ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

செவ்வாய், 21 நவம்பர், 2017

அல்லாஹ் ஏன் இஸ்மாயீலையும் மக்காவையும் 2500 ஆண்டுகள் மறந்துவிட்டான்?

இஸ்லாமியர்களின் புனித பூமி மக்கா நகரம். முதன் முதலாக ஆதாம் 'அல்லாஹ்வை' தொழுதுக்கொண்ட இடம் காபா என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். ஆபிரகாமையும், ஆகாரையும், கைக்குழந்தை இஸ்மாயீலையும், கிட்டத்தட்ட 1500 கிலோ மீட்டார்கள் தூரம் பிரயாணம் செய்யச் செய்து[1], மக்காவிற்கு அல்லாஹ் அழைத்து வந்தாராம். சில வருடங்கள் கழித்து, ஆபிரகாமும், இஸ்மாயீலும் காபாவை கட்டி எழுப்பினார்களாம். அதன் பிறகு இஸ்மாயீல் ஒரு நபியாக மக்காவில் இறைப்பணி செய்தாராம். இந்த இஸ்மாயீலின் சந்ததியில் தான் முஹம்மது வந்தார் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்[2].  இந்த மக்காவில் உள்ள காபாவை நோக்கித் தான் முஸ்லிம்கள் 1400 ஆண்டுகளாக ஐவேளையும் அல்லாஹ்வை தொழுதுக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மக்காவையும், காபாவையும், இஸ்மாயீலையும் அல்லாஹ் 2500 ஆண்டுகள் மறந்துவிட்டார் என்றுச் சொன்னால், நம்பமுடிகின்றதா உங்களால்? நம்பாமல் என்ன செய்யமுடியும்? குர்-ஆனே சொன்ன பிறகு அதனை முஸ்லிம்களால் மறுக்க முடியுமா?

இதனை புரிந்துக்கொள்ள கீழ்கண்ட படத்தை பார்க்கவும். படத்தின் கீழே விளக்கம் தரப்பட்டுள்ளது.

படம் 1: 2500 ஆண்டுகள் அல்லாஹ் மக்காவை மறந்தது ஏன்?

மேலேயுள்ள படத்தின் விளக்கம்:

முதல் மனிதன் ஆதாம் தொடங்கி நோவா வரையுள்ள காலவரிசையை சரியாக கணிக்கமுடியாது. ஆனால், ஆபிரகாம் காலத்தை ஓரள்விற்கு கணக்கிடலாம். இந்த  ஆபிரகாம் என்பவரிடமிருந்து தான், நம் கதை தொடங்குகிறது, இன்றுள்ள தலைவலிக்கு வித்து அவரிடமிருந்து தான் ஆரம்பிக்கிறது. ஆபிரகாமுக்கு இரண்டு மகன்கள், இஸ்மாயீல் மற்றும் ஈசாக்கு. ஈசாக்கு இறைவனின் வாக்கின்படி  ஆபிரகாமுக்கும் முதல் மனைவி சாராளுக்கும் பிறந்தவர் (முதல் மனைவி என்று சொல்லும் போதே  உங்களுக்கு புரிந்திருக்குமே! இரண்டாம் மனைவியும் இக்கதையில் உண்டு என்று!). இறைவனின் வாக்கு நிறைவேறும்வரை காத்திராமல், சாராள் அவசரப்பட்டு, தன் அடிமை பெண்ணை ஆபிரகாமின் கட்டிலுக்கு அனுப்பினாள், தன் மடியில் தன் கையாலேயே நெருப்பை அள்ளி போட்டுக்கொண்டாள். அடிமைப்பெண் ஆகாருக்கும், ஆபிரகாமுக்கும் பிறந்தவர் இஸ்மாயீல். இதன் பிறகு தான் இறைவனின் வாக்கின்படி, சாராளுக்கு ஒரு மகன் பிறந்தான், அவன் தான் ஈசாக்கு. இறைவன் முந்தியிருக்கவேண்டும், அல்லது சாராள் பிந்தியிருக்கவேண்டும்.

ஆபிரகாமின் காலம் தோராயமாக கி.மு. 2000 என்றுச் சொல்லலாம். அதாவது இன்றிலிருந்து கணக்கிட்டால், கிட்டத்தட்ட 4000 ஆண்டுகள் முந்தையது, ஆபிரகாமின் கதை. இஸ்லாமின் படி, ஆபிரகாம் அல்லாஹ்வின் ஆணைப்படி, ஆகாரையும் (சாராளின் அடிமைப்பெண்), மகன் இஸ்மாயீலையும், அழைத்துக்கொண்டு பல நூறு மைல்களுக்கு அப்பால் இருக்கும் மக்காவிற்குச் சென்றாராம். அங்கு அந்த குழந்தையையும், ஆகாரையும் விட்டுவிட்டு வந்துவிட்டாராம், அதாவது தன் முதல் மனைவி சாராள் மற்றும் மகன் ஈசாக்கு வாழும் இடத்திற்கே வந்துவிட்டாராம். பல ஆண்டுகள் கழித்து, மறுபடியும் இஸ்மாயீலை பார்க்க ஆபிரகாம் பல நூறு மைல்கள் கடந்துச் சென்றாராம். அப்போது தான் 'காபாவை' பழுது பார்த்து கட்டினார்களாம்.

  • ஒரு அப்பா (ஆபிரகாம்),
  • இரண்டு மனைவிகள் (சாராள் & ஆகார்),
  • இரண்டு மகன்கள் (இஸ்மாயீல் & ஈசாக்கு),
  • இரண்டு பட்டணங்கள் (ஜெருசலேம் & மக்கா),
  • இரண்டு எதிர் துருவங்கள் (கிறிஸ்தவம் & இஸ்லாம்).

அல்லாஹ் தன் இறைத்தூதர் இஸ்மாயீலை மக்காவில் ஊழியம் செய்ய நியமித்தாராம். ஈசாக்கு இஸ்ரேலில் பகுதியில் ஊழியத்தில் ஈடுபட்டாராம். இங்கு ஊழியம் என்றுச் சொன்னால், அல்லாஹ்வின் வழியில் மக்களை வழிநடத்தும் படி போதனை செய்வது. இதன் பிறகு என்ன நடந்தது? அல்லாஹ் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்கை மறந்துவிட்டான், மக்காவையும், காபாவையும் மறந்துவிட்டான், இஸ்மாயீலையும் மறந்துவிட்டான். எத்தனை ஆண்டுகள் இப்படி மறந்தான்? கிட்டத்தட்ட 2500 ஆண்டுகள் மறந்தான். 

ஆதாம் தன்னை முதன் முதலாக வணங்கிய இடம் காபா தான் என்று பெருமையாக பேசும் அல்லாஹ், அதனை 2500 ஆண்டுகள் கைகழுவிவிட்டான். ஆனால், ஈசாக்கை அல்லாஹ் கைவிடவில்லை, அவர் சந்ததியை கைவிடவில்லை. கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள், இயேசுக் கிறிஸ்துவரை, ஒருவருக்கு பின்னால் இன்னொருவர் என்று பல தீர்க்கதரிசிகளை (நபிகளை) அனுப்பிக்கொண்டு, அவர்களை வழிநடத்திக்கொண்டு வந்தான். அற்புதங்கள் அனைத்தும் இந்த ஈசாக்கு சந்ததியிலேயே அல்லாஹ் செய்து காட்டினான். குர்-ஆனில் நாம் பார்த்தால், ஆபிரகாமின் மகன் ஈசாக்கு பற்றியும், அவரது சந்ததிகளாகிய யாக்கோபு, யோசேப்பு மற்றும் அவர்களின் 12 வம்சங்கள் பற்றித் தான் அல்லாஹ் ஓயாமல் குர்-ஆனில் பேசியுள்ளான். யூதர்களை பாதுகாக்கவும், வழி நடத்தவும், அவர்கள் தவறு செய்தால், தண்டித்து மறுபடியும் சேர்த்துக்கொள்ளவுமே தன் முழு வாழ்நாட்களையும் (2000 ஆண்டுகள்) அல்லாஹ் செலவிட்டுள்ளான்.

குர்-ஆனின்படி, மிகப்பெரிய தீர்க்கதரிசிகள் அனைவரும் ஈசாக்கு சந்ததியில் வந்தவர்கள் தான், உதாரணத்திற்கு, மோசே, ஆரோன், தாவீது, சாலொமோன், இயேசுக் கிறிஸ்துவரை அனைவரும் ஈசாக்கு வம்சமே! இஸ்மாயீல் என்னவானார்? அவர் வழிநடத்திய மக்கள், மற்றும் மக்கா (காபா) நிலப்பரப்பில் வாழும் மக்களின் நிலை என்ன? அல்லாஹ்விற்கு அக்கரையில்லை, அது அவருக்கு தேவை என்று அவர் நினைக்கவில்லை. புதிய ஏற்பாட்டின் காலத்திலும், இயேசுவின் தாய் மரியாள், யோவான் ஸ்நானகன், இயேசு என்று இவர்கள் பற்றித்தான் பேச்சு அல்லாஹ்விற்கு. இஸ்மாயீலின் சந்ததிகளை சந்தையில் கூறுபோட்டு விற்றுவிட்டார் அல்லாஹ்.

மேலேயுள்ள படத்தில், குர்-ஆனில் வரும் தீர்க்கதரிசிகளின் பெயர்களை மட்டுமே நான் குறிப்பிட்டுள்ளேன். பைபிளின் படி, இன்னும் பல தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள், அவர்களை இங்கு நான் சேர்க்கவில்லை என்பதை கவனிக்கவும். இஸ்மாயீலின் சந்ததிகளில் ஒரு நபியையும் 2500 ஆண்டுகளாக அல்லாஹ் அனுப்பவில்லை. ஆனால், ஈசாக்கு வம்சத்தில் இயேசுக் கிறிஸ்துவரை அனேக நபிகளை யூதர்களை வழிநடத்த அல்லாஹ் அனுப்பினான். அல்லாஹ்விற்கு ஏன் இந்த பாரபட்சம்? அல்லாஹ் அனுப்பிய கடைசி யூத நபி இயேசுக் கிறிஸ்து ஆவார். இஸ்மாயீலின் சந்ததியில் கி.பி. 610 வரை முதல் மற்றும் கடைசி நபி இஸ்மாயீல் தான். அல்லாஹ் என்ன நினைத்தானோ தெரியவில்லை, 2500 ஆண்டுகள் கழித்து, "அடடே நம்மை முதன் முதலில் ஆதாம் தொழுதுக்கொண்ட மக்காவையும், காபாவையும் நாம் மறந்துவிட்டோமே" என்று எண்ணி, கி.பி. 610ல் மக்காவில் வாழ்ந்துக்கொண்டு இருந்த, முஹம்மது என்பவரை தன் நபியாக தெரிவு செய்தான். குர்-ஆனின் படி, மக்கா மக்களுக்காக அனுப்பப்பட்ட முதல் நபி இஸ்மாயீல், கடைசி நபி  முஹம்மது. இதுமட்டுமல்ல, உலகத்துக்கே கடைசி நபியாக முஹம்மதுவை அல்லாஹ் அனுப்பினானாம். 

கேள்விகள்: சில கேள்விகள் நமக்கு இப்போது எழுகின்றன.

1) ஏன் அல்லாஹ் மக்காவையும், காபாவையும், இஸ்மாயீலையும் ~2500 ஆண்டுகள் மறந்துவிட்டான்? (ஆபிரகாம் - கி.மு. 2000 ஆண்டிலிருந்து, முஹம்மது கி.பி. 610 வரை)

2) மேலேயுள்ள படத்தில் பார்க்கவும், இஸ்மாயீலுக்கும், முஹம்மதுவிற்கும் இடையே ஒரு நபியும் இல்லை. ஆனால், ஈசாக்கின் பக்கம் பார்த்தால், அனேக நபிகள் உள்ளனர். ஏன் இந்த பாகுபாடு? (மேலேயுள்ள படத்தில் பல யூத நபிகளின் பெயர்களை நான் குறிப்பிடவில்லை.)

3) யூதர்களுக்கு வழி காட்டியது போல, இஸ்மாயீலின் சந்ததிக்கும் வழி காட்டவேண்டியது அல்லாஹ்வின் கடமையல்லவா? வெறும் இஸ்மாயீல் மட்டுமே முக்கியமில்லை, அவருடைய சந்ததியும் முக்கியமே! ஈசாக்கை மட்டும் அல்லாஹ் ஆசீர்வதிக்கவில்லை, அவருடைய பல ஆயிர சந்ததிகளையும் ஆசீர்வதித்தார். 

4) ஒருவேளை, சாராள் ஆபிரகாமின் முதல் மனைவி என்பதாலும், ஆகார் சாராளின் வேலைக்காரி மற்றும் அடிமை! என்பதால் அவளுடைய சந்ததிக்கு என்ன மதிப்பு இருக்கிறது என்ற எண்ணமா அல்லாஹ்விற்கு? 

5) 2500 ஆண்டுகள் அல்லாஹ்வால் மறக்கப்படுதல் என்பது, தெரியாமல் நடந்த பிசகு அல்ல.

6) உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் (சமுதாயங்களுக்கும்) நபிகளை அனுப்பாமல் இருக்கவில்லை என்றுச் சொல்லும் அல்லாஹ், ஏன் இஸ்மாயீலுக்கு பிறகு, அம்மக்களை அம்போ என்று அனாதைகளாக விட்டுவிட்டார்?

7) இஸ்மாயீல் முஹம்மதுவைப் போல ஒரு புத்தகத்தை கொண்டு வந்து, மக்களுக்கு கொடுத்து இருந்திருந்தாலும் ஒருவகையாக ஒப்புக்கொள்ளலாம். அல்லாஹ்வின் வார்த்தையாகிய வேதம் இருக்கிறது, அது அம்மக்களை 2500 ஆண்டுகள் வழிநடத்தும் என்றுச் சொல்லலாம். ஆனால், அக்காலத்தில் மொழிகளும் எழுத்துக்களும் சிறந்த நிலையில் இல்லை, முக்கியமாக அரபி எழுத்துக்களின் நிலை சிறப்பான ஒன்றாக இல்லை. குர்-ஆன் 34:44ன் படி, அல்லாஹ் அரபியர்களுக்கு முஹம்மதுவின் காலம் வரை ஒரு வேதத்தையும் இறக்கவில்லையாம் - பார்க்க குர்-ஆன் 34:44. எனினும் (இதற்கு முன்) நாம் இவர்களுக்கு இவர்கள் ஓதக்கூடிய வேதங்கள் எதையும் கொடுக்கவில்லை; உமக்கு முன்னர், நாம் இவர்களிடம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரையும் அனுப்பவில்லை.

8) ஆனால், ஈசாக்கின் சந்ததிகளுக்கு மட்டும், மோசே என்ற மிகப்பெரிய நபியை அனுப்பினார், தோரா என்றுச் சொல்லக்கூடிய ஐந்தாகமங்களை கொடுத்தார். தாவீது மூலமாக ஜபூரைக் கொடுத்தார். இந்த புத்தகம் இறைவனை துதித்துப் பாடுவதற்காக கொடுக்கப்பட்டது. யூதர்கள் தன்னை துதித்து பாட இறைவேதத்தை கொடுத்த அல்லாஹ், மக்காவின் மக்களை நல்வழிப்படுத்த ஒரு நான்கு பக்கங்கள் கொண்ட ஒரு வேதத்தையும் அல்லாஹ் இறக்கவில்லை. மக்காவின் மீது என்னே ஒரு அன்பு அல்லாஹ்விற்கு! மக்காவில் மக்களை வழிநடத்த ஒரு நபி இல்லை, ஒரு நாதியும் இல்லை, ஒரு வேதமுமில்லை, ஆனால், எருசலேமில் மட்டும் நபிக்கு மேல் நபிகள், வேதங்களுக்கு மேல் வேதங்களை கொடுத்துக்கோண்டே இருந்தான் அல்லாஹ். கடைசியாக, இயேசுவிற்கு இன்ஜில் என்ற புத்தகம் கூட கொடுத்தான். என்னதான் நினைத்துக்கொண்டு இருக்கிறான் அல்லாஹ்? 

9) இஸ்மாயீல் என்ன மாற்றான் தாய் பிள்ளையா? ஒருவேளை, ஆகார் ஒரு அடிமைப்பெண், வேலைக்காரி என்றுச் சொன்னாலும், இஸ்மாயீலின் தந்தை யார்? ஆபிரகாம் அல்லவா? இவர் அல்லாஹ்வின் நண்பன் அல்லவா? இப்படியா! தன் நண்பனின் பிள்ளைகளை, வம்சங்களை நடுத்தெருவில் அனாதைகளாக விட்டுவிடுவது?

10) மக்காவில் இறைச்செய்தி சொல்ல 2500 ஆண்டுகள், ஒரு ஈயையும் அனுப்பாத அல்லாஹ் இஸ்ரேலர்களுக்கு மட்டும் தேனீக்களைப்போல நபிகளின் பட்டாளங்களை அனுப்பினார். இஸ்ரேலில் எங்கு தடுக்கி விழுந்தாலும் ஒரு நபி/திர்க்கதரிசி இருப்பார். சில வேளைகளில், ஒரே இடத்திற்கு இரண்டு மூன்று நபிகளையும் அனுப்பியுள்ளார் (பை ஒன், கெட் ஒன் ஆஃப்ஃபர்). எருசலேமிலிருந்து மக்காவிற்கு போய் இறைச்செய்தியைச் சொல்லுங்கள் என்று ஒருவரை அனுப்பியிருக்கலாம் அல்லவா? அல்லாஹ் அனுப்பினால், மாட்டேன் என்றா நபிகள் சொல்வார்கள்? அப்படி சொன்னாலும், அல்லாஹ் விட்டுவிடுவானா என்ன! மீனை அனுப்பி அந்த நபியை வழிக்கு கொண்டுவரமாட்டான்?

11) அல்லாஹ்விற்கு நினிவே மக்கள் மீது இருந்த அன்பு அக்கரை கூட மக்கா மீது, காபா மீது, இஸ்மாயீலின் சந்ததிகள் மீது இல்லை.

12) ஹூத், ஸாலிஹ் மற்றும் ஷூஐப் போன்றவர்கள் ஆபிரகாமுக்கு முன்பாக வந்த நபிகள் என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள். இவர்கள் இஸ்மாயீலின் சந்ததிகள் அல்ல.

13) மனித இனத்திற்கு முஹம்மதுவரை 124000 நபிகளை அனுப்பியதாக இஸ்லாமிய பாரம்பரியங்கள் சொல்கின்றன. இவர்களில் மக்காவிற்கு மட்டும் இருவர் (இஸ்மாயீல் மற்றும் முஹம்மது) தானா? இது அநியாயம் இல்லையா? சரியான ஊட்டச்சத்து இல்லாமல், நோய்வாய்ப்பட்டு ஒல்லியாக இருக்கும் பையனைப்போல உலக வரைபடத்தில் காணப்படும் இஸ்ரேல் நாட்டிற்கு பலபேரை அனுப்பினான் அல்லாஹ்! ஆனால், பல பாட்டில்கள் ஹார்லிக்ஸும், காம்பிளானும் குடித்துவிட்டு, புஷ்டியாக காணப்படும் அரேபிய தீபகர்ப்பத்திற்கு மட்டும் நபிகளை அனுப்பாமல், அதனை காயவைத்தது மிகப்பெரிய மன்னிக்கமுடியாத தவறு இல்லையா! முஸ்லிம்களுக்கு அல்லாஹ் இழைத்த மிகப்பெரிய துரோகம் இது அல்லவா?

நபிகள் பற்றிய அல்லாஹ்வின் கோட்பாடுகள்: 

ஒவ்வொரு சமுதாயத்துக்கு அல்லாஹ் அனுப்பிய நபிகள் உண்டு:

35:24. நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு, நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை.

10:47. ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய இறை) தூதர் உண்டு; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.

இஸ்மாயீலின் சந்ததிகளுக்கு, அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள் என்றுச் சொல்லக்கூடிய நபர் ஒருவர் கூட 2500 ஆண்டுகளாக இல்லை.

16:36. மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், "அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்" என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; . . . 

முஹம்மதுவிற்கு முன்பு அனுப்பப்பட்ட சில நபிகள் பற்றி தான் அல்லாஹ் குர்-ஆனில் கூறுகின்றான். அவன் அனுப்பிய அனேகரின் பெயர்களை அல்லாஹ் குர்-ஆனில் கூறவில்லை. ஆனால், இஸ்மாயீலிலிருந்து முஹம்மதுவரை ஒருவரையும் அல்லாஹ் அனுப்பவில்லை.

40:78. திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்; இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்; . . . .  

இஸ்மாயீல் ஒரு நபியில்லையா? மக்காவிற்கு ஒரு நபியையும் அனுப்பவில்லையா! அல்லாஹ்?

இதுவரை பார்த்த விவரங்கள் ஒருவகையென்றால், அடுத்து நாம் பார்க்கப்போகும் குர்-ஆன் வசனங்கள் வேறு வகையாகும். அதாவது, "இஸ்மாயீல் ஒரு நபி" என்று இதுவரை இக்கட்டுரையில் எழுதி வந்துக்கொண்டு இருக்கிறேன். ஆனால், கீழ்கண்ட குர்-ஆன் வசனங்கள் ஒரே அடியாக பெரிய குண்டை எடுத்து போடுகின்றன. அதாவது, மக்காவிற்கு, நான் ஒரு நபியைக்கூட அனுப்பவில்லை, எச்சரிக்கை செய்பவர் ஒருவரையும் அனுப்பவில்லை, அவ்வளவு ஏன், வேதத்தையும் அனுப்பவில்லையென்று அல்லாஹ் சொல்கிறான். அதனால் தான் கடைசியாக முஹம்மதுவை அனுப்பியிருக்கிறேன் என்று அல்லாஹ் சொல்கிறான்.

32:3. . . . எவர்களுக்கு உமக்கு முன் அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்ததில்லையோ, அந்த சமூகத்தாருக்கு, அவர்கள் நேர்வழியில் செல்லும் பொருட்டு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மை(வேதமாகும்).

34:44. எனினும் (இதற்கு முன்) நாம் இவர்களுக்கு இவர்கள் ஓதக்கூடிய வேதங்கள் எதையும் கொடுக்கவில்லை; உமக்கு முன்னர், நாம் இவர்களிடம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரையும் அனுப்பவில்லை.

28:46. . . . எனினும் எந்த மக்களுக்கு, உமக்கு முன்னால் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் அனுப்பப்படவில்லையோ, அவர்கள் நல்லுபதேசம் பெறும் பொருட்டு அவர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காக உமக்கு உம் இறைவனிடமிருந்து அருட்கொடையாக (இவைக் கூறப்படுகிறது).

36:6. எந்த சமூகத்தினரின் மூதாதையர்கள், எச்சரிக்கப்படாமையினால் இவர்கள் (நேர்வழி பற்றி) அலட்சியமாக இருக்கின்றார்களோ இ(த்தகைய)வர்களை நீர் எச்சரிப்பதற்காக.

இவைகளின் படி, மக்காவிற்கு எச்சரிக்கை செய்ய வந்த முதல் மற்றும் கடைசி நபி 'முஹம்மது' ஆவார். அப்படியானால், இஸ்மாயீல் நபி இல்லையா? அவர் மக்கா இருந்த பகுதியில் அல்லாஹ் பற்றி எச்சரிக்கை செய்யவில்லையா? இஸ்மாயீல் நபி இல்லை என்றுச் சொன்னால், மக்காவை, காபாவை அல்லாஹ் 2500 ஆண்டுகள் மறக்கவில்லை, இன்னும் பல ஆயிர ஆண்டுகள் (குறைந்த பட்சம் 4000 ஆண்டுகள் - ஆதாம் முதல் முஹம்மதுவரை) மறந்துள்ளார். தோண்டத்தோட்ண்டடு குர்-ஆனிலிருந்து பல புதையல்கள் வெளிப்படுகின்றது. 

இக்கட்டுரையில் முஹம்மது ஜான் குர்-ஆன் தமிழாக்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அடிக்குறிப்புக்கள்:

[1] எருசலேமிலிருந்து மக்கா வரை கூகுளில் தூரத்தை கணக்கிட்டால், 1483 கிலோ மீட்டர்கள் வருகின்றது. காரில் சாலையில் பிரயானம் செய்தால் இந்த கணக்கு. 4000 ஆண்டுகளுக்கு முன்பு, காடுமேடுகளைத் தாண்டி, பிரயாணம் செய்தால், இன்னும் தூரம் அதிகமாகும். 

[2] ஆபிரகாம் மக்காவிற்கு கி.மு. 2000 காலகட்டத்தில் சென்றார் என்பதற்கு எந்த ஒரு  சரித்திர ஆதாரமும் இல்லை.


இதர தலைப்புக் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்




Virus-free. www.avast.com

2 கருத்துகள்:

abu abdhullah சொன்னது…

வசனங்களை உனக்கு ஏதுவாக கோடிட்டு உன் கர்பனைகளை அழக எழுதியுள்ளாய்

Isa Koran சொன்னது…

சகோதரரே, இந்த கட்டுரையில் எந்த இடத்தில் உங்களுக்கு கேள்விகள் உள்ளன என்று தெரிவிக்க முடியுமா?