ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

திங்கள், 14 மார்ச், 2016

கேரள நீதிபதி கமல் பாஷா அவர்களின் இஸ்லாமிய விமர்சனம்: முஸ்லிம் தனியார் சட்டம் ஆண் ஆதிக்கத்தை முன்னிறுத்துகின்றதா?

முன்னுரை: கேரள உயர்நீதி மன்ற நீதிபதி கமல் பாஷா அவர்கள் கடந்த வாரம், இஸ்லாமிய சட்டம் பற்றி விமர்சித்தார். முஸ்லிம் தனியார் சட்டத்தின் படி (Muslim Personal Law), முஸ்லிம் ஆண்கள் நான்கு பெண்களை திருமணம் செய்ய அனுமதிக்கப்படும் போது, ஏன்  முஸ்லிம் பெண்கள் நான்கு ஆண்களை திருமணம் செய்ய அனுமதிக்கப்படக்கூடாது? போன்ற சில கேள்விகளை எழுப்பினார். இக்கருத்துக்கு அனேக இஸ்லாமிய குழுக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அவரின் இஸ்லாமிய விமர்சனத்தை இக்கட்டுரையில் கீழ்கண்ட தலைப்புக்களில் ஆய்வு செய்யப் போகிறோம்.

1) கேரள உயர்நீதி மன்ற நீதிபதியின் விமர்சனம் என்ன?

2) இந்தியாவின் முஸ்லிம் தனியார் சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு எதிரானதா?

3) முஸ்லிம் பெண்களின் நன்மைக்காக, முஸ்லிம் ஆண்கள் மற்றும் முஸ்லிம் வழக்கறிஞர்கள் செய்யவேண்டியவைகள் யாவை?

4) முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்காக முஸ்லிமல்லாத சட்ட நிபுனர்கள், வழக்கறிஞர்களின் கடமைகள் என்ன?

5) முஸ்லிம் தனியார் சட்டங்களில் என்னென்ன திருத்தங்கள் செய்யவேண்டும்?

6) முடிவுரை: 


1) கேரள உயர்நீதி மன்ற நீதிபதியின் விமர்சனம் என்ன?

கேரள உயர்நீதி மன்ற நீதிபதி, இந்தியாவில் தற்போது அமுலில் இருக்கும் "முஸ்லிம் தனியார் சட்டம்" பற்றி தம்முடைய துக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

அவரது விமர்சனத்தின் சுருக்கத்தை, "தினமலர்" மற்றும் "த ஹிந்து" நாளிதழ்களில் வந்த செய்திகளை தமிழில் இங்கு படிக்கவும். ஆங்கில தொடுப்புக்கள் இக்கட்டுரையின் அடிக்குறிப்பில் தரப்பட்டுள்ளது. 

தினமலர் செய்தி: முஸ்லிம் ஆண்கள் மட்டும் 4 திருமணம் செய்யலாமா: கேரள ஐகோர்ட் நீதிபதி கேள்வி

திருவனந்தபுரம்;''முஸ்லிம் தனிநபர் சட்டப்படி, ஆண்கள், நான்கு திருமணங்கள் செய்யும் போது, முஸ்லிம் பெண்கள் ஏன் நான்கு திருமணங்களை செய்யக் கூடாது,'' என, கேரள ஐகோர்ட் நீதிபதி கமல் பாஷா கேள்வி எழுப்பியுள்ளார்.கேரள மாநிலம், கோழிக்கோட்டில், தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது: முஸ்லிம் தனிநபர் சட்டம், பெண்களுக்கு எதிராக கடுமையான சுமையை ஏற்றியுள்ளது. இந்த சட்டம், ஆண் ஆதிக்கத்தை முன்னிறுத்துகிறது. இதுபோன்ற  தீவிரமான பிரச்னைகளில், மதத் தலைவர்கள் சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

இந்த சட்டப்படி, ஒரு ஆண், நான்கு முறை திருமணம் செய்து கொள்ளலாம். இதுபோல பல திருமணங்கள் செய்து கொள்ள, முஸ்லிம் நாடுகள் கூட தடை விதித்துள்ளன. ஆனால், இந்தியாவில் இது இன்னும் நடைமுறையில் உள்ளது.

பெண்களுக்கு சம உரிமை மட்டுமல்லாமல், சொத்து உரிமை உள்ளிட்ட பிற உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. கணவரின் சொத்தில், மனைவிக்கு உள்ள உரிமை குறித்து தெளிவாக வரையறுத்தால் மட்டுமே, குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் மூலம் பெண்களுக்கு  பாதுகாப்பு கிடைக்கச் செய்ய முடியும்.இந்த விஷயங்களில் தலையிட, சுப்ரீம் கோர்ட் கூட தயக்கம் காட்டுகிறது. இந்த அநீதிகளுக்கு முடிவு கட்ட பெண்கள் முன்வரவேண்டும். பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது நியாயமற்றது.இவ்வாறு அவர் பேசினார்.

த ஹிந்து நாளிதழ்:

இஸ்லாமிய சட்டம் பற்றி கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய கேரள உயர் நீதிமன்ற நீதிபதி

முஸ்லிம் ஷரியத் சட்டம் பெண்களுக்கு எதிரானது என்று கேரள உயர் நீதிமன்ற நீதிபதி கெமால் பாஷா கூறியது முஸ்லிம்களிடையே கடும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.

கோழிக்கோடில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் முஸ்லிம் ஷரியத் சட்டம் பெண்களுக்கு எதிராக உள்ளது, இஸ்லாம் மதம் பெண்களுக்கு வழங்கும் உரிமைகள் அதன் ஷரியத் சட்டத்தினால் முடக்கப்படுகின்றன, இது பெண் சமுதாயத்தின் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதாக உள்ளது, இதனால் அனைவருக்குமான பொதுச் சிவில் சட்டத்தை எதிர்ப்பதில் நியாயம் இல்லை, உச்ச நீதிமன்றம் கூட இதில் தலையிட மறுத்து வருகிறது என்று பேசியுள்ளார்.

இதனால் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ள முஸ்லிம் குழுக்களும் கூட ஒன்று திரண்டு நீதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் நடத்தியுள்ளன. 

சன்னி முஸ்லிம் பிரிவினர் நடத்தும் சுப்ரபாதம் என்ற மலையாள நாளிதழ் தனது தலையங்கத்தில் நீதிபதியின் இந்தக் கருத்துகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

நீதிபதி பாஷாவின் கருத்து ஆர்.எஸ்.எஸ். கருத்தை எதிரொலிப்பதாக உள்ளது என்றும் முஸ்லிம் இருப்பின் மீதே கையை வைக்கிறது என்றும் அந்தத் தலையங்கம் சாடியுள்ளது.

2) இந்தியாவின் முஸ்லிம் தனியார் சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு எதிரானதா?

இவர் கேரள உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார். பல ஆண்டுகள் வழக்கறிஞராக இருந்து சட்டவிஷயங்களில் அனுபவம் பெற்றவர்களைத் தான் நீதிபதிகளாக நியமிக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், இவர் ஒரு முஸ்லிம் பின்னணியைக் கொண்டவர்.  இஸ்லாமை விமர்சிப்பவர்கள் மீது முஸ்லிம்கள் பொதுவாக கூறும் ஒரு குற்றச்சாட்டு என்னவென்றால், "இவர்கள் அறியாமையினால் இப்படி செய்கிறார்கள், இவர்களுக்கு இஸ்லாம் தெரியாது" என்பதாகும். முஸ்லிம் தனியார் சட்டத்தை விமர்சித்த இவர் ஒரு பாமர மனிதனல்ல, இவர் இந்திய சட்டம் தெரிந்தவர், இதுமட்டுமல்ல, அந்த சட்டம் தன் மாநிலத்தில் மீறப்படுகின்றதா என்பதை கவனித்து தண்டனை வழங்கும் நீதிபதி ஆவார். சட்டத்தை நிலை நாட்ட உதவி புரிபவர். மேலும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கென்று தனியாக இருக்கும் "முஸ்லிம் தனியார் சட்டம் (Muslim Personal Law)" பற்றியும் அறிந்தவர். எனவே, இவரது விமர்சனத்தை நாம் புறக்கணிக்கமுடியாது. எனவே இவர் என்ன சொல்லியுள்ளார் என்பதை காண்போம். 

"முஸ்லிம் தனியார் சட்டம்" பற்றி, கேரள நீதிபதி கமல் பாஷா அவர்களின் கருத்துக்கள்/விமர்சனங்கள்:

அ) முஸ்லிம் ஆண்கள், நான்கு திருமணங்கள் செய்யும் போது, முஸ்லிம் பெண்கள் ஏன் நான்கு திருமணங்களை செய்யக் கூடாது?

ஆ) முஸ்லிம் தனியார் சட்டம், பெண்களுக்கு எதிராக கடுமையான சுமையை ஏற்றியுள்ளது.

இ) இந்த சட்டம், ஆண் ஆதிக்கத்தை முன்னிறுத்துகிறது.

ஈ) பெண்களுக்கு சம உரிமை மட்டுமல்லாமல், சொத்து உரிமை உள்ளிட்ட பிற உரிமைகளும் மறுக்கப்படுகின்றன.

உ) கணவரின் சொத்தில், மனைவிக்கு உள்ள உரிமை குறித்து தெளிவாக வரையறுத்தால் மட்டுமே, குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் மூலம் பெண்களுக்கு  பாதுகாப்பு கிடைக்கச் செய்ய முடியும்.

ஊ) இந்த விஷயங்களில் தலையிட, சுப்ரீம் கோர்ட் கூட தயக்கம் காட்டுகிறது. இந்த அநீதிகளுக்கு முடிவு கட்ட பெண்கள் முன்வரவேண்டும்.

எ) இதுபோன்ற  தீவிரமான பிரச்சனைகளில், மதத் தலைவர்கள் சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

இவைகள் செய்திகளில் வந்தவைகள் மட்டுமே, இன்னும அவர் எவைகளை பேசினாரோ நமக்குத் தெரியாது.

மனதில் "சிறிதாவது மனித நேயம்" ஒட்டிக்கொண்டிருக்கும்  எந்த மனிதனும் மேற்கண்ட விமர்சனங்களை குற்றப்படுத்த மாட்டான். தன்னைப் பெற்ற தாயையும், தான் பெற்ற மகள்களையும், தன்னோடு பிறந்த சகோதரிகளையும், தன் மனைவியையும் (ஒருமையை கவனிக்கவும்)  நேசிக்கும் எந்த ஒரு முஸ்லிமும் மேற்கண்டவைகளில் குறைகள் உள்ளது என்றுச் சொல்லமாட்டான். பெண்களுக்கு  நன்மைகள் உண்டாகவேண்டும் என்று விரும்புகிறவர்கள் இவரது விமர்சனத்தை ஏற்றுக் கொள்வார்கள். 

ஆனால், அனேக இஸ்லாமிய குழுக்கள் இந்த விமர்சனங்களை கண்டித்தார்களாம். இந்த இஸ்லாமிய குழுக்களில் பெண்கள் இருப்பார்களா? நம் இந்தியாவில் உள்ள இஸ்லாமிய குழுக்களில், ஆண்களுக்கு சமமாக பெண்கள் கூட அதிகாரிகளாக (Board Members) இருக்கிறார்களா? 

நீதிபதி கமல் பாஷா அவர்கள் சொன்னது போல, பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட முன்வரவேண்டும். முக்கியமாக இஸ்லாமிய பெண்கள் முன்வரவேண்டும். ஆனால், இஸ்லாமிய பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடுவதற்கு அனேக தடைகள் உள்ளன. 

முதலாவது முஸ்லிம் பெண்களில் படித்தவர்களின் சதவிகிதம் குறைவு. 

இரண்டாவது, முஸ்லிம் ஆண்கள் இவர்களின் ஒவ்வொரு செயலையும் கட்டுப்படுத்துகிறார்கள். தங்கள் வீட்டில் உள்ள ஆண்களுக்கு தெரியாமல், இவர்கள் ஒன்றுமே செய்யமுடியாது. 

மூன்றாவதாக, முஸ்லிம் பெண்கள் தங்கள் முகத்தில் திரை போட்டுக்கொண்டு இருப்பதினால் இதர பெண்களோடு சேர்ந்து, சில முக்கியமான உரிமை போராட்டங்களில் ஈடுபடுவதற்கு ஏற்ற மனதைரியத்தை பெரும்பான்மையாக பெருவதில்லைம்.

நான்காவதாக, இஸ்லாமையும், குர்-ஆனையும் விமர்சிப்பது இஸ்லாமியர்களில் தடை செய்யப்பட்டுள்ளது, இதில் பெண்களின் நிலை இன்னும் பரிதாபத்திற்கு உரியது. எனவே இஸ்லாமிய சட்டம் பற்றி பேச முஸ்லிம் ஆண்களுக்கே தைரியம் இல்லாத போது, முஸ்லிம் பெண்களுக்கு எப்படி தைரியம் வரும்?

ஐந்தாவதாக, திருமணமான முஸ்லிம் பெண்கள் வேலைக்குச் செல்வது மிகக்குறைவு, மேலும், அவர்களின் எல்லா பொருளாதார தேவைக்காகவும் அவர்கள் ஆண்கள் மீதே சார்ந்து இருப்பதினால், அவர்களால் பெண்களின் பொதுநலத்தை மனதில் வைத்தவர்களாக, தங்கள் குடும்ப ஆண்களுக்கு எதிராக நின்று போராடுவது என்பது கடினமே, ஆனால், முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. 

இந்திய முஸ்லிம் பெண்கள் இப்படிப்பட்ட பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கும் போது, அவர்களை தூக்கிவிடுவது யார்? இவர்களுக்கு உதவி செய்ய மாற்று மதத்தவர்கள் முன்வருவது என்பது கடினம், எனவே மனிதாபமுள்ள முஸ்லிம் ஆண்களும், முஸ்லிம் வழக்கறிஞர்களும் முன்வந்து உதவிகள் செய்தால் முஸ்லிம் பெண்களுக்கு நல்ல விடிவுகாலம் வரும்.

3) முஸ்லிம் பெண்களுக்கு நன்மை உண்டாகும் படி, முஸ்லிம் ஆண்கள் மற்றும் முஸ்லிம் வழக்கறிஞர்கள் செய்யவேண்டியவைகள் யாவை?

நீதிபதி கமல் பாஷா அவர்களின் கருத்துப் படி, முஸ்லிம் தனியார் சட்டம் "முஸ்லிம் பெண்களுக்கு எதிராக கடுமையான சுமையை ஏற்றியுள்ளது மற்றும் ஆண் ஆதிக்கத்தை முன்னிறுத்துகிறது".

இவரது இந்த விமர்சனத்தை குற்றப்படுத்துபவர்கள், முதலாவது "இந்திய முஸ்லிம் தனியார் சட்டத்தில்" இப்படிப்பட்ட நிலை இல்லை என்பதை நிருபிக்கவேண்டும். அதாவது, முஸ்லிம் தனியார் சட்டம் ஆண் ஆதிக்கத்தை ஆதரிப்பதில்லை என்பதையும், முஸ்லிம் பெண்களுக்கு சரிசமமான உரிமைகளை இச்சட்டம் வழங்குகிறது என்பதையும் அவர்கள் நிருபிக்கவேண்டும். இவர்களால் இதனை நிருபிக்க  முடியாவிட்டால், இந்த முஸ்லிம் ஆண்கள், முஸ்லிம் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதி கமல் பாஷா போன்ற இஸ்லாமிய பின்னணியைக் கொண்ட நீதிபதிகள் ஒன்று திரண்டு, தங்கள் சமுதாய பெண் இனத்திற்கு எதிராக நடந்துக் கொண்டு இருக்கும் கொடுமைகளுக்கு எதிராக போராடி, அவர்களுக்கு நியாயம் கிடைக்க உதவி செய்யவேண்டும், இதனை அவர்கள் செய்வார்களா?

முஸ்லிம் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு குரல் கொடுக்க முஸ்லிம் ஆண்கள் முன்வரவில்லையென்றால், மற்றவர்கள் எவ்வளவு சத்தமாக குரல் கொடுத்தாலும் அது எடுபடாது. எனவே, தன் சகோதரி, தாய், மனைவி, மகள் சுபிட்சமாக வாழவேண்டும் என்று விரும்புகின்ற ஒவ்வொரு முஸ்லிம் ஆணும், முஸ்லிம் தனியார் சட்டத்தை மறுபரிசோதனை செய்யவேண்டும், தேவைப்பட்டால் சில திருத்தங்களை கொண்டுவர போராடவேண்டும். 

கிறிஸ்தவ பெண்களின் உரிமைகளுக்காக, இந்து பெண்களின் உரிமைகளுக்காக போராடுங்கள் என்று நான் இங்கு முஸ்லிம் ஆண்களிடம் வேண்டுகோள் வைக்கவில்லை, அதற்கு பதிலாக, உங்கள் சமுதாய பெண்களுக்காக நீங்கள் போராடுங்கள் என்று தான் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். 

"எங்கள் பெண்களுக்கு என்னென்ன உரிமைகள் தேவை" என்று எங்களுக்குத் தெரியும் என்று முஸ்லிம் ஆண்கள் சொல்வார்களானால், பின் ஏன் முஸ்லிம் தனியார் சட்டம் பெண்களை கொடுமைப்படுத்துகிறது என்று நீதிபதி சொல்கிறார்? நாட்டு நடப்புக்களை பார்க்கும் போது, முஸ்லிம் பெண்கள் நீதிமன்றங்களில் போடும் வழக்குகளை ஆய்வு செய்யும் போது, முஸ்லிம் பெண்களின் உரிமைகள் பரிக்கப்படுவதாக அறிகிறோமே அது ஏன்? 

இந்திய முஸ்லிம் வழக்கறிஞர்களே, நீதிபதிகளே! மாற்று மத பெண்களுக்காக நீங்கள் போராடி, நியாயம் பெற்று கொடுத்தது போற்றத்தக்கது. ஆனால், உங்கள் சமுதாய பெண்களின் நிலை என்ன? சம்பளத்திற்காக மாற்று மத பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் படி நீங்கள் உழைக்கிறீர்கள்! ஆனால், சம்பளம் இல்லாமல், உங்கள் முஸ்லிம் பெண்களுக்காக கொஞ்சம் உழைக்கக்கூடாதா? அவர்களுக்கு நியாயம் கிடைக்க சிறிது நேரம் ஒதுக்கக்கூடாதா? முஸ்லிம் பெண்களின் கண்ணீரை துடைக்க "முஸ்லிம் தனியார் சட்டத்தை சிறிது தூசு தட்டக்கூடாதா?".  பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டுமே நீங்கள் சட்டம் படித்தீர்களா? மருத்துவர்கள் ஆசிரியர்கள் சட்டம் படித்தவர்கள், இவர்கள் அனைவரும் சமுதாய மக்களுக்கு முக்கியமானவர்கள். இப்போது நாம் முஸ்லிம் பெண்களுக்காக கையேந்துவது சட்டம் படித்தவர்களிடம் தான். முஸ்லிம் சமுதாயம் என்றால் அது வெறும் முஸ்லிம் ஆண்களை மட்டுமே குறிக்கும் என்று கருதிவிட்டீர்களா? உங்கள் பெண் சமுதாயத்தின் மீது சிறிது இரக்கம் காட்டுங்கள் பிளீஸ்.

4) முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்காக முஸ்லிமல்லாத சட்ட நிபுனர்கள், வழக்கறிஞர்களின் கடமைகள் என்ன?

• இது முஸ்லிம் பெண்களின் பிரச்சனை இதற்கு நாங்கள் ஏன் உதவவேண்டும்?

• இது முஸ்லிம் சமுதாயப் பிரச்சனை, எங்களுக்கும் இப்பிரச்சனைகளுக்கும் சம்மந்தமில்லை!

• எங்கள் சமுதாய பெண்களுக்கு இந்திய சட்டம் இருக்கிறது, நாங்கள் இருக்கின்றோம், அது போதும் எங்களுக்கு, மற்றவர்கள் எக்கேடு கெட்டால் எங்களுக்கென்ன? 

நம்மில் (முஸ்லிமல்லாதவர்களில்) சிலர் இப்படி நினைக்கக்கூடும், ஆனால், நம் பக்கத்து வீடு எரிந்துக் கொண்டு இருந்தால், அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருந்தால் அது நல்லதா? கண்ணில்லாத ஒருவன் ஒரு குழியை நோக்கி சென்றுக் கொண்டு இருப்பதை பார்த்த பின்பும் பார்வை இருக்கும் நாம் சும்மா இருக்கலாமா? ஓடிச்சென்று அவனுக்கு உதவ மாட்டோமா?

இந்து, கிறிஸ்தவ மற்றும் நாத்தீக வழக்கறிஞர்களே! முஸ்லிம் தனியார் சட்டத்தை (Muslim Personal Law),  ஆய்வு செய்து, இந்திய அரசியல் சாசனம் ஒவ்வொரு இந்திய பெண்ணுக்கு கொடுத்திருக்கின்ற உரிமைகளுக்கு பங்கம் விளைவிக்கும் விவரங்கள், முஸ்லிம் தனியார் சட்டத்தில் கண்டுபிடித்தால், அதனை சரிசெய்ய தேவையான உதவிகளைச் செய்வீர்களா? இது முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு மட்டுமல்ல, இதர மத தனியார் சட்டத்துக்கும் பொதுவானதே.

எல்லோரும் சட்டம் படிக்கவில்லை, படித்த உங்களைப்போல உள்ள சிலரிடம் தான் நாங்கள் கையேந்தி நிற்கிறோம். முஸ்லிம் பெண்களின் கண்ணீரை சிறிது எண்ணிப் பாருங்கள். 

நாங்கள் உதவி செய்யச் சென்றாலும், முஸ்லிம் பெண்களிடமிருந்தே எங்களுக்கு எதிர்ப்புக்கள் வருகின்றன, எனவே நாங்கள் எப்படி உதவி செய்வது என்று சிலர் கேட்கலாம். உங்கள் ஆதங்கம் உண்மை தான், ஆனால் எதிர்ப்பு இருக்கின்றதே என்றுச் சொல்லி, நாம் சும்மா உட்கார்ந்தால் எப்படி? குறைந்தபட்சம் முயற்சி எடுக்கலாமே!

5) முஸ்லிம் தனியார் சட்டங்களில் என்னென்ன திருத்தங்கள் செய்யவேண்டும்?

முதலாவது நாம், முஸ்லிம் தனியார் சட்டத்தில் உள்ளவைகளை  அறியவேண்டும். அதன் பிறகு, இந்திய சட்டத்தில் எல்லா பெண்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளில் எவைகளை "முஸ்லிம் பெண்கள் இழக்கிறார்கள்" என்பதை ஆய்வு செய்யவேண்டும். இதனை யார் செய்வது? சட்டம் தெரிந்தவர்கள் தான் செய்யவேண்டும். இதனை ஒரு முஸ்லிம் செய்தால் எப்படி இருக்கும்? மிகவும் அருமையாக இருக்கும்.

இலங்கை முஸ்லிம் சகோதரரின் தைரியமான செயல்:

இலங்கை முஸ்லிம் சகோதரர் ஒருவர் இதனை செய்துள்ளார். அதாவது "இலங்கை முஸ்லிம் தனியார் சட்டத்தை" பரிசீலித்து, சில மாற்றங்கள் செய்யப்படவேண்டும் என்று வெளிப்படையாகச் சொல்லியுள்ளார். இவரது இதர கட்டுரைகளை நான் படிக்கவில்லை. இந்த ஒரு கட்டுரையையின் தொடுப்பை இங்கு தருகிறேன்.

முஸ்லிம் தனியார் சட்ட மறுசீரமைப்பும் நீதி அமைச்சரும் –சில கவனயீர்ப்புக் குறிப்புகள்

இஸ்லாம் முஸ்லிம் பெண்ணின் திருமண வயதை வரையறை செய்யவில்லை. பருவமடைந்த பெண்களுக்கு திருமணம் முடிப் பதைத் தாமதிக்க வேண்டாம் என வந்துள்ள ஹதீஸ்களை நாம் தவறாகவே விளங்கி வைத்துள்ளோம். 12 வயதிலுள்ள ஒரு சிறுமி இன்னொரு குழந்தையைச் சுமக்கும் உடற் பக்குவம் பெற்றிருப்பாளா என்பதை நாம் சிந்திக்கத் தவறுகின்றோம்.

தம் தளத்தில் அவர் குறிப்பிட்ட முதலாவது திருத்தம், சிறுமிகளுக்கு திருமணம் செய்வது பற்றியதாகும். "சின்னங்சிறு சிறுமிகளுக்கு திருமணம் செய்துவைப்பது, அவர்களின் உயிருக்கே அது ஆபத்தாக முடிகிறது" என்று குறிப்பிட்டு இருந்தார். இவரின் முழூ கட்டுரையையும் படிக்க, மேலே கொடுக்கப்பட்ட தொடுப்பை சொடுக்கவும். 

இந்த கட்டுரையை படிக்கும் நபர்களில், வழக்கறிஞர்கள் இருந்தால், அவர்கள் இதற்கு உதவலாம். 

முடிவுரை:

கேரள நீதிபதி கமல் பாஷா அவர்களின் ஒரு முக்கியமான விமர்சனம் இதுவாகும்: ''முஸ்லிம் தனிநபர் சட்டப்படி, ஆண்கள், நான்கு திருமணங்கள் செய்யும் போது, முஸ்லிம் பெண்கள் ஏன் நான்கு திருமணங்களை செய்யக் கூடாது".  

இவர் தன்னை ஒரு முஸ்லிமாக காட்டிக்கொண்டு, மேற்கண்ட விமர்சனத்தை முன்வைத்திருப்பது ஆச்சரியத்தை உண்டாக்குகிறது.  "இந்திய முஸ்லிம் தனியார் சட்டம்" என்பது குர்-ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. எவர் ஒருவர் இதனை விமர்சிக்கிறாரோ அவர் குர்-ஆனையும், ஹதீஸ்களையும் விமர்சிப்பதற்கு சமமாகும். முஸ்லிம் பெண்களின் திருமணம் பற்றி இவர் எழுப்பியுள்ள கேள்வி, குர்-ஆனின் ஆண் ஆதிக்க தன்மைக்கு ஒரு எடுத்துக் காட்டாகும். இதனை நிச்சயமாக முஸ்லிம்கள் அங்கீகரிக்கமாட்டார்கள். ஒருவேளை, இவர் இஸ்லாமை விட்டு ஏற்கனவே வெளியேறிவிட்டாரோ? என்ற சந்தேகம் வருகிறது. இஸ்லாமை பின்பற்றிக் கொண்டு யார் இஸ்லாமை விமர்சிக்க முன்வருவார்கள்?  இதைப் பற்றி என் விமர்சனத்தை முடிந்தால் அடுத்த கட்டுரையில் எழுதுவேன்.

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/general-topics/judge_kamal_basha_aimpl.html

கருத்துகள் இல்லை: