ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வியாழன், 30 நவம்பர், 2017

கேள்வி 4: நான் புதிதாக கிறிஸ்தவத்தை தழுவியுள்ளேன். கிறிஸ்தவத்தில் ஹலால், ஹராம் என்பவைகள் உண்டா? நான் எவைகளை பின்பற்ற வேண்டும்? எவைகளை பின்பற்றக்கூடாது?

பதில்:

ஒரு முஸ்லிம் பின்னணியிலிருந்து இயேசுவை பின்பற்ற முடிவு செய்தவர்கள் கேட்கும் முதலாவது கேள்வி இதுவாகத் தான் இருக்கும். ஏனென்றால், ஹலால் ஹராம் என்கின்ற இவ்விருவார்த்தைகள் தான் முஸ்லிம்களை ஒவ்வொரு நாளும் நடத்துகின்றன. ஒரு முஸ்லிம் எதைச் செய்ய நினைத்தாலும், அது ஹலாலா? ஹராமா? அல்லது சுன்னத்தா? என்று தெரிந்துக்கொண்டு செயல்படுகின்றான்.

  • ஹலால் -  அனுமதிக்கப்பட்டவை
  • ஹராம் -  செய்யக்கூடாதவை
  • சுன்னத் - 'செய்தால்' நன்மை கிடைக்கும், செய்யாவிட்டால் பாவமில்லை. 

இதே மனநிலையோடு இருப்பதினால் தான் நீங்களும் இந்த கேள்வியை கேட்டுள்ளீர்கள். உங்களுக்கு ஒரு நற்செய்தி சொல்லப்போகிறேன், அது என்னவென்றால், 'நீங்கள் இயேசுவை பின்பற்ற முடிவு செய்தபடியினால்', இனி நீங்கள் செய்ய விரும்பும் ஒவ்வொரு செயலுக்காக:

அ) இமாம்களைத் தேடிச் செல்லவேண்டியதில்லை.

ஆ) அறியாமையினால் தவறாக ஒரு செயலைச் செய்துவிட்டால், அல்லாஹ் தண்டித்துவிடுவானோ! என்று பயப்படத்தேவையில்லை.

இ) எந்த இஸ்லாமிய அறிஞர் சொல்வதைக் கேட்பது? ஒரு குறிப்பிட்ட இஸ்லாமிய அறிஞரின் இயக்கத்துடன் இணைந்து வாழ்ந்தால், அவரை மற்ற இயக்கத்தினர் காஃபிர்கள் என்று குற்றம்சாட்டுகிறார்கள். இவர்களை அவர்கள் 'காஃபிர்கள்' என்கிறார்கள். எனவே எந்த அறிஞர் சொல்வது 'உண்மை இஸ்லாம்' என்று புரியாமல் குழம்பத்தேவையில்லை.

ஈ) சுருக்கமாகச் சொல்வதென்றால், நீங்கள் முழுவதுமாக விடுதலை பெற்றுவிட்டீர்கள், அதாவது இஸ்லாமை பின்பற்றிக்கொண்டு இருந்தவரை நீங்கள் அடிமையாக இருந்தீர்கள் என்று அர்த்தம்.

கிறிஸ்தவத்தில் ஹலால் ஹராம் இல்லையா?

நீங்கள் விடுதலையாகிவிட்டீர்கள் என்றுச் சொன்னால், 'இனி நீங்கள் உங்கள் விருப்பபடி எப்படியும் வாழலாம்' என்று அர்த்தமில்லை. 1947ம் ஆண்டு நம் இந்தியா ஆங்கிலேயர்களின் ஆட்சியிலிருந்து விடுதலைப் பெற்றது. இதன் அர்த்தம் என்ன? இனி ஒவ்வொரு இந்தியனும் தனக்கென்று சட்டங்களை வகுத்துக்கொள்ளாமல், எல்லா வித சட்ட விரோத செயல்களையும்  செய்யலாம் என்று அர்த்தமா? இல்லை. சுதந்திர இந்தியாவில், 1947லிருந்து காவல்துறையும், நீதிமன்றமும், சிறைச்சாலைகளும் இருக்காது என்று அர்த்தமா? இல்லை. 

'விடுதலை' என்றால், நம்மை வெளிநாட்டவன் ஆளாமல், நம்மை நாமே ஆண்டுக்கொள்வதாகும். 'விடுதலை' என்றால் தவறான சட்டங்களை நீக்கிவிட்டு, சரியான சட்டங்களை நியமித்துக்கொண்டு வாழ்வதாகும். நமக்கென்று ஒரு அரசியல் சட்டத்தை எழுதிக்கொண்டு, நம்மை நாமே ஆண்டுக்கொண்டு இருக்கிறோம்.  எனவே, இஸ்லாமிலிருந்து விடுதலை பெற்றவர்களுக்கும், கிறிஸ்தவம் எது ஹலால்? எது ஹராம்? என்று கற்றுக்கொடுக்கிறது. ஆனால், இஸ்லாமின் ஹலால் ஹராமுக்கும், கிறிஸ்தவத்தின் ஹலால் ஹராமுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. அவைகளை புரிந்துக்கொள்ள மேற்கொண்டு படியுங்கள்.

1) கிறிஸ்தவர்களின் முதலாவது சட்டம்: பத்து கட்டளைகள்

கிறிஸ்தவர்களுக்கும் ஹலால்/ஹராம் (அனுமதிக்கப்பட்டது, தடுக்கப்பட்டது) கட்டளைகள் உள்ளன. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி மோசேயின் மூலமாக, தேவன் கொடுத்த பத்து கட்டளைகளை கிறிஸ்தவர்கள் தவறாமல் பின்பற்றவேண்டும்.

அவைகளை சுருக்கமாக இங்கு தருகிறேன்:

1. உன் தேவனாகிய கர்த்தர் நானே. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

2. உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக;

3. ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக

4. உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக

5. கொலை செய்யாதிருப்பாயாக. 

6. விபசாரம் செய்யாதிருப்பாயாக. 

7. களவு செய்யாதிருப்பாயாக.

8. பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக

9. பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக 

10. பிறனுடைய யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக.

(யாத்திராகமம் 20:2-17 & உபாகமம் 5:6-21)

இந்த பத்து கட்டளைகளை நீங்கள் கடை பிடிக்கவேண்டும், 'செய்' என்றுச் சொன்னதை செய்யவேண்டும் (ஹலால்), 'செய்யாதே' என்றுச் சொன்னதை செய்யக்கூடாது (ஹராம்).

இவ்வளவு தானா! பத்து கட்டளைகளை மட்டுமே பின்பற்றினால் போதுமா? ரொம்பவும் ஈஸியாக இருக்கின்றதே! என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்! நான் முஸ்லிமாக இருக்கும் போது மூட்டை கணக்கில் கட்டளைகளை பின்பற்றிக்கொண்டு இருந்தேனே! என்று ஆச்சரியப்படுகிறீர்கள் அல்லவா! இதனால் தான் நான் சொன்னேன் 'நீங்கள் விடுதலையாகியுள்ளீர்கள்' என்று.

இன்னொரு நற்செய்தியையும் உங்களுக்குச் சொல்லட்டுமா! இந்த பத்து கட்டளைகளையும் மிக்ஸியில் போட்டு, இயேசு இரண்டே கட்டளைகளாக மாற்றிவிட்டார்! அடுத்த பாயிண்டை படியுங்கள், நீங்கள் துள்ளி குதிப்பீர்கள்!

2) கிறிஸ்தவர்களின் இரண்டாவது சட்டம்: இரண்டு கட்டளைகள்

மேற்கண்ட 10 கட்டளைகள் மட்டுமல்ல, பழைய ஏற்பாட்டிலுள்ள இதர கட்டளைகள் அனைத்தும் இரண்டே கட்டளைகளில் அடக்கிவிட்டார் இயேசு. 

• முதலாம் பிரதான கட்டளை: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக.

• இரண்டாம் பிரதான கட்டளை: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக (மத்தேயு 22:37-40)

இவ்வளவு தான் கிறிஸ்தவம். இக்கட்டளைகளுக்கு மேலேயும் ஒன்றுமில்லை, கீழேயும் ஒன்றுமில்லை. 

ஒரு சந்தேகம்: இப்போது நான் எத்தனை கட்டளைகளை பின்பற்றவேண்டும்? 10 (அ) 2:

பழைய ஏற்பாடு 10 கட்டளைகள் என்றுச் சொல்கிறது, புதிய ஏற்பாடு 2 கட்டளைகள் என்கிறது, மொத்தம் 12 கட்டளைகள் ஆகிறதல்லவா? எனவே, நான் 12 கட்டளைகளை பின்பற்றினால் போதுமா! என்ற கேள்வி எழும்.

இயேசு அந்த இரண்டு கட்டளைகள் பற்றி சொல்லும் போது, என்ன கூறினார் என்பதை கவனிக்கவேண்டும்: 

இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்(மத்தேயு 22:40)

(கவனிக்கவும்: நம் பைபிள் தமிழாக்கத்தில் 'கட்டளை' என்ற வார்த்தையை, 'கற்பனை' என்று (பிழையாக) மொழியாக்கம் செய்துள்ளார்கள். நாம் பொதுவாக பயன்படுத்தும் 'கற்பனை (Imagination)'அல்ல இது என்பதை மனதில் வைக்கவேண்டும். இவ்வசனத்தில்  கற்பனை என்றால் கட்டளை (commandment) என்று அர்த்தம்).

இவ்விரண்டு கட்டளைகளை மட்டும் பின்பற்றினால் போதும், இவைகளுக்குள் அனைத்து பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளும் அடங்கிவிடும் என்கிறார். ஆக, நாம் 2 கட்டளைகளை மட்டுமே பின்பற்றினால் போதும்.  

எப்படி 2 கட்டளைகளை பின்பற்றினால், 10 கட்டளைகளை பின்பற்றுவது போல ஆகும்? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.

கீழேயுள்ள படத்தைப் பார்க்கவும். பழைய ஏற்பாட்டின் 10 கட்டளைகளை இரண்டாக பிரிக்கலாம்.

  • கட்டளைகள் 1 - 3: மனிதன் தேவனுக்காக செய்யவேண்டியவைகள்.
  • கட்டளைகள் 4 - 10: மனிதன் இதர மனிதர்களுக்காக செய்யவேண்டியவைகள்.

படம் 1: 10 கட்டளைகள் & 2 கட்டளைகள் 

இயேசுவின் வார்த்தைகளின் படி, ஒரு மனிதன், தேவனை தன் முழு இருதயத்தோடும், முழு பலத்தோடும், முழு மனதோடும் அன்பு கூர்ந்தால், அவன், தேவனுக்கு துக்கம் உண்டாக்கும் எந்த ஒரு செயலையும் செய்யமாட்டான். இதன் அர்த்தமென்ன? தேவன் சொன்ன ஆயிரம் கட்டளைகளை நிறைவேற்றுவதற்கு பாடுபடுவதைக் காட்டிலும், அந்த தேவனை முழு மனதோடு அன்பு கூர்ந்துவிட்டால் போதும், அந்த ஆயிரம் கட்டளைகளை நாம் மகிழ்ச்சியாக பின்பற்றிவிடுவோம், அவைகளை பாரமாக நினைக்கமாட்டோம், அன்புக்கு அவ்வளவு வலிமையுள்ளது. 

இதே போல, ஒரு மனிதன், தன்னை நேசிப்பதைப்போல, பிறனையும் நேசிக்க ஆரம்பித்துவிட்டால் போதும், அவன் 10 கட்டளைகளில் உள்ள 7 கட்டளைகளை தானாகவே பின்பற்றிவிடுவான். தன் அயலகத்தார்களை நேசிப்பவன், அவர்களின் பொருட்களை திருடமாட்டான் (கட்டளை 7), அவர்களுக்கு விரோதமாக பொய் சொல்லமாட்டான் (கட்டளை 8), அவர்களின் மனைவியையோ, பொருட்களையோ இச்சித்து பாவம் செய்யமாட்டான் (கட்டளை 9 & 10). தன் பெற்றோர்களை தன்னைப்போலவே நேசிப்பவன், அவர்களை கனப்படுத்துவான் (கட்டளை 4).  எனவே, ஆயிரம் கட்டளைகளை பின்பற்ற முயலுவதைக் காட்டிலும், ஒரே கட்டளையை முழு மனதோடு பின்பற்றிவிட்டால் (தன்னைப் போல அன்பு கூறிவிட்டால்) போதும், அனைத்து இதர கட்டளைகளும் நிறைவேற்றப்படும்.

ஒருவேளை பைபிளில் உள்ள அனைத்து கட்டளைகளையும் கூட்டும் போது, நமக்கு 1000 கட்டளைகள் வருகின்றது என்று வைத்துக்கொள்வோம் (திருடாதே, கொலை செய்யாதே, விபச்சாரம் செய்யாதே, பொய் சொல்லாதே, தீமை செய்யாதே, மற்றவர்களுக்கு தடங்கலாக இருக்காதே, உண்மை பேசு, நீதி செய், நன்மை செய், தேவனை மட்டுமே வணங்கு, வேதத்தை வாசி போன்றவை . . .) இவைகள் அனைத்தையும் வகைப்படுத்தினால், முதலாவதாக, தேவனுக்காக நாம் செய்யக்கூடிய கடமைகளாக (கட்டளைகளாக) இருக்கும், இரண்டாவதாக, இதர மக்களுக்காக நாம் செய்யக்கூடிய கடமைகளாக (கட்டளைகளாக) இருக்கும். எனவே, தேவனை முழு மனதோடு நேசித்து நடந்துக்கொண்டால் போதும், அதே போல, மற்றவர்களின் மனது புண்படாமல் நடந்துக்கொண்டால் போதும். இவ்விரண்டையும் செய்ய ஒரே வழி, தேவன் மீதும், மனிதன் மீதும் முழு மனதோடு அன்பு செலுத்துவது.

ஆக, கிறிஸ்தவத்தில் 'ஹலால்' 'ஹராம்' உண்டா? என்று கேட்டால், 'ஆமாம்' உண்டு என்பது தான் பதில். ஆனால், ஹலாலைச் செய்து, ஹராமை எப்படி விட்டுவிடுவது? இக்கேள்விக்கு பதில் 'அன்பு கூறுவது தான் சுலபமான மற்றும் சரியான வழி'. 

இதனால் தான் நான் இந்த பதிலின் ஆரம்பத்தில், 'நீங்கள் விடுதலை ஆகிவிட்டீர்கள்' என்றுச் சொன்னேன்.

முடிவுரை: 

கிறிஸ்தவத்தில் ஹலால், ஹராம் உள்ளதா என்று கேள்வி கேட்ட சகோதரருக்கு எழுதிக்கொள்வது. முதலாவது, நீங்கள் இஸ்லாமில் கற்றுக்கொண்டதை கைவிடவேண்டும், மனதளவில் மாற்றம் கொண்டுவரப்படவேண்டும். 'கிறிஸ்தவம்' இஸ்லாம் போன்ற மார்க்கமல்ல, அது வித்தியாசமானது, சுலபமானது அதே நேரத்தில் இஸ்லாமை விட பரிசுத்தமானது, மற்றும் உண்மையானது. 

  • இஸ்லாம் -  கிரியை மார்க்கம்.
  • கிறிஸ்தவம் - கிருபை மார்க்கம்.
  • இஸ்லாம் மனிதனைப் பார்த்து 'எத்தனை கட்டளைகளை பின்பற்றினாய்?' என்று கேட்கிறது.
  • கிறிஸ்தவம் மனிதனைப் பார்த்து 'நீ எப்படி அன்பு கூறினாய்? (எப்படி வாழ்ந்தாய்?)' என்று கேட்கிறது.
  • இஸ்லாம் – உன் இரட்சிப்பை நீயே சம்பாதித்துக் கொள் என்கிறது.
  • கிறிஸ்தவம் – 'உன் இரட்சிப்பை நான் சம்பாதித்து வைத்துள்ளேன், அதனை முழுமனதுடன் பெற்றுக்கொள்வாயா?' என்று கேட்கிறது. 
  • இஸ்லாம் – நீ சொர்க்கம் வர நீ என்ன செய்தாய்? எனக்கு அவைகளைக் காட்டு, நான் பார்க்கட்டும் என்றுச் சொல்கிறது.
  • கிறிஸ்தவம் – நீ சொர்க்கம் வர உனக்காக நான் என்ன செய்துள்ளேன்? என்று நீ பார்த்து அறிந்துக்கொள் என்றுச் சொல்கிறது.

ஒருவன் இஸ்லாமை பின்பற்ற முடிவு செய்தவுடன், அவன் முதுகில் ஒரு டன் எடையுள்ள மூட்டையை எடுத்து வைத்து, இதனை உன் மரணம் வரை சுமந்துக்கொண்டு வரவேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது.  ஆனால், கிறிஸ்துவோ, அந்த மூட்டையை என் காலடியில் வைத்துவிட்டு, விடுதலையோடு என்னோடு நடந்துச் செல் என்றுச் சொல்கிறார்.

அன்பு சகோதரனே! சகோதரியே! நீ விடுதலையாக்கப்பட்டுள்ளாய், இனி உன்னை யாரும் அடிமைப் படுத்த  இடம் கொடுக்காதே! 

அடுத்த கேள்வி: ஹலால் ஹராம் என்பதை நற்செயல்களை சம்மந்தப்படுத்தி விளக்கினீர்கள், ஆனால், சாப்பிடுவதில், உடைகள் அணிவதில் மற்றும் இதர காரியங்களில் ஹலால் ஹராம் பற்றி கிறிஸ்தவம் என்ன சொல்கிறது என்பதை விளக்கமுடியுமா?

கேள்வி 3: நான் ஒரு முஸ்லிம் பெண், படித்துகொண்டு இருக்கிறேன். இயேசுவை விசுவாசிக்கிறேன். என் முடிவை வீட்டில் உள்ளவர்களுக்குச் சொன்னால், என் படிப்பை நிறுத்திவிட்டு, வீட்டில் உட்காரவைத்து விடுவார்கள், அல்லது திருமணம் செய்துவிடுவார்கள். நான் என்ன செய்வது?பொருளடக்கம்கேள்வி 5:

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/new_creation_qa/new_creation_qa4.html


Virus-free. www.avast.com

கருத்துகள் இல்லை: