ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

திங்கள், 4 ஏப்ரல், 2022

உவமை 3: தீய குத்தகைக்காரர்களின் உவமையும், இஸ்லாமின் முன்னறிவிப்பும்

(ரமளான் 2022 தொடர் கட்டுரைகள்)

முந்தைய வேதங்களின் உவமைகளும் இஸ்லாமும்

ரமளான் 2022 ஆண்டின் முந்தைய கட்டுரைகளை கீழ்கண்ட தொடுப்புக்களில் படிக்கலாம்:

இந்த மூன்றாவது தொடரில், சௌதி அரேபியாவில் வேலைப் பார்க்கும் என் தம்பி, என்னோடு மொபைளில் தொடர்பு கொண்டு, "தீய குத்தகைக்காரர்கள்" என்ற இயேசுவின் உவமையைக் குறித்து பேசிய உரையாடலை/விவாதத்தை காண்போம்.

குறிப்பு: எனக்கு ஒரு கற்பனைத் தம்பி உண்டு. தம்பியிலும் கற்பனையா? என்று நீங்கள் கேட்கலாம். ஆம், இஸ்லாம் பற்றி என்னோடு காரசாரமாக‌ உரையாடுவதற்கு, எனக்கு எதிராக மல்லுக்கட்டி நிற்பதற்கு ஒரு தம்பியை கற்பனைச் செய்துக்கொண்டேன். அவன் சௌதியில் இஸ்லாமை தழுவியதாக கற்பனை செய்துக்கொண்டு, அவனை முஸ்லிமாக மாற்றியும் விட்டேன். ஒவ்வொரு ஆண்டும் ரமளான் மாதத்தில்  அவனோடு பேசுவதாக தொடர் கட்டுரைகளை எழுதிக்கொண்டு இருக்கிறேன். இந்த 2022ம் ஆண்டு எழுதிய‌ முந்தைய இரண்டு கட்டுரைகளை படித்துவிட்டு, எனக்கு அவன் போன் செய்து, விவாதித்ததாக‌ இந்த மூன்றாவது கட்டுரையை அமைத்துள்ளேன். என் தம்பி கற்பனைத் தான், உரையாடலும் கற்பனைத்தான், ஆனால், பேசப்படும் வரிகள் நிஜம்.  இயேசு கூறிய‌ தீய குத்தகைக்காரர்கள் என்ற உவமையை கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய கோணங்களில் ஆராயப்போகிறோம், விவாதிக்கப்போகிறோம் வாருங்கள் தொடங்கலாம்.


தீய குத்தகைக்காரர்களின் உவமையும், இஸ்லாமின் முன்னறிவிப்பும்

(அண்ணன் தம்பி உரையாடல்)

தம்பி, உமருக்கு (எனக்கு) போன் செய்கிறான்... என் மொபைள் அளறுகிறது...

உமர்: ஹலோ தம்பி

தம்பி: அண்ணே, அஸ்ஸலாமு அலைக்கும்

உமர்: வ அலைக்கும் ஸலாம் தம்பி, எப்படி இருக்கிறாய்?

தம்பி: அல்லாஹ்வின் அருளால் நன்றாக இருக்கிறேன், நீங்க எப்படி இருக்கீங்க?

உமர்: கர்த்தரின் கிருபையால், சூப்பராக இருக்கிறேன். என்ன விஷயம்? ரமளான் நோன்பின்  மூன்றாவது நாளிலேயே போன் செய்துட்டியே!

தம்பி: காரணம் இல்லாமல் புகையுமா? உங்க ரெண்டு கட்டுரைகளைப் படித்தேன்! அதான் ஒருமுறை விசாரிக்கலாம் அப்படின்னு போன் செய்தேன்.

உமர்: என் தம்பி, தங்கக்கம்பி, ரொம்ப கோபமாக இருக்கிறான் போல இருக்கு? இயேசுவின் உவமைகளை அடிப்படையாக வைத்து, இஸ்லாம் சம்மந்தப்பட்ட சில விஷயங்களை எழுதலாம் என்று முடிவு செய்திருக்கிறேன், இதுவரை இரண்டு கட்டுரைகளை பதித்தேன். உனக்கு இதில் என்ன சந்தேகம்?

தம்பி: சந்தேகம் எல்லாம் ஒன்றும் இல்லை! இயேசு கூறிய ஒரு குறிப்பிட்ட  உவமையை எடுத்து பேசுவோமா? உங்களுக்கு தெம்பு இருந்தால்!

உமர்: பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி உள்ளது எனக்கு! நீயே ஒரு உவமையை ஆய்வு செய்ய வழி காட்டுகின்றாய்! இதை விட ஒரு பெரிய பாக்கியம் வேண்டுமா! சரி வா, பேசலாம்.

தம்பி: எடுத்துக் கொள்ளுங்கள் மத்தேயு 21:33-44 வரையுள்ள வசனங்களை. அதில் இஸ்லாம் பற்றிய முன்னறிவிப்பு எவ்வளவு தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது என்பதை உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன். 

உமர்: இதோ பேஷா எடுத்துக்கிறேன்,  மத்தேயு 21: 33-44 வரை படிக்கிறேன் கேள்.

மத்தேயு 21: 33-44

33. வேறொரு உவமையைக் கேளுங்கள்: வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான், அவன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறதேசத்துக்குப் போயிருந்தான். 34. கனிகாலம் சமீபித்தபோது, அதின் கனிகளை வாங்கிக்கொண்டுவரும்படி தன் ஊழியக்காரரைத் தோட்டக்காரரிடத்தில் அனுப்பினான். 35. தோட்டக்காரர் அந்த ஊழியக்காரரைப் பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள். 36. பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறே ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள்.

37. கடைசியிலே அவன்: என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான். 38. தோட்டக்காரர் குமாரனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி, இவனைக் கொன்று, இவன் சுதந்தரத்தைக் கட்டிக்கொள்ளுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு; 39. அவனைப் பிடித்துத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளிக் கொலைசெய்தார்கள். 40. அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்தத் தோட்டக்காரரை என்ன செய்வான் என்று கேட்டார்.

41. அதற்கு அவர்கள்: அந்தக் கொடியரைக் கொடுமையாய் அழித்து, ஏற்றகாலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கத்தக்க வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்தைக் குத்தகையாகக் கொடுப்பான் என்றார்கள். 42. இயேசு அவர்களை நோக்கி: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா? 43. ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும். 44. இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

தம்பி: இதில் இஸ்லாம் பற்றிய முன்னறிவிப்பு இருக்கிறது என்று உங்களுக்கு தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல நடிக்கிறீர்களா?

உமர்: எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லையே! மேலே சொன்ன உவமையில், தோட்டக்காரர் இருக்கிறார், குத்தகைக்கு எடுத்தவர்கள் இருக்கிறார்கள், வேலை ஆட்கள் இருக்கிறார்கள், அந்த தோட்டக்காரனுடைய மகன் இருக்கிறான். இதில் இஸ்லாம் எங்கே வந்தது? 

தம்பி: 43வது வசனத்தைப் படியுங்கள், அதில் இயேசு என்ன சொன்னார் என்பதை கவனியுங்கள்:

மத்தேயு 21:43. ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும். 

இந்த வசனத்தில் தேவனுடைய ராஜ்ஜியம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு அதற்கேற்ற கனிகளைத் தருகின்ற ஜனங்களுக்கு அதாவது முஸ்லிம்களுக்கு கொடுக்கப்படும் என்று இயேசு தெளிவாக சொல்லி இருக்கிறார்.

உமர்: அப்படியானால் உன்னுடைய விளக்கத்தின்படி "அந்த தோட்டக்காரர்கள் யூதர்கள் "ஆவார்கள் மற்றும் நல்ல கனிகளை கொடுக்கும் அந்த மக்கள் "முஸ்லிம்கள்", அவர்கள் அப்படித்தானே!

தம்பி: "எஸ்" கரெக்டா சொன்னீங்க! உங்களுக்கு 100 மார்க் தரலாம். 

உமர்: எனக்கு 100 மார்க் கொடுப்பதெல்லாம் அப்புறம் இருக்கட்டும்! முதலில், நீ உவமையை சரியாக‌ படித்தாயா? நீ எதையும் "சாய்ஸ்-Choice" கேள்வியாக விட்டு விடவில்லையல்லவா?

தம்பி: இல்லை! நான் எதையும் விடவில்லை, எல்லாவற்றையும் சரியாகத்தான் படித்தேன்.

உமர்:  அடேய் தம்பி! நான் உன் அண்ணன்டா! என்னிடம் விளையாடாதே!

சரி, சீரியஸாக நான் கேள்வி கேட்கிறேன், அந்த தோட்டகாரன் யார்?

தம்பி: அவர் தான் இறைவன், அந்த தோட்டத்துக்கு சொந்தக்காரன், இந்த உலகத்திற்கு சொந்தக்காரன் அதாவது உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் அவன் தான் அல்லாஹ்.

உமர்: இது சரியான பதில். உன்னுடைய இந்த நிலைப்பாட்டிலிருந்து நீ தவறமாட்டாய் அல்லவா?

தம்பி: யாரிடம் என்ன கேள்வி கேட்கிறீர்கள்? நான் ஒரு முஸ்லிம், சொன்ன வார்த்தையை மீற மாட்டேன். 

உமர்: இந்த உவமையில் அந்த தோட்டக்காரன் தன் கனிகளை வாங்கிக்கொண்டு வரும்படி அனுப்பிய ஊழியக்காரர்கள் யார்?

தம்பி: அந்த ஊழியக்காரர்கள் தான் "தீர்க்கதரிசிகள்/நபிகள்" அதாவது யூதர்களை வழி காட்ட அல்லாஹ் அனுப்பிய தீர்க்கதரிசிகள். அவர்களை யூதர்கள் கொலை செய்தார்கள், கல்லெறிந்துக் கொன்றார்கள் என்று இயேசு இங்கு சொல்கிறார், இது கூடவா உங்களுக்கு புரியவில்லை?

உமர்: எனக்கு எல்லாம் புரியுது தம்பி, உனக்கு தான் உண்மையை புரிந்துக்கொள்ளக்கூடிய அளவிற்கு அனுபவம் இல்லை.

தம்பி: எனக்கு எல்லாம் தெரியும் விஷயத்துக்கு வாங்க.

உமர்: அந்த தோட்டக்காரர், தன் ஊழியக்காரர்களை அந்த குத்தகைக்காரர்கள் தொடர்ச்சியாக கொன்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றுச் சொல்லி, கடைசியாக தம்முடைய குமாரனை அனுப்பினார். அந்த குமாரன் யார்?

தம்பி: அவரும் ஒரு தீர்க்கதரிசி தான் இதில் என்ன சந்தேகம்? 

உமர்: உனக்கு குமாரனுக்கும் வேலைக்காரர்களுக்கும் வித்தியாசம் தெரியாதா?  ஊழியக்காரர்களை "நபிகள்" என்று சொல்லும்போது, ஏன் அந்த உவமையில் அந்த தோட்டக்காரன் குறைந்தபட்சம் என்னுடைய குமாரனுக்கு அவர்கள் பயப்படுவார்கள் என்று வித்தியாசப்படுத்திச் சொல்கிறார்? ஊழியக்காரன் மற்றும் குமாரன் என்று தெளிவாக வேறுபடுத்திச் சொல்லப்பட்டிருந்தும், எப்படி இந்த வித்தியாசம் உனக்கு தென்படவில்லை தம்பி.

தம்பி: அந்த தோட்டக்காரருக்கு எப்படி குமாரன் இருக்க முடியும்?

உமர்: அதை நீ ஏன் முடிவு செய்கிறாய்? அந்த தோட்டக்காரனுக்கு மகன் இருக்கின்றானா இல்லையா என்று ஆய்வு செய்து சொல் என்று உன்னிடம் யாராவது கேட்டார்களா என்ன? உன்னுடைய வேலை, சொல்லப்பட்ட உவமையை சரியாக புரிந்து கொள்வது தான், அதை விட்டுவிட்டு உன் சொந்த கதையை உவமையில் புகுத்த‌ முயலாதே!

தம்பி: இதனை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்!

உமர்: உன்னிடம் யார் அனுமதி கேட்கிறார்கள் தம்பி? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு சொன்ன உவமை இது. அதை அப்படியே படித்து புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, நீ உன்னுடைய சொந்த கருத்துக்களை அந்த உவமையில் திணிக்க முயலக்கூடாது! "இஸ்லாமிய‌ கண்ணாடியை" கழற்றிவிட்டு, உன் சொந்தப்பார்வையில் படித்துப்பார்.

தம்பி: அப்படியானால்! இந்த உவமையில் வரும் அந்த குமாரன் யார் சொல்லுங்கள் பார்க்கலாம்?

உமர்: சரியாப்போச்சு! விடிய விடிய இராமாயணம் கதை கேட்டுவிட்டு, சீதை ராமனுக்கு என்ன உறவு என்று கேட்டால், "சித்தப்பா" என்று எவனோ சொன்னானாம். அது போல இருக்கிறது உன் கதை. இந்த உவமையில் "குத்தகைக்காரர்கள் என்றால் யூதர்கள் ஆவார்கள் என்றும், தோட்டக்காரன் இறைவன் என்றும் சொல்லும் போது, குமாரனை அவர்களை கொலை செய்தார்கள் என்றால், அந்த குமாரன் யார்?" இயேசுக் கிறிஸ்து அல்லவா? இதுகூடவா உனக்கு புரியவில்லை.

தம்பி: அப்படியானால், கனிகளை சரியாக கொடுக்கும், அந்த தோட்டக்காரனின் நம்பிக்கையின் பாத்திரமான அந்த‌ நல்ல மக்கள் முஸ்லிம்கள் தானே!

உமர்:  இந்த உவமையில் இயேசு தான் குமாரன் என்றுச் சொல்லும் போது, அவருக்கு 600 ஆண்டுகளுக்கு பிறகு வரும் முஸ்லிம்கள் எங்கே வந்தார்கள்! கிறிஸ்தவர்கள் தான் அந்த 'நல்ல கனிகளை கொடுக்கும்' ஜனம் என்று இயேசு இங்கு குறிப்பிடுகின்றார்.

அடுத்த இரண்டு வசனங்களில், யூத தலைவர்கள் தங்களைப் பற்றி தான் இயேசு கூறினார், தங்களிடமிருந்து ராஜ்ஜியத்தை எடுத்து மற்றவர்களிடம் கொடுப்பார் என்று இயேசு கூறுகின்றார் என்றுச் சொல்லி, அவரை பிடிக்க வகை தேடினார்கள் என்று பார்க்கிறோம்.

மத்தேயு 21:45. பிரதான ஆசாரியரும், பரிசேயரும் அவருடைய உவமைகளைக்கேட்டு, தங்களைக்குறித்துச் சொல்லுகிறார் என்று அறிந்து, 46. அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனங்கள் அவரைத் தீர்க்கதரிசி என்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தார்கள்.

இந்த உவமையில், குமாரனுக்கு அந்த குத்தகைக்காரகள் செய்த செயல்தான் முக்கியமானது, இயேசு தாம் எப்படி மரிக்கப்போகிறார் என்பதை முன்கூட்டியே கூறியுள்ளார், மேலும், அந்த தோட்டம் அதன் பிறகு யாரிடம் கொடுக்கப்படும் என்பதை இயேசு இங்கு குறிப்பிடுகின்றார்.

தம்பி: நீங்கள் எவைகளைச் சொன்னாலும் சரி, நான் ஏற்கமாட்டேன், "நல்ல‌ கனிகள் கொடுக்கும் ஜனம் முஸ்லிம்கள் தான்".

உமர்: சரி, உன் விஷயத்துக்கே வருகிறேன், ஒரு பேச்சுக்காக, "அந்த நல்ல கனிகள் கொடுக்கும் ஜனங்கள் முஸ்லிம்கள் தான் என்று எடுத்துக்கொண்டாலும், நீ அந்த தோட்டக்காரனுக்கு குமாரன் இருந்தான் என்று ஒப்புக்கொள்ளவேண்டும்"? இதை ஒப்புக்கொள்கிறாயா?

அந்த குமாரனை யூதர்கள்(குத்தகைக்காரர்கள்‍) கொன்றார்கள் என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும்? இவ்விரண்டையும் ஒப்புக்கொள்கிறாயா? சொல்!

தம்பி: . . .

உமர்: என்ன, பதில் காணோம் தம்பி... லைன் கட்டாகிவிட்டதா?

தம்பி: இல்லை இல்லை.. நான் லைனில் தான் இருக்கிறேன்.

உமர்: தம்பி, இப்போதாவது உனக்கு புரிகின்றதா? 

உன்னால் பைபிளை மேற்கோள் காட்டி, கிறிஸ்தவத்தை புறக்கணிக்கமுடியாது, இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுக்கமுடியாது. பைபிளைத் தொட்டு, நீ இஸ்லாமை நிலைநாட்டமுடியாது, நீ தோற்றுப்போவாய்.

நீ சொன்ன உவமையைத் தான் நாம் இதுவரை ஆய்வு செய்தோம். அரைகுறையாக படித்துவந்து பேசாதே!  அடுத்த முறை போன் செய்வதற்கு முன்பு, ஒன்றுக்கு பலமுறை பைபிளை படித்து, அதன் பிறகு உன் வாதங்களை வை பார்க்கலாம்.

தம்பி: ஆனால்...இன்னும் ஒரு கேள்வி எனக்கு இருக்கிறது.... ம்ம்ம்ம் வேண்டாம் வேண்டாம்.. அடுத்த முறை போன் செய்கிறேன்... குட்பை.

உமர்: குட் நைட், நல்லா தூங்கு.

இது தாங்க எனக்கும் என் தம்பிக்கும் இடையே நடந்த உரையாடல்.

இன்னொரு உவமையோடு சந்திப்போம்...

தேதி: 4th April 2022


கருத்துகள் இல்லை: