ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

2020 ரமளான் : இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தை அறிய உதவும் சின்னஞ்சிறு கேள்வி பதில்கள் 1000 (குர்‍ஆன் பாகம் 1)

இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தை அறிய உதவும் சின்னஞ்சிறு கேள்வி பதில்கள் 1000

குர்‍ஆன் பாகம் 1

(2020 ரமளான் தொடர் கட்டுரைகள்)

முன்னுரை:

இஸ்லாமை கற்றுக்கொள்ள பல ஆய்வுக் கட்டுரைகள் தமிழில் பதித்துக்கொண்டு வருகிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ந்த இந்த பயணத்தில் இன்றுவரை 700க்கும் அதிகமான கட்டுரைகள் நம் தளங்களில் (ஈஸா குர்‍ஆன் & ஆன்சரிங் இஸ்லாம்) பதிக்கப்பட்டுள்ளது. 

இன்று மக்கள் சின்னத்திரையில் அதாவது மொபைள் போனில் அதிகமாக நேரத்தை செலவிடுகிறார்கள். மேலும், வாட்ஸப் மூலமாக‌ அனேக விவரங்களை பகிர்ந்துக்கொண்டும், கற்றுக்கொண்டும் வருகிறார்கள்.  மக்கள் சுலபமாக இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் பற்றி அறிந்துக்கொள்ள வசதியாக இருக்கும் என்பதால், சின்னஞ்சிறு கேள்விகள் 1000+ என்ற தலைப்பில் கேள்வி பதில்களை எழுதலாம் என்று விரும்பினேன். இவைகளை சுலபமாக வாட்ஸப்பில் படிக்கமுடியும் மற்றும் மற்றவர்களுக்கும் அனுப்பமுடியும். 

இந்த தொடரின் பெரும்பான்மையான பதில்கள், ஒரு வார்த்தை அல்லது ஒரு வாக்கியமாகவே இருக்கும். சில கேள்விகள் மட்டும் அதிகபட்சமாக நான்கு பத்திகள் அதாவது ஒரு பக்கம் மட்டுமே இருக்கும். ஒருவர் இந்த 1000 கேள்விகளை படித்தால், இஸ்லாமையும், கிறிஸ்தவத்தையும் சுலபமாக அறிந்துக்கொள்ள முடியும். மேலும் இஸ்லாமையும் கிறிஸ்தவத்தையும் இன்னும் ஆழமாக‌ கற்றுக்கொள்ள ஆர்வம் உண்டாகும்.

இப்போதைக்கு 1000 கேள்விகளை கீழ்கண்ட தலைப்புக்களில் தயார் செய்துள்ளேன்.

தலைப்புக்கள்:

  1. குர்‍ஆன்
  2. அல்லாஹ் - யெகோவா
  3. முஹம்மது
  4. ஹதீஸ்கள் - சீரா(முஹம்மதுவின் வரலாறு)
  5. இஸ்லாம்
  6. பெண்கள்
  7. பைபிள்
  8. கிறிஸ்தவம்
  9. கலைச்சொற்கள்
  10. இஸ்லாமிய அறிஞர்கள்
  11. இஸ்லாமிய புத்தகங்கள்/தளங்கள்

ஒவ்வொரு கட்டுரையில் 30 கேள்விகளுக்கு பதில்கள் கொடுக்கப்படுகின்றது.  இவ்வருடம் 2020 ரமளான் மாதம் முடிவதற்குள் அனைத்து கேள்வி பதில்களை (1000) பதிக்கவேண்டும் என்று எண்ணியுள்ளேன். 


இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தை அறிய உதவும் சின்னஞ்சிறு கேள்வி பதில்கள் 1000

(பாகம் 1  - குர்‍ஆன் கேள்விகள் பதில்கள் 1 - 30 வரை)

கேள்வி 1: குர்‍ஆனின் மூல மொழி என்ன?

பதில் 1: அரபி மொழி

கேள்வி 2:  குர்‍ஆனில் எத்தனை அத்தியாயங்கள் மற்றும் வசனங்கள் உள்ளன?

பதில் 2: குர்‍ஆனில் 114 அத்தியாயங்கள் மற்றும் 6236 வசனங்கள் உள்ளன.

கேள்வி 3: ஸூரா மற்றும் ஆயத் என்றால் என்ன?

பதில் 3: அத்தியாயத்தை அரபியில் ஸூரா (சூரா) என்றும், வசனங்களை ஆயத் என்றும் அழைப்பார்கள். "ஆயா" என்றால் வசனம், "ஆயத்" என்றால் வசனங்கள் (பன்மை) ஆகும்.

கேள்வி 4: குர்‍ஆனில் 6666 வசனங்கள் உள்ளதாகச் சொல்கிறார்களே!

பதில் 4: இது தவறு, இன்றைய  குர்‍ஆனில் 6236 வசனங்கள் மட்டுமே உள்ளன.

கேள்வி 5: அது என்ன இன்றைய குர்‍ஆனில் 6236 என்றுச் சொல்கிறீர்கள், அப்படியானால், ஆரம்பகால  குர்‍ஆனில் 6236 வசனங்கள் இல்லையா?

பதில் 5: இல்லை, ஆரம்ப கால குர்‍ஆனில் இருந்த சில வசனங்கள் இன்றைய குர்‍ஆனில் இல்லை என்று ஹதீஸ்கள் சொல்கின்றன. இவைகள் பற்றி அடுத்தடுத்த கேள்விகளில் காண்போம்.

கேள்வி 6: குர்‍ஆனின் முதல் அத்தியாயத்தின் பெயர் என்ன?

பதில் 6: அல் ஃபாத்திஹா (தமிழில் இதன் பொருள்: தோற்றுவாய்)

கேள்வி 7: குர்‍ஆனின் கடைசி அத்தியாயத்தின் பெயர் என்ன?

பதில் 7: அந் நாஸ் (தமிழில் இதன் பொருள்: மனிதர்கள்).  சிலர் ஸூரா (அத்தியாயம்) என்ற வார்த்தையோடு சேர்த்து "ஸூரத்துந் நாஸ்" என்று எழுதுகிறார்கள்.

கேள்வி 8: குர்‍ஆனின் மக்கீ, மதனீ வசனங்கள் என்றுச்  சொல்கிறார்களே, அவைகளின் அர்த்தமென்ன?

பதில் 8: முஹம்மது முதலில் சில ஆண்டுகள் மக்கா நகரிலும், பிறகு மதினா நகரிலும் வாழ்ந்தார். அவர் மக்காவில் வாழ்ந்த காலத்தில் இறக்கப்பட்ட குர்‍ஆன் வசனங்களை மக்கீ என்றும், மதினா நகரில் வாழ்ந்த போது இறக்கப்பட்ட வசனங்களை மதனீ என்றும் அழைக்கிறார்கள்.

கேள்வி 9: குர்‍ஆனில் குறிப்பிடப்படும் "ஜபூர், தோறா மற்றும் இன்ஜில்" என்ற பெயர்கள் எவைகளை குறிக்கின்றன?

பதில் 9: இவைகள் பைபிளின் புத்தகங்கள் ஆகும்.

  • தோறா - இது பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து நூல்களை (ஐந்தாகமங்களை) குறிக்கிறது.
  • ஜபூர்  - இது சங்கீத நூலை குறிக்கிறது.
  • இன்ஜில்  - இது பைபிளின் நற்செய்தி (சுவிசேஷங்கள்) நூல்களை குறிக்கின்றது. 

இன்ஜில் என்றால் வெறும் நற்செய்திகளை மட்டுமே குறிக்குமா? அல்லது புதிய ஏற்பாடு முழுவதையும் குறிக்குமா? என்று சில முஸ்லிம்களுக்கு சந்தேகம் உண்டு.

கேள்வி 10: குர்‍ஆன் மட்டும் போதாதா? ஹதீஸ்களும் தேவையா?

பதில் 10: முஸ்லிம்களுக்கு குர்‍ஆனும் ஹதீஸ்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஒரே ஒரு பக்கத்தை வைத்திருந்தால் அந்த நாணயத்திற்கு மதிப்பில்லை. எப்படி ஒரு மனிதனுக்கு உயிரும் உடலும் முக்கியமோ, அது போன்றது தான் குர்‍ஆனும், ஹதீஸ்களும். ஒன்றை வைத்துக்கொண்டு மற்றதை புறக்கணிக்கமுடியாது. இதில் ஏதாவது ஒன்றை புறக்கணித்தால், இஸ்லாம் அர்த்தமற்றதாகிவிடும். 

கேள்வி 11: அரபிமொழி தெய்வ மொழியா?

பதில் 11: அரபி தெய்வ மொழி இல்லை.  உலகில் எந்த மொழியும் தெய்வ மொழி ஆகமுடியாது.

கேள்வி 12: குர்‍ஆன் என்ற வார்த்தையின் அர்த்தமென்ன?

பதில் 12: குர்‍ஆன் என்றால், ஓதுதல் (recitation) என்று பொருள்.

கேள்வி 13: முதன் முதலாக எந்த இரவில் குர்‍ஆன் இறக்கப்பட்டதாக கு‍ர்‍ஆன் சொல்கிறது?

பதில் 13: லைலத்துல் கத்ர் என்ற இரவில் குர்‍ஆன் இறங்கியதாக குர்‍ஆன் சொல்கிறது. 

"நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்" (குர்‍ஆன் 97:1) என்று அல்லாஹ் கூறுகின்றான். 

[இந்த தொடர்களில் முஹம்மது ஜான் தமிழாக்கமே பிரதானமாக மேற்கோள் காட்டப்படுகின்றது.]

கேள்வி 14: குர்‍ஆனின் மிகவும் நீண்ட மற்றும் சிறிய அத்தியாயங்கள் எவை? 

பதில் 14: இரண்டாவது அத்தியாயம் அல்-பகரா 286 வசனங்களை கொண்டது, மற்றும்  103, 108  மற்றும்  110  அத்தியாயங்கள் மூன்று வசனங்களைக் கொண்ட சிறிய அத்தியாயங்களாகும்.

கேள்வி 15: மக்காவில் மற்றும் மதினாவில் இறக்கப்பட்ட அத்தியாயங்களின் (ஸூராக்களின்) எண்ணிக்கை எத்தனை?

பதில் 15: மக்கீ அத்தியாயங்கள் 86, மதினா அத்தியாயங்கள் 28 என்று இஸ்லாமிய அறிஞர்கள் வகைப்படுத்தியுள்ளார்கள் (பார்க்க: http://www.tamililquran.com/suraindex.asp ).  

சில  அறிஞர்களுக்கு இதில் முரண்பட்ட கருத்து உண்டு.

கேள்வி 16: குர்‍ஆனில் எந்த நபியின்(தீர்க்கதரிசியின்) பெயர் அதிகமாக வருகிறது?

பதில் 16: மூஸா என்கின்ற மோசே தீர்க்கதரிசியின் பெயர் அதிகமாக (115 முறை) வருகிறது என்று கூறப்படுகின்றது. சிலர் 136 முறை வருகிறது என்கிறார்கள். 

கேள்வி 17: குர்‍ஆனில் எத்தனை தீர்க்கதரிசிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன? 

பதில் 17: குர்‍ஆனில் 25 நபிமார்கள் பற்றி வருகின்றது என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள் (பார்க்க: http://www.tamililquran.com/nabinames.asp ). பைபிளின் படி இவர்கள் அனைவரும் தீர்க்கதரிசிகள் அல்ல, உதாரணம்: ஆதாமை பைபிள் தீர்க்கதரிசி (நபி) என்று அழைப்பதில்லை மற்றும் முஹம்மதுவை பைபிள் படி தீர்க்கதரிசி என்று அழைக்கமுடியாது.

கேள்வி 18: குர்‍ஆன் வசனங்கள் அத்தியாயங்கள், முஹம்மதுவிற்கு இறக்கப்பட்ட வரிசையில் குர்‍ஆனில் அமைக்கப்பட்டுள்ளதா?

பதில் 18: இல்லை.  முஹம்மது உயிரோடு இருக்கும் போது, அவர் குர்‍ஆனை ஒரு புத்தக வடிவில் தொகுக்கவில்லை. புத்தகமே இல்லாத போது, வரிசைப்படி முழு புத்தகத்தை அமைப்பது எப்படி?

முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு, பல  ஆண்டுகள் கழித்து, குர்‍ஆனை தொகுத்தபோது, பெரிய அத்தியாயங்கள் தொடங்கி சிறிய அத்தியாயங்கள் வரை வரிசைப்படுத்தி தொகுத்தார்கள். அதன் பிறகு வந்தவர்கள், வசனங்களாக பிரித்த போது, அத்தியாயங்களில்  வசன எண்களின் எண்ணிக்கை மாறுபட்டது.

கேள்வி 19: முஹம்மதுவின் காலத்தில் அனேகர் குர்‍ஆனை 100% முழுவதுமாக மனனம் செய்திருந்ததாகச் சொல்கிறார்களே இது சரியா?

பதில் 19: பலர் குர்‍ஆனை 100% மனப்பாடம் செய்திருந்தார்கள் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள், ஆனால் இது உண்மையல்ல.

முஹம்மதுவின் தோழர்கள் குர்‍ஆனை தொகுத்த போது, இவர்கள் பட்ட பாடு இருக்கின்றதே! அது யாரால் சொல்லிமுடியும்.

உண்மையாகவே, குர்‍ஆனை இவர்கள் 100% மனப்பாடம் செய்திருந்தால், ஒரே வாரத்தில் குர்‍ஆனை தொகுத்து இருந்திருக்கலாம். ஆனால், இந்த காரியத்தைச் செய்ய, ஒரு குழுவை அமைத்து, பல மாதங்கள் கழித்து தொகுப்பை முடித்தார்கள். இதன் மூலம் அறிவது என்னவென்றால், ஒருவரும் 100% குர்‍ஆனை மனப்பாடம் செய்யவில்லை, செய்யமுடியவில்லை என்பதாகும்.

கேள்வி 20: முஹம்மதுவிற்கு இறக்கப்பட்ட குர்‍ஆன் வசனங்கள் எழுதப்பட்ட எலும்புகள், இலைகள், தோல்கள் இன்று நம்மிடம் உள்ளனவா?

பதில் 20: இல்லை அவைகள் நம்மிடம் இப்போது இல்லை. அவைகள் எரிக்கப்பட்டுவிட்டன, தொலைந்துபோய் விட்டன. குர்‍ஆனின் ஆதி மூலம் நம்மிடம் இல்லை. 

கேள்வி 21: குர்‍ஆன் தமிழாக்கங்கள் சிலவற்றை  இணையத்தில் படிக்கமுடியுமா?

பதில் 21: குறைந்தபட்சம், ஐந்து தமிழாக்கங்களை நீங்கள் இணையத்தில் படிக்கலாம்.  

தமிழில் குர்‍ஆன் ( http://www.tamililquran.com/ ) என்ற தளத்தில் நான்கு தமிழாக்கங்களை படிக்கமுடியும்.  அவைகள்: 

  • டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம், 
  • அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம், 
  • இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்  மற்றும் 
  • மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்.

பீஜே அவர்களின் குர்‍ஆன் தமிழாக்கத்தை அவரது தளத்தில் ( https://www.onlinepj.in/ ) படிக்கமுடியும்.

கேள்வி 22: குர்‍ஆனை அரபியில் படித்தால் தான் நன்மை என்றுச் சொல்வது சரியா?

பதில் 22: முஸ்லிம்கள் இப்படி நம்புகிறார்கள். ஆனல், உண்மையான இறைவன் என்றைக்கும் ஒரு குறிப்பிட்ட மொழியில் என்னை தொழுதால் தான், பூஜை செய்தால் தான் நான் அவைகளை ஏற்றுக்கொள்வோன் என்று சொல்லமாட்டான்.

கேள்வி 23: முஹம்மது உயிரோடு இருந்த போது, அவரிடம் ஒரு புத்தக வடிவில் குர்‍ஆன் ஒரு தொகுப்பாக இருந்ததா?

பதில் 23: இல்லை, முஹம்மது அப்படிப்பட்ட ஒரு புத்தகத்தை வைத்திருக்கவில்லை. குர்‍ஆனை ஒரு புத்தகமாக தொகுக்கவேண்டும் என்று அவர் விரும்பியதும் இல்லை. முஹம்மதுவின் மரணத்திற்கு  பல ஆண்டுகள் கழித்து, குர்‍ஆனை ஒரு புத்தகமாக தொகுக்கவேண்டும் என்று முஹம்மதுவின் தோழர் ஒருவர் சொன்னபோது, முஹம்மது செய்யாத ஒரு காரியத்தை எப்படி செய்வதென்று மற்றொரு சஹாபா கேள்வி கெட்டார். இது மிகவும் கடினமான காரியம் என்றார்.  எனவே, முஹம்மதுவிடம் மரணம்வரை ஒரு முழூ குர்‍ஆன் ஒரு புத்தகமாக இருந்ததில்லை.  

இதற்கு இன்னொரு சான்றையும் கொடுக்கலாம். முஸ்லிம்களின் நம்பிக்கையின் படி, ஒவ்வொரு ஆண்டும், அந்த ஆண்டில் முஹம்மதுவிற்கு கொடுக்கப்பட்ட குர்‍ஆன் வசனங்களை சரி பார்க்க ஜிப்ரீல் தூதன் வந்து, சரி பார்த்துச் செல்வாராம்.  கடைசி ஆண்டு, இரண்டு முறை ஜிப்ரீல் தூதன் சரி பார்த்தாராம். ஒரு புத்தகமாக இருந்தால், இப்படி இரண்டு முறை சரி பார்க்கவேண்டிய அவசியம் இருந்திருக்காது. முஹம்மது ஞாபகத்திலிருந்து சொல்லச் சொல்ல, ஜிப்ரீல் சரி பார்த்து இருந்திருக்கவேண்டும். இது இன்னொரு உண்மையையும் எடுத்துக்காட்டுகின்றது, அது என்னவென்றால், முஹம்மது நம்மைப்போன்று மறதியுள்ளவர், அவர் குர்‍ஆனையும் மறப்பார் என்பதாகும்.

கேள்வி 24: குர்‍ஆனை முஹம்மது 100% முழுவதுமாக மனப்பாடம் செய்திருந்தாரா? அவர் ஒரு வசனத்தையும் மறக்கவில்லையா?

பதில் 24: முஹம்மது முழூ குர்‍ஆனை மனப்பாடம் செய்திருந்தார் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். ஆனால், இது உண்மையில்லை. இதற்கும் எந்த ஒரு சான்றுமில்லை. சில வேளைகளில்  முஹம்மது குர்‍ஆனின் சில வசனங்களை மறந்துள்ளார் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு.

முஹம்மதுவும் நம்மைப்போன்று மறதியுள்ளவர் தான் என்பதை புகாரி ஹதீஸ் 401 கூறுகிறது. 

முஹம்மது குர்‍ஆனின் சில வசனங்களை மறந்துவிட்டார், அதனை மற்றொருவர் ஞாபகப்படுத்தினார், புகாரி நூல் எண் 5042:

5042. ஆயிஷா(ரலி) கூறினார்: இரவு நேரம் பள்ளிவாசலில் ஒருவர் குர்ஆன் ஓதிக்கொண்டிருப்பதை நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது நபியவர்கள், 'அல்லாஹ் அவருக்குக் கருணை புரியட்டும்! இன்ன அத்தியாயங்களிலிருந்து நான் மறந்துவிட்டிருந்த இன்ன இன்ன வசனங்களை அவர் எனக்கு நினைவூட்டிவிட்டார்' என்று கூறினார்கள். 

குர்‍ஆனை யாராவது மறந்துவிட்டால், ' நான் மறந்துவிட்டேன் என்று சொல்லாமல்,அது மறக்கவைக்கப்பட்டுவிட்டது என்று சொல்லவேண்டும் என முஹம்மது கூறியுள்ளார். ஏனென்றால், "ஒட்டகங்களை விடவும் வேகமாக மனிதர்களின் நெஞ்சங்களிலிருந்து குர்ஆன் தப்பக்கூடியதாகும்" என்றும் அவர் கூறியுள்ளார்: புகாரி நூல் எண்கள்: 5032, 5039

கேள்வி 25: இஸ்லாமின் தூண்களில் ஒன்றான ஐந்து வேளை தொழுவது பற்றி குர்‍ஆனில் எந்த இடத்தில் சொல்லப்பட்டுள்ளது?

பதில் 25: முஸ்லிம்கள் இன்று தொழும் "ஐந்து வேளை தொழுகையை நிலைநிறுத்துங்கள்" என்று குர்‍ஆனில் எந்த ஒரு வசனத்திலும் சொல்லப்படவில்லை. குர்‍ஆனில் மூன்று வேளை தொழுகை பற்றித் தான் சொல்லப்பட்டுள்ளது .

ஹதீஸ்களிலிருந்து முஸ்லிம்கள் ஐந்து வேளை தொழுகையை கற்றுக்கொண்டு அதை பின்பற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

கேள்வி 26: புனித ஹஜ் பயணத்தில் செய்யவேண்டிய கடமைகள் சட்டங்கள் பற்றி குர்‍ஆனில் எங்கு சொல்லப்பட்டுள்ளது?

பதில் 26: இஸ்லாமிய புனித யாத்திரையைப்  பற்றிய  அனைத்துச் சட்டங்களையும் குர்‍ஆன் சொல்லவில்லை. அவைகளை ஹதீஸ்களிலிருந்து கற்றுக்கொண்டு முஸ்லிம்கள் செய்கிறார்கள்.

கேள்வி 27: குர்‍ஆனை புரிந்துக்கொள்வதற்கு தேவையான பின்னணியை எங்கு காணலாம்?

பதில் 27: முஹம்மதுவின் சொல்லும் செயலும் அடங்கிய நூல்கள் என்றுச் சொல்லப்படும் ஹதீஸ்களிலிருந்தும், அவரது வாழ்க்கை சரித்திர நூல்களிலிருந்தும் அறியமுடியும், அதிலும் 100% அறியமுடியும் என்றுச் சொல்லமுடியாது.

கேள்வி 28: தௌஹீத் என்ற வார்த்தை குர்‍ஆனில் உள்ளதா?

பதில் 28: தௌஹித் அதாவது ஏகத்துவம் (ஒரே இறைவன்) என்ற பொருள் வரும் இந்த வார்த்தை குர்‍ஆனில் ஒரு முறையும் வருவதில்லை.  ஆனால், ஆங்காங்கே இந்த கோட்பாடு சொல்லப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்ற வாக்கியத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

கேள்வி 29: குர்‍ஆன் மட்டும் (Quran Only Muslims) முஸ்லிம்கள் என்கிறார்களே! இவர்கள் யார்? 

பதில் 29: இவர்கள் குர்‍ஆன் மட்டும் தான் இறைவேதம் என்று நம்புகிறவர்கள். முஹம்மதுவின் சொல்லும் சொயலும் அடங்கிய ஹதீஸ்களையும், இதர இஸ்லாமிய சரித்திர நூல்களையும் இவர்கள் இறைவேதம் என்று நம்புவதில்லை.

கேள்வி 30: குர்‍ஆனில் வரும் ஒரே பெண்ணின் பெயர் என்ன?

பதில் 30: குர்‍ஆனில் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கின்ற ஒரே ஒரு பெண் 'மர்யம்' ஆவார், அதாவது இயேசுவின் தாயின் பெயர் குர்‍ஆன் வருகிறது வேறு எந்த ஒரு பெண்ணின் பெயர் வருவதில்லை.

இன்னாருடைய மனைவி, இன்னாருடைய மகள், சகோதரி என்று சொல்லப்பட்டிருக்குமே தவிர‌, அந்த பெண்ணின் பெயர் குறிப்பிடப்படுவதில்லை, இதற்கு ஒரே ஒரு விதி விளக்கு மர்யம் என்ற பெயர் மட்டும் தான்.

முடிவுரை:

இந்த கேள்விகள் குர்‍ஆனைச் சுற்றியே இருக்கும்படி அமைத்துள்ளேனே தவிர, ஒரு பாட நூல் போன்று ஒரு கோர்வையாக எழுதவில்லை. ஏனென்றால், படிப்பவர்களுக்கு சலுப்பூட்டக்கூடாது என்பதற்காக அடிக்கடி உப தலைப்பை மாற்றி கேள்விகளை அமைத்துள்ளேன்.

அடுத்த தொடரில், இன்னும் 30 கேள்விகளுக்கான பதில்களை சுருக்கமாக காணலாம்.

வாசகர்களுக்கு ஏதாவது கேள்விகள் தோன்றினால், எனக்கு எழுதவும் அவைகளுக்கும் பதில்கள் கொடுக்க முயலுவேன்.

கருத்துகள் இல்லை: