ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

திங்கள், 25 டிசம்பர், 2023

கிருஷ்ணன், அல்லாஹ் & கிறிஸ்து: த‌ம் படைப்பிற்குள் நுழைய முடியாதவரும், நுழைந்தவர்களும் - 2023 கிறிஸ்மஸ் தியான கட்டுரை

இது ஒரு சிறிய தியானக் கட்டுரை.

மேற்கணட மூன்று மத நம்பிக்கையாளர்களின் ஜனத்தொகை உலகில் மொத்தம் 65%க்கும் அதிகமாக உள்ளதாக கணக்குச் சொல்கிறது[1].

  • 15.0% இந்துக்கள்
  • 31.5% கிறிஸ்தவர்கள்
  • 23.3% இஸ்லாமியர்கள்

என்று விக்கிபிடியா தொடுப்பு கூறுகிறது.

இந்த மூன்று பிரிவினரின் கடவுள்களாகிய கிருஷ்ணன், இயேசு மற்றும் அல்லாஹ் போன்றவர்கள் பற்றிய ஒரு சிறிய விவரத்தை இங்கு பார்ப்போம்.

பகவத் கீதை, குர்‍ஆன் மற்றும் பைபிளை எடுத்துக்கொண்டால், இவைகளில் "இவ்வுலகையும், அதிலுள்ள மனிதர்களையும் தாமே படைத்தோம்" என்று இம்மூவர் கூறுகின்றனர்.  உண்மையில் பார்த்தால், இவர்களில் யாராவது ஒருவர் தான் உண்மையான இறைவனாக இருக்கமுடியும், மற்ற இருவர் பொய்யான தெய்வங்களாக இருக்கவேண்டும்.  இவ்வரிகளை நாத்தீகர்கள் படிப்பார்களானால், இன்னொரு தெரிவும் உள்ளது, அது என்னவென்றால், இம்மூவரும் பொய்யாகவும் இருக்கலாம் என்றும் கூறுவார்கள். இந்த கட்டுரையின் தலைப்பு இதுவல்ல.

இம்மூவரில் யார் உண்மை தெய்வம் என்ற விவாதத்தை விட்டுவிட்டு, இவர்களைப் பற்றிய மக்களின் நம்பிக்கைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு, இவர்களின் ஒரு குறிப்பிட்ட செயலை ஆய்வு செய்யப்போகிறோம். அதுவும் மேலோட்டமாக ஆய்வு செய்யப்போகிறோம்.

1) அல்லாஹ் தான் படைத்த படைப்பிற்குள் நுழைய மாட்டான்:

இஸ்லாமின் அடிப்படை கோட்பாடு என்னவென்றால்:

  • அல்லாஹ் உலகை படைத்தான் 
  • அவன் தன் படைப்பை விட்டு மிகவும் தூரமாக இருக்கிறான் 
  • அவனை யாரும் நெருங்க முடியாது
  • அவன் தன் படைப்பிற்குள் நுழையமாட்டான் 
  • அதாவது அவன் மனித அவதாரம் எடுத்து உலகில் (தன் படைப்பிற்குள்) வரமாட்டான்.
  • அப்படி அவன் வந்தால், அது அவனுடைய 'தெய்வீகம் மற்றும் இறைவனின் இலக்கணத்திற்கு எதிரான ஒன்றாக மாறிவிடும்"
  • அல்லாஹ் மனித அவதாரம் எடுத்து வந்தால், தன் தெய்வீகத்தை இழக்க நேரிடும்

எனவே, அல்லாஹ் தம் படைப்பிற்குள் (இவ்வுலகிற்குள்) வரமாட்டான்.[2][3]. 

நீங்கள் முஸ்லிம்களிடம் இதைப் பற்றி கேட்டால், இன்னும் அதிகமான விவரங்களை கொடுப்பார்கள், ஆனால், 'சுருக்கம் இதுதான், உலகத்தை விட்டு அல்லாஹ் மிகவும் தூரமாக இருக்கிறான் என்பதாகும், ஆனால், அங்கிருந்து எல்லாவற்றையும் அறிந்துக்கொள்வான், ஆனால், உலகில் வரமாட்டான். இதற்கு பதிலாக, அவன் தன் தூதர்களை(மலக்குகளை - Angels) அனுப்புவான், அவன் இந்த பூமியில் கால் வைத்ததில்லை.

நீங்கள் இன்னும் துருவி துருவி "அப்படி அவன் வந்தால் என்ன நடக்கும்"? என்று கேட்டால், "அப்படி அவன் வந்தால், அவனது தெய்வீகத்தன்மை/தெய்வ இலக்கணம் இழந்துவிடுவான்" என்று முஸ்லிம்கள் பதில் அளிப்பார்கள்.

அல்லாஹ் ஒரே நேரத்தில் "இறைவனாகவும், மனிதனாகவும்" இருக்கமுடியாது என்பது இதன் சுருக்கம் ஆகும்.  

இதைப் பற்றிய இஸ்லாமிய இரண்டு தொடுப்புக்களை அடிக்குறிப்பில் கொடுத்துள்ளேன், அவைகளை படிக்கவும், மேலும் இணையத்திலும், இதர இஸ்லாமிய தளங்களிலும் சென்று நீங்கள் உங்கள் ஆய்வை தொடரலாம்.

2) கிருஷ்ணன் தன் படைப்பிற்குள் நுழைந்தார், ஆனால் தன் தெய்வீகத்தை இழந்தார்

இரண்டாவதாக, இந்துக்களின் செல்லப்பிள்ளை, கிருஷ்ணன் பற்றி பார்ப்போம்.

இந்துக்களின் "விஷ்ணு" என்ற தெய்வம் 10 (தச‌) அவதாரங்களை எடுத்ததாக இதிகாசங்கள், புராணங்கள் கூறுகின்றன.  இவைகளில் ஒன்று 'கிருஷ்ணனின் அவதாரம்' ஆகும்.

அல்லாஹ்வைப் போல அல்லாமல், 'கிருஷணன்' தன் படைப்பிற்குள் நுழைந்தார், இதற்கு அவருக்கு எந்த பிரச்சனையும் இருந்ததில்லை.  ஆனால், இதனால் தன் தெய்வீகத்தன்மையை இழந்து ஒரு உலக மனிதனைப் போல பாவங்களிலும், பெருமையிலும் விழுந்து தன் தெய்வீகத்தன்மையை இழந்துவிட்டதாக புராணங்கள் கூறுகின்றன. இதனால் தான் என்னவோ, அல்லாஹ் 'நமக்கு ஏன் இந்த அக்னிப் பரிட்சை, என்று தன் படைப்பிற்குள், அதாவது மனித அவதாரம் எடுக்காமல் இருந்துவிட்டார்' என்று எண்ணத்தோன்றுகிறது.

இந்த இடத்தில், கிருஷ்ணர் மஹாபாரதத்தில் செய்த செயல்கள் பற்றிச் சொல்லவில்லை. ஆனால், அவர் மனிதனாக இருந்ததால், அவர் செய்த சேட்டைகள் மற்றும் பெண்களிடம் புரிந்த லீலைகள் பற்றிச் சொல்கிறேன். இது மட்டுமல்ல, கிருஷ்ணர் எப்படி மரித்தார், அவருக்கு என்ன நடந்தது? என்பதை புராணங்கள் சொல்வதை அறிந்துக்கொள்ளுங்கள்.

கிருஷணன் பெருமைக்கொண்டு தன் நாட்டை ஆளும் போது நடந்த நிகழ்ச்சி அதைத் தொடர்ந்து அவர் எப்படி மரித்தர் என்பதை இந்துக்களின் தளத்திலிருந்து படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

கிருஷ்ணனுக்கு பல மனைவிகள் இருந்ததாகவும், பெண்கள் குளிக்கும் போது அவர்களின் உடைகளை எடுத்துவைத்துக்கொண்டு, உடைகள் வேண்டுமென்றால், கைகளை உயர்த்தி கேட்டால் கொடுப்பேன் என்று சொன்ன கிருஷ்ண லீலைகள் பற்றி நமக்கு புராணக்கதைகள் சொல்லப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட செயல்களை இன்று ஒரு மனிதன் செய்தல், அவனுக்கு இந்திய சட்டத்தின் படி எப்படிப்பட்ட தண்டனை கிடைக்கும் என்பதை நாம் அறிவோம்.

ஆக, தெய்வமாக இருந்தவர் மனிதனாக வந்ததால், தன் தெய்வீகத்தை இழந்து ஒரு சாதாரண மனிதன் செய்யக்கூடிய பாவச் செயல்களைச் செய்து, பெருமைக்கொண்டு கடைசியாக, தன் முன் ஜென்ம பாவத்தினால்(இராம அவதாரம்), இந்த ஜென்மத்தில் அதன் பலனை அனுபவித்தார் கிருஷ்ணர் என்று இந்து புராணங்கள் கூறுவதை உண்மையென்று நம்பினால், அல்லாஹ்வே உண்மையாகவே ஜாக்கிரதைப் பட்டார் என்று சொல்லலாம் அல்லவா?

3) இயேசுக் கிறிஸ்து மனிதனாக வந்தும் தன் தெய்வீகத்தை காத்துக்கொண்டார்

கடைசியாக, நாம் இயேசுக் கிறிஸ்துவிற்கு வருவோம். அல்லாஹ்வைப் போல, தன் படைப்பை விட்டு தூரமாக செல்லாமல், மனிதனாக வந்தார். அதே வேளையில், கிருஷ்ணனைப் போல, மனித சுபாவத்தால் தாக்கப்பட்டு, மனிதன் செய்யக்கூடிய பாவங்களைச் செய்யாமல், பரிசுத்தமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து நமக்கு ஒரு நல்ல மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுச் சென்றார். 

இயேசு பாவம் செய்யவில்லை[4]. 

இயேசுவின் பாவமில்லாத வாழ்க்கைப் பற்றிய சில வசனங்களை இங்கு காண்போம்.

I பேதுரு 2:22,23

அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை; 23. அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.

எபிரெயர் 4:15

நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.

II கொரிந்தியர் 5:21

நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.

I யோவான் 3:5

அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை.

லூக்கா 1:35

தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.

யோவான் 8:46

என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? . . ..

முடிவுரை:

இதுவரை முன்று நபர்கள் பற்றி மிகவும் சுருக்கமாக பார்த்தோம்.

  • அல்லாஹ் தன் படைப்பிற்குள் வர பயந்தான்.
  • கிருஷ்ணர் தன் படைப்பிற்குள் வந்து தன் தெய்வீகத்தை இழந்தார்.
  • இயேசு தன் படைப்பிற்குள் வந்தும் தன் தெய்வீகத்தை இழக்கவில்லை.

இப்படிப்பட்ட இயேசுவின் பிறந்த நாளை உலகமனைத்திலும் டிசம்பர் 25ம் தேதி கொண்டாடுகிறார்கள். 

இயேசு பாவம் செய்யவில்லையென்று நாங்கள் எப்படி நம்புவது? என்று உங்களில் யாராவது கேட்கக்கூடும், நீங்கள் நிச்சயம் நம்பவேண்டும் என்று நான் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், ஒருமுறை இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை படித்துப் பாருங்கள், நற்செய்தி நூல்களின் தமிழ் தொடுப்புக்களை கொடுத்துள்ளேன்:

நற்செய்தி நூல்கள்:

அடிக்குறிப்புக்கள்

  1. Hinduism by country - Wikipedia
  2. Interpretation of the Statement: "Allah is Separated from His - IslamQA
  3. To Believe That Allah Dwells in Human Bodies Is Major Disbelief (islamweb.net)
  4. Jesus is sinless - What Does the Bible Say About Jesus Did Not Have A Sin Nature? (openbible.info)

தேதி: 23rd Dec 2023


உமரின் கட்டுரைகள் பக்கம்

பொதுவான கட்டுரைகள் பக்கம்

அல்லாஹ் பக்கம்

இயேசு பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/general-topics/krishna-allah-jesus-christmas2023.html


கருத்துகள் இல்லை: