ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வியாழன், 14 ஏப்ரல், 2022

ரமளான் 2022 - உவமை 6: இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு அளித்த தகப்பன் - இது தான் இஸ்லாமிய வழி

(ரமளான் 2022 தொடர் கட்டுரைகள்)

முந்தைய வேதங்களின் உவமைகளும் இஸ்லாமும்

ரமளான் 2022 ஆண்டின் முந்தைய கட்டுரைகளை கீழே படிக்கவும்:

முந்தைய ஐந்தாவது கட்டுரையில் இயேசு கூறிய "கெட்டகுமாரன் (லூக்கா 15:11-33)" என்ற உவமையைப் பற்றி பார்த்தோம். அதனை படித்த என் தம்பி, உடனே எனக்கு மொபைளில் அழைத்து, சரமாரியாக கேள்விகளைக் கேட்டான். அவைகளுக்கு சரிக்கு சமமாக நானும் பதில் அளித்தேன்.  இந்த உவமை "இஸ்லாமில் சொல்லப்பட்ட மன்னிப்பை பிரதிபலிக்கிறது, கிறிஸ்தவத்தில் உள்ள மன்னிப்பை அல்ல" என்று அவன் வாதித்தான்.  வாருங்கள், அந்த உரையாடலை கவனிப்போம். 

உவமை 6: இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு அளித்த தகப்பன் - இது தான் இஸ்லாமிய வழி

(உமருக்கும் தம்பிக்கும் நடந்த உரையாடல்)

உமரின் மொபைளுக்கு அவரது தம்பி, சௌதியிலிருந்து அழைத்தான்.

தம்பி: ஹலோ, அண்ணே, பிரைஸ் த லாட் (Praise the Lord)

உமர்: பிரைஸ் த லாட் தம்பி. என்ன ஆச்சரியம்! எப்போது போன் செய்தாலும் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று கூறுவாய், இன்று என்ன ஆச்சரியமாக, பிரைஸ் த லாட் என்று கூறுகிறாய். அண்ணனுக்கு சமாதானம் (ஸலாம்) கூறமாட்டாயா? [சிரித்துக்கொண்டே உமர் கேட்டான்]

தம்பி: இன்றைக்கு உங்களுக்கு சமாதானம் இல்லை, "கெட்ட குமாரன்" உவமையைச் சொல்லி நீங்கள் என்னிடம் வசமாக மாட்டிக்கொண்டீர்கள்.

உமர்: அப்படியா! பாருடா இந்த உமருக்கு வந்த சோதனை! சரி சொல்லு பார்க்கலாம்.

தம்பி: கிறிஸ்தவத்தின் அடிப்படை கோட்பாடு அல்லது பாவமன்னிப்பு பற்றிய சுருக்கத்தைச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

உமர்: நீ ஒரு முடிவோடு தான் வந்திருக்கிறாய் போல் தெரிகிறது. நீயே அதையும் சொல்லிவிடு

தம்பி: சரி, இதோ ஒரு சிறிய சுருக்கத்தைக் கொடுக்கிறேன்.

  • ஆதாமின் மீறுதலினால், ஒட்டு மொத்த மனித இனம் பாவ சுபாவத்தில் விழுந்துவிட்டது.
  • இதனால், இறைவனோடு மனிதன் கொண்ட உறவு முறிந்துவிட்டது.
  • இரத்தம் சிந்துதல் இல்லாமல், பாவமன்னிப்பு இல்லை.
  • இயேசு இரத்தம் சிந்தி, மனித இனத்திற்கு பாவமன்னிப்பை வாங்கி கொடுத்தார்
  • இறைவனுக்கும் மனிதனுக்கு இடையே உறவு மறுபடியும் புதுப்பிக்கப்பட்டது.

உமர்: சூப்பர் தம்பி, நீ என் தம்பி என்று நான் பெருமையாகச் சொல்லிக்கொள்வேன்!

தம்பி: புகழ்ந்தது போதும்! இப்போது இருக்கு பாருங்க உங்களுக்கு பெரிய அதிர்ச்சி!

நன்றாக கவனியுங்க, அண்ணே! 

நீங்க சொன்ன உவமையில் "பிதா, எந்த ஒரு இரத்தம் சிந்துதல் அல்லது பலி கொடுக்கப்படாமல், மனந்திரும்பி மன்னிப்பு கேட்ட மகனை ஏற்றுக்கொள்கிறார், இந்த உவமையில் இயேசுவும் இல்லை, அவரது இரத்தம் சிந்துதலும் இல்லை. மொத்தத்தில் இயேசு எங்குமே வரவில்லை, அவருக்கு எந்த ஒரு பங்கும் இந்த உவமையில் இல்லை. பிதா தான் இந்த உவமையில் முக்கிய பங்கு வகிக்கிறார். இது எதைக் காட்டுகிறது? இஸ்லாமிய முறையிலான பாவமன்னிப்பை காட்டுகிறது. இது நிச்சயமாக கிறிஸ்தவ முறையிலான பாவமன்னிப்பு அல்ல".

எனவே இயேசு சொன்ன 'கெட்ட குமாரன்' உவமையில், இஸ்லாமிய இறையியல் சொல்லுகின்ற மன்னிப்புத் தான் வெளிப்படுகிறது என்று சொல்லமுடியும், இதற்கு உங்கள் பதில் என்ன? வசமாக மாட்டிக்கொண்டீர்களா?

உமர்: தம்பி, நீ நன்றாக சிந்தித்திருக்கின்றாய்! ஆனால், முக்கியமான பின்னணியை கோட்டை விட்டுவிட்டாயே! 

தம்பி:  பேச்சை திசை திருப்பாதீங்க! நான் கேட்ட கேள்விகளுக்கு பதில்களைத் தாங்க.

உமர்: நிச்சயமாக பதில்களைப் பார்க்கலாம், நான் திசை திருப்பவில்லை.

உன் கேள்விகளுக்கான என் பதிலை மூன்று பகுதிகளாக பிரித்து நான் கொடுக்கப்போகின்றேன்.

  1. இந்த உவமையில் இருப்பது யார்? பிதாவா? அல்லது இயேசுவா?
  2. இந்த உவமையின் முக்கிய நோக்கம் என்ன? எதற்காக இயேசு இந்த உவமையை கூறினார்.
  3. இந்த உவமையில் 'இயேசுவின் சிலுவை மரணம் அல்லது இரத்தம் சிந்துதல் மூலமாக கிடைக்கும் பாவமன்னிப்பு பற்றியா சொல்லப்பட்டுள்ளது'?

தம்பி: இது என்ன புது கூத்தாக இருக்கிறதே! நான் என்ன சொல்கிறேன், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?

உமர்: தம்பி, வேதவசனங்களை சரியாக புரிந்துக்கொள்வதற்கு, அவைகள் என்ன சொல்கின்றன என்பதை பார்க்கவேண்டுமே ஒழிய, நீ அதனை எப்படி புரிந்துக்கொள்கிறாய் அல்லது என்ன வியாக்கீனம் (விளக்கம்) தருகிறாய் என்று பார்க்கக்கூடாது.

உனக்கு புரியும் வகையிலேயே நான் விளக்கம் தருகிறேன். உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், நீ கேட்கலாம்.

முதலாவதாக "இந்த உவமையில் இருப்பது யார்? பிதாவா? அல்லது இயேசுவா?" என்பதை கவனிப்போம்.

தம்பி: இதில் என்ன உங்களுக்குச் சந்தேகம், நீங்கள் தான் பல முறை "தகப்பன் தகப்பன்" என்று நேற்றைய கட்டுரையில் சொன்னீர்களே!

உமர்:  அந்த உவமையில் ஒரு தகப்பனும் இரண்டு மகன்களும் வருகிறார்கள். ஆனால் அந்த தகப்பன் "பைபிளின் பிதாவாகிய தேவன் அல்ல", இயேசுவின் உவமையின் படி, அவர் இயேசுக் கிறிஸ்து ஆவார்.

தம்பி: எப்படி நீங்கள் இதனை முடிவு செய்தீர்கள்?

உமர்: லூக்கா 15ம் அத்தியாயத்தின் முதல் மூன்று வசனங்களை படித்துப் பார்.

15:1. சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள். 

15:2. அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்.

15:3. அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது:

இயேசு பாவிகளோடும், வரி வசூல் செய்கின்றவர்களோடும் (ஆயக்காரர்கள்) சேர்ந்து உண்கிறார், அவர்களை தன்னிடமாய் சேர்த்துக்கொள்கிறார். 

உடனே யூதர்கள் அவர் மீது குற்றம் சுமத்துகிறார்கள் :"இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்".  இந்த குற்றச்சாட்டுக்குத் தான் இயேசு மூன்று உவமைகளை தொடர்ச்சியாகச் சொல்கிறார். இந்த உரையாடலில் இயேசுவும், யூத மத தலைவர்களும் மற்றும் பாவிகள், ஆயக்காரர்கள் என்று சொல்லப்படுகின்ற, சமுதாயத்தில் தீயவர்கள் என்று யூதர்களால் முத்திரை குத்தப்பட்ட மக்களும் தான் இருக்கிறார்கள்.

முதலாவது "காணாமல் போன ஆட்டின் உவமையில்", அந்த ஆட்டைத் தேடிச்சென்ற மேய்ப்பன் இயேசு ஆவார். இரண்டாவதாக "காணாமல் போன காசு உவமையில்", அந்த காசை தேடின அந்தப் பெண் இயேசு ஆவார், அதே போன்று, மூன்றாவதாக, "கெட்ட குமாரன் உவமையில்" அந்த தகப்பன் இயேசு ஆவார்.

ஆக, இந்த மூன்று உவமைகளிலும் வரும், மேய்ப்பன், அந்தப் பெண் மற்றும் தகப்பன், இந்த மூவரும் இயேசு ஆவார். இதனை யூதர்களிடம் சொல்லும் போது, இயேசு "பிதாவாகிய தேவனை" இங்கு குறிப்பிடவில்லை, தம்மையே குறிப்பிட்டார்.  

அந்த வழிதப்பித் திரிந்த ஆட்டைப்போன்றும், காணாமல் போன காசைப்போன்றும், கெட்ட குமாரன் போன்றும், இந்த "ஆயக்காரர்களூம் மற்ற மக்களும் இருக்கிறார்கள்", இவர்களை நான் மன்னித்து சேர்த்துக்கொண்டேன், அதாவது நான் தேடி கண்டுபிடித்து சேர்த்துக்கொண்டேன் என்று இயேசு கூறினார்.

எனவே, இந்த உவமையில் "பிதாவாகிய தேவன் இல்லை, இயேசு மட்டுமே மேய்ப்பனாக, காசை தேடிய பெண்ணாக மற்றும் பிதாவாக" இருக்கிறார். உன்னுடைய விளக்கமும், புரிந்துக்கொள்ளுதலும் தவறு தம்பி.

இன்னொரு இடத்தில் இயேசு "இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் " (லூக்கா 19:10)" என்றுச் சொல்கிறார்.

தம்பி: இதனை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன், இயேசு குமாரனாக இருக்கும் போது எப்படி தம்மை "தகப்பனாக வெளிக்காட்டமுடியும்"?

உமர்: அடப்பாவமே, இந்த சிறிய விவரம் கூடவா உனக்கு புரியவில்லை. இயேசு குமாரன் என்பதும், தேவனுடைய வார்த்தை என்பதும் உண்மை தான். இதற்காக அவர் உலக மக்களுக்கு தகப்பன் இல்லை என்று சொல்லமுடியாதல்லவா? இயேசு ஒரு உவமையில் தம்மை தகப்பனாக எடுத்துக்காட்டக்கூடாதா?

இறையியலின் படி, திரியேக தேவனில் அவர் குமாரன் மற்றும் தேவ வார்த்தையாக இருக்கிறார், இது வேறு, அதே போன்று அவர் உலக மக்களுக்கு தகப்பனாகவும், நண்பனாகவும், சகோதரனாகவும் இருந்து உதவி செய்கிறார், ஆறுதல் படுத்துகிறார் இதனை யார் மறுக்கமுடியும்!

நானே நல்ல மேய்ப்பன் என்று இயேசு கூறுகின்றார், அவரிடம் சென்று "நீர் குமாரன் தானே எப்படி மேய்ப்பன்" என்று கேட்கமுடியாது, அது வேறு இது வேறு.

நான் என் மகனிடம் ஒரு குறிப்பிட்ட கடினமான பிரச்சனையின் போது அவனிடம் "என்னை ஒரு நண்பனாக‌ நினைத்து, உன் பிரச்சனைகளைச் சொல், நான் நிச்சயம் தீர்த்துவைப்பேன்" என்று சொல்லமுடியாதா என்ன?

இயேசுவிற்கு பழைய ஏற்பாட்டில் என்ன பெயர், பட்டப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளது என்று உனக்குத்தெரியுமா? அது "நித்திய பிதா" என்பதாகும்.

ஏசாயா 9:6 

9:6. நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

தம்பி: சரி சரி, இந்த உவமையில் வரும் தகப்பன் இயேசு என்று ஒப்புக்கொள்கிறேன், அடுத்த கேள்விக்குப் போங்கள்.

உமர்:அடுத்த கேள்வி, "இந்த உவமையின் முக்கிய நோக்கமென்ன" என்பதைக் காண்போம். எந்த ஒரு உவமையிலும், முழு கிறிஸ்தவ இறையியலின் அடிப்படை கோட்பாடுகள் அனைத்தையும் காணமுடியாது என்பதை நான் முன்னமே உனக்குச் சொல்லியுள்ளேன்.

யூதர்கள் எந்த குற்றச்சாட்டை இயேசு மீது வைத்தார்களோ, அதற்கு இயேசு பதில் கொடுத்தார். மேலும் தாம் ஏன் பாவிகளையும், ஆயக்காரர்களையும் சேர்த்துக்கொள்கிறார் என்பதற்கு உவமைகளாக பதில் கொடுத்தார். 

ஒரு ஆட்டையும் விட்டுக்கொடுக்காமல் தேடும் மேய்ப்பன் நான் எனவே என்னிடம் வருகின்ற மக்களை நான் புறம்பே தள்ளமாட்டேன், எனக்கு தீமை செய்து என்னைவிட்டு சென்றுவிட்டாலும், மனந்திரும்பி வந்தால்,அப்படிப்பட்ட மக்களை நான் சேர்த்துக்கொள்வேன் என்பதைக் காட்ட அந்த மூன்று உவமைகளை இயேசு கூறினாரே தவிர, கிறிஸ்தவத்தின் அனைத்து கோட்பாடுகளையும் உள்ளடக்கிய ஒரு பெரிய உவமையைச் சொல்லவில்லை.

தம்பி: சரி இருக்கட்டும், இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பை எப்படி இந்த உவமையில் பார்க்கமுடிகின்றது என்பதை விளக்குங்கள் பார்க்கலாம்.

உமர்: இது மூன்றாவது கேள்வியாகும். நான் மேலே சொன்ன இரண்டாவது பதிலின் படி, இந்த உவமை என்பது "கிறிஸ்தவத்தின் ஒட்டு மொத்த இரட்சிப்பின் செய்தியோ, அல்லது உவமையோ அல்ல", இது வெறும், இயேசு எப்படி இழந்துப்போனதை, காணாமல் போனதை தேட வந்தார் என்பதை மட்டுமே சொல்லும், ஒரு குட்டி உவமையாகும்.

ஒவ்வொரு உவமைக்கும் ஒரு நோக்கம் இருக்கும், அந்த நோக்கத்தை மட்டுமே அங்கு பார்க்கவேண்டுமே ஒழிய, "ஒட்டுமொத்த பைபிளின் அடிப்படை சத்தியங்களை அந்த ஒரே உவமையில் எதிர்ப்பார்க்கக்கூடாது".

ஆக, அந்த உவமையில் வரும் ஒரு தகப்பனைப்போன்று இயேசு மக்களை நேசிக்கிறார் என்பதைக் காட்டவே அந்த உவமை சொல்லப்பட்டுள்ளது.

நம் பாவங்களை கழுவவே இயேசு மரித்தார் என்பதை புரிந்துக்கொள்ள, மேற்கண்ட உவமையில் நமக்கு பதில் கிடைக்காது, இதனை வேறு இடங்களில் இயேசு கூறிய வார்த்தைகளை கவனிக்கவேண்டும்.

உதாரணத்திற்கு மத்தேயு 26:26-28வரையுள்ள வசனங்களை படிக்கவேண்டும் தம்பி, முக்கியமாக 28ம் வசனத்தை கவனிக்கவும்.

மத்தேயு 26:26-28

26:26. அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார்.

26:27. பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்;

26:28. இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.

மேலும் பார்க்க:  மத்தேயு 20:28. அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார் என்றார்.

இன்னும் பழைய ஏற்பாட்டிலிருந்து பார்க்கவேண்டுமென்றால், கீழ்கண்ட ஏசாயா வசனங்களை பார்க்கவேண்டும் தம்பி:

ஏசாயா 53:6-12

53:6. நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.

53:7. அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.

53:8. இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லிமுடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டு போனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்.

53:9. துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.

53:10. கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.

53:11. அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப்பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.

53:12. அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.

தம்பி: போதும்.. போதும் அண்ணே! வசனங்களை மழை போல கொட்டிக்கொண்டு இருக்காதீங்க...

உமர்:  கெட்ட குமாரன் உவமையில் வரும் அந்த நல்ல அன்பான தகப்பன் இயேசு ஆவார் என்றும், மேலும், இந்த உவமையில் வரும் மன்னிப்பு, இயேசுவின் அன்பைக் காட்டும் மன்னிப்பு என்றும் இப்போதாவது ஒப்புக்கொள்கிறாயா?

மேலும், இந்த உவமையில் சொல்லப்பட்ட மன்னிப்பு "உலக இரட்சிப்புக்காக சொல்லப்பட்ட இரத்தம் சிந்துதலினால் கிடைக்கும் மன்னிப்பு அல்ல" என்பது இதன் மூலம் நாம் அறியலாம். 

தம்பி: என்னவோ போங்க, எது சொன்னாலும் எதோ ஒருவகையில் கௌண்டர் அட்டாக் செய்து, சின்னப் பையனா ஏமாற்றி விடுகிறீர்கள்!

உமர்: நீ சின்னப் பையனா? உன்னை ஏமாற்றுகிறேனா நான்?  நீ பைபிள் வசனங்களை பின்னணியை விட்டுவிட்டு, தவறாக புரிந்துக்கொண்டு என்னிடம் கேள்விகள் கேட்கும் போது, நான் அதனை சரி செய்கிறேன். என்னவோ நான் ஏமாற்றுவது போல சொல்கிறாய்!

தம்பி: சரி, சரி, வருகிறேன், அடுத்த முறை சந்திப்போம், அஸ்ஸலாமு அலைக்கும்!

உமர்: ஆரம்பத்தில் என்னவோ, "உங்களுக்கு சமாதானம்" இல்லை, வெறும் பிரைஸ் த லாட் (Praise the Lord) மட்டும் தான் என்று சொன்னாய்! இப்போது அஸ்ஸலாமு அலைக்கும் என்றுச் சொல்கிறாய்! 

தம்பி: இருக்கட்டும் இருக்கட்டும், வாழ்ந்துவிட்டுப் போங்க... என்ன செய்யறது! அண்ணனாகிவிட்டீர்கள்! உங்களுக்கு ஸலாம் சொல்லாவிட்டால் எப்படி..... குட் நைட்  [சிரிக்கிறான் தம்பி]... 

உமர்: குட் நைட் தம்பி, வஅலைக்கும் ஸலாம்.

இன்னொரு உவமையோடு சந்திப்போம்...

தேதி: 14th April 2022


ரமளான் 2022 கட்டுரைகள்

முந்தைய ரமளான் கட்டுரைகள்

உமரின் பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2022ramalan/2022-ramalan-6.html


கருத்துகள் இல்லை: