவார்கள்?

4) தனக்கு சக்காளத்தி வருவதை எந்த பெண் தான் விரும்புவாள்:

இஸ்லாமிய பெண்கள் மட்டுமல்ல, உலகில் எந்த பெண்ணாக இருந்தாலும் சரி, தன் கணவனின் படுக்கையை, அன்பை, பகிர்ந்துக்கொள்ளும் இன்னொரு பெண்ணை அனுமதிக்கமாட்டாள்.

முஹம்மது தன் முந்தைய மனைவியின் அனுமதி பெற்று தான் அடுத்த திருமணம் செய்ய விரும்பியிருந்தால், உலகில் அவர் "ஏக பத்தினி விரதன்"  என்ற விருதுக்கு தகுதியானவராக இருந்திருப்பார்.  அவர் மட்டுமல்ல, எந்த ஒரு முஸ்லிமும் இரண்டாவது மனைவியை திருமணம் செய்திருக்கமாட்டார்கள். இது உலக நியதி (இதில் விதி விலக்குகள் உண்டு, அவைகளை கடைசி பாயிண்டாக தருகிறேன்).

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், ஒரு முஸ்லிம் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது திருமணம் செய்வது என்பது:

1)       முதல் மனைவியின் அனுமதி இல்லாமல் செய்வதாகும்.
2)       முதல் மனைவியின் விருப்பத்திற்கு எதிராக செய்வதாகும்.
3)       முதல் மனைவியின் அன்பை தன் காலின் கீழ் போட்டு மிதித்துவிட்டு, எடுக்கும் செயலாகும்.
4)       தன் முதல் மனைவிக்கு செய்யும் துரோகச் செயலாகும்.
5)       தன் முதல் மனைவியை 100% நேசிக்காமல் செய்யும் செயலாகும்.
6)       தன் முதல் மனைவியை ஒரு செக்ஸ் மிஷன் போல நினைத்து,  அவளது எண்ணங்களுக்கு, மதிப்பு கொடுக்காமல் செய்யும் செயலாகும்.

இது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, உலகில் எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் சரி, இரண்டாவது மனைவியை திருமணம் செய்யும் ஒவ்வொருவனுக்கும் இது பொருந்தும்.

[ஒருவேளை சிலர் இப்படி என்னிடம் கேட்க முன்வரலாம், அதாவது பைபிளில் பழைய ஏற்பாட்டில் வரும் அனேகர் பல திருமணங்கள் செய்துள்ளார்களே, அவர்களும் இப்படி முதல் மனைவியை துக்கப்படுத்தியவர்கள் தானா? என்று கேட்டால், "ஆம்" என்பது தான் பதில். அவர் ஆபிரகாமாக இருந்தாலும் சரி, தாவீது, சாலொமோன் என்றுச் சொல்லும் அரசர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் தங்கள் முதல் மனைவிக்கு துக்கத்தை வருவித்து தான் அடுத்தடுத்த திருமணம் செய்துக்கொண்டார்கள். இவர்கள் செய்தார்கள் ஆகையால் அது சரியாக இருக்கும் என்று சொல்லமுடியாது, தவறு செய்தால், அது தவறு தான். மனித சமுதாயம் வளர்ச்சி அடையாத அந்த காலத்தில் அவர்கள் செய்ததை காரணங்காட்டி, அதை இப்போதும் நாம் பின்பற்றலாம் என்றுச் சொன்னால், அது அடிமுட்டாள்த் தனமாகும்.

மனிதன் வளர்ச்சி அடைந்துகொண்டு வந்த பழங்காலத்தில்  பின் பற்றிய பழக்கங்களை சரி பார்த்து, அவைகளால் சமுதாயத்திற்கு நன்மையா தீமையா என்பதை ஆராயவேண்டும். நன்மை தரும் பழக்கங்களை இன்றும் கடைபிடிக்கவேண்டும், தீமை தரும் பழக்கங்களை விட்டுவிடவேண்டும்.]

5) மனைவியை விடுங்கள், செக்ஸ் அடிமைகள் பற்றி குர்-ஆன் என்ன சொல்கிறது?

இரண்டாவது திருமணம் பற்றி முதல் மனைவியின் ஒப்புதல் பெறுவது ஒரு நிலை. இதை ஒரு பக்கம் வையுங்கள், இஸ்லாமில் ஒரு முஸ்லிம் அடிமைப்பெண்களை விலைக்கு வாங்கி, வீட்டில் வைத்துக்கொண்டு, தேவைப்படும் போது அவர்களோடு உடலுறவு கொள்ளலாம், அதாவது அவர்களோடு விபச்சாரம் வேசித்தனம் செய்யலாம். வீட்டில் நான்கு மனைவிமார்கள் இருந்தாலும், பிள்ளைகள் இருந்தாலும், தனியாக அடிமைப்பெண்களை வைத்துக்கொண்டு, இப்படி கலர் கலராக கும்மாளம் அடிக்கலாம்.

இப்போது கேள்வி என்னவென்றால், இந்த அடிமைப்பெண்களை விலைக்கு வாங்கி வீட்டிற்கு அழைத்து வருவதற்கு முன்பாக, தன்னுடைய மனைவிமார்களிடம் அனுமதி பெறுகிறார்களா?   இதற்கு பீஜே போன்ற இஸ்லாமிய காப்பாளர்கள் பதில் அளிப்பார்களா?

முஹம்மதுவே இப்படி அடிமைப்பெண்களை வைத்திருக்கும்  போது, தன்னுடைய முந்தைய மனைவிமார்களின் அனுமதி பெறாத போது, சாதாரண முஸ்லிம்கள் தங்கள் மனைவிமார்களிடம் அனுமதி பெறுவார்களா? நிச்சயமாக இல்லை. இஸ்லாமுடைய இப்படிப்பட்ட கோட்பாடுகள், மனித சமுதாயத்திற்கு கிடைத்த சாபங்கள், வெட்கக்கேடுகள்.

இஸ்லாமிலே, மனைவிமார்களை ஒரு பொருட்டாகவே மதிக்காத போது, அவர்களுக்கு ஞானம் குறைவு என்று முஹம்மது சொல்லியிருக்கும் போது, அவர்களின் சாட்சி, ஆண்களின் சாட்சியில் பாதி தான் என்று முஹம்மது சட்டமாக்கியுள்ள போது, அவர்களிடம் போய் யாராவது அனுமதி கேட்பார்களா? அதுவும், அவர்களுக்கு சக்காளத்திகளை வீட்டிற்கு கொண்டு வர, அவர்களிடமே அனுமதி கேட்டால், எந்த ஒரு அறிவுள்ள பெண்ணாவது அனுமதி கொடுப்பாளா? நிச்சயமாக இல்லை.

எனவே, முஸ்லிம்கள் இரண்டாம் திருமணம் செய்யும் போது முதல் மனைவியின் அனுமதி பெற்று தான் செய்யவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது என்று யாராவது கூறினால், அது மிகப்பெரிய புளுகு மூட்டையாகும். இதனை மறுப்பவர்கள், ஆதாரத்தோடு விளக்கட்டும், அப்போது இந்த கட்டுரையை நான் நீக்கிவிடுகிறேன்.

6) எல்லாவற்றிலும் விதிவிலக்குகள் உண்டு:

ஒரு சில விதிவிலக்குகள் உலகில் அவ்வப்போது காணப்படுவார்கள். அதாவது முதல் மனைவியே தன்னுடைய கணவனுக்கு இரண்டாவது மனைவியை தேடித்தருவது, அல்லது அனுமதி அளிப்பது போன்றவை அவ்வப்போது நடக்கும்.  இவைகள் "விதி விலக்குகள்" இவைகள் பின்பற்றத் தகுதியான நல்ல சட்டங்கள் அல்ல என்பதை மனதில் வைக்கவேண்டும்.

அ) முதல் மனைவிக்கு, குணமாகாத வியாதி இருக்கும் போது, சீக்கிரமாக மரணம் அவளை சந்திக்கும் என கருதும் போது, அவள் தன் கணவனின் நிலையை புரிந்துக்கொண்டு, பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தன் கணவனுக்கு மனப்பூர்வமாக இரண்டாவது திருமணத்தை தன் கையாலேயே செய்துவைப்பது. இது ஒரு விதிவிலக்காகும்.

ஆ) முதல் மனைவி, தன் தங்கைக்கு திருமணம் ஆகாத நிலையை புரிந்துக்கொண்டு, தன் தங்கைக்கு திருமணம் செய்ய  தன் தாய் வீட்டில் பணவசதி இல்லாத போது, தன் கணவனுக்கே தன் தங்கையை இரண்டாம் மனைவியாக கொடுக்க (தன் வாழ்வை கெடுக்க) முன்வரும் முதல் மனைவிமார்கள் சிலர் இருப்பார்கள். இந்த விதிவிலக்குகள், பணவசதி இல்லாத ஏழை குடும்பங்களில் நடப்பதுண்டு.

இ) ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து, தன் தங்கையின் வாழ்வை கெடுத்துவிட்ட தன் கணவனுக்கே அவளை திருமணம் செய்துக் கொடுக்கும் பெண்களும் இருப்பார்கள்.

ஈ) இஸ்லாமிய நாடுகளில் நடப்பது போல, முதல் மனைவிக்கு எந்த ஒரு உரிமையும் இல்லாத போது, கணவனை எதிர்த்து கேள்வி கேட்டால், உடனே வீட்டை விட்டு போய் விடு என்றுச் சொன்னால்,  வெளியே சென்று வாழ வழி தெரியாத முதல் மனைவிமார்கள், தங்கள் கணவனின் காமபசிக்கு பலியாக வரும் இரண்டாவது மனைவியை, அன்புடன் தங்கள் குடும்பத்தில் ஏற்றுக்கொள்வார்கள். கிட்டத்தட்ட 99% இஸ்லாமிய பெண்கள், தங்கள் குடும்பத்தில்  இன்னொரு பெண் வருவதை அனுமதித்தால், அதற்கு இந்த காரணம் தான் இருக்கும். முஹம்மதுவின் மனைவிகளின் நிலையும் இது தான்.

இப்படி அனேக விதிவிலக்குகளை சொல்லலாம். இந்த அனைத்து விதி விலக்குகளிலும், அந்த முதல் மனைவிமார்கள், ஒரு நிர்பந்தத்தில் இருந்துக்கொண்டு தான் அனுமதி அளிப்பார்கள்.

முடிவுரை: இதுவரை கண்ட விவரங்களின் மூலம் நாம் அறிவது என்னவென்றால், இஸ்லாமிலே முதல் மனைவியின் அனுமதி இன்றி தான் அடுத்தடுத்த பெண்களை முஸ்லிம்கள் திருமணம் செய்கிறார்கள் என்பது தெளிவாக விளங்கும்.

இந்துக்களோ, கிறிஸ்தவர்களோ, இஸ்லாமியர்களிடம் நான்கு திருமணங்கள் பற்றி கேள்வி எழுப்பும் போது, தர்மசங்கடத்தில் மாட்டிக்கொள்ளும் முஸ்லிம்கள், இப்படி பொய்களைச் சொல்லி சமாளிக்கிறார்கள்.

இந்த கட்டுரையை படித்து, இஸ்லாமியர்கள் தகுந்த பதில் அளித்தால், இந்த கட்டுரையை நீக்க நான் தயாராக உள்ளேன். தமிழ் நாட்டில், இந்தியாவில், ஏன் உலக அளவில், எந்த ஒரு இஸ்லாமிய அறிஞராவது, இதற்கு பதில் அளித்து, நான் சொல்வது தவறு, பல திருமணங்கள் செய்யும் ஒவ்வொரு முஸ்லிமும், முதல் மனைவியின் அனுமதி பெற்று தான் திருமணங்கள் செய்கிறார் என்று விளக்கமுடியுமா, தங்கள் நிலையை நிருபிக்கமுடியுமா? குறைந்த பட்சம், தாங்கள் வழிகாட்டியாக பின்பற்றும் முஹம்மதுவாவது இப்படி அனுமதி பெற்று தான் திருமணங்கள் செய்தார் என்று நிருபிக்கமுடியுமா?

கருத்துகள் இல்லை: