ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

செவ்வாய், 10 டிசம்பர், 2013

2013 கிறிஸ்துமஸ்: பாகம் 2 - மரியாளுக்கு அல்லாஹ் செய்த அற்புதம், ஏன் பைபிளில் காணப்படவில்லை?


[கிறிஸ்துமஸ் 2013: பாகம் 1ஐ இங்கு சொடுக்கி படிக்கவும்]

[உமரும் அவரது தம்பி அப்துல்லாஹ்வும் ஸ்கைப்பில் (Skype) பேச மறுபடியும் உட்கார்ந்தார்கள், உரையாடல் தொடர்கிறது]

அப்துல்லாஹ்: உமரண்ணா, எப்படி இருக்கீங்க?

உமர்: கர்த்தரின் கிருபையால் நன்றாக இருக்கிறேன், நீ எப்படி இருக்கின்றாய்?

அப்துல்லாஹ்: அல்லாஹ்வின் அருளால் நன்றாக இருக்கிறேன். இன்று ஒரு முக்கியமான கேள்வியை நான் கேட்கவேண்டும், இப்போது கேட்கட்டுமா?

உமர்: தாராளமாக கேட்கலாம்.

அப்துல்லாஹ்: குர்-ஆன் 3:37 ல் அல்லாஹ் இயேசுவின் தாய் மரியாள் அவர்களுக்கு அற்புதமாக உணவை கொடுத்தார் என்று கூறுகிறது. இந்த அற்புதம் ஏன் பைபிளில் சொல்லப்படவில்லை? இயேசு செய்த அனைத்து அற்புதங்களையும் தெரிவிக்கும் சுவிசேஷ நூல்கள், இயேசுவின் தாய்க்கு இறைவன் செய்த இந்த அற்புதத்தை மட்டும் ஏன் மறைத்துவிட்டது?  இயேசுவின் தாய்க்கு நீங்கள் கொடுக்கும் கௌரவம் இது தானா?
குர்-ஆன் 3:37ம் வசனத்தை ஒரு முறை படியுங்கள்:

3:37. அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், "மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?" என்று அவர் கேட்டார்; "இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்" என்று அவள்(பதில்) கூறினாள்.

என்னுடைய இந்த கேள்விக்கு உங்கள் பதில் என்ன?

உமர்: நல்ல அருமையான கேள்வியை கேட்டு இருக்கின்றாய்!

அப்துல்லாஹ்: தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருங்கள், கிறிஸ்மஸ் ஏவுகனைகள் உங்களை நோக்கி வந்துக்கொண்டே இருக்கும். நீங்கள் கலங்கப்போகிறீர்கள்!

உமர்: தம்பி உனக்கு அவசரம் அதிகம், இன்னும் நான் பதிலே சொல்லவில்லை, அதற்குள் அவசரப்பட்டு ஏதேதோ சொல்கிறாய். சரி, உன் கேள்விக்கு இப்போது பதிலைச் சொல்கிறேன், கேள். 

முதலாவது ஒரு விஷயத்தை தெரிந்துக்கொள், அதாவது இயேசு செய்த எல்லா அற்புதங்களும் புதிய ஏற்பாட்டில் சொல்லப்படவில்லை. எனவே, "இயேசு செய்த அனைத்து அற்புதங்களையும் தெரிவிக்கும் சுவிசேஷ நூல்கள்" என்றுச் சொல்லாதே. சுவிசேஷ நூல்கள் சில அற்புதங்களை மட்டுமே சொல்கிறது (பார்க்க யோவான் 21:25).

இரண்டாவதாக, உங்கள் முஹம்மதுவிற்கு கதைகள் சொல்லவேண்டுமென்றால் மிகவும் பிடித்தமான விஷயம் என்று நினைக்கிறேன், அதுவும் இதர புத்தகங்களிலிருந்து விஷயங்களை எடுத்து, அவைகளை தனக்கு விருப்பமான படி மாற்றிச் சொல்வது அவரது வழக்கம் போல தெரிகிறது.

மரியாளுக்கு அல்லாஹ் கொடுத்த அற்புதம் ஏன் பைபிளில் இல்லை என்று கேட்கிறாய்? முதலாவது, அற்புதங்களை ஏன் இறைவன் செய்கின்றான் என்று உனக்குத் தெரியுமா?

மக்களை சந்திக்கும் பெரும்பான்மையான நேரங்களில் கையிலிருந்து வீபூதியை தந்திரமாக கொண்டு வந்து, மக்களுக்கு எல்லாம் வழங்கும் சாய்பாபா போல இறைவன் நடந்துக்கொள்வார் என்று நீ நினைப்பது தவறு.

அற்புதம் என்பது விளையாட்டாய் செய்யும் செயலல்ல, ஒரு முக்கியமான நோக்கத்திற்காக, மக்களுக்கு நம்பிக்கை வருவதற்காக, தேவைப்படும் போது  செய்வது தான் அற்புதம்.

இயேசு கூட அற்புதம் செய்தார். மக்களின் தேவைக்காகவும், தன்னுடைய செய்தியின் நம்பகத்தன்மையை நிருபிப்பதற்காகவும் இயேசு அற்புதம் செய்தார். ஆயிரக்கணக்கான மக்களுக்கு அற்புதமாக உணவு அளித்த இயேசு, தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றிய இயேசு, தனக்கு பசி உண்டாகும் போது, சீடர்களை அனுப்பி உணவை வாங்கிக்கொண்டு வரும் படி அனுப்பினார். அவர் நினைத்து இருந்திருந்தால், அற்புதம் செய்து தன் பசியை போக்கிக்கொண்டு இருக்கமுடியும், ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. நாற்பது நாட்கள் உபவாசம் இருந்து பசியின் உச்சக்கட்டத்தை அடைந்த பிறகும், சாத்தான் சோதிக்கும்போது அவர் தனக்காக அற்புதம் செய்யவில்லை. [வெறும் கற்களை ரொட்டிகளாக மாற்றும் வல்லமை இயேசுவிற்கு இருக்கிறது என்று சாத்தான் அறிந்திருந்தான்]. மேலும் அவர் வாழ்ந்த காலத்தில் மரித்த அனைவரையும் அவர் உயிரோடு எழுப்பவில்லை என்பதை கவனத்தில் வைத்துக்கொள்.

பழைய ஏற்பாட்டிலும், மோசேவுடன் தேவன் பேசும் போது, எகிப்தில் இருந்த யாக்கோபின் சந்ததியான இஸ்ரவேல் மக்கள் மோசேயை ஒரு நபி என்று நம்பமாட்டார்கள் என்பதால் அற்புதங்களை கொடுத்து  அனுப்பினார். மோசேயினால் செய்யப்பட்ட அற்புதங்களைக் கண்டு தான் மக்கள் அவரை நபி என்று நம்பி ஏற்றுக்கொண்டார்கள்.

எனவே, அற்புதம் என்பது தேவையில்லாமல் செய்யும் செயல் அல்ல.   அல்லாஹ் மரியாளுக்கு (தேவையில்லாமல்) அற்புதம் செய்ததாக குர்-ஆன்  சொல்கிறது. இந்த அற்புதம் உண்டாக்கும்  பிரச்சனைகளை பார்ப்போமா?

அப்துல்லாஹ்: இல்லை.. இல்லை… நீங்கள் சொல்வது தவறு. அல்லாஹ்  தன் அடியார்களுக்கு அற்புதங்களைச் செய்கிறார், இதனை நீங்கள் எப்படி மறுக்கமுடியும்?

உமர்: நான் சொல்வதை முழுவதுமாக கவனி, அவசரப்படாதே! தன் அடியார்களுக்கு இறைவன் அற்புதம் செய்யமாட்டார் என்று நான் சொன்னேனா? இல்லையல்லவா?  இறைவன் அற்புதம் செய்யும் போது, ஒரு முக்கியமான காரணத்தை முன்னிட்டுத்தான் அற்புதம் செய்வார், வேண்டாத விஷயத்திற்கு அற்புதம் செய்யமாட்டார் என்றுச் சொல்கிறேன், அவ்வளவு தான்.

உனக்கு புரியும் படி ஒரு எடுத்துக்காட்டைச் சொல்கிறேன் கேள்:  இயேசு சுகமளிக்கிறார் என்று எல்லா கிறிஸ்தவர்களும் அறிந்திருக்கிறார்கள்.  ஒரு கிறிஸ்தவன் தன் அலுவலகத்தில் முக்கியமான வேலை செய்துக்கொண்டு இருக்கும் போது, அவனுக்கு சின்ன தலைவலி வருகிறது என்று வைத்துக்கொள்வோம், இப்போது இந்த தலைவலியை நீக்க அவனுக்கு இரண்டு வழிகள் உண்டு, முதலாவதாக, அவன் ஒரு தலைவலி மாத்திரையை எடுத்துக்கொண்டு சூடான டீ அல்லது காபியை குடித்துவிட்டு, சில நிமிடங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டால் பெரும்பான்மையான சாதாரண தலைவலிகள் நீங்கிவிடும்.

ஆனால், அந்த கிறிஸ்தவன் மேற்கண்ட வழியை பின்பற்றாமல், கர்த்தர் எனக்கு பரிகாரியாக இருக்கிறார் என்றுச் சொல்லி, கர்த்தர் சுகமாக்கும்வரை நான் மருந்து எடுத்துக் கொள்ளமாட்டேன் என்று அடம்பிடித்துகொண்டு,  தன் அலுவலகத்தில் தன் கடமையைச் செய்யும் நேரத்தை வீணடித்துக்கொண்டு, ஒரு அறையில் உட்கார்ந்துகொண்டு மணிக்கணக்கில் ஜெபித்துக்கொண்டு இருந்தால் இயேசு சுகத்தைக் கொடுப்பாரா?

சரியான மருந்து நம் கையில் இருக்கும் போது "நீங்கள் அற்புதம் செய்தால் தான் நான் ஒப்புக்கொள்வேன்" என்றுச் சொல்லி அற்புதத்திற்காக அடம்பிடிப்பது தவறானதாகும். ஆனால், இதே தலைவலி தொடர்ந்து அனுதினமும் வந்துக்கொண்டு இருந்தால், மருத்துவரை காண்பது சிறந்தது. அதே நேரத்தில் கர்த்தரிடத்திலும் ஜெபிப்பது சரியானது.

"அற்புதம்" தேவைப்படாத விஷயத்தில் கர்த்தரிடமிருந்து அற்புதம் வேண்டுமென்று மனிதன் அடம்பிடிப்பது முட்டாள்தனமாகும். இதே போல, "அற்புதம்" தேவைப்படாத நேரத்தில் காரணமில்லாமல்  அற்புதம் செய்வது இறைவனின் முட்டாள்தனமாகும்.

நான் மேலே சொன்ன கிறிஸ்தவனுக்கு, அல்லாஹ்விற்கும் எந்த ஒரு வித்தியாசத்தையும் நான் காணவில்லை.

தேவையில்லாமல் தான் அல்லாஹ் மரியாளுக்கு அற்புதம் செய்து இருக்கிறார்.

அப்துல்லாஹ்: ஏன் இப்படி சொல்கிறீர்கள்?

உமர்: மரியாளுக்கு 'உணவு' கொடுத்து அற்புதம் செய்ததினால் அல்லாஹ் எதனை நிருபித்துள்ளார்? இதனால் அவர் என்ன சொல்ல வருகிறார்?

அப்துல்லாஹ்: "அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்" என்று மரியாள் சொல்கிறார்கள் அல்லவா?

உமர்: மரியாள் சொல்வது இறைவனின் பொதுவான குணமாகும். உலக படைப்பு அனைத்திற்கும் உணவு அளிப்பது இறைவனே. அதை அவன் கணக்கின்றி செய்கிறான்.  மரியாளுக்கு அற்புதம் செய்ய இது ஒரு காரணமா?

இந்த அற்புதத்தினால் வரும் பிரச்சனைகளை அல்லாஹ் அறிவாரா?

சரி இதற்கு பதில் சொல்:
  • மரியாளுக்கு உணவு அற்புதமாக வழங்கித்தான் ஆகவேண்டும் என்ற நிலையில் ஜகரிய்யா ஏழ்மையில் இருந்தாரா?
  • மூன்று பேருக்கு உணவு வழங்கும் அளவிற்கு ஜகரியாவின் பொருளாதார நிலை மிகவும் கேவலமாக இருந்ததா? அல்லது
  • தன்னால் மரியாளை பராமரிக்க முடியவில்லை என்று இவர் அல்லாஹ்விடம் வேண்டினாரா?
இந்த அற்புதம் மரியாளை எப்படி ஆபத்துக்குள்ளாக தள்ளுகிறது என்று உனக்குத் தெரியுமா? அதாவது, ஒரு பெண்ணுக்கு அனுதினமும் உணவை அற்புதகமாக அல்லாஹ் கொடுத்தால், அது அந்த ஊரில் உள்ளவர்கள் மத்தியில் ஒரு அதிசமான நிகழ்வாக இருந்திருக்கும்.  மரியாள் மிகவும் புகழ்பெற்ற பெண்ணாக கருதப்பட்டிருப்பார்கள் அல்லது ஊரில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒரு பெண்ணாக இந்த அற்புதத்தினால் மாறியிருந்திருப்பார்கள். விஷயம் இப்படியிருக்கும் போது:
  • மரியாள் கர்ப்பம் தரித்தவிஷயம் யாருக்கும் தெரியாமல் போனதெப்படி?
  • அனைவருக்கும் அறிமுகமான பெண் கர்ப்பம் தரித்து யாருக்கும் தெரியாத இடத்திற்கு சென்றுவிட்டார் என்று குர்-ஆன் சொல்கிறது. இது எப்படி சாத்தியமாகும்? ஜகரியா மரியாளை தேடவில்லையா?
  • ஊர் மக்கள் மரியாளை தேடவில்லையா?
  • ஒரு பெண் 9 மாதம் எப்படி தன் கர்ப்பத்தை மறைக்கமுடியும்? மூன்று மாதம் மறைக்கலாம், ஆனால், 9 மாதம் மறைக்கமுடியுமா?
  • மேலும் ஜகரிய்யா மற்றும் எலிசபெத் அவர்கள் முதிர்ந்த வயதை அடைந்த பின்னும் ஒரு குழந்தையை பெற்றெடுத்ததால், இவர்கள் குடும்பம் அனைவரும் அறிந்த குடும்பமாக இருந்திருக்கும். இன்னும் இவர்கள் வீட்டில் வளரும் மரியாளுக்கு அல்லாஹ் உணவை அற்புதமாக கொடுத்ததால், இன்னும் இவர்களின் புகழ் அதிகமாக பரவியிருக்கும். இந்நிலையில் மக்கள் எப்படி மரியாளை மறந்திருக்கமுடியும்?
ஆக, தம்பி, அல்லாஹ் செய்த அற்புதம், மரியாளை புகழ்பெற்ற பெண்ணாக மாற்றியிருக்கும். குறைந்தபட்சம் ஊரில் உள்ள அனைவரும் தெரிந்த பெண்ணாக மாற்றியிருக்கும். இப்படிப்பட்ட பெண்,  9 மாதம் குழந்தையை மறைத்துவைத்து, பிள்ளை பெற்றவுடன் மக்களிடம் கொண்டுச் செல்வது என்பது, நடைமுறையில் சாத்தியமில்லாத விஷயமாகும். நடைமுறையில் சாத்தியமில்லாதவைகளைத் தான் குர்-ஆன் அதிகமாகச் சொல்கிறது.

இதற்கு உன் பதில் என்ன?

அப்துல்லாஹ்: நான் கேட்ட கேள்வி என்ன? ஏன் இந்த அற்புதம் பைபிளில் சொல்லப்படவில்லை என்பதாகும். ஆனால், நீங்கள் இதற்கு பதில் சொல்லவில்லை?

உமர்: முதலில், நீ சொன்ன அற்புதமே ஒரு இட்டுக்கட்டப்பட்ட கதை என்று தெளிவாக தெரியும் போது, ஏன் இதர விஷயங்களை சிந்திக்கவேண்டும்?

தள்ளுபடி ஆகமங்களிலிருந்து:

மேலும், பைபிளில் இல்லாத இந்த அற்புதம் எப்படி முஹம்மதுவிற்கு தெரிந்தது என்று  நீ கேட்கலாம்?  இரண்டாம் நூற்றாண்டிலிருந்து அனேகர் அனேகவிதமான கதைகளை எழுதினார்கள்.  இயேசுவின் இளமைப்பருவம் தொடங்கி, அவர் மரிக்கும் வரையில்,  பைபிளில் சொல்லாத அனேக விஷயங்களை மக்கள் கற்பனை செய்து சுயமாக எழுதினார்கள். இவைகளை அறிஞர்கள் தள்ளுபடி ஆகமங்கள் என்று வரையறுத்துள்ளார்கள். இந்த வரிசையில் தான் "யாக்கோபின் சுவிசேஷம் – Gospel of James" என்ற தள்ளுபடி ஆகமத்தில் குர்-ஆனில் சொல்லப்பட்ட அற்புதம் எழுதப்பட்டுள்ளது. இப்புத்தகத்திலிருந்து ஒரு வசனத்தை உனக்கு படிக்க தருகிறேன்:

8.1 . . . .And Mary was in the temple of the Lord as a dove that is nurtured: and she received food from the hand of an angel.


இரண்டாம் நூற்றாண்டு முதற்கொண்டு மக்கள் மத்தியில் நிலவிய இப்படிப்பட்ட கதைகளை கேட்டு, முஹம்மது குர்-ஆனில் அவைகளை புகுத்தியுள்ளார். இவைகள் எல்லாம் பைபிளில் காணப்படவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது முட்டள்தனமாகும், தம்பி.  இன்னும் அனேக கட்டுக்கதைகள முஹம்மது குர்-ஆனில் இறைவசனங்களாக சேர்த்துள்ளார்,  அவைகளை நேரம் வரும் போது உனக்கு விளக்குகிறேன்.

அப்துல்லாஹ்: எவைகளைச் சொன்னாலும், ஏதோ ஒரு பதிலை தருகிறீர்கள், இது சரியானதல்ல.

உமர்: இதற்கு நான் என்ன முடியும்? உன் குர்-ஆனில் உள்ள குளறுபடிகளை இப்படிப்பட்ட சரித்திர பிழைகளை சொல்லாமல் இருக்கமுடியாதே! நீ தானே கேள்வி கேட்டாய்! உனக்கு பதில் சொல்லவேண்டியது என் கடமையாகும்.

இயேசுவின் பிறப்பின் விஷயத்திலும், அவரின் சிலுவை மரண விஷயத்திலும், குர்-ஆன் பெரிய தவறுகளை செய்துள்ளது.  மக்கள் மத்தியிலே நிலவும் கட்டுக்கதைகளை சொல்லிவிட்டால் மக்கள் நம்பிவிடுவார்கள் என்று முஹம்மது நினைத்துவிட்டார்.  தள்ளுபடி ஆகமங்களில் உள்ள விவரங்களை உண்மை என்று எண்ணிவிட்டார்.  இன்னும் அனேக விஷயங்களை நான் சொல்லமுடியும்.

அப்துல்லாஹ்: அண்ணே, போதும்..போதும். நீங்கள் சொன்ன அந்த தள்ளுபடி ஆகமத்தை படித்துவிட்டு, நாளைக்கு நான் வருகிறேன் அப்போது பார்ப்போம்.

உமர்: சரி தம்பி. நான் சொன்ன விஷயங்களை சிந்தித்துப்பார். நாளைக்கு பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை: