ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வெள்ளி, 9 செப்டம்பர், 2016

2016 பக்ரீத் – 3: கியாமத் நாளின் சுமை பரிமாற்றங்கள் பற்றி பிஜே

முன்னுக்கு பின் முரணாக போதிக்கும் குர்-ஆன் வசனங்களை பக்ரீத் தொடரின்இரண்டாம் பாகத்தில் ஆய்வு செய்தோம், 

தற்போதைய கட்டுரையில், குர்-ஆன் 16:25ம் வசனத்திற்கு பிஜே அவர்கள் கொடுத்த விளக்கத்தை ஆய்வு செய்வோம்.

1) குர்-ஆன் 16:25ம் வசனமும் பிஜேயின் விளக்கமும்.

முஸ்லிம்களை வழிகெடுக்கும் நபர்கள் தங்கள் சுமைகளோடு கூட, அவர்கள் வழிகெடுத்தவர்களின் சுமைகளையும் சுமப்பார்கள் என்று குர்-ஆன் 16:25 & 29:13ல் அல்லாஹ் கூறுகின்றான். 

பிஜே தமிழாக்கம்

குர்-ஆன் 16:25 & 29:12,13

16: 25. கியாமத் நாளில்1 முழுமையாகத் தமது சுமைகளையும், அறிவின்றி யாரை இவர்கள் வழிகெடுத்தார்களோ அவர்களின் சுமைகளையும் சுமப்பதற்காக(இவ்வாறு கூறுகின்றனர்) கவனத்தில் கொள்க! அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது.254 

29:12. "எங்கள் வழியைப் பின்பற்றுங்கள்! உங்கள் தவறுகளை நாங்கள் சுமந்து கொள்கிறோம்'' என்று (ஏகஇறைவனை) மறுப்போர் நம்பிக்கை கொண்டோரிடம் கூறுகின்றனர். அவர்களின் குற்றங்களில் எதையும் இவர்கள் சுமப்போராக இல்லை. அவர்கள் பொய்யர்கள்.

29:13. அவர்கள் தமது சுமைகளையும், தமது சுமைகளுடன் வேறு சில சுமைகளையும் சுமப்பார்கள்.254 அவர்கள் இட்டுக்கட்டியது பற்றி கியாமத் நாளில்1 விசாரிக்கப்படுவார்கள்.

இவ்வசனத்தை (16:25) அப்துல் ஹமீது பாகவி அவர்கள் எப்படி தமிழாக்கம் செய்துள்ளார்கள் என்பதை கவனிக்கவும். இவர் அடைப்பிற்குள் "(இவ்வாறு இருவரின் பாவச்சுமையை)"  என்று எழுதியவைகள் குர்-ஆனில் இல்லையென்றாலும், அர்த்தம் அப்படித் தான் வருகின்றது, அதாவது அவர்கள் "இருவரின் சுமைகளையும் சுமப்பார்கள்". இஸ்லாமை விட்டு வெளியேறச் செய்கிறவர்களுக்கு இரட்டை தண்டனை கொடுக்கப்படும் என்ற எச்சரிக்கையை அழுத்தம் திருத்தமாக அல்லாஹ் இங்கு கொடுப்பதாக அறிகிறோம்.

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:

16:25. மறுமை நாளில் தங்கள் பாவச்சுமையை இவர்கள் சுமப்பதுடன், அறிவின்றி இவர்கள் வழிகெடுத்த மற்றவர்களின் பாவச்சுமையையும் இவர்களே சுமப்பார்கள். (இவ்வாறு இருவரின் பாவச்சுமையை) இவர்களே சுமப்பது மிகக் கெட்டதல்லவா?

டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்:

16:25. கியாம நாளில் அவர்கள், தங்கள் (பாவச்) சுமைகளை முழுமையாக சுமக்கட்டும்; மேலும் அறிவில்லாமல் இவர்கள் எவர்களை வழி கெடுத்தார்களோ, அவர்களுடைய (பாவச்) சுமைகளையும் (சுமக்கட்டும்); இவர்கள் (சுமக்கும்) சுமை மிகவும் கெட்டதல்லவா?.

இப்போது பிஜே அவர்கள் இவ்வசனத்திற்கு கொடுத்த விளக்கம் 254ஐ படிப்போம்.

254. பிறரது சுமையைச் சுமக்க முடியுமா?

கியாமத் நாளில் முழுமையாகத் தமது சுமைகளையும், அறிவின்றி யாரை இவர்கள் வழிகெடுத்தார்களோ அவர்களின் சுமைகளையும் சுமப்பதற்காக (இவ்வாறு கூறுகின்றனர்) என்று இவ்வசனங்களில் (16:25, 29:13) கூறப்படுகிறது.

ஆனால் ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் என்று 2:134, 2:141, 2:281, 2:286, 3:25, 3:161, 4:111, 6:31, 6:164, 7:39, 7:96, 9:82, 9:95, 10:8, 10:52, 17:15, 35:18, 39:7, 39:24, 39:48, 39:51, 40:17, 45:22, 52:21, 53:38, 74:38 ஆகிய வசனங்களில் கூறப்பட்டுள்ளது.

ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட வசனம் இந்த அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது என்று கருத முடியாது.

ஏனெனில் ஒருவன் பிறரை வழிகெடுத்தால் வழிகெடுக்கப்பட்டவனின் சுமையைச் சுமந்து தான் ஆக வேண்டும். இது பிறர் பாவத்தைச் சுமப்பதல்ல. வழிகெடுத்த பாவத்தைச் சுமப்பது தான்.

265வது குறிப்பையும் காண்க!

மேற்கண்ட விளக்கத்தின் கடைசி பத்தியிலிருந்து உங்களுக்கு ஏதாவது புரிகின்றதா?   

  • வழிகெடுத்தவன் வழிகெடுக்கப்பட்டவனின் சுமையை சுமந்து தான் ஆகவேண்டும். 
  • இது பிறர் பாவத்தைச் சுமப்பதல்ல. வழிகெடுத்த பாவத்தைச் சுமப்பது தான்.

இந்த இடத்தில் பிஜே  அவர்கள் தம் பாணியில் குழப்புவதை காணலாம்.  இவர் குர்-ஆனின் முரண்பட்ட விவரங்களிலிருந்து அல்லாஹ்வை காப்பாற்ற முயற்சி எடுத்துள்ளார். இந்த முயற்சி வெற்றிப்பெறுமா? 

2) வழிகெடுத்த பாவம் யாருடைய கணக்கில் வருகிறது

பிஜே அவர்கள் தம் குர்-ஆன் விளக்கத்தில் பல விஷயங்களை பக்கம் பக்கமாக விளக்கியுள்ளார். ஆனால், குர்-ஆனின் முரண்பாடு தெளிவாகத் தெரியும் இந்த அடிப்படை வசனத்துக்கு விளக்கம் எழுதும் போது மட்டும், அமைதியாக நான்கு வரிகளை எழுதிவிட்டு, கைகழுவிவிட்டார். குர்-ஆன் 16:25ஐ பற்றியும், 29:12,13 வசனங்கள் பற்றியும் இன்னும் பல விவரங்களை இவர் தெளிவாக விளக்கி இருந்திருக்கலாம். (அடுத்த குர்-ஆன் பதிப்பில் இவ்விளக்க குறிப்பில் இன்னும் பல விவரங்களை பிஜே சேர்ப்பார் அல்லது மொத்தமாக மாற்றி எழுதுவார் என்று எதிர்ப்பார்க்கலாம்).

பிஜேயின் விளக்கம்: "ஏனெனில் ஒருவன் பிறரை வழிகெடுத்தால் வழிகெடுக்கப்பட்டவனின் சுமையைச் சுமந்து தான் ஆக வேண்டும். இது பிறர் பாவத்தைச் சுமப்பதல்ல. வழிகெடுத்த பாவத்தைச் சுமப்பது தான்."

முதல் வாக்கியத்தை படிக்கும் போது, "வழி கெடுத்தவன், யாரை வழி கெடுத்தானோ அவன் சுமைகளையும் சுமந்துத்தான் ஆகவேண்டும்" என்று பிஜே சொல்கிறார் என்று புரிகின்றது. ஆனால், இரண்டாவது வாக்கியத்தை படிக்கும் போது, "இது பிறர் பாவத்தை சுமப்பது ஆகாது, வழிகெடுத்த பாவத்தை சுமப்பது ஆகும்" என்று முரண்பட்டுச் சொல்கின்றார். இதனை அவர் தெளிவாக மற்றவர்களுக்கு புரியும் படி எழுதியிருக்கலாம்.

பிஜே அவர்களின் இந்த விளக்கத்தை நான் எப்படி புரிந்துக்கொண்டேன் என்பதை இப்போது விளக்குகிறேன். என் புரிதல் தவறாக இருந்தால், அதனை முஸ்லிம்கள் ஆதாரங்களோடு சுட்டிக்காட்டலாம்.

உதாரணம்:

அமர் என்பவன், உஸ்மான் என்பவனை வழி கெடுத்துவிட்டான் என்று வைத்துக்கொள்வோம். அதாவது உஸ்மான் இஸ்லாமை புறக்கணிக்கும் படி செய்துவிட்டான். இதன் படி பார்த்தால், அமர் என்பவன் 'வழிகெடுத்த பாவம்' செய்தவன் ஆகின்றான். 

கியாமத் நாளில், குர்-ஆனின் படி, அமர் என்பவன் தன் பாவ சுமைகளை சுமக்கவேண்டும், அதோடு கூட, உஸ்மான் என்பவனின் பாவங்களையும் சுமக்கவேண்டும். இதைத் தான் குர்-ஆனும் சொல்கிறது, பிஜே அவர்களும் சொல்கிறார்கள். ஆனால், மக்கள் குர்-ஆனின் முரண்பாட்டை கண்டுக்கொள்ளக்கூடாது என்பதற்காக, தம் விளக்கத்தில் " இது பிறர் பாவத்தைச் சுமப்பதல்ல. வழிகெடுத்த பாவத்தைச் சுமப்பது தான்."  என்று எழுதுகிறார். இவரது விளக்கத்தில் "பிறர்" என்று இவர் குறிப்பிடம் இடத்தில் "உஸ்மான்" வரமாட்டானா?  ஒருவர் இன்னொருவரின் பாவத்தை சுமக்கிறார் என்றுச் சொன்னாலும், அல்லது ஒருவர் ஓராயிரம் பேர்களின் பாவங்களை சுமக்கிறார் என்றுச் சொன்னாலும், அடிப்படையில் "ஒருவர் இன்னொருவரின் பாவத்தை சுமப்பது" என்ற கோட்பாடு தான். 

ஒருவரின் சுமையை எடுத்து அடுத்தவன் மீது போடும் குர்-ஆனின் வசனத்தையும், மற்றும் பிஜே அவர்களின் விளக்கத்தையும் சரியாக புரிந்துக்கொள்ள கீழ்கண்ட அட்டவணை உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

அமர்உஸ்மான்
1. இஸ்லாமை புறக்கணித்த பாவம் (காஃபிர்)1. இஸ்லாமை புறக்கணித்த பாவம் (அமரின் தாவாவினால், இஸ்லாமை புறக்கணித்தான்)
2. இதர பாவங்கள்2. இதர பாவங்கள்
3. உஸ்மானை வழிகெடுத்த பாவம்

அமரின் 100% சதவிகித சுமையை மூன்று வகையாக பிரிக்கலாம்.

  • முதலாவது சுமை - இஸ்லாமை புறக்கணித்த பாவம் (காஃபிர்)
  • இரண்டாவது சுமை - 'இதர பொதுவான பாவங்கள்' 
  • மூன்றாவது சுமை - 'உஸ்மானை வழிகெடுத்த பாவம்' ஆகும். பொதுவாக நாம் கவனித்தால், இந்த பாவமும் 'அமரின் பட்டியலிலேயே' சேர்க்கப்படும். இதை அவன் சுமந்தே ஆக வேண்டும். 

குர்-ஆன் 16:25 & 29:13ன் படி, அமர் தன் 100% சுமையை (3 வகையான சுமையை) சுமக்கவேண்டும். அதோடு கூட, உஸ்மான் இஸ்லாமை விட்டு வெளியேறும் படி அமர் செய்தபடியினால், உஸ்மானின் பாவங்களையும் சுமக்கவேண்டும் (மேற்கண்ட அட்டவணையை பார்க்கவும்).

குர்-ஆனின் படி, கியாமத் நாளில் மேற்கண்ட அட்டவணை இப்படியாக மாறிவிடும். உஸ்மானின் சுமைகள் அமரின் பட்டியலோடு சேர்ந்துவிடும். இதைத் தான் குர்-ஆன் தெளிவாகச் சொல்கிறது, மற்றும் பிஜே அவர்களின் விளக்கமும் மழுப்பி சொல்கிறது.

அமர்உஸ்மான் 
1. இஸ்லாமை புறக்கணித்த பாவம் (காஃபிர்)இவரது 2 சுமைகள் அமரின் பட்டியலில் சேர்ந்துவிட்டது)
2. இதர பாவங்கள்
3. உஸ்மானை வழிகெடுத்த பாவம்
4. உஸ்மான் - இஸ்லாமை புறக்கணித்த பாவம் (அமரின் தாவாவினால், இஸ்லாமை புறக்கணித்தான்)
5. உஸ்மானின் இதர பாவங்கள்

பல கோடி மதிப்பு பெரும் கேள்வி: மேற்கண்ட பட்டியலை கவனிக்கும் போது, உஸ்மானின் சுமைகள் அனைத்தும் அமரின் பட்டியலில் (முதுகில்) சுமத்தப்படுவதினால், உஸ்மானின் பட்டியல் சுமைகளில்லாத சுத்தப்பட்டியலாக மாறிவிடுகின்றது. ஆக, குர்-ஆனின் படி பார்த்தால், கியாமத் நாளில், உஸ்மானிடம் ஒரு பாவமும் இல்லாதபடியினால், அவனை அல்லாஹ் சொர்க்கத்திற்கு அனுப்பவேண்டும்? இது உண்மையா? இதற்கு முஸ்லிம்கள் தான் பதில் சொல்லவேண்டும். 

"இல்லை இல்லை, உஸ்மானின் பாவங்கள் அவனோடு கூட இருக்கும், அவன் இஸ்லாமை புறக்கணித்தபடியால், அவன் நரகத்திற்குச் செல்வான்" என்று முஸ்லிம்கள் சொன்னால், குர்-ஆனின் வசனங்கள் சொல்லும் விவரங்கள் அனைத்தும் பொய் என்று நீங்கள் சொல்வதாக அமையும்.

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:

16:25. மறுமை நாளில் தங்கள் பாவச்சுமையை இவர்கள் சுமப்பதுடன், அறிவின்றி இவர்கள் வழிகெடுத்த மற்றவர்களின் பாவச்சுமையையும் இவர்களே சுமப்பார்கள். (இவ்வாறு இருவரின் பாவச்சுமையை) இவர்களே சுமப்பது மிகக் கெட்டதல்லவா?

இருவரின் பாவங்கள் சுமப்பது மிகவும் கெட்டது என்று குர்-ஆன் சொல்கிறது. உஸ்மானை வழிகெடுத்த பாவத்தை அமர் சுமப்பது உண்மையானால், உஸ்மானை விடுதலை செய்வது தானே சரியானதாக இருக்கும்! முஸ்லிம்களே! மேற்கொண்டு ஆய்வு செய்து உங்கள் முடிவைச் சொல்லுங்கள். 

முடிவுரை:

இந்த தொடரில், பிஜே அவர்களின் விளக்கத்தை ஆய்வு செய்தோம், ஆனால், அவரது விளக்கத்தில் சரியான தெளிவு இல்லை. குர்-ஆன் தெளிவாக சொல்லும் ஒரு வசனத்துக்கு குழப்பம் வரும்படி பிஜே அவர்கள் விளக்கம் கொடுத்துள்ளார்கள். எனினும், குர்-ஆனின் முரண்பாட்டை மறைப்பதற்காக, பிஜே எடுத்த முயற்சி தோல்வி அடைந்துவிட்டது. பிஜே அவர்கள் என்ன தான் முயற்சி எடுத்தாலும், "ஒருவரின் பாவத்தை இன்னொருவர்" சுமக்கமுடியும், கியாமத் நாளில் அதனை நானே செய்வேன் என்று  அல்லாஹ்  அழுத்தமாகச் சொல்லுவது இவரால் மறைக்கமுடியவில்லை. 

குர்-ஆன் சொல்வது உண்மையென்று நாம் நம்பினால், வழிகெடுக்கப்பட்டவனின் சுமைகள் இடமாற்றம் செய்யப்படுவதால், அவன் சொர்க்கத்திற்கு தகுதியானவனாக மாறுகின்றான். கியாமத் நாளின் சுமை இடமாற்றத்தில் இப்படிப்பட்ட அனேக சிக்கல்கள் உள்ளன. அவைகளை முஸ்லிம்கள் தீர்த்துவைப்பார்கள் என்று நாம் எதிர்ப்பார்க்கலாம். 

அடுத்த தொடரில், அல்லாஹ் எப்படி ஒருவரின் சுமையை எடுத்து இன்னொருவரின் முதுகின் மீது சுமத்திவிடுகின்றார் என்பதை ஹதீஸ்களின் உதவி கொண்டு பார்ப்போம். மேலும், யாருடைய சுமையை அவன் இடமாற்றம் செய்கின்றானோ, அந்த மனிதன் சொர்க்கத்திற்கு தகுதியானவனாக மாறிவிடுகின்றான். இரட்டை சுமைகள் சுமக்கப்பட்டவன் நரகம் செல்கின்றான். இதன் படி பார்த்தால், மேற்கண்ட உதாரணத்தில் கண்ட உஸ்மான், அல்லாஹ்வினால் சொர்க்கத்திற்கு அனுமதிக்கப்படவேண்டும்.


பக்ரீத் கட்டுரைகள் பக்கம்

ரமளான் கட்டுரைகள் பக்கம்

உமரின் கட்டுரைகள் பக்கம்


Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/bakrid/2016_bakrid_3.html

கருத்துகள் இல்லை: