ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வெள்ளி, 15 ஜனவரி, 2016

சமாதானத்தை கொண்டுவருவது எது? (ஜிஹாதா? அல்லது மன்னிப்பா?)

What Brings Peace

ஆசிரியர்: ராபர்ட் ஸீவர்ஸ்

இந்த குழப்பமான, பிரச்சனைக்குரிய உலகத்தில் உண்மையான சமாதானத்தை பெறுவது அரிதான விஷயமாகும். நாம் அனைவரும் சமாதானத்தை விரும்புகிறோம். நாடுகளுக்கிடையே சமாதானம், குடும்பங்களில் சமாதானம், அவ்வளவு ஏன் நம் மனதிலும் சமாதானம் இருக்கவேண்டும் என்று நாம் விரும்புகிறோம். நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், அவைகள் நம் மனதின் அமைதியை கெடுக்காமல் இருக்க பார்த்துக் கொள்ளவேண்டும். நம்மைச் சுற்றி பல தரப்பட்ட மக்கள் இருந்தாலும், பல வேற்றுமைகளுடைய மக்கள் இருந்தாலும், அவைகளை பொருட்படுத்தாமல், அம்மக்களோடு ஒற்றுமையாக வாழ்வது தான் சமாதானம் என்று கருதப்படும்.  இஸ்லாமும் கிறிஸ்தவமும் சமாதானத்தை தேடுங்கள் என்று அறிவுரை கூறுகின்றன. ஆனால், அந்த சமாதானத்தை எப்படி அடையவேண்டும் என்ற விஷயத்தில் இவ்விரு மார்க்கங்களும் நேர் எதிர் வழிமுறைகளை கையாளச் சொல்கின்றன. நாம் சமாதானம் அடைய "இஸ்லாமும் கிறிஸ்தவமும்" எப்படிப்பட்ட வழிமுறைகளை நமக்கு அறிமுகப்படுத்துகின்றன என்பதை ஆய்வு செய்வது தான் இக்கட்டுரையின் நோக்கம்.

கிறிஸ்தவத்தின் இறைவன் சமாதானத்தைப் பற்றி பல விவரங்களை கூறியுள்ளார். தம்மை பின்பற்றுபவர்களுக்கு "சமாதானத்தை" கொடுப்பதாக இயேசு வாக்கு கொடுத்திருக்கிறார். பரிசுத்த ஆவியானவரைப் பற்றி தம்முடைய சீடர்களுக்கு இயேசு அறிவித்த பிறகு (யோவான் 14:26), அடுத்த வசனத்தில் அவர்கள் சமாதானத்தையும் பெறுவார்கள் என்றும் கூறுகிறார் (யோவான் 14:27). இதுமட்டுமல்ல, ஆவிக்குரிய கனிகளில் சமாதானமும் ஒரு கனியாகும் (கலாத்தியர் 5:22). கடைசியாக, இந்த சமாதானமானது, தேவனிடமிருந்து அவரது குமாரனாகிய இயேசுக் கிறிஸ்துவின் மூலமாக வருகிறது (அப்போஸ்தலர் நடபடிகள் 10:36). சமாதானம் என்பது தேவனிடமிருந்து வரும் தற்காலிகமான "ஒரு அமைதி நிலை" அல்ல. அதற்கு பதிலாக, கிறிஸ்துவே நம்முடைய சமாதானமாக இருக்கிறார் (எபேசியர் 2:14). சமாதானம் என்பது நாம் முயற்சி எடுத்து நாடவேண்டியதாகும் (ரோமர் 14:19). நாம் ஒன்றுக்கும் கவலைப்படாமல், தேவனுக்கு நன்றி செலுத்தி, வேண்டுதல்களைச் செய்யவேண்டும், அப்போது தேவ சமாதானம் நம் இருதயங்களை ஆண்டுக்கொள்ளும். இதுமட்டுமல்ல, தேவன் கொடுக்கும் இந்த சமாதானம் உலகம் கொடுக்கின்ற தற்காலிக சமாதானமாக இருக்காது, இது ஒரு ஊற்று போல உள்ளத்தில் பிரவாகித்துக் கொண்டே இருக்கும். இதனை இதர மக்கள் அறிந்துக் கொள்ளமாட்டார்கள் (பிலிப்பியர் 4:6-7).

இந்த சமாதானத்திற்கு இன்னொரு பக்கமும் உள்ளது. நாம் தேவனுடன் சமாதானம் பொருந்தினால், நம் உள்ளத்தில் அவர் கொடுக்கும் உண்மை சமாதானம் நிரந்தரமாக தங்கியிருக்கும் (ரோமர் 5:1). நம்முடைய குறைகளை மன்னித்து தேவன் நம்முடன் சமாதான உடன்படிக்கை செய்தார். இதற்கு நாம் என்ன பதில் கொடுக்கப்போகிறோம்? (2 கொரிந்தியர் 5:18-19).

5:18  இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசு கிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.

5:19 அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார். (2 கொரிந்தியர் 5:18-19)

வேறு வகையாக சொல்லவேண்டுமென்றால், தேவன் நம்முடைய குறைகளை மன்னித்து நம்மோடு ஒப்புரவானார், நம்மோடு சமாதான உடன்படிக்கை செய்தார், இதே போல, நாமும் மற்றவர்களின் குறைகளை மன்னித்து அவர்களோடு சமாதானம் உடையவர்களாக மாறி ஒப்புரவாகவேண்டும் (மத்தேயு 6:14; மாற்கு 11:25). நாம் மற்றவர்களை மன்னிக்காமல் இருந்தால், நமக்கு சமாதானம் கிடைக்காது. மற்றவர்கள் மீது நமக்கு இருக்கும் கோபமும், கசப்பும், நம்முடைய மன்னிக்காத குணமும் நம்மையே அழித்துவிடும். மற்றவர்களை மன்னியுங்கள் என்று கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளையானது, கடைசியில் அது அவர்களுக்கே (மன்னிப்பவர்களுக்கே) மனச்சாந்தியை கொடுக்கும். நாம் மற்றவர்களை மன்னிக்கவேண்டும் என்று தேவன் கட்டளை கொடுத்தார், ஏனென்றால், அவர் அந்த மன்னிப்பை நமக்கு முதலாவது கொடுத்துள்ளார். இதைப் பற்றி எபேசியர் 4:32 அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது.

ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். (எபேசியர் 4:32)

கிறிஸ்தவத்தின்படி, சமாதானத்திற்கு அடிப்படை "மன்னிப்பு" ஆகும். இந்த சத்தியத்தை பைபிள் ஆங்காங்கே பறைசாற்றுகிறது. என் சொந்த வாழ்க்கையிலும் இதனை நான் கண்டு இருக்கிறேன், சமாதானத்தை அனுதின வாழ்வில் அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன்.

இஸ்லாமின்படி சமாதானத்தை எப்படி பெறுவது?

மன்னிப்பதின் மூலமாக சமாதானம் கிடைக்கும் என்று இஸ்லாம் போதிக்கின்றதா?

இஸ்லாம் பல வகைகளில் சமாதானம் பற்றி பேசுகின்றது. ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை சந்திக்கும் போது கூறும் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்ற வாழ்த்தை இதற்கு ஒரு உதாரணமாகச் சொல்லலாம். இந்த வாழ்த்துதலின் பொருள் "உங்கள் மீது சமாதானம் உண்டாகட்டும்" என்பதாகும். இந்த வாழ்த்துதலைப் பற்றி முந்தைய கட்டுரையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 

இஸ்லாமை பொருத்தமட்டில், ஒருவரை மன்னிப்பதற்கும் அதனால் சமாதானம் உண்டாவதற்கும் இடையே உள்ள ஒற்றுமையை முழுவதுமாக புரிந்துக் கொள்ளமுடியாது. இதனை அறிய குர்-ஆனின் மிகவும் கொடுமையான வசனங்கள் என்று கருதப்படும் வசனங்களை உதாரணமாகச் சொல்லலாம். இஸ்லாம் பற்றிய அடிப்படை அறிவு உள்ளவர்கள் இந்த வசனங்களின் முதலாவது வசனத்தை நன்கு அறிந்திருப்பார்கள், ஆனால், அனேகருக்கு இதன் இரண்டாவது வசனம் அவ்வளவாக தெரிந்திருக்காது. 

குர்-ஆன் 9:14-15 வசனங்கள்:

9:14. நீங்கள் அவர்களுடன் போர் புரியுங்கள்; உங்களுடைய கைகளைக் கொண்டே அல்லாஹ் அவர்களுக்கு வேதனையளித்து அவர்களை இழிவு படுத்தி, அவர்களுக்கெதிராக அவன் உங்களுக்கு உதவி (செய்து அவர்கள் மேல் வெற்றி கொள்ளச்) செய்வான். இன்னும் முஃமின்களின் இதயங்களுக்கு ஆறுதலும் அளிப்பான்.

9:15. அவர்களுடைய இதயங்களிலுள்ள கோபத்தையும் போக்கி விடுவான்; தான் நாடியவரின் தவ்பாவை (மன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்கிறான். அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், (பூரண) ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (டாக்டர் முஹம்மது ஜான் தமிழாக்கம்)

[9.14] Fight them, Allah will punish them by your hands and bring them to disgrace, and assist you against them and heal the hearts of a believing people.

[9.15] And remove the rage of their hearts; and Allah turns (mercifully) to whom He pleases, and Allah is Knowing, Wise.

மக்கள் அனேக முறை குர்-ஆன் 9:14ம் வசனத்தை மட்டும் மேற்கோள் காட்டுவார்கள், இதில் முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்களோடு போரிட கட்டளையிடப்பட்டுள்ளார்கள். எனினும், முஸ்லிம்கள் ஏன் போரிடவேண்டுமென்று அல்லாஹ் சொல்கிறான்? இதற்கான காரணத்தை அறிய மக்கள் குர்-ஆனில் அதிகமாக கவனம் செலுத்துவதில்லை. குர்-ஆன் 9:15ம் வசனத்தின் படி, முஸ்லிமல்லாதவர்களிடம் முஸ்லிம்கள் போரிட்டால், அதன் மூலம் அல்லாஹ் "முஸ்லிம்களின்(முஃமின்களின்) இதயங்களுக்கு ஆறுதல் அளிப்பான்" மற்றும் "அவர்களுடைய (முஃமின்களின்) இதயங்களிலுள்ள கோபத்தையும் போக்கி விடுவான்".

அல்லாஹ்வின் இந்த வாக்குறுதியை முஸ்லிம்கள் எப்படி ஜிஹாதோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள்? அதாவது, ஜிஹாதின் மூலம் முஸ்லிம்களுக்கு வரும் மேற்கண்ட நன்மைகளை எப்படி முஸ்லிம்கள் இவ்வசனத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள்? இஸ்லாமியர்களால் மதிக்கப்படும் குர்-ஆன் விரிவுரையாளர் அல் மௌதூதி என்பவர் "அல்லாஹ் சொல்லும் ஜிஹாத், அனேக முஸ்லிம்களின் இருதயங்களுக்கு ஆறுதலைக் கொடுக்கும்" என்று கூறுகிறார் [1]. அதாவது முஸ்லிம்கள் அல்லாஹ்வின் "சண்டையிடுங்கள் என்ற கட்டளைக்கு கீழ்படிந்தால்", அதனால் அவர்களின் மனக்கவலையும், வலியும் நீங்கும் என்பதாகும். "சண்டை" என்பது முஸ்லிம்களுக்கு மன நிம்மதியைக் கொடுக்கும் மருந்தாகும். இஸ்லாமில், சமாதானம் என்பது சண்டையின் மூலமாக விளையும்  அருங்கனியாக இருக்கிறது. இஸ்லாமுக்கு வெளியே இருப்பவர்களிடம் சண்டையிடுவதினால், இந்த கனியை முஸ்லிம்கள் புசிக்கமுடியும், அதாவது சமாதானம் அடையமுடியும். குர்-ஆனின் படி, துக்கமடைந்த இருதயத்தின் வலியை நீக்கும் ஒரு மருந்து தான் ஜிஹாத் என்பது. மார்க் தூரி என்பவர் இதனை "மனித உள்ளத்திற்கு கொடுக்கப்பட்ட சிறப்பான மருந்து இது" என்றுச் சொல்லி ஆச்சரியப்படுகிறார்[2].

கிறிஸ்தவத்தில் சமாதானம் என்பது மன்னிப்பின் மூலமாகவும், ஒப்புரவாகுதலின் மூலமாகவும் கிடைக்கிறது. இஸ்லாமில், சமாதானம் என்பது ஜிஹாதின் மூலமாகவும், கொல்வதினாலும், சண்டையிடுவதினாலும்  கிடைக்கிறது.

இப்படி நான் எழுதுவதினால் சிலரின் மனது புண்படலாம், ஆனால் இதைத் தான் இஸ்லாமும், அதன் நூல்களும், விரிவுரைகளும் சொல்கின்றன. இதைப் பற்றி யாராவது விவாதிக்க விரும்பினால், என் தள கட்டுரையின் பின்ணூட்ட பகுதியில் தங்கள் கருத்தை பதிக்கலாம் (http://unravelingislam.com/blog/?p=470). கிறிஸ்தவ வாசகர்களிடம் நாம் கேட்டுக்கொள்வதாவது "இஸ்லாமியர்களோடு நல்ல நட்புறவை கொண்டிருங்கள், அவர்களுக்கு சுவிசேஷத்தைச் சொல்லுங்கள், அவர்களும் நம்மைப் போலவே தேவன் கொடுக்கும் உண்மையான நிரந்தரமான சமாதானத்தை பெற வேண்டிக் கொள்ளுங்கள்".

அடிக்குறிப்புக்கள்:

கருத்துகள் இல்லை: