ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

செவ்வாய், 29 அக்டோபர், 2019

'இஸ்ரேல் மற்றும் அரேபிய' நபிகளை மட்டும் ஏன் குர்‍ஆன் குறிப்பிடுகின்றது? இரகசியம் என்ன?

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் தன் இறைத்தூதர்களை அனுப்பியதாக அல்லாஹ் குர்‍ஆனில் சுட்டிக்காட்டுகின்றான். ஒரு நாட்டு மக்களின் தீய வாழ்க்கையினால், அந்த நாட்டை அழிப்பதற்கு முன்பாக, தன் இறைத்தூதரை அனுப்பி அவர்களை முதலாவது எச்சரிப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்.

குர்‍ஆன் வசனங்களை படிக்கவும்:  

10:47. ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய இறை) தூதர் உண்டு; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.

16:36. மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், "அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்" என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள்.

17:15. எவன் நேர்வழியில் செல்கின்றானோ, அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேர் வழியில் செல்கிறான்; எவன் வழி கேட்டில் செல்கின்றானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான்; (நிச்சயமாக) ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்கமாட்டான்; (நம்) தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை.

 

ஆனால், சிலருடைய வரலாற்றை மட்டுமே முஹம்மதுவிற்கு குர்‍ஆனில் வெளிப்படுத்தியதாக அல்லாஹ் கீழ்கண்ட  வசனத்தில் கூறுகின்றான்:

40:78. திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்; இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்; (இவ்விருசாராரில்) எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கு (அதிகாரமும்) இல்லை; ஆகவே அல்லாஹ்வுடைய கட்டளைவரும் போது, (அனைவருக்கும்) நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும்; அன்றியும், அந்த இடத்தில் பொய்யர்கள் தாம் நஷ்டமடைவார்கள். 

முஹம்மதுவிற்கு சில நபிகளின் வரலாறுகளை மட்டுமே அல்லாஹ் வெளிப்படுத்தியதில் தவறேதுமில்லை. ஆனால், அந்த சிலர் ஏன் ஒரு நாட்டுக்கு சம்மந்தப்பட்டு மட்டுமே இருக்கிறார்கள் என்பது தான் கேள்வி.

ஏன் இஸ்ரேல் நபிகள் பற்றி மட்டுமே குர்‍ஆன் சொல்கிறது?

குர்‍ஆனில் 25 நபிகள் (தீர்க்கதரிசிகள்) பற்றி சொல்லப்பட்டுள்ளது. இதில் முஹம்மதுவும் ஒருவராவார். ஒவ்வொரு நாட்டுக்கும்  அவரவர் மொழிகளில் பேசும் நபியை அல்லாஹ் அனுப்பியிருந்தால், உலகம் உண்டானது முதல் (ஆதாம் முதல்), பல ஆயிர நபிகளை அனுப்பியிருக்கவேண்டும். 

சில முஸ்லிம் அறிஞர்களின் கூற்றுப்படி அல்லாஹ் 1,24,000 நபிகளை அனுப்பியிருக்கின்றானாம். இவர்களில் கடைசியாக வந்தவர் முஹம்மது ஆவார்.

நாம் கேட்கும் கேள்வி மிகவும் சுலபமானது, ஆனால் சுவையானது. ஏன் அல்லாஹ் இஸ்ரேல் நாட்டுக்கு அனுப்பிய நபிகள் பற்றி மட்டுமே குர்‍ஆனில் சொல்கின்றான்?

கீழ்கண்ட படத்தை பார்க்கவும்.

மேலே உள்ள படத்தில்  இஸ்ரேல் நாடு உள்ள இடத்திலேயும், அரேபிய தீபகர்பம் உள்ள இடத்திலேயும் இரண்டு வட்டமிட்டுள்ளேன். இஸ்ரேல் நாட்டுக்காக அனுப்பிய அனேக நபிகளை குர்‍ஆனில் அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான், அதே போல அரேபியாவிற்கு அனுப்பிய நபிகள் இருவரை மட்டுமே குறிப்பிடுகின்றான். சாலிஹ் என்பவர் முஹம்மதுவிற்கு முன்பு தமூத்(ஸமூத்) மக்களுக்காக அனுப்பப்பட்டவர் என்று முஸ்லிம்கள் கருதுகிறார்கள். இது பெட்ரா என்ற பகுதியை குறிக்கும். ஜோர்டான் நிலப்பரப்பில் உள்ளவர்களுக்காக சாலிஹ் அனுப்பப்பட்டார் என்று சொல்லப்படுகின்றது.

முஹம்மது வருவதற்கு முன்பாகவே (கி.பி. 610) அதாவது ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பாகவே பல நாடுகள் இருந்துள்ளன‌. 

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இருந்த நாடுகளின் பட்டியல்: https://en.wikipedia.org/wiki/List_of_political_entities_in_the_7th_century

கி.மு. ஏழாம் நூற்றாண்டில் இருந்த நாடுகளின் பட்டியல்: https://en.wikipedia.org/wiki/List_of_political_entities_in_the_7th_century_BC

ஏழாம்(கி.மு & கி.பி) நூற்றாண்டில் இருந்த நாடுகளின் பட்டியலை நான் இங்கு  கொடுத்துள்ளேன். கவனிக்கவும்:  கி.பி. 7ம் நூற்றாண்டிலேயே 100க்கும் அதிகமான நாடுகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மேலே கொடுக்கப்பட்ட விக்கிபீடியா  தொடுப்பில் சென்று ஒவ்வொரு நூற்றாண்டிலும் இருந்த நாடுகள் பற்றியும் இன்னும் அதிகமாக அறிந்துக்கொள்ளலாம்.

 முஸ்லிம்களுக்கு சில கேள்விகள்:

1) குர்‍ஆனில் வெறும் 25 நபிமார்களின் பெயர்களை மட்டும் அல்லாஹ் சொல்வதற்கான காரணம் என்ன?

2) இது  அல்லாஹ்வின் விருப்பம் தான், ஆனால், சில சிக்கல்கள் இந்த விவரங்களில் தெரிகின்றது, அதற்காகத் தான் இந்த கேள்வி?

3) ஆசிய நாடுகளான இஸ்ரேல் அரேபியா விடுத்து ஐரோப்பா, ஆசியா, ஆஃப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள நாடுகளுக்கு  அனுப்பிய ஒரு நபியின் பெயரையாவது குர்‍ஆன் குறிப்பிடாதது ஏன்?

4) முக்கியமாக சைனா, இந்திய நிலப்பரப்பு, மற்றும் ஆஃப்ரிக்கா கண்டங்களில் மக்கள் கி.மு. காலத்திலிருந்தே வாழ்ந்து வந்தனர். இந்த கண்டங்களில் இருந்த  நூற்றுக்கணக்கான நாடுகளுக்கும், இனங்களுக்கும், மொழிகளுக்கும் அனுப்பிய நபிகளில், ஒரு நபியின் பெயரையும் குறிப்பிடாமல் விட்டது, சந்தேகத்தை கிளப்புகிறதல்லவா?

5) இந்தியாவிலிருந்தும், சைனாவிலிருந்தும் ஒரு சிலரின் பெயர்களை குர்‍ஆனில் குறிப்பிட்டு இருந்திருந்தால், இன்று அதனை சரிப்பார்த்து, உண்மையாகவே அப்படிப்பட்ட நபியை அல்லாஹ் அனுப்பியது  உண்மை என்று ஆராய்ச்சி செய்து அறியும் மக்களுக்கு அல்லாஹ்வின் மீது  நம்பிக்கை வரும்.

6) இஸ்ரேல் நபிகள் பற்றி மட்டும் ஏன் அல்லாஹ் இவ்வளவு அக்கரைக்கொண்டான்? கிட்டத்தட்ட 23 நபிகள் இஸ்ரேல் நாடு அல்லது மத்திய கிழக்கு நாடுகளின் நபிகள் பற்றி மட்டுமே குர்‍ஆன் சொல்கிறது என்று எண்ணும் போது, ஏதோ ஒரு  பிரச்சனை குர்‍ஆன் ஆக்கியோனுக்கு உள்ளது என்பதை அறியமுடிகின்றது.

7) ஆதாம் முதற்கொண்டு, ஆபிரகாம் வரைக்கும் இஸ்ரேல் நாட்டு நபிகள் அல்ல என்று முஸ்லிம்கள் சொல்லக்கூடும். உண்மை தான், ஆனால், பைபிளில் சொல்லப்பட்ட இவர்கள் பற்றி மட்டுமே அல்லாஹ் ஏன் சொல்லவேண்டும்? பைபிளுக்கு வெளியே உள்ள நபிகள் பற்றி சொல்லாதது ஏன்? என்பது தான் மிகப்பெரிய சவால்?

 காரணம் இது தான்: முஹம்மதுவிற்கு எது தெரியுமோ, அது தான் அல்லாஹ்விற்கும் தெரியும்!

8) கல்விக் கற்றவர்கள் இதைப் பற்றி சிறிது சிந்தித்துப் பாருங்கள். முஹம்மது மத்திய கிழக்கு நாடுகளில் வியாபாரத்திற்காக பயணம் செய்தார். அதாவது அரேபியாவின் மேற்பகுதி நாடுகளாகிய இஸ்ரேல், பெட்ரா, ஜோர்டான், சிரியா மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் பயணம் செய்தார். இந்த பகுதியில் தான் கற்ற விவரங்கள் (நபிகள்) பற்றி மட்டுமே குர்‍ஆன் சொல்கிறது! இதன் அர்த்தமென்ன? முஹம்மதுவிற்கு தெரிந்த நபிகள் பற்றி மட்டுமே குர்‍ஆன் குறிப்பிடுகின்றது. குர்‍ஆன் ஆக்கியோன் அல்லாஹ்வாக இருந்திருந்தால், மற்ற நாடுகளுக்கு தான் அனுப்பிய நபிகள் பற்றி சில விவரங்களையாவது கொடுத்திருந்திருப்பான் அல்லவா?

9) ஒருவேளை முஹம்மது இந்திய நாடுகளில் வியாபாரத்திற்காக பல மாதங்கள் தங்கி இருந்திருந்தால், இங்கு வாய்வழியாக சொல்லப்படும் கதைகளை, இலக்கியங்களை (இராமாயணம், மஹாபாரதம், தமிழ் இலக்கியங்கள், திருக்குறள் . . .) கற்றுக்கொண்டு சென்று இருந்திருப்பார். அதன் பிறகு குர்‍ஆனில் வசனங்களை இறக்கும் போது, நிச்சயம் ஒரு  சில  இந்திய ஆன்மீகவாதிகளின் பெயர்கள் குர்‍ஆனில் இறக்குமதியாகியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதில் முதலிடத்தை திருக்குறளும், திருவள்ளுவரும் பெற்று இருப்பார்.

10) உண்மையாகவே, அல்லாஹ் தான் குர்‍ஆனின் ஆக்கியோன் என்றால், ஏன் முஹம்மது பயணிக்காத நாடுகளிலிருந்து ஒரு உதாரணத்தையும், நபியின் பெயரையும் குறிப்பிடவில்லை என்பது கேள்வி. அல்லாஹ்விற்கு அப்படி என்ன யூத கிறிஸ்தவ நபிகள் மீது அவ்வளவு அன்பு! அவர்களைப் பற்றி மட்டுமே குறிப்பிட காரணம் என்ன? 23 எங்கே 1,24,000 நபிகள் எங்கே?  யூத கிறிஸ்தவ நபிகள் இந்த 1,24,000 நபிகளில் சிறந்தவர்களோ! அவர்களிடத்தில்  அல்லாஹ் செய்த அற்புதங்கள், வேறு எங்கும் செய்யவில்லையோ!

11) முஹம்மது சைனாவிற்குச் சென்று வியாபாரம் செய்திருந்தால், அங்கு பல மாதங்கள் தங்கியிருந்தால், பல  சைன நபிகள் பற்றி இன்று குர்‍ஆனில் நாம் கண்டு இருந்திருப்போம்.

உண்மை என்ன?

12) ஒரு பாமர அரேபிய மனிதன், அக்கால படித்த உலக நாடுகளிடம் இருந்த நூல்களை சுயமாக படிக்காத மனிதன், எகிப்தின் பிரமிடுகள், மற்றும் அவர்கள் தங்கள் அரசர்களின் உடல்களை அடக்கம் செய்யும் முறைகள் (மம்மிகள்) பற்றிய பொதுவான அறிவை காதுவழியாக கேட்ட ஒரு சராசரி மனிதனுக்கு என்ன தெரியுமோ, அது தான் குர்‍ஆனில் பதியப்பட்டுள்ளது. அக்காலத்தில் விஞ்ஞானம் பற்றி, தன் நாட்டைச் சுற்றியுள்ள கதைகள் பற்றி, மற்ற மார்க்க கதைகள் பற்றி ஒரு சராசரி வியாபாரிக்கு எவ்வளவு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்குமோ, அதே அளவு தான் முஹம்மதுவிற்கும் தெரிந்திருக்கிறது என்பது தான் உண்மை. 

13) குர்‍ஆன் ஆக்கியோனுக்கு பைபிளின் நிகழ்ச்சிகள் காதுவழியாக கேட்ட அனுபவம் உண்டு, அக்கால பொது அறிவு கொஞ்சம் தெரியும், ஆகையால் தனக்கு தெரிந்த 25 நபிகள் பற்றி மட்டுமே குர்‍ஆனில் குறிப்பிட்டுள்ளான் என்பது தான் உண்மை.

14) உலக நாடுகள் ஒவ்வொன்றிற்கும், ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு காலத்துக்கும் நபிகளை அனுப்பினேன் என்று குர்‍ஆன் சொன்னாலும், பைபிளை ஒட்டியே, இஸ்ரேல் நாட்டை ஒட்டியே குர்‍ஆன் நகர்கிறது. குர்‍ஆனின் ஆணிவேர் பைபிளின் நிகழ்ச்சிகள் மீது தான் பெரும்பான்மையாக சார்ந்துள்ளது.  நபிகள் பற்றி அல்லாஹ்விற்கு எவ்வளவு தெரியும்? என்று கேள்வி கேட்டால், முஹம்மதுவிற்கு எவ்வளவு தெரியுமோ, அவ்வளவு தான் அல்லாஹ்விற்கும் தெரியும் என்பது தான் பதில்.

ஒரு சோதனை:

இன்று ஒரு கிராமத்தில் உள்ள 40 வயது நிரம்பிய ஒரு பாமர படிக்காத‌ மனிதனை எடுத்துக்கொள்ளுங்கள். அவனுக்கு தொலைக்காட்சியின் மூலமாக, சினிமா மூலமாக சில பொது அறிவு கிடைத்திருக்கும்.   அந்த மனிதன் பயணம் செய்த சில  பட்டணங்கள், ஊர்கள் பற்றிய அறிவு அவனுக்கு  இருக்கும். நிச்சயமாக அவனுக்கு சைனா பற்றியோ, அமேரிக்கா பற்றியோ, இதர ஐரோப்பிய நாடுகள் பற்றியோ, விஞ்ஞானம் பற்றியோ, பொருளாதாரம் பற்றிய ஆழ்ந்த ஆய்வு ஞானம் அவனுக்கு இருக்காது. இப்படிப்பட்டவர் ஒரு புத்தகத்தை பெரிய ஞானிபோல பாவணை காட்டிக்கொண்டு எழுதினால் எப்படி இருக்கும்? அதில் அவருக்கு தெரிந்த விவரங்கள் மட்டுமே இருக்குமில்லையா! இது போலத்தான், முஹம்மதுவிற்கு தெரிந்த விவரங்கள் மட்டுமே குர்‍ஆனில் இருக்கும்.

முஹம்மதுவிற்கு தெரிந்த 24 நபிகள் பற்றி மட்டுமே குர்‍ஆனில் இருக்கும்! இதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. 'அற்ப அறிவு அல்லற் கிடம்' என்ற பழமொழியை நீங்கள் கேட்டு இருக்கின்றீர்களா? முஹம்மது படிப்பறிவில்லாதவர், அவர் எப்படி விஞ்ஞானத்தை பேசமுடியும்? அவர் எப்படி எதிர்காலத்தில் வருவதை முன்னறிவிக்கமுடியும்? என்று முஸ்லிம்கள் சொல்வார்கள். கடந்த காலத்தை சரியாக சொல்லாத அல்லாஹ், எப்படி முஹம்மதுவிற்கு எதிர்காலத்தைப் பற்றி அறிவிக்கமுடியும்? கு‍ர்‍ஆனில் விஞ்ஞானம் உண்டு என்று சொல்வதெல்லாம், வெறும் வெத்துப்பேச்சு. குர்‍ஆனின் விஞ்ஞானம் பற்றி கேள்விகள் இருந்தால், என் மெயிலுக்கு கேள்விகளை அனுப்பவும்.


கருத்துகள் இல்லை: