ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 30 ஏப்ரல், 2022

ரமளான் 2022 - உவமை 10: புத்தியுள்ள 5 கன்னிகைகளாக மாறி சொர்க்கத்திற்குள் நுழைய முஸ்லிம்களுக்கு விருப்பமா?

(ரமளான் 2022 தொடர் கட்டுரைகள்)

(முந்தைய வேதங்களின் உவமைகளும் இஸ்லாமும்)

ரமளான் 2022 ஆண்டின் முந்தைய கட்டுரைகளை கீழே படிக்கவும்:

  • உவமை 1: விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான் - யார் வழியருகே விதைக்கப்பட்டவர்கள்?
  • உவமை 2: காணாமல் போன ஆடுகளை அல்லாஹ் தேடுவானா? வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிப்பானா?
  • உவமை 3: தீய குத்தகைக்காரர்களின் உவமையும், இஸ்லாமின் முன்னறிவிப்பும்
  • உவமை 4: தீய குத்தகைக்கார உவமையில் முரண்பாடும், பிழையும் உள்ளதா?
  • உவமை 5: முஸ்லிம்களே, உங்கள் கண்ணத்தில் ஒரு தகப்பனாக‌ அல்லாஹ் முத்தம் கொடுப்பானா? சொந்த வீட்டிலேயே அடிமைகளாக வாழும் பிள்ளைகளா நீங்கள்?
  • உவமை 6: இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு அளித்த தகப்பன் - இது தான் இஸ்லாமிய வழி
  • உவமை 7: அன்றைய பரிசேயர்களும் இன்றைய முஸ்லிம்களும் – சுயநீதி தம்பட்டத்தினால் இறைவனின் அன்பை பெறமுடியுமா?
  • உவமை 8: நீ இறைவனின் இலவச கிருபையை பெற விரும்புகிறாயா? அல்லது உன் அமல்கள் (கந்தைத் துணி, இத்தா துணி) மூலமாக இறைவனின் தரத்தை எட்டிவிடலாமென கனவு காண்கிறாயா?
  • உவமை 9:முஸ்லிம்களே நல்ல சமாரியன்கள்! என்ன விளையாடுகிறீரா? இது எப்படி சாத்தியம்?

இந்த தற்போதைய கட்டுரையில் இன்னொரு சுவாரசியமான உவமையைக் காண்போம். 

புத்தியுள்ள மற்றும் புத்தியற்ற கன்னிகைகள்

கீழ்கண்ட 13 வசனங்களில் ஒரு அருமையான நிகழ்ச்சியை இயேசு கூறி அதன் மூலமாக, ஒரு முக்கியமான எச்சரிக்கையை கொடுத்துள்ளார். இந்த உவமையில் ஒரு நற்செய்தியும் ஒரு தீய‌ செய்தியும் உள்ளது,  யாருக்கு நற்செய்தியுள்ளது, யாருக்கு தீயச்செய்தியுள்ளது என்பதை அறிய, வாருங்கள் இந்த உவமையை படிப்போம். மேலும் முஸ்லிம் நண்பர்களுக்கு இந்த உவமையிலிருந்து என்ன ஆலோசனை கிடைக்கிறது என்பதை பற்றி ஆய்வு செய்வோம்.

மத்தேயு 25:1-13

1. அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்.

2. அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள்.  3. புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை. 4. புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள்.

5. மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள். 6. நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று. 7. அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள்.

8. புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள். 9. புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள். 10. அப்படியே அவர்கள் வாங்கப் போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாண வீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது.

11. பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள். 12. அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

13. மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.

1) புத்தியுள்ளவர்கள், புத்தியில்லாதவர்கள் என்றால் என்ன பொருள்:

மேலே படித்த உவமையில் "புத்தியுள்ளவர்கள், புத்தியில்லாதவர்கள்" என்று வாசிக்கும் போது, ஏதோ, அவர்கள் பிறந்ததிலிருந்தே புத்தியுள்ளவர்கள் என்றோ, அதே போன்று மற்றவர்கள் பிறந்ததிலிருந்தே புத்தியில்லாதவர்கள் என்றோ நாம் பொருள் கொள்ளக்கூடாது. இந்த உவமையில் கவனிக்கவேண்டிய விவரம் என்னவென்றால், ஒரு செயலைச் செய்யும் போது, அல்லது ஒரு காரியத்தில் அவர்கள் புத்தியில்லாதவர்களாக நடந்துக்கொண்டார்கள் என்று பொருள் கொள்ளவேண்டும். 

உலகின் பெரும்பான்மையான நாடுகளில், திருமண நிகழ்ச்சிகளை மிகவும் விமரிசையாக கொண்டாடுவார்கள். இன்றும் சில‌ செல்வந்தர்கள் தங்கள் "செழிப்பை" அதிக செலவுகள் செய்து தங்கள் வீட்டு திருமணங்களில் காட்டுவார்கள். இது அவரவர் விருப்பம். சில நாடுகளில் அந்த கொண்டாட்டங்கள் 7 நாட்களுக்குத் தொடரும். நம் இந்தியாவிலும், இப்படி பல நாட்கள் கொண்டாடியதாக நாம் கேள்விப்பட்டிருப்போம். நாட்கள் செல்லச்செல்ல, திருமண செலவுகளும் அதிகமாகிவிட்டதால், கூட்டுக்குடும்பங்கள் உடைந்துவிட்டதால்  நாட்கள் குறைந்து, இப்போது இரண்டு நாட்களில் திருமணத்தை முடித்துக்கொள்கிறார்கள். இன்னும் சில காதல் ஜோடிகள், மற்றும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட சில திருமணங்கள் கூட‌ ஒரே ஒரு மணி நேரத்தில் திருமண பதிவு அலுவலகத்திற்கு சென்று திருமணத்தை முடித்துக்கொள்கிறார்கள்.

முக்கியமாக, இயேசு வாழ்ந்த மத்தியகிழக்கு நாடுகளில், மூன்று நாட்கள் அல்லது ஒரு வாரம் திருமணம் நடக்குமாம்.  மாப்பிள்ளை அழைப்பு, மணப்பெண் அழைப்பு என்று பல நிகழ்ச்சிகள் நடக்கும். அதில் மாப்பிள்ளை அழைப்பு பற்றி தான் இந்த உவமையில் சொல்லப்பட்டுள்ளது. மாப்பிள்ளையை வரவேற்க ஒரு பெரிய கூட்டமே காத்திருக்கும், முக்கியமாக கன்னிப்பெண்கள், விளக்குகளை (தீவட்டிகளை) ஏந்திக்கொண்டு காத்திருப்பார்கள்.

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை தெரிந்துக்கொண்டு, புத்திசாலித்தனமாக, தீவட்டிகளுக்குத் தேவையான எண்ணையை எடுத்துக்கொண்டுச் செல்லாத பெண்களைத் தான் "புத்தியில்லாதவர்கள்" என்று இந்த உவமையில் கூறப்பட்டுள்ளது.

2) புத்தியுள்ள கன்னிகைகள் யார்?

இந்த உவமையில் இயேசு தம்மை மணவாளன் என்றும், தம்மை விசுவாசித்து, பரிசுத்தமாக தங்களைக் காத்துக்கொண்டு, ஆயத்தமாக (எண்ணையை வைத்துக்கொண்டு) அவரது வருகைக்கு காத்திருக்கின்ற திருச்சபையை "புத்தியுள்ள கன்னிகைகளுக்கு" ஒப்பிட்டு கூறியுள்ளார்.

அன்பு முஸ்லிம் நண்பர்களே! இறைவனின் சொர்க்கத்திற்குச் செல்லவேண்டுமென்று தானே நீங்கள் பல அமல்களைச் செய்கிறீர்கள்? தவறாமல் அனுதினமும் தொழுகிறீர்கள், ரமளான் நோன்பு நோற்கிறீர்கள்? இன்ன பல நல்ல செயல்களைச் செய்து மக்களுக்கு உதவி செய்கிறீர்கள்? இவைகள் எல்லாம் உங்களை சொர்க்கத்தின் வாசல் மூடப்படுவதற்கு முன்பு உள்ளே செல்ல உதவுமா? சிந்தித்துப் பாருங்கள். மனிதனால் எந்த காலத்திலும் 'பரிசுத்த இறைவன் விரும்பும் அளவிற்கு பரிசுத்தமாக பிழையில்லாத வாழ்க்கை வாழமுடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?'? 

3) சொர்க்கத்தின் கதவுகளை மூட இயேசுக்கு யார் அனுமதி கொடுத்தது?

முஸ்லிம்கள் பல முறை "இயேசு இறைவன் அல்ல, அவர் ஒரு நபி/தீர்க்கதரிசி மட்டுமே" என்றுச் சொல்வார்கள். இயேசு புதிய ஏற்பாட்டில் எங்கேயாவது "தம்மை கடவுள் என்றோ, தமக்கு தெய்வீகத்தன்மை உண்டு என்றோ" கூறியுள்ளாரா? என்று கேள்வி எழுப்புவார்கள்.

நீங்கள் ஒப்புக்கொண்டாலும் சரி, ஒப்புக்கொள்ள மனமில்லாமல் மறுத்தாலும் சரி, இந்த உவமையில் இயேசு தம்மை இறைவன் என்றுச் சொல்வதைக் காணலாம்.

பரலோக ராஜ்ஜியத்தின் அதாவது சொர்க்கத்தின் கதவுகளை ஒரு முறை அவர் மூடிவிட்டால், அதன் பிறகு ஆயத்தமில்லாதவர்கள் என்ன செய்தாலும் சரி, என்னச் சொல்லி முறையிட்டாலும் சரி "உங்களை அறியேன் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்று சொல்லிவிடுவார்.

இந்த இடத்தில் "உங்களை அறியேன்" என்று இயேசு கூறியது, உண்மையாக அவர்களை அவர் அறியவில்லை என்று அர்த்தமல்ல, அவர்கள் யார் என்று அவருக்கு தெரியவில்லையென்று பொருள் அல்ல, அவர்களை அவர் "அங்கீகரிக்கமாட்டார், அனுமதி கொடுக்கமாட்டார்" என்று பொருளாகும். சர்வஞானியான இறைவனுக்கு அவர்கள் யார் என்று தெரியாமல் இருக்குமா?  

ஆயத்தமில்லாதவர்களுக்கு அவர் அனுமதி கொடுப்பதில்லை. கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டாலும், திருச்சபையின் அங்கத்தினர்களாக இருந்தாலும், அவர்கள் கையில் தீவட்டிகளை வைத்திருந்தாலும், அந்த தீவட்டி (பரிசுத்தமான வாழ்க்கை) மணவாளன் வர தாமதம் ஆகிவிட்டாலும், எண்ணையை வைத்துக்கொண்டு எப்போதும ஆயத்தமாக இருக்கும் மக்களுக்கு மட்டுமே சொர்க்கத்தின் உள்ளே நுழைவதற்கு அனுமதி.

இந்த உவமையின் சுருக்கம் மத்தேயு 25:13வது வசனத்தில் உள்ளது.

"25:13 மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்."

ஆயத்தமாக இருங்கள்  கடைசி நேரத்தில் கைவிடப்படும்படியாக வாழாதீர்கள். 

  • ஒரு நபி தம்முடைய வருகைக்காக காத்திருங்கள் என்று சொல்லமுடியுமா?
  • ஆயத்தமாக இல்லாதவர்களை நான் விட்டுவிடுவேன் என்று சொல்லமுடியுமா?
  • சொர்க்கத்திற்குள் அனுமதிக்க இவருக்கு யார் அனுமதி கொடுத்தது?

இதற்கு ஒரே பதில் தான் உள்ளது, அந்த மணவாளன் தான் இறைவன். பழைய ஏற்பாட்டிலும், தேவன் தம்மை "மணவாளன்" என்றும், இஸ்ரவேல் மக்கள் மணப்பெண் என்றும் கூறியுள்ளார்.

ஏசாயா 62:5. வாலிபன் கன்னிகையை விவாகம்பண்ணுவதுபோல, உன் மக்கள் உன்னை விவாகம்பண்ணுவார்கள்; மணவாளன் மணவாட்டியின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்.

புதிய ஏற்பாட்டில் இயேசு தம்மை மணவாளன் என்றும், திருச்சபை மணவாட்டி என்றும் கூறியுள்ளார்.

4) மனுஷகுமாரன் வரும் நாளை முஸ்லிம்களே நீங்கள் அறிவீர்களா?

மனுஷகுமாரன் என்ற வார்த்தையை பிடித்துக்கொண்டு முஸ்லிம்கள் "பாருங்கள், இயேசு தம்மை மனுஷகுமாரன்" என்றுச் சொல்கிறார், ஆகையால் அவர் இறைவன் அல்ல என்றுச் சொல்வார்கள். 

இந்த வார்த்தைப் பற்றி சுருக்கமாக இரண்டு விவரங்களை முஸ்லிம்கள் அறியவேண்டும். பழைய ஏற்பாட்டின் தானியேல் 7வது அத்தியாயத்தில் ஒரு மனுஷகுமாரனுக்கு ஒப்பானவர் பற்றி வருகிறது.

தானியேல் 7:13-14

13. இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார்.

14. சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்.

தானியேலின் இந்த தரிசனத்திற்கு பிறகு, யூதர்களுக்கு "மேசியா மனுஷகுமாரன் போல வருவார், அவரது ஆட்சி நித்திய ஆட்சி, தேவனுக்கு உள்ள இலக்கணங்கள் அவருக்கு சூட்டப்பட்டுள்ளது" என்று  நன்றாகத்தெரியும்.  

எனவே, இயேசு மனுஷகுமாரன் என்று ஒவ்வொரு முறை சொன்னபோதும், யூதர்களுக்கு உறுத்தியது, "இவன் தன்னை தேவனுக்கு சமமாக பேசுகின்றானே" என்றுச் சொல்லி அவரை கொலை செய்ய முயன்றார்கள். எனவே, முஸ்லிம்களே, இயேசு வாழ்ந்த முதல் நூற்றாண்டில், இஸ்ரேல் நாட்டில், யூதர்களுக்கு மத்தியில் "நான் ஒரு மனுஷன் என்றுச் சொன்னால், அவன் மனிதன் என்று பொருள், யாராவது "நான் மனுஷ குமாரன்" என்றுச் சொன்னால், அவன் தானியேல் 7வது அத்தியாயத்தில் வரும் தெய்வீக புருஷனை குறிப்பிடுகின்றான், தன்னை தேவன் என்றுச் சொல்கின்றான் என்று பொருள் என்பதை நீங்கள் அறியவேண்டும்.

இரண்டாவதாக, இயேசு மத்தேயு 24:13ல் சொன்ன எச்சரிக்கையின் படி, ஒரு மனிஷகுமாரன் வரும் நாளை உலக மக்கள் ஏன் ஆயத்தமாக இருக்கவேண்டும் என்ற கேள்வியைக் கேட்டுப்பார்த்தால், இயேசு தம்மை இறைவன் என்றும், தம்முடைய அடுத்த வருகையில் நீங்கள் கைவிடப்படாமல் இருப்பதற்கு எச்சரிக்கையாக இருங்கள் என்று அவர் கூறுகின்றார் என்று பொருள்.

5) முஸ்லிம்கள் எந்த பிரிவில் இருக்கிறார்கள்? புத்தியுள்ள 5 கன்னிகைகள் பிரிவிலா? அல்லது புத்தியில்லாத 5 கன்னிகைகள் பிரிவிலா?

இதுவரை நாம் உவமையை படித்தோம், அதன் விளக்கத்தையும் மேலோட்டமாக பார்த்தோம். இதன் படி பார்த்தால், முஸ்லிம்கள் எந்த பிரிவில் இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள்?

கண்டுபிடித்துவிட்டீர்களா? உங்களில் சிலர் நினைப்பது போன்று, "ஆம், முஸ்லிம்கள் இந்த இரண்டு பிரிவினரிலும் இல்லை". இதைவிட மிகவும் தூரமான பிரிவில் இருக்கிறார்கள்.  மணவாளன் யார் என்று தெரியாத பிரிவில் "முஸ்லிம்கள் இருக்கிறார்கள்" என்று சொல்லலாம்.

புத்தியில்லாத கன்னிகைகள் குறைந்தபட்சம் மணவாளனின் வருகையை நம்பினார்கள்,அவரை எதிர்க்கொண்டுப் போக, தீவட்டிகளை எடுத்துக்கொண்டுச் சென்றார்கள், அவர் அதோ வருகிறார் என்று சொன்னவுடன் ஆயத்தப்பட முயன்றார்கள், தங்களிடம் எண்ணையில்லாதபடியினால், அதனை வாங்கச் சென்றார்கள், ஆனால், அவர்கள் திரும்பி வரும் போது, கதவு மூடப்பட்டுவிட்டது.

முஸ்லிம்களே, இந்த புத்தியில்லாத பிரிவிலும் இல்லை. அவர்கள் இயேசுவை நம்புவதில்லை, அவர் கொடுக்கும் இரட்சிப்பை பெற விரும்பவில்லை. ஆகையால், அந்த 10 கன்னிகள் கூட்டத்தின் எந்த பிரிவிலும் இல்லை. இந்த உவமையிலும் முஸ்லிம்கள் இல்லை என்று எண்ணும் போது எனக்கு கவலையாக உள்ளது!

சில முஸ்லிம்கள் "இயேசு மறுபடியும் வருவார் என்று இஸ்லாம் சொல்கிறது, அவர் வந்து பன்றிகளை கொள்வார், சிலுவையை முறிப்பார், யூதர்களோடு சண்டையிடுவார்" என்ற கதைகளை நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். 

ஆனால், இது சுத்தப்பொய்யாகும். இயேசு கூறிய உவமையின்படி, அவர் வரும் போது, நாம் ஆயத்தமாக இல்லாமல் இருந்தால், அவர் கைவிட்டுவிடுவார் என்று தெளிவாக கூறுகின்றார். வெளிப்படுத்தல் 22:15ம் வசனத்தின் கடைசி பகுதியை கீழே படிக்கவும்:"பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்". 

வெளி 22:11-16

11. அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.

12. இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.

13. நான் அல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.

14. ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.

15. நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.

16. சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.

முஸ்லிம்களே! நீங்கள் "பொய்யை மெய்" என்று நம்பிக்கொண்டு வாழ்ந்துக்கொண்டு இருக்கிறீர்கள், புத்தியுள்ள கன்னிகைகள் போன்று, மணவாளனின் வருகை மீது விசுவாசம் வைத்து, ஆயத்தமாக இருங்கள், ஏமாற்றப்பட்டுவிடாதீர்கள் என்று இந்த ரமளான் மாதத்தில் அன்போடு எச்சரிக்கிறேன்.

இந்த பத்து கன்னிகள் பற்றிய உவமையை வீடியோவாக இங்கு பார்க்கலாம்:

  1. https://www.bible.com/videos/25414-matthew-25-1-13 
  2. https://www.youtube.com/watch?v=_ZHxI25j1EI  - பத்து கன்னிகைகள் | Ten Virgins | Tamil Christian All
  3. https://www.youtube.com/watch?v=EEw3GlFytro - The Parable Of The Ten Virgins
  4. https://www.youtube.com/watch?v=hngvHaVumJQ  - THE PARABLE OF THE 10 VIRGINS (Matthew 25:1-13)

இன்னொரு உவமையோடு சந்திப்போம்...

தேதி: 30th April 2022




கருத்துகள் இல்லை: