ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 29 அக்டோபர், 2011

ஜியா/அப்சருக்கு பதில்: உஸ்மானின் முழு குர்‍ஆன் உயிரோடு உள்ளதா?

         

ஜியா/அப்சருக்கு பதில்: உஸ்மானின் முழு குர்‍ஆன் உயிரோடு உள்ளதா?

("குர்‍ஆன் மூலத்திற்கு" மூலம் முழுவதுமாக‌ எந்த மூலையில் முடங்கி கிடக்கிறது?)

முன்னுரை : இஸ்லாமியர்களின் பேச்சு நம் தமிழ் அரசியல் வாதிகளின் பேச்சையே மிஞ்சிவிடும். அரசியல்வாதி சொல்லும் பொய்களே வெட்கமடையும் அளவிற்கு பொய்களை வீசுவார்கள் இஸ்லாமிய அறிஞர்கள். (குறிப்பு: இதில் சாதாரண சராசரி முஸ்லிமை இழுக்கவேண்டாம், பாவம் அவனுக்கு என்ன தெரியும்? அவனுக்கு தெரிந்ததெல்லாம் ஒன்று தான் அது "Allah knows Best" என்பதாகும், ஆகையால், இந்த கட்டுரையில் நாம் படிக்கப்போகும் வரிகள் அனைத்திற்கும் சொந்தக்காரர்கள் இஸ்லாமிய அறிஞர்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும்.)

குர்‍ஆன் பற்றி பெருமையாக நாலு வார்த்தை பேசுங்கள் என்று ஒரு இஸ்லாமியருக்கு சொல்லிவிட்டால் போதும், அல்லாஹ்விற்கே ஆச்சரியத்தை உண்டாக்கும் விதத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் பேசித் தள்ளுவார்கள். அல்லாஹ்வே ஆச்சரியத்தோடு, "அடப்பாவமே, இதுவரை எனக்கே தெரியாமல் போய்விட்டதே இவ்வளவு விஷயங்கள்" என்று கூறுவார். இப்படிப்பட்டவரில் ஒருவர் தான் பீஜே அவர்கள். அவர் குர்‍ஆன் மூலப்பிரதிகள் பற்றி தம்முடைய குர்‍ஆன் தமிழாக்கத்தில் எழுதியவைகளை மேற்கோள் காட்டி, நான் ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன் (உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் மொழிப்பெயர்த்து இருந்தேன்), அதற்கு மறுப்பு எழுதுவதாக "சகோதரர் ஜியா மற்றும் அப்சர்" அவர்கள் ஒரு சிறிய கட்டுரையை எழுதினார்கள்.

அந்த கட்டுரையில் அவர்கள் கொடுத்து இருந்த விவரங்களைக் கண்டு எனக்கு ஆச்சரியமாக ஆகிவிட்டது. அதாவது பிபிசியில் (இணைய செய்தித்தாள்) ஒரு கிறிஸ்தவர் எனக்கு பதில் ஏற்கனவே எழுதிவிட்டாராம். மற்றும் எனக்கே தெரியாமல் நான் உண்மையை ஒப்புக்கொண்டேனாம். இப்படியெல்லாம் அவ்விருவர்கள் எழுதியுள்ளார்கள்.

இஸ்லாமியர்களின் ஒவ்வொரு வார்த்தையின் பின்னணியும், ஒவ்வொரு வரியின் உள்நோக்கமும் எனக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் எழுதியதை முதலில் படிப்பவர்கள், ஆஹா எவ்வளவு அழகாக பதில் கொடுக்கிறார்கள் என்று எண்ணிக்கொள்வார்கள், (இப்படி எண்ணம் கொள்பவர்களில் 99% சதவிகித மக்கள் இஸ்லாமியர்களாகவே இருப்பார்கள் என்பது வேறு விஷயம்), ஆனால், ஒவ்வொரு வரியாக நாம் படித்து பதில் கொடுக்க ஆரம்பித்தால், அவர்களின் அறியாமை அல்லது வஞ்சக வலை வெளியே தெரியவரும்.

சரி, இதுவரை இஸ்லாமியர்கள் எழுதியவைகளுக்கு பதிலை அளித்துக்கொண்டு இருந்த என்னை, ஒரு பிபிசியின் செய்தியை படித்து இஸ்லாமியர்களுக்கு விளக்கவேண்டிய வேலையையும் நமது அன்பு சகோதரர்கள் திரு ஜியா அவர்களும், சகோதரர் அப்சர் அவர்களும் அளித்துள்ளார்கள்.

முன்னுரையை இதோடு நிறுத்திக்கொண்டு நாம் அவர்களின் வரிகளை அலச செல்வோமா?

என் முதல் கட்டுரையில் நான் மேற்கோள் காட்டிய பீஜே அவர்களின் வரிகளை மறுபடியும் படிப்பது நல்லது.

பீஜே அவர்கள் தம்முடைய குர்‍ஆன் தமிழாக்கத்தில் "பிரதிகள் எடுத்தல்" என்ற தலைப்பின் கீழ், பக்கம் 48ல் இரண்டு மூல குர்‍ஆன் பற்றிய விவரங்களைத் தருகிறார்.

பீஜே குர்‍ஆன் தமிழாக்கம், பக்கம் 48 :

உஸ்மான் (ரலி) அவர்களின் இந்த மூலப் பிரதியின் அடிப்படையில் தான் உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாக குர்‍ஆன் அச்சடிக்கப்பட்டும், எழுதப்பட்டும், பரப்பப்பட்டும், வினியோகிக்கப்பட்டும் வருகின்றது.

உஸ்மான் (ரலி) அவர்கள் பல பகுதிகளுக்கு அனுப்பிய மூலப் பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றும் கூட பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒன்று துருக்கி நாட்டின் "இஸ்தான்புல்" நகரத்தில் உள்ள அருங்காட்சி யகத்திலும், இன்னொன்று ரஷியாவின் "தாஷ்கண்ட் " நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அவர்கள் பரப்பிய அந்தப் பிரதிகள் தான் இன்று உலகத்தில் உள்ள குர்‍ஆன் பிரதிகள் அனைத்திற்கும் மூலம் எனலாம். (பீஜே குர்‍ஆன் தமிழாக்கம், பக்கம் 48)

இப்போது சகோதரர் ஜியா/அப்சர் அவர்களின் வரிகளுக்கு பதில்களை காண்போம்:

இவர்கள் தங்கள் கட்டுரையில் மூன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்கள்:

1) இவர்களின் பைபிள் சம்மந்தப்பட்ட கட்டுரைகளுக்கு நான் பதில் அளிப்பதில்லையாம்.

2) ஒரு பிபிசி செய்தியின் மூலமாக ஒரு கிறிஸ்தவரே எனக்கு பதிலை ஏற்கனவே கொடுத்துள்ளாராம்.

3) என் கட்டுரையில் நான் எனக்கே தெரியாமல் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளேனாம்.


இந்த மூன்று குற்றச்சாட்டுகளுக்கு நாம் பதிலை காண்போம். அந்த பிபிசி செய்தி பற்றிய அவர்களின் நம்பிக்கையும், அதற்கான பதிலையும் நீங்கள் படித்தால் சிரித்துவிடுவீர்கள், அதாவது எதை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானலும், கொஞ்சம் கூட அடிப்படை ஆய்வு செய்யாமல் எழுதுவது, இஸ்லாமிய அறிஞர்களின் வழக்கமாக ஆகிவிட்டது, என்பதை அறிந்துக்கொள்வீர்கள்.


முதல் குற்றச்சாட்டு: இவர்களின் பைபிள் சம்மந்தப்பட்ட கட்டுரைகளுக்கு நான் பதில் அளிப்பதில்லையாம்.

சகோதரர்கள் ஜியா/அப்சர் எழுதியது:

திரு உமர் அவர்கள், "கலிFபா உஸ்மான் அவர்கள் காலத்தில் தொகுக்கப்பட்ட குர்ஆன் உலகில் உண்டா?" என்ற கட்டுரை வெளியிட்டிருந்தார். அதற்கு மறுப்பளிக்கும் விதமாக இந்த கட்டுரையை ஏக இறைவனின் உதவியை நாடியவர்களாக துவங்குகிறோம்.

Source

உமர்:

கட்டுரையின் மூலத் தொடுப்பை கொடுக்க பயந்து, குர்‍ஆனின் மூலத்தைப் பற்றி எழுதவந்துவிட்டீர்களா?

இஸ்லாமிய நண்பர்களாகிய ஜியா அவர்களே, மற்றும் அப்சர் அவர்களே, எந்த தளத்தில் என் கட்டுரையை படித்தீர்கள்? அதன் தொடுப்பு எங்கே? "அல்லாஹ்வின் திருப்பெயரால்..." என்று ஆரம்பித்து வஞ்சிக்க வந்துவிட்டீர்களா? நீங்கள் படித்த என் கட்டுரையை உங்கள் கட்டுரையை படிக்கும் வாசகர்கள் படிக்கவேண்டாமா? நீங்கள் மட்டும் படித்தால் போதுமா?

நீங்கள் உண்மையை மறைத்து, உங்களுக்கு சாதகமாக தோன்றும் ஒரு சில வரிகளை மட்டும் பதித்து பதில் தருவீர்கள் என்று எல்லாருக்கும் தெரியுமே. நீங்கள் நேர்மையானவர்கள் தானா? நீங்கள் ஐந்து வேளை தொழுகை புரியும் இஸ்லாமியர்களா? "ஆம், நாங்கள் அல்லாஹ்வின் அடியார்கள், நேர்மையானவர்கள் தான்" என்று கூறுவீர்களானால், ஏன் மூல தொடுப்பை மறைக்கிறீர்கள்? மூல தொடுப்பை கொடுக்க பயப்படுகிறீர்கள்? உங்கள் இஸ்லா‌ம் மீது உங்களுக்கு நம்பிக்கையில்லையா?

நானும் கடந்த சில ஆண்டுகளாக சொல்லிக்கொண்டு தான் இருக்கிறேன், ஆனால், ஒரு ரோஷமுள்ள நேர்மையான இஸ்லாமிய அறிஞரை காணவில்லை. இந்த தமிழ் பேசும் மக்களுக்கு வந்த கதியை பாருங்கய்யா?  இஸ்லாமியர்கள் சொல்வதை மற்றவர்கள் படிக்கவேண்டும், ஆனால், உண்மையை மட்டும் தெரிந்துக்கொள்ளக்கூடாது, இது தானே இவர்களின் எண்ணம், இஸ்லாமை வாழவைக்க வந்தவர்களின் எண்ணம்?

நீங்கள் என் கட்டுரைகளுக்கு பதில் என்றுச் சொல்லி எழுதும் போதெல்லாம், நீங்கள் இப்படி நேர்மையற்ற முறையில் நடந்துக்கொள்கின்ற போதெல்லாம், நான் இப்படி சில வரிகளை எழுதி, உங்களுக்கு இதன் பிறகாவது நேர்மையாக எழுத விருப்பம் வரும் என்று எதிர்ப்பார்த்து இவைகளை பதிக்கிறேன். பார்க்கலாம் இந்த முறையாவது ரோஷம் வருமா?

சகோதரர்கள் ஜியா/அப்சர் எழுதியது:

வாசகர்களே, திரு உமர் அவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக அறிவித்த கருத்துகளை ஆராய்வதற்கு முன்னர், இஸ்லாமியர்கள் பைபிளின் நம்பகத்தன்மைக்கு எதிராக எழுப்பும் கேள்விகள்/கருத்துகளுக்கு இது வரையிலும் எந்த பதிலும் இல்லை என்பதை நினைவு படுத்திக்கொள்ள விரும்புகிறோம். இன்றுள்ள பைபிளின் மூல பிரதிகள் ஏசுவின் காலத்திற்கு எத்தனை நூற்றன்றுகள் கழித்து எழுதப்பட்டது? அப்படி எழுதப்பட்ட பைபிளுக்கும் இன்றுள்ள பைபிளுக்கும் எத்தனை பகுதிகள் மாறுபடுகின்றன, சேர்க்கப்பட்டுள்ளன, நீக்கப்பட்டுள்ளன? இதனை விவரிக்க திரு உமர் அவர்கள் முன்வருவாரா??

பார்க்க: பைபிள் முரண்பாடுகள்

உமர்:

பெரிய வலை வீசி நிறைய மீன்களை பிடிக்கனுமா? (அ) ஒரு தூண்டில் போட்டு காத்துக்கொண்டு இருக்கவேண்டுமா?

ஈஸா குர்‍ஆன் தளத்தில் இதுவரை 280க்கும் அதிகமான கட்டுரைகள் மறுப்புக்கள் பதிக்கப்பட்டுள்ளன. அதற்கெல்லாம் பதிலைச் சொல்லாமல், அவர்கள் கூறும் பைபிள் மீதான குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லச் சொல்கிறார்கள் சகோதரர் ஜியாவும் அப்சரும்.

என் நண்பர் ஒருவர் இப்படியாக கூறினார், "ஏன் நத்திலியை பிடிக்கிறாய், திமிங்கிலத்தை பிடிக்கலாம் அல்லவா?" என்றார், அது என்ன திமிங்கிலம்... நத்திலி என்று குழப்பமாக இருக்கிறதா?

திமிங்கிலமா நத்திலியா?

நம் தமிழ் நாட்டில் சில சிறிய மீன்கள், தங்கள் விஷயங்களை ஒரு பெரிய திமிங்கிலத்திலிருந்து பெருகின்றன, புரியவில்லையா? அதாவது பீஜே அவர்கள் எழுதிய "இயேசு இறைமகனா?", "இது தான் பைபிள்" போன்ற புத்தகங்களிலிருந்து தான் விவரங்களை எடுக்கின்றனர், அவைகளை பதிக்கின்றனர். எனவே, முதலாவது பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" மற்றும் அவரது இதர எழுத்துக்களுக்கு பதிலை கொடுத்தால், அதுவே மற்றவர்களுக்கும் பதிலாக அமையும்.

ஆகையால் தான், நான் உங்களின் மற்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில்களை எழுதுவதை தாமதப்ப‌டுத்தி, பீஜே அவர்களுக்கு பதில் அளிக்க முனைந்துள்ளேன். இப்போது சொல்லுங்க, திமிங்கிலத்தை வலை போட்டு பிடிப்பது நல்லதா, அல்லது நத்திலி மீனை ஒரு தூண்டில் போட்டு பிடிப்பது சிறந்ததா?

உண்மையிலேயே உங்களுக்கு உங்கள் கட்டுரையின் மீது நம்பிக்கை இருக்குமானால், எங்கள் கேள்விக்கு உலகில் எந்த கிறிஸ்தவரும் இதுவரை பதிலை கொடுக்கவில்லை என்ற நம்பிக்கை இருக்குமானால், உங்களுக்கு நான் ஆன்சரிங் இஸ்லாம் ஆங்கில தளத்தை (http://www.answering-islam.org/) அறிமுகப்படுத்துகிறேன். அதில் உலகத்தில் இருக்கும் பெரிய பெரிய திமிங்கிலத்தை வாயில் போட்டு, மென்று விழுங்கியிருக்கிறார்கள், ஆயிரக்கணக்கான கட்டுரைகள், செய்திகள் மறுப்புக்களை காணலாம். முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, என் கட்டுரைகளை நான் தயார் படுத்துகிறேன். உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்தால், அதில் சென்று படியுங்கள், உங்கள் கண்கள் தெளிவாக்கப்படும்.

நீங்களே சொல்லுங்க..பீஜே அவர்களின் புத்தகங்களுக்கு பதிலை அளிப்பது சரியா? அல்லது அந்த புத்தகங்களிலிருந்து சுட்டதை பதிக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு பதில் அளிப்பது சரியா? இருந்தாலும், உங்களையும் விடப்போவதில்லை... சுட்டபழத்திற்கும் பதில் கிடைக்கும், சுடாத பழத்திற்கும் (உங்கள் சொந்த தயாரிப்பிற்கும்!) பதில் கிடைக்கும். தற்போதைய பதில் உங்கள் சொந்த தயாரிப்பிற்கு கிடைக்கும் என்னுடைய பரிசு ஆகும்

ஆக, அதிகமாக சத்தம் போட்டது போதும், உருப்படியாக பதில் எழுதுவதை பாருங்க... 

இன்னும் இருக்கின்ற இரண்டு மாதங்களில் பீஜே அவர்களின் குறைந்தது 10 குற்றச்சாட்டுகளுக்காவது பதிலை அளிக்க நான் முடிவு செய்துள்ளேன்.

இப்போது இரண்டாவது குற்றச்சாட்டுக்குச் செல்வோம்::


இரண்டாம் குற்றச்சாட்டு: ஒரு பிபிசி செய்தியின் மூலமாக ஒரு கிறிஸ்தவரே எனக்கு பதிலை ஏற்கனவே கொடுத்துள்ளாராம்.

இஸ்லாமியர்களுக்கு பொதுவாக மதவிஷயங்களில் நகைச்சுவை உணர்வு குறைவு, ஆனால், அவர்கள் செய்வதெல்லாம் மற்றவர்களுக்கு நகைச்சுவையாகவே இருக்கும்.

பிபிசி என்ற இணைய செய்தித்தளத்தில் ஒரு கிறிஸ்தவரே எனக்கு ஏற்கனவே பதில் அளித்துள்ளாராம். இதற்கு ஒரு ஆதார செய்தியையும் இவர்கள் காட்டுகிறார்கள்.

இந்த வேடிக்கையை நிதானமாக படியுங்கள்.

சகோதரர்கள் ஜியா/அப்சர் எழுதியது:

இப்படி பைபிளை பற்றி வாய் திறக்க மறுக்கும் திரு உமர் அவர்கள் குரானை பற்றி அவதூறுகளை பரப்பி வருகிறார். இதற்கு பதிலளிக்கும் விதமாக திரு உமர் அவர்கள் முன் வைத்த கேள்விக்கு/ போலியான கருத்துக்கு கிறிஸ்தவர்களே பதிலளிக்கிறார்கள். BBC யை சேர்ந்த கிறிஸ்தவர் Ian MacWilliam வெளியிட்டது.

பார்க்க: கலிFபா உத்மான் அவர்கள் தொகுத்த குர்ஆன்

இதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது "It was completed in the year 651, only 19 years after Muhammad's death. " முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறந்து பத்தொன்பது ஆண்டுகளுக்குள் தொகுக்கப்பட்டதென்று.

மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, "Othman was murdered by a rebellious mob while he was reading his book. A dark stain on its pages is thought to be the caliph's blood ." அந்த குர்ஆன் மூல பிரதியில் இரத்த கரை போன்ற கரைகள் இருப்பதாகவும் அவை கலிFபா உத்மான் அவர்கள் கொல்லப்படும்போது ஏற்பட்ட கரையாக இருக்கலாம் என்று...

உமர்:

சகோதரர் ஜியா மற்றும் அப்சர் அவர்களின் கூற்றுப்படி, அவர்கள் காட்டிய பிபிசி செய்தியை/கட்டுரையை படித்தாலே போதுமாம், நான் கேட்ட கேள்விக்கு பதிலாக அமையுமாம்.

முதலாவது, நான் ஜியா/அப்சர் அவர்களிடம் கேட்கும் கேள்வி என்னவென்றால், "ஒரு ஆய்வுக் கட்டுரைக்கும், செய்தித்தாளில் வரும் ஒரு செய்திக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? " என்பதாகும்.

ஆய்விற்கும் செய்திக்கும் இடையே இருக்கும் அடிப்படை வித்தியாசம் பற்றிய அடிப்படை அறிவே இல்லாமல் எழுத வந்துவிட்டீர்கள், மட்டுமல்லாமல் என் நேரத்தையும் வீணடிக்கிறீர்களே, இது உங்களுக்கே நியாயமா தெரிகின்றதா?

இரண்டாவதாக, அந்த செய்திய வெளியிட்ட "Ian MacWilliam" என்பவர் "தான் ஒரு ஆய்வு செய்து கண்டுபிடித்த உண்மைகள் இவைகள்" என்றுச் சொல்லியுள்ளாரா? அல்லது பலரிடம் கேட்டு மேலோட்டமான செய்தியை கூறியுள்ளாரா? இதனை நான் இப்போது உங்களுக்கு விளக்குவேன்.

மூன்றாவதாக கேட்கவிரும்பும் கேள்வி: ஒழுங்காக உங்கள் இருவருக்கும் ஒரு பக்கம் இருக்கும் ஆங்கிலச் செய்தியை படித்து புரிந்துக்கொள்ள முடியுமா? என்பதாகும்.

ஏன் இப்படி கேட்கிறேன் என்று என் மீது யாரும் கோபம் கொள்ளவேண்டாம், மக்களை ஏமாற்ற இஸ்லாமிய அறிஞர்கள் எவ்வளவு பெரிய பொய்யையும் மறைத்து எழுதுவார்கள். கண்டுபிடிக்கப்பட்டால் வெட்கப்படவேண்டி வருமே என்ற உணர்வே அவர்களுக்கு இல்லை. "நாங்கள் கொடுக்கும் ஆங்கில தொடுப்பை யார் படித்து பார்க்கப்போகிறார்கள், யார் ஒவ்வொரு வரியையும் படித்து நமக்கு பதில் சொல்லப்போகிறார்கள்" என்ற "மிதமிஞ்சிய நம்பிக்கை" அவர்களை இவ்வளவு கீழ்தரமாக எழுதவும், நடக்கவும் வைக்கிறது.

சரி, அவர்களின் பிபிசி கட்டுரையை சிறிது அலசுவோமா?

பாவம் இஸ்லாமியர்கள், எது தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறார்களோ, அதுவே அவர்களுக்கு தலைவலியாக மாறுகிறது...

அவர்கள் கொடுத்த பிபிசி கட்டுரையின் தொடுப்பு: http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/4581684.stm

அவர்கள் கொடுத்த கட்டுரையின் தலைப்பு: Tashkent's hidden Islamic relic

"தாஷ்கண்டில் மறைக்கப்பட்டிருக்கும்/ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய பழமை வாய்ந்த சின்னம்"

கட்டுரையின் தலைப்பைப் பார்த்தால், இஸ்லாமுக்கு சாதகமாக எழுதியதாக தெரியவில்லை, அதற்கு எதிராக எழுதியதாக தெரிகிறது, அதாவது இஸ்லாமுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் ஒரு பழைய குர்‍ஆனை இப்படிப்பட்ட இடத்திலா அக்கரையில்லாமல் வைப்பது அல்லது மறைத்துவைப்பது என்பது போல, இக்கட்டுரை உள்ளது. ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஒருமுறை அந்த தொடுப்பை சொடுக்கி படியுங்களேன், பிளீஸ். இது உமரின் தாழ்வான வேண்டுகோள்.

சரி, அக்கட்டுரையின் முதல் வரியை பார்ப்போமா?

பிபிசி நிருபர்:

In an obscure corner of the Uzbek capital, Tashkent, lies one of Islam's most sacred relics - the world's oldest Koran.

ஜியா/அப்சர் அவர்களின் பிபிசி நிருபர் எழுதிய தலைப்பில் உள்ள ஒரு வார்த்தையை "Obscure" கவனிப்போம், அதன் பொருளை "http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp" என்ற அகராதியிலிருந்து எடுத்தேன்.

உம‌ர்:

அதாவது உலகின் பழமை வாய்ந்த இஸ்லாமிய புனிதச் சின்னமாகிய குர்‍ஆன், ஒரு தெளிவற்ற, உலகம் அறியக்கூடாத இடத்தில், வைக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், "ஒரு அதிமுக்கியமான ஒரு பொருளை முக்கியமற்ற இடத்தில் மறைக்கப்பட்டுள்ளது" என்பதாகும்.

சகோதரர் ஜியா மற்றும் அப்சர் அவர்களே, என்ன உங்க பிபிசி கிறிஸ்தவ நிருபர் சொல்வது உங்களுக்கு விளங்குதா?

சரி, போகட்டும், இந்த கட்டுரையில் அவர் கூறவருவதை அவர் ஆய்வு நடத்திச் சொல்கிறாரா? அல்லது செய்திகளை சேகரித்துச் சொல்கிறாரா? என்பதை பார்ப்போம்.

இந்த பிபிசி நிருபருக்கு யார் இந்த விவரங்களை கூறினார்கள் என்று பார்த்தால், அந்த பகுதியில் வசிக்கும் ஒரு பெரிய இஸ்லாமிய அறிஞரின் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு இளம் உதவியாளர்.

பிபிசி நிருபர்:

The Mufti of Uzbekistan, the country's highest religious leader, has his offices there, in the courtyard of an old madrassa.
. . . .
"There are approximately 20,000 books and 3000 manuscripts in this library," said Ikram Akhmedov, a young assistant in the mufti's office .

நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், ஒரு செய்தித்தாளில் வரும் செய்தியை வைத்துக்கொண்டு, ஏதோ பெரிய ஆய்வு செய்து அனேக ஆண்டுகள் கஷ்டப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையை போல, பாசாங்கு செய்யும் ஜியா அப்சர் போன்றவர்களின் ஆய்வை என்னவென்றுச் சொல்ல.

பிபிசி நிருபர்:

Sacred verses

The Othman Koran was compiled in Medina by Othman, the third caliph or Muslim leader.

Before him, the sacred verses which Muslims believe God gave to Muhammad were memorised, or written on pieces of wood or camel bone.

உமர்:

மேலே உள்ள வரிகளில் " Before him, the sacred verses which Muslims believe God gave to Muhammad " என்பதை கவனிக்கவும். அதாவது செய்திகளைச் சொல்லும்போது, முக்கியமாக மதங்கள் பற்றிய செய்திகளைச் சொல்லும்போது, "இஸ்லாமியர்களின் நம்பிக்கையின் படி (Muslims believe) " என்று எழுதினால், அதன் அர்த்தம் என்ன? அதை எழுதுபவருக்கு அதன் மேல் நம்பிக்கை இல்லை என்று அர்த்தம் அல்லது அதைப் பற்றி அவருக்கு சரியாக தெரியாது, ஆனால், இஸ்லாமியர்களின் நம்பிக்கை அப்படி உள்ளது என்று நாசுக்காக சொல்லி முடித்துவிடுவார்கள்.

அய்யா ஜியா மற்றும் அப்சர் அவர்களே, உங்கள் நிருபர் சொல்கிறார் "அல்லாஹ் தம்முடைய வசனங்களை இறக்கியது பற்றி அவர் எழுதியது, இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படியாம், தம்முடைய நம்பிக்கையின்படி இல்லையாம் ", இப்போதாவது தெரிகின்றதா?

"முஹம்மதுவிற்கு வசனங்கள் இறைவனிடமிருந்து வந்தது என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்களாம்".

அடுத்ததாக, நம் சகோதரர்கள் மேற்கோள் காட்டிய வரிகளைக் காண்போம், ஆனால்,அவர்கள் வேண்டுமென்றே காட்ட விரும்பாத வரிகளையும் பாருங்கள்.

பிபிசி நிருபர்

To prevent disputes about which verses should be considered divinely inspired, Othman had this definitive version compiled. It was completed in the year 651, only 19 years after Muhammad's death.

பிபிசி நிருபர் சொல்கிறார், "எந்த வசனங்கள் இறைவனின் வசனங்கள், எவைகள் இறைவன் இறக்காத வசனங்கள் என்ற சண்டையை நிறுத்த, குழப்பத்தை தீர்க்க உஸ்மான், ஒரு பிரதியை உண்டாக்கினாராம்"..இந்த வரிகளை நம் இஸ்லாமியர்கள் நமக்கு காட்ட மறந்துவிட்டார்கள் போலும்.

ஆக, எது சுட்ட பழம் எது சுடாத பழம் (இறைவசனம், இறைவசனம் இல்லை) என்ற சண்டையை தீர்க்க உஸ்மான் ஒரு பிரதியை உருவாக்கினார் என்பதை கூறுகிறார் நிருபர்.

இந்த நிருபர், அந்த வாலிய உதவியாளர் சொன்னதைக் கேட்டு அப்படியே எழுதியுள்ளார். பல ஆண்டு கால ஆய்வை மேற்கொண்டு பிறகு தன் முடிவைச் சொல்லவில்லை. "நீ சொல்லும் விவரத்தை நான் நம்பமாட்டேன், நான் ஆய்வு நடத்தி, பிறகு தான் முடிவு செய்வேன், அது உஸ்மான் குர்‍ஆனா இல்லையா?" என்று அவர் கூறியிருந்தால். இந்த செய்தி உங்கள் கைக்கு வந்திருக்காது, அவ்வளவு ஏன், அவர் அந்த நாட்டிலிருந்து இனி செய்திகள் சேகரிப்பது ஒரு முடிவிற்கு வந்திருக்கும்.

பிபிசி நிருபர்:

About one-third of the original survives - about 250 pages - a huge volume written in a bold Arabic script.

"The Koran was written on deerskin," said Mr Akhmedov. "It was written in Hejaz in Saudi Arabia, so the script is Hejazi, similar to Kufic script."

உம‌ர்:

என்னுடைய வேலையை சுலபமாக்குவதே இஸ்லாமியர்களுக்கு ஒரு வேலையாக போச்சு.

என்னுடைய அடுத்த கட்டுரை "பீஜே அவர்கள் கூறுவது போல, இந்த பழமை வாய்ந்த குர்‍ஆனிலிருந்து பிரதி எடுத்து, அவைகளை முஸ்லீம்களின் கையில் கொடுத்தால், அதில் 114 அத்தியாயங்கள் இருக்காது"... என்பது பற்றியது தான்...

இந்த விஷயத்தை இப்போதே சொல்லும் படி ஜியா/அப்சர் எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கிவிட்டார்கள். அதாவது, உங்கள் பிபிசி நிருபர் கூறியது படி, மூன்றில் ஒரு பாகம் குர்‍ஆன் தான் அந்த அருங்காட்சியகத்தில்  குர்‍ஆன் பிரதியில் உள்ளதாம், முழு குர்‍ஆன் இல்லையாம்.

இப்போது உங்களுக்கு என் முந்தைய கட்டுரையின் தலைப்பை ஒருமுறை மறு பதிவு செய்கிறேன்:

பீஜேவிற்கு கேள்வி: உஸ்மான் காலத்து குர்‍ஆன் இன்று உலகில் உண்டா?

பழமைவாய்ந்த "குர்‍ஆனின் முழு கையெழுத்து" பிரதி ஹிஜ்ரி 200 அல்லது கி.பி. 800 க்கு சம்மந்தப்பட்டது

Koran: Earliest complete manuscript 200 AH or 800AD!

இந்த தலைப்பில் "குர்‍ஆனின் முழு கையெழுத்துப் பிரதி" என்ற வார்த்தைகளை பார்க்கவும். இதில் முக்கியமாக "முழு (Complete) " என்ற வார்த்தையை கவனிக்கவும்.

அடுத்த கட்டுரையில் "எத்தனை அதிகாரங்கள் கையெழுத்துப் பிரதியில்" இருக்கிறது என்பது பற்றி நான் விளக்குகிறேன். மற்றும் அந்த பிரதி எந்த எழுத்துவடிவில் உள்ளது என்பதை இன்னும் விவரமாக விளக்குவேன்.

பிபிசி நிருபர்:

It is said that Caliph Othman made five copies of the original Koran. A partial Koran now in the Topkapi Palace in Istanbul is said to be another of these original copies.

உமர்:

செய்திக்கும் ஆய்விற்கும் வித்தையாசத்தை கொடுக்கும் வார்த்தைகளை நான் உங்கள் முன் வைக்கிறேன். நன்றாக பாருங்கள் "It is said", "is said to be"என்ற வார்த்தைகள் வந்துள்ளது. இதையே ஒருவர் ஆய்வு செய்து சொல்லியிருந்தால், அதிகாரபூர்வமாக கூறுவார். ஆனால், இந்த செய்தியில் "கூறப்பட்டது, சொல்லப்பட்டது" என்று கூறுகிறார். இதை வேறுவிதமாக சொல்லவேண்டுமென்றால் "இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி (என்னுடைய ஆய்வின் படி அல்ல)" என்று சொல்லவேண்டும்.

ஆக, ஜியா மற்றும் அப்சர் தொடர்ந்து படித்துக்கொண்டு இருக்கிறீர்களா அல்லது ஏற்கனவே இந்த என் கட்டுரையை படிப்பதை நிறுத்திவிட்டு சென்றுவிட்டீர்களா?

ஆனால், நீங்கள் காட்டிய தொடுப்பிலிருந்து விவரங்களை கொடுப்பதை நான் இன்னும் முடிக்கவில்லை.

இரத்தக்கறை பற்றி என்ன சொல்கிறார் உங்கள் நிருபர் என்பதை பாருங்கள்:

பிபிசி நிருபர்:

Historical text

Othman was murdered by a rebellious mob while he was reading his book. A dark stain on its pages is thought to be the caliph's blood.

அந்த இரத்தகறை "காலிபாவின் இரத்தகறையாக இருக்கும் என்று எண்ணுகின்றார்களாம்".. யார் இப்படி எண்ணப்போகிறார்கள்.. உங்களைப்போன்ற இஸ்லாமியர்கள் தான்...

இதனை அவர் " A dark stain on its pages is thought to be the caliph's blood " என்ற வார்த்தைகளோடு சொல்கிறார், இதில் "is thought to be" என்பது மிகவும் முக்கியமான விவரமாகும்.

இன்னும் சிறிது கொஞ்சம் கூர்ந்து படித்தால், அந்த நிருபர் சொல்லவருவது என்ன தெரியுமா? அந்த "A dark stain" என்பது காலிபாவின் இரத்தமாக இருக்கலாம் என்று மற்றவர்கள் எண்ணுகிறார்களாம். அவர் ஆய்வு செய்து இது இரத்தம் தான் என்றுச் சொல்லவில்லை, அந்த கருப்பு நிறத்தில் இருக்கும் அந்த வண்ணம் இரத்தமாக இருக்கலாம் என்று மற்றவர்கள் எண்ணுகின்றார்கள் என்று கூறுகிறார்.

நீங்கள் மேற்கோள் காட்டிய பிபிசி கட்டுரையை இதோடு முடித்துக்கொள்கிறேன்.

ஆனால், தீபாவளி போனஸ்ஸாக, சாரி பக்ரீத் போனஸ்ஸாக, ஒரு சில செய்திகளை அதே பிபிசி செய்தி தளத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறேன். இதனை நான் சொல்வதற்கு காரணம் என்னவென்றால், பொதுவாக செய்தித்தாளில் ஒரு செய்தியாக வரும் விவரங்களை "பட்டும் படாமலுமாக வெளியிடுவார்கள்", அதாவது "இஸ்லாமியர்களின் நம்பிக்கையின் படி", "கிறிஸ்தவர்களின் நம்பிக்கையின் படி" என்று பலவாறு கூறி நழுவி விடுவார்கள். அதே செய்தித்தாளில், ஒரு ஆய்வு செய்த ஆராய்ச்சியாளரின் கட்டுரை வெளிவருமானால், சிறிது சிந்தித்துப் பார்க்கலாம். பொதுவாக கூறப்படும் செய்திகளை நாம் ஆய்வு செய்து தான் ஏற்கவேண்டும். அதை ஒரு உண்மையாக நினைத்து, சத்தியத்தை மறைத்து இஸ்லாமை காப்பாற்றவேண்டும் என்ற உங்கள் எண்ணம் சரியானது அல்ல.

உண்மையாக ஆய்வு செய்து வெளியிடப்படும் அனேக ஆய்வுகள், புத்தகங்கள் உள்ளன. அவைகளை படித்து நாமும் ஆய்வு செய்து எழுதுவதை விட்டுவிட்டு, "இதோ நாங்களும் மறுப்பை தருகிறோம்" என்று மார்பு தட்டிக்கொண்டு வருவது சரியானது அல்ல.

சில உதாரணங்கள்: செய்திகளின் யுக்தி:

இஸ்லாமிய முகப்புப்பக்கத்தில் "Muslims believe" என்ற சொற்றொடரை பார்க்கவும்:

Home page : http://www.bbc.co.uk/religion/religions/islam/

Muslims believe that there is only one God. The Arabic word for God is Allah.

ஓ பிபிசி செய்தித்தாளில், ஒரே ஒரு இறைவன் அவன் அல்லாஹ் என்று கூறியுள்ளார்கள் பார்த்தீர்களா என்று பெருமைப்பட்டுக்கொண்டால், எல்லாரும் உங்களை கேவலமாக பார்ப்பார்கள்.

குர்‍ஆன் அறிமுகம் பக்கத்தில் " Muslims believe that the text we have today was established shortly after the death of the Prophet by the Caliph Uthman " என்ற சொற்றொடர்களை கவனிக்கவும்:

Quran Introduction: http://www.bbc.co.uk/religion/religions/islam/texts/quran_1.shtml

Some Qur'anic fragments have been dated as far back as the eighth, and possibly even the seventh, century. The oldest existing copy of the full text is from the ninth century.

Although early variants of the Qur'an are known to have existed, Muslims believe that the text we have today was established shortly after the death of the Prophet by the Caliph Uthman.

இவைகளே போதுமென்று நினைக்கிறேன்.. இதுக்குமேலே நீங்க தாங்க மாட்டீங்க. அடுத்த குற்றச்சாட்டிற்கு செல்வோமா?


முன்றாம் குற்றச்சாட்டு: என் கட்டுரையில் நான் எனக்கே தெரியாமல் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளேனாம்.

முழுவதுமாக படித்து புரிந்துக்கொண்டு மறுப்பு எழுதும் பழக்கம் நம்முடைய இஸ்லாமிய சகோதரர்களுக்கு இல்லை என்பதை அவர்கள் சரியாக நிருபித்து இருக்கிறார்கள். இப்போது அவர்களின் கடைசி குற்றச்சாட்டைக் காண்போம்.

சகோதரர்கள் ஜியா/அப்சர் எழுதியது:

திரு உமர் அவர்கள் வெளியிட்டது...

"நம்மிடம் இப்போது இருக்கும் பழமை வாய்ந்த குர்‍ஆன் கையெழுத்துப் பிரதிகள், அவைகள் முழுமையானவைகளாக இருந்தாலும், குர்‍ஆனின் ஒரு பகுதியாக இருந்தாலும், அவைகள் அனைத்தும் ஹிஜ்ராவின் இரண்டாம் நூற்றாண்டுக்கு பிறகு எழுதப்பட்ட பிரதிகளேயாகும் (அல்லது கி.பி. 800க்கு பிறகு). உலக இஸ்லாமிய பெருவிழாவில் பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தில் காட்டப்பட்ட குர்‍ஆன் பிரதியானது ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டின் கடைசி காலத்திற்கு சம்மந்தப்பட்டதாகும். இருந்தபோதிலும், சில பழமைவாய்ந்த குர்‍ஆன் கையெழுத்துபிரதி துண்டுகள் ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிற்கு சம்மந்தப்பட்டவைகளாகும்."(Grohmann, A.: Die Entstehung des Koran und die altesten Koran- Handschriften', in: Bustan, 1961, pp. 33-8)

திரு உமர் அவர்களே, இப்படி உங்களை அறியாமலேயே நீங்கள் உண்மையை ஒப்பு கொள்கிறீரே!!! ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டு என்றால் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா? முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் (இடம்பெயர்தல்) செய்தார்களே அந்த ஆண்டிலிருந்து துவங்குகிறது. முஹம்மது நபி (ஸல் ) அவர்கள் ஏறக்குறைய ஹிஜ்ரத் செய்து பதினோரு ஆண்டுகள் கழித்து மரணிக்கிறார். உங்களின் ஆதாரப்படியே, முஹம்மது நபி ஸல் அவர்கள் மரணித்து தொண்ணூறு ஆண்டுகளுக்குள்ளாக எழுதப்பட்ட கையெழுத்து பிரதி இன்றளவும் பாதுகாக்கப்படுகிறது.

உமர்:

என் கட்டுரையின்பெயர் என்ன? நான் எவைகளை என் கட்டுரையில் சொல்கிறேன். நான் எவைகளை மேற்கோள் காட்டுகின்றேன், போன்றவற்றையெல்லாம் படித்து எழுத இவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. முஹம்மது புரிந்துக்கொண்டது போல அறைகுறையாக புரிந்துக் கொண்டு எழுதுவது இவர்களுக்கு வழக்கமாக ஆகிவிட்டது.

என் கட்டுரையின் தலைப்பை இவர்கள் சரியாக படித்து புரிந்துக்கொண்டார்களா என்பது சந்தேகம்.

என் கட்டுரையின் தலைப்பு:

பீஜேவிற்கு கேள்வி: உஸ்மான் காலத்து குர்‍ஆன் இன்று உலகில் உண்டா?

பழமைவாய்ந்த "குர்‍ஆனின் முழு கையெழுத்து" பிரதி ஹிஜ்ரி 200 அல்லது கி.பி. 800 க்கு சம்மந்தப்பட்டது

Koran: Earliest complete manuscript 200 AH or 800AD!

முழுவதற்கும், துண்டுக்கும் வித்தியாசம் இவர்களுக்குத் தெரியுமா? (Complete manuscript Vs Fragments)

என் தலைப்பில் மிகவும் தெளிவாக "முழு கையெழுத்துப் பிரதி" என்று கூறியுள்ளேன். ஆங்கிலத்தில் "Complete manuscript" என்று எழுதியுள்ளேன். இதன் பொருள் என்னவென்றால், கி.பி. 800க்கு முன்பு (அதாவது ஹிஜ்ரி 200க்கு முன்பு) எழுதப்பட்ட "முழு கையெழுத்துப் பிரதி" உலகில் எங்கேயாவது உண்டா? என்பது தான் கேள்வி. இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால், "குர்‍ஆனின் முதல் அத்தியாயம் முதல் வசனத்திலிருந்து கடைசி அத்தியாயம் (114) கடைசி வசனம் வரை உள்ள ஒரு கையெழுத்துப் பிரதி, அதுவும் ஹிஜ்ரி 200க்கு முன்பு எழுதப்பட்ட பிரதி உலகில் உண்டா"? என்பதாகும்.

இரண்டாவதாக, ஒரு இஸ்லாமியருடைய மேற்கோளை நான் எடுத்துக்காட்டினேன். அதில் தெளிவாக எழுதப்பட்ட விவரத்தை புரிந்துக்கொள்ளாமல், "உண்மையை நானாகவே எனக்கு தெரியாமல் ஒப்புக்கொண்டேனாம்", இதனை இவர்கள் கண்டுபிடித்து சொல்லியுள்ளார்கள். இப்போது அதனைப் பற்றி பார்ப்போம்.

நான் மேற்கோள் காட்டியவைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் காண்போம்:

இருந்தபோதிலும், சில பழமைவாய்ந்த குர்‍ஆன் கையெழுத்துபிரதி துண்டுகள் ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிற்கு சம்மந்தப்பட்டவைகளாகும்.

However, there are also a number of odd fragments of Qur'anic papyri available, which date from the first century

Source: http://isakoran.blogspot.com/2011/10/200-800.html

மேலே சொல்லப்பட்டவைகள் "முழு குர்‍ஆன் கையெழுத்துப் பிரதிகள் அல்ல, அவைகள் கையெழுத்துப் பிரதி துண்டுகள்", அதாவது ஆங்கிலத்தில் "Fragments" என்றுச் சொல்வார்கள்.

உதாரணத்திற்கு: ஒரு வசனமோ, அறைவசனமோ, அல்லது ஒரு சில வசனங்களோ உள்ள ஒரு சிறிய துண்டு ஆகும். இதைத் தான் Fragments என்பார்கள்.

இந்த துண்டுகள் தான் ஹிஜ்ரி முதல் நூற்றாண்டுக்கு சம்மந்தப்பட்டு உள்ளன என்று அந்த இஸ்லாமிய அறிஞர் கூறியதை நான் மேற்கோள் காட்டினேன். ஹிஜ்ரி என்றால் என்ன என்று கூட தெரியாமல் நான் எழுதவில்லை. ஆகையால் தான் Fragments என்ற ஆங்கில‌ வார்த்தையின் மொழியாக்கமாக "துண்டுகள் " என்று எழுதினேன்.

"குர்‍ஆனின் அறிமுகம்" என்ற தலைப்பில், அதே பிபிசி செய்தித் தளம் வெளியிட்ட செய்தியின் ஒரு பகுதியை மறுபடியும் இங்கு மேற்கோள் காட்டுவது சிறந்தது.

Quran Introduction: http://www.bbc.co.uk/religion/religions/islam/texts/quran_1.shtml

Some Qur'anic fragments have been dated as far back as the eighth, and possibly even the seventh, century. The oldest existing copy of the full text is from the ninth century.

மேலே கண்ட வரிகளில், இஸ்லாமியர்களின் பொய்யை உலகிற்கு எடுத்துச் சொல்லும் விவரம் ஒன்று உண்டு, அதனைத் தான் நானும் எழுதினேன், பாவம் இவர்கள் எனக்கு ஒரு தளத்தைக் கொடுத்து உதவினார்கள்.

மேலேயுள்ள வரிகளில், அறைகுறை வசனங்கள் கொண்ட குர்‍ஆன் கையெழுத்து துண்டுகள், 7 அல்லது 8ம் நூற்றாண்டுக்கு சம்மந்தப்பட்டு உள்ளன. ஆனால், முழு குர்‍ஆன் கையெழுத்துபிரதி மட்டும் , 9ம் நூற்றாண்டுக்கு சம்மந்தப்பட்டது என்றுச் சொல்கிறது, அதாவது ஹிஜ்ரி 200க்கு (கி.பி.800க்கு) பிறகு எழுதப்பட்ட முழு கு‍ர்‍ஆன் பிரதிகள் மட்டுமே உள்ளன.

ஆனால், பீஜே போன்ற இஸ்லாமியர்கள் சொல்லும் பொய் என்ன? உஸ்மான் தயாரிப்பில் வெளியான இரண்டு பிரதிகள் அப்படியே இரண்டு இடங்களில் பாதுகாக்கப்பட்டு இருக்கின்றனவாம். ஆனால், இவ்விரு பிரதிகளும் ஹிஜ்ரி 200க்கு முந்தையதா என்று கேட்டால், "இல்லை" என்பது தான் பதில். மற்றும் இவ்விரு இடங்களில் உள்ள அந்த குர்‍ஆன் பிரதிகள் "முழுவதுமாக உள்ளதா?" அதாவது 114 அத்தியாயங்கள் கொண்டுள்ளதா? என்று கேள்வி கேட்டால்... அதற்கும் பதில் இல்லை...

சகோதரர் ஜியா மற்றும் அப்சர் அவர்கள் ஒழுங்காக படித்து எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சரி, இப்போது சுருக்கமாகச் சொல்கிறேன்:

1) "குர்‍ஆனின் முழு கையெழுத்துப் பிரதி, அதுவும் கி.பி. 800க்கு முன்பு எழுதப்பட்ட முழு பிரதி" உலகில் எந்த அருங்காட்சியகத்திலாவது உண்டா? (மூக்கு கண்ணாடி இருந்தால், கண்களில் மாட்டிக்கொண்டு "முழு" என்ற வார்த்தையை கவனமாக படிக்கவும்)

2) அதே நேரத்தில், அறைகுறையாக, அல்லது ஒரு சில வசனங்களைக் கொண்ட "துண்டுகள்" அதாவது இங்கொன்று அங்கொன்று என்று வசனங்களைக் கொண்ட Fragments என்கின்ற துண்டுகள், ஹிஜ்ரி முதல் நூற்றாண்டுக்கு சம்மந்தப்பட்டவைகள் உள்ளன என்பதைத் தான் நாங்கள் சொல்லியுள்ளோம்.

எனவே இஸ்லாமிய அறிஞர்களே, ஒழுங்காக படியுங்கள், நேர்மையாக நடந்துக்கொள்ளுங்கள், மூல தொடுப்புகளை கொடுத்து உங்கள் நேர்மையை நிருபித்துக்கொள்ளுங்கள்.

முடிவுரை:

இந்த கட்டுரையில் சகோதரர் ஜியா மற்றும் அப்சர் அவர்கள் பயந்துப்போய், என் கட்டுரையின் தொடுப்பை கொடுத்தால் இஸ்லாமுக்கு ஆபத்து என்பதை கவனத்தில் கொண்டவர்களாக முன்வைத்த மூன்று குற்றச்சாட்டுகளுக்கு பதிலை கொடுத்துள்ளேன். இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால், மறுபடியும் தொடர்ச்சியாக இக்கட்டுரை தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவர்களின் உதவிக்கு வந்த பிபிசி நிருபரின் கட்டுரை இவர்களையே பதம் பார்த்ததை வாசகர்கள் கவனத்தில் கொள்ளவும். இஸ்லாமியர்கள் எந்த ஒரு விஷயத்தைச் சொன்னாலும் நாம் உடனே அதனை ஆய்வு செய்து சரிபார்க்கவேண்டும், அப்போது நிச்சயமாக அவர்கள் மறைத்த உண்மை வெளியே வரும்.

இது வெறும் ஆரம்பம் தான்... இன்னும் குர்‍ஆனின் மூலப்பிரதியின் ஆய்வு தொடரும்...


 

7 கருத்துகள்:

Colvin சொன்னது…

நல்லதொரு தொடக்கம். ஜியா அப்ஸ் சகோதரர்கள் பதில்கள் என்ற பெயரில் இஸலாத்தையும் அல்லாவையும் முகமதுவையும் காட்டிக் கொடுக்கும் வேலைகளையே செய்து வருகின்றனர்.

Archies சொன்னது…

"//சரி, இதுவரை இஸ்லாமியர்கள் எழுதியவைகளுக்கு பதிலை அளித்துக்கொண்டு இருந்த என்னை, ஒரு பிபிசியின் செய்தியை படித்து இஸ்லாமியர்களுக்கு விளக்கவேண்டிய வேலையையும் நமது அன்பு சகோதரர்கள் திரு ஜியா அவர்களும், சகோதரர் அப்சர் அவர்களும் அளித்துள்ளார்கள்.//"


நுணலும் தன் வாயினால் கெடும் என்பது இதுதானோ?


கோல்வின் சகோதரா! சரியாக சொன்னீர்கள்.

Archies சொன்னது…

Umar:
"//ஆக, ஜியா மற்றும் அப்சர் தொடர்ந்து படித்துக்கொண்டு இருக்கிறீர்களா அல்லது ஏற்கனவே இந்த என் கட்டுரையை படிப்பதை நிறுத்திவிட்டு சென்றுவிட்டீர்களா?//"

Archies:
படிப்பதா? தலைப்பைப் பார்த்த உடனே ஓடி விட்டார்கள்

rameez சொன்னது…

இதற்கான மறுப்பை isaakoran.blogspot தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். அதற்கு இன்னும் உங்களிடமிருந்து பதில் ஏதும் இல்லை!!! பதிலை எழுதுவீர்கள் என நம்புகிறேன்?

பதில் எழுதவில்லையாயின் அர்சிஸ் அவர்கள் குறிப்பிட்டது உங்களை தான் என்றாகும்!!!
//Archies: படிப்பதா? தலைப்பைப் பார்த்த உடனே ஓடி விட்டார்கள்//

Isa Koran சொன்னது…

ரமீஜ் அவர்களே,

எங்கள் தளத்தின் தொடுப்பை அவர்கள் கொடுத்து தான் பதில் எழுதுகிறார்களா என்று கேட்டுப்பாருங்களேன், பிளீஸ். ஏன் என் தளத்தின் தொடுப்பை கொடுக்க அவர்களின் உள்ளாடைகள் நனைந்துவிடுகின்றது? இஸ்லாம் மீது அவ்வளவு அவநம்பிக்கையா அவர்களுக்கு? அவர்களுக்கு முஹம்மது மீதும், குர்‍ஆன் மீதும் நம்பிக்கை இல்லையா? ஏன் எவ்வளவு சொன்னாலும் சொரணையே இல்லாமல், துடைத்துப்போட்டுவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள், வெட்கமாக இல்லை.

பாவம், அவர்களால் என்ன செய்யமுடியும்? அவர்களால் முடிந்ததைத் தானே செய்யமுடியும்!

பதில்களைத் தானே நாங்களும் கொடுத்துக்கொண்டே இருக்கிறோம்.

எங்களின் ஒவ்வொரு பதிலும் உங்களின் இஸ்லாமுக்கு சாவுமணி அடிக்கிறது போல இருக்கிறது... அதனால் தான் எங்கள் கட்டுரையின் தொடுப்பு கொடுக்காமல் கோழைகளாக, மீசை தாடி வைத்த பெண்களாக எழுதிக்கொண்டு இருக்கிறார்கள், உங்கள் இஸ்லாமிய‌ அறிஞர்கள்... அந்தோ பரிதாபம்... இஸ்லாமுக்கு வந்த நிலையை பாருங்கய்யா...

Archies சொன்னது…

ரமீஸ் அவர்களே! "படிப்பதா? தலைப்பைப் பார்த்த உடனே ஓடி விட்டார்கள்". என்கிற ஸ்டேட்மென்டை நான் கூறியது isaakoran.blogspot ஐத்தான். இதில் எந்த சந்தேகமும் கிடையாது. நான் வேண்டுமென்றால் பதில் தருகிறேன்.

உமர் அண்ணா! உள்ளாடை போட்டாத்தானே உள்ளாடை நனைவதற்கு? மேலாடையே தொப்படிச்சாச்சி.

rameez சொன்னது…

திரு உமர் அவர்களே,

பொறுமையுடன்?? பதிலளித்ததற்கு நன்றி!!! ஆனால் இந்த பதில் நான் கேட்ட கேள்விகளுக்கா என்றால் இல்லை. நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிப்பீர்கள் என நம்புகிறேன்.

//எங்கள் தளத்தின் தொடுப்பை அவர்கள் கொடுத்து தான் பதில் எழுதுகிறார்களா//
நான் அவர்களின் தளத்தை சென்று பார்த்தேன், உங்கள் தளத்தின் தொடுப்பை கொடுக்கவில்லை, ஆனால் உங்கள் தலைப்பை முன் வைத்தே அவர்கள் பதில் எழுதுகிறார்கள்.

//ஏன் என் தளத்தின் தொடுப்பை கொடுக்க அவர்களின் உள்ளாடைகள் நனைந்துவிடுகின்றது? இஸ்லாம் மீது அவ்வளவு அவநம்பிக்கையா அவர்களுக்கு? அவர்களுக்கு முஹம்மது மீதும், குர்‍ஆன் மீதும் நம்பிக்கை இல்லையா? ஏன் எவ்வளவு சொன்னாலும் சொரணையே இல்லாமல், துடைத்துப்போட்டுவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள், வெட்கமாக இல்லை. //

அவர்கள் எழுதும் கருத்துக்களில் உள்ளாடை நனைதவர்கலாக தெரியவில்லை, நீங்கள் சில கருத்துக்களை மறைத்தும், மறுப்பு எழுதாமலும் செல்வது உங்களையே உள்ளாடை நனைதவர்கலாக எண்ண வைக்கிறது. அவர்கள் ஏன் தொடுப்பை கொடுப்பதில்லை என்பதை படித்தேன் அதில் அவர்கள் முன் வைத்த கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்ததாக தெரியவில்லை. அவர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்து பிறகு இந்த கேள்வியை முன்வைத்திருந்தால் உங்கள் பக்கம் உள்ள வாதம் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். ஆனால் அப்படி நீங்கள் செய்ததாக தெரியவில்லை. இப்படி எதனடிப்படையில் பலி சுமத்துகிறீர்கள் என்பது தெரியாமல் என்ன செய்வது?

சரி உங்கள் தளத்தின் தொடுப்பை அவர்கள் கொடுக்காததால் அவர்களுக்கு நஷ்டமே தவிர, உங்களுக்கு ஏதும் பாதகம் இருப்பதாக தெரியவில்லை. எந்த கட்டுரைக்கான மறுப்பு என வாசகர்கள் குழம்பினாள் (அப்படி நடப்பதாக தெரியவில்லை) அந்த குழப்பம் உங்களுக்கு தானே சாதகமாக அமையும்?

இப்படி நீங்கள் முன்வைக்கும் இழிவான கருத்துக்களை அவர்கள் உங்களுக்கே திருப்பி அனுப்புகிறார்கள், ஆதாரங்களுடன். அவற்றை நீங்கள் ஏற்றுகொள்வது போல் மறுப்பு எழுதாமல் விட்டுவிடுகிறீர்கள். இந்த நிலையில் எப்படி நீங்கள் எழுதுபவைகள் மீது வாசகர்களுக்கு நம்பிக்கை வரும்?

அவர்கள் சொல்வதை போல் சொன்னால் இந்த கருத்துக்கள் "நீங்கள் உங்களை/கிறிஸ்தவத்தை பார்த்தே கேட்பது போல் தோன்றுகிறது"

நீங்கள் நான் முன்வைத்த கேள்விகளை தவிர்த்து உங்கள் கருத்துக்களை எழுதி இருந்தாலும், எனக்கு தெரிந்த அளவுக்கு பதில் எழுதியுள்ளேன். இப்போதாவது நான் முந்தைய பின்னூட்டத்தில் எழுதிய கேள்விக்கு பதில் அளிப்பீர்களா??