ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

திங்கள், 22 நவம்பர், 2021

குர்‍ஆன் 3:183 - அல்லாஹ்வின் அறியாமை – யூதர்களின் நபித்துவ‌ சோதனையில் தோல்வியுற்ற முஹம்மது

முஹம்மது யூதர்களோடு புரிந்த சில வாதங்களை குர்ஆன் பதிவு செய்கிறது. முஹம்மது ஒரு நபி என்பதை யூதர்கள் நம்ப மறுத்தார்கள் பல நேரங்களில் அவரிடமிருந்து சில அற்புதங்களை எதிர்பார்த்தார்கள். முஹம்மது அற்புதம் செய்யாதபோது அவரை நபி என்று ஏற்க மறுத்தார்கள். அவர் கொண்டு வந்த குர்‍ஆனை இறைவசனம் என்று நம்பவில்லை.

இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளிலிருந்து ஒரு நிகழ்ச்சியை இப்பொழுது காண்போம்.

குர்‍ஆன் 3:183ஐ படிப்போம்.

3:183. மேலும் அவர்கள், "எந்த ரஸூலாக இருந்தாலும், அவர் கொடுக்கும் குர்பானியை(பலியை) நெருப்பு சாப்பிடு(வதை காண்பிக்கு)ம் வரை அவர் மீது நாங்கள் விசுவாசம் கொள்ள வேண்டாம்" என்று அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்" என்று கூறுகிறார்கள். (நபியே!): "எனக்கு முன்னர் உங்களிடம் வந்த தூதர்களில் பலர், தெளிவான ஆதாரங்களையும், இன்னும் நீங்கள் கேட்டுக்கொண்ட (படி பலியை நெருப்பு உண்ப)தையும் திடமாகக் காண்பித்தார்கள். அப்படியிருந்தும் ஏன் அவர்களை நீங்கள் கொன்றீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்" என்று நீர் கூறும். (முஹம்மது ஜான் தமிழாக்கம்).

இந்த வசனத்தில் யூதர்களிடம் அல்லாஹ் ஒரு வாக்குறுதியை வாங்கினான் அல்லது ஒரு கட்டளையை கொடுத்தான் என்று யூதர்கள் கூறுவதாக வருகிறது. அதாவது ஒரு நபியை நீங்கள் (யூதர்கள்) இறைதூதராக நம்ப வேண்டுமென்றால் அவர் அற்புதம் செய்ய வேண்டும் அதிலும் முக்கியமாக ஒரு பலியை (குர்பானியை) வானத்திலிருந்து வருகின்ற நெருப்பு சுட்டெரிக்கும் படியான அற்புதம் அவர் செய்ய வேண்டும். அப்போதுதான் அவரை நீங்கள் இறைதூதராக நம்பவேண்டும் என்று அல்லாஹ் கூறியதாக யூதர்கள் இவ்வசனத்தில் சொல்கிறார்கள். 

முஹம்மது ஜான் தமிழாக்கம் இந்த விளக்கத்தை சரியாக சொல்லாவிட்டாலும்  IFT மொழியாக்கம் ஓரளவுக்கு சரியாக இதனை மொழியாக்கம் செய்துள்ளது.

3:183. "(திடீரென்று வரும்) நெருப்பு கரித்து விடுகின்ற வண்ணம் ஒரு குர்பானியை (பலியை) எங்கள் கண்ணெதிரே கொண்டு வரும் வரை எந்த ஒருவரையும் இறைத்தூதராக ஏற்றுக்கொள்ள வேண்டாமென்று திண்ணமாக அல்லாஹ் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளான்" என்று சொன்னவர்களிடம் (நபியே!) நீர் கூறும்: "நிச்சயமாக எனக்கு முன்பு உங்களிடையே தூதர்கள் பலர் தெளிவான பல சான்றுகளுடன் வந்திருந்தனர். (ஏன்) நீங்கள் இப்பொழுது குறிப்பிடுகின்ற சான்றினையும் கூட அவர்கள் கொண்டு வந்தனர். (இறைநம்பிக்கை கொள்வதற்கு இதனை ஒரு நிபந்தனையாய்க் கூறுவதில்) நீங்கள் உண்மையாளர்களாயிருந்தால், பிறகு அத்தகைய தூதர்களை ஏன் கொலை செய்தீர்கள்?"  (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்)

இந்த மொழியாக்கத்தில் "(திடீரென்று வரும்) நெருப்பு கரித்து விடுகின்ற வண்ணம்" என்று குறிப்பிடுவது எதை என்றால், இறைத்தூதர் "வானத்திலிருந்து அற்புதமாக‌ நெருப்பைக் கொண்டுவந்து"  அந்த ஆடு/மாடு பலியை எரிக்கவேண்டும். 

இந்த வசனத்தில் சொல்லப்படும் நிகழ்ச்சி குர்‍ஆனில் எங்கு உள்ளது? அந்த நபி யார்? என்று நாம் தேடிப் பார்க்கும் போது நமக்கு அது கிடைக்காது. இதைப்பற்றி அறிய வேண்டுமென்றால் யூதர்களின் பழைய ஏற்பாட்டில் தான் தேடிப்பார்க்க வேண்டும் இதைப்பற்றி தான் குர்ஆனும் இங்கு கூறுகிறது.

பைபிளிலிருந்து சில சான்றுகள்:

வானத்திலிருந்து அக்கினியை கொண்டு வந்து ப‌லிகளை எரிக்கும் அற்புதம் பற்றிய சில விபரங்களை பைபிளிலிருந்து இப்பொழுது பார்ப்போம், அதன்பிறகு குர்ஆனின் இந்த வசனத்தை ஆய்வு செய்வோம்.

பழைய ஏற்பாட்டின் படி பல நேரங்களில் தீர்க்கதரிசிகளின் மற்றும் நியாயாதிபதிகளின், அரசர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அல்லது அவர்களுக்காக‌ வானத்திலிருந்து அக்கினி வந்து பலிகளை எரித்தது உண்மை தான்.

பார்க்க‌: 

  1. லேவியராகமம் 9:23-24 (Leviticus)
  2. நியாயாதிபதிகள் 6:20-2 (Judges)
  3. 1 நாளாகமம் 21:26 ( 1 Chronicles)
  4. 2 நாளாகமம் 7:1-3 (2 Chronicles)
  5. 1 ராஜாக்கள் 18 (1 Kings)

மேலும் யூதர்களிடம் பைபிளின் தேவன் ஒரு தீர்க்கதரிசியை எப்படி பரிசோதித்துப் பார்ப்பது அல்லது அடையாளம் கண்டு கொள்வது என்பது குறித்தும் நிபந்தனைகளை கொடுத்திருக்கிறார். ஆனால் ஒரு இறைத்தூதரை கண்டுபிடிப்பதற்கு நிச்சயமாக வானத்திலிருந்து அக்கினி வந்து பலிகளை எரித்தால் தான் நீங்கள் "அவரை நபி என்று நம்ப வேண்டும்" என்ற ஒரு நிபந்தனையை அவர் கொடுக்கவில்லை. தீர்க்கதரிசி என்பவர்கள் அற்புதங்கள் செய்ய வேண்டும் அவர்கள் தீர்க்கதரிசனங்கள் சொன்னால் அவைகள் நிறைவேற வேண்டும் போன்ற நிபந்தனைகளை சொல்லி இருக்கின்றார். ஆனால் வானத்திலிருந்து அக்கினி வந்து பலிகளை எரித்தால் தான், இந்த ஒரு அற்புதத்தை செய்தால் தான் "அவரை தீர்க்கதரிசி என்று நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்" என்ற கட்டளையை தேவன் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியின் போது (1 ராஜாக்கள் 18வது அத்தியாயம்) எலியா தீர்க்கதரிசி வானத்திலிருந்து அக்கினியை கொண்டு வந்து பலிகளை எரித்துக் காட்டி யெகோவா தேவன் தான் மெய்யான தேவன் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார். ஆனால் இந்த அற்புதத்தையே ஒவ்வொரு தீர்க்கதரிசியும் செய்து நிரூபிக்க வேண்டும் என்ற கட்டளை மட்டும் பழைய ஏற்பாட்டில் இல்லை.

குர்‍ஆன் 3:183ன் படி யார் பொய் சொன்னார்கள்?

இந்த வசனத்தில் யூதர்கள் சொல்வது போன்று ஒரு உடன்படிக்கையை தேவன் யூதர்களோடு செய்யாதபோது, இந்த வசனத்தின்படி யார் உண்மை சொல்கிறார்கள்? யார் பொய் சொல்கிறார்கள்?

  • யூதர்கள் சொல்வது பொய்யா? அல்லது 
  • அறியாமையில் இந்த வசனம் பொய் சொல்கிறதா? அதாவது குர்ஆன் ஆக்கியோன் யூதர்கள் சொல்லாத ஒன்றை யூதர்கள் சொல்வது போன்று குர்‍ஆனில் இந்த வசனத்தில் கூறியுள்ளானா?

முஹம்மது ஒரு பொய் நபி:

யூதர்கள் சொல்லாத ஒன்றை சொன்னதாக சொல்லி, இந்த வசனத்தில் இவ்விவரங்களை முஹம்மது சேர்த்து இருந்தால், அவர் ஒரு பொய் நபி என்று உறுதியாகின்றது.

யூதர்கள் பொய் சொல்லியிருந்தால்!?

ஒருவேளை பழைய ஏற்பாட்டில் தேவன் சொல்லாத ஒன்றை சொன்னதாக யூதர்கள் பொய் சொல்லியிருந்தால், முஹம்மதுவிற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது, அதாவது பழைய ஏற்பாட்டில் தேவன் இப்படிப்பட்ட கட்டளையை கொடுக்கவில்லை ஆனால் நீங்கள் அவர் மீது பொய் சொல்கிறீர்கள் என்று எடுத்துக்காட்டி தன்னுடைய இறைத்தூது உண்மை என்பதை அவர் உறுதிப்படுத்தி இருந்திருக்கலாம், இதன் மூலமாக தான் ஒரு நபி என்று அவர் நிரூபித்து இருந்திருக்கலாம்.

ஆனால் மேற்கண்ட குர்ஆன் வசனத்தின் படி இப்படி அல்லாஹ் செய்யவில்லை முகம்மதுவும் செய்யவில்லை! இதன் அர்த்தம் என்ன?  அல்லாஹ்விற்கும் முஹம்மதுவிற்கும் முந்தைய வேதம் பற்றிய அறிவு இல்லை என்பதுதானே! உண்மையாகவே யெகோவா தேவன் தான் "அல்லாஹ்" என்பது உண்மையானால், யூதர்களின் இந்த பொய்யை அவர் கண்டுபிடித்து இருந்திருப்பாரே? யூதர்கள் எதைச் சொன்னாலும் அதை அப்படியே ஒப்புக் கொண்டு பதில் சொல்வது தான் இவர்களின் வாடிக்கையாக இருந்துள்ளது. இதுதான் வஹியா? இதுதான் இறைவேதமா?

அல்லாஹ் உண்மையான இறைவனாக இருந்திருந்தால், இப்படிப்பட்ட சூழலில் அல்லாஹ் என்ன செய்து இருந்திருக்க வேண்டும்? யூதர்கள் ஒரு தவறான விஷயத்தை சொன்னபோது அல்லாஹ் கீழ்கண்ட விதமாக வசனத்தை இறக்கியிருந்திருக்கவேண்டும்.

"யூதர்களே நான் உங்களிடம் இப்படிப்பட்ட வாக்குறுதியை ஒருபோதும் செய்யவில்லை, உங்கள் முன்னோர்களிடமும் செய்யவில்லை. இதை நம்பாதவர்கள் முந்தைய வேதத்தை படித்து பார்த்துக் கொள்ளட்டும். ஒரு இறைத்தூதரை உண்மையான‌ இறைத்தூதர் என்று கண்டுபிடிப்பதற்கு அற்புதங்கள் வேண்டும் என்று சொன்னேனே தவிர, வானத்திலிருந்து அக்கினியை கொண்டுவந்து ஒரு குர்‍பானியை/பலியை எரிக்க வேண்டும் என்ற அற்புதத்தை கண்டிப்பாக செய்யவேண்டும் என்று நான் சொல்லவில்லை, எனவே நீங்கள் பொய் சொல்கிறீர்கள். முஹம்மதுவே! இவர்கள் சொல்வதை நம்ப வேண்டாம்.

முஹம்மதுவின் தர்மசங்கட நிலை:

முஹம்மது தம்மை நபி என்று சொல்லிக் கொண்ட நாள் முதல் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மூலமாக பல எதிர்ப்புகளுக்கு அவர் ஆளானார். தம்மை ஒரு தீர்க்கதரிசி என்று அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னும் யூதர்கள் ஒருபடி மேலே சென்று மூஸாவை போன்று மற்ற தீர்க்கதரிசிகளை போன்று நீர் அற்புதம் செய்தால்தான் நாம் நம்புவோம் என்று சொன்னார்கள். ஆனால் ஒரு முறையும் அவரால் அற்புதம் செய்ய முடியவில்லை. 

ஒரு பக்கம் முந்தைய வேதங்களில் குறிப்பிடப்பட்ட தீர்க்கதரிசிகளை போன்று தாமும் ஒரு தீர்க்கதரிசி தான் என்று சொல்லிக்கொண்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் செய்து காட்டியது போன்று ஒரு அற்புதமும் இவரால் செய்ய முடியவில்லை. இதனால் அவரை நபியென்று யூதர்களும் கிறிஸ்தவர்களும் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.

  • முஹம்மதுவிடம் அற்புதங்களை எதிர்ப்பார்த்த யூத கிறிஸ்தவர்கள்: பார்க்க குர்‍ஆன் 2:118, 6:37, 10:20, 11:12, 13:7, 13:27, 20:133, 29:50

நம்முடைய இறைத்தூதரால் அற்புதம் செய்து காட்ட முடியாது, ஏனென்றால் அவர் ஒரு எச்சரிக்கை செய்பவர் மட்டும்தான் என்ற ஒரு பதிலை அல்லாஹ் கூறினான். அதேபோன்று இன்னொரு பதிலையும் அல்லாஹ் கூறினான் அதாவது ஒருவேளை அவர் அற்புதம் செய்து காட்டினாலும் நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்பது தான் அது.  

  • பார்க்க: குர்‍ஆன் 2:145, 17:59, 28:48, 37:14-15

இப்போது நாம் ஆய்வு செய்து கொண்டு இருக்கும் வசனமும் இந்த இரண்டாம் வகை பதிலை சார்ந்ததுதான்.  அதாவது முந்தைய நபிமார்களுக்கு அவர்கள் கேட்டுக் கொண்டபடி வானத்திலிருந்து அக்கினி கொண்டு வந்து பலியை எரிக்க செய்தாலும் அதன் பிறகும் யூதர்களாகிய நீங்கள் அதை நம்பவில்லை, அவர்களை கொலையும் செய்தீர்கள். ஆகையால் இப்பொழுது நான் அப்படிப்பட்ட ஒரு அற்புதத்தை முஹம்மது மூலமாக செய்ய முடியாது என்பதுதான் இவ்வசனம் கூறும் சுருக்கமாகும்.

குர்‍ஆன் 3:183ஐ படிப்போம்.

3:183. மேலும் அவர்கள், "எந்த ரஸூலாக இருந்தாலும், அவர் கொடுக்கும் குர்பானியை(பலியை) நெருப்பு சாப்பிடு(வதை காண்பிக்கு)ம் வரை அவர் மீது நாங்கள் விசுவாசம் கொள்ள வேண்டாம்" என்று அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்" என்று கூறுகிறார்கள். (நபியே!): "எனக்கு முன்னர் உங்களிடம் வந்த தூதர்களில் பலர், தெளிவான ஆதாரங்களையும், இன்னும் நீங்கள் கேட்டுக்கொண்ட (படி பலியை நெருப்பு உண்ப)தையும் திடமாகக் காண்பித்தார்கள். அப்படியிருந்தும் ஏன் அவர்களை நீங்கள் கொன்றீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்" என்று நீர் கூறும். (முஹம்மது ஜான் தமிழாக்கம்).

குர்‍ஆன் 3:183 வசனத்தின் இரண்டாவது பிரச்சனை:

யூதர்கள் முஹம்மதுவை ஏமாற்றுவதற்கு பொய்களைச் சொல்லி அற்புதங்களை எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளாமல், அவர்கள் சொல்வது உண்மை என்று நம்பி பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறது இந்த வசனம். இது முதலாவது பிரச்சனை, இரண்டாவது பிரச்சனை என்னவென்றால்,  முந்தைய வேதங்களில் எந்த தீர்க்கதரிசி வானத்திலிருந்து அக்கினியை கொண்டுவந்து குர்பானியை எரிக்கச் செய்து தன்னுடைய நபித்துவத்தை நிருபித்தார்? இந்த அற்புதம் செய்த எந்த நபியை யூதர்கள் கொலை செய்தார்கள், இந்த நபியுடைய பெயர் என்ன? இவ்விரண்டு கேள்விகளுக்கு குர்ஆனில் பதில் உண்டா, இல்லை? குறைந்தபட்சம் பைபிளில் இவ்விரண்டு கேள்விகளுக்கு பதில் உண்டா என்று தேடி பார்த்தால், அங்கேயும் பதில் கிடைப்பதில்லை -  இது தான் குர்‍ஆனின் இந்த வசனத்தில் உள்ள தீர்க்கமுடியாத பிரச்சனை!

பைபிளின்படி வானத்திலிருந்து அக்கினி இறங்கி வந்து பலிகளை எரித்த நிகழ்ச்சிகள் பற்றிய‌ கீழ்கண்ட வசனங்களில் எந்த ஒரு இடத்திலும் அப்படிப்பட்ட நபியை யூதர்கள் கொன்றதாக சரித்திரம் இல்லை, அப்படி என்றால் யாரைப் பற்றி குர்‍ஆன் பேசுகின்றது?

குர்‍ஆன் குறிப்பிடுவது  லேவியராகமம் 9:23-24 நிகழ்ச்சியையா?

இந்த வசனத்தின்படி மோசேயும் ஆரோனும் ஏற்கனவே இறைவனின் தூதர்களாக இஸ்ரவேல் மக்களை கானான் தேசத்திற்கு வழிநடத்திக் கொண்டு வந்தார்கள். இவர்கள் கர்த்தருக்கு பலியிட்ட போது கர்த்தர் அக்கினியினால் அந்த பலியை அங்கீகரித்தார். இங்கு அவர்கள் தங்கள் நபித்துவத்தை நிரூபிக்கும் படி அக்கினி அற்புதம் செய்யவில்லை. மேலும் மோசேயையும் ஆரோனையும் யூதர்கள்  கொல்ல‌வில்லை ஆகையால் குர்‍ஆன் 3:183 சொல்வது இந்த நிகழ்ச்சியை அல்ல.

குர்‍ஆன் குறிப்பிடுவது  நியாயாதிபதிகள் 6:20-24 நிகழ்ச்சியையா?

இவ்வசனங்களில் கர்த்தருடைய தூதன் கிதியோன் என்ற ஒரு நபருக்கு காணப்பட்டு அவர் கொடுத்த பலியை அக்கினியினால் எரித்தார் மற்றும் அங்கீகரித்தார். இதுவும் குர்‍ஆன் சொல்லு வசனத்திற்கு பொருந்தவில்லை.  இந்த இடத்திலும் கிதியோன் தாம் ஒரு தீர்க்கதரிசி என்று மற்றவருக்கு நிரூபிக்கும் படி இந்த அற்புதம் நடைபெறவில்லை யூதர்கள் மேலும் கிதியோனை கொல்லவும் இல்லை.

குர்‍ஆன் குறிப்பிடுவது  1 நாளாகமம் 21:26 நிகழ்ச்சியையா?

இவ்வசனங்களில் தாவீது கர்த்தருக்கு பலியிட்ட போது கர்த்தர் அக்கினியினால் அந்த பலியை அங்கீகரித்தார் மேலும் எந்த இடத்திலும் தாவீது தம்மை ஒரு தீர்க்கதரிசி என்று நிரூபிப்பதற்காக இந்த அற்புதம் செய்யப்படவில்லை, அதுமாத்திரமல்ல யூதர்கள் தாவீதை கொல்லவுமில்லை. யூதர்களின் மிகப்பெரிய சிறந்த நபராக தாவீது இருக்கிறார், எனவே, குர்ஆன் சொல்லும் வசனம் நிச்சயமாக இதுவாக இருக்காது. 

குர்‍ஆன் குறிப்பிடுவது  2 நாளாகமம் 7:1-3  நிகழ்ச்சியையா?

இவ்வசனங்கள் சாலமோன் ராஜா தேவாலயம் கட்டி அங்கு பலியிட்டபோது கர்த்தருடைய அக்கினி வந்து அதனை சுட்டெரித்த நிகழ்ச்சியை குறிக்கிறது. இதுவும் குரான் சொல்லும் வசனத்திற்கு எந்த ஒரு வகையிலும் ஏற்றதாக இல்லை. சாலமோன் ராஜாவை யூதர்கள் கொல்லவுமில்லை.

குர்‍ஆன் குறிப்பிடுவது  2 ராஜாக்கள் 18  நிகழ்ச்சியையா?

இந்த வசனங்களில் சொல்லப்பட்ட நிகழ்ச்சி எலியா என்ற தீர்க்கதரிசி பற்றியது. இவர் கர்த்தருடைய தீர்க்கதரிசியாக நின்று கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு சவால் விட்டு, பலியிட்டபோது  வானத்திலிருந்து அக்கினி வந்து பலியை பட்சித்தது. எலியா கர்த்தருடைய‌ தீர்க்கதரிசி என்று நிரூபணமானது. ஒருவேளை இந்த நிகழ்ச்சியைப் பற்றி மேற்கண்ட குர்ஆன் வசனம் சொல்லியதாக நாம் கணக்கில் எடுத்தாலும், இதுவும் பொருந்துவதாக இல்லை, ஏனென்றால் இந்த எலியா தீர்க்கதரிசியை யூதர்கள் கொலை செய்ய முயற்சி எடுக்கவும் இல்லை. 

எசபேல் என்ற ராணி இவரை கொல்வதற்கு முயற்சி எடுத்தாள், ஆனால் அவள் யூத பெண் அல்ல. அவள் வெற்றி பெறவில்லை. ஆகையால் குர்ஆன் யூதர்களைப் பார்த்து வானத்திலிருந்து அக்கினியை கொண்டு வந்து அற்புதம் செய்த நபரை நீங்கள் கொலை செய்தீர்கள் என்று சொல்லுகின்ற வசனம் அல்லது நிகழ்ச்சி பழைய ஏற்பாட்டிலும் எங்கும் இல்லை என்பது இவைகளின் மூலமாக நிரூபணமாகிறது

அப்படியானால், குர்‍ஆன் 3:183 ல் நடந்தது என்ன?

குர்ஆன் 3:183 வசனம் சொல்வது போன்று பழைய ஏற்பாட்டில் எங்குமில்லை. அப்படியானால் இந்த வசனத்தின்படி நடந்த நிகழ்ச்சி என்ன?

இதன் சுருக்கத்தை இங்கு தருகிறேன்:

1. யூதர்கள் அற்புதங்கள் செய்து காட்டுங்கள் என்று சொன்னார்கள், ஆனால் தம்மால் செய்ய முடியாது என்று முஹம்மது கூறிவிட்டார்.

2. எந்த ஒரு அற்புதமும் செய்ய முடியாத நிலையில் முஹம்மது இருந்தபோது, முஹம்மதுவின் நபித்துவத்தை சோதிப்பதற்காக, யூதர்கள் ஒரு யுக்தியை கையாண்டார்கள். அதாவது தங்களிடம் அல்லாஹ் "வானத்திலிருந்து நெருப்பை கொண்டு வந்து அற்புதம் நிகழ்த்துபவரை மட்டுமே நீங்கள் நபி என்று நம்பவேண்டும் என்று" ஒரு உடன்படிக்கை செய்தான், என்ற பொய்யை சொல்லியுள்ளார்கள். அல்லாஹ் இதனை மறுக்கவில்லை.

3. உண்மையாகவே முஹம்மது ஒரு நபியாக இருந்திருந்தால் அல்லாஹ் என்பவர் முந்தைய வேதங்களையும் கொடுத்தவராக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? யூதர்களைப் பார்த்து  நீங்கள் சொல்வது பொய், இப்படிப்பட்ட உடன்படிக்கை செய்யப்படவில்லை முந்தைய வேதங்களைப் படித்து பாருங்கள் என்று சொல்லி அப்போழுதே அவர்களின் மூக்கை அறுத்து இருந்திருக்கலாம், ஆனால் இப்படி அல்லாஹ் செய்யவில்லை.

4. இப்படி செய்வதை விட்டுவிட்டு யூதர்களின் மாயத்தில் மாட்டிக்கொண்டு, தம்முடைய அரைகுறை ஞானத்தோடு "ஆமாம் இப்படி உடன்படிக்கை செய்தது உண்மைதான் ஆனால் அப்படி அனுப்பப்பட்ட நபிகளையும் நீங்கள் கொலை செய்தீர்கள்" என்று அல்லாஹ் குர்ஆனில் பதில் தருகிறார்.

5. நம் மேலே பைபிளிலிருந்து பார்த்தபடி யூதர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு உடன்படிக்கை இல்லை என்பதும் தெரியும். இப்படிப்பட்ட அற்புதம் செய்தவரை அவர்கள் கொலை செய்யவும் இல்லை அதாவது அவர்களின் முன்னோர்கள் கொலை செய்யவும் இல்லை என்பதும் தெரியும். இதிலிருந்து என்ன நிரூபணம் ஆனது என்று சொன்னால், முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்பதும் குர்ஆன் இறைவேதம் இல்லை என்பதும் இவர்களுக்கு சரியாக புரிந்து விட்டது. அதனால் தான் அவர்கள் கடைசி வரை அவரை நபி என்று ஏற்றுக் கொள்ளவே இல்லை. இப்படி யூதர்கள் வைத்த ஒவ்வொரு சோதனையிலும் முஹம்மது தோற்றுக் கொண்டே இருந்தார் என்பதுதான் உண்மை. இதனால் தான், யூதர்கள் அரேபிய பூமியில் இருக்கக்கூடாது என்று விரும்பி, அவர்களை நாடு கடத்தினார்.

முடிவுரை: இது வரை பார்த்த விவரங்கள் நமக்கு எதைக் காட்டுகின்றது? குர்‍ஆன் 3:183ம் வசனம், ஒரு சரித்திர பிழையைச் செய்துள்ளது. யூதர்களின் மாயவலையில் அல்லாஹ் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளான். இதனை புரிந்துக்கொள்ளாத முஹம்மது, இல்லாத ஊருக்கு டிக்கெட் வாங்கி பயணித்துள்ளார்.

முஹம்மது ஒரு இறைத்தூதர் என்பதற்கு, முஹம்மதுவைத் தவிர வேறு யாருமே சாட்சியில்லை. ஜிப்ரீல் தூதன் முஹம்மதுவை சந்தித்ததற்கு அவரைத் தவிர வேறு யாருமே சாட்சியில்லை. முஹம்மதுவின் சொந்த மக்கா மக்களும், யூத கிறிஸ்தவர்களும் நம்பும் படி, எந்த ஒரு அற்புதத்தையும் முஹம்மது செய்யவில்லை. முஹம்மது அற்புதங்கள் செய்யமாட்டார் என்று அல்லாஹ் அடித்துச் சொல்லியுள்ளான். முந்தைய நபிமார்கள் மூலமாக இறைவன் பல அற்புதங்கள் செய்து, தம்முடைய நபிகளின் நம்பகத்தன்மையை நிருபித்தார். ஆனால், முஹம்மதுவின் நம்பகத்தன்மையை நிருபிக்க, அல்லாஹ் எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை, அதனை விரும்பவும் இல்லை.

படித்தவர்களும், அறிவுடையோர்களும் இப்போது  என்ன முடிவு எடுக்க முடியும்? முஹம்மது ஒரு மெய்யான நபி அல்ல, அவர் கொண்டு வந்த புத்தகம் வேதமல்ல, அற்புதங்கள் செய்யாத அல்லாஹ் இறைவன் அல்ல என்று தான் முடிவு எடுக்கமுடியும்! 

இன்று நாம் காணும் போலிச்சாமியார்கள், பாபாக்கள் வரிசையில் முஹம்மதுவையும் தான் வைக்கமுடியும்! நித்தியானந்தா குறைந்த பட்சம் மேஜிக்காவது செய்து, தனக்கு தெய்வீகசக்தி உள்ளது என்றுச் சொல்லிக்கொள்கிறார். முஹம்மது உண்மையான நபியாக இருந்திருந்தால், அல்லாஹ் உண்மையான தெய்வமாக இருந்திருந்தால், ஒரே ஒரு அற்புதம் செய்து, மக்கா மக்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் என்று அனைத்து மக்களின் வாய்களை அடைத்திருந்திருக்கலாம், அதனை அவர் செய்யவில்லை, இதனால் மக்கள அவரை நம்பவில்லை.

முஹம்மதுவிற்கு ஆள்பலமும், பணபலமும் கிடைத்தபிறகு, வாளைக் காட்டி மக்களை பயமுறுத்தி முஸ்லீம்களாக மாற்றினார், இதனை மறுப்பவர்கள், ஹிஜ்ரிக்கு பிறகு இஸ்லாமின் சரித்திரத்தை இஸ்லாமிய நூல்களிலிருந்தே படித்துக்கொள்ளட்டும், ஆய்வு செய்யட்டும்.

ஆக, குர்‍ஆன் 3:183 ஒரு வஹியா? அல்லது வலியா? என்ற கேள்வி எழுப்பினால், 'குர்‍ஆன் ஒரு வலிதான், வஹி அல்ல' என்பது புலனாகும்.

தேதி: 22nd Nov 2021


குர்‍ஆனின் இதர ஆய்வுக் கட்டுரைகள்

குர்‍ஆன் பக்கம்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/arabic_quran/quran_3_183.html


கருத்துகள் இல்லை: