ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வெள்ளி, 28 டிசம்பர், 2012

இது அற்புதமா? (It’s a Miracle)

இது அற்புதமா? (It's a Miracle)

Author : Robert Sievers

Translation by: Tamil Christians.
இஸ்லாமுக்கும் மற்றும் கிறிஸ்தவத்திற்கும் இடையே இருக்கும் தனித்தன்மை வாய்ந்த வித்தியாசங்களை அறிந்துக்கொள்ள "இம்மார்க்கங்களில் உள்ள அற்புதங்கள்" கூட நமக்கு ஒரு வகையில் உதவி செய்கின்றன. இந்த மார்க்கங்கள் "அற்புதங்களை" எப்படி காண்கின்றன, முக்கியமாக அற்புதங்களின் முக்கிய நோக்கங்கள் என்னவாக இருக்கின்றன? போன்றவைகளை இப்போது ஆராய்வோம்.

பைபிளில் சொல்லப்பட்டது போல மேலும் கிறிஸ்தவர்கள் கருதுவது போல, இஸ்லாமில் அற்புதங்கள் கருதப்படுவதில்லை. இஸ்லாமில் "குர்-ஆன்" கூட ஒரு அற்புதம் தான். உண்மையில், மக்கள் முஹம்மதுவிடம் அற்புதங்களை செய்து காட்டுங்கள் என்று கேட்டபோது அவர் "அவர்களை குர்-ஆனை படிக்கச் சொன்னார்" (குர்-ஆன் 29:50-51, 17:88-94).  இதனை தெளிவாக்க, இன்னொரு முறை சொல்ல விரும்புவது என்னவென்றால், முஸ்லிம்களின் படி "குர்-ஆன்" ஒரு அற்புதமாகும். மேலும், "அடையாளம்/அற்புதம்" என்ற வார்த்தையின் அரபி வார்த்தை "ஆயத்" என்று உள்ளது.  இதே வார்த்தை தான் குர்-ஆனின் வசனங்களை குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது. முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, குர்-ஆனின் ஒவ்வொரு வசனமும் ஒரு அற்புதமாகும் (ஆயத் ஆகும்). இதனை சமீப காலம் வரை வாழ்ந்த இஸ்லாமிய அறிஞர் அஹமத் தீதத்  கீழ்கண்ட வாறு கூறுகிறார்:


"Again and again when miracles are demanded from the prophet of God by the cynical and frivolous few, he is made to point to the qur`an – message from high – as 'the miracle.' The miracle of miracles! And men of wisdom, people with literary and spiritual insight, who were honest enough to themselves, recognised and accepted al-qur`an as a genuine miracle." [i]



"நம் இறைத்தூதரிடம் அடிக்கடி அற்புதங்கள் பற்றி கேள்வி எழுப்பிய வஞ்சக கூட்டங்களுக்கு, அவர் குர்-ஆனை பதிலாக காட்டினார். இறைவனிடமிருந்து வந்த செய்தி தான் "அற்புதமாகும்". குர்-ஆன் தான் அற்புதங்களுக்கெல்லாம் அற்புதம். ஞானமுள்ள அறிஞர்கள் மற்றும் நீதி நேர்மையோடு நடந்துக்கொள்ளும் அறிஞர்கள் "குர்-ஆன்" ஒரு உண்மையான அற்புதம் என்று ஏற்றுக்கொண்டுள்ளனர்."[i]


அற்புதம் பற்றி முஸ்லிம்களின் மனதில் உள்ளதை புரிந்துக்கொள்ள, ஒரு உதாரணத்தை கூறுகிறேன். அதாவது பைபிளில் உள்ள வசனங்களை நாம் "அற்புதங்கள்" என்று கூறுவோமானால் எப்படி இருக்கும்? அதாவது ஒரு பிரசங்கியார், பிரசங்க பிடத்தில் நின்றுக்கொண்டு பைபிளின் ஒரு புத்தகத்தை மற்றும் அதிகாரத்தை குறிப்பிட்டு, அந்த அதிகாரத்தில் வரும் "முதலாவது அற்புதத்தை படிக்கவும்" என்று கூறினால் எப்படி இருக்கும்? அதாவது முதலாவது வசனத்தை படியுங்கள் என்று சொல்வதற்கு பதிலாக, முதலாவது அற்புதத்தை படியுங்கள் என்று அவர் சொல்கிறார். இதன் அர்த்தம் என்னவென்றால், முஸ்லிமுக்கு ஒவ்வொரு வசனமும் ஒரு "அற்புதமாகும்". ஆக, முஹம்மது அற்புதங்கள் செய்தார் என்பதை நாம் எப்படி சொல்லமுடியும்? அவர் கொண்டு வந்த குர்-ஆன் தான் அற்புதம். எனவே இஸ்லாமின் அற்புதமாகிய குர்-ஆனை நாம் அற்புதங்களுக்காக அடிப்படையாக கருதலாம்.
குர்-ஆன் தனக்குத் தானே அற்புதமாக இருப்பதினால் (இஸ்லாமியர்கள் இப்படி நம்புவதினால்) நாம் குர்-ஆனின் வசனங்களை முஹம்மதுவின் அற்புதமாக கருத நாம் கட்டாயப்படுத்தப்படுகிறோம். முஹம்மதுவின் அற்புதங்களை நாம் கிறிஸ்துவின் அற்புதங்களோடு ஒப்பிட்டு பார்க்கப்போகிறோம். நாம் பொதுவாக செய்து வருகின்ற பிரகாரமாக, இப்படி ஒப்பிடும் போது, இவ்விரண்டு மார்க்கங்களின் அடிப்படை கோட்பாடுகளில் உள்ள வித்தியாசங்களை காணலாம்.

இப்போது நாம் கிறிஸ்து செய்த அற்புதங்களின் பக்கம் நம் கவனைத்தை திருப்புவோம். இயேசுக் கிறிஸ்து 


  • ஒரு குருடனுக்கு பார்வையை கொடுத்தார் (யோவான் 9), 
  • மரித்த ஒருவரை உயிரோடு எழுப்பினார் (யோவான் 11), 
  • திமிர்வாதக்காரனை சுகப்படுத்தினார் (மாற்கு 2), மேலும் 
  • ஒரு சில ரொட்டிகள் மற்றும் மீன்களைக் கொண்டு சில ஆயிர மக்களின் பசியை தீர்த்தார் (மத்தேயு 14)


இப்போது முஹம்மதுவின் அற்புதமாகிய குர்-ஆனை அலசுவோம். குர்-ஆனின் பக்கங்களை நாம் திருப்பி பார்க்கும் போது, வேறு வகையான அற்புதத்தை அதில் காணமுடியும். முஹம்மதுவின் அற்புதம் இவ்விதமாகச் சொல்கிறது அதாவது, 


  • ஒரு முக்கியமான விஷயத்திற்காக பேசிக்கொண்டு இருக்கும் போது, முஸ்லிம்கள் அந்த இடத்தை விட்டு செல்லவேண்டுமென்றால் அவர்கள் முஹம்மதுவிடம் அனுமதி பெறவேண்டும் (குர்-ஆன் 24:62)
  • முஹம்மதுவின் மனைவிகள் தவறு செய்தால், அவர்களுக்கு இரண்டு மடங்கு தண்டனை கிடைக்கும் (குர்-ஆன் 33:30)
  • முஹம்மது மற்ற முஸ்லிம்களைக் காட்டிலும், அனேக பெண்களை திருமணம் செய்துக்கொள்ள அவருக்கு உரிமை உண்டு (குர்-ஆன் 33:50)
  •  முஹம்மது தனது வளர்ப்பு மகனின் மனைவியை (மருமகளை) திருமணம் செய்துகொள்ள அவருக்கு அனுமதி உண்டு (33:37)
  • முஹம்மதுவின் வீட்டிற்கு அவரை காண வருபவர்கள், உணவு அருந்தியவுடன் அவர்கள் முஹம்மதுவை மேலும் தொந்தரவு செய்யாமல் உடனே சென்றுவிடவேண்டும் (குர்-ஆன் 33:53).
  • முஹம்மதுவைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனம் அனுமதிக்கப்படாது (குர்-ஆன் 58:9)
  • கடைசியாக, முஹம்மதுவிடம் பேசும் மக்கள், தங்கள் சத்தத்தை குறைத்து அமைதியான முறையில் பேசவேண்டும் (குர்-ஆன் 49:2)


மேற்கண்ட இரண்டு பேருடைய அற்புதங்களில் உள்ள வித்தியாசமான பாணியை நீங்கள் இப்போது காணமுடியும். இயேசுவின் அனைத்து அற்புதங்களும் மற்ற மக்களுக்கு உதவி செய்வதாகவே இருந்தது. இயேசு ஒரு முறை கூட தன்னுடைய உலக வாழ்விற்கு உதவியாக இருக்கும் படியாக ஒரு போதும் ஒரு அற்புதம் கூட செய்துக்கொள்ளவில்லை. இயேசு எந்த ஒரு சமயத்திலும் தனக்கு பசி எடுக்கின்றது என்பதற்காக "அற்புதம் மூலமாக உணவை கொண்டு வரவில்லை", தனக்கு மகிழ்ச்சி உண்டாகும் படி சொந்த தேவைக்காக அற்புதம் செய்துக்கொள்ளவில்லை.  மேலும் சில காரியங்கள் செய்ய தனக்குதனிப்பட்ட அதிகாரம் உண்டென்றுச் சொல்லி,  சுயத்திற்காக அற்புதங்கள் செய்துக்கொள்ளவில்லை. உண்மையில், இயேசு இப்படிப்பட்ட அற்புதங்கள் செய்து தன் சொந்த தேவைகளை வசதிகளை செய்துக்கொள்ள வேண்டும் என்று சாத்தான் அந்த வனாந்திரத்தில் இயேசுவை சோதித்துப் பார்த்தான். (மத்தேயு 4:1-11).  அவ்வளவு ஏன், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பேதுருவிடம் ஒரு மீனை பிடித்து, அதில் காணப்படும் இரண்டு நாணயத்தைக் கொண்டு வரிப்பணம் கட்டு என்று சொன்ன போது கூட, அந்த அற்புதம் தன்னுடைய நன்மைக்காக அல்லாமல், மற்றவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அவர் இந்த அற்புதம் செய்ததாக கூறுகிறார் (மத்தேயு 17:27).

ஆனால், முஹம்மதுவின் அற்புதங்கள் பக்கம் நாம் கவனைத்தை திருப்பினால், குர்-ஆனில் அவர் கொண்டு வந்த வெளிப்பாட்டு அற்புதங்களில் அனேக அற்புதங்கள் தன்னுடைய உலக வாழ்க்கையில் தனக்கு நன்மை உண்டாகவேண்டும் என்பதற்காகவே இருந்தது. மேலும், முஹம்மதுவின் மனைவிகளில் ஒருவர், கீழ்கண்டவாறு  கூறுகிறார்:


புகாரி ஹதீஸ்: பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5113


உர்வா வின் ஸ¤பைர்(ரஹ்) அறிவித்தார் 



நபி(ஸல்) அவர்களுக்குத் தங்களையே கொடையாக வழங்க முன் வந்த பெண்களில் கவ்லா பின்த் ஹகீம்(ரலி) அவர்களும் ஒருவராவார். (இது குறித்து) ஆயிஷா(ரலி) (பின்வருமாறு) கூறினார்கள்: 



ஒரு பெண் தம்மைத் தாமே ஓர் ஆணுக்கு கொடையாக வழங்க வெட்கப்படமாட்டாளா? பின்னர் '(நபியே! உங்கள் துணைவியராகிய) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம் வரை) ஒதுக்கி வைக்கலாம்'' எனும் (திருக்குர்ஆன் 33:51 வது) வசனம் அருளப்பட்டதுபோது 'இறைத்தூதர் அவர்களே! தங்களின் விருப்பத்தைத் தங்களின் இறைவன் விரைவாக பூர்த்தி செய்வதையே காண்கிறேன்'' என்று (நபியவர்களிடம்) கூறினேன். [ii]



மேற்கண்ட ஹதீஸை எவ்வளவு கேலியாக முஹம்மதுவின் மனைவி கூறியிருப்பார்கள் என்பதை இன்று அதாவது 1400 ஆண்டுகளுக்கு  பின்பு நம்மால் சரியாக யூகிக்க முடியாது. முஹம்மதுவின் வாழ்க்கையில் வசதிகள் அல்லது அவருடைய மகிழ்ச்சிக்கு துணையாக இந்த குர்-ஆன் வசனம் எவ்வளவு சீக்கிரமாக இறக்கப்பட்டது என்பதை அவரது மனைவியாகிய ஆயிஷா கவனித்துள்ளார். இதனை இன்று நாம் அறிந்துக்கொள்வது கடினமான விஷயமன்று. குர்-ஆனின் அற்புதம் முஹம்மதுவிற்கு இந்த உலக வாழ்க்கையில் வசதிகளை செய்துக்கொடுத்து அவருக்கு உதவியாக இருந்தது. ஆனால், இயேசு செய்த அற்புதங்களோ, மற்ற மக்களுக்கு வசதிகளை செய்துக் கொடுத்து அவர்களுக்கு உதவியாக இருந்தது. சரித்திரத்தில் காணும் இவ்விரண்டு நபர்கள் நேர் எதிர் துருவங்களாக இருப்பதை நாம் காணலாம்.

இயேசு மற்ற மக்களின் நன்மைக்காக அற்புதங்களைச் செய்தார், தன்னுடைய நன்மைக்காக செய்யவில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், சில நேரங்களில் இயேசு மற்றவர்களின் நன்மைக்காக செய்த அற்புதங்கள் தனக்கு ஆபத்து உண்டாக்கும்படியாக இருந்தது. கடைசியாக, இயேசுவின் உயிர்த்தெழுந்த அற்புதமானது, மிகவும் கொடுமையான மரணத்தை ஏற்றுக்கொண்டு செய்யப்பட்ட அற்புதமாக உள்ளது. ஆனால், முஹம்மதுவின் அற்புதங்கள் தன்னுடைய வாழ்க்கையை இலகுவாக்க அல்லது அவரது ஆசைகளை தீர்த்துக்கொள்ள உதவி செய்வதாக அமைந்துள்ளது.

இந்த இரண்டு நபர்களின் அற்புதங்களில் ஏன் இவ்வளவு பெரிய வித்தியாசம்? இந்த அற்புதங்கள் இவ்விருவர் பற்றி எவைகளை நமக்கு போதிக்கின்றன? ஒருவர் செய்த அற்புதம் நம்முடைய மரியாதையை பெறுவதாக உள்ளது, ஆனால், இன்னொருவரின் அற்புதம் அப்படி மரியாதைக்குரியதாக இல்லை. முஹம்மதுவின் அற்புதங்களைக் காட்டிலும் இயேசுவின் அற்புதங்கள் நன்மதிப்பை பெறுவதாக உள்ளது.

பின் குறிப்புக்கள்:
[i] Quote from Achmed Deedat, reprinted onhttp://www.jannah.org/articles/qurdeed.html, Accessed April 26, 2009
[ii] Sahih Bukhari: Volume 7, Book 62, Number 48

ஆங்கில மூலம்: It's a Miracle 

Thanks to "http://www.unravelingislam.com" site for granting permission to translate and publish its articles in Tamil language.


கருத்துகள் இல்லை: