ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

இயேசு ஏன் அத்திமரத்தை சபித்தார்?

பொதுவான கேள்விகளுக்கான தொடர் பதில்கள்

இயேசு ஏன் அத்திமரத்தை சபித்தார்?

ஷாம் சாமான்
 
 
கேள்வி:


சுவிசேஷ நூல்களில், இயேசு சாப்பிட கனிகள் ஏதாவது இருக்குமா என்று பார்க்க ஒரு அத்திமரத்தினிடம் செல்கிறார் (மத் 21:18-22; மாற்கு 11: 12-14, 20-21). அந்த மரத்தில் கனிகள் ஒன்றும் இல்லாதிருப்பதைக் கண்டபோது அவர் அந்த மரத்தை சபித்தார். இந்த சம்பவத்தில் உள்ள ஒரு பிரச்சனை என்னவென்றால், மாற்கு 11:13ம் வசனத்தின் படி, அந்த காலம் அத்தி மரம் கனி கொடுக்கிற காலமல்ல. இயேசு "இறைவனாக" இருந்தால் "அது அத்திப் பழத்திற்கான காலம் (Season) இல்லை" என்பதை ஏன் அறியாதிருந்தார்? அந்த காலம் அத்திப் பழ காலமாக இல்லாமலிருந்தது மரத்தினுடைய குற்றமாகாதபோதும் அதை அவர் ஏன் சபிக்க வேண்டும்?
 
 
பதில்:

அத்திமர காலமாக இல்லாதபோதும் இயேசு ஏன் அந்த மரத்தை சபித்தார் என்பதற்கு சரியான காரணம் உள்ளது. அத்திமரமானது கனி காலம் (Season) தொடங்குவதற்கு முன்பே சிறிய உருண்டை வடிவிலான அத்தி கனிகளை கொடுக்கும், அதை வழிப்போக்கர்கள் உண்பார்கள். புகழ்பெற்ற புதிய ஏற்பாட்டு அறிஞர் காலஞ் சென்ற எப்.எப். புரூஸ் (F.F. Bruce) அவர்கள் கிழ்கண்ட விதமாக குறிப்பிடுகிறார்:
 
 
'இயேசு செய்த இன்னொரு அற்புதம் என்னவென்றால் "கனிகொடாத அத்தி மரத்தை சபித்த அற்புதமாகும்." (மாற்கு 11:12-14), இந்த அற்புதம் அநேகருக்கு ஒரு இடறுதலாக காணப்படுகிறது. அவர்கள், இந்த அற்புதத்தை இயேசு செய்து இருக்கமாட்டார், யாரோ ஒருவர் "நடந்ததை தவறாக புரிந்து கொண்டிருக்கிறார் என்றும்", அல்லது ஒரு உவமையாக சொல்லப்பட்டதை நடந்த ஒரு அற்புதமாக திரித்துக் கூறியிருக்கிறார்கள், அல்லது அதைப் போல ஏதாவது இருக்கும் என்று சொல்கிறார்கள். மற்றொருபுறம், சிலர் அந்த சம்பவத்தை வரவேற்கிறார்கள் ஏனென்றால், அவர்களுக்கு இந்த சம்பவமானது இயேசுவும் சில சந்தர்ப்பங்களில் காரணமில்லாமல் கோபப்படக் கூடிய சாதாரண ஒரு மனிதனே என்று காட்டுகிறது என்று நம்புகிறார்கள். எப்படியிருந்தாலும், அத்திமரத்தைப் பற்றிய புரிந்துக்கொள்ளுதல் அல்லது முழு அறிவு கிடைக்குமானால் இப்படிப்பட்ட தவறான விளக்கங்கள் தடுக்கப்பட்டிருக்கும். "அத்திப்பழக் காலமாயிரதாபடியால்" என்று மாற்கு எழுதுகிறார், ஏனென்றால் அது பஸ்கா பண்டிகைக்கு முன்னதாக, "நல்ல அத்திப்பழமாக முழுமையடைவதற்கு" ஏறக்குறைய ஆறு வாரங்களுக்கு முன் நடந்தது. உண்மையாக, இந்த வார்த்தைகளை அவர் சேர்ப்பதன் மூலம் தான் எதைப்பற்றிச் சொல்லுகிறார் என்பதை மாற்கு நன்கு அறிந்திருந்தார்.மார்ச் மாத இறுதியில் அத்தி இலைகள் காணப்படும் போது அவைகளோடு சேர்ந்து கொத்தாக சிறிய உருண்டை அத்திப்பழங்களும் தோன்றும், அதை அரபியர்கள் "டக்ஷ்" (taqsh) என்று அழைத்தனர். அவைகள் உண்மையான அத்திப் பழங்களுக்கு முன்னோடியாக தோன்றுபவை. இந்த "டக்ஷ்" என்ற பழங்களை விவசாயிகள் மற்றம் வழிப்போக்கர்கள் பசியாக இருக்கும் போது சாப்பிடுவார்கள். உண்மையான அத்திப்பழ காலத்தின் அத்திப்பழங்கள் உருவாகும் போது அவைகள் உதிர்ந்து விடும். ஒருவேளை அந்த அத்தி இலைகள் அந்த "டக்ஷ்களோடு" சேர்ந்து தோன்றவில்லை என்றால் அந்த மரமானது அந்த வருடத்தில் கனி கொடுக்காது என்று பொருள். எனவே, அந்த மரத்தில் அப்போதைக்கு பசியாற்றுவதற்கு ஏதாவது "டக்ஷ்" கிடைக்குமா என்று திரும்பிய நம்முடைய ஆண்டவருக்கு டக்ஷ் இல்லாமாலிருப்பது உண்மையான அத்திப்பழங்கள் வருவதற்கான காலத்திலும் அங்கே அத்திப்பழங்கள் இருக்காது என்பது தெளிவாக தெரிந்திருந்தது. எனவே அந்த மரத்தில் அத்தனை அழகான இலைத்தொகுப்புகள் இருந்தும் அந்த மரமானது ஒரு கனியற்ற, நம்பிக்கையற்ற மரமாகும்." (Bruce, Are The New Testament Documents Reliable? [Intervarsity Press; Downers Grove, Ill, fifth revised edition 1992], pp. 73-74; bold emphasis ours)
 
 
மற்றொரு குறிப்படப்படும் சுவிசேஷ அறிஞர் கிரெய்க் எஸ். கீனர் (Craig S. Keener) பின்வரும் ஆய்வை அளிக்கிறார்.
 
 
"பஸ்கா பண்டிகையின் நாட்களில் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் ஒலிவ மலைக்கு கிழக்கில் அத்தி மரங்கள் இலைகள் மிகுந்ததாக காணப்படும். வருடத்தின் இந்த சமயத்தில் அந்த அத்தி மரங்கள் பச்சையான தொடக்க அத்திப் பழங்களை மட்டும் கொண்டிருக்கும்.(அரபியர்கள் அவைகளை டக்ஷ் என்று அழைப்பார்கள்), அவைகள் ஏறக்குறை ஜூன் மாதத்தின்போது பழுக்கும் அல்லது அதற்கு முன்பே பச்சையான இலைகளை மட்டும் விட்டுவிட்டு உதிர்ந்து விடும். எனவே இலைகள் நிறைந்த ஒரு அத்திமரம் தொடக்க அத்திப் பழங்களை இழந்திருந்தால் அந்த வருடத்தில் அம்மரம் நிச்சயமாக கனிகளை கொடுக்காது". (Keener, A Commentary on the Gospel of Matthew [Wm. B. Eerdmans Publishing Company, July 1999], p. 504)
 
 
அவ்வாறாக, புதிய ஏற்பாட்டின் உண்மைக்கு எதிரான உதாரணம் என்று கருதப்பட்டவை உண்மையில் அதன் (புதிய ஏற்பாட்டின்) வரலாற்று ரீதியான நம்பகத்தன்மைக்கு வலிமையான விவாதமாக மாறுவதில் முடிவடைந்திருக்கிறது! இது சுவிசேஷ நூல்களின் உண்மைத் தன்மையை காட்டுகிறது, அதாவது எந்த இடத்தில் எந்த காலத்தில் நிகழ்ச்சிகள் நடந்தன என்பவற்றை "பஸ்கா பண்டிகையின் போது நடந்தது" என்றும், அத்திமரங்கள் ஒலிவ மலையின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்தது என்றும் மிக நுட்பமான காரியங்களை படம்பிடித்துக் காட்டுகிறது. மேலும் இது மத்தேயு, மாற்கு சுவிசேஷ நூல்கள் இதர சுவிசேஷ நூல்களுக்கு முன்பாக எழுதப்பட்டது என்பதைக் காட்டுகிறது அல்லது எருசலேமின் வீழ்ச்சிக்கு முன் எழுதப்பட்டவைகள் என்று அதன் பழமைக்கு தகுந்த ஆதாரங்களை அளிப்பதாக இருக்கிறது. ஆனால் இந்த விளக்கங்களின் முழு விவரங்கள் எருசலேமின் வீழ்ச்சிக்குப் பிறகு எழுதும் ஆசிரியர்களுக்கு தெரியாமல் இருந்திருக்கிறது.

 
இன்னும் அதிகமாக, அத்தி மரத்தை சபித்து பட்டுப்போகச் செய்த இந்த காரியம் ஒரு உவமையாகவும் காட்டப்பட்டுள்ளது, இஸ்ரவேலுக்கு வரவிருக்கும் நியாயத்தீர்ப்புக் குறித்து எச்சரிக்கை செய்யும் ஒரு காரியமாகவும் இந்நிகழ்ச்சி உள்ளது. மெசியானிக் அறிஞர் டேவிட் ஸ்டெர்ன் (David Stern) கூறுகையில்:
 
 
'…இயேசு அந்த மரத்தை சபித்து பட்டுப்போகச் செய்ததற்கு காரணம், பசியாற்ற வந்தவருக்கு அது கனி தராமல் ஏமாற்றியது தான், இனி அந்த மரம் வேறு யாருக்கும் பயன்படப்போவதில்லை, எனவே, மேசியாவே அதற்கு சரியான தண்டனையைக் கொடுத்தார். இதனால், இயேசு இங்கே ஒரு தீர்க்கதரிசன நாடகத்தை உவமையாக நடத்துகிறார் (லூக் 13:6-9 ல் கூறியது போல ஒரு உவமை). "தனக் (Tanakh)" என்று யூதர்கள் அழைக்கும் பழைய ஏற்பாட்டில் எரேமியா 19ம் அதிகாரத்தில் "ஒரு களிமண் பாண்டத்தை" கொண்டுவந்து உடைக்கும் படி" தேவன் கூறுகிறார். இதே போல எசேக்கியேல் 4,5ம் அதிகாரங்களில் "எருசலேமின் ஒரு மாதிரியைச் செய்து அதை எரித்துப் போடும் படி" எசேக்கியேலுக்கு தேவன் கட்டளையிடுகிறார். இவைகள் எல்லாம் உவமைகளாகச் சொல்லி, செய்துக்காட்டிய எடுத்துக்காட்டுகளாகும். இதே போல ஒரு சம்பவத்தை புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர் நடபடிகள் 21:10-11 வசனங்களில் காணலாம்.

 
கனி தரும் காலம் இல்லாத போதும் ஒரு அத்தி மரம் இலைகளோடு காணப்படுகிறது - அது தொலைவிலிருந்து பார்க்கக்கூடிய அளவிற்கு இலைகளோடு இருந்திருக்கிறது (வசனம் 12) - கனிகளுக்கான நிச்சயத்தை அளிப்பதாக இருந்தது. சாதரணமாக இஸ்ரவேல் தேசத்தில் அத்திப் பழங்களுக்கான தொடக்க காலம் ஜூன் ஆகும். ஆனால் பச்சையான பழங்களின் தொடக்க காலமானது (உன்னதப்பாட்டு 2:13) பஸ்கா பண்டிகைக்கு முன்பதாக இன்னும் வசந்தகால இலைகள் கிளைகளில் தோன்றுவதற்கு முன்பே தோன்றும்.

 
தேவனுடைய ஜனங்கள் நீதியென்னும் கனிகளை கொடுக்க வேண்டும் என்று இயேசு எதிர்பார்ப்பதும், மற்றும் கனி தராத கிளைகளை அக்கினியிலே போடப்படும் என்பதும் நமக்கு தெரியும் (மத் 7:16-20; 12:33; 13:4-9, 18-23; யோவான் 15:1-8). இவ்வாறாக அந்த அத்தி மரத்தை சபித்து பட்டுப்போகப் பண்ணியது என்பது இஸ்ரவேலுக்கு ஒரு எச்சரிப்பாகும். நீதிமொழிகள் 27:18ன் படி "அத்திமரத்தைக் காக்கிறவன் அதின் கனியைப் புசிப்பான்; தன் எஜமானைக் காக்கிறவன் கனமடைவான்". இயேசு இங்கே தன்னுடைய சீடர்களுக்கு தங்கள் எஜமானகிய தேவனுக்கு ஊழியம் செய்வது என்பது என்ன என்பதை கற்றுக் கொடுக்கிறார். அதாவது தேவனிடத்திலிருந்து வரும் விசுவாசத்தை உடையவர்களாக இருக்கவேண்டும் என கற்றுக்கொடுக்கிறார் (வசனம் 22). அப்படியிராவிட்டால் அவர்கள் உதிர்ந்துவிடுவார்கள். இயேசு எந்த ஒரு அற்புதத்தையும் தன்னுடைய கோபத்திலோ அல்லது மனம்போன போக்கிலோ ஒரு மாயவித்தைக்காரன் செய்வது போல செய்வதில்லை. அவருடைய ஒவ்வொரு அற்புதமும் ஒரு ஆவிக்குரிய முக்கியத்துவத்தை கொண்டிருக்கிறது.' (Stern, Jewish New Testament Commentary [Jewish New Testament Publications, Inc., Clarksville Maryland, Fifth edition 1996], pp. 95-96; bold emphasis ours)
 
 
பழைய ஏற்பாடு அத்திமரத்தை இஸ்ரவேல் மக்களுக்கு ஒப்பிட்டுக் அடிக்கடி குறிப்பிடுகிறது.
 
 
"அவர்களை முற்றிலும் அழித்துப் போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; திராட்சச்செடியிலே குலைகள் இராது, அத்திமரத்திலே பழங்கள் இராது, இலையும் உதிரும், நான் அவர்களுக்குக் கொடுத்தது அவர்களை விட்டுத் தாண்டிப் போகும் என்று சொல்." எரேமியா 8:13

 
கர்த்தர் எங்களுக்குப் பாபிலோனிலும் தீர்க்கதரிசிகளை எழுப்பினார் என்று சொல்லுகிறீர்கள். ஆனால் தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிற ராஜாவைக் குறித்தும், உங்களோடேகூடச் சிறையிருப்பில் புறப்பட்டுப்போகாமல் இந்த நகரத்தில் குடியிருக்கிற உங்கள் சகோதரராகிய எல்லா ஜனங்களைக் குறித்தும், இதோ, நான் பட்டயத்தையும், பஞ்சத்தையும், கொள்ளை நோயையும் அவர்களுக்குள் அனுப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; புசிக்கத்தகாத கெட்டுப்போன அத்திப் பழங்களுக்கு அவர்களை ஒப்பாக்குவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். அவர்கள் என் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியால், நான் அவர்களைப் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் பின்தொடர்ந்து, அவர்களைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலைந்து திரிகிறவர்களாகவும், நான் அவர்களைத் துரத்துகிற எல்லா ஜாதிகளிடத்திலும் சாபமாகவும், பாழாகவும், ஈசலிடுதலுக்கிடமாகவும், நிந்தையாகவும் வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நான் உங்களிடத்திற்குத் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரை ஏற்கனவே அனுப்பிக்கொண்டேயிருந்தும், நீங்கள் செவிகொடாமற்போனீர்களே என்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா 29: 15-19

 
வனாந்தரத்தில் திராட்சக்குலைகளைக் கண்டுபிடிப்பதுபோல இஸ்ரவேலைக் கண்டுபிடித்தேன்; அத்திமரத்தில் முதல்தரம் பழுத்த கனிகளைப் போல உங்கள் பிதாக்களைக் கண்டுபிடித்தேன்; ஆனாலும் அவர்கள் பாகால்பேயோர் அண்டைக்குப் போய், இலச்சையானதற்குத் தங்களை ஒப்புவித்து, தாங்கள் நேசித்தவைகளைப் போலத் தாங்களும் அருவருப்புள்ளவர்களானார்கள். எப்பிராயீமர் வெட்டுண்டுபோனார்கள்; அவர்கள் வேர் உலர்ந்துபோயிற்று, கனிகொடுக்கமாட்டார்கள்; அவர்கள் பிள்ளைகளைப் பெற்றாலும், அவர்களுடைய கர்ப்பத்தின் பிரியமான கனிகளை அதம் பண்ணுவேன். ஓசியா 9: 10,16

 
ஐயோ! உஷ்ணகாலத்துக் கனிகளைச் சேர்த்து, திராட்சப்பழங்களை அறுத்தபின்பு வருகிறவனைப்போல் இருக்கிறேன்; புசிக்கிறதற்கு ஒரு திராட்சக்குலையும் என் ஆத்துமா இச்சித்தமுதல் அறுப்பின் கனியும் இல்லை (none of the early figs that I crave). தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்; மனுஷரில் செம்மையானவன் இல்லை; அவர்களெல்லாரும் இரத்தஞ்சிந்தப் பதிவிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் சகோதரனை வலையிலே பிடிக்க வேட்டையாடுகிறான். பொல்லாப்புச் செய்ய அவர்கள் இரண்டு கைகளும் நன்றாய்க் கூடும்; அதிபதி கொடு என்கிறான்; நியாயாதிபதி கைக்கூலி கேட்கிறான்; பெரியவன் தன் துராசையைத் தெரிவிக்கிறான்; இவ்விதமாய்ப் புரட்டுகிறார்கள். அவர்களில் நல்லவன் முட்செடிக்கொத்தவன், செம்மையானவன் நெரிஞ்சிலைப்பார்க்கிலும் கடுங்கூர்மையானவன்; உன் காவற்காரர் அறிவித்த உன் தண்டனையின் நாள் வருகிறது; இப்பொழுதே அவர்களுக்குக் கலக்கம் உண்டு. மீகா 7:1-4

 
உன் அரண்களெல்லாம் முதல் பழுக்கும் பழங்களுள்ள அத்திமரங்களைப் போல் இருக்கும்; அவைகள் குலுக்கப்பட்டால் அவைகளின் பழம் தின்கிறவன் வாயிலே விழும். நாகூம் 3:12
 
 
 
எனவே மேலேயுள்ள மேற்க்கோள்கள் இயேசு ஏன் அத்திமரத்திற்கு அப்படி செய்தார் என்பதை விளக்குகிறது. பழைய ஏற்பாடு கூறுவது போல யேகோவா தேவன் குறிப்பாக இஸ்ரேவேல் ஒரு கனிகொடுக்கும் ஒரு மரம், மலடோ பட்டுப் போனதோ அல்ல என்பதற்கான அடையாளத்தை தேடுகிறார், அதையே கிறிஸ்துவும் தேடுகிறவராக வந்தார். எனவே ஆவிக்குரிய ரீதியில் இஸ்ரவேல் ஜீவனோடுதான் இருக்கிறது மேலும் தன்னுடைய தேவனை திருப்தி படுத்தக் கூடிய கனிகளை கொடுப்பதற்கு ஆயத்தமாயிருக்கிறது என்று வெளிப்படுத்த வேண்டிய தொடக்க அத்திப்பழங்களை (ஒசியா 9:10; மீகா 7: 1) காண்பதற்கு பதிலாக தேசம் ஆவிக்குரிய ரீதியில் மலடாகவும் மரித்தும் இருப்பதை கிறிஸ்து கண்டார். இஸ்ரவேலின் ஆவிக்குரிய மலட்டுத்தன்மையின் காரணமாக தேவன் தன்னுடைய அத்தி மரங்களை, தன்னுடைய திராட்சை செடிகளை வெட்டி அக்கினியில் சுட்டெரித்துப்போடுகிறார்.
 
 
 
"அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத் தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை. அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான். அதற்கு அவன்: ஐயா, இது இந்தவருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்." லூக்கா 13:6-9

 
"பின்பு அவர் உவமைகளாய் அவர்களுக்குச் சொல்லத்தொடங்கினதாவது: ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, இரசத்தொட்டியை உண்டுபண்ணி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறத்தேசத்துக்குப் போயிருந்தான். தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்துக் கனிகளில் தன் பாகத்தை வாங்கிக்கொண்டு வரும்படி, பருவக்காலத்திலே அவர்களிடத்தில் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான். அவர்கள் அவனைப்பிடித்து, அடித்து, வெறுமையாய் அனுப்பிவிட்டார்கள். பின்பு வேறொரு ஊழியக்காரனை அவர்களிடத்தில் அனுப்பினான்; அவர்கள் அவன்மேல் கல்லெறிந்து, தலையிலே காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பிவிட்டார்கள். மறுபடியும் வேறொருவனை அனுப்பினான்; அவனை அவர்கள் கொலைசெய்தார்கள். வேறு அநேகரையும் அனுப்பினான்; அவர்களில் சிலரை அடித்து, சிலரைக் கொன்றுபோட்டார்கள். அவனுக்குப்பிரியமான ஒரே குமாரன் இருந்தான்; என் குமாரனுக்கு அஞ்சுவார்களென்று சொல்லி, அவனையும் கடைசியிலே அவர்களிடத்தில் அனுப்பினான். தோட்டக்காரரோ: இவன் சுதந்தரவாளி, இவனைக் கொலைசெய்வோம் வாருங்கள்; அப்பொழுது சுதந்தரம் நம்முடையதாகும் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு; அவனைப் பிடித்துக் கொலைசெய்து, திராட்சத்தோட்டத்துக்குப் புறம்பே போட்டுவிட்டார்கள். அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் என்ன செய்வான்? அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை மற்றவர்களுக்கு ஒப்புக்கொடுப்பான் அல்லவா? " மாற்கு 12:1-9

 
"எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும். கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும் இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். " மத்தேயு 23:37-39

 
"அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது, உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது. உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி, உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் வரும் என்றார்." லூக்கா 19:41-44
 
 
 
இயேசு அத்தி மரத்தை சபித்ததின் அர்த்தம் இதுதான், ஒரு அடையாளமாக தேவன் தன்னுடைய உடன்படிக்கையின் ஜனங்களிடத்தில் ஆவிக்குரிய கனிகளை தேடி வந்தார் ஆனால் ஒன்றையும் காணாத அவர், அவர்கள் மீது தண்டனையை கொண்டு வருவார்.

 
எனவே அவர் அத்திமரத்தை சபித்ததில் எந்த தவறும் கிடையாது அதோடு இந்த செயல் அவருடைய பரிபூரண தெய்வீகத் தன்மையை குறைப்பதாகவும் இல்லை.

 
 
 

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

அறுமையான பதிவு...நீண்ட நாட்களாக இஸ்லாமியர்கள் கேட்கும் இந்த கேள்விக்கு தர்க்க ரீதியான பதிலை கண்டு கொண்டேன்...இக்கட்டுரையில் வரும் ஆவிக்குரிய விளக்கம் என் சிந்தையில் பல நாட்களாக நினைத்ததாகும்..இப்போது தெளிவடைந்தேன்....God bless....

Unknown சொன்னது…

அறுமையான பதிவு...நீண்ட நாட்களாக இஸ்லாமியர்கள் கேட்கும் இந்த கேள்விக்கு தர்க்க ரீதியான பதிலை கண்டு கொண்டேன்...இக்கட்டுரையில் வரும் ஆவிக்குரிய விளக்கம் என் சிந்தையில் பல நாட்களாக நினைத்ததாகும்..இப்போது தெளிவடைந்தேன்....God bless....