ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வியாழன், 5 நவம்பர், 2020

முஸ்லிம்களுக்கு பிடித்த ஆனால் தவறாக புரிந்துக்கொண்ட பைபிள் வசனங்கள்: 2 – மாற்கு 12:29

முந்தைய கட்டுரையில் முஸ்லிம்களால் தவறாக கொள்ளப்பட்ட‌ வசனம் பற்றி பார்த்தோம், அதன் தொடுப்பு

இந்த கட்டுரையில் இன்னொரு வசனத்தைக்  காண்போம், முஸ்லிம்கள் தவறாக அர்த்தம் கொடுக்கும் வசனம் இது தான்: மாற்கு 12:29

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் (மாற்கு 12:29)

And Jesus answered him, The first of all the commandments is, Hear, O Israel; The Lord our God is one Lord: (Mark 12:29 – KJV)

முஸ்லிம்களின் தவறான புரிதலும், வாதங்களும்:

  1. இந்த வசனத்தின்படி, இயேசு தம் தெய்வீகத் தன்மையை மறுக்கிறார்!
  2. தேவனாகிய கர்த்தர் (யெகோவா) மட்டுமே ஒரே இறைவன், தாம் இறைவன் இல்லையென்று இயேசு சொல்கிறார்!
  3. இதன் மூலம் புரிவது என்னவென்றால், கர்த்தர் ஒருவரே தேவன் என்று இயேசு பைபிளில் சொல்லிவிட்டார்.
  4. ஆகையால், குர்‍ஆன் சொல்வதைத் தான் இயேசுவும் பைபிளில் சொல்லியுள்ளார், இதனை கிறிஸ்தவர்கள் ஏற்கவேண்டும். இயேசு ஒரு தீர்க்கதரிசி மட்டுமே என்று அவர்கள் நம்பவேண்டும்.

இப்பொழுது, இயேசுவின் மேற்கண்ட கூற்றுப்பற்றியும், முஸ்லிம்கள் எடுத்த‌ முடிவு பற்றியும் ஆய்வு செய்வோம்.

1) இயேசு ஒரு கேள்விக்கு பதில் கொடுத்தார், பழைய ஏற்பாட்டு வசனத்தை மேற்கோள் காட்டினார்

மாற்கு 12ம் அத்தியாயத்தை படிக்கும் போது, 28ம் வசனத்தில் ஒரு யூத தலைவர் இயேசுவிடம் கேள்வி கேட்கிறார்:

28. வேதபாரகரில் ஒருவன் அவர்கள் தர்க்கம்பண்ணுகிறதைக்கேட்டு, அவர்களுக்கு நன்றாய் உத்தரவு சொன்னாரென்று அறிந்து, அவரிடத்தில் வந்து: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்று கேட்டான்.

இவர் கேட்ட கேள்விக்கு இயேசு உபாகமம் 6:4,5ம் வசனங்களை அவர் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே மேற்கோள் காட்டுகின்றார். 

உபாகமம் 6:4-5

4. இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். 5. நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.

Deu 6:4-5

Hear, O Israel: The LORD our God is one LORD:  And thou shalt love the LORD thy God with all thine heart, and with all thy soul, and with all thy might.

இப்படி மேற்கோள் காட்டியதால், அவர் தம்முடைய தெய்வீகத் தன்மையை மறுக்கவில்லை. அந்த யூதனின் கேள்விக்கு பழைய ஏற்பாட்டிலிருந்து (தவ்ராத்) இயேசு ஒரு மேற்கோள் காட்டி பதில் அளித்தார். அதன் பிறகு, அந்த யூதன் நேர்மையாக பதில் கொடுத்தான். "நீ தேவனுடைய ராஜ்யத்துக்குத் தூரமானவனல்ல" (வசனம் 34) என்று இயேசு அவனை மெச்சிக்கொண்டார், அதன் பிறகு ஒருவரும் அவரிடம் கேள்விகள் கேட்க துணியவில்லை.

முஸ்லிம்களே! நீங்கள் சொல்வதற்கும் இயேசு சொல்வதற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை.

2) "மஸீஹ் யார் - அல்லஹ்வின் சிம்மாசனத்தில் உட்காருபவர்" - அடுத்த வசனத்திலேயே நெத்தியடி கேள்வி கேட்ட இயேசு

இதே மாற்கு அத்தியாயத்தின் 35வது வசனத்தில், தேவாலயத்தில் ஒரு பெரிய சிக்கலான சவாலை யூதர்களிடம் இயேசு கேட்டார்.

மாற்கு 12:35-37

35. இயேசு தேவாலயத்திலே உபதேசம்பண்ணுகையில், அவர்: கிறிஸ்து தாவீதின் குமாரன் என்று வேதபாரகர் எப்படிச் சொல்லுகிறார்கள்?

36. நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலது பாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று தாவீது பரிசுத்த ஆவியினாலே சொல்லியிருக்கிறானே.

37. தாவீதுதானே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார். அநேக ஜனங்கள் அவருடைய உபதேசத்தை விருப்பத்தோடே கேட்டார்கள்.

இங்கு இயேசு மறுபடியும் பழைய ஏற்பாட்டின் சங்கீத புத்தகத்தின் 110வது அத்தியாயத்தை சுட்டிக்காட்டுகின்றார்.

மஸீஹ் என்பவர் தாவீதின் குமாரன் (எதிர் காலத்தில் தாவீதின் வம்சத்தில் வருபவர்). அப்படியென்றால் மஸீஹ் என்பவர் ஒரு மனிதனாகத் தானே இருக்கவேண்டும்?  ஆனால், தாவீது "கர்த்தர் என் ஆண்டவரோடு இப்படி சொன்னார்" என்று சங்கீதத்தில் (110) சொல்லியிருக்கிறார்.

சங்கீதம் 110:1. கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.

இந்த சங்கீதத்தின் படி, கர்த்தர் என்று தாவீது குறிப்பிட்டது, யெகோவா தேவனைத் தான். எபிரேய மூல மொழியில் "யெகோவா" என்பதைத் தான் தமிழில் "கர்த்தர்" என்று மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். இரண்டாவதாக, தாவீது "என் ஆண்டவரை நோக்கி" என்று எழுதுகிறார். இந்த "ஆண்டவர்" யார்? இவர் தான் "கிறிஸ்து அல்லது மஸீஹ்" என்று யூதர்கள் கூறுகிறார்கள்.

இப்போது இயேசு தம்முடைய தெய்வீகத்தை எப்படி வெளிப்படுத்துகிறார் என்று பாருங்கள்.

ஹலோ! யூதர்களே! நீங்கள் மஸீஹ் என்பவர் வேதத்தின் படி தாவீதின் வம்சத்தில் வருபவர் என்று சொல்கிறீர்கள், ஆனால், அதே தாவீது தன் வம்சத்தில் வரப்போகும் "அந்த மஸீஹ்வை" ஆண்டவர் என்றுச் சொல்லியுள்ளார். மேலும், கர்த்தரே அவரை நோக்கி, "நான் உங்க எதிரிகளை உம் பாதபடியாக்கி போடும் வரை, நீங்க என் வலது பக்கத்தில் உட்காரும்" என்றுச் சொன்னார் என்று தாவீது கூறினார்.

இதன் அர்த்தமென்ன?  மஸீஹ் என்பவர் ஒரு இறைவன் என்பது தானே, கர்த்தருக்கு சமமானவர் என்பது தானே!

முஸ்லிம்களுக்கு இதுவரை சொன்னது புரியவில்லையென்றால், மேற்கண்டவற்றை சுருக்கமாக புரியும் வண்ணம் தருகிறேன் படியுங்கள்:

"அல்லாஹ் ஒரு நபரைப் பார்த்து, நான் உம்முடைய எதிரிகளை உமக்கு பாதபடியாக்கும் வரை, நீர் என் வலது சிம்மானத்தில் உட்காரும் என்று சொன்னால்" நீங்கள் என்ன நினைப்பீர்கள்?

அல்லாஹ் பேசிய அந்த நபர் ஒரு மனிதர் என்று நினைப்பீர்களா? ஒரு நபி என்று நினைப்பீர்களா? அல்லது அல்லாஹ்விற்கு சமமானவர் என்று நினைப்பீர்களா? அல்லாஹ்வின் சிம்மாச‌னத்திலே ஒருவரை உட்கார அல்லாஹ் அனுமதித்தால், அவர் யார்? மேலும், அந்த நபருக்காக நான்(அல்லாஹ்) வேலை செய்கிறேன், நான் சென்று உம் எதிர்களை ஒரு கைப்பார்க்கிறேன் என்றுச் சொன்னால் அந்த நபர் யாராக இருக்க முடியும்?

தலை சுற்றுகிறதா? இதைத் தான் அன்று இயேசு தம் தெய்வீகத்தன்மையை கேள்வி கேட்ட யூதர்களிடம் கேட்டார். வார்த்தைக்கு வார்த்தை "ஈஸா அல் மஸீஹ்" என்று அடிக்கடி குர்‍ஆனில் இயேசுவை குறிப்பிடும் அல்லாஹ், அந்த மஸீஹ்வை தம் சிம்மாசனத்தில் உட்கார வைத்துவிட்டு, அந்த மஸீஹ்வுடைய எதிரிகளை ஒரு கைப்பார்த்து வருகிறேன் என்றுச் சொல்லும் போது, "அல்லாஹ்விற்கு, மஸீஹ்விற்கும்" என்ன உறவு இருக்கும் என்று உங்கள் புத்திக்கு எட்டுகின்றதா?

மாற்கு 12வது அத்தியாயத்தின் 29வது வசனத்தை மட்டும் எடுத்து உதாரணம் காட்டும் முஸ்லிம்கள், இன்னும் கொஞ்சம் ஆறு வசனங்களை தாண்டி படித்துயிருந்தால், அங்கு இயேசு "தம்மை யெகோவாவின் சிம்மாசனத்தில் உட்காருபவர்" என்பதை தாவீதின் சங்கீதங்களிலிருந்தே (ஜபூர்) எடுத்துக் காட்டியுள்ளார் என்பதை கவனித்து இருந்திருப்பார்கள்.

3) முழூ அத்தியாயத்தையும் படியுங்கள் முஸ்லிம்களே! அரைகுறையாக படிக்கவேண்டாம்

பைபிளிலிருந்து ஒரு வசனத்தை மட்டும் எடுத்து "மேற்கோள் காட்டும் போது எப்படிப்பட்ட பிழையை முஸ்லிம்கள்" செய்துள்ளார்கள் என்பதை நாம் கவனிக்கமுடியும். மாற்கு 12ம் அத்தியாயத்தை முஸ்லிம்கள் முழுவதுமாக படித்துயிருந்திருந்தால், அவர்களின் கண்கள் தெளிவடைந்து இருக்கும். தங்கள் சந்தேகங்களுக்கு பதில் கிடைத்து இருந்திருக்கும்.  

மாற்கு 12வது அத்தியாயம், இயேசுவின் தெய்வீகத்தன்மையை பல வகைகளில் வெளிப்படுத்தும் அத்தியாயம் ஆகும். எப்படி?

வசனங்கள் 1-12 வரை: 

இயேசு யூதர்களைப் பற்றி, கர்த்தரைப் பற்றி, தம்மைப் பற்றி ஒரு அருமையான உவமையைச் சொன்னார்.

கர்த்தர் ஒரு திராட்சை தோட்டக்காரர், அந்த தோட்டத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள் யூதர்கள், தொட்டக்காரரின் "ஊழியர்களாக"‌ லாபத்தை வாங்கிவர வந்தவர்கள், இயேசுவிற்கு முன்பு வந்த தீர்க்கதரிசிகள் ஆவார்கள். கடைசியாக தம் குமாரனையே அந்த தோட்டக்காரர் (கர்த்தர்) அனுப்பினார். அந்த குமாரரை(இயேசுவை) குத்தைக்கார்கள் கொன்றார்கள், ஏனென்றால் அவரும் அந்த தோட்டத்துக்கு(உலகத்துக்கு) சொந்தக்காரர். அதன் பிறகு அந்த தோட்டக்காரர் வந்து அந்த குத்தைக்காரர்களை அழித்தார்.

இயேசுவின் தெய்வீகத்தன்மையை விளக்க இதைவிட ஒரு உவமை வேண்டுமா? முஸ்லிம்களே உங்களுக்கு புரிகின்றதா?

வசனங்கள் 13-17 வரை: 

இயேசுவின் ஞானத்திற்கு ஒரு சான்று. பேச்சிலே இயேசுவை பிடிக்கவேண்டும் என்று விரும்பிய யூதர்களிடம் சிக்ஸர் அடித்து, மைதானத்திற்கு வெளியே பந்தை விளாசிய இயேசு.

வசனங்கள் 18-34 வரை: 

அதன் பிறகு தான் முஸ்லிம்கள் மேற்கோள் காட்டிய 12:29ம் வசனத்தின் உரையாடல் வருகின்றது.

வசனங்கள் 35-40 வரை: 

மஸீஹ் யார் என்று கேட்டு, தம் தெய்வீகத்தன்மைக்கு சான்றாக, சங்கீத புத்தகத்தின் வசனங்களை மேற்கோள் காட்டி யூதர்களின் வாயை அடைத்தார்.

வசனங்கள் 40-44 வரை: 

ஒரு ஏழை விதவையின் காணிக்கையை மெச்சிக்கொண்டு போதனை செய்தார் இயேசு

முடிவுரை:

ஒரு முறை மாற்கு 12வது அத்தியாயத்தை படித்து பாருங்கள்.

இயேசு ஒரு உவமையின் மூலமாக தம் தெய்வீகத்தன்மையை காட்டினார், மேலும் சங்கீத புத்தகத்திலிருந்தும் (ஜபூர்) தம் தெய்வீகத்தை யுதர்களுக்கு உணர்த்தினார். 

மாற்கு 12:29ம் வசனத்தை நம்பும் முஸ்லிம்கள், முழு அத்தியாயத்தையும் நம்பவேண்டுமல்லவா?

29ம் வசனத்தில் இயேசு உண்மையைச் சொல்கிறார் என்று நம்பும் முஸ்லிம்கள், 35வது வசனத்திலும், இயேசு உண்மையைச் சொல்கிறார் என்று நம்பவேண்டுமல்லவா? 

இவ்வத்தியாயத்தின் முதல் 12 வசனங்களில் இயேசு சொன்ன உவமையைப் பற்றி உங்கள் கருத்து என்ன முஸ்லிம்களே! மஸீஹ் பற்றி சங்கீதம் (110) சொல்வதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

இந்த கட்டுரையில் , முஸ்லிம்கள் தவறாக புரிந்துக்கொண்ட ஒரு வசனத்தை ஆய்வு செய்தோம், அடுத்த கட்டுரையில் இன்னொரு வசனத்தை ஆய்வு செய்வோம்.

இந்த கட்டுரைக்கு உதவிய ஆக்கில கட்டுரை: http://www.faithbrowser.com/top-10-misinterpreted-verses-by-muslims/

தேதி: 5th Nov 2020


ஃபெயித் ப்ரவுசர்(Faith Browser) கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/faith_browser/mark12-29.html


கருத்துகள் இல்லை: