ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

புதன், 3 ஏப்ரல், 2013

கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் – பாகம் 6 : ஹலோ பாஸ்டர், ஒரு முஸ்லிம் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்யப்போகிறேன்!

ஹலோ பாஸ்டர், ஒரு முஸ்லிம் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்யப்போகிறேன்!

  [கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் பாகம் 1, பாகம் 2, பாகம் 3,  பாகம் 4 மற்றும்  பாகம் 5 ஐ படிக்க சொடுக்கவும்.]

[இந்த கட்டுரையை நான் முழுவதுமாக முடிக்கவில்லை, இதில் நிறைய சிக்கல்கள் உள்ளது. வாசகர்கள் இந்த உரையாடலை தங்கள் பாணியில் தொடரும் படி கேட்டுக்கொள்கிறேன். கட்டுரையை முழுவதுமாக படித்து, கடைசியில் துண்டிக்கப்பட்ட உரையாடலை நீங்கள் தொடர்ச்சியாக எழுதி (இரண்டு பக்கம் மட்டுமே) எனக்கு அனுப்பினால், அவைகளை சரி பார்த்து என் தளத்தில் பதிப்பேன்]

முன்னுரை: உமருடைய நண்பர் பாஸ்டர் ஆபிரகாம், இன்று உமரை தொலைப் பேசியில் அழைத்தார். தன் சபையில் உள்ள ஒரு விசுவாசி (பெயர் ஜோசப்) ஒரு முஸ்லிம் பெண்ணை காதலிப்பதாகவும், அவர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துக்கொள்ளப் போவதாகவும் கேள்விபட்டதாக அறிவித்தார். அந்த விசுவாசியோடு பேசவேண்டும், இன்று மாலை 6 மணிக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்தித்து பேசுவதாக அவர் தெரிவித்தார். உமரும், பாஸ்டர் ஆபிரகாம் அவர்களும், ஜோசப் (விசுவாசி) மூவரும் சந்திக்கிறார்கள். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை மேற்கொண்டு படித்து தெரிந்துக்கொள்வோம்.

ஜோசப்: பாஸ்டர் நாம் யாருக்காக காத்துக்கொண்டு இருக்கிறோம்? ஏன் என்னை இங்கு வரச்சொன்னீர்கள்?

பாஸ்டர் ஆபிரகாம்:  கொஞ்ச நேரம் பொறுத்திரு, நான் சொல்கிறேன். ஒரு நண்பருக்காக நான் காத்துக்கொண்டு இருக்கிறேன், அவர் வந்ததும் நான் விஷயத்துக்கு நேரடியாக வந்துவிடுகிறேன்.

ஜோசப்: ஓகே.

[சிறிது நேரத்திற்குள் உமர் வருகிறார், உரையாடல் தொடர்கிறது]

பாஸ்டர் ஆபிரகாம்:  வாங்க உமர், உங்களுக்காகத் தான் காத்துக்கொண்டு இருக்கிறோம்.

உமர்: ரொம்ப நேரம் காத்திருக்க வெச்சிட்டேனோ?

பாஸ்டர் ஆபிரகாம்:  இல்லையில்லை. இப்போது தான் நாங்களும் வந்தோம்.

தம்பி ஜோசப் அவர் தான் "சகோதரர் உமர்", என் நண்பர்.

ஜோசப்: ஓ.. உமரா? இது முஸ்லிம் பேராக இருக்கிறதே! நல்லதாப் போச்சு.

[ஜோசப் உடைய கண்களில் ஒரு வகையான ஒளி வந்து சென்றது]

பாஸ்டர் ஆபிரகாம்:  ஏன் அவ்வளவு ஆச்சரியப்படுகிறாய்?

ஜோசப்: ஒன்றுமில்லை, சும்மா தான். எனக்கு முஸ்லிம்கள் என்றால் ஒரு வகையான பிரியம். எனக்கு சில முஸ்லிம் நண்பர்கள்  இருக்கிறார்கள்.

[பாஸ்டர் மனதுக்குள் நினைக்கிறார் முஸ்லிம்கள் என்றால் ஏன் உனக்கு பிரியம் இருக்காது? கண்டிப்பாக இருக்கும். முஸ்லிம் பொண்ணை காதலித்தாய் அல்லவா, முஸ்லிம்கள் என்றால் பிரியம் இருக்கத்தான் செய்யும்]

பாஸ்டர் ஆபிரகாம்:  நீ வேலை விஷயமாக வெளியூருக்கு போனபோது, நம் சபையில் இஸ்லாம் பற்றிய கூட்டத்தில் இவர் பேசினார்.

ஜோசப்: ஓ அப்படியா! நான் அந்த கூட்டத்தில்  கலந்துக்கொள்ள முடியாமல் போனது, நேற்று தான் நான் ஊருக்கு வந்தேன்.

பாஸ்டர் ஆபிரகாம்:  சரி, நான் விஷயத்துக்கு வருகிறேன். உங்கள் இருவரையும் நான் அழைத்த நோக்கம் இது தான். தம்பி ஜோசப்பும் மற்றும் அவரது குடும்பமும் எங்கள் சபைக்கு பல ஆண்டுகளாக வருகிறார்கள். ஜோசப்புடைய அப்பா நம் சபையின் மூப்பராக இருக்கிறார். நான் இவர்களை அதிகமாக  நேசிக்கிறேன். தம்பி ஜோசப் ஒரு சாஃப்ட்வேர் கம்பனியில் வேலை செய்கிறார், மேலும் இப்போது அவரது பெற்றோர்கள் இவருக்காக பெண் பார்க்கும் படி என்னிடம் சொல்லியுள்ளார்கள், நான் தேடிக்கொண்டு இருக்கிறேன்.

ஜோசப்: பாஸ்டர், நீங்க இதைச் சொல்லவா என்னை இங்கு அழைத்தீங்க?

பாஸ்டர் ஆபிரகாம்: இருப்பா! நான் இன்னும் பேசி முடிக்கவில்லை. ஒரு முக்கியமான விஷயம் என் காதுக்கு எட்டியது, அதை ஊர்ஜீதம் படித்திக்கொள்ளவும், சில நல்ல விஷயங்களை தம்பியோடு பகிர்ந்துக்கொள்ளவும் நான் இந்த சிறிய சந்திப்புக்கு உங்கள் இருவரையும் அழைத்தேன்.

தம்பி நான் இப்படி கேட்கிறேன் என்றுச் சொல்லி, என் மீது கோபம் கொள்ளவேண்டாம். உன்னை அதிகமாக நான் நேசிக்கிறேன் என்பதால் சொல்கிறேன். மேலும் என் நண்பர் உமர் மூன்றாம் நபர் அல்ல. அவரை வைத்துக்கொண்டு இப்படி நான் கேட்கிறேன் என்றுச் சொல்லி நீ வருத்தப்படவேண்டாம்.

ஜோசப்: பாஸ்டர், நான் கோபித்துக் கொள்ளமாட்டேன், நீங்க என் ஆவிக்குரிய தகப்பன், எனவே எதை வேண்டுமானாலும் கேளுங்க.

பாஸ்டர் ஆபிரகாம்: தம்பி எனக்கு ஒரு செய்தி காதுக்கு எட்டியது, அதாவது நீ ஒரு முஸ்லிம் பெண்ணை காதலிப்பதாகவும், நீங்கள் இருவரும் சேர்ந்து குடும்பத்துக்கு தெரியாமல், ரிஜிஸ்டர் கல்யாணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் கேள்விப்பட்டேன். இது உண்மையா? கூச்சப்படவேண்டாம் தம்பி, தைரியமாகப் பேசு.

[ஜோசப் உடைய கண்களில் ஆச்சரியத்தோடு கூடிய குழப்பம் தெரிகின்றது, இதுவரை முகத்தில் காணப்பட்ட மகிழ்ச்சி குறைந்துப் போனது]

ஜோசப்: பாஸ்டர், என் கம்பனியில் வேலை செய்யும், மும்தாஜ் என்ற முஸ்லிம் பெண்ணை  நான் கடந்த இரண்டு வருஷமாக உயிருக்கு உயிராக நேசிக்கிறேன். அவளும் என்னை நேசிக்கிறாள்.

உமர்: உங்க குடும்பத்துக்கோ, அந்த பெண்ணின் குடும்பத்துக்கோ உங்கள் காதல் பற்றி தெரியுமா?

ஜோசப்: தெரியாது. நானும் சொல்லவில்லை. அவளும் சொல்லவில்லை. அவங்க வீட்டிலே சொன்னா, அவளின் இரு அண்ணன்கள், அவளை அடித்துவிடுவார்கள், அதன் பிறகு வேலைக்கு அனுப்பமாட்டார்கள் என்பதால் சொல்லவில்லை. அவங்க அப்பா, நம்ம ஊரிலே இஸ்லாமிய சமுதாயம் மத்தியிலே பெரிய ஆளு.

பாஸ்டர் ஆபிரகாம்: நீ அவளுடைய பணம் செல்வாக்கு போன்றவற்றை பார்த்து காதலிச்சியா?

ஜோசப்: அப்படியெல்லாம் இல்லை பாஸ்டர். நானும் கைநிறைய சம்பாதிக்கிறேன், பிடிப்பு எல்லாம் போக கைக்கு மாசத்துக்கு 40 ஆயிரம் வருகிறது. எனக்கும் சொந்த வீடு எல்லாம் இருக்கு, நான் ஏன் பணத்துக்கு ஆசைப்பட போகிறேன். அவங்க குடும்பம் ஒப்புக்கொண்டால், அவர்களுக்கு ஒரு பைசா செலவில்லாமல் நான் திருமணம் செய்துக்கொள்வேன்.

உமர்: பாரு தம்பி. ஒரு கிறிஸ்தவன் இன்னொரு விசுவாசியான பெண்ணை கல்யாணம் செய்துக்கொள்ள வேண்டுமே ஒழிய, இப்படி அவிசுவாசியை  திருமணம் செய்துக் கொள்ளக்கூடாது.

ஜோசப்: பிரதர், நீங்க சொல்வது உண்மை  தான். ஆனால், காதல் என்பது மதம், ஜாதி பார்த்து வருவதில்லையே! எனக்கு அந்த பெண்ணை ரொம்ப பிடிச்சுப்போச்சு, மேலும் இந்த காலத்திலே அடக்கம் ஒடுக்கமாக இருக்கும் பெண்ணை பார்ப்பது கடினம். ஒன்னு சொல்கிறேன், நாங்கள் இருவரும் இதுவரை ஊருக்கு வெளியே எங்கேயும் சுற்றியது இல்லை, சினிமா, பீச்சு என்று எங்கும் போனதில்லை.  

உமர்: நீ சொல்வதை நான் ஏற்கிறேன். ஆனால் தம்பி, ஒரு ஆண் பெண் திருமணத்திற்கு பின்பு, உடலால் இணைவதற்கு முன்பு அவர்களின் உள்ளங்களில் உள்ள விசுவாசத்தில் அவர்கள் இணைய வேண்டும். கணவனும் மனைவியும் இயேசுவை நம்புகிறவர்களாக இருத்தல் மிகவும் முக்கியமானது. ஆனால், உன் விஷயத்தில், ஒரு அவிசுவாசியை நீ திருமணம் செய்வது ஒரு விசுவாசிக்கு தகாது.

ஜோசப்: நான் திருமணம் செய்துக்கொண்ட பிறகு அவளை விசுவாசத்திற்குள் கொண்டுவந்து விடுவேன்.

பாஸ்டர் ஆபிரகாம்: தம்பி ஜோசப், இப்போது என் கேள்விக்கு பதில் சொல். ஒரு  கிறிஸ்தவன் மற்றவர்களை துக்கப்படுத்தலாமா? மனம் புண்படும் படி நடந்துக்கொள்ளலாமா?

ஜோசப்: இல்லை, துக்கப்படுத்தும்  படி நடந்துக்கொள்ளக்கூடாது.

பாஸ்டர் ஆபிரகாம்: அப்படியானால், நீ ஏன் மற்றவர்கள் துக்கப்படும் படி நடந்துக் கொள்ளப் பார்க்கிறாய்?

ஜோசப்: நானா? அப்படி ஒன்றும் நான் செய்யவில்லையே!

பாஸ்டர் ஆபிரகாம்: அந்த பெண்ணின் குடும்பத்துக்கு தெரியாமல்,  உன் குடும்பத்துக்கு தெரியாமல், திருமணம் செய்ய முயற்சிப்பது, பெற்றோர்களின் மனதை துக்கப்படுத்தாதா?

ஜோசப்: என்னை என்ன செய்யச் சொல்றீங்க? அவங்க வீட்டிலே ஒத்துக்க மாட்டாங்க, என் வீட்டிலேயும் ஏற்றுக்கொள்ள மாட்டாங்க. எனக்கு வேறு வழியில்லையே.

பாஸ்டர் ஆபிரகாம்: நீ அவளின் பெற்றோர்களுக்கு எதிராக செய்வது பாவமாகும். இந்த செயலினால் அவர்களின் மனம் எவ்வளவு வேதனைப்படும்.

ஜோசப்: நான் அவளை இராணி மாதிரி பார்த்துக்கொள்வேன், கைநிறைய சம்பாதிக்கிறேன், அவளை நல்லபடியாக காலம் முழுவதும் கண் கலங்காமல் பார்த்துக்கொள்வேன்.

பாஸ்டர் ஆபிரகாம்: நான் இப்படி கேட்கிறேன் என்றுச் சொல்லி, நீ என்னை தப்பா நினைக்காதே! இப்போது நீ நல்லபடியாக அவளை காப்பாற்றுவாயா நல்ல கணவனாக இருப்பாயா என்பது கேள்வியில்லை. அவர்களின் அனுமதி  இல்லாமல் அவர்கள் வீட்டுப்பெண்ணை திருமணம் செய்வது தவறு.

உனக்கு ஒரு தங்கை இருந்து, அவளை ஒரு முஸ்லிம் காதலித்து, நான் அவளை கண்கலங்காமல் பார்த்துக்கொள்வேன் என்ற நினைப்பில், உங்களுக்கு தெரியாமல், அவளை அழைத்துக்கொண்டு போய் ரிஜிஸ்டர் கல்யாணம் செய்துக்கொண்டால் நீ சும்மா இருப்பாயா? இது சரியான செயலாகுமா? சொல்?

ஜோசப்: அது எப்படி சரியாகும். பெற்றோர்களுக்குச் சொல்லாமல் ஓடிப்பொய் கல்யாணம் செய்துக்கொள்வது சரியானது அல்ல.

பாஸ்டர் ஆபிரகாம்: இதைத் தான் நீயும் செய்யப்போகிறாய்! இது எப்படி சரியானதாக இருக்கும்? உனக்கு ஒரு நியாயம் மற்றவனுக்கு ஒரு நியாயமா? பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்வது தப்பு.

ஜோசப்: நாங்கள் பெற்றோர்களுக்குச் சொல்லத் தயார் ஆனால், அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லையானால்?

பாஸ்டர் ஆபிரகாம்: அவர்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள் என்பதால் நீ அவர்களின் பெண்ணை, அவர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்வது சரியானது அல்ல. முதலாவது அவர்களுக்குச் சொல்லவேண்டும், உன் வீட்டிலும் பெற்றோர்களுக்குச் சொல்லவேண்டும். அதன் பிறகு தான் மற்ற காரியங்கள் அனைத்தும். நீ ஒரு நல்ல விசுவாசியாக இருந்தால், நான் சொல்வதைச் செய்! நான் உனக்கு நல்லதையே செய்வேன் என்ற நம்பிக்கை இருந்தால், உடனே அந்த பெண்ணுக்கு போன்செய்து, நாளைக்கு நாம் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்யப்போவதில்லை. முதலாவது உன் பெற்றோருக்கும், என் பெற்றோருக்கும் சொல்லி, அவர்களின் ஒப்புதலின்  படியே திருமணம் செய்வோம் என்று சொல். அதன் பிறகு என்ன செய்யலாம் என்று நாம் முடிவு எடுப்போம்.

[ஜோசப் ஒன்றும் பேசாமல், அப்படியே தலை குணிந்துவிட்டான், கண்களிலிருந்து கண்ணீர் ஒவ்வொரு சொட்டாக தரையில் விழுகிறது. எல்லாரும் அமைதியாக சில நிமிடங்கள் அப்படியே இருந்துவிட்டார்கள், பாஸ்டர் மறுபடியும் பேசுகிறார்....]

பாஸ்டர் ஆபிரகாம்: தம்பி, நீ கவலைப்படாதே, நான் எப்படியாவது உன் பெற்றோர்களிடம் முதலாவது பேசுகிறேன். அவர்களை ஒப்புவிக்க முயற்சி எடுக்கிறேன். அதன் பிறகு அந்த பெண்ணின் பெற்றோர்களை நாம் சந்தித்து பேசுவோம். நீ நம்பிக்கை வை, தைரியத்தை விடாதே. ஆனால் ஒன்று, நாளைக்கு செய்யவிருக்கும் திருட்டுக் கல்யாணம் மட்டும் வேண்டாம்.

[ஜோசப் ஒன்றும்  பேசவில்லை, சில அடி தூரம் நிதானமாக நடந்துச் செல்கிறான், அதன் பிறகு தன் மொபைல் போனை எடுத்து, ஒரு நண்பரை டயல் செய்கிறான். அந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பெண் பேச ஆரம்பிக்கிறாள். ஒரு புறம் கண்களில் கண்ணீர் வடிந்துக்கொண்டு இருக்கிறது, இன்னொரு புறம், "தவறு செய்யக்கூடாது" என்ற நல்ல நோக்கம் அவன் நெஞ்சை பிளந்துக்கொண்டு இருக்கிறது, அவன் பேச ஆரம்பிக்கிறான். ஐந்து நிமிடம் பேசினான், தொடர்ந்து தன் கண்களிலிருந்து கண்ணீர் கன்னங்கள் வழியாக தரையில் மழைத்துளிபோல விழுந்துக்கொண்டே இருந்தது. அவள் அந்தப் பக்கத்திலிருந்து அழுதாள், இவன் இப்பக்கத்திலிருந்து அழுதான், கடைசியாக இருவரும் சம்மதித்தனர். மொபைலை ஆஃப் செய்தவண்ணமாக, பாஸ்டரை நோக்கி நடந்தான்.]

ஜோசப்: [மெல்லிய குரலில்] பாஸ்டர், நீங்க சொன்னது போலவே, நான் சொல்லிவிட்டேன், மும்தாஜும் ஒப்புக்கொண்டாள். நாளைக்கு நாங்கள் குடும்பத்துக்கு தெரியாமல் திருமணம் செய்யப்போவதில்லை.

தன் பெற்றோர்களுக்கும், குடும்பத்துக்கும்  தெரியாமல் திருமணம் செய்வது எவ்வளவு துக்கத்தை அவளுக்கு உண்டாக்கியிருக்கிறது என்பதை இப்போது நான் அறிந்துக் கொண்டேன். எனக்காகவே அவள் இந்த திருமணத்துக்கு ஒப்புக்கொண்டு இருக்கிறாள். இப்போது நான் இந்த புதிய முடிவை சொன்னதும், கொஞ்சம் துக்கப்பட்டாள் ஆனால், நம்பிக்கையோடு எனக்காக காத்திருப்பேன் என்றுச் சொன்னாள்.

பாஸ்டர் ஆபிரகாம்: நல்ல காரியம் செய்தாய். கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.

ஜோசப்: அடுத்து என்ன? எப்போது நீங்க பேசுவீங்க?

உமர்: ஒரு நல்ல பாஸ்டர் மற்றும் நல்ல விசுவாசி இருவரையும் கண்ட திருப்தியில் நான் இருக்கிறேன். தம்பி நீ நல்ல விஷயத்தை செய்து இருக்கிறாய். உன்னை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது.

பாஸ்டர் இப்போது உங்களுக்கு சில கேள்விகள்.

பாஸ்டர் ஆபிரகாம்: என்ன கேள்விகள்?

உமர்: தம்பி ஜோசப்புடைய பெற்றோர்கள் பற்றி கூறுங்களேன்.  அவர்களின் படிப்பு, குணம் போன்றவைகள் பற்றி சொல்லுங்களேன்.

பாஸ்டர் ஆபிரகாம்: எனக்கு புரிகின்றது. ஜோசப்புடைய பெற்றோர்கள் இதற்கு ஒப்புக்கொள்வார்களா? என்பது தானே உங்கள் சந்தேகம். அந்த விஷயத்தை என்னிடம் விட்டுவிடுங்க. அவங்க படித்தவர்கள் தான், நல்ல நிலையில் இருக்கிறார்கள், நிச்சயமாக ஜோசப்பின் நிலையை புரிந்துக்கொள்வார்கள். அவர்கள் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். நான் அவர்களிடம் பேசி, இதற்கு சம்மதிக்க வைப்பது என் வேலை.

[ஜோசப் பாஸ்டரை கூர்ந்து பார்த்துக்கொண்டு இருக்கின்றான், அவனது உள்ளம் மௌனமாக அவருக்கு நன்றியை சொல்லியது]

உமர்: அப்படியானால், ஒரு பிரச்சனை தீர்ந்தது. இன்னொரு மிகப்பெரிய பிரச்சனை இப்போது இருக்கிறது.

பாஸ்டர் ஆபிரகாம்: எனக்கு புரியுது, அந்த பெண்ணின் பெற்றோர்களை சம்மதிக்க வைக்கவேண்டும், அது தானே இரண்டாவது பிரச்சனை?

உமர்: இல்லை, அது அல்ல,  அப்பெண்ணின் பெற்றோர்களையும் நாம் முயற்சி செய்து சம்மதிக்க வைத்துவிடலாம்.

ஜோசப்:  அவர்கள் சம்மதித்து விட்டால்,  அதன் பிறகு பிரச்சனை இருக்காதே.

உமர்: ஜோசப், அவர்கள் குடும்பம் பற்றி கொஞ்சம் சொல்லேன். அதாவது அவர்கள் மத காரியங்களில் எப்படி, மேலோட்டமாக இருப்பவர்களா? அல்லது தீவிரமாக முக்கியத்துவம் கொடுப்பவர்களா?

ஜோசப்: ஓ.. அதுவா. அவர்கள் அதிக பக்தியுள்ளவர்கள். அவர்கள் வீட்டில் எல்லாரும் தினமும் ஐந்து வேளை தொழுவார்கள். அவர்கள் மக்காவிற்கும் புனித யாத்திரை சென்று வந்துள்ளார்கள் என்று மும்தாஜ் என்னிடம் சொன்னதுண்டு.  நம் தமிழ்நாட்டில் உள்ள ஒரு முக்கியமான இஸ்லாமிய குழுவில், அவளின் அண்ணன்கள் இருவரும் நல்ல பதிவிகளில் இருக்கிறார்கள். அடிக்கடி இஸ்லாமிய நிகழ்ச்சியில்  பேசுவார்கள். அவர்களின் குடும்பம் ஒரு நல்ல பக்தியுள்ள குடும்பம்.

உமர்: ஓ.. அது தான் பிரச்சனை. அவர்கள் பக்தியுள்ள குடும்பமாக இருப்பது தான் மிகப்பெரிய பிரச்சனை.

ஜோசப்: அவர்கள் பக்தியுள்ளவர்கள், எனவே கொஞ்சம் அமைதியாகவே நடந்துக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

உமர்: தம்பி ஜோசப், அவர்கள் அமைதியாக இருந்தாலும், இஸ்லாம் அவர்களை சும்மா விடாது.

ஜோசப்: அது எப்படி?

உமர்: ஒரு முஸ்லிம் ஆண், ஒரு கிறிஸ்தவ பெண்ணை திருமணம் செய்துக்கொண்டால், அதனை அவர்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள், இஸ்லாம் இதனை ஏற்றுக்கொள்ளும். ஏனென்றால், அந்தப் பெண் தன்  கண்வன் குடும்பத்தில் (முஸ்லிம் குடும்பத்தில்) ஒரு அங்கமாக மாறிவிடுவாள். அவளை ஒரு முஸ்லிம் பெண்ணாக மாற்றுவது மிகவும் சுலபம்.

ஆனால், ஒரு முஸ்லிம் பெண், ஒரு கிறிஸ்தவனை திருமணம் செய்துக்கொண்டால், அவள் தன் கணவன் வீட்டில் (கிறிஸ்தவ வீட்டில்) வாழ்வாள். இப்போது அவள் தன் கணவனின் மார்க்கத்தை பின்பற்றக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருப்பதினால், இஸ்லாம் இதனை ஏற்றுக்கொள்ளாது.

ஜோசப்: இது அநியாயமாக இருக்கிறதே! அவர்களுக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?

உமர்: ஆம், தம்பி, இந்த பிரச்சனை இருப்பதினால், அவர்கள் உனக்கு பெண் தருவது கொஞ்சம் கடினமே!

ஜோசப்: நான் ஒன்று செய்கிறேன். அவள் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு முஸ்லிமாகவே என் வீட்டில் இருக்கட்டுமே! அவள் தினமும் ஐந்து வேளை தொழட்டும், குர்-ஆன் படிக்கட்டும், மத விஷயத்தில் நான் எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கமாட்டேன். என் தெய்வத்தை நான் தொழுகிறேன், அவள் தன் தெய்வத்தை தொழட்டும்.

உமர்: நீ சொல்வதை அவர்கள் நம்பமாட்டார்கள்.

ஜோசப்: ஏன் நம்ப மாட்டார்கள்? நான் தான் உறுதியாக எல்லாருக்கும் முன்பாக சொல்லி, அதன்படியே  வாழுவேனே!

உமர்: அப்படியா! ஒருவேளை உன் மனைவி சில ஆண்டுகளுக்கு பின்பு, நான் என் கணவனின் இறைவனையே வணங்குவேன் என்றுச் சொல்லி, ஒரு கிறிஸ்தவ பெண்ணாக மாறிவிட்டால், அப்போது நீ என்ன சொல்வாய்? இப்படி நடக்க வாய்ப்பு இருக்கின்றது அல்லவா?

ஜோசப்: ஆம், இப்படி நடக்க வாய்ப்பு இருக்கிறது, பழம் நழுவி பாலில் விழுந்தது என்ற  மகிழ்ச்சியில் அதனை நான் அங்கீகரிப்பேன்.

உமர்: இதைத் தான் இஸ்லாம் ஏற்றுக்கொள்ளாது.

இஸ்லாமின்  படி, ஒரு முஸ்லிம் பெண் ஒரு முஸ்லிம் அல்லாத மனிதனோடு திருமணம் செய்துக் கொள்ளக்கூடாது, அல்லது வாழக்கூடாது.

ஜோசப்: ஒருவேளை ஒரு இஸ்லாமிய தம்பதிகளில், கணவன் என்பவன் இஸ்லாமை விட்டு கிறிஸ்தவனாக மாறிவிட்டான் என்று வைத்துக்கொள்வோம். அப்போது என்ன செய்யவேண்டும்?

உமர்: இப்படிப்பட்ட நிலையில், அவன் வாழுவது ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தால், அவன் மறுபடியும் முஸ்லிமாக மாற வாய்ப்பு அளிக்கப்படும். அவன் முஸ்லிமாக மாற மறுத்தால், அவனுக்கும் அவன் மனைவிக்கும் விவாகரத்தை இஸ்லாமிய அரசாங்கமே கொடுத்து, அவர்கள் இருவரை பிரித்துவிடும், பிள்ளைகள் தாயிடம் மட்டுமே இருக்கவேண்டும். மேலும் இஸ்லாமை விட்டு வெளியேறியதால் அந்த மனிதனுக்கு மரண தண்டனை தரப்படும்.

ஜோசப்: ஒருவேளை அவனது முஸ்லிம் மனைவி அரசாங்கத்திடம்,  அவர் கிறிஸ்தவராகவே இருக்கட்டும், நாங்கள் அவரை விட்டு பிரியமாட்டோம் என்றுச் சொன்னால்?

உமர்: இஸ்லாமிய அரசாங்கம் இதனை அங்கீகரித்துக்கொள்ளாது. அந்த பெண் விரும்புவதை அரசாங்கம் செய்யாது. இஸ்லாமிய சட்டம் சொல்வதைத் தான் செய்யும். 

இதுமட்டுமல்ல, இந்துக்களாக இருக்கும் ஒரு தம்பதியரில், மனைவி முஸ்லிமாக மாறிவிடுகிறாள் என்று வைத்துக்கொள்வோம், இப்போதும், இஸ்லாமிய சட்டம் அந்த கணவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கும், அதாவது நீ இஸ்லாமுக்கு மாறிவிடு,  இல்லையென்றால், உன் மனைவி உன்னை விவாகரத்து செய்யவேண்டி வரும். ஒரு முஸ்லிம் பெண், ஒரு இந்துவோடு வாழக்கூடாது.

ஜோசப்: ரொம்ப கொடுமையாக இருக்கே! ஏன் இப்படிப்பட்ட சட்டம் இஸ்லாமில் உள்ளது.

உமர்: உதாரணத்திற்கு, உனக்கும் மும்தாஜுக்கும் திருமணம் ஆகி, உங்களுக்கு பிள்ளைகள் பிறக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

ஜோசம்: என்ன பாஸ்டர், பிரதர் "உதாரணத்திற்கு", "வைத்துக்கொள்வோம்" என்று என் திருமணம் பற்றிச் சொல்கிறார். கண்டிப்பாக நடக்கும் என்றுச் சொல்லுங்க பிரதர்.

உமர்: சரி சரி, உனக்கும், மும்தாஜுக்கும் திருமணம் ஆகி பிள்ளைகள் பிறந்தால், அவர்களை நீ எப்படி வளர்ப்பாய்? என்ன பெயர் வைப்பாய்? இஸ்லாமிய பெயர் வைப்பாயா? கிறிஸ்தவ பெயர் வைப்பாயா?

ஜோசப்: நான் கிறிஸ்தவ பெயர் தான் வைப்பேன், அவர்களை கிறிஸ்தவர்களாகவே வளர்ப்பேன்.

உமர்: இப்படி நடக்கக்கூடாது என்பதால் தான், இஸ்லாம் எப்பொதும், முஸ்லிமாக மாறிவிடு என்று கணவனுக்கு கட்டளையிடுகிறது.

சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், ஒரு முஸ்லிம் பெண் கிறிஸ்தவனை திருமணம் செய்யக்கூடாது, அவனை முதலாவது முஸ்லிமாக மாற்றவேண்டும், பிறகு தான் அவனோடு திருமணம் நடக்கும்.

ஜோசப்: அப்படியானால் என் கதை என்ன?

உமர்: உன் காதலியின் பெற்றோர்களிடம் உன் பெற்றோர்கள் மற்றும் இதர பெரியர்கள் சென்று பெண் கேட்டு, எப்படியாவது அவர்களை சம்மதிக்க வைத்துவிடலாம். ஆனால், அவர்கள் பெண் கொடுக்க அங்கீகரித்துவிட்டு, அவர்கள் நம்மிடம் கேட்கும் கேள்வி எதுவாக இருக்குமென்றால் "உங்கள் பையனை முதலாவது முஸ்லிமாக மாற்றிவிடுவோம்,  அதன் பிறகு தான் திருமணம்" என்றுச் சொல்வார்கள். இதற்கு உன் பதிலென்ன?

ஜோசப்: இவ்வளவு தானா, நான் முஸ்லிமாக மாறிவிட்டேன் என்று சொல்லிவிட்டு, திருமணம் செய்துக்கொண்டு, சில மாதங்கள் கழித்து கிறிஸ்தவனாக வாழ்ந்துவிட்டால் போதும். ரொம்ப சுலபம். யார் பார்க்கப் போகிறார்கள்?

பாஸ்டர் ஆபிரகாம்: அப்படியானால், நீ பொய் சொல்லப்போகிறாயா? ஏமாற்றப்போகிறாயா? இது கூடாது.

உமர்: பொய் சொல்லி திருமணம் செய்வது முதலாவது தவறு. இதில் இன்னொரு பிரச்சனையும் உள்ளது. ஒரு முஸ்லிமாக மாறிவிடுவேன் என்று நீ சுலபமாக சொல்லிவிட்டாய். ஆனால், முஸ்லிமாக மாறுவதற்குக் முதலாவது உனக்கு அவர்கள் இந்த வயதில் விருத்தசேதனம் (சுன்னத்து) செய்வார்கள்.

ஜோசப்: அய்யய்யோ! விருத்தசேதனமா? அதுவும் இந்த வயதிலா?

உமர்: ஆம், இது மாத்திரமல்ல. நீ சில நாட்களுக்கு பிறகு இஸ்லாமை விட்டு வெளியேறினால், உனக்கு மரண தண்டனையை இஸ்லாமிய அரசாங்கம் கொடுக்கும்.

ஜோசப்: இந்தியா ஒரு இஸ்லாமிய நாடு இல்லையே, அவர்கள் எப்படி தண்டனையை கொடுப்பார்கள்?

உமர்: உண்மை தான் இந்தியா இஸ்லாமிய நாடு இல்லை, ஆனால், இங்கு இஸ்லாமியர்கள் இருக்கிறார்களே! இஸ்லாமியர்களில் சிலர் தீவிரவாத கும்பளோடு சேர்ந்து இருப்பார்கள், அவர்கள் எப்போதெல்லாம் இஸ்லாம் அவமானப்படுத்தப்படுகின்றது என்று கருதுவார்களோ, அப்போதெல்லாம், தங்கள் கையில் சட்டத்தை எடுத்துக்கொண்டு, வன்முறையில் இறங்குவார்கள்.

ஜோசப்: இதில் என்ன அவமானம் இருக்கின்றது?

உமர்: நீ இஸ்லாமியன் என்று சொன்ன பிறகு, அதை விட்டு வெளியேறினால், அது இஸ்லாமுக்கு இழுக்கு இல்லையா (இஸ்லாமின்படி)?

ஜோசப்: இஸ்லாமைப் பற்றி எனக்கு அக்கரையில்லை. நான் திருமணத்திற்காக மதம் மாற தயாராக இல்லை. எனக்கு நான் விரும்பிய வாழ்க்கைத் தான் வேண்டும், அதுவும் நான் விரும்பும் பெண்ணோடு என் வாழ்க்கை அமையவேண்டும். பாஸ்டர், இதற்கு வழி என்ன? உங்கள் பேச்சைக் கேட்டு, நான் மும்தாஜுக்கு போன் செய்து சொல்லிவிட்டேன்.  என்னால் அவள் இல்லாமல் வாழமுடியாது!

பாஸ்டர் ஆபிரகாம்: எனக்கு குழப்பமாக இருக்கிறது. நம்ம ஊரில் முஸ்லிம்கள் பாதிக்கு மேல் இருக்கிறார்கள். மேலும் பொய் சொல்லி அவர்களை ஏமாற்றுவது நமக்கு தகாது, நாம் அதனை செய்யக்கூடாது. நீ மும்தாஜை மறந்து. . . .

ஜோசப்: நீ மும்தாஜை மறந்துவிடு என்று சொல்லாதீர்கள், அது முடியாத காரியம்.  அதே நேரத்தில், நம் இரு குடும்பங்களுக்கும் தெரியாமல் நாங்கள் ஓடிப்போய் திருமணம் செய்துக் கொள்ளமாட்டோம், நான் யாருடைய மனதையும் புண்படுத்தவிரும்பவில்லை.  ஆனால், நான் காதலித்த பெண்ணோடு  வாழனும் இது தான் என் விருப்பம்.

[ஜோசப்பின் முகம் வாடிவிட்டது, அவனுடைய நம்பிக்கை  உடைந்துவிட்டது, சோக முகத்தோடு பாஸ்டரின் கண்களை அனேக கேள்விகளோடு அவன் பார்த்துக்கொண்டு இருக்கின்றான்]

பாஸ்டர்: !?!

உமர்: !?!

[அருமை வாசகர்களே, ஜோசப்பிற்கு ஒரு நல்ல அறிவுரையை கொடுத்து, இந்த உரையாடலை உங்களால் தொடரமுடியுமா?....   ஜோசப் தன் நிலையை சொல்லிவிட்டான். அவன் நேர்மையானவன் அவனுக்காக நாம் ஏதாவது செய்யமுடியுமா?. . . .

இது ஒரு சினிமாவாக இருந்திருந்தால், ஒரு செண்டிமென்ட் சீனை உள்ளே நுழைத்து, இரண்டு குடும்பங்களும் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டது போல படத்தை எடுத்து "வணக்கம்" என்ற வார்த்தையை கொட்டை எழுத்தில் காட்டி, எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிவிடலாம். ஆனால், இது நிஜவாழ்க்கையாயிற்றே!  பிரச்சனையே அந்த "வணக்கம்" என்ற வார்த்தைக்கு பின் தான் ஆரம்பிக்கும்.

வாசகர்கள் இந்த உரையாடலை சுமூகமாக முடித்து, இரண்டு பக்கத்தில் வரும் படி எழுதி எனக்கு அனுப்பினால், அதனை சரி பார்த்து, நான் என் தளத்தில் பதிப்பேன். ]

கருத்துகள் இல்லை: