ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 21 மார்ச், 2009

இஸ்லாத்திற்கு மாறும் யூத மற்றும் கிறிஸ்தவர்கள்‌ : இஸ்லாமியர்களை சிந்திக்கத்தூண்டும் சில கேள்விகள்:

இஸ்லாத்திற்கு மாறும் யூத மற்றும் கிறிஸ்தவர்கள்‌

 
இஸ்லாமியர்களை சிந்திக்கத்தூண்டும் சில கேள்விகள்

 

Jewish and Christian Converts to Islam



Some Questions for Muslims to Ponder

 
சாம் ஷமான்


 
இயேசுக் கிறிஸ்து மோசேயின் நியாயப்பிரமான சட்டத்தையும் தீர்க்கதரிசனங்களையும் அழிக்க அல்ல‌ நிறைவேற்றுவதற்கு வந்தேன் (மத்தேயு 5: 17-20) என்றுச் சொல்லியிருக்கும் போது, கிறிஸ்தவர்கள் ஏன் குறிப்பிட்ட சில பழைய ஏற்பாட்டு கட்டளைகளை பின்பற்றுவதில்லை? என்று அடிக்கடி கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானால், பழைய ஏற்பாட்டு சட்டம், பன்றிகளின் கறியை சாப்பிடக்கூடாது என்றும், எல்லா ஆண் குழந்தைகளும் எட்டாம் நாளில் விருத்தசேதனம் செய்யப்படவேண்டும் என்றும் சொல்கிறது. ஆனால், இந்த கட்டளையை மற்ற மார்க்கத்திலிருந்து வரும் (யூதரல்லாத‌) விசுவாசிகள் கடைபிடிக்கவேண்டியதில்லை என்று பவுல் அப்போஸ்தலர் சொல்லியுள்ளார். இதனை ஆதாரமாக வைத்துக்கொண்டு இஸ்லாமியர்கள், "அப்போஸ்தலர் பவுல் ஒரு பொய் அப்போஸ்தலராவார்" என்றுச் சொல்கிறார்கள். இவரது போதனைகளை கிறிஸ்தவர்கள் நிராகரிக்கவேண்டும் ஏனென்றால், இவரின் இந்த போதனை பழைய ஏற்பாட்டு கட்டளைகளையும், இயேசுவின் வார்த்தைகளையும் மீறுவதாக உள்ளது என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள்.
 
 
இப்படிப்பட்ட வாதம் புரிபவர்களில் ஒருவர் தான் ஷப்பீர் அலி என்பவராவார்:
 
பைபிளும் குர்‍ஆனும் பன்றியின் கறி சாப்பிடுவதை தடை செய்துள்ளன. இந்த தடையை இஸ்லாமியர்கள் அறிந்துவைத்துள்ளனர், மற்றும் அதனை தீவிரமாக கடைபிடுத்தும் வருகின்றனர். ஆனால், பைபிளை ப‌டிக்கும் அனேகர், இந்த‌ விவ‌ர‌ம் எங்கே உள்ள‌து என்று கூட‌ தெரிவ‌தில்லை என்றுச் சொல்கிறார்கள்...


இதில் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இயேசு (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) இந்த பன்றியின் கறியை சாப்பிடக்கூடாது என்ற கட்டளையை கடைபிடித்துள்ளார். அவரது சீடர்களும் கடைபிடித்துள்ளார்கள், அது போல அவரை பின் பற்றும் அனைவரும் கடைபிடிக்கவேண்டும். யார் யாரெல்லாம் இதனை கடைபிடிக்கவில்லையோ அவர்களுக்கு இறைவனின் கட்டளை இப்படி உள்ளது என்று நியாபகப்படுத்தவேண்டும். கடைசி நபியாகிய ரசூல் அவர்களை இறைவன் அனுப்பியதின் அனேக காரணங்களில் இதுவும் ஒன்றாகும், அல்லாஹ் சொல்கிறான்:

வேதமுடையவர்களே! மெய்யாகவே உஙகளிடம் நம்முடைய தூதர் வந்திருக்கின்றார். வேதத்திலிருந்து நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பவற்றில் பல விஷயங்களை அவர் உங்களுக்கு விளக்கிக் காட்டுவார். இன்னும், (இப்பொழுது தேவையில்லாத) அநேகத்தை விட்டுவிடுவார். நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள (திருக் குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது. (5:15) (The Meaning of the Glorious Qur'an 5:15). (Eating Pork; source)
 
 
கிறிஸ்தவர்கள் விருத்தசேதனம் செய்யக்கூடாது என்றுச் சொல்லி, பவுல் ஆதியாகமம் 17:14லில் சொல்லப்பட்ட தேவனின் உடன்படிக்கையை மீறியிருக்கிறார் என்று இன்னொரு இஸ்லாமியர் எழுதுகிறார்:
 
விருத்தசேதனத்தை கடைபிடிப்பது என்பது இறைவனின் சட்டத்தை கடைபிடிப்பது என்பதை பவுல் உணராமல், இறைவனின் சட்டத்தை அவர் உடைத்து (மீறி) விட்டார். (Bassam Zawadi, Paul Broke the Covenant of God; source)

 

 

மேலே கண்ட விவரங்கள் அனைத்தும், குறைந்தபட்சம் இஸ்லாமுக்கு மாறும் யூதர்கள் கட்டாயமாக பழைய ஏற்பாட்டு சட்டத்தைக் கைக்கொள்ளவேண்டும் என்றுச் சொல்வதாக உள்ளது, அதாவது பழைய ஏற்பாட்டு கட்டளைகளாகிய‌ "ஓய்வு நாளை" ஆசரிப்பதும், உணவு சம்மந்தப்பட்ட சட்டங்களை பின்பற்றுவதையும் கூறலாம். இஸ்ரவேல் மக்கள் ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்கவேண்டும் என்று பல இடங்களில் தேவன் கட்டளையிட்டுள்ளார்.

 

மேலும், கர்த்தர் மோசேயினிடத்தில்: நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்கவேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும். ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்கக்கடவன்; அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான். ஆறுநாளும் வேலைசெய்யலாம்; ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள்; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது; ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும். ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளக்கடவர்கள். அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும்; ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் என்றார். (யாத்திராகமம் 31:12-17; இதனையும் படிக்கவும்: யாத்திராகமம் 20:8-11)

 

யூதர்கள் ஓய்வு நாளை கடைபிடிக்க கடமைப்பட்டவர்கள் என்று குர்‍ஆன் ஒப்புக்கொள்கிறது, அதே நேரத்தில் அப்படி கடைபிடிக்காத யூதர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்றும் குர்‍ஆன் சொல்கிறது.

 

வேதம் வழங்கப்பட்டவர்களே! நாம் உங்கள் முகங்களை மாற்றி, அவற்றைப் பின்புறமாகத் திருப்பிவிடுவதற்கு முன்னே அல்லது (சனிக்கிழமையில் வரம்பு மீறிய) "அஸ்ஹாபுஸ் ஸப்து" என்றோரை நாம் சபித்த பிரகாரம் சபிக்கும் முன்னே, உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மையாக்கி அருளப் பெற்ற இ(வ்வேதத்)தை (குர்ஆனை) நம்புங்கள்;. அல்லாஹ்வின் கட்டளை, நிறைவேற்றப்பட்டே தீரும். (4:47)

(நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப்பற்றி நீர் அவர்களைக் கேளும் - அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்; ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு(த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன - ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாக்கி) வருவதில்லை - அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக் குள்ளாக்கினோம். (அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது) அவர்களில் சிலர், "அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்; அதற்கு (அந்த நல்லடியார்கள்); "எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள்." அவர்கள் எது குறித்து உபதேசிக்கப் பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்து விட்டபோது, அவர்களைத் தீமையைவிட்டு விலக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்; வரம்பு மீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொடுத்தோம். தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறிவிடவே, "நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று அவர்களுக்கு நாம் கூறினோம். (கு‍ர்‍ஆன் 7:163-166, இவ்வசனத்தையும் படிக்கவும் 2:65)


மேலும், அவர்களிடம் வாக்குறுதி வாங்கும் பொருட்டு, அவர்கள் மேல் தூர் (ஸினாய் மலையை) உயர்த்தினோம்;. இன்னும் 'இந்த வாசலில் தலை குனிந்து (தாழ்மையாக) நுழையுங்கள்' என்று சொன்னோம்;. மேலும் "(மீன் வேட்டையாடி) சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்" என்றும் அவர்களுக்கு கூறினோம்;. இன்னும் அவர்களிடமிருந்து மிக உறுதியான வாக்குறுதியும் வாங்கினோம். (கு‍ர்‍ஆன் 4:154; இவ்வசனத்தையும் படிக்கவும் 16:124)

 

ஆனால், யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அவமதிப்பதற்காக முஹம்மது வேண்டுமென்றே வெள்ளிக்கிழமையை இஸ்லாமியர்கள் ஒன்று கூடும் நாளாக மாற்றினார். இது மேலே கண்ட வசனத்திற்கு முரண்பட்டதாக தென்படுகிறது.

 

பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3486

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

உலகில் இறுதிச் சமுதாயமான நாம் தாம் மறுமையில் (தகுதியிலும், சிறப்பிலும்) முந்தியவர்கள் ஆவோம். ஆயினும், சமுதாயங்கள் அனைத்தும் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பட்டுவிட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப்பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபட்ட நாளாகும். எனவே, நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கும் அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்தவர்களுக்குரியதும் ஆகும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

 

இதுமட்டுமல்ல, முஹம்மது திருமணம் செய்துக்கொண்ட போரில் பிடிப்பட்ட ஒரு யூதப்பெண், முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு, சனிக்கிழமை ஓய்வு நாளை கடைபிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டார், அதற்கு அப்பெண் "இல்லை நான் சனிக்கிழமை ஓய்வு நாளை ஆசரிக்கவில்லை" என்று மறுத்துவிட்டார்.

 

இறைத்தூதரின் (ஸல் அல்லாஹு அலைஹிம் வஸல்லம்) மரணத்திற்கு பிறகு அந்த ஸ்திரி அனேக கஷ்டங்களை அனுபவித்தார்கள். அந்த பெண்ணுக்கு சொந்தமான ஒரு அடிமை சிறுமி அமிர் அல் மூமினீன் உமர் அவர்களிடம் சென்று, "அமிர் அல் மூமினீன் அவர்களே! ஷபியா அவர்கள் ஓய்வு நாளை விரும்புகிறார் மற்றும் யூதர்களுடன் நல்லுறவை வைத்துள்ளார்" என்றுச் சொன்னாள். உமர் அவர்கள் ஷபியா அவர்களிடம் வினவியபோது, "நான் ஓய்வு நாளை விரும்பவில்லை, ஏனென்றால் அல்லாஹ் அதற்கு பதிலாக நமக்கு வெள்ளிக்கிழமையை கொடுத்துள்ளார். என் சொந்த பந்தங்களாக‌ இருக்கும் யூதர்களிடம் மட்டுமே நான் நல்லுறவை பேணுகிறேன்" என்று பதில் கூறினார் ஷபியா. பிறகு தன் அடிமை பணிப்பெண்ணிடம், என்னைப் பற்றி இப்படிப்பட்ட பொய்யை உமரிடம் சொல்வதற்கு உன்னை தூண்டியது யார் என்று கேட்டபோது, அந்த பணிப்பெண் "ஷைத்தான்" என்றுச் சொன்னாள். அதற்கு ஷபியா "இப்போது நீ விடுதலை ஆக்கப்பட்டாய், போகலாம்" என்றுச் சொன்னார்கள். (Safiyya bint Huyay [based on a book by Ahmad Thompson]; source; see also here)

 
ப‌ழைய‌ ஏற்பாட்டின் சில‌ க‌ட்ட‌ளைக‌ளை ப‌வுலும் ம‌ற்றும் இத‌ர‌ புதிய‌ ஏற்பாட்டு எழுத்தாள‌ர்க‌ளும் ஒதுக்கிவிட்ட‌து ச‌ரி இல்லை என்று பல இஸ்லாமிய அறிஞர்கள் குற்றம் சாட்டுகிறார்க‌ள். அவ‌ர்க‌ளின் கூற்றுப்ப‌டி இறைத்தூத‌ர்க‌ள், அல்ல‌து ந‌பியாக‌ இருப்ப‌வ‌ர்க‌ள் இப்ப‌டிப்ப‌ட்ட‌ காரிய‌ங்க‌ளை ஒரு போதும் செய்ய‌மாட்ட‌ர்க‌ள் என்று அடித்துச் சொல்கிறார்கள். இவைகளை ஒருவர் கவனித்தால், யூதர்களின் ஓய்வு நாளை அவர்கள் கடைபிடிக்கவேண்டுமென்று அவர்களை முஹம்மதுவும், குர்‍ஆனும் கட்டாயப்படுத்தியிருக்க வேண்டும் என்று சொல்லத்தோன்றும்.

பழைய ஏற்பாட்டின் உணவு சம்மந்தப்பட்ட சட்டங்களைப் பற்றி என்ன சொல்லலாம்? பழைய ஏற்பாடு, வெறும் பன்றியின் மாமிசத்தையும் மட்டுமல்ல, அதோடு கூட "ஒட்டகத்தின் மாமிசத்தையும்" இன்னும் பல வகையான கடல் வாழ் உயிரிணங்களையும் உண்ணவேண்டாம் என்றுச் சொல்கிறது. ஆனால், இதற்கு நேர் எதிராக, இவைகளை உண்ண குர்‍ஆன் அனுமதி அளித்துவிட்டது. (படிக்கவும், லேவி 11ம் அதிகாரம்; உபாகமம் 14ம் அதிகாரம்; குர்‍‍ஆன் சூரா 5:96; சூரா 6:142-146; சூரா 16:14; சூரா 22:36)

கதை முடியவில்லை, இன்னும் இருக்கின்றது. விவாகரத்து செய்யப்பட்ட தன் முந்தையை மனைவியை ஒருவன் மறுபடியும் திருமணம் செய்துக் கொள்ளவேண்டுமென்றால், அந்தப் பெண் இன்னொரு ஆணை திருமணம் செய்துவிட்டு, அந்த புதிய கணவன் மறுபடியும் அவளை விவாகரத்து செய்துவிட்டால் தான் முதல் கணவன் அவளை திருமணம் செய்துக்கொள்ளவேண்டும் என்று குர்‍ஆன் சொல்கிறது. இந்த செயலைத் தான் யேகோவா தேவன் "அருவருப்பானது" என்கிறார் மற்றும் இப்படி செய்யக்கூடாது என்று கட்டளையிட்டுள்ளார். (படிக்க உபாகமம் 24:1-4; குர்‍ஆன் சூரா 2:230)

மேற்கண்ட விவரங்களை மனதில் நிறுத்திக் கொண்டவர்களாக, பழைய ஏற்பாட்டின் ஒரு சில கட்டளைகளை பின்பற்றவில்லை என்று புதிய ஏற்பாட்டின் மீது குற்றம் சுமத்தும் இஸ்லாமியர்களிடம் கீழ் கண்ட கேள்விகளை கேட்கவிரும்புகிறோம்:
 
  • இஸ்லாமியர்களின் கருத்துப்படி, யூதர்களும், கிறிஸ்தவர்களும் பழைய ஏற்பாட்டின் கட்டளைகளை கீழ்படியவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். இப்படி இருக்கும் போது, ஒரு யூதனோ அல்லது கிறிஸ்தவனோ இஸ்லாமுக்கு மாறும் போது, மோசேயின் கட்டளைகளை முழுவதுமாக எப்படி பின்பற்றமுடியும்? ஏனென்றால், குர்‍ஆன் அதே மோசேயின் பல கட்டளைகளை மீறச் சொல்கிறதே? இது எப்படி சாத்தியமாகும்?
  • இஸ்லாமுக்கு மாறும் யூதர்களோ (அ) கிறிஸ்தவர்களோ இன்னும் பழைய ஏற்பாட்டின் கட்டளைகளை கடைபிடிப்பதற்காக‌, முஹம்மதுவின் சில கட்டளைகளை மீறினாலோ அல்லது பின் பற்றாமல் விட்டுவிட்டாலோ ஒன்றும் பிரச்சனையில்லையா? முஹம்மதுவின் ஒருசில கட்டளைகளை பின்பற்றாமல் இருக்கலாமா?
  • அல்லது, முஹம்மதுவின் கட்டளைகளை பின்பற்றுவதற்காக, இஸ்லாமுக்கு மாறிய யூதர்கள்/கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டின் கட்டளைகளை பின்பற்றாமல் இருந்தாலும் பரவாயில்லையா? வேதம் அருளப்பெற்றவர்கள், முக்கியமாக கிறிஸ்தவர்கள் இன்னும் பழைய ஏற்பாட்டு கட்டளைகளை விடாமல் கடைபிடிக்கவேண்டும் என்று முஸ்லீம்கள் சொல்வது எப்படி சரியானதாக இருக்கும்?
  • உண்மையில், எபிரேய பைபிளில் உள்ள தேவனின் கட்டளைகளை ஒருவன் பின்பற்றிக்கொண்டு, அதே நேரத்தில் அவன் இஸ்லாமியனாக மாறினால், அவனை "முஸ்லீம்" என்று இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
  • க‌டைசியாக‌, சில‌ குறிப்பிட்ட‌ ப‌ழைய‌ ஏற்பாட்டு க‌ட்ட‌ளைக‌ளை ப‌க்க‌த்தில் வைத்துவிட்டார் என்றுச் சொல்லி, ப‌வுல் மீது குற்றம் சும‌த்தும் அதே இஸ்லாமிய‌ர்க‌ள் இப்போது என்ன‌ செய்ய‌வேண்டுமென்றால், அதே குற்றம் புரிந்த‌ முஹ‌ம்ம‌து மீது குற்ற‌ம் சும‌த்த‌ வேண்டும்? அப்படி இஸ்லாமிய‌ர்க‌ள் செய்வார்க‌ளா?
 
இந்த தலைப்பு பற்றிய இதர கட்டுரைகள்:

 

1) Muhammad and the Mosaic Law

2) Who Broke the Covenant: Paul or Muhammad?

3) An Examination of Shabir Ally's Fascination with Pigs (Being a Christian Response to his "Eating Pork" Article)

4) Do Muslims Truly Obey God's Everlasting Command, Or is Meherally Simply Trying to Pull A Fast One? - Circumcision

5) What is the day of congregation?

6) Sam Shamoun's answer to Bassam Zawadi's response


 

Source: Jewish and Christian Converts to Islam - Some Questions for Muslims to Ponder

 

 

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

அன்புள்ள உம‌ர் அண்ணாவுக்கு,

Sub: இஸ்லாத்திற்கு மாறும் யூத மற்றும் கிறிஸ்தவர்கள்‌ , இஸ்லாமியர்களை சிந்திக்கத்தூண்டும் சில கேள்விகள்

இஸ்லாத்தை பற்றி நன்கு தெரிந்த நீங்க‌ளே இந்த மாதிரியான க‌ட்டுரைக‌ளையெல்லாம் மொழி பெய‌ர்ப்பது மிக‌வும் விசித்திர‌மாக‌ உள்ளது.

Umar quote:
மேலே கண்ட விவரங்கள் அனைத்தும், குறைந்தபட்சம் இஸ்லாமுக்கு மாறும் யூதர்கள் கட்டாயமாக பழைய ஏற்பாட்டு சட்டத்தைக் கைக்கொள்ளவேண்டும் என்றுச் சொல்வதாக உள்ளது,

உம‌ர் அண்ணா இந்த க‌ருத்தை நீர் எங்கிருந்து பிடித்தீர்க‌ள்? எந்த முஸ்லிம் அறிஞர்,முஸ்லிமாக‌ மாறும் யூத‌,கிறிஸ்த‌வ‌ர்க‌ளை ப‌ழைய‌ ஏற்பாட்டு க‌ட்டளைக‌ளை பின்ப‌ற்ற சொல்கின்றார்.


ஒரு யூதனோ,கிறிஸ்த‌வரோ,பெளத்தரோ,ஹிந்துவோ தன்னுடைய‌ மதத்திலிருந்து முஸ்லிமாக‌ மாறினால் எதை பின்ப‌ற்ற வேண்டும் எதை பின்ப‌ற்றக்கூடாது என்ப‌து ஒருவேளை க‌ட்டுரை எழுதிய‌ சாம் ஷமானுக்கு தெரியாமல் இருக்கலாம்.ஆனால் முன்னால் இஸ்லாமிய‌ரான உங்க‌ளுக்கு இது தெரியாதா? நீங்க‌ள் ப‌ழைய‌ ஏற்பாட்டு க‌ட்டளைக‌ளை பின்ப‌ற்றும் இஸ்லாமிய‌ராக‌ இருந்திருந்தால் ஏன் ம‌த‌ம் மாறி வந்து மீண்டும் அதே ப‌ழைய‌ க‌ட்டளைக‌ளை பின்ப‌ற்றுப‌வ‌ராக‌ இருக்கப்போகிறீர்க‌ள்.ஒரு logic வேண்டாமா உமர் அண்ணா?


Umar quote:
யூதர்கள் ஓய்வு நாளை கடைபிடிக்க கடமைப்பட்டவர்கள் என்று குர்‍ஆன் ஒப்புக்கொள்கிறது, அதே நேரத்தில் அப்படி கடைபிடிக்காத யூதர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்றும் குர்‍ஆன் சொல்கிறது.


உமர் அண்ணா குர் ஆன் நட‌ந்த வ‌ர‌லாற்றை சொல்லிக்காட்டுதா? பின்ப‌ற்ற வேண்டிய‌ க‌ட்டளைக‌ளை சொல்லுதா?

Umar quote:
ஒருவர் கவனித்தால், யூதர்களின் ஓய்வு நாளை அவர்கள் கடைபிடிக்கவேண்டுமென்று அவர்களை முஹம்மதுவும், குர்‍ஆனும் கட்டாயப்படுத்தியிருக்க வேண்டும் என்று சொல்லத்தோன்றும்.


ஒரு சிறு திருத்தம் உமர் அண்ணா, க‌டைபிடித்திருக்க வேண்டும் ஆனால் அவ‌ர்க‌ள் த‌வ‌றி விட்டார்க‌ள் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும்.வேண்டுமானால் Mr. சாம் ஷமானுக்கு இப்படியெல்லாம் சொல்ல தோன்றலாம்.

umar quote:
1. இஸ்லாமியர்களின் கருத்துப்படி, யூதர்களும், கிறிஸ்தவர்களும் பழைய ஏற்பாட்டின் கட்டளைகளை கீழ்படியவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். இப்படி இருக்கும் போது, ஒரு யூதனோ அல்லது கிறிஸ்தவனோ இஸ்லாமுக்கு மாறும் போது, மோசேயின் கட்டளைகளை முழுவதுமாக எப்படி பின்பற்றமுடியும்? ஏனென்றால், குர்‍ஆன் அதே மோசேயின் பல கட்டளைகளை மீறச் சொல்கிறதே? இது எப்படி சாத்தியமாகும்?


நல்லா confuse பண்றீங்க‌ உமர் அண்ணா, ஒரு யூதரோ, கிறிஸ்த‌வ‌ரோ அவர் யூதராக‌ இருக்கும்போது,கிறிஸ்த‌வ‌ராக‌ இருக்கும் போது தங்க‌ளுடைய‌ வேத‌ம் என்று சொல்லிக்கொள்ளும் ப‌ழைய‌ ஏற்பாட்டு க‌ட்டளைக‌ளை ஏன் பின்ப‌ற்ற த‌வ‌றுகிறார்க‌ள் என்ப‌துதான் கேள்வி. ஆனால் அதுக்கு சம்மந்தமே இல்லாம‌ல் மொட்டை த‌லைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறார் சாம் ஷ‌மான் ஐயா. மேலும் ஒருவ‌ர் முஸ்லிமாக‌ மாறும்போது மோசே வுடைய‌ க‌ட்டளைக‌ளை பின்ப‌ற்ற வேண்டும் என குர் ஆன் சொல்கிறதா? இல்லை முஹ‌ம்மத் க்கு இறைவ‌ன் வ‌ழங்கிய‌ க‌ட்டளைக‌ளை பின்ப‌ற்ற சொல்கிறதா?

umar quote:
2. இஸ்லாமுக்கு மாறும் யூதர்களோ (அ) கிறிஸ்தவர்களோ இன்னும் பழைய ஏற்பாட்டின் கட்டளைகளை கடைபிடிப்பதற்காக‌, முஹம்மதுவின் சில கட்டளைகளை மீறினாலோ அல்லது பின் பற்றாமல் விட்டுவிட்டாலோ ஒன்றும் பிரச்சனையில்லையா? முஹம்மதுவின் ஒருசில கட்டளைகளை பின்பற்றாமல் இருக்கலாமா?


குர் ஆன் வ‌ச‌னத்தை குறிப்பிட்டத‌ன் மூல‌மாக‌ இதுக்கு ப‌தில் நீங்க‌ளே சொல்லிட்டீங்க‌.

வேதமுடையவர்களே! மெய்யாகவே உஙகளிடம் நம்முடைய தூதர் வந்திருக்கின்றார். வேதத்திலிருந்து நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பவற்றில் பல விஷயங்களை அவர் உங்களுக்கு விளக்கிக் காட்டுவார். இன்னும், (இப்பொழுது தேவையில்லாத) அநேகத்தை விட்டுவிடுவார். நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள (திருக் குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது. (5:15)

ஒருவ‌ர் முஸ்லிமாக‌ மாறும்போது ஏற்க‌னவே பின்ப‌ற்றிய‌ ப‌ழைய‌ க‌ட்டளை,புதிய‌ க‌ட்டளை,கீழ்க்கட்டளை எல்லாவ‌ற்றையும் விட்டு விட்டு திருக்குர் ஆனில் சொல்லிப்பட்டிருக்கும் இறுதி க‌ட்டளைக‌ளை ம‌ட்டும்தான் பின்ப‌ற்ற வேண்டும். ஆனால் இறுதிக்கட்டளைக‌ளில் சில‌,ப‌ல‌ க‌ட்டளைக‌ள் மோசே,ஆப்ர‌ஹாம்,நோவா,இயேசு போன்ற தீர்க்கத‌ரிசிக‌ளின் வாயிலாக‌ அவர்க‌ளுடைய‌ ச‌முதாய‌ மக்களுக்கு இறைவ‌னால் ஏற்க‌னவே அருளப்பட்டிருக்கலாம்.

எனவே ஒரு முஸ்லிம் என்ப‌வ‌ன் இறைவ‌ன் முஹ‌ம்மதுக்கு முன்பு ப‌ல‌ தூதர்க‌ளை தன்னுடைய‌ க‌ட்டளைக‌ளுட‌ன் அனுப்பினான் என்ப‌தையும், அவ்வாறான தூத‌ர்க‌ளூக்கு மத்தியில் எந்த பார‌ப‌ட்ச‌ம் காட்டாமலும் நம்பிக்கை கொண்டு, இறுதி மற்றும் க‌டைசி ஏற்பாடான திருக்குர் ஆனையும் அது பிறப்பிக்கும் க‌ட்டளைக‌ளை ம‌ட்டும்(மே) பின்ப‌ற்ற வேண்டும்.


umar quote:
3. அல்லது, முஹம்மதுவின் கட்டளைகளை பின்பற்றுவதற்காக, இஸ்லாமுக்கு மாறிய யூதர்கள்/கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டின் கட்டளைகளை பின்பற்றாமல் இருந்தாலும் பரவாயில்லையா? வேதம் அருளப்பெற்றவர்கள், முக்கியமாக கிறிஸ்தவர்கள் இன்னும் பழைய ஏற்பாட்டு கட்டளைகளை விடாமல் கடைபிடிக்கவேண்டும் என்று முஸ்லீம்கள் சொல்வது எப்படி சரியானதாக இருக்கும்?


முத‌ல் பாதி கேள்விக்கு மேலே சொன்ன ப‌தில்தான். இர‌ண்டாவ‌து பாதி கேள்விக்கு ப‌தில், கிறிஸ்த‌வ‌ர்க‌ள் ப‌ழைய‌ ஏற்பாட்டு க‌ட்டளைக‌ளை வேத‌ம் என்று சொல்லிக்கொண்டு பைண்டிங் செய்து கையில் புத்தக‌ வ‌டிவில் வைத்துக்கொண்டு இதை பின்ப‌ற்றுகிறோம் என்று சொல்லுவ‌தால்தான் முஸ்லிம்க‌ளும் அவ்வாறு சொல்ல நேரிடுகிறது. முத‌லில் கிறிஸ்தவ‌ர்க‌ளாகிய‌ நீங்க‌ள் மறுப்பு தெரிவியுங்க‌ள் அதாவ‌து ப‌கிர‌ங்க‌மாக‌ சொல்லுங்க‌ள் ப‌ழைய‌ ஏற்பாட்டு க‌ட்டளைக‌ள் கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கு அல்ல என்று. பிறகு எந்த முஸ்லிம் அறிஞரும் ப‌ழைய‌ ஏற்பாடு க‌ட்டளைக‌ளை மேற்கோள் காட்டி க‌ட்டுரை எழுத‌ மாட்டார்க‌ள்.

Umar quote:
4. உண்மையில், எபிரேய பைபிளில் உள்ள தேவனின் கட்டளைகளை ஒருவன் பின்பற்றிக்கொண்டு, அதே நேரத்தில் அவன் இஸ்லாமியனாக மாறினால், அவனை "முஸ்லீம்" என்று இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்வார்களா?


போதுமான ப‌தில் கிடைத்திருக்கும் என ந‌ம்புகிறேன்.by theway உமர் அண்ணா,அது என்ன எபிரேய‌ பைபிள்? அப்போ நீங்க‌ளே மறைமுக‌மாக‌ ஒத்துக்கிறீங்க‌ போலிருக்கு!!!!ஹிஹி

Umar quote:
5. க‌டைசியாக‌, சில‌ குறிப்பிட்ட‌ ப‌ழைய‌ ஏற்பாட்டு க‌ட்ட‌ளைக‌ளை ப‌க்க‌த்தில் வைத்துவிட்டார் என்றுச் சொல்லி, ப‌வுல் மீது குற்றம் சும‌த்தும் அதே இஸ்லாமிய‌ர்க‌ள் இப்போது என்ன‌ செய்ய‌வேண்டுமென்றால், அதே குற்றம் புரிந்த‌ முஹ‌ம்ம‌து மீது குற்ற‌ம் சும‌த்த‌ வேண்டும்? அப்படி இஸ்லாமிய‌ர்க‌ள் செய்வார்க‌ளா?


ப‌வுல் அடிக‌ளார் மேலே ஏன் குற்றம் சுமத்தப்படுது,இயேசு ப‌ழைய‌ ஏற்பாடு follow ப‌ண்ணுங்க‌ன்னு சொல்றார்.ஆனால்,ப‌வுல் ஐயா வேண்டாம்னு சொல்றார்.எது உண்மைன்னுதான் கேக்குறோம் ஏன்னா இர‌ண்டும் ஒரே புத்தக‌த்தில்தான் இருக்குது.அவ்வளவுதான் உமர் அண்ணா.

Bye
mist.